Quantcast
Channel: Savukku
Viewing all 244 articles
Browse latest View live

தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!

$
0
0

கே.பி.சுனில். இந்தியாவின் மிக முக்கியமான பத்திரிக்கை-யாளர்களுள் ஒருவராக வந்திருக்க வேண்டியவர்.  இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆங்கிலப் பத்திரிக்கையான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியாவின் தென்னிந்திய கரெஸ்பான்டென்டாக இருந்தார் சுனில்.  சுனில் பழைய தலைமுறைப் பத்திரிக்கையாளர்.  இன்றைய தலைமுறைப் பத்திரிக்கையாளர்களில் பெரும்பாலானோருக்கு 1000 வார்த்தைகள் கொண்ட ஒரு கட்டுரைக்காக பல மைல்கள் பிரயாணம், பல நாட்கள் உழைப்பு என்பது புதிய விஷயமாக இருக்கும்.  ஆனால், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் உருவாகாத எண்பதுகளில் தினசரி, வார இதழ்கள் ஆகியவற்றில் வரும் கட்டுரைகளுக்காக பல மணி நேரம் உழைப்பைச் செலவிடுவார்கள் பத்திரிக்கையாளர்கள்.  அவ்வாறு பல மணி நேரம் செலவிட்டு, பல தூரங்கள் பிரயாணம் செய்து,  அக்கட்டுரை பிரசுரமானதும் பலர் அக்கட்டுரை குறித்து விவாதிப்பதையும், பலர் அக்கட்டுரையைப் பாராட்டுவதையும் கேட்கையில் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று உழைப்பார்கள்.   இந்தத் தலைமுறைப் பத்திரிக்கையாளர்கள் தற்போது அருகி விட்டார்கள்.   இன்றைய தலைமுறைக்கு, உச்சஸ்தாயில், தொண்டை கிழிந்து போகும் அளவுக்கு கத்தும் அர்னாப் கோஸ்வாமிதான் சிறந்த பத்திரிக்கையாளர்.

2

கே.பி.சுனில், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்.  இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் 1987ம் ஆண்டு ஒரு பெண்ணோடு பின்னாளில் கொலை வழக்கில் சிக்கிய ஜெயேந்திரர் ஓடிப்போனார்.  அப்படிப் போகையில் அவர் தனது கையில் இருக்கும் தண்டத்தை அறிவாலயத்திலேயே… மன்னிக்கவும்… சங்கர மடத்திலேயே விட்டு விட்டுப் போய்விட்டார். ஜெயேந்திரர் அவ்வாறு தண்டத்தை விட்டுப் போவது இந்து மதத்துக்கே எதிரானது, இனி அவர் சங்கராச்சாரியாராக தொடர இயலாது என்று இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதினார் சுனில்.   இதற்கு காஞ்சி மடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  ஒரு நீண்ட மறுப்பை எழுதி அனுப்பியது.

இதையடுத்து, இந்தியாவில் உள்ள மற்றொரு சங்கர மடத்தில் உள்ள ஒரு மூத்த துறவியைச் சந்தித்து, காஞ்சி சங்கர மடத்தின் விளக்கம் எத்தனை பொய்யானது என்பதை விரிவாக எழுதினார்.   காஞ்சி பெரியவாள், சின்னவாள், உறைவாள், குறுவாள் என்று அத்தனை பேரும் வாயை மூடிக்கொண்டனர்.

ஜெயலலிதாவைப் போல அகங்காரம் கொண்ட நபரை பார்க்கவே முடியாது. 1989-90 வாக்கில் தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து இழுத்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அந்தச் சம்பவங்கள் குறித்து பத்திரிக்கைகளில் வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுத்து வர வேண்டும் என்று அப்போது ஜெயலலிதாவின் சொம்பாக இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மனு அளித்ததைத் தொடர்ந்து முரசொலி, கோவை மாலை முரசு மற்றும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆகிய ஊடகங்களில் வெளியிட்ட முரசொலி செல்வம், கோவை மாலை முரசின் எஸ்கேஐ.சுந்தர் மற்றும் கே.பி.சுனில் ஆகியோருக்கு 15 நாட்கள் தண்டனை விதிக்கப்பட்டது.  இவர்களை 15 நாட்கள் கைது செய்ய சபாநாயகர் வாரண்ட் பிறப்பித்தார்.  இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போது சுனில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, திருபாய் அம்பானி தொடங்கியிருந்த “பிசினெஸ் அன்ட் பொலிட்டிக்கல் அப்சர்வர்” என்ற இதழில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நிறுவனமோ, புதிய நிறுவனமோ, இரண்டு நிறுவனங்களும், சுனிலுக்கு உதவத் தயாராக இல்லை.

சம்பந்தப்பட்ட அனைவரும் தலைமறைவாயினர்.  சுனில் டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் சேடப்பட்டி முத்தையாவின் கைது நடவடிக்கைக்கு தடை பெற முயற்சி செய்தார். இங்கே உள்ள பத்திரிக்கையாளர்கள் உதவியோடும், டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் உதவியோடும் சபாநாயகரின் கைது வாரண்டுக்கு தடை பெறும் முடிவுக்கு வருகிறார் சுனில்.    அப்போது டெல்லி பத்திரிக்கையாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே துண்டேந்தி பணத்தை வசூல் செய்து வந்த பணத்தை வைத்து இருப்பதிலேயே சிறந்த வழக்கறிஞரை அணுக முடிவுசெய்கின்றனர்.  அவர்களால் அப்போது வசூல் செய்ய முடிந்த தொகை ஐந்தாயிரத்துக்கும் குறைவு.

இருப்பதிலேயே அப்போது சிறந்த வழக்கறிஞர் என்று அவர்கள் கருதி, ராம் ஜெத்மலானியை அணுகுகின்றனர்.  இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, மனித உரிமைகள் குறித்தும், அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் வாய் கிழிய பேசும் ராம்ஜெத்மலானி என்ன சொன்னார் தெரியுமா ?  50 ஆயிரம் இருந்தால் உள்ளே நுழையுங்கள்… இல்லையென்றால் அப்படியே வெளியேறுங்கள் என்கிறார்.   இல்லை… இது கருத்துச் சுதந்திரம் தொடர்பானது என்று கூறியதற்கு, உங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு எனக்கு 50 ஆயிரம் வேண்டும் என்கிறார். அந்த காலத்தில் 50 ஆயிரம் என்பது பெரிய தொகை.

அடுத்ததாக யாரை அணுகலாம் என்று ஆலோசித்து, மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜியை அணுகுகின்றனர்.  சோலி சோரப்ஜி பீஸ் எவ்வளவு என்பதைப் பற்றியெல்லாம் ஒரு வார்தை கூட பேசாமல், உடனடியாக சுனில் வழக்கை எடுத்துக் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் கைது வாரண்டுக்கு தடை கோருகிறார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது வாரண்டுக்கு தடை பிறப்பிக்கின்றனர்.   சோலி சோரப்ஜிக்கு நன்றி தெரிவித்து விட்டு,  சென்னை கிளம்ப எத்தனிக்கிறார்.  அப்போது சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தூர்தர்ஷனுக்கு பேட்டியளிக்கிறார்.   உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்னைக் கட்டப்படுத்தாது.   நான் புதிதாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளேன்.   சென்னையில் சுனில் கால் வைத்தால் சென்னை மாநகர காவல் ஆணையாளர் கைது செய்வார் என்று அறிவிக்கிறார்.

சென்னை வந்தால் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்த சுனில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்கிறார்.   மீண்டும் சோலி சோரப்ஜியை சென்று சந்திக்கிறார்.  துரதிருஷ்டவசமாக சோலி சோரப்ஜி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதால் அவர் டெல்லியில் இல்லை.   சோலி சோரப்ஜி சுனிலிடம், கவலைப்படாதீர்கள்.  மற்றொரு வழக்கறிஞரைப் பரிந்துரைக்கிறேன் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை பரிந்துரைக்கிறார். இந்திரா ஜெய்சிங்கும் அன்று கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருப்பதால் சுனிலின் வழக்கை எடுத்துக் கொள்ள இயலாத நிலை.  தமிழ்நாடு சென்றால் கைது செய்யப்படுவோம் என்ற நெருக்கடி சுனிலுக்கு.  இந்திரா  ஜெய்சிங், மற்றொரு மூத்த வழக்கறிஞரான கே.கே.வேணுகோபாலை பரிந்துரைக்கிறார்.

மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் மீண்டும் சுனிலின் வழக்கை உச்சநீதிமன்றத்தில் முறையிடுகிறார்.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கஸ்லிவால் மற்றும் ராமசாமி ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்கின்றனர்.  தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், தன் வரம்பை மீறிச் செயல்பட்டு வருகிறார், உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிறார், இது உச்ச நீதிமன்றத்தில் அதிகாரம் மற்றும் மாநில அரசின் அதிகாரத்துக்கு இடையே அரசியல் அமைப்புச் சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் செயல் என்று வாதிடுகிறார்.  உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எங்கள் உத்தரவை அமல்படுத்தத் தவறினால், மாநில அரசைக் கலைப்பதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்வோம் என்றனர். ஜெயலலிதா ஆடிப்போனார்.  அப்படியே பின் வாங்கினார்.

உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று வெற்றித் திருமகனாகத் திரும்பினார் சுனில்.  டெல்லியிலிருந்து சென்னை வரும் விமானத்தில் சுனிலின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணித்தவர் யார் தெரியுமா ?  சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா.  சுனில் அருகே அமர்ந்த சேடப்படடி முத்தையா, சுனில் வழக்கு குறித்தும், பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதித்து வந்தார்.  சென்னை விமான நிலையத்தில் இறங்கி இருவரும் பிரியும் சூழ்நிலையில், சுனில் சேடப்பட்டி முத்தையாவிடம் நீங்கள் தேடிக்கொண்டிருந்த சுனிலைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். சேடப்பட்டி இல்லை என்றதும், அது நான்தான் என்று கை குலுக்கி விட்டு விடைபெற்றார்.

இதுதான் சுனிலின் பின்புலம். சுனில் இப்படி சிக்கலில் மாட்டியபோது, தமிழகத்தின் பத்திரிக்கையாளர்கள் இந்தச் சிக்கலை தங்கள் சிக்கலாக நினைத்தார்கள்.  ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் சுனில் பின்னால் நின்றது.  டெல்லியில் இருந்து திரும்பிய சுனில், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.  ஆனால், சுனிலுக்குப் பதிலாக, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.   சுனில் எங்கே என்று பத்திதிரிக்கையாளர்கள் கடும் கோபமடைந்து கேள்வி கேட்டதும், பன்னீர்செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்று விட்டார். இதனால் அப்போது மற்ற பத்திரிக்கையாளர்கள் சுனில் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

ஜெயலலிதாவுடனான பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் சுனிலோடு துணை நின்று ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க பெரிய அளவில் பாரிய முயற்சிகளை எடுத்தவர், இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

2280672661_f4dc889f02_b

அகங்காரம் பிடித்த ஜெயலலிதாவின் ஆணவப் பயணத்துக்கு தடை போட்டவர் என்று சுனில் இந்தியா முழுக்க பிரபலமானார்.   அவரின் இந்த பிரபலத்தை பயன்படுத்தி அப்போது வளர்ந்து வரும் தொலைக்காட்சி ஊடகத்தில் ஒரு வலுவான நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் முன்முயற்சி எடுத்தனர். சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கலாம் என்று தொடங்கப்பட்டதுதான் டெலிஜும்.  இந்த தொலைக்காட்சி நிறுவனம் தொடங்க ஆரம்பகாலத்தில் பொருளுதவி கொடுத்து உதவி செய்தவர்கள் இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் அனந்து ஆகியோர்.

ஆனால், ஆறே மாதங்களில், செய்தியோ பொழுதுபோக்கோ, ஊடகத்தைப் பார்க்கும் பார்வையில் என்னுடைய பார்வையும் சுனிலுடைய பார்வையும் வேறு வேறானது என்பதை உணர்ந்தேன் என்கிறார் பன்னீர்செல்வம். ஒரு விளையாட்டுப் போட்டியை ஒரே ஆர்வத்தோடு இருவரும் பார்த்து மகிழ்ந்தோம் என்றாலும், நாங்கள் எதிர் எதிர் அணிகளை ஆதரித்து வந்தோம் என்பதை உணர்ந்தேன் என்கிறார் பன்னீர் செல்வம். ஆறே மாதங்களில் 1 ஏப்ரல் 1993 அன்று, பன்னீர் செல்வம் டெலிஜுமை விட்டு விலகுகிறார்.

அதன் பிறகு டெலிஜும் முழுமையாக சுனில் வசம் வருகிறது. இந்த டெலிஜும் சார்பாக ராஜ் டிவிக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கும் பணியில் சுனில் ஈடுபட்டு வருகிறார்.  தொலைக்காட்சி ஊடகம் அப்போதுதான் இந்தியாவில் வளர்ந்து வரும் ஊடகம் என்பதால், பெரிய அளவில் சுனிலால் லாபம் ஈட்ட முடியவில்லை.  அப்போது ஜெயலலிதா ஜெ.ஜெ.டிவி தொடங்கி நடத்தி வந்தார்.

1996ல் அதிமுக படுதோல்வி அடைந்ததும், ஜெ.ஜெ.டிவி இழுத்து மூடப்பட்டது.  தொலைக்காட்சி கட்சி வளர்ச்சியில் எந்த அளவுக்கு பங்கு வகிக்கும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா மீண்டும் 1999ல் ஜெயா டிவியை தொடங்குகிறார். அதன் முழுப்பொறுப்பும், டிடிவி.தினகரன் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இந்தத் தகவலை அறிந்த சுனில், தனது டெலிஜும் நிறுவனத்துக்காக நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தத்தை வழங்குமாறு டிடிவி.தினகரனை சந்தித்துக் கேட்கிறார்.

டிடிவி.தினகரனோ, நீங்கள் உடனடியாக ஜெயா டிவியின் செய்திகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.  சற்றும் தாமதிக்காமல் உடனடியாக சரி என்று சொன்ன சுனிலை ஜெயலலிதா சந்திக்கிறார்.  செய்தியைப் பொறுத்தவரை நீங்கள்தான் எல்லாமும்.  அதிமுகவின் தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.  அதற்குத் தகுந்தார்ப்போல செய்திகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் (ஜெயலலிதாவின் அறிக்கைகளை கமா, புல்ஸ்டாப் இல்லாமல் படிப்பது) என்று கூறுகிறார்.  சுனிலும் சரி என்று கூற, ஒரு சுப முகூர்த்த நாளில் சுனில், ஜெயா டிவிக்குள் காலெடுத்து வைக்கிறார்.

ஜெயலலிதாவின் ஈகோவுக்கு வானமே எல்லை.   1995 முதல் 1996 வரை, சன்டிவியில் வெளிவந்த நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஆட்சி மாற்றத்துக்கு பெரும் காரணமாக இருந்தது என்று கூறலாம்.  அந்த நிகழ்ச்சியில், அப்போது அதிமுகவிலிருந்து பிரிந்து வந்தவர்களை பேட்டியெடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வண்டவாளங்களை வெளியிடுவார்கள்.   ஒவ்வொரு வாரமும், இந்த வாரம் யார் விருந்தினர் என்று மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்தது.  அந்த நிகழ்ச்சியில் பேட்டியெடுத்தவர் ரபி பெர்நார்ட்.  இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி தளைக்க ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி, பரபரப்பாக மக்கள் மத்தியில் தொற்றிக் கொண்டது.   பெரும் வரவேற்பைப் பெற்றது.

1996 தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்குப் பிறகு, அப்போது விஜய் டிவியில் பணியாற்றிய ரபி பெர்நார்ட் ஜெயலலிதாவை ஒரு பேட்டியெடுத்தார்.  அத்தோடு சரி.  காயடிக்கப்பட்ட காளையாக மாற்றப்பட்ட ரபி பெர்நார்ட், ஜெயா டிவியில் அடிமைகளோடு அடிமையாக மாறிப்போனார்.  இன்று அவர் மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு விசுவாசமான அடிமையாக இருந்தார்.

ஒரு காலத்தில் அதிமுக படுதோல்வி அடையக் காரணமாக இருந்த ரபிபெர்நார்ட் எப்படி ஜெயலலிதாவின் அடிமையாக மாற்றப்பட்டாரோ அதே போலத்தான் சுனிலும்.  சுனில் வேலை கேட்கிறார் என்றதும், நம்மை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற ஒரு நபரை, நமது அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஈகோ வெற்றி பெற்றது.

simran-for-teenage-bonanza-jaya-tv-pressmeet-stills_4_103907123

காலம்தான் எத்தனை தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது !!!!

1999ல் ஜெயா டிவி தொடங்கிய காலத்தில் வருமானமெல்லாம் கிடையாது.  ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே கடன் வாங்க வேண்டிய நிலை.  1991-1996 அதிமுக ஆட்சியில் அமைச்சர் கண்ணப்பனிடம் உதவியாளராக இருந்த சார்புச் செயலர் இசக்கிமுத்து என்பவருக்கு வேலையே, தமிழகம் முழுக்க இருந்த அதிமுகவின் மாவட்ட அடிமைகள், மன்னிக்கவும், மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து, ஜெயா டிவிக்கு நிதி வசூலிப்பதுதான்.   இரண்டு மாதங்களுக்கெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஊதியம் கொடுக்கப்பட்ட காலம் உண்டு.

2002ம் ஆண்டு வாக்கில் ரங்கா என்கிற ரங்கநாதன் ஜெயா டிவிக்குள் அடியெடுத்து வைக்கிறார்.  செய்திகளைப் பொறுத்தவரை நமது எம்ஜிஆர் இதழின் ஆசிரியராக இருந்த பாவைச் சந்திரன் பிரதான பங்கு வகித்தார்.  அப்போது ஜெயா டிவி அலுவலகத்தின் ரிசெப்ஷனில் அமர்ந்து பணியாற்றியவர் ஜனா என்கிற ஜனார்த்தனம்.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இசக்கி முத்துவை அழைத்த ஜெயலலிதா, அவருக்கு தலைமைச் செயலகத்தில் புதிய பதவி ஒன்றை அளித்தார்.

2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, ஜெயா டிவியின் வருமானத்துக்கு ஒன்றும் குறைவில்லை.  சுனிலின் முக்கியத்துவமும் அதிகரித்தது.  2001ல் கருணாநிதியின் நள்ளிரவுக் கைதுக்குப் பிறகு, ஜெயலலிதா அரசுக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டது.  ஆட்சியே கலைக்கப்படும் அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.  அப்போது என்ன செய்வதென்று தெரியாமல், அவப்பெயர் ஏற்படுத்திய முட்டாள் போலீசைத் திட்டிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.  அப்போது சுனில்தான், சன் டிவியில் ஒளிபரப்பான கருணாநிதி கைதின் நள்ளிரவு வீடியோவின் மறுபக்கத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார்.  கைது செய்ய சென்ற காவல்துறையினரை உள்ளே அனுமதிக்காமல் தகராறு செய்தது, போலீசை மிரட்டியது, முரசொலி மாறன், காவல்துறையினரை அடித்தது, காலால் எட்டி உதைத்தது போன்ற வீடியோக்கள் காவல்துறையினர் வசம் இருந்தன.  அந்த மங்குணிப் பாண்டியர்கள் அந்த வீடியோக்களை பத்திரமாக பூட்டி வைத்திருந்தனர்.  சுனில்தான் அந்த வீடியோக்களை வாங்கி, ஜெயா டிவியில் அந்த வீடியோவை ஒளிபரப்பி, சேதத்தை கட்டுப்படுத்தினார்.

தொடக்க காலத்தில் சுனிலின் முக்கியமான வேலை, ஜெயலலிதாவின் ஆங்கில அறிக்கைகளை திருத்தித் தருவதே. அது தவிர, வடநாட்டிலிருந்து ஜெயலலிதாவை சந்திக்க வருபவர்களை சரிபார்த்து, அனுப்பலாமா வேண்டாமா என்று முடிவு செய்து, அவர்களை அனுப்புவதும் சுனிலின் வேலை. ஜெயா டிவியில் வேலை பார்த்துக் கொண்டே, தனது தொழிலையும் சுனில் விரிவுபடுத்தத் தவறவில்லை.  2003ல் நியூ ஆவடி சாலையில், விஷுவல் கம்யுனிகேஷன் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார் சுனில்.  ஆனால் சிறிது காலத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜெயா டிவியின் முழுமையான கட்டுப்பாடு, டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா வசம் வருகிறது. தொடக்க காலத்தில் அனுராதாவுக்கு டிவியைப் பற்றி மட்டுமல்ல.. எதைப்பற்றியுமே ஒன்றும் தெரியாது.  மன்னார்குடியில், மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியவரை டிவி சேனலின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளச் சொன்னால் என்ன செய்வார் ?  அவரும் நாம் எப்படி இவ்வளவு பெரிய டிவியை பார்த்துக் கொள்வது என்று மலைத்த நேரத்தில் அவருக்கு உதவ, ஜெயா டிவியின் ரிசெப்ஷனில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜனா வருகிறார்.  ஜனா, அனுராதாவுக்கு எடுபிடியாகி, நாளடைவில் அனுராதாவின் காரியதரிசியாக மாறுகிறார்.   ஒரு கட்டத்தில் ஜனா என்ன சொன்னாலும், அது அனுராதாவின் சொல் என்ற அளவுக்கு மாறிப் போகிறது.  காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பதை புரிந்து கொண்ட ரங்கா என்கிற ரங்கநாதன் மற்றும், பாலா சுவாமிநாதன் ஆகியோர் அனுராதாவின் பக்கம் சாய்கிறார்கள்.  இவர்களோடு செந்தில்நாதன் என்பவரும் அனுராதாவின் நம்பிக்கைக்குரியவராக ஆகியரார்.  இந்த செந்தில்வேலன் அனுராதாவின் உறவினர்.

ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றதால் ஜெயலலிதா ஏதாவது செய்து விடுவாரோ என்ற அச்சத்திலேயே இருந்து வந்த சுனில், சில காலத்துக்கு அமைதியாகவே இருக்கிறார். எந்த முடிவுகளிலும் சுனில் கலந்தாலோசிக்கப்படுவது கிடையாது.  காலம் செல்லச் செல்ல, சுனிலும் தனக்கென ஒரு அணியை அமைப்பது அவசியம் என்று உணர்ந்து, தனக்கென ஒரு அணியை உருவாக்கத் தொடங்குகிறார்.    அப்படி சுனில் உருவாக்கிய அணியில் இடம்பிடித்தவர்தான் உதயக்குமார்.  இந்த உதயக்குமார் சுனில் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதோடு, சுனிலின் புகழ்பாடும் நபராகவும் மாறுகிறார்.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விஷுவல் கம்யூனிக்கேஷன் படித்து, பயிற்சிக்காக ஜெயா டிவிக்குள் நுழைந்தவர்கள் ஆன்டன் மற்றும் ரமணி.  இவர்கள் இருவரும் சுனில் அணியில் இணைகிறார்கள்.   இப்படி மன்னார்குடி டேர் டெவில்ஸ் மற்றும் கோட்டயம் வாரியர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது.

இரு அணிகளும் ஆளுக்கு ஆள் தங்ளகால் முடிந்த அளவுக்கு ஜெயா டிவியில் சுருட்டுகிறார்கள்.  ஆளிள்ளாத சொத்து யார் கேட்கப்போகிறார்கள் ?  மன்னார்குடி டேர் டெவில்ஸ் பல மேட்சுகளில் தங்கள் கேப்டன் அனுராதாவின் தயவால் வெற்றி பெறுகிறார்கள்.   கோட்டயம் வாரியர்ஸ் அப்படி நேரடியாக ஜெயா டிவியில் கொள்ளையடிக்க முடியாமல் வெளியில் வசூலிக்கத் தொடங்குகிறார்கள்.  தேர்தல் சமயத்திலெல்லாம் சுனில் அணியில் உள்ள உதயக்குமார் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஜெயலலிதாவின் கான்வாயோடு போகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுவார்.  இந்தப் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவோடு சென்றதற்காக ஆன செலவு 5 லட்சம் என்று ஜெயா டிவி கணக்கில் எழுதி விடுவார்.  ஆனால் சென்ற இடத்திலெல்லாம் அதிமுக அடிமைகளிடம் வசூலை அள்ளிக் குவித்து விடுவார்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மன்னார்குடி டேர் டெவில்ஸ் மற்றும் கோட்டயம் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதல்கள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கோட்டயம் அணி தோல்வியைச் சந்தித்து வந்தது.  இந்நிலையில் அணியின் கேப்டன் சுனிலிடம், ஜெயலலிதா, ஜெயா டிவி எப்படி நடக்கிறது என்று ஒரு ரகசிய ஆய்வறிக்கையைக் கேட்கிறார்.  கேட்க வேண்டுமா… எங்கெங்கு பணம் வாங்கினார்கள், யாரிடம் கமிஷன் வாங்கினார்கள் என்ற விபரங்களையெல்லாம் சுனில் ஒரு விரிவான அறிக்கையாக தயாரித்து போயஸ் தோட்டத்துக்கு அனுப்புகிறார்.  அந்த அறிக்கையைப் படித்த ஜெயலலிதா, அனுராதாவை வீட்டுக்கு அனுப்புவது என்று முடிவெடுக்கிறார்.  ஒரு நாள் அனுராதா, ரங்கநாதன், சுனில் ஆகியோர் ஜெயலலிதாவால் தோட்டத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.  அங்கே அனுராதாவை காய்ச்சி எடுத்த ஜெயலலிதா, நாளை முதல் அனைத்து சுனிலிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் வெளியேறலாம் என்று கூறுகிறார்.  மன்னார்குடி அணி, கடுமையான பின்னடைவை சந்திக்கிறது.  அம்பயரே மன்னார்குடி அணியின் பக்கம் இருந்தால் மேட்சில் எப்படி கோட்டயம் அணி ஜெயிக்க முடியும் ?   அம்பயரான சசிகலா, ஜெயலலிதாவிடம் கண்ணீரோடு அனுராதாவை மன்னிக்குமாறு கேட்கிறார்.   மனம் உருகிய ஜெயலலிதா, மீண்டும் அனுராதாவே அனைத்துப் பொறுப்புகளையும் பார்ப்பார் என்று உத்தரவிடுகிறார்.

மீண்டும் மன்னார்குடி அணி வலுவான நிலையை அடைகிறது.  அது வரை சுனிலின் ஜாக்பாட் ஷுட்டிங் ஜெயா டிவியின் தளங்களில் நடந்து வருகிறது.  தனக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு சுனில்தான் காரணம் என்பதை அறிந்த அனுராதா, சுனிலின் படபடிப்புக்கு இனி ஜெயா டிவியில் இடமில்லை என்று அறிவிக்கிறார்.   பின்னடைவைச் சந்தித்த சுனில் நல்ல நாள் வரும் வரை காத்திருக்கிறார்.

மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மன்னார்குடி அணிக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விளம்பரதாரர்கள் ஜெயா டிவியை அம்முகிறார்கள்.  ஜெயா டிவிக்கு விளம்பரம் கொடுத்தால் அம்மாவின் கடைக்கண் பார்வை நமக்குக் கிடைக்கும் என்று எண்ணி விளம்பரங்களை கொட்டுகிறார்கள். இதற்கு நடுவே, புதிதாக தொடங்கப்பட்ட ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ், மற்றும் ஜெயா மூவிஸ் ஆகியவற்றில் உள்ள விளம்பர ஸ்லாட்டுகளுக்கும் ஏக கிராக்கி ஏற்படுகிறது.  சாதாரணமாக விளம்பரம் கொடுத்தால் வரும் வருவாயை விட, செக்ஸ் டாக்டர்கள், ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள், அதிருஷ்டக் கல், நேமாலஜி, ஜெம்மாலஜி, கும்மாலஜி, போன்ற மோசடிப் பேர்விழிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வருவாய் அதிகம்.  ஏனென்றால் ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்திய கும்மாலஜி மோசடிப் பேர்விழிகள் ஒரே  வருடத்தில் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜெயா ப்ளஸ் கட்டணம் 55 ஆயிரம் ரூபாய்.  இப்படி ஜெயா டிவியில் நிகழ்சசி நடத்தி பணக்காரனான ஒரு நபர் அம்மன் அருள் பழனிநாதன்.  இந்த அம்மன் அருள் பழனிநாதன், சாதாரண நபராக டாடா இண்டிகாவில் வந்த பழனிநாதன் மஹிந்த்ரா ஜைலோ காரில் பின்னாளில் வலம் வந்தார். இதற்கு ஒரே காரணம் ஜெயா டிவி நிகழ்ச்சி.   ஜெயா ப்ளஸ்ஸில் வரும் ரியல் எஸ்டேட் நிகழ்ச்சிகளைப் போன்ற மோசடியை எங்குமே பார்க்க முடியாது.  முதலில் தாம்பரம் ரயில் நிலையத்தைக் காண்பித்து ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் என்று அறிவிப்பார்கள்.  அந்த இடம் விழுப்புரத்துக்கு அருகில் இருக்கும்.  இப்படிப்பட்ட மோசடி விளம்பரங்களைப் பார்த்து, வலையில் சிக்கிய நடுத்தர வர்க்கத்தினர் ஏராளம்.  இதே போன்ற மற்றொரு மோசடிதான் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சி.  எங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்றால், மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை என்று கூசாமல் புளுகுவார்கள்.  இந்த விளம்பர நிகழ்ச்சிகள் வசூலில் சுனிலுக்கும் கணிசமான பங்கு உண்டு.

Jaya-Tv-14th-Anniversary-Stills5034CHch14

இந்த நிலையில்தான் 2011 இறுதியில் சசிகலா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.   சசிகலா வெளியேற்றப்பட்டதும், அனுராதாவும் ஜெயா டிவியிலிருந்து வெளியேறுகிறார்.  ஒரு காலத்தில் ஜனா வைத்ததே சட்டம் என்று இருந்த ஜெயா டிவியில் காலம் மாறுகிறது.  தனது முதுகு வலிக்காக சிகிச்சை எடுத்துத் திரும்பிய சுனில், ஜனாவின் வசம் புதிய டாட்டா க்ராண்ட் வாகனம் இருப்பதைப் பார்த்து, தனக்கு முதுகு வலி இருப்பதால், தனக்கு டாட்டா க்ராண்ட் வாகனத்தை தருமாறு கேட்கிறார்.   சாதாரணமாக ரிசெப்ஷனில் இருந்து அனுராதாவின் உதவியாளரான அந்த ஜனா, சுனிலிடம், உங்களுக்கு முதுகு வலி என்றால், உங்கள் வீட்டில் உள்ள உங்களின் சொந்த ஸ்கார்ப்பியோவை எடுத்து பயன்படுத்துங்கள்… இந்த வாகனத்தைத் தர முடியாது என்கிறார். இது பழைய சம்பவம்.

அனுரதா வெளியேறிய மறுநிமிடம், டாட்டா க்ராண்ட் வாகனம் சுனில் வசம் மாறுகிறது.  அனுராதா வெளியேறியதும், அவரது ஆதரவாளர்களான ரங்கா என்கிற ரங்கநாதன், ஜனா, முரளிராமன் உள்ளிட்ட அனைவரும் படிப்படியாக ஓரங்கட்டப்படுகிறார்கள்.   பின்னர் வெளியேற்றப்படுகிறார்கள் ஜெயா டிவியின் அறிவிக்கப்படாத மேலாண்மை இயக்குநராகிறார் சுனில்.  ஜெயா டிவியில் அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்ட அனைவருக்கும் திடீரென்று எஜமானன் இல்லாவிட்டால் எப்படி வாழ முடியும் ?   அதனால் சுனிலை தங்களின் அறிவிக்கப்படாத எஜமானனாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

நானே ராஜா, நானே மந்திரி என்று ஒரு சர்வாதிகாரியின் மனநிலைக்கு வருகிறார்.  தனது எதிரிகளை படிப்படியாக ஓரங்கட்டி ஒழித்தே விட்டார்.  ஒரு காலத்தில் ஜாக்பாட்டின் ஷுட்டிங்குகள் ஜெயா டிவி அரங்கத்தில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்த அதே நிகழ்ச்சி ஜெயா டிவியின் தளங்களில் தடபுடலாக நடைபெற்றது.  அந்த நேரத்தில்தான் ஈடிஏ ஸ்டார் குழுமம் சுனிலை அணுகுகிறது.  கருணாநிதியோடு ஈடிஏ ஸ்டார் குழுமத்துக்கு ஜெயலலிதா அரசு பதவியேற்றதிலிருந்தே கடும் நெருக்கடி. ஸ்டார் குழுமத்தின் இலவச மருத்துவக் காப்பீடு மற்றும், அரசு ஊழியர் மருத்துகக் காப்பீடு திட்டத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா.  தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைத்தார்.

ஏப்ரல் 2010ல் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் ஈடிஏ ஸ்டார் குழுமம் பற்றி இப்படித் தெரிவித்தார்.

“எண்ணூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுதோறும் 6 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு ஆண்டுதோறும் நிலக்கரி இறக்குமதி செய்வதன் மூலம் மின்சார வாரியத்துக்கு ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, வாரியம் நஷ்டத்தில் இயங்குவதில் ஆச்சரியம் இல்லை.

250 மில்லியன் டன் நிலக்கரியை இருப்பு வைத்துள்ள இந்தோனேசியாவின் "பாரா எனர்ஜி மக்மூர்' என்ற நிறுவனத்தை வாங்கியுள்ள "ஸ்டார் எம்சன்ஸ் ரிசோர்ஸ்' நிறுவனத்திலிருந்துதான் பெரும்பாலான நிலக்கரிஇறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தை விருத்தி செய்தது துபாயைச் சேர்ந்த ஈடிஏ ஸ்டார் குழுமம். இக்குழுமத்துக்கு சொந்தமான "ஈஸ்ட் கோஸ்ட் கன்ஷ்ட்ரக்ஷன்' நிறுவனம் தான் ரூ. 700 கோடி மதிப்பில் தலைமைச் செயலகத்தையும், கோட்டூர்புரத்தில் பல கோடி மதிப்பிலான நூலகத்தையும் கட்டி வருகிறது.

இதே நிறுவனம் தான், "ஈடிஏ ஸ்டார் இன்ஸ்சூரன்ஸ்' என்ற பெயரில் ரூ. 2 ஆயிரம் கோடி காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. 1973ல் ஜெமினியின் குறுக்கே கட்டப்பட்ட அண்ணா மேம்பாலத்தை இந்நிறுவனம் தான் கட்டியது. அது குறித்து சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து நடித்த "பிள்ளையோ பிள்ளை' படத்தை விநியோகம் செய்ததும் இக்குழுமம்தான்.

இதே நிறுவனம் தான் "ஜெனக்ஸ் எக்சிம்' என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடியிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் சென்றுள்ளது.”

ஜெயலலிதாவுக்கு இந்த அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்ததே சுனில்தான். ஈடிஏ ஸ்டார் குழுமத்துக்கும், கருணாநிதிக்கான தொடர்பும் குறித்து ஜுனியர் விகடனில் வெளிவந்த கட்டுரை சவுக்கில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளதை இந்த இணைப்பில் காணவும்.

இப்படி ஜெயலலிதாவால் கடுமையாக கண்டிக்கப்பட்ட ஈடிஏ ஸ்டார் குழுமம் இன்று அதிமுக அரசோடு ஐக்கியமாகியிருப்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  இதன் உபயம் சுனில்.

இந்த ஈடிஏ ஸ்டார் குழுமத்துக்கு அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத்தொகைகள் கோடிக்கணக்கில் பாக்கியிருந்தன.   ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான நிறுவனம் என்பதால், அரசு அதிகாரிகள் இந்த பாக்கித் தொகைகளை இந்நிறுவனத்துக்கு தராமல் விசாரணை நிலுவையில் உள்ளது என்பதைக் காரணம் காட்டி நிறுத்தி வைத்திருந்தனர்.

ஜெயலலிதா அரசால் நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடிக்கு ஆளாகி, விரக்தியின் விளிம்புக்கே சென்ற ஈடிஏ ஸ்டார் குழுமம் எப்படி இந்த அரசோடு சமாதானமாவது என்று ஆலோசித்து தேர்ந்தெடுத்த நபர்தான் சுனில்.  மலையாளி லாபி மூலமாக சுனிலை அணுகுகிறார்கள். சுனிலின் நிறுவனமான டெலிஜும் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் ஜாக்பாட் நிகழ்ச்சியின் ஷுட்டிங் துபாயில் நடைபெற்றது.  அந்த நிகழ்ச்சி துபாயில் ஷுட்டிங் எடுக்கப்பட்டதற்கான மொத்த செலவுகளையும், ஈடிஏ ஸ்டார் குழுமம் ஏற்றுக் கொண்டது.   ஈடிஏ ஸ்டார் குழுமம் செலவில் ஷுட்டிங் எடுக்கப்பட்ட ஜாக்பாட் நிகழ்ச்சிக்கான தயாரிப்புச் செலவுகளை, சுனில் ஜெயா டிவிக்கு இந்நிகழ்ச்சியை விற்பனை செய்கையில் சேர்த்து விற்பனை செய்து, தனக்கு எவ்விதமான செலவும் இல்லாமல் வெறும் லாபத்தை மட்டுமே பார்த்தார்.  இந்த மோசடி ஜெயா டிவி நிறுவனத்துக்குள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், சுனில்தான் ஜெயா டிவியின் சக்ரவர்த்தியாகி விட்டாரே… அவரை யார் கேட்பது ?

தான் நிர்வாகப் பொறுப்பை எடுத்ததன் அறிகுறியாக ஜெயலலிதாவை கவர வேண்டும் என்பதற்காக, சுனில், ஜெயா குழுமத் தொலைக்காட்சிகளின் மொத்த லாபம் என்று 4 கோடி ரூபாய்க்கான காசோலையை ஜெயலலிதாவிடம் சென்று கொடுத்தார்.  ஜெயலலிதா சுனிலிடம், தொலைக்காட்சி தொடங்கிய 13 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக லாபம் என்று பணத்தை எடுத்து வந்து கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறி விட்டு, இந்தத் தொகை எனக்கு வேண்டாம்.  இந்தப் பணத்தை தொலைக்காட்சியை மேலும் வளர்ப்பதற்கு பயன்படுத்துங்கள் என்று சுனிலிடமே அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதன் பிறகு புதிய திரைப்படங்கள் வாங்குவதில், சுனில் வகித்த பங்கு குறித்து, சவுக்கில் விரிவாக விஸ்வரூபம் கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.  இப்படி புதிய படங்கள் வாங்குவதிலும், சுனில் ஏராளமான வருமானம் ஈட்டினார்.

சுனில் மீது ஜெயா டிவியில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தது ஊதிய உயர்வு விவகாரத்தில்தான்.  ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவை ஒட்டி எம்.எஸ்.விஸ்வநாதன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா, ஜெயா டிவி ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவிகிதத்துக்கும் குறையாமல் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று மேடையிலேயே அறிவித்தார்.

இதையடுத்து, 30 சதவிகிதம் ஊதிய உயர்வு என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ஜெயா டிவி ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.   சப் எடிட்டர்கள் உள்ளிட்டோருக்கு வெறும் 20 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.  சுனிலுக்கு ஜால்ரா போட்டு சுனில் விசுவாசிகளாக இருந்த உதயக்குமார், ரமணி போன்றோருக்கு ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டது.  ரமணி என்பவர்தான் ஜெயா டிவியின் தலைமைச் செய்தியாளர்.  இந்த ரமணி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்தபோது, பயிற்சிக்காக ஜெயா டிவிக்கு வருகிறார்.  பயிற்சிக்கு வந்தபோது ஜெய டிவியில் சேர்ந்த அவர், அதன் பிறகு, திரும்பவேயில்லை.  ஜெயா டிவியிலேயே செட்டிலாகி விட்டார். மாதம் 3 ஆயிரம் ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்த ரமணியின் மாதச் சம்பளம் இன்று 60 ஆயிரம்.  தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றி அதன் மூலம் முன்னேறியது வரவேற்கத்தகுந்த விஷயமே.  ஆனால், ரமணியின் பிரதான வேலை ஜெயா டிவியில் கிடையாது.  தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக உள்ள தங்கையன் மற்றும் சரவணமேனாடு சேர்ந்து, தரகு வேலை பார்ப்பதுதான் ரமணியின் பிரதான பணியே.   தொழில் தொடங்குவோர், கல்வி நிறுவனம் நடத்துவோர், போன்றவர்களை உரிய அதிகாரி மற்றும் அமைச்சர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களின் வேலைகளை முடித்துக் கொடுப்பதுதான் இவரின் பிரதான வேலை.  சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், இவரது மனைவிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.  இவர் மனைவி முழுத் திறமையோடு இந்த வேலையைப் பெற்றிருக்கலாம் என்றாலும் கூட, தலைமைச் செயலகத்தில் உள்ள இவரது தொடர்புகளால்தான் இந்த வேலையைப் பெற்றுள்ளார் என்றே பேசப்படுகிறது.

குறைவான ஊதிய உயர்வு பெற்ற அனைத்து ஊழியர்களும் கடும் எரிச்சலாகி மனக்குறையோடு, அனுராதாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராகவேந்திர ராவைப் பார்த்து முறையிடுகின்றனர்.  ஜெயலலிதாவே 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கியும், சுனில் தர மறுக்கிறார், அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் 100 சதவிகித ஊதிய உயர்வு வழங்கியிருக்கிறார் என்று முறையிடுகிறார்கள்.  ராகவேந்திர ராவ், சுனிலையே பார்த்து முறையிடுமாறு கூறுகிறார்.   பிரச்சினை கை மீறுவதை உணர்ந்த சுனில், உடனடியாக அனைத்து ஊழியர்களுக்கும் தலா 1000 ரூபாயை வழங்கி, பின்னர் ஊதிய உயர்வும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

Power tends to corrupt, and absolute power corrupts absolutely என்று லார்ட் ஆக்டன் சொன்னதற்கு எந்த மாற்றமும் இல்லாமல், சுனிலுக்கு கிடைத்த அளவுகடந்த அதிகாரம் அவரை ஒரு மிகப்பெரிய ஊழல் பேர்விழியாக மாற்றி விட்டிருக்கிறது.  ஊழல் பேர்விழியாக மட்டும் இல்லாமல் சுனிலை ஒரு நன்றிகெட்ட மனிதராகவும் மாற்றியிருக்கிறது.

மன்னார்குடி மாபியா கூட்டம் வரைமுறை இல்லாமல் கொள்ளையடித்த காரணத்தால்தான் சுனிலை அனைத்துப் பொறுப்புகளுக்கும் சேர்த்து நியமித்தார் ஜெயலலிதா.  சுனிலுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கிய ஒரே காரணம், அவர் மீதிருந்த நம்பிக்கைதான்.

ஒரு வகையில் ஜெயலலிதாவை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.  கருணாநிதியைச் சுற்றி சுற்றி உறவினர்கள்.  சென்னையில் ஒரு பகுதியை மொத்தமாக ஒதுக்கினால் அந்தப் பகுதி முழுவதும் கருணாநிதியின் உறவினர்கள் இருப்பார்கள்.  ஆனால் ஜெயலலிதா, இந்த மன்னார்குடி கூட்டத்தை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது.  அந்த மன்னார்குடி கூட்டமோ ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இல்லாமல் தங்கள் நலனை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறது.  ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் அவர் அருகில் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.  ஆனால் மன்னார்குடி கூட்டத்தை நம்புவதைத் தவிர ஜெயலலிதாவுக்கு வேறு வழியே இல்லாத காரணத்தால்தான் வெளியேற்றப்பட்ட மன்னார்குடி கூட்டம் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்துள்ளது.

jaya_tv_14th_anniversary_2012_photos00-002

டெலி ஜும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தியிருந்தால் சுனில் இன்று இருக்கும் அளவுக்கு செல்வந்தராக இருந்திருக்க முடியாது. அவருக்கு இன்று இருக்கும் பணமும் அதிகாரமும் அவரிடம் நிச்சயம் இருந்திருக்காது.  இன்று அவருக்கு இருக்கும் சொகுசுகளும், ஏகபோகங்களும், ஜெயலலிதா அளித்தவையே.  இதை மனதில் வைத்தாவது சுனில் ஜெயலலிதாவுக்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருந்திருக்கலாம்.  ஆனால் அவரின் சுயநலம் அவர் கண்ணை மறைத்து விட்டது.  துரோகம் செய்து ஜெயலலிதாவிடம் சிக்கினால் என்ன ஆகும் என்பது அதிமுக அடிமைகளுக்கு நன்றாகத் தெரியும்.   அப்படித்தான் சுனிலும் சிக்கிக் கொண்டுள்ளார்.

சவுக்கில் வெளிவந்த விஸ்வரூபம் கட்டுரையைத் தொடர்ந்து சுனில் மீது, உளவுத்துறை விசாரணை நடைபெற்றுள்ளது. அந்த விசாரணை அறிக்கையைப் பார்த்து கடும் கோபமடைந்த ஜெயலலிதா, சுனில், தலைமை செயல் அலுவலர் ராகவேந்திர ராவ் மற்றும் தலைமைச் செய்தி ஆசிரியர் தில்லை ஆகியோரை வரவழைத்து, போயஸ் தோட்டத்தில் கடுமையாக திட்டியிருக்கிறார். அப்போது ரபி பெர்நார்டையும் வரவழைத்து, ஜெயா டிவியின் செய்தி மற்றும் மார்க்கெட்டிங் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு ரபி பெர்நார்டை பணித்துள்ளார்.

சுனில் கையொப்பமிட வேண்டிய பல்வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளதால், சுனிலை உடனடியாக வெளியேற்ற முடியாது. அதனா அவரைத் தற்காலிகமாக ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளை கவனித்துக் கொள்ள பணித்துள்ள ஜெயலலிதா, சுனில் பெயரில் உள்ள ஆவணங்கள் மாற்றப்பட்டதும், அவரை வேலையை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அன்பார்ந்த சுனில் அவர்களே… உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பது தெரியும்.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதன் மலையாள மொழிபெயர்ப்பு என்ன என்று உங்கள் தொண்டர் அடிப்பொடிகள் ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை.

$
0
0

vetri-duraiஒரு காகிதம் பொறுக்கி கல்வித்தந்தை ஆன கதையை ஏற்கனவே சவுக்கு வாசகர்கள், அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், ஐ யம் வெரி ஹேப்பி ஸ்டார்ட் ம்யூசிக், மற்றும் முகமூடி ஆகிய கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.  சரி.. சைதை துரைசாமிதான் இப்படி என்றால், அவர் மகன் சைதை துரைசாமியை விஞ்சி விடுவார் போலிருக்கிறது.

வெற்றி நாளிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

22_02_2013_005_029

சென்னையில் நடைபெற இருந்த நாய் கண்காட்சி இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்தக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதற்கு, ஒரு முக்கியப் பிரமுகரின் மகன் வளர்த்த நாய்க்கு முதல் பரிசு கொடுக்காததுதான் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.  இதன் முழு விபரங்கள் என்னவென்று விசாரித்தால், சைதை துரைசாமிக்கு அவரைப் போல அல்ல… அவரையே விஞ்சி விடும் வகையில் ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு சவுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

வெற்றி துரைசாமி.  பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ இவர் வெற்றியைத் தவிர வேறு எதையுமே விரும்புவதில்லை.  தாம்பரத்தை அடுத்த படைப்பையில், ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியத்துக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது.  பாலசுப்ரமணியம் ஒரு பறவைப் பிரியர். விதவிதமான பறவைகளை வளர்த்து வருவார்.  எம்.எல்.ஏ சைதை துரைசாமியின் மகன் என்ற அறிமுகத்தில் ஒரு நாள் பறவைகளை பார்க்க வேண்டும் என்று சிறுவனாக இருந்த வெற்றி துரைசாமி கேட்கவும், அவரும் அனுமதித்துள்ளார்.   உள்ளே சென்று பறவைகளைப் பார்வையிட அனுமதித்தால், மெக்காவ் எனப்படும் பஞ்சவர்ணக்கிளி ஒன்றை திருடியுள்ளார் வெற்றி.  இந்தத் தகவல் அறிந்ததும், வெற்றியைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.  பெரிய மனிதர் வீட்டுப் பையன் (இவங்க அப்பன் இவனை விட பெரிய சில்லரை என்பது பாலசுப்ரமணியத்துக்குத் தெரியவில்லை) என்பதால் விட்டு விட்டார்கள்.  இந்தப் பறவைகளின் ஒரு ஜோடியின் விலை என்ன தெரியுமா ?  இன்றைய சந்தை மதிப்பு 3 லட்சம்.

Scarlet_Macaw_Ara_macao_-Panama-8a

அப்படிப்பட்ட பண்பாளரும் சிறந்த மனிதருமானவர்தான் வெற்றி துரைசாமி.   இவர் சட்டம் படித்தவர்.  சட்டம் படித்து விட்டு, வழக்கறிஞராக தொழில் செய்யாமல், BPO போல LPO (Legal Process Outsourcing) என்ற நிறுவனம் நடத்தி வந்தார்.   அப்போது இவரோடு நெருக்கமானவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கண்ணதாசன்.  இந்த கண்ணதாசன் பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  சைதை துரைசாமியின் மகனோடு நல்ல நீதிபதிகள் சகவாசம் வைத்துக் கொள்வார்களா என்ன ?

குதிரை வளர்ப்பது, தபால் தலைகள் சேகரிப்பது, நாணயங்கள் சேகரிப்பது போல, நாய்கள் வளர்ப்பது பல பெரிய மனிதர்களின் ஹாபி.  இது ஒரு தனி உலகம்.  அழகான, விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பது, நாய்க் கண்காட்சிகளில் அந்த நாய்களை கலந்து கொள்ள வைப்பது என்று அந்த தனி உலகத்தில் ஜீவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி நாய் வளர்ப்பதற்கென்று கென்னல் க்ளப் ஆப் இந்தியா என்று ஒரு தனி சங்கமே உள்ளது.  இந்த சங்கத்தின் தலைமையகம் சென்னையில் இயங்குகிறது.   இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் நாய்கள் பிறந்தது முதல் அத்தனையையும் பதிவு செய்ய வேண்டும்.  இந்த சங்கம் சான்றிதழ் அளித்தால்தான் நாய் எப்படிப்பட்ட தரம் வாய்ந்தது என்று உரிய விலைக்கு வாங்குவார்கள்.  அப்படிப்பட்ட ஒரு க்ளப்தான் கென்னல் க்ளப் ஆப் இந்தியா.

Untitled-3

நீண்ட நாட்களாக வட இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்த க்ளப்பின் தலைமையகத்தை சென்னைக்கு மாற்றினர்.  சென்னைக்கு மாற்றி இந்த க்ளப் சிறப்பாக செயல்பட்டு வந்தது.  ரேஸில் ஓடும் குதிரைகள் எப்படி கோடிக்கணக்கில் விலை போகின்றனவோ, அது போல அரிதான வகையைச் சேர்ந்த நாய்கள் 2 லட்சம் முதல் 30 லட்ச ரூபாய் வரை விலை போகும்.

வழக்கமாக நாய்க் கண்காட்சிகளில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.  அப்படி பரிசுகள் வழங்கையில் அரிதான வகையைச் சேர்ந்த நாய்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குவர்.

714x470-chennai-dog-shows_818

இந்தச் சூழலில் 2005ம் ஆண்டு வாக்கில், இந்த நாய் உலகத்தில் இறங்குகிறார் வெற்றி துரைசாமி.   இந்த க்ளப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், சுதர்சன் என்பவர்.  நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருப்பதில் இவர் நிபுணர்.  ஏறக்குறைய 100 நாடுகளுக்கும் மேல் நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருந்துள்ளார்.  இவரோடு வெற்றி துரைசாமி நெருக்கமாகிறார்.  சரி… ஆளுங்கட்சிப் பிரமுகரின் மகனாயிற்றே என்று சுதர்சனும் இவரோடு நெருக்கமாகப் பழகுகிறார்.

இந்த நாய்களின் உலகத்தின் ஜாம்பாவன்கள் நிறையபேர் உண்டு.  நாய் வளர்ப்பதற்கென்று லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, போட்டிகளில் அந்த நாய்களை பரிசு பெற வைத்து, அதில் பெருமையடைபவர்கள் பலர் உள்ளனர்.  இப்படிப்பட்ட ஒருவர்தான் நாகராஜ் ஷெட்டி என்பவர்.   இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.  இவருக்கு பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாமே நாய்கள்தான்.  பெங்களுரில் உள்ள இவரது வீட்டில், நாய்களுக்கென்று தனித்தனி ஏ.சி அறைகள், அந்த நாய்களைப் பராமரிக்க ஒவ்வொரு நாய்க்கென்றும் தனித்தனி பராமரிப்பாளர்கள், அந்த பராமரிப்பாளர்களுக்கு தங்கும் விடுதி என்று இவர் ஒரு நாய் பக்தர்.  இந்த நாகராஜ் நாய்க் கண்காட்சிகளில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

சென்னை கென்னல் க்ளப் என்ற நாய் வளர்ப்போர் சங்கத்துக்கென்று பெரிய அளவில் நிதி ஆதாரங்கள் கிடையாது. ஒரு கண்காட்சி நடத்துவதென்றால் குறைந்தது 3 முதல் 5 லட்சம் வரை ஆகும்.  டிக்கெட்டுகள், விளம்பரங்கள் என்று வசூல் செய்தது போக துண்டு விழும் தொகையை இந்த நாகராஜ் ஷெட்டி ஒரே செக்கில் வழங்குவார்.  இப்படி இவர் வழங்குவதால், போட்டிகளில் முதலிடம் வழங்குவதில் இவருக்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம்.  முதலிடம் பெறுகிறார் என்பதற்காக, இவரது நாய்கள் தகுதியற்றவை என்று பொருள் அல்ல.  20 முதல் 25 லட்சம் வரை செலவு செய்து, வெளிநாட்டிலிருந்து மிக மிக சிறப்பான அரிய வகை நாய்களை இறக்குமதி செய்து கண்காட்சிக்கு கொண்டு வருவார்.  இவர் கொண்டு வரும் நாய்கள், இந்தியாவில் எங்குமே இருக்காத வகையில் சிறப்பாக இருக்கும்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாய்களின் சங்கமும், நாய்க் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான், வெற்றி துரைசாமி போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்குகிறார்.  இவர் தன் பங்குக்கு க்ளப்புக்காக பணத்தை செலவு செய்வதோடு, தனது அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது நாய்தான் முதல் பரிசு வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.  அரசியல் பிரமுகரின் மகனாயிற்றே என்று, இவரது நாய்க்கு முதல் பரிசை தொடர்ந்து வழங்குகிறார்கள். நாய் வளர்ப்பில் தனக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்த வெற்றி துரைசாமி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் உள்ள நாய் வளர்ப்புச் சங்கங்கள் நடத்தும் போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசை பெறுகிறார்.  தமிழ்நாடு சங்கத்துக்கே நிதி நெருக்கடி என்றால் மற்ற தென்மாநில சங்கங்களை கேட்கவா வேண்டும் ?  அந்த மாநிலங்களில் உள்ள சங்கங்களுக்கு நிதி உதவி கொடுத்து, முதல் பரிசை பெறுகிறார்.  தென் மாநிலங்களில் முதல் பரிசைப் பெறும் வெற்றி துரைசாமி, வட இந்தியாவுக்கு ஏன் செல்லவில்லை என்றால், வட இந்தியாவில் இது போல திருட்டுத்தனம் செய்தால், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதால்தான்.

Untitled-1

2006, 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து கண்காட்சிகளிலும் வெற்றி துரைசாமியின் லசாப்சோ வகை நாய் முதல் பரிசைப் பெறுகிறது.  இப்படி வெற்றியின் நாய்களுக்கு முதல் பரிசு வழங்கப்படுவதால், வழக்கமாக சிறப்பான நாய்களைக் கொண்டு வந்து பரிசு பெறும், நாகராஜ் ஷெட்டி எரிச்சலடைகிறார்.  ஒரு கட்டத்தில், சென்னையில் உள்ள கண்காட்சிகளில் பங்கெடுப்பதையே தவிர்க்கிறார்.  சென்னைக்கு வருவதில்லையே தவிர, நாகராஜ் ஷெட்டியின் நாய்கள், தென்அமேரிக்க நாடுகளிலும், அமெரிக்காவிலும் பல பரிசுகளை வெல்கின்றன.

இதற்கிடையே மற்றொரு பூதாகரமான ஊழல் புகார் வெற்றி துரைசாமி மீது விழுகிறது.  அது என்னவென்றால், நாய்களை சொந்தமாக வளர்க்காமல், தாய்லாந்திலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து கண்காட்சியில் கலந்து கொள்ள வைத்து, கண்காட்சி முடிந்ததும் திருப்பி அனுப்பி விடுகிறார் என்ற விபரம், நாய் வளர்க்கும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தெரிய வருகிறது. இவர்கள் வெற்றியின் வெற்றி ரகசியத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.  லசாப்சோ வகை நாயை பராமரிப்பது மிக மிக கடினம்.   அந்த நாயின் முடிகளை பத்து பத்து முடிகளாக பிரித்து, அதன் மீது மெல்லிய காகிதத்தை வைத்து, ரப்பர் பேன்ட் போட்டு, ஒரு நாள் கழித்து அவற்றை பிரிக்க வேண்டும்.  ஏராளமான செலவு பிடிக்கும் நாய் இது.  இந்த சிரமத்துக்காக, வெற்றி துரைசாமி, தாய்லாந்திலிருந்து நாய்களை வாடகைக்கு எடுத்த போட்டியில் கலந்து கொள்கிறார் என்ற விபரம் தெரிய வந்ததும், இனி வெற்றிக்கு முதல் பரிசு கொடுக்கக் கூடாது என்று க்ளப் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

Vetri_with_Sudharson_son

நாய்க்கண்காட்சியில் நாய்.....மற்றும் வெற்றி துரைசாமி

இதன் நடுவே நாய் வளர்ப்புச் சங்கத்தின் சார்பில், மாதந்தோறும் கென்னல் கெஸட் என்ற பத்திரிக்கை வருகிறது.  இந்தப் பத்திரிக்கையில் அரிய வகை நாய்கள், போட்டிகளில் வென்றது போன்ற செய்திகள் வெளிவரும்.  போட்டிகளில் வென்ற நாய்களின் உரிமையாளர்கள், தங்கள் நாய்களைப் பற்றி விளம்பரங்களும் கொடுப்பார்கள்.  இப்படி போட்டிகளில் வென்ற நாய்களைப் பற்றி விளம்பரங்கள் கொடுக்கையில், சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகள், அதற்கு சான்றிதழ் அளிக்க வேண்டும்.  அப்படி சான்றளித்தால்தான், விளம்பரங்களே ஏற்றுக் கொள்ளப்படும். வெற்றி துரைசாமி, போட்டியிலேயே வெல்லாத நாய்களைப் பற்றியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்க முயற்சித்தார்.  சங்க நிர்வாகி சுதர்சன், ஏற்கனவே நமது பெயர் ரிப்பேராகி இருக்கிறது.  இனியும் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்படி பொய்யான விளம்பரங்கள் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார்.2009ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் மீண்டும் நாகராஜ் ரெட்டி கலந்து கொள்கிறார்.  அவரது நாய் அந்த ஆண்டு சிறந்த நாயகாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.  அவ்வளவுதான்… வந்ததே கோபம் வெற்றிக்கு… உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கருவுகிறார்.

Untitled-2

சைதை துரைசாமிக்கு எப்படி அற்ப புத்தியோ, அதை விட அற்ப புத்தி படைத்தவராக இருக்கிறார் வெற்றி துரைசாமி. தனது பொய் விளம்பரத்தை ஏற்க மறுத்ததால், அற்பத்தனமாக நடந்துகொள்கிறார்.  மெட்றாஸ் கேனைன் க்ளப்  என்பதன் பெயரைப் பதிவு பதிவாளர் அலுவலகத்தில் புதுப்பிப்பதில் தாமதம ஏற்படுகிறது.  இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தி, மெட்றாஸ் கேனைன் க்ளப் என்று தன்னுடைய பினாமி பெயரில் ஒரு சங்கத்தைப் பதிவு செய்து கொள்கிறார் வெற்றி துரைசாமி.  இந்த விபரமே தெரியாமல், அடுத்த நாய்க் கண்காட்சியை டெல்லியில் நடத்திக் கொண்டிருக்கையில், டெல்லிக்குச் சென்று நீதிமன்றத்தில் கண்காட்சி மெட்றாஸ் கேனைன் க்ளப் பெயரில் வேறு ஒருவர் கண்காட்சி நடத்துகிறார் என்று தடை உத்தரவு பெற்று, கண்காட்சி தொடங்கிய பத்தாவது நிமிடம் தடை உத்தரவை வழங்க ஏற்பாடு செய்கிறார் வெற்றி துரைசாமி.  கண்காட்சி தொடங்கிய பிறகு எப்படி நிறுத்துவது ? ஏறக்குறைய 600 நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றிருந்தன.  வெளிநாட்டிலிருந்தெல்லாம் பல நாய்கள் வந்திருந்தன.  அந்த வெளிநாட்டு நாய் வளர்ப்பவர்களிடம், சென்னையில் சைதை துரைசாமி பெற்ற தறுதலை ஒன்று இப்படி ஒரு தடை உத்தரவை பெற்று வந்திருக்கிறது என்று சொல்லவா முடியும் ?  போடா வெண்ணை என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சியை நடத்தினார்கள்.  அதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறார் வெற்றி.

Colour_page_advt_in_IKG

வெற்றி துரைசாமியின் நாய் மற்றும் பயிற்சியாளர்

Thanks_advt

உண்மையான மெட்றாஸ் கேனைன் க்ளப் நிர்வாகத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில், கீழ் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை தடை செய்யக் கோரியும், போலியாக பதிவு செய்த பதிவை ரத்து செய்யக் கோரியும் தொடுத்த வழக்கை விசாரித்த நீதியரசர் கே.வெங்கட்ராமன், சமீபத்தில்தான் போலி சங்கத்தின் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதால், கடும் ஆத்திரமடைகிறார் வெற்றி துரைசாமி.  சங்கத்தின் நிர்வாகி சுதர்சனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று முனைகிறார்.   சுதர்சனின் வீட்டில், புதுக்கோட்டையிலிருந்து வந்த பெண் ஒருவர் வேலையாளாக பணியாற்றி வருகிறார்.  அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே பணியாற்றிய மற்றொரு வேலைக்காரப் பையன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டான் என்றும், அந்த பையன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்கு, சுதர்சன் உடந்தையாக இருந்தார் என்றும் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார்.  அந்த பாதிக்கப்பட்ட பெண் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதும், விசாரித்து விட்டு, இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று எப்ஐஆர் பதிவு செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.  உடனே, 200 பேரை ஏதோ ஒரு டுபாக்கூர் தலித் சங்கத்திலிருந்து அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அந்த வேலைக்காரப் பையனை மட்டும் பொய்ப்புகார் என்று தெரிந்தே, கைது செய்கிறது காவல்துறை.  சுதர்சனை விசாரித்து விட்டு, தினந்தோறும் காவல்நிலையத்துக்கு வந்து செல்லவேண்டும் என்று அலைக்கழிக்கிறார்கள்.  புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்த அந்தப் பெண்ணின் வீட்டார், தங்களை புகார் கொடுக்கச் சொல்லி கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக உண்மையை வெளிப்படையாகச் சொல்லி விட்டனர்.

Vetri_with_Foreign_Judge

2010ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி நடந்து வருகிறது.  அப்போது வெயில் கடுமையாக இருந்ததால், ஒரு நாய் இறந்து போகிறது.  இதை எப்படியாவது பெரிய செய்தியாக்கி, கண்காட்சிக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் கெட்டபெயர் வாங்கித் தரவேண்டும் என்று நினைத்த வெற்றி துரைசாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராக இருந்த குஹாம்பிகா என்பவரை அழைத்து, பிரத்யேக செய்தி… சென்னை நாய்க் கண்காட்சியில் கலந்து கொண்ட நான்கு நாய்கள் இறந்து விட்டன என்று கூறுகிறார்.  சைதை துரைசாமியைப் போலவே, அவர் மகனும் ஒரு பொய்யர் என்பதை குஹாம்பிகா உணர்ந்திருக்க வேண்டும்.  உணரத் தவறி, அந்தச் செய்தியை அப்படியே அலுவலகத்துக்குத் தந்தார்.  அப்போது எடிட்டராக இருந்த ஆதித்ய சின்ஹா, அச்செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டார்.  செய்தி வெளியான அன்றே, மெட்றாஸ் கேனைன் கிளப்பிலிருந்து மறுப்பு அளித்தார்கள்.  இறந்தது ஒரே ஒரு நாய்தான்… அதுவும் நோய் வாய்ப்பட்டிருந்தது என்று கூறியதும், குஹாம்பிகா ஒரு வாரத்துக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

2012ம் ஆண்டு வழக்கம் போல நாய்க்கண்காட்சி சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங்க் சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது. நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டன.  இந்த நேரத்தில் சென்னை மாநகரத் தந்தையும், ஒரு ரூபாய் இட்லி வியாபாரியுமான சைதை துரைசாமியின் அலுவலகத்திலிருந்து சென்னை பல்கலைக்கழக நிர்வாகிக்கு சென்னை மாநகராட்சி விழா ஒன்று அந்த மைதானத்தில், நடைபெற உள்ளதால், நாய்க் கண்காட்சியை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது.  இட்லி வியாபாரியும், மாநகரத்தந்தையுமான சைதை துரைசாமியின் உத்தரவை மறுக்க முடியுமா ? கண்காட்சிக்கு முதல் நாள், இடம் வழங்க முடியாது என்று ரத்து செய்கின்றனர்.  அந்த ஆண்டு கண்காட்சி நடக்காமலேயே போய் விட்டது.

398797_380911698633765_192935899_n

ujமூன்று மாதங்களுக்கு முன், ஐந்து வழக்கறிஞர்கள் காலை 8 மணிக்கு சுதர்சன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.  அவரிடம் சென்று, நாங்கள் உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தோமே… ஏன் வாங்கவில்லை என்று கேட்டுள்ளனர்.   யாருக்கு கொடுத்தீர்கள் என்றதும், சங்கத்துக்குத்தான் கொடுத்தோம் என்றதும், சங்க அலுவலகத்துக்கு வந்து பேசுங்கள்.  வீட்டில் சங்க விவகாரங்களை பேச இயலாது என்று கூறியுள்ளார்.  அவர்கள் அமைதியாக சென்று விட்டனர். மறுநாள் அண்ணா நகர் காவல்நிலையத்திலிருந்து சுதர்சனுக்கு அழைப்பு.  என்ன என்று தெரிந்த காவல்துறை அதிகாரி மூலமாக விசாரித்தால், ஐந்து வழக்கறிஞர்களை ஜாதிப்பெயரைச் சொல்லி நேற்று திட்டியதாக புகார் வந்துள்ளது.  விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  தெரிந்த காவல்துறை அதிகாரியிடம் பேசியதும்… அந்த வக்கீல்களிடம், அவருக்கு நீங்கள் இந்த ஜாதிதான் என்று எப்படித் தெரியும் என்று வக்கீல்களைக் கேட்டதும், ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்லியுள்ளார்கள்.  போலீஸ் பிறகு அவர்களை விரட்டி விட்டது.

சரி.. சென்ற ஆண்டுதான் இப்படி ஆகி விட்டது. இந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை நம்ப முடியாது. அதனால் வேறு இடத்தைப் பார்க்கலாம் என்று இவர்கள் தேர்ந்தெடுத்த இடம், சென்னை ஐசிஎஃப் விளையாட்டு மைதானம்.  அந்த விளையாட்டு மைதானத்தை பேசி முடிவு செய்து, அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.  கண்காட்சி 24 பிப்ரவரி அன்று ஐசிஎப் மைதானத்தில் நடந்திருக்க வேண்டும்.  ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பாக ஐசிஎப் அதிமுக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு மனோஜ் என்ற பாடி பில்டர் சங்க நிர்வாகிகளை அணுகுகிறார்.  நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்றால் எங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்கிறார்.  ஏற்கனவே, பணம் இல்லாத காரணத்தால் பணம் கொடுப்பவருக்கு முதல் பரிசை வழங்கும் சங்கம் 10 லட்ச ரூபாய்க்கு எங்கே போகும்…  எங்களால் தர இயலாது என்றதும், அந்த மனோஜ், நீங்கள் தராவிட்டால் எங்களுக்கு தரத்தயாராக இருக்கிறார்கள். கொடுக்கவில்லையென்றால், கடும் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.  சங்க நிர்வாகிகளோ, எங்களைப் புரட்டிப் போட்டாலும் 10 லட்ச ரூபாய் கிடையாது என்று கூறியுள்ளனர்.

சரி போங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிய மனோஜ், நேற்று நீதிமன்றத்தில் பெற்றதாக ஒரு தடை உத்தரவை பெற்று நிகழ்ச்சி நடத்துவதை ரத்து செய்துள்ளார்.

400 நாய்கள் பங்கெடுக்க வேண்டிய இந்த ஆண்டு கண்காட்சி, வெற்றி துரைசாமியின் தலையீட்டால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.  நூற்றுக் கணக்கான நாய் வளர்ப்பாளர்களும், கண்காட்சியைக் காண இருந்த குழந்தைகளும், சைதை துரைசாமி பெற்ற தறுதலையால் கண்காட்சியை காண இயலாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சரி வெற்றி துரைசாமி இந்த விஷயத்தில்தான் இப்படி நடந்து கொள்கிறாரா என்று பார்த்தால் எல்லா விஷயத்திலும் இப்படித்தான். கடந்த ஆண்டு, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வளர்ப்புப் பிராணிகள் கண்காட்சி நடந்துள்ளது.  இதை நடத்துபவர் யார் என்பதே வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. கண்காட்சி வெற்றிகரமாக நடந்து, 40 லட்ச ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில் வட இந்தியாவிலிருந்து உயர்வகைப் பறவைகளை எடுத்து வந்து விற்றவர்களை 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார் வெற்றி துரைசாமி.  பணத்தைக் கொடுங்கள் என்று கேட்ட வியாபாரிகளிடம், தமிழ்நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்று மிரட்டியுள்ளார் வெற்றி துரைசாமி.

Pet_Show_Festival_Pet_Fest_2012_YMCA_Royapettah_Chennai_Jan_2012

சென்னை தாம்பரத்தை அடுத்து, வெற்றி துரைசாமிக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று இருக்கிறது.  இந்தப் பண்ணை வீட்டில், ஏராளமான பஞ்சவர்ணக் கிளிகளை வளர்த்து வருகிறார் வெற்றி துரைசாமி. இன்று ஆசியாவிலேயே அதிக அளவில் பஞ்சவர்ணக் கிளிகள் வைத்திருப்பவர் என்று பெயரெடுத்திருக்கிறார். (இதுல என்னென்ன தில்லுமுல்லோ, எங்க திருடுனதோ) இந்த பண்ணை வீட்டுக்கு, அஜீத் சென்னையில் ஓய்வில் இருக்கும்போதெல்லாம் தன் குழந்தையோடு செல்லுவது வழக்கம்.  அஜீத் போன்ற வெளிப்படையான நபர்கள், இப்படி ஒரு திருட்டுப்பயலோடு எப்படி நட்பாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

ajith_at_vetri_duraisamy_wedding_engagement_stills_5145

தல மற்றும் தறுதல

ஒரு நண்பரிடம் பேசுகையில் வெற்றி துரைசாமி சொன்னது. “எங்க அப்பா பண்ண இன்வெஸ்ட்மென்ட்லயே பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் மனிதநேயம் அறக்கட்டளைதான்.  ஒரு வருஷத்துக்கு நம்ப இன்ஸ்ட்யூட்ல படிச்ச 50 பேர் சர்வீஸ்க்கு போறாங்க.  ஒரு வருஷத்துக்கு 50 பேர்னா பத்து வருஷத்துல 500 பேர். இதுல 250 பேரை விட்டுட்டாக் கூட 250 பேர் அப்பாவுக்கு விசுவாசமா இருப்பாங்க.  என்ன காரியம் வேணாலும் சாதிச்சுக்கலாம்” இதைச் சொன்ன நண்பரிடம் இது ஏற்கனவே சவுக்கில் அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், என்ற கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது என்று கூறியபோது, நண்பர் ஆச்சர்யப்படடார்.

சைதை துரைசாமி ஒரு பெரிய தீயசக்தி என்று பார்த்தால் அவர் வாரிசு அவரை விட பெரிய தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறார்.  இந்த தீயசக்திகளையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய ஜெயலலிதா, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் வேதனை.

Mr._Saidai_Sa._Duraisami_sSon_Reception_Photo_5

எத்தனையோ உண்மையான அதிமுக தொண்டர்களின் திருமணத்துக்கெல்லாம் செல்லாத ஜெயலலிதா, இந்தத் தறுதலையின் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார்

 

அடுத்த முறை நாய்க் கண்காட்சியில் பரிசு கிடைக்கவில்லையென்றால் வெற்றி துரைசாமி வருத்தப்படக் கூடாது.  கழுத்தில் ஒரு பேட்ஜை அணிந்து கொண்டு இவரே நாய்களோடு நாயாக அமரலாம்.  அதற்கு இப்போதிலிருந்தே குரைத்துப் பழகுவது நல்லது.


செருப்பால் அடிப்பேன்…

$
0
0

இப்படி சொன்னவர் ஒரு காவல்துறை மூத்த அதிகாரி.  உயர்பொறுப்பில் இருப்பவர்.  நேர்மையான அதிகாரி என்று காவல்துறைக்குள் இவரைப் பற்றிப் பெயர்.  யார் இவர்… எந்தச் சூழலில் இவர் இப்படிச் சொன்னார் என்பதை பின்னால் பார்ப்போம்.

IMG_0009

கல்கி..  16 வயது.  எல்லா இளம்பெண்களையும் போல கனவுகளோடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.    விழுப்புரம் மாவட்டம் வானூர்தான் அவள் சொந்த ஊர். சராசரியாகப் படிக்கும் மாணவி.

புத்தாண்டு பிறந்து இரண்டு நாட்கள்தான் ஆகியிருந்தது.  ஜனவரி 3.   வீட்டில் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் செய்ய வேண்டிய சிற்றுண்டிக்கு அரிசியை ஊறவைத்துவிட்டு, சற்று நேரத்தில்  வந்து விடுகிறேன் என்று தம்பியிடம் சொல்லி விட்டு, இயற்கை உபாதைக்காக  வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்புக்கு செல்கிறாள்.  மணி பிற்பகல் 3.10


மாலை நான்கு மணிக்கு, கல்கியின் தாய் தேன்மொழி, இயல்பாக எங்கடா அக்கா என்று கல்கியின் தம்பியிடம் கேட்கிறார்.   இதோ வந்துடுறேன் என்று சொல்லிட்டுப் போயிருக்கு என்று கூறுகிறான். மேலும் சிறிது நேரம் காத்திருந்து விட்டு, காணவில்லையே என்று பதற்றமடைந்து தேடத் தொடங்குகின்றனர்.   கல்கி… கல்கி என்று குரல் கொடுத்துக் கொண்டே, வீட்டின் பின்னே இருந்த சவுக்குத் தோப்பில் தேடுகின்றனர்.   இதற்குள் மற்ற உறவினர்களும் சேர்ந்து தேடுகின்றனர்.

சற்று நேரத்தில் பின்னால் உள்ள சவுக்குத் தோப்பில் உள்ள ஒரு சவுக்கு மரத்தில் கல்கி தன் துப்பட்டாவில் பிணமாகத் தொங்குவதைப் பார்க்கிறார்கள்.  உடனே அவசர அவசரமாக மரத்திலிருந்து கல்கியை இறக்கி அவசர அவசரமாக அருகில் உள்ள  ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். கல்கி இறந்து விட்டாள் என்பது அறிவிக்கப்படுகிறது.   உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டதும் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கின்றனர்.  காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி  போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்புகின்றனர்.

3IMG_0011

இரண்டு நாட்கள் கழித்து  05.01.2013 அன்று  கல்கியின் உடலை அவரின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

இறந்தவர் பாலியல் வன்முறை காரணமாக இறந்துள்ளார் என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே வெகுவாகப் பரவியிருந்தது.  இதனால் அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் உருவாகியிருந்தது.   சந்தேகத்திற்குரிய மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்த காவல்துறையினர், இவ்வழக்கில் வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் அனுப்பி கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.  ஆனால் அவ்வாறு கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறவில்லை.

இயல்பாகவே இளம்பெண்ணின் மர்ம மரணம் உருவாக்கும் பதற்றம் அந்தப் பகுதியிலும் தொற்றிக் கொண்டது.   இறந்த கல்கியின் தந்தை சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் உள்ளார்.

மாணவி கல்கி படித்த பள்ளி மாணவ மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.  பொதுமக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், மாணவ மாணவிகளும் பாண்டிச்சேரி வானூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளும் அந்த இடத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், கோட்டாட்சியரும் குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்ததை அடுத்து போராடிய மக்கள் கலைந்து சென்றனர்.

கல்கி புதைக்கப்பட்ட பிறகு, அந்த குற்றத்தைக் கண்டுபிடிக்கும் காவல்துறையின் முயற்சிகளும் புதைக்கப்படுகின்றன.   இதையடுத்து, பெண்ணின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சிரைச் சந்தித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

காவல்துறையினரை எப்போது சந்தித்துக் கேட்டாலும், கல்கியின் மரணம் தற்கொலைதான் என்று உறுதிபடக் கூறுகின்றனர்.  பெண்ணின் பெற்றோருக்கோ அதிர்ச்சி.. காவல்துறையினரின் இந்த பொறுப்பற்ற பதில் அவர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.  நெட்டுக்குத்தாக நிற்கும் சவுக்கு  மரத்தில், ஒரு இளம்பெண் எப்படி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முடியும் என்ற கேள்விக்கு விடையே இல்லை.

தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டாலும் பொறுப்பற்ற பதில்கள் மட்டுமே வருகின்றன.  எப்படியாவது நம் மகளைக் கொன்ற நபர்களை தண்டிக்க முடியுமா என்று பெற்றோர்கள் அலைகிறார்கள்.

இந்த நிலையில் பிப்ரவரி 19 அன்று அந்த சவுக்குத் தோப்பின் உரிமையாளர் முருகன், சவுக்குத் தோப்பை வெட்டுவதற்கென்று ஆட்களோடு வருகிறார். பெண்ணின் பெற்றோர்களும், உறவினர்களும் தோப்பை வெட்டாதீர்கள், கொலை வழக்கு விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.   மரத்தை வெட்ட வந்தவர்களும் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்கள்.

பிப்ரவரி 19 அன்று சென்றவர்கள் மீண்டும் பிப்ரவரி 22 அன்று வருகையில் 200 போலீசாரோடு வந்து மரத்தை வெட்டித்தான் தீருவோம் என்று கூறுகிறார்கள்.   கல்கியின் பெற்றோர் உறவினர் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து காவலர்களை கேட்கின்றனர். செவிசாய்க்காத காவல் அதிகாரிகள் அவர்களை மிரட்டி நீங்கள் கேள்வி கேட்டால் உங்கள் அனைவரையும் உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டி துரத்திவிடுகின்றனர்.

IMG_0014

முற்றிலும் விளைந்து முடியாத இந்த சவுக்குத் தோப்பை திடீரென்று வெட்டுவதற்கான காரணம் என்னவென்று புரியாத கல்கியின் பெற்றோர், இன்று கல்கியின் தாய் தேன்மொழி, தாய் சேகர் மற்றும் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகி அய்யாபாலு, மற்றும் கல்கியின் சித்தப்பா ஏழுமலை ஆகியோர் சென்று வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பனை இன்று மதியம் 3,30மணிக்கு சந்தித்து புகார் மனு ஒன்றை அளிக்கின்றனர்.

அந்தப் புகாரில் அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஜெயகோபால் என்பவர், கல்கி சவுக்குத் தோப்புக்குச் சென்றபோது அருகில் இருந்த வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.  கல்கி இறந்தவுடன், அவர் ஓடியதைப் பார்த்துள்ளதாக சிலர் கூறியதை அடுத்து அவர் மீது சந்தேகமாக இருக்கிறது என்றும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாயை வரவைத்து காவல்துறை துப்புத் துலக்கவில்லை என்பதை எழுதிக் கொடுத்துள்ளனர்.

IMG_0014

புகாரை கையில் வாங்கிப் படித்துப் பார்த்த கண்ணப்பன் இதில் நீங்கள் எழுதியிருப்பது அத்தனையும் எனக்குத் தெரியும்.  முதலில் நீங்கள் யாரைக் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டீர்கள் என்பதைச் சொல்லுங்கள்… உங்கள் அப்பன் வீட்டு ரோடா என்று கேட்டுள்ளார். கட்சி பின்னால் சென்றீர்கள் என்றால் உங்களுக்கு யாரும் உதவமாட்டார்கள். அந்தக் கட்சியோடே இருக்க வேண்டியதுதான் என்றிருக்கிறார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி அய்யாபாலு, ‘சார் பள்ளி மாணவ மாணவியர்கள்தான் மறியலில் ஈடுபட்டனர்’ என்று கூறியிருக்கிறார்.  அதைக் கேட்டவுடனேயே கோபமடைந்த கண்ணப்பன்…  யார்றா நீ என்று கேட்டுள்ளார்.  ‘சார் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்று கூறியதும், தெரியும்டா நீங்கள்லாம் யார்னு…  யாரைக்கேட்டுடா மறியல் பண்ண…  நீ உண்மையான ஆம்பளையா இருந்தா இப்பப் பண்ணுடா சாலை மறியல்… இதே இடத்துல உன்ன லாடம் கட்றேன் பாரு..  உங்க அப்பன் வீட்டு ரோடா டா…  செருப்பால அடிப்பேன்.. எந்திரிச்சு வெளில போடா நாயே… என்று காட்டுக் கத்தல் கத்தியிருக்கிறார்.  உடனே அய்யாபாலு எழுந்து வெளியேறியிருக்கிறார்.  அவர் சென்றதும், அவன் பின்னாடி போனீங்கள்ல… அவனே கண்டுபிடிப்பான் போங்க என்று கல்கியின் பெற்றோர்களிடமும் கூறியிருக்கிறார்.  கல்கியின் பெற்றோர்களும் எழுந்து வெளியே சென்றுள்ளனர்.

செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன அதிகாரி இந்த கண்ணப்பன்தான். பணியில் சேர்ந்த நாள் முதல் கண்ணப்பன் சற்றும் மாறவேயில்லை.  ஐஜியாக பணியாற்றும் கண்ணப்பன், இன்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி.  ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டு, லாடம் கட்டுவேன், செருப்பால் அடிப்பேன் என்று பேசுவது, இவருக்கு ஒரு சாதாரண தலைமைக் காவலருக்கு இருக்கும் பண்பு கூட இல்லாததையே காட்டுகிறது.

kannppan-comishnar

கண்ணப்பன் க்ரூப் 1 தேர்வு மூலம் நேரடியாக டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.   இவர் டிஎஸ்பியாக பணியாற்றியபோது ஒரு கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து, ஒரு வாரம் சட்டவிரோதக் காவலில் வைத்து, கண்ணப்பனே அடிக்கிறார்.  அந்த சித்திரவதையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக காயமடைகின்றனர்.

இதற்கிடையே கண்ணப்பன் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டு, சிபிஐக்கு மாற்றப்படுகிறார். சிபிஐக்கு சென்ற பிறகும், கண்ணப்பனின் அணுகுமுறை மாறவேயில்லை.     அங்கே இவருக்கு கீழே பணியாற்றும் டிஎஸ்பி ஒருவரை, தாறுமாறாக ஒருமையில் தொடர்ந்து திட்டுகிறார்.  இப்படி கண்ணப்பன் திட்டுவது நாள்தோறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி தனக்குக் கீழே பணியாற்றுபவர்களை திட்டியபடியே கண்ணப்பனின் சிபிஐ நாட்கள் முடிவடைகின்றன.  மீண்டும் மாநில அரசுப் பணிக்குத் திரும்புகிறார் கண்ணப்பன்.

இந்த நேரத்தில் கண்ணப்பனிடம் அடி வாங்கிய ஆசிரியர்கள், கண்ணப்பன் அடித்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறார்கள்.  நீதிமன்றமும் அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட, சிபிஐ விசாரணையை மேற்கொள்கிறது.  அந்த வழக்கு சிபிஐயில் யாரிடம் விசாரணைக்குச் சென்றது தெரியுமா ?   கண்ணப்பனிடம் நாயே பேயே என்று திட்டு வாங்கினாரே ஒரு டிஎஸ்பி… அவரிடம் அந்த வழக்கு விசாரணைக்கு செல்கிறது.  வழக்கமாக காவல்துறை அதிகாரிகள் மீது சித்திரவதை குறித்த புகார்கள் விசாரிக்கப்பட்டால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றுதான் அறிக்கை அளிப்பார்கள். அது போலீஸ் சாதிப் பாசம்.  ஆனால் கண்ணப்பனால் பாதிக்கப்பட்ட டிஎஸ்பியிடம் அந்த வழக்கு விசாரணை சென்றதால், நடந்த சம்பவங்களை விசாரித்து, கண்ணப்பன் சட்டவிரோதக் காவலில் வைத்து அவர்களைத் தாக்கியது உண்மை என்றும் கண்ணப்பன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

கண்ணப்பன் டிஐஜியாக சிபி.சிஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.   அப்போது கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கை தொடங்குகிறது.

சிபி.சிஐடி அப்போது விசாரித்து வந்த வழக்கு, ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியது தொடர்பானது.  அந்த வழக்கை நேரடியாக மேற்பார்வை செய்து வந்தவர், கண்ணப்பன். அப்போது உளவுத்துறையில் பொறுப்பில் இருந்தவர் ஜாபர் சேட்.  ஜாபர் சேட்டை அணுகிய ப்ரமோத் குமார், தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும், ஜாபர் சேட், கண்ணப்பனிடம், ப்ரமோத் குமார் மீதான வழக்கை கண்டுகொள்ளாமல் விடும்படி கூறுகிறார்.   அப்படி கண்டுகொள்ளாமல் விட்டால், கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கையை அவருக்கு பாதிப்பு இல்லாமல் முடித்துத் தருவதாகவும் கூறுகிறார்.

கண்ணப்பனிடம் ப்ரமோத் குமார் மீதான வழக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்தும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.  நேர்மையான அதிகாரி என்று தன்னைக் கருதிக் கொள்ளும் கண்ணப்பனின் நேர்மையான புலனாய்வுதான் அந்த வழக்கை ஒன்றரை வருடமாக தூசு படிய வைத்தது.   இந்த கண்ணப்பனின் ‘நேர்மைக்கு’ கைமாறாக அவர் மீதான துறை நடவடிக்கையை முடித்துக் கொடுத்தார் ஜாபர் சேட்.  கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய விசாரணை அதிகாரி, கமிஷனர் கண்ணாயிரம் என்று வாசகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட, ட்டி.ராஜேந்திரன்.  ராஜேந்திரன், சாட்சி சொல்ல வந்த ஆசிரியர்களை அழைத்து, கண்ணப்பனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லும்படி கூறுகிறார்.  அவர்களோ, சார்… கண்ணப்பன் சாரே எங்களை ஒரு வாரம் அடிச்சார் சார்…. எப்படி சார் மாத்தி சொல்றது.. அதெல்லாம் முடியாது சார் என்று மறுக்கிறார்கள்.  அவர்களிடம் தொடர்ந்து பேசி, அவர்களுக்கு என்ன வேண்டும் என்று ராஜேந்திரன் வற்புறுத்தவே, அவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் எங்கள் உறவினர்களுக்கு மாறுதல் வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அட அடிமைகளா… என்று வியந்த ராஜேந்திரன், உடனடியாக அவர்கள் அனைவருக்கும் கேட்ட இடத்துக்கு மாறுதல் உத்தரவை பெற்றுத் தருகிறார்.  அகமகிழ்ந்த அந்த அடிமைகள், கண்ணப்பன் அய்யா எங்களை அடிக்கவேயில்லை என்று வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கை கைவிடப்பட்டு, அவருக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.   இதே ப்ரமோத் குமார் மீதான வழக்கு, சிபிஐக்கு மாற்றப்பட்டவுடன், ப்ரமோத் குமார் கைது செய்யப்பட்டார். சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப்ரமோத் குமாரை, கண்ணப்பன் ஒன்றரை ஆண்டுகளாக விசாரிக்கக் கூட இல்லை.

ஐஜியாக பதவி உயர்வு பெற்ற பிறகும், வயது மற்றும் பதவிக்கேற்ற முதிர்ச்சி அடையாமல், இரண்டாம் நிலைக் காவலரைப் போல நடந்து கொள்ளும் கண்ணப்பனைப் பார்க்கையில் பரிதாபமே ஏற்படுகிறது.   மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பார்த்தால் கோபம் வருமா பரிதாபம் வருமா ?

கண்ணப்பன் அவர்களே…  நீங்கள் வாங்கும் ஊதியம் மக்களின் வரிப்பணத்தில் என்பதை மறந்து விடாதீர்கள்.    அந்த மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் உங்களுக்கு ஊதியம், வாகன வசதிகள், எல்லாமும்.   அந்த மக்களுக்கு போராட்டம் நடத்த எல்லா உரிமைகளும் உண்டு.  இது ஜனநாயக நாடு..  சாலைகள் எப்படி போராட்டம் நடத்திய அந்த மக்களின் பெற்றோர் சாலை இல்லையோ… அதே  போல அது உங்கள் அப்பாவின் சாலையும் அல்ல….  மறியல், ஆர்ப்பாட்டம், போன்ற போராட்டங்கள், ஒரு ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்டவை…   நீங்கள் வடக்கு மண்டல ஐஜி என்பதால், வடக்கு மண்டலத்தின் சக்ரவர்த்தி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்..  உங்கள் கோபத்தையெல்லாம் நீங்கள் வழக்கின் புலனாய்வில் காட்ட வேண்டும். ஜனவரி 3ம் தேதி நடந்த ஒரு கொலை வழக்கில் எவ்விதமான முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும்.  ஒரு கொலை வழக்கை கண்டுபிடிக்க துப்பில்லாத நீங்கள், போராட்டம் நடத்துபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லுவது உங்கள் பதவிக்கும் வயதுக்கும் அழகல்ல.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அரசியல் லாபத்துக்காகக் கூட, இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.  யார்தான் லாபத்துக்காக செயலாற்றுவதில்லை…..  உங்களின் பதவி உயர்வுக்காக நீங்கள் ப்ரமோத் குமாரை காப்பாற்றவில்லையா… அதுபோலத்தானே விடுதலை சிறுத்தைகளின் போராட்டமும் அரசியல் லாபத்துக்காக இருந்திருக்கக் கூடும் ?   அப்படி போராட்டம் நடத்தும் ஒரு கட்சியின் பிரதிநிதியை செருப்பால் அடிப்பேன் என்று  மிரட்டுவீர்களா ?

டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இறந்ததால் நடந்த போராட்டம் எப்படிப்பட்ட வீச்சோடு நடந்தது என்பது உங்களுக்கு தெரியுமா கண்ணப்பன் அவர்களே… ?   அந்தப் போராட்டக்காரர்களோடு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.    டெல்லி முதல்வரை விட நீங்கள் உங்களை பெரிய ஆள் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களை விட பெரிய முட்டாள் யாரும் இருக்க முடியாது.

பாரதிதாசனின் பாடல் வரிகள் உங்களுக்காகவே எழுதப்பட்டது போல உள்ளது.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால்

ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் (கண்ணப்பா) உணரப்பா நீ

செங்கல்பட்டு பூந்தமல்லி சித்திரவதை முகாம்களை இழுத்து மூடக்கோரி - பிரச்சாரப் ...

அரசியலும் விளையாட்டும் 2013 IPL 20 -20 கிரிக்கெட் போட்டியை முன் வைத்து

$
0
0

 

நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது”.

 

- மாட்டின் வினோகர் - போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும் 

(More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur)

 image001 

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் ஈழப் இனபடுகொலைக்கு நீதி தேடும் நம்மில் பலர் சிறிலங்கா அணி கிரிக்கெட் விளையாடினால் என்ன என்று கேட்க்கிறார்கள்.  இன்னும் சிலர் இன்றைய தமிழக அரசியலின் பலவீன நிலமையை தமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டு, தமது சுய நலங்களுக்கும், புகழுக்காகவும் விளையாட்டையும் அரசியலையும் பிரித்துப்பாக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தமுயல்கின்றனர்.

உண்மையில், அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை நாம் உணர்ந்தால் சிறிலங்கா கிரிக்கெட் அணியை நாம் ஆதரிப்பதன் ஆபத்தையும் சிறிலங்கா இனவாத அரசு விளையாட்டு என்ற போர்வையில் தமது பிரச்சாரத்துக்காக பின்னும் சதி வலைகளையும் உணர்வோம்.

image003

 

இன்றைய வர்த்தகமயப்படுத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் அரசியலே முதன்மைப்படுகிறது. அரசியலுக்காக விளையாட்டும் பயன் படுத்தப்படுகிறது.

உலக வரலாற்றில் அரசியலும் விளையாட்டும் இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.

தென்னாப்பிரிக்க இனவாத அரசியலை ஒழிப்பதற்கு அந்நாட்டின் விளையாட்டுப் புறக்கணிப்பு மிகவும் துணைபோனது அண்மையில் உலகில் மிகவும் பிரபல்யமாக நடந்தேறிய ஒரு விடயம்.இங்கு அரசியலும் விளையாட்டும் கலந்து ஒரு நன்மையான முடிவை தந்தமையானது, விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை வலுவற்றதாகச் செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் இனவாத அரசியலுக்கு எதிரான புறக்கணிப்பு பல அரங்குகளில் நடைபெற்றது. மொன்றியோல் நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை 22 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிப்புச் செய்தன.

அங்கு ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய நியூசிலாந்து நாடும் பங்கு பற்றியதனையே ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவோடு ஏனைய நாடுகள் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருப்பதில்லை என்று 1977 இல் கிலெனீகல் என்ற இடத்தில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.  http://en.wikipedia.org/wiki/Gleneagles_Agreement The Gleneagles Agreement was unanimously approved by the Commonwealth of Nations at a meeting at GleneaglesAuchterarderScotland. In 1977, Commonwealth Presidents and Prime Ministers agreed, as part of their support for the international campaign against apartheid, to discourage contact and competition between their sportsmen and sporting organizations, teams or individuals from South Africa.

இது போல் வேறு பல அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் தொடர்பை வெவ்வேறு நாடுகளும் துண்டித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக்கை வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது.

அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து ஒலிம்பிக்கை நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது.

1980 ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கை ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட 62 நாடுகள் புறக்கணித்தது. அதற்கு பழிக்கு பழியாக 1984 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஒலிம்பிக்கை சோவியத் யூனியன் உள்ளிட்ட 16 நாடுகள் புறக்கணித்தது.

1988 ஆம் சியோலில் நடந்த ஒலிம்பிக்கை தென்கொரியாவோடு சேர்ந்து நடத்த அனுமதிக்காததை கண்டித்து வடகொரியா புறக்கணித்தது. அத்தோடு சேர்ந்து கியூபாவும் எதியோபியாவும் புறக்கணித்தது.

ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 image005

விளையாட்டா இல்லை அரசியலா? 

இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தென்னாப்பிரிக்காவின் இனவாதமற்ற விளையாட்டுக் குழுவின் தலைவரான ஜோ இபிரகிம் விளையாட்டுப் புறக்கணிப்புக்கூடாக எப்படி அரசியலை மாற்றலாம் என்பதனை பின்வருமாறு கூறுகிறார்,

விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமாக இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்ய செய்வதற்கு மிகவும் உதவக்கூடியது ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்”.

இது, உலக அரங்கில் விளையாட்டும் அரசியலும் எவ்வாறு பிணைந்திருக்கின்றது என்பதனையும் அது எவ்வளவு முக்கியதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது என்பதனையும் காட்டுகிறது.

ஓய்வு பெற்ற பல இலங்கை விளையாடுவீரர்கள் அரசியலி ஈடுபடுவதையும், சிறிலங்கா  அரசியல் நலனுக்காக உலக நாடுகளுக்கு சுற்று பயணங்களை மேற்கொள்வதையும் கவனிக்கவேண்டும்.

மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.

image007

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் கிரிக்கெட் அணி நம் நாட்டில் விளையாடுவதை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் நம்மை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

இதன் மூலம் மேல் நாட்டவர், நாம் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் இனப்படுகொலையை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இன்று சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அழுத்தம் உலக அளவில் எழுந்து வருகிறது, இதற்காக பல புலம் பெயர் அமைப்புகள் போராடி வருகின்றன.  இந்த காலகட்டத்தில் புலம் பெயர் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காகவே சிறிலங்கா அரசு விளையாட்டு என்ற பெயரில் தனது பிரச்சாரத்தை செய்ய முயல்கின்றது.

அற்ப இலாபங்களுக்காக முல்லிவாய்க்காலில் வரலாறான 50,000 தமிழரின் கல்லறை காயமுன் எம் இனத்தை அழிக்கின்ற எதிரிக்கு பலம் சேர்க்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடலாமா?

IPL 20-20 – ல் பாகிஸ்தான் அணியின் நிலை

2013 ஜனவரியில் இந்திய எல்லையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியா ஆக்கி லீக்கில் விளையாடி வந்த 9 பாகிஸ்தான் வீரர்கள் 15.01.2013 அன்று திருப்பி அனுப்பப்பட்டனர். http://in.reuters.com/article/2013/01/15/hockey-indian-league-pakistan-idINDEE90E0AI20130115

2013 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மகளிர் அணி மும்பையில் விளையாட வேண்டிய ஆட்டம் சிவசேனாவின் எதிர்ப்பு காரணமாக 3 போட்டிகளும் ஒரிசா மாநிலம் கட்டாக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  http://www.indianexpress.com/news/fearing-protest-pakistan-women-cricket-teams-and-matches-shifted-to-cuttack/1061363

2009-ம் ஆண்டு முதல் IPL 20-20 கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வீரர்களில் ஒருவர் கூட விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதற்கு காரணம் பாகிஸ்தான் விளையாடினால் IPL கிரிக்கெட்டில் மக்களின் எதிர்ப்பும் இலாபமும் குறையும் என்ற காரணத்தினால் எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் வீர்ர்களை ஏலம் எடுக்க விரும்பாத்தால் பாகிஸ்தான் வீர்ர்களை ஏலத்தில் விடவில்லை என்று இந்திய கிரிக்கெட்   வாரியம் கூறியுள்ளது.  http://www.hindustantimes.com/Cricket/CricketNews/No-Pakistani-players-in-IPL-auction/Article1-1004479.aspx

ஒரு சில ராணுவ வீரர்கள் இறந்ததற்கே பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிற்குள் விளையாட அனுமதி வழங்கப்படுவதில்லை 500-க்கும் மேற்பட்ட தமிழக இந்திய மீனவர்களை கொன்று குவித்த இலங்கை வீரர்கள் இந்தியாவில் விளையாடுவது வெட்கக்கேடு.

தமிழக அரசு 

2013 ஜீலையில் இருபதாவது ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் சிங்கள வீர்ர்கள் கலந்து கொள்கிறார்கள்  அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்பதற்காக தமிழக முதல்வர் தடை செய்துள்ளார். மேலும் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கின்ற இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழ சட்டமன்றத்தின் தீர்மானத்தையும் வலியுறுத்தியுள்ளார்.  http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr21Feb13/pr210213_54.pdf

image010

ஆனால்

 

IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) தமிழ்நாட்டை சார்ந்தவர்களான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர்கள் யுவன் குலசேகரா ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயா ரூ.10 லட்சத்துக்கும்.   கலாநிதி மாறனின் சன் டிவி தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா  ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதாகும்.

IPL 2013 கிரிக்கெட் சீசனில் நாம் என்ன செய்ய போகிறோம்?

image011

நம் சகோரிகளை பாலியல் வண்புணர்ச்சி செய்து மார்பகங்களை அறுத்தவர்களுடன் கிரிக்கெட் விளையாட போகின்றோமா?

நம் சகோதர்களை நிர்வாணப்படுத்தி கொன்று இனத்தை அழிப்பவர்களுடன் கொக்க கோலாவும் பெப்சியும் குடிக்க போகின்றோமா?

நாளை ஈழ சகோதிரிகளை IPL 20-20 ல் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவார்கள் என்று ராஜபக்ச அனுப்பி வைப்பான். அதை நாம் சோனியா, ராகுல் காந்தியுடன் ரசிக்க போவேமா?

இல்லை விளையாட்டு என்று சொல்லி சிங்களவனை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் எம்மை ஏமாற்றபவர்களை இனியும் அனுமதிக்க போகிறோமா?

 IPL 2013 கிரிக்கெட் சீசனில் விளையாடும் இலங்கை வீர்ர்களின் பட்டியல்

 

அணி  

பெயர்  

சம்பளம் 

சென்னை சூப்பர் கிங்ஸ்

யுவன் குலசேகரா

அகிலா தனஞ்ஜெயா 

ரூ.50 லட்சம்

ரூ.10 லட்சம். 

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் 

குமாரா சங்ககாரா

திசாரா பெரிரா   

3.5 கோடி

3.35 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்

மகிலா ஜெயவர்த்தனா

ஜீவன் மெண்டிஸ்

7 கோடி

25 லட்சம்

கோல்கட்டா நைட்ரைடர்ஸ 

சசிந்திரா சேனநாயக

3.12 கோடி

மும்பை இந்தியன்ஸ்

லசிந்தா மலிங்கா

பூனா வாரியர்ஸ் இந்தியா

ஏஞ்சலா மாத்தீயூஸ்

அஜந்தா மெண்டிஸ்

4.75 கோடி

3.6 கோடி

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

முத்தையா முரளிதரன்

திலகரத்தினா தில்சன்

1.1 கோடி

3.2 கோடி 

ராஜஸ்தான் ராயல்ஸ்

குசால் பெரிரா

ரூ.10 லட்சம். 

 

image013

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டிகள்

ஏப்ரல் 6 சென்னை எதிர் மும்பை,

ஏப்ரல் 13  சென்னை எதிர் பெங்களூர்

ஏப்ரல் 15 சென்னை எதிர்  பூனா

ஏப்ரல் 22 சென்னை எதிர் ராஜஸ்தான்

ஏப்ரல் 25  சென்னை எதிர் ஹைதிராபாத் சன்ரைசர்ஸ்

ஏப்ரல் 28 சென்னை எதிர் கோல்கத்தா

மே 2 சென்னை எதிர் பஞ்சாப்

மே 5 சென்னை எதிர் டெல்லி

மே 19 சென்னை எதிர்  பெங்களூர்

விளையாட்டு என்று சொல்லி எம்மை ஏமாற்றும் எவனையும் தாய் தமிழ் நாட்டில் அனுமதியோம். சிங்களவனை வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு இடம் இல்லை. இனியும் இவர்களை வைத்து விளையாடினால் தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம்.

நன்றி 

யாழ் இணையம்

பாக்கியராசன் சே

வழக்கறிஞர் கலையரசன் கோவை

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி. ...

$
0
0

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று ஜெய்னுலாப்தீன் தெரிவித்தார்.

321496_474165919312379_477275747_n
இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என எல்லா அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இதற்காக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன.
விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள்.
விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள்.
இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை கண்டனத்திற்குறியதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்குமாகாணத்தில் உள்ள யாழ்ப்பானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான இஸ்லாமியர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு இஸ்லாமியர்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேராதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.
விரட்டப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.
விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணம் வரை ஊடுறுவிச் சென்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடிக்குச் சென்றனர். அங்குள்ள பள்ளிவாசலில் சுபு{ஹ (விடிகாலைத்) தொழுகையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள். அந்தப் பள்ளிவாசல்களில் இரத்தக்கரை இன்றளவும் உள்ளது. அங்கு பிரபாகரனின் மகனை விட பச்சிளம் குழந்தைகள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டனர். யுத்தம் செய்ய வந்தவர்களைப் போல தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கிழக்குமாகாணத்தில் உள்ள செல்வந்தர்களைக் கடத்திச் சென்று மிரட்டி பல கோடி ரூபாய்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பறித்தனர். புலனிருவை என்ற ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்ததை விட அதிகமான அய்யோக்கியத்தனத்தை இந்த விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். தமிழர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் செய்த தவறுகளை மறைத்து, பயந்து கொண்டு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது போன்ற பயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கிடையாது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதனைத் தான் நாங்கள் கவனத்தில் கொள்வோம். அனைவரும் சேர்ந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாகப் பேசினாலும் நாம் அவ்வாறு பேசமாட்டோம். இதன் காரணத்திற்குத்தான் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்த பின்னர்தான் அதிகமான மக்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காகவே அரசியல் கட்சிகள் இதனை கையிலெடுத்திருக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்த ஒன்றை உலகத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு மட்டும் தான் செய்துள்ளதா? உதாரணமாக உலகறிய ஒரே மாதிரியான தவறான செயலை ஆயிரம் நபர்கள் செய்திருக்கும் போது தொள்ளாயிரத்து தொன்னுத்தொன்பது நபர்களை விட்டுவிட்டு ஒருவனுக்கு மட்டும் தண்டணை கொடுப்பது நியாயமா?அயோக்கியத்தனமா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்ததைப் போல எந்த நாட்டில் செய்யவில்லை. இந்தியாவில் காஷ்மீர், ஒரிஸா போன்ற நாடுகளில் செய்யவில்லையா? வீரப்பனை பிடிக்கப் போகின்றோம் என்று அப்பாவி மக்களைக் கொல்லவில்லையா?போலியான என்கவுண்டர் போட்டு பல பேரை சுட்டுக் கொள்வது சட்டத்திற்கு உட்பட்டதா? பாகிஸ்தானில் எத்தனைபேர் கொல்லப்படுகின்றார்கள்?. போர்க் குற்றத்திற்காக தண்டனை கொடுத்தால் அனைவருக்கும்தான் கொடுக்க வேண்டும்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஒரு தகுதியும் கிடையாது. அணு ஆயுதம் உள்ளதென்று ஒரு நாட்டையே நாசம் செய்து விட்டார்கள். ஈராக்கில் அப்பாவிகளை கொன்று குவித்தார்களே? இவர்கள் தான் இலங்கைப் போர்க்குற்றத்திற்கு தண்டனை கொடுப்பவர்களா? பல கொலைகளைச்செய்த கொலைகாரன் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று உள்ளது. இலங்கை அரசின் குற்றத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் இலங்கை அரசு செய்த போர்க்குற்றம் தூசிக்குத்தான் சம்மாகும். சரணடைந்த ஜப்பான் மக்களை குண்டு வீசி ஹிரோஷிமா, நாகஷாயி போன்ற இடத்தையே அழித்தனர். இதில் எத்தனை லட்சம் மக்களை கொன்றார்கள். இது இன்றளவும் அங்கு வாழும் அனைத்து மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதே.
கவுதமாலா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டமோ சிறையில் அமெரிக்கா செய்தது என்ன?
இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்காமல் சிறிய கொடுங்கோலனுக்கு எதிராக இந்த பெரிய கொடுங்கோலன் அமெரிக்காவை இவர்கள் ஆதரிக்கின்றனர்.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்ன?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றம் செய்ததற்காக அவரை தூக்கில் போடுவதற்காகவா இந்தத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்? கிடையவே கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண கமிஷன் கொண்டுவருவதாக அறிவித்திருந்தார். அதனைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்த தீர்மானம்.
இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஒரு எறும்பு கடித்ததற்கான வலி கூட கிடைக்கப் போவதில்லை. இவர்கள் தமிழ் மக்களையும், நாட்டையும் ஏமாற்றப் பார்க்கின்றார்களா? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை.

ஊரெல்லாம் ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஆதரிக்காது. அதில் நியாயம் இருந்தால் மட்டும் தான் ஆதரவு கொடுக்கும்.

யார் சிறந்த நீதிபதி… ?

$
0
0

high_courtஉயர்நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு வழக்கறிஞரின் கனவு.   கையைப் பிடிப்பது, காலைப் பிடிப்பது, தரகு (தரகு என்பதில் “எல்லா” விதமான தரகுகளும் அடக்கம்) வேலை செய்வது, முறைவாசல் செய்வது, என்று பல்வேறு வேலைகளிலும் ஈடுபட்டு, எப்படியாவது நீதிபதி ஆக வேண்டும் என்று பல வழக்கறிஞர்கள் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது உயர்நீதிமன்ற வட்டாரத்தில் அத்தனை பேரும் அறிந்த ஒரு விஷயம்.

சரி… அப்படி என்னதான் இருக்கிறது நீதிபதி பதவியில் ?  எதற்காக நீதிபதி ஆக வேண்டும் என்று துடிக்கிறார்கள்…. ?  அப்படியே ஆகி விட்டாலும் சிறந்த நீதிபதியாவது எப்படி ?

உயர்நீதிமன்ற நீதிபதி வாழ்க்கை என்பது சொர்கம் என்றால் என்ன என்பதை இந்த பூலோகத்திலேயே உணர்த்தும். கிட்டத்தட்ட கடவுளாகவே மாறி விடுவீர்கள்.  ஆத்தல், அழித்தல், கிழித்தல், மழித்தல், உள்ளிட்ட எல்லா அதிகாரங்களும் நீதிபதி வசம் வந்துவிடும்.  இப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஒரு நபராக மாறுவதற்கு யாருக்குத்தான் கசக்கும் ?   நீங்களே சொல்லுங்கள்.

நீதிபதியாவதற்கு அடிப்படையான தகுதி வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.   வழக்கறிஞராக இருந்தால்    போதுமா …. சட்டம் தெரிய வேண்டாமா என்று கேட்டீர்கள் என்றால் நிச்சயமாக வேண்டாம்.   மற்ற ப்ரொபஷனல் படிப்புகளைப் போல சட்டப்படிப்புக்கு 90 சதவிகிதமோ, 80 சதவிதமோ வருகைப் பதிவேடு அவசியம் இல்லை.  உதாரணத்துக்கு 85 விழுக்காடு வருகை இல்லாமல், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவதில்லை.  ஆனால், சட்டக்கல்லூரி மாணவர்கள் பெரும்பாலான நேரங்களில் போராட்ட களத்தில்தான் இருப்பார்கள்.  சமூக அவலங்களுக்கெதிராக சாலையில் போராடிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாது.  தமிழ்நாட்டில் இப்படி என்றால், ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் நிலைமை இன்னும் மோசம். வருடத்துக்கு ஒரு முறை தேர்வெழுத மட்டும் சென்றால் போதும்.  இப்படிப்பட்ட சூழல்களில் படிக்கும் மாணவர்களே வழக்கறிஞர்களாக தொழில் செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு சட்டம் எப்படித் தெரியும் ? இது மட்டுமன்றி, கல்லூரியில் படிக்கும் ஏட்டுப் படிப்புக்கும், நீதிமன்றத்தில் நடப்பதற்கும், ஏராளமான வேறுபாடுகள் உண்டு.

சட்டம் என்பது ஒரு பெருங்கடல்.  வரி விதிப்பு, கிரிமினல் வழக்குகள், சிவில் வழக்குகள், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகள், மான நஷ்டஈடு வழக்குகள், விவாகரத்து வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், சர்வதேச சட்டம் தொடர்பான வழக்குகள், பணி தொடர்பான வழக்குகள் (Service matters), தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன.   இதில் ஒவ்வொரு பிரிவும் ஒரு குட்டிக் கடல்.   இதில் ஏதாவது ஒரு கடலில் மூழ்கி முத்தெடுப்பது எளிதான காரியம் அல்ல.    இப்படி பல்வேறு பிரிவுகள் இருக்கையில், ஒரு நீதிபதி, எல்லா பிரிவுகளிலும், பரிச்சயம் மட்டுமல்ல, ஓரளவு தேர்ச்சியும் அடைந்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  ஏனென்றால், ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆன பிறகு, எனக்கு இந்தப் பிரிவு சட்டம் குறித்துதான் நன்றாகத் தெரியும்… மற்ற பிரிவுகள் குறித்துத் தெரியாது என்று சொல்ல முடியாது.  அப்படிப்பட்ட நபர்கள் நீதிபதிகளானால்தான் வழக்கு விபரங்களை எளிதாகப் புரிந்து கொண்டு விரைவாகத் தீர்ப்பு வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தையே எடுத்துக் கொண்டீர்கள் என்றால், விரல் விட்டு எண்ணக்கூடிய நீதிபதிகள் மட்டுமே பல்துறை விற்பன்னர்களாக உள்ளார்கள். இவர்களும், நீதிபதியாகும்போதே, அனைத்துத் பிரிவுகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்ல…  நீதிபதியான பின்பு, கடுமையான உழைப்பு காரணமாக பல துறைகளில் திறமையானவர்களாக ஆனார்கள். அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நீதிபதிகளைத் தவிர, மற்ற நீதிபதிகளுக்குத் சட்டம் தெரியுமா என்றால் ….  ஏதோ கொஞ்சம் தெரியும்…. ஆனால் அவர்கள் பேசுவதைப் பார்த்தீர்கள் என்றால்… வானத்தையும், பூமியையும் கரைத்துக் குடித்தவர்கள் போல பேசுவார்கள்.   பல உதாரணங்களைச் சொல்லலாம்.  ஒரு உதாரணமாக, தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பாக ஒரு வழக்கு.  ஒரு வழக்கில் சிடி, டிவிடி மற்றும் ஹார்ட் டிஸ்க் வழக்கு ஆவணமாக உள்ளது.   அந்த ஆவணங்களின் நகல் வேண்டும் என்று குற்றவாளி தாக்கல் செய்த மனு அந்த நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது.  அப்போது அந்த நீதிபதி இதை எப்படி நகல் எடுக்க முடியும் ?  இந்த கோரிக்கையே முட்டாள்த்தனமாக இருக்கிறதே என்றார்.  இல்லை நீதிமான் அவர்களே….  இதன் நகலை கொடுத்துதான் ஆக வேண்டும் அது குற்றவாளியின் உரிமை என்றால், எப்படி நகல் கொடுக்க முடியும் ? ஒரு வழக்கில் ஒரு லாரி சம்பந்தப்பட்டிருக்கிறது.  குற்றவாளி கேட்டால் அதற்காக அந்த லாரியை  எப்படி நகல் எடுக்க முடியும் ? என்று கேட்டார்.   எப்படி அவரின் ஆழ்ந்த அறிவு பார்த்தீர்களா ?   இந்த நீதிபதி நீதிமன்றத்தை நடத்தும் விதமே அலாதியானது.  தனக்கு மட்டுமே அறிவும், திறமையும் உண்டு என்றும், வழக்கறிஞர்கள் அனைவரும் அவரை ஏமாற்றி தீர்ப்புப் பெற முயற்சிக்கிறார்கள் என்பது போலவும் நீதிமன்றத்தில் கர்ஜிப்பார்.   இந்த கர்ஜிப்பெல்லாம் இளம் வழக்கறிஞர்களிடம்தான்.  மூத்த வழக்கறிஞர்கள் வந்தால், அப்படியே பம்முவார்.

இதுபோல உங்களுக்கு சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கும் அவசியமே இல்லாமல் நீங்கள் நீதிபதியாகி விட முடியும்.  இது முதல் சிறப்பு.

உயர்நீதிமன்ற நீதிபதியானால் உங்களுக்கு கிடைக்கும் இரண்டாவது சிறப்பு “சூ” சொல்வது.  நீங்கள் நடந்து செல்லும்போது, உங்களுக்கு முன்னால், வெள்ளைச் சீருடையும், சிகப்பு தொப்பியும் அணிந்த ஒரு நீதிமன்ற ஊழியர் சூ சொல்லிக் கொண்டே நடப்பார்.  அந்த சூ சத்தத்தைக் கேட்டு, நீதிபதிக்கு முன்னால் நடந்து செல்பவர்கள் விலகி ஓரமாக நின்று, திருப்பதியில் வெங்கடாஜலபதியை வணங்குவது போல வணங்குவார்கள்.  காக்காயை விரட்டக் கூடத்தான் சூ சொல்கிறார்கள்.. இதில் என்ன சிறப்பு என்று கேள்வி எழும்.  இது சாதாரண காக்காய் சூ.  அது நீதித்துறையின் சூ.  காக்காய் விரட்டும் சூவைத் விமர்சனம் செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  ஆனால், நீதிபதிக்கான சூ வை விமர்சனம் செய்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.

உங்களை எப்போதும் எல்லோரும் லார்ட்ஷிப் என்றே அழைப்பார்கள்.  லார்ட்ஷிப் என்றதும், ஏதோ டைட்டானிக் ஷிப் போன்ற ஒரு கப்பல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.  லார்ட்ஷிப் என்றால் கடவுளே…. தேவனே… என்று பொருள்.  லார்ட்ஷிப் வர்றார்… லார்ட்ஷிப் நிக்கறார்.  லார்ட்ஷிப் உக்கார்றார்.  லார்ட்ஷிப் பாத்ரூம் போறார்.  லார்ட்ஷிப் சாப்ட்றார்.  லார்ட்ஷிப் தும்மறார்.  லார்ட்ஷிப்புக்கு உடம்பு சரியில்லை… லார்ட்ஷிப் உக்கார்ற எடத்துல கட்டி இப்படித்தான் பேசுவார்கள்.  இதைக் கேட்டுப் பழகிவிட்டீர்கள் என்றால், காதில் கோழி இறகை வைத்துக் குருடுவது போல மிக மிக சுகமாக இருக்கும்.  தப்பித் தவறி யாராவது ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் லார்ட்ஷிப் என்பதற்கு பதிலாக யுவர் ஹானர் என்றோ, ஹானரபிள் கோர்ட் என்றோ சொல்லி விட்டால் அவர் வழக்கை காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்து நீங்கள் நீதியையும், நீதிமன்றத்தின் மாண்பையும் நிலைநாட்ட முடியும்.  அதற்குப் பிறகு யாராவது லார்ட்ஷிப் என்று சொல்லாமல் இருக்கிறார்களா என்று பாருங்களேன்..

அடுத்தது உங்களுக்கு ஒதுக்கப்படும் சொகுசு பங்களா.  லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகங்கள் தற்போது இயங்கி வரும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பங்களாக்கள் உங்களுக்கு ஒதுக்கப்படும்.  உங்களுக்கு சென்னையில் சொந்த வீடு இருந்தாலும், அதை வாடகைக்கு விட்டு விட்டு, இந்த வீடுகளில் குடியேறலாம்.  உங்களுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் யூனிட்டுகள் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்.   3800 லிட்டர்கள் தண்ணீர் இலவசம். அந்த வீட்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை, ஃபர்னிச்சர்கள் வாங்கிக் கொள்ளலாம்.  வாசலில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக்கு இருப்பார்.  இவையெல்லாம் சட்டபூர்வமாக வழங்கப்படும் சலுகைகள்.  நீதிபதியின் சாமர்த்தியத்தைப் பொறுத்து, இதற்கென்றே உள்ள ப்ரோக்கர்களை அணுகும் பட்சத்தில் வீட்டையே பொன்னாலும், மணியாலும் இழைப்பார்கள்.

எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், விமானத்தில் முதல்வகுப்பில் பிரயாணம் செய்யலாம். சிகப்பு விளக்கு சுழலும் காரில், பாதுகாவலரோடு பயணம் செய்யலாம்.

அலுவலகம் மற்றும் வீட்டுக்கென்று, மொத்தம் 8 அலுவலக உதவியாளர்களை வைத்துக் கொள்ளலாம்.  இது பத்தாது என்று, மேலும் சிலரை நியமித்துக் கொண்டாலும், உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது.  நீதிமன்றத்தில் வழங்கப்படும் அலுவலக உதவியாளர்கள் திருப்திகரமாக பணியாற்றவில்லையா…  நீங்கள் சொந்தமாக ஒரு உதவியாளரை நியமித்து, பின்னர் அவரை நீதிமன்ற ஊழியராக மாற்ற முடியும்.  இப்படி நீதிமன்ற ஊழியர்களாக சட்டவிரோதமாக நியமனம் செய்வதை, சில திமிர் பிடித்த தறுதலைகள் இணையதளத்தில் விமர்சனம் செய்து எழுதுவார்கள்.   சில வேலையில்லாத வழக்கறிஞர்கள் இதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்வார்கள்.  அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது.  தமிழகத்தில் மட்டுமல்ல, பீகார், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கூட, அலுவலக உதவியாளர்களை நியமனம் செய்யலாம்… ஒரு பயல் உங்களைக் கேட்க முடியாது.

மருத்துவ சிகிச்சை போன்ற விவகாரங்களைப் பற்றிக் கவலையே பட வேண்டியதில்லை.   அரசு நீதிபதிகள் செய்யும் மருத்துவ செலவுகளை முழுமையாக திருப்பித் தரும் என்றாலும், அந்த செலவைக் கூட எதற்காக நீதிபதிகள் செய்ய வேண்டும் ?  பிரதாப் சி.ரெட்டி என்ற ஒரு பெரிய மருத்துவத் திருடர் இருக்கிறார்.  அவர், வாரத்துக்கு மூன்று முறை, அனைத்து நீதிபதிகள் வீட்டுக்கும் ஆட்களை அனுப்பி, நீதிபதிகளுக்கு என்ன பரிசோதனைகள் வேண்டும், என்ன மருந்துகள் வேண்டும் என்பதை வீட்டிலேயே செய்து தருவார்.   நீங்கள் வீட்டை விட்டு காலடி கூட எடுத்து வைக்க வேண்டியதில்லை.  இதற்குக் கைமாறாக நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.   அப்போல்லோ மருத்துவமனை தொடர்பாக வழக்குகள் வந்தால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டும்.  அவ்வளவே… இது என்ன பெரிய கஷ்டமா ?

உங்கள் வீட்டில் வேலை செய்யும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் சமையல் செய்பவர்களை அடிமைகள் போல நடத்தலாம்.  சாதாரண மேஜிஸ்ட்ரேட்டுகளே நடத்துகையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிமை இல்லையா என்ன ?  ஒரு சாதாரண மேஜிஸ்ட்ரேட் தன் அலுவலக உதவியாளரை மீன் குழம்பு சரியாக வைக்கவில்லை என்பதற்காக பணி இடைநீக்கம் செய்கிறார்.  அதை எதிர்த்து வழக்கு போட்டால், அதை விசாரிக்கும் நீதிபதி, நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வந்து விட்டால் வீட்டில் யார் சமைப்பார்கள் என்று கேட்டார்.  மற்றொரு நீதிபதி… ஒரு நீதிபதிக்கு பழம் வேண்டுமென்றால் அவராகவே கடைக்குச் சென்று பழம் வாங்க வேண்டுமா என்று கேட்டார்கள் அல்லவா…. அது போன்ற ஒரு தலைக்கனம் உங்களுக்குத் தானாகவே வந்து விடும்.

அலுவலக உதவியாளர்கள்தான் என்றில்லை.  உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் இஷ்டத்துக்கு அடிமைகள் போல நடத்தலாம்.  உதாரணத்துக்கு ஒரு நீதிபதியின் அந்தரங்கக் காரியதரிசியைப் பிடித்துப் போய் விடுகிறது.  இவ்வளவு விசுவாசமான அடிமையாக இருக்கிறானே… இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தால், உடனடியாக அந்த ஊழியரை விட பணியில் மூத்தவர்கள் அனைவருக்கும் முன்பாக உங்களுக்கு பிடித்த ஊழியருக்கு பதவி உயர்வு வழங்கலாம்.  அந்த ஊழியர் சட்டவிரோதமாக சட்டப்படிப்பு படித்திருந்தாலும் கூட. இதையும் எதிர்த்து ஒரு சில தறுதலைகள் இணையதளத்தில் எழுதக்கூடும்.  அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் நீங்கள் இருக்கலாம்.  அதையும் மீறி, ஏற்கனவே குறிப்பிட்ட, அதே வேலையில்லாத வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடுப்பார்கள்.  முழு நேர ஊழியர்களாக பணியாற்றிக் கொண்டே, எப்படி சட்டப்படிப்பு படித்தார்கள்… அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தது சட்டவிரோதம் என்று கேள்வி எழுப்புவார்கள்.

அப்படி தொடுக்கப்படும் வழக்கில், இந்த பதவி உயர்வு ஆணை மனுதாரருக்கு எப்படி கிடைத்தது… ?   (வாட் ய ப்ரில்லியன்ட் கொஸ்டின்)  இந்த மனுதாரரை, நீதிமன்ற ஊழியர்களில் சிலர் தூண்டி விட்டிருக்கிறார்கள்.  இது உள்நோக்கத்தோடு தொடுக்கப்பட்டது.  அதனால் தள்ளுபடி செய்கிறேன் என்று மனம்போன போக்கில் வழக்கை தள்ளுபடி செய்யலாம்… ஒரு பயல் கேட்க முடியாது.   பதவி உயர்வு கிடைக்காத, பணியில் மூத்த ஊழியர்கள், அதிகபட்சம், முணுமுணுப்பார்கள். அந்த முணுமுணுப்பு கூட எப்படி இருக்கும் தெரியுமா…

“ரூல்ஸ் எதையும் ஃபாலோ பண்ணாம இப்படி இஷ்டத்துக்கு ப்ரொமோஷன் போட்றாங்களே… அயோக்கியப்பசங்க…  இவனுங்க ரூல்ஸை ஃபாலோ பண்றதில்ல… ஆனா ஊர்ல உள்ளவனுங்க ரூல்ஸை ஃபாலோ பண்றதில்லன்னு நொட்ட சொல்வானுங்க…” என்று ஊழியர்கள் புலம்புவார்கள் என்று நினைத்தீர்கள் என்றால் தவறு.  அந்தப் புலம்பல் எப்படி இருக்கும் என்றால் “லார்ட்ஷிப் இப்படிப் பண்ணிட்டாரே…  எப்படியாவது லார்ட்ஷிப்பைப் பாத்து எனக்கு ப்ரோமோஷன் குடுங்க லார்ட்ஷிப் என்று கேட்க வேண்டும்.” இதுதான் அதிகபட்ச புலம்பல்.

நீதிபதியான உங்களுக்கு சரக்கு போடும் பழக்கும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  சரக்கு… சுவையான சைட் டிஷ் எல்லாவற்றையும் அலுவலக உதவியாளர் வாங்கி வைத்து விடுவார்.  வைத்து விட்டால் போதுமா… கண்ணாடி க்ளாஸில் ஒவ்வொரு லார்ஜாக ஊற்றிக் கொடுப்பார். நாலு லார்ஜ் போனதும் தலை கிறுகிறுவென்று இருக்கும்.  ஏற்கனவே நீதிபதியான தலைக்கனத்தில் தலை கிறுகிறுவென்று இருக்கும்.  இதில் சரக்கு வேறு சேர்ந்து கொண்டால் கேட்க வேண்டுமா ?  அந்த அலுவலக உதவியாளரை அழைத்து, என்னைப் பற்றி நீதிமன்ற ஊழியர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கலாம்.  அந்த அலுவலக உதவியாளர், அவருக்குப் பிடிக்காத ஒரு ஊழியரை மனதில் வைத்து, “அய்யா… இங்க்லிஷ் ரெக்கார்ட் செக்சன்ல ஒரு செக்சன் ஆபீசர் இருக்காருய்யா… அவரு உங்களைப் பாத்து, இந்த ஆளெல்லாம் நீதிபதியாயிட்டாருன்னு சொன்னாருங்கய்யா” என்று சொன்னதும், அவனுக்குப் போனப் போடு என்று சொல்லலாம்.  போனில் அந்த ஊழியர் வந்ததும் “என்னைப் பத்தி  கமென்ட் அடிச்சியாமே…  அவ்வளவு தைரியமா…” என்று கேட்கலாம். எதிர் முனையில் ஊழியர், “லார்ட்ஷிப் இல்லை லார்ட்ஷிப்.. நான் அப்படியெல்லாம் பேசவில்லை” என்று சொல்லுவார்.  நீங்கள் ”நான் உன்னை இப்போவே டிஸ்மிஸ் பண்றேன்… காலையில ரிஜிஸ்ட்ராரைப் பாத்து டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக்கோ… நாளைலேர்ந்து வேலைக்கு வராதே என்று சொல்லலாம்.  அந்த நீதிமன்ற ஊழியர் மறுநாள் ரிஜிஸ்ட்ராரைப் பார்த்துக் கேட்டால், நீ நீதிபதியைப் பார் எனக்குத் தெரியாது என்று கூறுவார். அந்த ஊழியர் உங்கள் அறை வாசலிலேயே என்னை டிஸ்மிஸ் செய்து விடாதீர்கள் லார்ட்ஷிப் என்று காத்துக் கிடப்பார்.. நீங்கள் எகத்தாளமாக இனிமே ஒழுங்க வேலையைப் பாரு… போ போ… என்று கூறலாம்.

சில அகராதி பிடித்த வழக்கறிஞர்கள், நீங்கள் நீதியின் மதிப்பை உயர்த்தும் நோக்கில் பல லட்சங்களை வாங்கிக் கொண்டு நீதி வழங்கியதற்கான ஆதாரங்களை பிடித்து புகாராக அனுப்பி விடுவார்கள்.  உங்கள் நேரம், அந்த தலைமை நீதிபதி நேர்மையான ஆளாக இருந்தால், உங்களை விடுப்பில் போகச் சொல்லலாம். உடனே பயந்து விடாதீர்கள்.   நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது… நான் ஒரு தலித்… என்னோடு பணியாற்றும் சக நீதிபதிகள் என்னைப் பார்த்து தலையைக் குனிந்து கொள்கிறார்கள்… ஒரு விழாவில் அமர்ந்திருந்தபோது, என் அருகில் இருந்த வேறு சாதி நீதிபதி, என்னைப் பார்த்து தும்மினார்.   ஒரு தலித்தைப் பார்த்துத் தும்முவது தலித் சமூகத்துக்கே செய்யப்படும் பெரும் அவமானம், இப்படி என்னைப் பார்த்துத் தும்மியதன் மூலம், என்னை மட்டுமல்ல… அரசியல் சட்டச் சிற்பி அம்பேத்கரையே அவமானப்படுத்தி விட்டார்கள் என்று அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் அனுப்பலாம். உங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த தலைமை நீதிபதி அப்படியே பம்முவார்.  நீங்கள் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த நீதிமன்றத்தை விட, அதிக வருமானம் வழங்கும் ஒரு நீதிமன்றத்தில் உங்களை நீதிபதியாக நியமிப்பார்.   ஒரு நீதிபதி இப்படிப் புகார் அனுப்பி இருக்கிறாரே… அந்தப் புகார் என்ன ஆனது.. பொய்ப்புகார் கொடுத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றெல்லாம் பயப்படாதீர்கள்.. யாரும் இந்தப் புகாரை கண்டுகொள்ள மாட்டார்கள்.  உங்களுக்கு நல்ல துறை ஒதுக்கப்பட்டதும், நீங்களும், தலித் விரோத தும்மலை மறந்து வசூலைத் தொடரலாம்.

தீர்ப்புகள் வழக்குகளைப் பொறுத்தவரை நீங்கள்தான் ராஜா..  உங்களை ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது.   முட்டாள்த்தனமாக ஒரு தீர்ப்பை நீங்கள் வழங்கினால், அதை எதிர்த்து மேல் முறையீடுதான் செய்ய முடியும்.  மேல்முறையீட்டில் நீங்கள் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால் கூட, அதிக பட்சம்….  அந்த கற்றறிந்த நீதிபதி, வழக்கின் விபரங்களை சரியாக ஆராயாமல் தீர்ப்பு வழங்கி விட்டார் (The learned Judge has failed to properly appreciate the facts) என்றுதான் குறிப்பிடுவார்கள்.   இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்கலாம்.

மிக மிக முக்கியமான விஷயம்  நீங்கள் அரசியல் சார்பில்லாமல் இருக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதென்று பாரபட்சம் பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதராக இருப்பது மிக மிக அவசியம்.    ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதே நல்ல நீதிபதியாக நீங்கள் பரிணமிக்க உதவும்.

உதாரணத்துக்கு, திமுக ஆட்சியில் இருந்தால், நீங்கள் கருணாநிதிக்கு கடிதம் எழுதி, எனக்கு திருவான்மியூரில் ஒரு வீட்டு மனை வழங்குங்கள் என்று கூச்ச நாச்சமே இல்லாமல், ஒரு அலுவலக உதவியாளர் எழுதுவதைப் போல எழுதிக் கேட்கலாம்.  கருணாநிதி வீட்டுமனை வழங்குவார். (இதையும் சில தறுதலைகள் இணையத்தில் எழுதுவார்கள்.  போடா வெண்ணை என்று அதை கண்டு கொள்ளக் கூடாது)   கருணாநிதியிடம் வீட்டு மனை வாங்கும் விசுவாசம், கருணாநிதி முதல்வராக இருக்கும் வரைதான். ஜெயலலிதா முதல்வராகி விட்ட பின்னர், பழைய விஷயங்களை நினைவில் வைத்திருக்கக் கூடாது.   ஜெயலலிதா முதல்வராக இருக்கையில் யாரோ அனுப்பிய மூன்று லட்சம் டாலர்களை தன் சொந்தக் கணக்கில் போட்டுக் கொண்டது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்.  அந்த வழக்கு சொத்துக் குவிப்பு வழக்கை விட, சிக்கலான வழக்காக இருக்கும்.  இந்த நேரத்தில் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருப்பதை மட்டும்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அப்படி கவனத்தில் கொண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தைப் பார்க்கையில், இந்த வழக்கை ரத்து செய்தே ஆக வேண்டும் என்று தீர்ப்பெழுதலாம்.  அந்தத் தீர்ப்பை எப்படி விரிவாக எழுதுவது என்று உங்களுக்கு தெரியாமல் இருந்தால், நல்ல தீர்ப்பெழுதத் தெரிந்த நீதிபதியிடம் கேட்டால் எழுதித்தருவார்.

ஜாமீன் வழங்கும் பிரிவில் உங்களை நீதிபதியாகப் போட்டால் மிக மிக கவனமாக இருப்பது அவசியம்.  திருட்டு வழக்கு, அடிதடி வழக்கு, கொலை வழக்கு, போன்ற வழக்குகளில் ஜாமீனே கொடுக்கக் கூடாது.  ஜாமீனும் தரக்கூடாது, முன்ஜாமீனும் தரக்கூடாது.  கூடுதலாக, தீர்ப்பெழுதுகையில் வழக்கின் தன்மையைப் பார்க்கும்போது, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் புலன்விசாரணை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் ஜாமீனை மறுக்கிறேன் என்று கூறலாம்.  முன்ஜாமீன் வழக்குகளில், காவல்துறை, குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவதில் நியாயம் உள்ளது.  குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தாவிட்டால், புலன் விசாரணை பாதிக்கும், அதனால் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பெழுத வேண்டும்.  இந்தத் தீர்ப்புகள், சாதாரண பாமர மக்கள் தொடர்பானது.

மேல்மருவத்தூரில் கோயில் வைத்து வசூல் செய்யும் திருட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எப்போதாவது சிக்குவார்கள்.  அவர்களை வெறும் ஆன்மீக வாதிகளாகப் பார்க்காமல், அவர்களின் செல்வாக்கை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அவர்களுக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளையும் கவனத்தில் கொள்வதோடு, இது தொடர்பாக உங்களிடம் யார் யார் பேசினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி அனைத்தையும் கவனத்தில் வைத்து தீர்ப்பெழுதப் போகும் நேரத்தில், அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளை கைது செய்து விசாரித்தால்தான் புலனாய்வு செய்ய முடியும் என்று கூறுவார்.  நீங்கள் சாதுர்யமாக, “புலன்விசாரணைதானே செய்ய வேண்டும்… ?   குற்றவாளி இரண்டு நாட்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராவார்.   அப்போது விசாரித்துக் கொள்ளுங்கள்.  கைது செய்வது அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறது” என்று உங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துப் போட்டு தீர்ப்பு வழங்க வேண்டும்.  இது போன்ற வழக்குகளில் என்ன குற்றம் என்பதை நீங்கள் பார்க்கவே கூடாது… யார் குற்றவாளிகள் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

70 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு குற்றவாளி, முன் ஜாமீன் கோரினால் கண்ணை மூடிக்கொண்டு, சட்டத்தை மதிக்காத நபருக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என்று கூறி விடக்கூடாது.  குற்றவாளி யார் என்பதைப் பார்த்தால், அவர் திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சரும், அஞ்சா நெஞ்சனின் மகன் குஞ்சா நெஞ்சனாக இருக்கலாம்.  அதைப் பார்த்ததும், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

இந்த வழக்குகள் கூட பரவாயில்லை… சில வேலையில்லாத அதே வழக்கறிஞர்கள், பொது நல வழக்குகள் என்ற பெயரில் தொல்லை கொடுப்பார்கள்.  அவர்களிடத்தின் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.  அவர்கள் தொடுக்கும் பெரும்பாலான வழக்குகள் அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக இருக்கும்.  அந்த வழக்குகளை உடனடியாக தள்ளுபடி செய்யவும் கூடாது.  அரசுத் தரப்பு பதில் சொல்லவும் என்று உத்தரவிட வேண்டும்.  அரசுத் தரப்பு அடுத்த கும்பமேளா நடைபெறுகையில் பதில் சொல்லுவார்கள்.  அதுவரை வழக்கை ஒத்தி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சில நேரங்களில் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் நினைவுச் சின்னங்களில் கட்சி சின்னத்தை நிறுவி விடுவார்கள்.  அது இரட்டை இலையாக இருக்கும்.  அதோடு சேர்த்து ஒரு குதிரை சிலையும் வைத்து விடுவார்கள்.   அதை எதிர்த்து வழக்கு வரும்.  அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு இது இரட்டை இலை என்பது பளிச்சென்று தெரியும்.  அதற்காக உடனே முடிவெடுத்து விடக் கூடாது.  அரசு வழக்கறிஞரை கேட்க வேண்டும்.  அவர் உடனே, இது பறக்கும் குதிரையின் சிலை… குதிரை பறந்து கொண்டே சாணி போட்டதால், இலை வடிவத்தில் விழுந்து விட்டது.  இது கட்சி சின்னம் அல்ல என்று கூறுவார். அவர் கூறியதைக் கேட்டு விட்டு, வழக்கை எட்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்.  வேறு எந்த நீதிபதியாவது அந்த சாணியை அள்ளட்டும் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.  தேவையில்லாமல் இது சாணி அல்ல.. சின்னம்தான் என்று தீர்ப்பு எழுதி விட்டால் தேவையில்லாமல் அரசை பகைத்துக் கொள்ள நேரிடும்.  கவனமாக இருத்தல் மிக மிக அவசியம்.

சில நேரங்களில் தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று வழக்கு தொடுப்பார்கள்.    அந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு நின்று விட்டீர்கள் என்றால் நீங்கள் சிறந்த நீதிபதியாக முடியாது.  சென்னையில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் பல நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அரசு சிறப்பான ஒரு மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறது.  இப்படிப்பட்ட ஒரு திட்டம், ஒரு தொலை நோக்குத் திட்டம் என்றெல்லாம் தீர்ப்பில் பாராட்ட வேண்டும்.

உங்களுக்கு கடவுள் பக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அதுவும் தீவிரமான முருகபக்தி.  நீதிமன்றத்தில் அமர்ந்து கொண்டு “லார்ட் முருகா ஈஸ் க்ரேட்” என்று மற்ற மதத்தினர் இருப்பார்களே என்று கவலையே படாமல் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.   உங்களுக்கு ஜோசியம், ஜாதகம் நல்ல நேரம் இதெல்லாம் உண்டென்றால், 10.30க்கு நீதிமன்றம் தொடங்கினால் கூட, நீங்கள் சாவகாசமாக 11.30க்கோ, 12 மணிக்கோ நல்ல நேரம் தொடங்கிய பிறகு வரலாம்.  இப்படி லேட்டாக வந்து விட்டு, மதிய உணவு இடைவேளை கூட விடாமல், தொடர்ந்து நீதிமன்றத்தை நடத்தினாலும், உங்களை யாரும் கேட்க மாட்டார்கள்.  இப்படி ஒரு நாள் கூட 10.30க்கு வராமலேயே நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றால், உங்களின் நேரம் தவறாமையைப் பாராட்டி பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாக நியமிப்பார்கள்.  பசுமைத் தீர்ப்பாய சட்டத்திலேயே 10.30க்கு தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தாலும், அங்கேயும் அதே போல 11.30க்கு நீங்கள் வந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள்.

உங்கள் வீட்டில் ஏதாவது விழா… திருமணமோ… காதுகுத்தோ…  வளைகாப்போ எது நடத்தினாலும், ஊரே பார்த்து வியக்கும் வண்ணம் நடத்த முடியும். நீதிபதி வீட்டி விழா என்றால் சும்மாவா… சாதாரணமாக நடத்தி விட முடியுமா என்ன ?

உங்கள் வீட்டு மருமகளுக்கு வளைகாப்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன்…  சாதாரணமாக மற்றவர்கள் வீட்டில் 4 வகை சோறு செய்து வளைகாப்பு நடத்துவார்களே.. அப்படியெல்லாம் நடத்தக் கூடாது.  பத்திரிக்கை அடித்து, முக்கிய நபர்களையெல்லாம் அழைத்து, விலை உயர்ந்த பரிசு தருபவர்களை காலையில் வீட்டுக்கு வரச் சொல்லி விட்டு, மற்றவர்களை மாலையில் ஹோட்டல் சவேராவுக்கு வரச் சொல்லாம்.  சவேராவில் மொத்த பில் 3 லட்சத்து 24 ஆயிரம் ஆவதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது.  அப்போல்லோ ரெட்டி போன்றவர்களை காலையில் வீட்டிலேயே சந்தித்து விடுவது நல்லது.

ஒரு நீதிபதி வீட்டில் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது.  சிறந்த நீதிபதியாக ஆவது எப்படி என்பதற்கு இந்தத் திருமணம் ஒரு கையேடு.

நீதியரசர் தனபாலன் அவர்களின் மகனின் திருமணம் அது.   பத்திரிக்கை அடிப்பதிலேயே தான் ஒரு நீதிபதி என்பதை நிரூபித்தார் நீதியரசர். மொத்தம் மூன்று வகையான பத்திரிக்கைகள்.  மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு முதல் வகை. ஒரு கடினமாக ஜிகு ஜிகு அட்டை.  அதற்குள், ரவிக்கை போல இன்னொரு அட்டை. அதற்குள் திருமணப் பத்திரிக்கை.  இது முதல் வகை.  இரண்டாவது வகை, கொஞ்சம் முக்கியப் பிரமுகர்களுக்கானது.  இதில் அட்டை சற்று சன்னமாக இருக்கும்.  முதல் பத்திரிக்கையில் உள்ளே வைக்கும் அதே பத்திரிக்கை இந்த இரண்டாவது வகையில் உறையில் போட்டு வழங்கப்பட்டது.  மூன்றாவது வகை சுத்தமாக முக்காத அல்லது முக்கத் தெரியாத பிரமுகர்களுக்கானது.   தமிழில் பத்திரிக்கை ஒரு சாதாரண உறையில் போட்டு அனுப்பப்பட்டது.  அழைப்பிதழ்கள் மட்டும் 12 ஆயிரம் அச்சடிக்கப்பட்டது. 

IMG_0006

IMG_0007

மத்திய அரசு வழக்கறிஞர்கள், மாநில அரசு வழக்கறிஞர்கள், முக்கிய வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழில் அதிபர்கள், 2ஜி வழக்கின் குற்றவாளிகள், ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் விநியோகித்தார் நீதியரசர்.

Justice-Dhanabalan

kalaigar

திருமணத்துக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியை ஹாஜா மொஹிதீன் கிஸ்தி என்ற மத்திய அரசு வழக்கறிஞர் பார்த்துக் கொண்டார்.   சேகர் எம்போரியம் நிறுவனத்தின் முதலாளியின் மகனான மற்றொரு வழக்கறிஞர் இன்னொரு பகுதியைப் பார்த்துக் கொண்டார்.   இவர்கள் இருவரையும் நீதிபதியாக்கி விட்டுத்தான் மறுவேலை என்று நீதிபதி தனபாலன் உறுதியளித்துள்ளார்.

பெரும்பாலான திருமண ஏற்பாடுகளைச் செய்தவர், தமிழக நீதித்துறையை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கே.பி என்கிற கலியபெருமாள்.  இவரின் பெருமைகளைப் பற்றி சவுக்கு வாசகர்களுக்கு விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையின் மூலமாக தெரிவிக்கப்படும்.  இந்த கே.பி பல நீதிபதிகள், மற்றும் உயர் அதிகாரிகள் வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர். சிபிஐயின் இணை இயக்குநர் வீட்டுத் திருமணத்தையே நடத்தி வைத்தவர் இந்த கே.பிதான்.  கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரனின் மகள் திருமணத்தை பெங்களுரில், இந்தியாவே வாய் பிளக்கும் அளவுக்கு  நடத்தி வைத்தவர் இந்த கே.பிதான்.

இந்த கே.பிதான் நீதியரசர் தனபாலன் வீட்டுத் திருமணத்தையும் நடத்தி வைத்தவர்.   கே.பி திருமணத்தை நடத்திய விதத்தைக் கேட்டீர்களென்றால் அசந்து போய் விடுவீர்கள்.

திருமணம் நடந்தது ஹோட்டல் லீலா பேலஸில்.  சென்னையின் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல்களில் இது ஒன்று.  இந்தத் திருமணத்துக்கு காலை சிற்றுண்டிக்கு ஒரு நபருக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா ?  2000 ரூபாய். முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்காக, இந்த ஹோட்டல்களில் பல்வேறு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

Chennai-Factsheet

Untitled-1

மறுநாள் திருமண வரவேற்பு எம்ஆர்சி அரங்கம் எனப்படும் மேயர் ராமநாதன் செட்டியார் ஹால்.  இந்த வரவேற்பில் இரவு உணவுக்கு ஒரு நபருக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா ?  4000 ரூபாய்.   மொத்தமாக திருமணம், வரவேற்பு இரண்டும் சேர்த்து 7000 பேர் வந்திருந்தனர் என்கிறது உளவுத்துறை அறிக்கை.

சரி…பத்திரிக்கை அடித்தாயிற்று… ஏற்பாடுகள் செய்தாயிற்று…  நீதிபதிகள் அனைவரும் வரவேண்டும் அல்லவா… ?  தமிழகத்தில் உள்ள அத்தனை கீழ் கோர்ட்டு நீதிபதிகளும் எப்படி சொந்தக் காசை செலவு செய்து சென்னைக்கு வர முடியும் ?  அவர்களாவது பரவாயில்லை… எப்படியாவது வந்து விடுவார்கள்… உச்சநீதிமன்ற நீதிபதிகள் வர வேண்டாமா ?  அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் வந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வேண்டாமா ?   அவர்கள் என்ன சாதாரண அரசு அதிகாரிகளா … … அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க…  ?

இதற்காகத்தான் சென்னை ஜுடிஷியல் அக்காடமியில், திருமண வரவேற்பு நடந்த சனிக்கிழமை அன்று, கீழ்க் கோர்ட்டு நீதிபதிகளுக்கான பயிற்சி நடந்தது.  இந்த பயிற்சியை அளிப்பதற்காக, உச்சநீதிமன்ற நீதிபதிகள், சதாசிவம், இக்பால், மற்றும் இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் வந்திருந்தனர்.  தமிழகம் முழுக்க நீதிபதிகள் வந்துள்ள நிலையில் பயிற்சி மாலை வரையல்லவா நடைபெற்றிகுக்க வேண்டும் ?  இந்தப் பயிற்சி பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்தது.  அனைவரும் அறைக்குச் சென்று, மேக்கப் போட்டுக் கொண்டு நீதியரசர் வீட்டுத் திருமணத்துக்குச் செல்ல வேண்டாமா ?   ஒரு சாதாரண நபர் வீட்டுத் திருமணத்துக்காகவே ஒரு பயிற்சி அரங்கு நடத்த  முடியுமா ?    ஆனால் நீதிபதியானால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது பார்த்தீர்களா ?  இதுதான் நீதிபதிகளின் சிறப்பு.  வந்த நீதிபதிகள் போட்டி போட்டுக் கொண்டு, அய்யாவை குளிரவைக்க போதுமான பரிசுகளை அளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரிசுகளில் ஒரு சிறப்பம்சமும் உண்டு.   மீன் குழம்பு வைக்காததற்காக ஒரு அலுவலக உதவியாளரை பணி இடைநீக்கம் செய்தாரல்லவா வள்ளியூர் நீதிமன்ற நடுவர் கிறிஸ்டல் பபிதா ?  அது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் காரணமாக, அவர் மீது துறை விசாரணை நடைபெற்று வருகிறது.   திருநெல்வேலி மாவட்ட நீதித்துறைக்கு பொறுப்பான உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன்.  இவர் வீட்டுத் திருமணத்துக்கு கிறிஸ்டல் பபிதா எப்படிப்பட்ட பரிசை அளித்திருப்பார் என்பது உங்கள் ஊகத்துக்கே விடப்படுகிறது.

இப்போது யார் சிறந்த நீதிபதி என்பது புரிகிறதா ?   நீதிபதியாவது விளையாட்டான விவகாரம் அல்ல.  அதிலும் சிறந்த நீதிபதியாவது, மிக மிக கடினமான காரியம்.   சவுக்கு வாசகர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள் என்று நம்புகிறோம்.

கட்டுரை நீளமாக இருக்கிறதல்லவா….   ஒரு மாற்றத்துக்காக ஒரு கதை படிக்கலாமா ?  எழுத்துலகின் பீஷ்மன் ஜெயகாந்தன் எழுதிய கதை.  நீதியரசர் தனபாலன் வீட்டுத் திருமணம் எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா ? இந்தக் கதையைப் படியுங்கள்.

 jayakanthan_1_0504085

தாம்பத்யம் - ஜெயகாந்தன்

தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்கு ஒரு புடவை, இரண்டணாவுக்கு வளையல் - ஆக ஐந்து ரூபாய் செலவில் ரிக்ஷாக்கார - கூலிக்கார ஏழைக் கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சிதத்தை மருதமுத்து கண்ணாலம் கட்டிக் கொண்டான்.

அந்த ஐந்து ரூபாயைச் சேர்ப்பதற்கு அவன் ஒரு மாதம் முழுவதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தனக்குக் கிடைக்கும் கூலிக் காசில் தினந்தோறும் இரண்டணா மூன்றணாவாகச் சேர்த்தான். தன் கையிலிருந்தால் செலவாகி விடும் என்று பயந்து மூலைக்கடை சாயபுவிடம் கொடுத்துச் சேமித்தான். அதற்குள்தான் அந்த ரஞ்சிதத்துக்கு என்ன அவசரம்.

முதலில் மருதமுத்து கலியாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது அவசியம் இல்லையென்று கருதினான். அங்கு வாழ்ந்தவர்களின் வளமுறை - பூர்வீகமாகவே அல்ல - தற்காலிகமாக சந்தர்ப்பவசமாக அப்படித்தான்!

ஆனால் அதற்குப் பட்டிக்காட்டுப் பெண்ணான ரஞ்சிதம் ஒப்பவில்லை. "மேளதாளம் இல்லாட்டியும், கூறையும் தாலியுமாவது கட்டிக்க வேணாமா? சாமி முன்னாலே நின்று சத்தியம் செஞ்சுக்குவோம், இதுகூட இல்லாட்டி கட்டிக்கறத்துக்கும், 'சேத்து வெச்சிக்கிறதுக்கும்' என்னா மச்சான் வித்தியாசம்?" என்று தர்க்கம் புரிய ஆரம்பித்தாள். மருதமுத்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று படவே ஒப்புக் கொண்டான். ரஞ்சிதத்துக்குத் தன் மச்சான் ஒப்புக் கொண்டதில் பரம சந்தோஷம். பாவம், அவளும்தான் யாருமற்ற அனாதையாக எத்தனை காலம் இருப்பது?

அவள் பட்டணத்துக்கு அனாதையாகவா வந்தாள்? அவள் அப்பன் பட்டணத்தில் கை வண்டி இழுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தபொழுது அவள் திண்டிவனத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் தன் தாயுடன் 'பயிர் வேலை' செய்து கொண்டிருந்தாள். அவள் தாய் இறந்த செய்தி கேட்டுப் பட்டணத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின் வந்த அவள் தகப்பன் திரும்பிப் போகும்போது ரஞ்சிதத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். பட்டணத்தில் தகப்பனும் மகளும் வாழ்க்கை நடத்த... இருக்கவே இருந்தது பிளாட்பாரம்... கந்தல் பாய், மண் சட்டிகள்! கை வண்டி ஓட ஓட வாழ்க்கையும் நகர்ந்தது... ஒருநாள் அவனால் நகர முடியவில்லை.

அவன் நகராவிட்டால் நகரம் நகராமலா இருந்து விடும்?... அது நகர்ந்தது!

பிளாட்பாரத்தில் கிடக்கும் கூலிக்காரனின் சவத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அது நகர்ந்தது!...

நாகரிகம் நௌ¤ந்து நகர்ந்து கொண்டிருந்த அந்த வீதியில் நாலு பேர் தோள் மீது கடைசிப் பிரயாணத்தைத் தொடங்கி விட்ட அப்பனின் பிரிவைச் சகிக்க முடியாத அனாதை ரஞ்சிதம் புலம்பிப் புரண்டு கதறிக் கொண்டிருந்தாள்!

"நான் அனாதை ஆயிட்டேனே..." என்று கதறிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் செவிகளில் "அழாதே, நான் இருக்கிறேன்" என்ற கனிவுமிக்க ஒரு குரல் ஒலித்தது. ரஞ்சிதம் திகைத்தாள். திரும்பிப் பார்த்தபொழுது தன் மச்சான் மருதமுத்து நிற்பதைக் கண்டவுடன் 'கோ'வென்று கதறினாள்; அவன் அவளைத் தேற்றினான்.

வரவர அவள் தன் அப்பனை நினைத்து அழுவதையே நிறுத்தி விட்டாள். அதற்குத்தான் அவன் அவசியம் இல்லாதபடி செய்து விட்டானே. அப்படி என்ன செய்தான்? ஒரு வார்த்தைதான் சொன்னான்.

"நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்ணாலம் கட்டிக்கிறேன். வீணா அழாதே!" என்று அவன் ஆறுதல் சொன்னதும் அழுது கொண்டிருந்த அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். கலங்கிய விழிகள் பரவசத்தால் படபடத்தன. " என் கண்ணான.... உன்னை நான் கண்ணாலம் கட்டிக்குவேன்" என்று கூறி அவன் லேசாகச் சிரித்தான். அவள் உதடுகளில் மகிழ்ச்சி துடிதுடிக்க நாணத்தால் தலை குனிந்தாள்.

அதன் பிறகு தினந்தோறும் அவள்தான் அவனுக்குச் சோறு பொங்கிப் பரிமாறினாள். அவளும் அவனும் கண்ணாலம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள் என்று அடுத்த 'அடுப்புக்காரி'களெல்லாம் (அடுத்த வீட்டுக்காரர்கள் என்று சொன்னால் சரி வராது... பிளாட்பார வாசிகளின் குடும்பங்களைப் பிரித்துக் காட்டுவது அடுப்புகள்தான்!) பேசிக் கொண்டார்கள்.

மருதமுத்து கொத்தவால் சாவடியில் தலைச்சுமைக் கூலி! தினசரி கிடைக்கும் ஆறணா எட்டணா வருமானத்தில் இரண்டணா ஓரணா எப்படியோ மீதம் பிடித்துக் கொண்டு மிகுதியை ரஞ்சிதத்திடம் கொடுத்து விடுவான். பகலெல்லாம் கூலி வேலை... மாலை நேரங்களில் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதன் விளைவாய் இரவு நேரங்களில் அவன் மனம் அவளை எண்ணித் தவியாய்த் தவிக்கும்; எதிர்கால இன்பத்திற்காக நிகழ் காலத்திலேயே துடியாய்த் துடிக்கும். ஆனால் ரஞ்சிதம் அதற்கெல்லாம் மசிபவள் அல்ல; ஏனென்றால் அவள் பட்டணத்திற்கு வந்து அதிக நாளாகிவிடவில்லை; இன்னும் 'பட்டிக்காட்டுத்தனம்' இருந்தது.

"சாமி முன்னாடி நின்னு சத்தியம் பண்ணித் தாலி கட்டினாத்தான்..." என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

கடைசியில் எப்படியோ காசு சேர்ந்து விட்டது.

சோறு விற்கும் கிழவி ஒருத்தி மருதமுத்துவையும் ரஞ்சிதத்தையும் பார்த்து "மவராசியா வாழணும்..." என்று ஆசிர்வதித்தாள்.

"என்ன மச்சான், கண்ணாலச் சாப்பாடு எப்போ?..." என்று பரிகாசம் பேசி மகிழ்ந்தான் அவன் சகாக்களில் ஒருவன்.

சிறுவர்கள் சிலர் அவனிடம் 'வெகுமானம்' கேட்டனர்.

அவனும் சிரித்துக் கொண்டே இரண்டு மூன்று காலணாக்களை 'வெகுமானம்' அளித்தான்.

லோன்ஸ்குயர் பார்க்கின் கம்பி வேலியின் ஓரமாக எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் புறாக் கூண்டு போன்ற மகா சன்னிதானத்தில் அவன் ஏற்றி வைத்த தரும விளக்கு ஜோதியாய், சுடராய், ஒளியாய், மஹா ஹோமமாய் எரிந்து கொண்டிருந்தது.

ஓரணா கடலை எண்ணெய் அல்லவா ஊற்றியிருக்கிறான்.

பார்க்குக்கு எதிரே, மாதா கோயில் சுவர் ஓரமாகக் கட்டை வண்டி, கை வண்டி, குப்பைத் தொட்டி முதலியவற்றின் இணைபிரியா ஒட்டுறவுடன் நிலைத்து விட்ட அடுப்பில் மீன் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. கஞ்சி மொடமொடக்கும் புதுப்புடவையின் விறைப்போடு கூடிய கொசுவத்தை மடக்கிக் கால்களுக்கிடையே செருகிக் கொண்டு குனிந்து நின்று குழம்பைத் துழாவிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் கைகளில் கலகலக்கும் கண்ணாடி வளையல்களிலும், கழுத்தில் தொங்கிய மஞ்சள் சரட்டிலும், மஞ்சள் பூசிய கன்னக் கதுப்பிலும், நெற்றியில் ஜொலித்த குங்குமப் பொட்டின் ஜிகினாத் தூளிலும் அடுப்பில் கனன்ற தீ ஜீவாலை - நாற்புறமும் சுழன்று நௌ¤ந்து குழம்புச் சட்டியின் அடிப்பாகத்தை நக்கி நிமிர்ந்த தீ நாக்குகளின் செவ்வொளி - படர்ந்து பட்டுப் பிரகாசித்தது.

அவள் அடுப்பை, கனன்று எரியும் கங்குகளைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள். அவள் கண்களில் கங்குகளின் பிம்பம் பிரதிபலித்தது. அவள் முகத்தில் புதிய, இதுவரை அவன் காணாத, அனுபவிக்காத ஒரு அழகு, ஒரு தேஜஸ், ஒரு மயக்கம், ஒரு லாகிரி... என்னவோ தோன்றியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அவளருகே குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தான் மருதை. அவன் இதழ்க்கடையில் சிரிப்பு சுழித்தது. கீழுதட்டை அமுக்கிப் பற்களால் கடித்தவாறு, புருவங்களை உயர்த்தி, முகத்தைச் சாய்த்து ஒரு கோணல் பார்வையோடு பெருமூச்செறிந்தான்.

"ஏ குட்டி, கொஞ்சம் நெருப்பு எடு." ஒரு பீடையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு கேட்டான்.

"ஐய... கூப்பிடறதைப் பாரு... குட்டியாமில்லே, குட்டி" என்று முனகிக் கொண்டே தீ பற்றிய சுள்ளி ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். சுள்ளியை வாங்கும்போது அவள் கையையும் சேர்த்துப் பற்றிக் கொண்ட மருதமுத்து, அவள் கரங்களில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்களோடு விளையாடிக் கொண்டே கொஞ்சுகின்ற குரலில்,

"கண்ணாலம் கண்ணாலமின்னு கண்ணாலம் கட்டியாச்சு, இப்ப என்ன சொல்லுவியாம்..." என்று குரலைத் தாழ்த்தி அவள் காதருகே குனிந்து ரகசியமாக என்னவோ கூறினான். அதைத் தொடர்ந்து கண்ணாடி வளையல்களோடு அவள் சிரிப்பும் சேர்ந்து கலகலக்க, "கையை வுடு மச்சான்... அடுப்பிலே கொழம்பு கொதிக்குது" என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டே ரஞ்சிதம் முன்றானையால் முகத்தை மூடி உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். அப்படி அவன் என்னதான் கேட்டானோ? அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

"ஊஹீம், சொன்னாத்தான்..."

"இனிமே என்னை என்னா கேக்கறது?..." என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பி அடுப்பைக் கவனிக்க முனைந்தாள் ரஞ்சிதம். அவள் முதுகில் என்னமோ நமைத்தது, உடல் முழுவதும் சிலிர்த்தது.

சோறு சமைத்துக் குழம்பு காய்ச்சிப் புருஷனுக்கு விருந்து படைத்துவிட்டுத் தானும் சாப்பிட உட்கார்ந்தாள் - எல்லாம் நடுத்தெருவில்தான்!

"ரஞ்சி, நான் பார்க்கிலே அந்த மூலை பெஞ்சியிலே படுத்திருக்கேன்" என்று மற்றவர்கள் காதில் விழாதபடி சொல்லிவிட்டுச் சென்றான் மருதமுத்து.

சோறும் குழம்பும் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் ரஞ்சிதத்திற்கு சோறு கொள்ளவில்லை.

*****       *****      *****மணி பத்துக்கு மேலாகிவிட்டது. பார்க்கிலுள்ள மூலை பெஞ்சில் மருதமுத்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். பெஞ்சுக்குக் கீழே கிழிந்த பாயும் பழைய போர்வையும் கிடந்தன. அவன் விரல்களுக்கிடையே பீடி நெருப்புக் கனிந்து கொண்டிருந்தது. இன்னும் தெருவில் சந்தடி அடங்கவில்லை.

ரஞ்சிதம் தயங்கித் தயங்கி மௌ¢ள மௌ¢ள அசைந்து பார்க்குக்குள் நுழைந்தாள். அவனருகே தலைமாட்டில் அவனுக்குத் தெரியாமல் வந்து நின்றாள். தன் பின்னால் அவள் வந்து நிற்பதை அறிந்தும் அறியாதவன் போல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான் மருதமுத்து. தான் தூங்கிவிட்டதாக அவள் எண்ணிக் கொள்ளட்டும் என்று லேசாகக் குறட்டை விட்டான். ஆனால் அவன் கையில் புகைந்து கொண்டிருந்த பீடித்துண்டு அவனை அவளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டது. அவளுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மௌனமாய் நின்றிருந்தாள். அவளுக்குக் கழுத்து நரம்புகளில் உள்ளூர என்னவோ உரசிக் கிளுகிளுத்து ஓடி உடல் முழுவதும் பரவுவது போல் இருந்தது. அவனுக்கும் அங்கு நிலவிய மௌனம் சிரிப்பை மூட்டியது; அவன் அடக்கிப் பார்த்தான்; அவன் முகத்தில் சிரிப்பின் ரேகைகள் ஓடிப் பாய்ந்து களுக்கென்று குரலும் வெடித்துவிட்டது. அவளும் சிரித்தாள். இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் காரணமின்றியோ காரணத்தோடோ விழுந்து விழுந்து சிரித்தனர். சிரித்து ஓய்ந்த பின் ரஞ்சிதம் பெஞ்சின் மறுகோடியில் நாணிக்கோணி உட்கார்ந்தாள். "ரஞ்சி, வெத்தலை பாக்கு வெச்சிருக்கியா? குடு!" அவள் வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். மருதமுத்து வெற்றிலையைச் சுவாரஸ்யமாக மென்று கொண்டே அவளருகில் உட்கார்ந்து கொண்டான்...

நல்ல நிலவு...

நிலா வெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்பமளிக்க வில்லை; இடைஞ்சலாய் இருந்தது...

பெஞ்சின்மீது அமர்ந்திருந்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஓங்கி வளர்ந்த அரசமரக் கிளைகளின் ஊடே பாய்ந்து வந்த நிலவின் ஒளிக் கதிர்கள் விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளியில் அவள் விழிகள் மின்னின. வெற்றிலைக் காவி படிந்த உதடுகளில் ஊறிப் படர்ந்த வெற்றிலைச் சாற்றின் மினுமினுப்பு மருதமுத்துவின் உதடுகளை என்னவோ செய்தது. அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அவளையே பார்த்தான். அவள் கழுத்திலே கிடந்த கருவ மணியும் மஞ்சள் கயிறும் முறுக்கிக் கொண்டு மார்பின் நடுவே தடுமாறி நெகிழ்ந்து கிடந்தது. நழுவிப் போன மேலாக்கினூடே, ரவிக்கையில்லாத - கருங்காலிக் கடைசல் போன்ற தேகத்தின் வனப்பு மறைந்தும் மறையாமலும் மருதமுத்துவை மயக்கிற்று.

"ரஞ்சி!''

அவள் பெருமூச்சு விட்டாள்.

விம்மி மேலெழுந்து அவள் நெஞ்சம் புடைத்ததனால் நிலை குலைந்த மருதமுத்து அவளை - அவளுடைய வெற்றுடலை மார்புறத் தழுவிக் கொண்டான்.

"வுடு மச்சான்" என்று திமிறிக் கொண்டு தன்னைச் சரி செய்துகொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சி.

எதிரிலிருக்கும் 'முஸ்லிம் ரெஸ்டாரண்ட்' இன்னும் மூடப்படாததை அப்பொழுதுதான் கவனித்தான் மருதமுத்து.

"சீச்சீ... இந்தப் பார்க் ரொம்ப 'நாஸ்டி'யாப் போச்சு" என்று ஒரு வெள்ளை வேஷ்டிக்காரன் இவர்களைப் பார்த்தவாறே தம்மருகில் வந்தவரிடம் சொல்லிக் கொண்டே நடந்தான். மருதமுத்துவின் உடல் நாணிக் கூசியது - ரஞ்சிதம் பரிதாபகரமாக விழித்தாள்.

"நம்ம ஊரிலேயே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்தா?" என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் ரஞ்சியின் குரல் அடைத்தது.

அவனும் பெருமூச்சு விட்டான்.

"கஞ்சியில்லாட்டியும் நமக்குன்னு ஒரு குடிசையாச்சும் இருக்குமில்லே. பட்டினியோட ஒருத்தருக்கும் தெரியாம கவுரவமா படுத்துக் கெடக்கலாமில்லே... சீச்சீ! இது என்ன பொழைப்பு? தெருவிலே கண்ணாலம் கட்டிக்கிணு, தெருவிலே புள்ளை பெத்துக்கினு, தெருவிலே செத்தும் போறது" என்று சலிப்புடன், வெறுப்புடன், துயரத்துடன், ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் முனகிக் கொண்டாள் ரஞ்சி. அவன் மௌனமாய் இருந்தான்.

சற்று நேரம் கழித்து ஒரு பெருமூச்சுடன் சொன்னான்:

"என்னா பண்றது ரஞ்சி?... அவுங்க அவுங்க தலையெழுத்துப்படிதா நடக்கும். ஊர்லே ஒலகத்திலே எவ்வளவோ பேரு கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பங்களா என்னா! காரு என்னா! அதிலாட்டிப் போனாலும் ஒரு சின்ன வீடு, ஒரு பஞ்சு மெத்தை - அதாவது இருக்கும். எல்லாத்துக்கும் குடுத்து வைக்கணும். நம்ம விதி இப்படி" என்று வருத்தத்தோடு புலம்பினான். "என்னா மச்சான், இதுக்கா நீ கவலைப்படறே? நீ இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இல்லே; காரும் பங்களாவும் வெச்சிருக்கிறவங்க கதையெல்லாம் தெரியாது போலிருக்கு. ஆம்படையான் பெண்டாட்டி விசயம் கச்சேரி வரைக்கும் சிரிக்குதே... நம்ம மாதிரி அவுங்களுக்கு ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஆசையிருக்குமா...?"

'இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..." என்று ஹோட்டல் ரேடியோ விரகத்தால் உருகிக் கொண்டிருந்தது!

ஜன சந்தடி அடங்கிவிட்டது. ஹோட்டலில்கூட ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை.

மணி பன்னிரண்டு அடித்தது.

பிளாட்பாரத்தில் வாழும் மனிதர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தனர். பனி மூட்டம் அவர்களின் மீது கவிந்து கொண்டிருந்தது. விறைக்கும் குளிரில் அழுக்குக் கந்தல்களினுள் அந்த ஜீவன்கள் முடங்கிக் கிடந்தன. பச்சைக் குழந்தைகள் தாயின் மார்பினுள்ளே மண்டிக் காந்தும் வெப்ப சுகத்தில் பம்மிக் கொண்டன. அவர்கள் தலைமாட்டில் சொறி நாய்களூம், கிழட்டு மாடுகளூம் அரைத் தூக்கத்துடன் காவல் காத்தன.

பார்க்கில் நிசப்தம் நிலவியது; மருதமுத்து பெஞ்சியிலிருந்து எழுந்து செடி மறைவில் விரித்திருந்த பழம்பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த ரஞ்சிதத்தின் அருகே சென்று அமர்ந்தான்.

"ரஞ்சி... தூங்கிட்டியா?"

"இல்லே..."

"ஒனக்குக் குளிருதா?"

"உம்."

இருவரும் மொடமொடக்கும் அவளுடைய புதிய சிவப்புப் புடவையால் போர்த்திக் கொண்டார்கள்.

போர்த்தியிருந்த புடவை மௌ¢ள மௌ¢ள அசைந்தது.

"மச்... சான்..." அழுவதுபோல் திணறியவாறே முனகினாள் ரஞ்சிதம்.

திடீரென அந்தத் தெருவிலிருந்து ஒரே வெளிச்சம் அவர்கள்மீது பாய்ந்தது!

"ஐயோ!..." என்று பதறினாள் ரஞ்சி.

"காருதான்... போயிடும்..."

அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரஞ்சிதம்.

கார் சென்ற பிறகு, உலகத்தையே, தங்களையே, மறந்திருந்த அவர்களின் அருகே காலடி ஓசைகளூம் பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் கேட்டன.

மினர்வா தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிவடைந்து கும்பல் வீதியில் பெருகி வந்து கொண்டிருந்தது.

மருதமுத்து எழுந்து சென்று பெஞ்சின் மேல் படுத்துக் கொண்டான்.

ரஞ்சிதத்திற்கு அழுகையே வந்துவிட்டது!

மருதமுத்துவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. யார் மீது ஆத்திரப்படுவது?...

கும்பலில் ஒரு பகுதி முஸ்லிம் ரெஸ்டாரண்டிற்குள் படையெடுத்தது. வெகுநேரம் வரை சந்தடி அடங்கவில்லை.

மணி ஒன்று அடித்தது.

முஸ்லிம் ரெஸ்டாரெண்டில் ஆளரவமே இல்லை. பார்க் அருகே ஒரு ரிக்ஷாக்காரன் நின்றிருந்தான். அவனருகே ஒரு மஸ்லின் ஜிப்பாக்காரன்... "அப்புறம் என்ன சொல்றே?"

"வா சாமி... நல்ல ஸ்டூடன்ஸீங்கதான்; பிராமின்ஸ் சார்... வண்டியிலே ஏறு சார்... போவும்போது பேசிக்குவோம்."

மஸ்லின் ஜிப்பாக்காரனை ஏற்றிக் கொண்டு நகர்ந்து, பிராட்வேயிலிருந்து பிரியும் ஒரு சிறிய சந்தில் நுழைந்து விரைந்து மறைந்தது ரிக்ஷா.

"தூ... இதுவும் ஒரு பிழைப்பா? கஸ்டப்பட்டு வண்டி வலிக்கிற அந்தக் 'கயிதை'க்கு ஏன் இந்தப் பேமானிப் புத்தி?" என்று காறி உமிழ்ந்தான் மருதமுத்து.

"என்ன மச்சான் திட்டறே?"

"ஊரும் ஒலகமும் இருக்கறதைப் பார்த்தா திட்டாமெ எப்படி இருக்கிறது? இன்னம் ஒனக்குத் தூக்கம் வரல்லியா... உம்... எப்படி வரும்" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான் மருதமுத்து.

நிலவு மேகத்தில் மறைந்தது.

ஒளி மிக்க அந்த பூர்ணிமை இரவும் இருண்டது. முஸ்லிம் ரெஸ்டாரெண்டும் மூடப்பட்டது. மனித சந்தடியே அற்றுப் போயிற்று.

ஒரே அமைதி!

பார்க்கினுள் நெடிது வளர்ந்திருந்த அரசமரக் கிளைகளில் காகங்கள் சலசலத்தன; விடிந்து விட்டது போன்ற பிரமை போலும்... சில காகங்கள் கரைந்தன. வெளிறிய இருளின் பிடிப்பில் ஊமைத்தனம் போல் நட்சத்திர ஒளி ஜாடை காட்டிற்று. நாய் ஒன்று எழுந்து நின்று உடலை வளைத்து முறித்துச் சடசடத்து உதறிக் கொண்டு அலுப்புத் தீர்ந்ததுபோல் எங்கோ நோக்கி வேகமாக ஓடியது. மணி இரண்டு அடித்தது.

"ரஞ்சி..."

"..."

"ரஞ்சி..."

"உம்..."

பெஞ்சு காலியாயிருந்தது.

செடி மறைவில் இலையோ இருளோ அசைந்தது.

"டக்... டக... டக்."

முதலில் அந்த ஓசையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

"டக் டக்... டக் டக்..." ஓசை அவர்களைச் சமீபிக்கவே அவர்கள் சலனமின்றி ஒன்றிக் கிடந்தனர்.

"ஏய், யாரது? எழுந்து வாம்மே" என்ற போலீஸ்காரனின் முரட்டுக் குரல், வலுக்கட்டாயமாக - மிருகத்தனமான - மனித உணர்ச்சிகளிலிருந்து, மனித நாகரிகத்தின் புதை குழிக்கு - அவளிடமிருந்து அவனைப் பிய்த்தெறிந்தது. அவன் உடல் பதை பதைக்க உதடுகள் துடிதுடிக்க எழுந்து வந்தான். அவள் செடி மறைவில் நின்று தனது புடவையைச் சுற்றிக் கொண்டாள்.

"வெளியே வாம்மே" என்று போலீஸ்காரன் அசூயையுடன் உறுமினான்.

"பயம்மா இருக்கே மச்சான்..." என்று அந்தப் பட்டிக்காட்டு யுவதி பரிதாபகரமாகத் தன் கை பிடித்த கணவனிடம் குழறினாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"பயப்படாதே வா, ரஞ்சி" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பார்க்கின் இரும்புக் கிராதியைத் தாண்டிக் குதித்து வெளியே வந்தான் மருதமுத்து. விளக்குக் கம்பத்தடியில் போலீஸ்காரன் நின்றிருந்தான்.

"யார்ரா நீ?" என்று சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டான் போலீஸ்காரன்.

"வந்து வந்து கூடைக்காரன், சாமி..."

"ஏய், இப்படி வெளிச்சத்துக்கு வாம்மே" என்று அவளைக் கூப்பிட்டான் போலீஸ்காரன். அவள் பயந்து நடுங்கிய வண்ணம் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றாள். நெற்றித் திலகம் கலைந்து, கூந்தல் அவிழ்ந்து, சிகையில் சூடிய கதம்பம் சிதைந்து சிதறிக் கிடந்தது.

"ஏம்மே, இங்கதான் இடமா? ஒம் பேரு என்னாம்மே?" என்று பாக்கெட்டிலிருந்த சிறு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் கையிலெடுத்தான் போலீஸ்காரன். அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்,

"ரஞ்சிதம், சாமி" என்றாள்.

"சார்... சார்..." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் மருதமுத்து.

"நீ ஒண்ணும் பயப்படாதே! 'இவதான் என்னைக் கூப்பிட்டா'ன்னு ஸ்டேஷனுக்கு வந்து ரிப்போர்ட்டு குடுத்துடு. ஒன்னே விட்டுடுவோம்" என்றான் போலீஸ்காரன்.

ரஞ்சிதத்திற்கு விஷயம் விளங்கி விட்டது.

"நாங்க புருஷன், பெஞ்சாதி சாமி..." என்று பதறினாள் ரஞ்சிதம். போலீஸ்காரன் சிரித்தான். அவள் சொன்னதை அவன் நம்பவில்லை.

"சத்தியமாத்தான் சாமி... இந்தப் புள்ளையார் சாட்சியா நாங்க புருஷன் பெஞ்சாதிங்க சாமி. இதோ பாருங்க" என்று அவள் கழுத்தில் கிடந்த கயிற்றை வெளியே இழுத்துக் காண்பித்தான் மருதை.

சட்டத்தின் வேலிக்குள் நிற்கும் அந்தப் போலீஸ்காரனால் தலையை நிமிர்த்தி அந்த மஞ்சள் கயிற்றைக் காண முடியவில்லை.

அவன் சட்டம் 'இருட்டைத் துருவி திருட்டைக் கண்டுபிடி' என்றுதான் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனசைத் துருவி உணர்ச்சியைப் பார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.

அவன் கண்டுபிடித்தது குற்றம். குற்றவாளியைக் கைது செய்ய வேண்டியது சட்டம். சட்டத்தின் வாரிசு போலீஸ்காரன்! அவன் ஒழுக்கத்தின் பிரதிநிதியோ உண்மையின் தூதுவனோ அல்ல.

"உம், நட நட... அதெல்லாம் ஸ்டேஷனிலே பேசிக்கலாம்" என்று அவளைத் தள்ளினான்.

"ஐயா... ஐயா..." என்ற அந்தக் காதல் 'குற்றவாளி' - ரஞ்சிதம் கெஞ்சினாள். தன் கணவனின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். அவன் தலையைக் குனிந்த வண்ணம் போலீஸ்காரனுடன் நடந்து கொண்டிருந்தான். அவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.

ஊரே அடங்கிய அந்த அமைதியான இரவில் அந்த நகரத்தின் பெரிய வீதியில் சட்டத்தின் ஹிருதயத் துடிப்பு போல் ஜீவனுடன் கம்பீரமாக போலீஸ்காரனின் பூட்ஸ்களின் சப்தம் டக் டக் என்று ஒலித்தது. ரஞ்சிதத்திற்குத் தன் ஹிருதயத்தில் யாரோ மிதிப்பதுபோல் 'பக் பக்' என்று நெஞ்சு துடித்தது.

எதன் மீதோ மிதித்து நசுக்கி நடந்து செல்லும் சட்டத்தின் காலடியோசை...

அதோ, 'டக்... டாக்... டாக்... டக்..."

(எழுதப்பட்ட காலம்: 1957)

அத்தனைக்கும் ஆசைப்படாதே…. ..

$
0
0

மனித இனம் தோன்றியதிலிருந்தே அவனுக்கான தத்துவத்தேடலும் தோன்றியது.  புரியாத விஷயங்களை அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற மனிதனின் தீராத தாகம், இந்தத் தத்துவத் தேடலை வளர வைத்தது.  இப்படியான தேடல்களின் வெளிப்பாடுகளே மதம்.    என்னவென்று புரியாத இயற்கையை கடவுளாக வணங்கிக்கொண்டிருந்த மனிதன் புரியாத விஷயங்களுக்கு வசதியான தத்துவ விளக்கங்களையும் அளிக்கத் தொடங்கினான்.

4078599230_2cd95d67c7_o

இந்த தத்துவத் தேடல்களுக்குக் கிடைத்த விளக்கங்கள், மதமாக வடிவெடுத்தன.  தனக்குக் கிடைத்த விளக்கங்களும், விடைகளும் மட்டுமே உண்மை என்பதை மற்றவர்களையும் நம்பவைக்க, அந்த மதங்களை ஒருமுகப்படுத்தி அனைவர் மீதும் திணிக்கத் தொடங்கினான். இப்படி உலகில் மனிதன் இருந்த அத்தனை இடங்களிலும் மதங்கள் தோன்றி, அந்த மதத்தினை மற்றவர்கள் மீது திணிக்கும் போக்கு பரவியது.  மதம் அதிகாரத்தின் அடையாளமாக மாறியது.   மனிதனும் நாகரீகமும் வளர வளர, மதங்களுக்குள்ளான முரண்பாடுகள் அதிகமாகின.  விஞ்ஞான வளர்ச்சியோ மனிதனின் மதங்களையும், அவனின் நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியது.  விஞ்ஞானத்தின் வளர்ச்சி மதங்களுக்கு நடத்திய சோதனைகளில் அனைத்து மதங்களும் தோல்வியைத் தழுவின.

அறிவியல் எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மதம் ஓடி ஒளிந்தது.  அறிவியலால் மதத்தின் வீச்சை ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்ய முடிந்தது. அறிவியலுக்கும், மதத்துக்குமான போராட்டங்களின் விளைவாக உருவானவர்களே ஆன்மீக குருக்கள்.   அறிவியல் மதத்தின் மீது வைத்த விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை கிடைக்காத நிலையில், அதற்கான மழுப்பலான பதில்களைச் சொல்லி, விஞ்ஞானமும், ஆன்மீகமும் ஒன்றே….   விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்க முடியாத விஷயங்களையும் விளக்குவதே ஆன்மீகம் என்று புதிய விளக்கம் கொடுத்து, தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கினார்கள் ஆன்மீக குருக்கள்.    தொடக்க காலத்தில் சூரியனையும், மழையையும் விபரம் தெரியாமல் வணங்கிப் பழக்கப் பட்ட மனிதனுக்கு, வணங்குவதற்கென்று ஏதாவதொன்று தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது.   அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட ஐயங்களால் மதத்தின் மீது சந்தேகம் கொண்டிருந்தவர்கள், ஆன்மீக குருக்களிடம் ஐக்கியமானார்கள்.   இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் பல்வேறு நாடுகளில் இது போன்ற நவீன ஆன்மீக குருக்கள் தோன்றியபடியே இருந்துள்ளார்கள்.

இந்தியாவிலும் இது போன்ற மதகுருக்களுக்கு துளியும் பஞ்சம் இல்லை.   புட்டபர்த்தி சாயிபாபா, கல்கி பகவான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி, அரபிந்தோ, மகரிஷி மகேஷ் யோகி என்று பல்வேறு ஆன்மீக குருக்கள் தோன்றிக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீக குருக்களில் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் நிறுவனமாக உருமாறி, சொத்துக்கள் சேர்த்து, தங்களுக்கென்று மூளைச்சலவை செய்யப்பட்ட அடிமைகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீக குருக்களின் வளர்ச்சி தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான வீச்சோடு வளர்ந்தது.  தொண்ணூறுகளுக்கு முன்பு இருந்த சாமியார்கள், கார்ப்பரேட்டுகளின் தந்திரங்களைக் கையாளவில்லை.  அவர்களிடம் மூளைச்சலவை செய்யப்பட்ட பக்தகோடிகள் தாங்களாகவே சென்று சரணடைந்தார்கள். இந்த ஆன்மீக குருக்களைப் பற்றிய ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை, வினவுத் தளத்தில் வெளியாகியுள்ளது.

இன்று இந்தியாவில் பிரபலமான ஆன்மீக குருக்கள் என்று எடுத்துக் கொண்டால்,  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், நித்யானந்தா மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ், மாதா அமிர்தானந்த மயி ஆகியோரைச் சொல்லலாம்.  இந்த ஆன்மீக குருக்களிடையே உள்ள ஒற்றுமை, அவர்களின் பேச்சுத் திறமை மட்டுமே.   அற்புதமாக, குட்டிக் கதைகளோடு, உலக சமாதானம், உள்ளுர் அரசியல் வரை வசியப்படுத்தும் வகையில் பேசுவார்கள்.  பகவத் கீதை, விவிலியம், குரான், என்று மத நூல்களைப் பற்றி விரிவாக விளக்கவுரை அளிப்பார்கள்.

பின்னாளில் உருவான இந்த ஆன்மீக குருக்கள், அதிக வட்டி தரும் சீட்டுக் கம்பெனிகள் விளம்பரப்படுத்தி ஆட்களைப் பிடிப்பது போலவும், பிடிக்கத் தொடங்கினார்கள். இந்த சாமியார்களின் தந்திரத்தை, மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தும் மோசடி நிறுவனங்களின் தந்திரத்தோடு ஒப்பிடலாம்.  மல்டி லெவல் மார்க்கெடிங் நடத்தும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் நடைபெறுவனவும், தற்காலத்திய ஆன்மீக குருக்களின் யோகா மற்றும் தியான வகுப்புகளில் நடைபெறுபனவும், ஏறக்குறைய ஒரே தந்திரத்தை கடைபிடிப்பன.   சில ஆண்டுகளுக்கு முன், வீ கேன் என்றொரு நிறுவனம் காந்தப் படுக்கைகளை விற்பனை செய்தது. அந்த நிறுவனத்தில் சேர்ந்து 5500 ரூபாய் கட்டி உறுப்பினர் ஆனால், காந்தப்படுக்கை ஒன்றை தருவார்கள்.  அது என்ன படுக்கை என்றால், சாதாரணமான மெத்தையில்  நாணய வடிவில் உள்ள சில காந்தங்களை பதித்து தருவார்கள்.  இப்படி 5500 கட்டி சேர்ந்து விட்டு, நீங்கள் மேலும் சில நபர்களைச் சேர்த்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு அவர்கள் கட்டும் பணத்திலிருந்து ஒரு பகுதி வரும், அவர்கள் தங்களுக்குக் கீழே ஆட்களைச் சேர்க்க சேர்க்க, ஒரு பிரமிட் போல நீங்கள் உயரத்துக்கு சென்று கொண்டே இருப்பீர்கள் என்று அறிவிப்பார்கள்.   இந்த காந்தப்படுக்கை நிறுவனமான வீ கேன் சார்பாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.  அந்நிகழ்ச்சியில் சேர்ந்து கொள்ள, ஏற்கனவே சேர்ந்தவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்ற ஆடுகளை மஞ்சள் நீர் தெளித்து அழைத்து வருவார்கள்.   அந்நிகழ்ச்சிகளில், மிக மிக சிறப்பான பேச்சுத் திறன் உடைய பேச்சாளர்கள் அந்த நிறுவனத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பார்கள். அவர்கள் பேசி முடித்ததும், ஏற்கனவே வெட்டப்பட்ட ஆடுகளை அழைத்துப் பேசவைப்பார்கள்.  அவ்வாறு மேடைக்கு வந்து பேசும் நபர்கள் பேசுவதைக் கேட்டால், மடியில் இருக்கும் பிள்ளை நழுவி விழுந்து விடும். அப்படி ஒரு மீட்டிங்கில் கலந்து கொண்டபோது, வந்து பேசிய நபர்களின் பேச்சைக் கேட்க நேர்ந்தது.   முதலில் வந்த நபர் ”நேத்து வரைக்கும் நான் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன்… இன்னைக்கு என் கிட்ட இருக்கறது ஒரு ஃபோர்ட் ஐகான் கார் தேங்க் யூ வீகேன்…” என்றார்.  அடுத்து வந்த நபர் ”எனக்கு வீடு கட்டுவது பல ஆண்டு கனவாக இருந்தது… எப்போது வீ கேனில் சேர்ந்தேனோ, மறுமாதமே வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு., வீட்டுக் கடன் வாங்கி விட்டேன்.  இது வீகேன் எனக்கு தொடர்ந்து சம்பாதித்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கையே” என்றார். இது போல வரிசையாக வந்தவர்கள் புளுகிக் கொண்டே இருந்தார்கள்.  கூட்டத்துக்கு வந்து, இந்த பொய்களைப் பார்த்துக் கொண்டிருந்த  பல ஆடுகள், வெட்டுவதற்கு தங்கள் தலையைக் கொடுக்கும்.

இந்த ஆன்மீகத் தொழிலில் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா போன்றவர்களுக்கு ஏர்டெல் உரிமையாளர் சுனில் மிட்டல், ரிலையன்ஸின் அனில் மற்றும் முகேஷ் அம்பானி போன்றவர்கள் என்றால், மற்ற சிறு சிறு சாமியார்களுக்கு .ஊறுகாய் பொட்டலம் தயாரிக்கும் சிறு தொழில் அதிபர்கள்.  யாகவா முனிவர், சிவசங்கர் பாபா போன்றவர்கள், ரவிசங்கர் மகரிஷியிடமிருந்து பிரிந்து வந்து, “வாழும் கலை” என்ற அமைப்பை தொடங்குகிறார். வாழும் கலை என்பதாகப்பட்டது, மனித குலம் தோன்றியதிலிருந்தே யாருக்கும் வாழத் தெரியவில்லை, எப்படி வாழுவது என்று சொல்லிக் கொடுக்கிறேன் என்று அவர் தனது பிசினெஸை விரிவாக்கிக் கொண்டுள்ளார்.  பாபா ராம்தேவ் யோகா பயிற்சி மையம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளை நடத்தி அவரது கம்பெனியையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.   அமிர்தானந்த மயி சாமியாரின் சிறப்பு கட்டிப்பிடி வைத்தியம்.  அவரது வியாபாரமும் கடல் கடந்து பிரபலமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பெரும் தொழில் அதிபர்கள் வரிசையில் உள்ள நித்யானந்தா மற்ற சாமியார்களை விட, வசீகரமான பேச்சும், மொழி நடையும் உள்ளவர். ஆனால் துரதிருஷ்ட வசமாக வீடியோ கேமரா தொழில்நுட்பத்தின் வீச்சை அறிந்து கொள்ளாமல் போனதால், பட்டாபட்டியோடு சிக்கினார். அதன் பிறகு அவர் என்னென்னவோ முயற்சிகள் செய்தும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியவில்லை.   தமிழகத்தைப் பொறுத்தவரை, இப்படிப்பட்ட ஆன்மீக வியாபாரிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து, தமிழக மக்களிடையே இந்த ஆன்மீக வியாபாரத்தைப் பிரபலமாக்கி, திருபாய் அம்பானிக்கு ராஜீவ் காந்தி போல, பின்புலமாக இருந்து இயக்கியது தமிழகத்தின் முன்னணி வாரப்பத்திரிக்கைகளான ஆனந்த விகடன் மற்றும் குமுதம்.

இந்தப் போக்கை தொடங்கி வைத்த முதல் ஊடகம், ஆனந்த விகடேனே… சுவாமி சுகபோதானந்தா என்பவர் எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்.  இந்தத் தொடர் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று, புத்தகமாக வெளிவந்த ஒரு சில மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.  இந்த தொடரின் வெற்றி குமுதத்தையும் யோசிக்க வைத்தது.  ஒரு காலத்தில் ஜெயகாந்தன், சுஜாதா, பிரபஞ்சன் போன்றோரின் தொடர்கதைகளை விளம்பரப்படுத்தி தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொண்ட விகடன் மற்றும் குமுதம் இதழ்கள், தொடர்கதைகளுக்கு வரவேற்பு குறைந்ததை உணர்ந்து ஆன்மீகத் தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கின.   விகடனுக்குப் போட்டியாக குமுதம் தன் பங்குக்கு நித்யானந்தாவை வைத்து, “கதவைத் திற காற்று வரட்டும்” என்ற தொடரைத் தொடங்கினார்கள்.  நித்யானந்தாவின் சுவையான மொழி நடை காரணமாக இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.  குமுதம் அதிபர் ஜவஹர்  பழனியப்பனோடு நெருக்கமான நித்யானந்தாவுக்காக குமுதம் தன் கதவுகளைத் திறந்தது.  இந்தத் தொடர் நித்யானந்தாவை,  அண்ணாமலை ரஜினிகாந்த் போன்ற வளர்ச்சியடைய வைத்தது. 

nithyanandha-fractures-hand

நித்யானந்தாவின் தொடர் அடைந்த வளர்ச்சியைக் கண்டதும் விகடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், கோயம்பத்தூரில், லிங்கம் ஒன்றை நிறுவி வசூல் செய்து கொண்டிருந்த ஜெகதீஷாக இருந்து, பின்னாளில் ஜக்கி வாசுதேவாக மாறிய ஜக்கி விகடனை அணுகுகிறார்.   விகடனுக்கும் இந்த ஏற்பாடு வசதியாகவே இருக்கிறது.  குமுதத்துக்கு போட்டியாக இத்தொடரைத் தொடங்குகிறது விகடன்.  நித்யானந்தாவைப் போலவோ, ஓஷோ போலவோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவோ, விரிவான அறிவும், வாக்கு சாதுர்யமும், மொழி நடையும் இல்லாதவர் ஜக்கி.   இதனால் மற்றவர்களைப் போல, ஜக்கி இத்தொடரை எழுதாமல், ஜக்கியின் பொன்மொழிகளை தொகுத்து தொடராக வெளியிடப்பட்டது.  இத்தொடரை தொகுத்தது, சுபா என்ற இரட்டை எழுத்தாளர்கள்.   இந்தத் தொடருக்காக, ஜக்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை, விகடன் நிறுவனத்தின் பல்வேறு பத்திரிக்கைகளுக்கு தந்ததாகத் தெரிகிறது.

மற்ற ஆன்மீக வியாபாரிகளோடு ஒப்பிடுகையில் தன்னிடம் உள்ள குறையான வசீகரமான பேச்சு இல்லாதததை வேறு வகையில் சரி செய்தார் ஜக்கி. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன உலகின் மூத்த தத்துவ ஞானிக்கு நேர் முரணாக “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற வாதத்தை முன்வைத்தார்.   வழக்கமான ஆன்மீக குருக்கள் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக் கொண்டு அருள் வாக்கு கொடுப்பதைப் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, ஜீன்ஸ் பேன்டும், கூலிங் கிளாஸும் அணிந்து ஹம்மர் காரிலும், ஹோண்டா பைக்கிலும் வலம் வந்து கொண்டு, தத்துவமும் அருள்வாக்கும் அளிக்கும் சாமியாரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

இந்தத் தொடர் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதவ் என்கிற நபரை சத்குருவாக மாற்றியது.     ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் அதிருஷ்டக் கல் விற்கும் நபர் எப்படி பின்னாளில் கோடீஸ்வரராகிறாரோ அதே போல, ஜக்கியும் கோடீஸ்வர சாமியாராக பணக்காரர்கள் க்ளப்பில் இடம்பிடித்தார்.  ஜக்கி எவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்பதை அவர்களே விளக்குகிறார்கள் பாருங்கள்.

Jaggi_Vasudev_-_World_Economic_Forum_Annual_Meeting_Davos_2007

“யோகியும் நம் காலத்தின் ஆழ்ந்த மெய்யறிவாளருமான சத்குரு அவர்கள் தொலைநோக்குடைய மனிதநேயரும் முதன்மையான ஆன்மீகத் தலைவரும் ஆவார். உள்ளார்ந்த அனுபவம் மற்றும் ஞானம் இவற்றில் ஊன்றி நிற்பது போல சாதாரண அன்றாட வாழ்வுசார் விஷயங்களிலும் ஈடுபாடு உடையவரான சத்குரு, அனைத்து மக்களதுமான உடல் மன ஆன்மீக நலத்துக்காக இடையறாது உழைப்பவர். சுயம் பற்றியதான ஆழ்ந்த ஞானத்திலிருந்து அவர் அடைந்த வாழ்வியல் இயங்கு முறைகள் குறித்த அறிவு, வாழ்வின் நுட்பமான பரிமாணங்களை ஆய்வதில் அவருக்கு வழிகாட்டுவதாயுள்ளது.

நீலநிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கையில் எப்படி வசதியாக உணர்வாரோ, அப்படியே இடுப்பில் வெறும் துணியைக் கட்டியிருப்பினும் உணரக் கூடியவர். பிரம்மாண்ட இமயமலையில் வெறுங்காலில் நடப்பது, நெடுஞ்சாலையில் பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிளில் விரைவது என ஒருவர் சந்திக்கக்கூடிய மிக வித்தியாசமான மெய்யறிவாளர் சத்குரு அவர்கள். வெற்று வழக்கங்கள் சடங்குகள் இவற்றிலிருந்து பெரிதும் விலகி நிற்கும் சுய மாற்றத்துக்கான சத்குரு அவர்களின் அறிவியல் செயல் முறைகள் நேரடியானவை, சக்தி மிக்கவை. எந்தக் குறிப்பிட்ட பாரம்பரியத்தையும் சார்ந்திராமல் சமகால வாழ்வுக்கு உகந்தவற்றை யோக முறைகளிலிருந்து பெற்று ஒருங்கிணைத்து வழங்குகிறார் சத்குரு அவர்கள்.

sadhguru-jaggi-vasudev_020811014419

உலகின் முக்கியமானவையாக விளங்கும் சர்வதேச மன்றங்கள் சிலவற்றில் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சத்குரு. 2007ம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் நான்கு குழுக்களில் பங்குபெற்று அரசியல் விஷயங்கள், பொருளாதார முன்னேற்றம் முதல் கல்வி, சுற்றுச்சூழல் வரை பல பிரச்சினைகள் குறித்துப் பேசினார். 2006ல் உலகப் பொருளாதார மாநாடு, ஸ்வீடனில் நடந்த தால்பெர்க் மாநாடு, ஆஸ்திரேலியாவில் நடந்த தலைவர்களுக்கான மாநாடு ஆகியவற்றில் உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரத்தாண்டு அமைதிக்குழு மற்றும் உலக சமாதான அமைப்பு இவற்றிலும் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.

சத்குரு அவர்களின் தொலைநோக்கும் நவீன சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் மீதான புரிதலும் பிபிசி, ப்ளூம்பெர்க், சிஎன்பிசி, சிஎன்என் மற்றும் நியூஸ்வீக் இன்டர்நேஷனல் ஆகிய தொலைக்காட்சிகளில் அவரது நேர்காணல்கள் வெளியாகக் காரணமாக அமைந்திருக்கின்றன. அவரது சிந்தனைகள் இந்தியாவின் முன்னணி தேசிய நாளேடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 'சத்சங்கங்கள்' எனப்படும் அவரது கூட்டு தியானங்களுக்கு 3,00,000க்கும் குறையாமல் மக்கள் பங்கேற்கும் அளவுக்கு பிரபலமானவராக சத்குரு விளங்குகிறார். பழமையிலிருந்து மிகப் புதுமை வரையிலான விஷயங்களின் ஊடே தடையற்றுப் பயணிக்கும் சத்குரு அவர்கள் அறிந்தவற்றுக்கும் அறியாதவற்றுக்குமிடையே பாலமாக நின்று, தம்மைச் சந்திப்பவர்கள் வாழ்வின் ஆழ்ந்த பரிமாணங்களை ஆய்ந்தறியவும் அனுபவிக்கவும் உதவுகிறார்.”

சத்குருவைப் பற்றிய இந்த அறிமுக உரையைப் படிப்பவர்களுக்கு, இவர் கடவுளின் அவதாரம் என்றே தோன்றும்.   ஆனால் இந்த சத்குரு, ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி.  கருணாநிதியையே விஞ்சும் அளவுக்கான ஒரு சிறந்த அரசியல்வாதி.

ஆனந்த விகடன் தொடருக்குப் பிறகு, இவரின் மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு கூடுகிறது.  ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும், ஜக்கிவாசுதேவின் ஆன்மிக வியாபாரத்தை, பல மடங்கு உயர்த்தின.   இவ்வாறு வளர்ந்த அந்த வியாபாரத்தின் ஒரு பகுதிதான் இந்தியா முழுக்க, குறிப்பாக தமிழகமெங்கும் நடத்தப்படும் ஈஷா யோகா தியான வகுப்புகள்.  கடந்த மாதம் இப்படியான ஒரு தியான வகுப்புக்கு நண்பரின் வற்புறுத்துதலால் செல்ல நேர்ந்தது.

இவர்கள் சொல்லித் தரும் யோகா பயிற்சிகள், உண்மையிலேயே உடலுக்கு நன்மை பயப்பவை.  ஆனால் வெறும் யோகப்பயிற்சிகளை மட்டும் சொல்லித்தந்தால், ஜக்கியின் சாம்ராஜ்யம் இப்படி விரிவடைந்திருக்காது.  முதல் இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்து விட்டு, மூன்றாம் நாள் முக்கிய யோகப்பயிற்சி செய்வதற்கான பூஜை என்று தொடங்குவார்கள்.   அந்த பூஜையின் போது, ஜக்கி வாசுதேவின் பெரிய படத்தை வைத்து, அரை மணி நேரம் பூஜை செய்வார்கள்.  இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது மூளைச்சலவை.  இதற்குப் பிறகு, உருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, இந்த உருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.  வகுப்பு முடிந்ததும் பார்த்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலையிருக்கும் உருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்தபடியாக வகுப்பு முடிந்ததும் சத்துமாவுக் கஞ்சி தயாரித்து அருந்துவதற்கு தருவார்கள்.  தரும்போதே, இந்த சத்துமாவு ஈஷா மையத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்று கூறுவார்கள்.  நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்கள் உங்களின் அனுபவங்களைக் கூறுங்கள் என்று பேசச் சொல்லுவார்கள்.  ஏற்கனவே வீ கேன் நிறுவனத்தின் மல்டி லெவல் மார்க்கெடிங் நடந்தது அல்லவா… அதே போல வகுப்பில் வந்தவர்களும் பேசுவார்கள்.  நான்கு நாட்கள் யோகா பயிற்சி செய்து முடித்ததும், எனக்கு உலகமே புதிதாக தெரிகிறது….. அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன்.. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கிறேன்….  மனைவியோடு சண்டை போடுவதில்லை என்று கூறுவார்கள்.  அப்படியெல்லாம் எதுவும் நமக்குத் தோன்றாவிட்டாலும், இத்தனை பேர் சொல்லும்போது, நமக்கு எதுவும் தோன்றவில்லை என்று எப்படி சொல்லுவது என்று யோசித்துக் கொண்டு, நாமும் “எனக்கு நான்கு நாட்களாக… உலகமே பளிச்சென்று நன்றாக தெரிகிறது..” என்று ஏதாவது உளறி விட்டு வருவோம்.

தற்போது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள், இதற்கான அடுத்த கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்.  அதற்காக பதிவு செய்பவர்கள் பெயரை கொடுக்கலாம் என்று கூறுவார்கள்.  ஈஷா மையம், பல்வேறு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறது என்று கூறுவார்கள். இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவமனைகள் போன்றவற்றை சத்குரு செய்து வருகிறார் என்பார்கள். இதற்கான நன்கொடைகளை நீங்கள் வழங்கினால், மேலும் பல்வேறு ஏழைகள் பயன்பெறுவார்கள், அவர்களுக்கு சத்குருவால் மேலும் பல சேவைகளைச் செய்ய முடியும் என்று கூறுவார்கள்….  யோகா வகுப்புக்கு வந்த அடிமைகளுக்குத்தான் உலகமே புதிதாகத் தெரிகிறதே… முதலில் தங்களை வாலண்டியராகப் பதிவு செய்து விட்டு, ஒரு பராரிக் குழந்தையை சத்குரு கட்டிப்பிடிக்கும் வீடியோவை பார்த்து விட்டு அந்தக் குழந்தைக்கு சத்குரு மூலமாக உதவலாம் என்று உடனே செக் எழுதித் தருவார்கள்.  வகுப்பின் இறுதியில், நீங்கள் வாலண்டியராக சேர வேண்டும், இந்த யோகப்பயிற்சியின் பலன்களை உலகெங்கும் எடுத்துச் செல்ல சத்குருவுக்கு உதவுங்கள், என்று மூளைக்குள் அடிமைத்தனத்தையும், போதையையும் விதைப்பார்கள். இந்த போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வு அதோகதிதான்..

ஏழைக் குழந்தைகளுக்காக உங்களின் ஒரு நாள் உணவை தியாகம் செய்யுங்கள் என்று கூறுகிறார் சத்குரு. நீங்கள் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்வதால் வரும் தொகையை அப்படியே ஈஷா மையத்துக்கு நன்கொடையாக வழங்கினீர்கள் என்றால், அதனால் மேலும் பல ஏழைகளுக்கு சத்குரு உதவுவார் என்று அதே வகுப்பின் இறுதியில் உங்களுக்கு ஓதப்படும்.

Untitled-4

Untitled-5

உங்களை ஒரு நாள் உணவைத் தியாகம் செய்து நன்கொடை தாருங்கள் என்று வற்புறுத்தும் சத்குரு வைத்திருக்கும் ஹம்மர் வாகனத்தின் விலை என்ன தெரியுமா ?  40 லட்சம்.   சத்குரு சொந்தமாக வைத்திருக்கும் R22 வகை ஹெலிகாப்டரின் விலை என்ன தெரியுமா ?  14 கோடி.  இந்த ஹெலிகாப்டருக்கான தேவை என்ன என்பதை சத்குருவே விளக்குகிறார்.

“தென்னிந்தியாவில் ஈஷா யோகா பல மடங்கு வளர்ந்து விட்டது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 20 மடங்கு வளர்ந்துள்ளது.  இதனால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சிக்கல் எனது நேரக்குறைபாடு.  நேரக்குறைபாடு பெரிய சிக்கலாகி விட்டது.  இதை நான் ஆராய்ந்தபோது நான் சாலை வழியாக பயணிப்பதில்தான் அதிக நேரத்தை செலவிடுகிறேன் என்பதை உணர்ந்தேன்.

இன்று ஈஷாவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பில், இந்தியாவில் உள்ள அனைத்துக் கதவுகளையும் நமக்காக திறந்திருக்கிறது. ஒரு ஊருக்கு நான் வருகிறேன் என்றால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.   ஆனந்த அலை நிகழ்ச்சியின் போது சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேர் கூடினார்கள்.  மற்ற ஊர்களில் தலா 30 ஆயிரம் பேர் கூடினார்கள்.   நான் அவ்வாறு கூடியவர்களுக்கு ஒரு சவால் விட்டேன். ஈஷாவின் இன்னர் இன்ஜினியரிங் நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் பேரை எந்த ஊரில் பதிவு செய்கிறீர்களோ, அந்த ஊருக்கு நானே நேரில் வருவேன். சிறிய ஊர்களில் 5 ஆயிரம் பேரை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன்.  இவர்களுக்குள் போட்டி உருவானது.  ஒருவர் நான் 5 ஆயிரம் பதிவு செய்தேன் என்றார்.  மற்றொருவர் நான் 8 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளேன் அதனால் எனது ஊருக்குத்தான் வர வேண்டும் என்றார்.

இப்படி பல ஊர்களிலும் என்னை வரவைப்பதற்கு கடுமையான முயற்சி நடப்பதால் ஒரு முடிவுக்கு வந்தேன்.  அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் ஈஷா பயிற்சி எடுக்காத நபரே தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். அதனால் ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்தேன்” என்று கூறுகிறார் ஜக்கி. இணைப்பு.  இந்த ஹெலிகாப்டரை மெயின்டெயின் செய்ய ஆண்டுதோறும் தேவைப்படும் தொகை  15 லட்சம்.

சரி… சத்குரு எப்படிப்பட்ட நபர் என்பதை புரிந்திருப்பீர்கள்.  ஏமாந்தவனிடம் ஏமாற்றிப் பிழைப்பது உலகில் பலர் ஈடுபடும் மோசடிச் செயல்தான்.  சத்குருவும், தன்னிடம் ஏமாறுபவர்களிடம் வசூல் செய்து சம்பாதிக்கிறார்.  இது ஏமாற்றுபவனுக்கும், ஏமாறுபவனுக்குமான பிரச்சினை.   இதைக் கூட மன்னித்து விடலாம்….  ஆனால், இயற்கையை அழிக்கும் சத்குருவை எப்படி மன்னிப்பது ?    சத்குரு எப்படி இயற்கையை அழிக்கிறார் என்பதைப் பார்க்கும் முன்… சத்குரு நாட்டில் பசுமையை வளர்ப்பதற்கு என்னென்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

“இயற்கையைப் பாதுகாப்பதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய, அதைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பெரியவர்களுக்கே எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள் இளவரசனைப் போன்ற பள்ளி செல்லும் பல சிறார்கள். இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் செயல்திட்டமான பசுமைப் பள்ளி இயக்கம்.

சத்குரு அவர்களின் வழிகாட்டுதலோடு துவங்கப்பட்டிருக்கும் இந்த பசுமைப் பள்ளி இயக்கம், பள்ளிக் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது மற்றும் மரம் நடுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.”

Untitled-7

இதற்கு அடுத்த பகுதிதான்  சிறப்பு.

“மரம் வளர்ப்பதற்கு எனக்கு அதற்குப் போதுமான நேரம் இல்லையே, அதற்கான சரியான சூழ்நிலை இல்லையே” என்று நினைப்பவர்கள் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு: ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்http://www.giveisha.org/pgh

50 ரூபாய் செலுத்தினீர்கள் என்றால், உங்கள் பெயரில் ஒரு மரக்கன்று நடப்படுமாம்.  அதன் மூலம் பசுமையை வளர்க்கிறார்களாம்.  இப்படி சத்குரு நடத்திய இந்த பசுமை இயக்கம் மூலமாக ஒரே நாளில் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டதற்காக, மத்திய அரசின் இந்திரா காந்தி விருது சத்குருவுக்கு வழங்கப்பட்டது.

Isha-Foundation-Project_GreenHands-Award-02

இப்படியெல்லாம் சத்குரு இயற்கை ஆர்வலாக இருக்கிறாரே என்று மனமகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள்.  அவசரப்படாதீர்கள்.  மீதம் உள்ள கட்டுரையைப் படித்தால், சத்குரு, கோட்டா சீனிவாசராவ் நடிக்கும் கேரக்டர்களில் உள்ளதைவிட மிக மோசமான வில்லன் என்பது புரியும்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், கோவை, தொண்டாமுதூர் பஞ்சாயத்தில் உள்ள இக்கரை பொலுவாம்பட்டி கிராமத்தில் தனது ஆசிரமத்தை தொடங்குகிறார் ஜக்கி.  அந்த கிராமம் ஒரு அடர்ந்த வனப்பகுதி.  வனப்பகுதிக்கு மிக மிக அருகாமையில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  அந்த இடத்தில் தன் கடையை விரித்த ஜக்கி, மெல்ல மெல்ல, அவ்விடத்தில் இருந்த விவசாய நிலங்களை  விலைக்கு வாங்குகிறார்.   இப்படி வாங்கிய நிலத்தில் 26.11.1999 அன்று தியான லிங்கம் என்ற ஒரு லிங்கத்தை நிறுவுகிறார்.

தொடக்கத்தில் தான் ஒரு ஆன்மீக குருவாக உருவாகுவோம் என்பதை அறியாத ஜக்கி லிங்க சிலையை வைத்து, அதன் மூலம் வசூல் வேட்டையில் இறங்கலாம் என்ற அடிப்படையிலேயே தொடங்குகிறார்.

zkhusw

இந்த லிங்க விவகாரத்திலும் ஜக்கி தான் ஒரு மோடிப் பேர்விழி என்பதை வெளிப்படுத்துகிறார். ஈஷா மையத்தின் இணையதளத்தில் இப்படி இருக்கிறது

The entire structure is a vision of Sadhguru Jaggi Vasudev.  The entire design was conceived by Sadhguru and executed by Bhramhachari engineers with the help of about 300 local unskilled labourers. இணைப்பு

Untitled-8

அதாவது, தியானலிங்கத்தின் மொத்த உருவாக்கமும் ஜக்கி வாசுதேவின் எண்ணத்தில் உதித்தவை.  மொத்த வடிவத்தையும் சத்குரு உருவாக்கினார்.  பிரம்மச்சாரி பொறியாளர்களின் உதவியோடும், அப்பகுதி மக்களில் 300 வேலையாட்களின் துணையோடும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார் ஜக்கி என்று கூறுகிறது ஈஷா.

ஆனால் இந்த லிங்க கோயிலுக்கான வரைபடம், திட்டம், செயல்படுத்துதல், கட்டுமானம் என்று அனைத்தையும் செய்தது, பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் எர்த் இன்ஸ்ட்டிடியூட். இணைப்பு.  இப்படி ஒரு சாதாரண கட்டுமான வேலைகளில் கூட, பொய்யுரைக்கும் சத்குருவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ளுங்கள்.

Untitled-1

ஜக்கி வாசுதேவ் பேசுகையில், தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவராகக் காட்டிக் கொள்வார்.   கடவுளைப் பற்றிக் குறிப்பிடுகையில், “உங்கள் கடவுள்” இப்படிச் சொல்லுகிறார் என்றுதான் குறிப்பிடுவார்.   ஆனால் அவர் கட்டியது லிங்கம்.  லிங்கம் என்றால் என்ன என்பது விபரமறிந்தவர்களுக்குப் புரியும்.  அது சிவபெருமானின் சின்னம்.  லிங்க சிலையைக் கட்டி விட்டு, அது மதம் சார்ந்ததல்ல என்று கூறுவது ஜக்கியின் மற்றொரு மோசடி. தற்போது தஞ்சை சிவன் கோயிலில் இருப்பது போலவே வாசலில் ஒரு நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

மலைத்தளப் பாதுகாப்புக் குழு (Hill Area Conservation Authority) என்று ஒரு குழுவை தமிழக அரசு 1990ம் ஆண்டு உருவாக்குகிறது.  இந்தக் குழுவில் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட கிராமங்களில் எவ்விதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும், இந்தக் குழுவின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது.   இந்தக் குழுவின் அனுமதி பெறுவதும் எளிதான காரியம் அல்ல.  ஒரு சிறிய கட்டிடம் கட்டுவதாக இருந்தால் கூட, இந்தக் குழுவிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் குழுவின் உறுப்பினராக உள்ள, மாவட்ட ஆட்சியர், கட்டிடம் கட்டப்படும் பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.   வனத்துறை அதிகாரியும் இதே போல நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அந்த கிராமம் அமைந்துள்ள பஞ்சாயத்து அமைப்பின் கூட்டத்தில் இதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் இயற்றப்பட வேண்டும்.  இப்படி அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகள்,  மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும். இதற்குப் பிறகே கட்டுமானப் பணிகளையே தொடங்க வேண்டும்.

1994ல் தன் மோசடி வேலைகளைத் தொடங்கிய ஜக்கி வாசுதேவ், எந்த அனுமதியும் பெறாமல், தனது கட்டுமானப் பணிகளைத் தொடங்குகிறார்.  பணம் சேரச் சேர, அந்த லிங்கக் கோயிலைச் சுற்றி, பல்வேறு கட்டிடங்களை எழுப்புகிறார்.  அப்போது இருந்த வனத்துறை அதிகாரிகளோ, மற்ற அதிகாரிகளோ எவ்விதமான கேள்வியும் எழுப்பவில்லை.

நாளாக நாளாக சத்குருவின் அரசியல் தொடர்புகள் வளர்ந்து கொண்டே போகிறது.  2006ல் திமுக ஆட்சி வந்ததும், சத்குருவுக்கு சுக்கிர திசை.  திமுகவின் முக்கியக் கூட்டணிக் கட்சித் தலைவரான தொல் திருமாவளவன், சத்குருவின் யோகா வகுப்பில் சேர்கிறார்.  ஒரு கைதேர்ந்த பிசினெஸ் மேனான சத்குரு, திருமாவளவன் சத்குருவின் புகழைப் பாடுவதை வீடியோவாக தொகுத்து விஜய் டிவியில் வெளியிடுகிறார்.  ஆனந்த விகடன் தொடர் சத்குருவின் வளர்ச்சிக்கு உதவியது போலவே, இந்த விஜய் டிவி நிகழ்ச்சியும் சத்குருவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கிறது.

இந்தச் சூழலில்தான், நக்கீரன் காமராஜ் சத்குருவிடம் யோகா பயிற்சி எடுக்கிறார்.   சத்குருவிடம் யோகா பயிற்சி எடுத்த காமராஜ், ஏறக்குறைய சத்குருவின் அடிமையாகவே மாறிப்போகிறார்.  சத்குருவையும் கருணாநிதியையும் சந்திக்க வைக்கிறார் காமராஜ்.  அப்படி சத்குருவும் கருணாநிதியும் சந்தித்ததின் உடனடி விளைவு, அத்தனை நாள் காட்டுப்பகுதிக்குள் ஒற்றையடிப் பாதையாக இருந்த சாலை, தார்ச்சாலையாக மாறுகிறது.   ஜக்கியின் ஆசிரமத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.  வாகன நடமாட்டத்துக்கு தடை இருந்த வனப்பகுதிக்குள், சர்வ சாதாரணமாக கார்கள் நுழைகின்றன.  எவ்விதமான வாகனம் நுழைவதாக இருந்தாலும், கட்டணம் செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் நுழையவேண்டும் என்று இருந்த விதி கருணாநிதியால் விலக்கப்படுகிறது.

2006101616890601

அதற்கென வெளியிடப்பட்ட அரசாணையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எனவே வனச்சாலைகளைப் பயன்படுத்த உரிமக்கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்தால் அவைகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற விவசாயிகள், பழங்குடி சமூகத்தினர், வனங்களில் வாழ்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போன்றவர்களுக்கு பெருமளவில் நன்மை பயக்கும் என்பதால் வனச்சாலைகளை உபயோகிக்க வாகன உரிமையாளர்களிடமிருந்து உரிமக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்யலாம் என்று முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்படுகிறது.”


IMG_0007

IMG_0008

ஜக்கிக்காக வெளியிடப்பட்ட இந்த அரசாணையால், தமிழகம் முழுக்க அரசுக்கு வரவேண்டிய வருமானம் ரத்து செய்யப்பட்டள்ளது.

2008ல் கருணாநிதியின் தொடர்பு கிடைத்த பிறகு ஜக்கி தனது சாம்ராஜ்யத்தை பல மடங்கு விரிவுபடுத்துகிறார்.  அது வரை, யோசித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடங்கள், எவ்விதமான தயக்கமும் இன்றி, சகட்டுமேனிக்கு கட்டப்படுகின்றன.

வனத்துறையினரின் ஆய்வறிக்கையின் படி, 1994 முதல் 2005 வரையிலான 9 ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மொத்த பரப்பளவு 37424.32 சதுர மீட்டர்.   2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மொத்த பரப்பளவு 55944.82.

கருணாநிதி ஆட்சியில் காமராஜ் இருந்த திமிரில், தெனாவட்டாக இருந்த ஜக்கிக்கு, 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கிலி பிடிக்கிறது. அதுவும், ஜெயலலிதா வந்ததும், யானைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தியதையும், ஜெயலலிதாவுக்கு விலங்குகள் மீதான பாசத்தையும் தெரிந்த ஜக்கி வாசுதேவுக்கு, இனியும் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால், தனது ஆன்மீக வியாபாரத்துக்கு சிக்கல் என்பதால், 06.07.2011 ஜுலை அன்று வனத்துறையிடம் கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கிறார்.

ஈஷா மையத்தின் கடிதத்தில், “நிலையில் உள்ள கட்டிடங்களுக்கும், உத்தேசிக்கப்பட்ட கட்டிடங்களும் முறையாக அனுமதி பெற, நகர ஊரமைப்புத் துறை மூலம் மலையிடப்பாதுகாப்புக் குழு கூட்ட நிகழ்வுக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.  எனவே துறை சார்ந்த தடையின்மை சான்றிதழ் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.   மேலும் வழங்கப்படும் நிபந்தனைகளையும் செயல்படுத்த உள்ளோம் என இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்”

IMG_0001

IMG_0002

 

ஈஷா மையத்தின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த, வனச்சரக அலுவலர் 19.01.2012 அன்று அறிக்கை அளிக்கிறார்.  அவர் தனது அறிக்கையில், “ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள புலங்கள் சாடிவயலிலிருந்து தாணிக்கண்டிக்கு யானைகள் செல்லும் முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளது.  இதனால் யானைகள் செம்மேடு நரசீபுரம் வரையிலான பகுதியில் அடிக்கடி காட்டை விட்டு வெளியே வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

மேற்படி நிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட கட்டிடங்களில் அமைந்துள்ள யோகா மையத்தில் லட்சக்கணக்கான மக்கள் வனச்சாலையைப் பயன்படுத்தி வந்து செல்வதால், வனத்திற்கும், வன விலங்குகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  மேலும் நூற்றுக்கணக்கான பணியாட்கள், கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி புதிய புதிய கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதன் மூலம் வனத்திற்கும் வன உயிரினங்களுக்கும் மற்றும் யானை வழித்தடத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.” என்று கூறி, இதனால் ஈஷா மையத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று எழுதுகிறார்.

IMG_0003

IMG_0004

IMG_0020

அறிக்கை அளித்ததோடு அல்லாமல், உடனடியாக பிப்ரவரி 2012ல், கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்துமாறு ஈஷா மையத்திற்கு அறிவிப்பு அளிக்கிறார்.  ஒரு அரசாங்கத்தையே நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் இதற்கெல்லாம் மசிவாரா என்ன…… போங்கடா………………………. என்று தனது கட்டுமானப் பணிகளை நிறுத்தாமல் தொடர்கிறார்.

ஆகஸ்ட் 2012ல், திருநாவுக்கரசு என்ற மாவட்ட வன அலுவலர், விரிவான ஆய்வறிக்கையை, வனத்துறைத் தலைவருக்கு அனுப்புகிறார்.  அவர் தனது அறிக்கையில் “வறட்சியாக காணப்படும் கோடை மாதங்களான மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்திற்கும் மேல் வருகை புரியும் பக்தர்கள் பயன்படுத்தும் வாகனத்தின் இரைச்சல், திருவிழாவிற்கு பயன்படுத்தும் ஒளி / ஒலி அமைப்பினால் ஈஷா யோகா மையத்திற்கு அருகாமையில் உள்ள போலாம்பட்டி ப்ளாக் 2 ஒதுக்கு வனத்தினுள் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு அதிக இடையூறு ஏற்பட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்கள் கூட்டத்தை தாக்கத் தொடங்கினால் யானைகளினால் ஏற்படும் பெரிய சேதத்தை குறைந்த எண்ணிக்கையில் உள்ள வனப்பணியாளர்களால் தடுப்பது என்பது இயலாத காரியமாகும்.  மேலும் மேற்படி புலங்களில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது” இதனால் ஈஷா மையத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அறிக்கை அளிக்கிறார்.

IMG_0010

IMG_0011

IMG_0013

IMG_0014

நவம்பர் 2012ல் நகரமைப்புத் துறை, ஈஷா மையத்திற்கு உடனடியாக கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்புகிறது.    அந்த நோட்டீஸுக்கு பதிலும் இல்லை, கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை.  இதனால், சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்க ஆணையிடும், மற்றொரு நோட்டீஸ் டிசம்பர் 2012ல் அனுப்பப்படுகிறது.  ஆனால், நோட்டீஸுக்கு பதில் சொல்லாத ஈஷா மையம், கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள்.   எந்த அளவுக்கு திமிரும், இறுமாப்பும் இருந்தால், அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தைக் கூட திரும்பப் பெறுவார்கள் ?  உலக சமாதானம் பேசும் ஜக்கியின் யோக்கியதையைப் பார்த்தீர்களா ?

IMG_0022

ஈஷா மையத்திற்கு சிறுவாணி ஆற்றின் ஊற்று அருகிலேயே வனப்பகுதி வழியாக நாள் ஒன்றுக்கு 5000 லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.   கட்டிட அனுமதி பெறாமல் உங்களால் தண்ணீர் இணைப்பு பெற முடியுமா ?  கோவையில் மொத்த மின்வெட்டின் நேரம் 6 மணி நேரம்.  ஆனால் ஈஷா மையத்திற்கு 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. இணைப்பு.

IMG_0017

கடந்த வாரம் ஈஷா மையத்திற்கு சென்று என்னதான் நடக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டபோது, கண்ட காட்சிகள் கண்களில் கண்ணீரை வரவைத்தன தோழர்களே…. எந்த விதமான சட்ட விதிகளையும் மதிக்காமல், கனரக இயந்திரங்களின் உதவியோடு 24 மணி நேரமும் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளன.

a1

a3

விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பட்டியல்

ஈஷா மையத்தின் எல்லைகள் அனைத்தும் மின்வேலி போட்டு தடுக்கப்பட்டள்ளன.  ஈஷா மையத்தின் பின்புறம், தாணிக்கண்டி என்கிற மலைவாழ் இனத்தவர் வாழும் பகுதி உள்ளது. அந்த தாணிக்கண்டி கிராமம், அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள பகுதி.  தாணிக்கண்டி மலைவாழ் மக்கள், காட்டை தங்கள் தெய்வமாகப் பார்க்கிறார்கள்.  அந்த விலங்குகளும், மரங்களும் அவர்களின் தோழனாக இதுநாள் வரை இருந்து வந்தன.  இன்று அவர்களின் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்த வனம் மொட்டையடிக்கப்பட்டு பொட்டல் காடாக காட்சியளிக்கிறது.  ஈஷா மையத்திற்கு வெளியே வனப்பகுதியில் இருந்த இந்த மரங்கள், ஈஷா மையத்தினரால் வெட்டப்பட்டுள்ளன. இந்த மரங்கள் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான மரங்கள். வெட்டப்பட்ட மரங்களில் சந்தனமும் அடக்கம்….  200 வருடக் காட்டை அழித்து விட்டு, பசுமை இயக்கம் நடத்தும் இந்த மோசடிப் பேர்வழியை எப்படி மன்னிப்பது… ?

இது மட்டுமல்ல தோழர்களே….   ஈஷா மையம் அதிக அளவிலான கட்டுமானப்பணிகளை கட்டத் தொடங்கிய பிறகு, 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன. ஈஷா மையத்தின் வளர்சசியாலும், அது ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் மாசாலும், நிலப்பகுதிக்குள் நுழைந்த யானைகள் 2006 முதல் 2012 வரையிலான காலத்தில் மிதித்துக் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் 57.

IMG_0021

நெஞ்சு கொதிக்கிறதா இல்லையா….? ஈஷா மையத்திற்கு அருகே, பல ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று உள்ளது.  அந்த புளியமரத்தை யானைக்கட்டி புளியமரம் என்று அழைக்கிறார்கள்.  ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்திற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் உள்ளுர் பக்தர்களிடம் ஜக்கி, அந்த புளியமரம் தான் வைத்தது என்றும், அதற்கு சிறப்பு சக்தி உள்ளது என்றும் கூறுகிறார்.  இதை நம்பிய வெளிநாட்டினர் பலர், அந்த புளியமரத்துக்கு வந்து, மரத்தை நக்கிப் பார்க்கின்றனர்.  இந்த புளிய மரம், பல ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் குடியிருந்த தம்பிய கவுண்டர் என்பவரால் வளர்க்கப்பட்டது.  அந்த புளிய மரத்தில் ஒரு யானைக் குட்டியை கட்டி வளர்த்து வந்தார் தம்பியக் கவுண்டர்.  அவருக்குப் பின் அவர் மகன் நஞ்சப்ப கவுண்டர் அந்த யானையை வளர்க்கிறார்.  அவருக்குப் பின் அவருடைய மகன் சண்முக சுந்தரம் அந்த யானையை பராமரிக்க முடியாமல், பழனி கோவிலுக்கு தானமாகத் தருகிறார். இதை வைத்துத்தான் அந்த புளிய மரத்துக்கு யானைக்கட்டி புளியமரம் என்ற பெயர் வந்தது...  ஜக்கி எப்படிப்பட்ட புளுகுமூட்டை என்பது இப்போது புரிகிறதா ?

DSC_0339

யானைக்கட்டி புளியமரம்.

காட்டை மொட்டையடித்ததையும், யானைகளின் இறப்பையும் கேட்டதும் மனதில் தோன்றியது என்ன தெரியுமா ?  ஜக்கி வாசுதேவை அதே யானைகட்டி புளியமரத்தில் ஜட்டியோடு ஒரு வாரத்திற்கு கட்டி வைக்க வேண்டும்.    அந்தப் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகம்.  என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஈஷாவின் கட்டுமானப் பணிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் வாகனத்தில் பின்தொடர்ந்தபடியே இருந்தார்.   அவர் செக்யூரிட்டியிடம் சென்று சொன்னதும், செக்யூரிட்டி “சார்.. இங்கே புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார்… அவர் சொன்னதை காதிலேயே வாங்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததும் அவர் சென்று ஒரு சாமியாரை அழைத்து வந்தார். சாமியார், “அண்ணா… இங்க போட்டோ எடுக்கக் கூடாது அண்ணா” என்றார்… “ரோட்டிலிருந்து போட்டோ எடுக்க எனக்கு உரிமை இருக்கிறது அண்ணா” என்றதும், அண்ணாவையெல்லாம் விட்டு விட்டார்…  “யாருங்க நீங்க எங்கேர்ந்து வர்றீங்க“ என்றார்….  அதெல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது… உங்கள் இடத்திற்குள் வந்தால் கேள்வி கேளுங்கள்.. இது சாலை… என்றதும்… “நீ இந்த எடத்த விட்டு எப்படிப் போறன்னு பாக்கறேன்“ என்றார்.  கேமராவில் மெமரி கார்டை எடுத்து ஒளித்து வைத்து விட்டு, அவர் சொன்ன இடத்திலேயே 15 நிமிடம் காத்திருந்த போதும் யாரும் அடிக்க வரவில்லை.  வந்து அடித்தால், இதை வைத்து புகார் கொடுத்து, எப்ஐஆர் போட்டு, ஒரு சாமியாரையாவது உள்ளே வைக்கலாம் என்றால் எதிரில் சென்று நின்று கொண்டு, நம்மை போட்டோ எடுக்கிறார்கள்…. 15 நிமிடம் கழித்தும் யாருமே அடிக்க வரவில்லை என்பதால், அங்கிருந்து கிளம்ப நேர்ந்தது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர், 2001ம் ஆண்டு ஈஷா மையத்துக்கு தனது நிலத்தை  ஒரு ஏக்கர் 2.5 லட்சம் என்ற விலைக்கு விற்கிறார்.  அவ்வாறு அவர் விற்பனை செய்கையில், அந்த நிலத்துக்கு செல்ல பாதையே இல்லாமல் இருக்கிறது.  இதனால் அந்த நிலப்பத்திரத்திலேயே கூடுதலாக ஒரு 25 அடி நிலத்தை பாதைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக கூறுகிறார்.  இது இப்படியே எவ்வித பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

DSC_0996

நிலத்தை விற்பனை செய்த சுப்பையா

இந்த பாதைக்கு அருகே, ஒருவர் அசைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார்.  அந்த ஹோட்டல் இருக்கும் இடத்தை தங்களிடம் கொடுக்குமாறு ஈஷா நிர்வாகத்தினர் தொடர்ந்து வற்புறுத்துகின்றனர்.  ஹோட்டல் உரிமையாளர் கொடுக்க மறுக்கிறார்.   அந்த ஹோட்டலுக்கு அருகே செல்லும் ஈஷாவுக்கு சொந்தமான பாதையில், ஆசிரமத்தில் உள்ள கழிவு நீரை அகற்றும் குழாய்க்கு சம்ப் அமைக்கிறார்கள்.  அந்த சம்ப்பை திறந்து வைக்கிறார்கள்.  கழிவு நீர் சம்ப்பை திறந்து வைத்தால் ஹோட்டலில் யாராவது சாப்பிட முடியுமா ?    ஹோட்டல் உரிமையாளரே சம்ப்பை மூடி மீண்டும் ஹோட்டல் நடத்துகிறார்.   இதையடுத்து, அந்த ஹோட்டலில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர் ஈஷா நிறுவனத்தினர்.  காவல்துறை ஹோட்டலை தலைகீழாக புரட்டிப் போடுகிறது.  ஹோட்டல் உரிமையாளர், இனி காலம் தள்ள முடியாது என்று விற்க முடிவு செய்கிறார்.  அவரை விற்க விடாமல், அந்த ஓட்டலை கொங்குப் பேரவை நடத்தி வருகிறது.

DSC_0304

அந்த கழிவு நீர் சம்ப்

DSC_0302

DSC_0301

அடைக்கப்பட்ட பாதை

கொங்கு பேரவை பிடிவாதமாக நடத்தியதும், பாதைக்காக கொடுத்த 25அடி நிலத்தை மடக்கி ஒரே நாளில் வேலி போடுகிறார்கள் ஈஷா நிறுவனத்தினர்.  வேலி போடும் அன்று, ஆசிரமத்திலிருந்து 150 பேர்களை அழைத்து வந்து வேலி போட்டு முடிக்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனை அட்டூழியங்கள் செய்து வருகிறார்களே…  இவர்களை ஏன் யாருமே தட்டிக் கேட்பதில்லை என்று அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,  பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள் என்று யார் வந்தாலும், அவர்களுக்கு கணிசமான தொகையைக் கொடுத்து வாயை அடைப்பதுதான் ஈஷா மையத்தின் வழக்கம் என்று கூறுகிறார்கள்.

DSC_0989

ஈஷா மடத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் கார்த்திகேயன்

ஒரு சாதாரண சாமியார், இப்படி எந்தச் சட்டத்தையும் மதிக்காமல், ரவுடித்தனம் செய்து கொண்டு, ஒரு ஊரையே வளைத்துப் போட்டு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறானே…  ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டால், சார்… அரசாங்கமே சாமியார் கையிலதான் சார் இருக்கு… இப்போ பாருங்க அரசாங்கம் கட்டிடம் கட்டாதேன்னு நோட்டீஸ் கொடுத்துருக்கு… ஆனா சாமியார் கட்டிடம் கட்டுவதோடு இல்லாமல், சிவாரத்திரி விழா வேறு கொண்டாடுகிறார்…  இந்த விழாவுக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள்.. குறைந்தது 1 லட்சம் வாகனங்கள் வனப்பகுதிக்குள் வரும்… இது அரசாங்கத்துக்கு தெரியாதா ? அரசாங்கமே சாமியார் கைக்குள்ள இருக்கும்போது நாங்க என்ன சார் பண்ண முடியும் என்றனர்.

மீண்டும் சென்னைக்கு திரும்பியதிலிருந்து நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.  மீண்டும் மீண்டும் மொட்டையாக்கப்பட்ட அந்த வனப்பகுதியும், தாணிக்கண்டி பழங்குடி மக்களும், இறந்த யானைகளும், தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக உறுத்திக் கொண்டே இருந்தனர்.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடங்களையும்,  இடிக்க வேண்டும், மகாசிவராத்திரி விழாவைத் தடை செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர் வெற்றிச் செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு வெள்ளியன்று தலைமை நீதிபதி அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்த குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.  உடனடியாக வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் ஈஷா மையம் 2 வாரத்திற்குள் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  மகாசிவராத்திரி விழாவுக்கு இடைக்காலத் தடை கேட்டதற்கு, இறுதி நேரத்தில் வந்திருப்பதால், தடை விதிக்க முடியாது என்று கூறினர்.  நீங்கள் இது குறித்து கலெக்டரை ஏன் அணுகவில்லை என்றார் நீதிபதி பால் வசந்தகுமார்.

உடனே வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வெகுண்டெழுந்தார்.  நாங்கள் இறுதி நேரத்தில் வந்திருக்கிறோம் என்பது உண்மைதான்.  எங்களுக்கு இப்போதுதான் தகவல் தெரிந்தது, தெரிந்த உடனேயே நீதிமன்றத்தை அணுகி விட்டோம்.   நாங்கள் ஏன் கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்… ?  இது பொதுநல வழக்கு… இந்த விதிமீறல்களை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

DSC_1020

இறுதி நேரத்தில் வந்திருக்கிறோம் என்பதாலேயே சுற்றுச் சூழலை பாதிக்கும் இந்த விழாவை தங்கு தடையின்றி நடத்த அனுமதிக்க முடியுமா ?  இவ்விழாவில் கடந்த ஆண்டு 2 லட்சம் பேர் பங்கெடுத்தனர். இந்த ஆண்டு 4 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.   லட்சக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிக்குள் நுழையும்… மாலை 5.40 முதல் விடிய விடிய, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி பஜனைகள் நடைபெறப் போகிறது… பல வாட்டுகள் சக்தி கொண்ட ஒளி விளக்குகள் பயன்படுத்தப்படப் போகின்றன… இதனால் காட்டு விலங்குகள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டாமா ?  சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது.  குடிமகனுக்கே அந்தக் கடமை இருக்கையில் நீதிமன்றம் என்ன விதிவிலக்கா ?  நாங்கள் வெளிப்படையாக நாத்தீகர்கள் என்று அறிவித்தவர்கள். இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் வெற்றிச் செல்வனும் நாத்தீகரே… எங்களுக்கு யார் இந்த ஜக்கி என்பதைப் பற்றிக் கவலையில்லை…. எங்களது ஒரே கவலை சுற்றுச் சூழல் மட்டுமே… வனவிலங்குகளின் நலன் மட்டுமே” என்று கடும் அழுத்தத்தோடு தன் வாதத்தை வைத்தார்….. ….

நீதிபதிகளுக்கு ராதாகிருஷ்ணனின் வாதம், ஜக்கியால் பாதிக்கப்பட்ட யானையின் பிளிறலைப் போல இருந்திருக்க வேண்டும்.  மனுதாரர், கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து மனு கொடுக்கலாம்.  அந்த மனுவைப் பெற்ற அவர்கள், மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு, மகாசிவராத்திரி விழாவால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு பேக்ஸ் மற்றும் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.   ஞாயிறன்று, நடைபெறும் விழாவை வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.   வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவையடுத்து பதறிய ஈஷா நிர்வாகம், கோவை பதிப்பின் அனைத்து செய்தித்தாள்களிலும், ஈஷா மையம் இயற்கைக்காக செய்த அத்தனை சேவைகளையும் விளம்பரப்படுத்தியிருந்தது.  இந்த விளம்பரங்கள், ஈஷாவின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதன் முதல் அறிகுறி. விழிப்புணர்வு அடைந்து, எதுவுமே தன்னை பாதிக்காத மோனநிலையில் இருக்கும் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ் என்கிற சத்குரு சஞ்சலம் அடைந்துள்ளார் என்பதன் அறிகுறி இது.   இந்த வழக்கு குறித்து செய்தி வந்ததும், தனது உயர்மட்டத் தொடர்புகள் அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் ஜக்கி.  எப்படியாவது இந்த வழக்கை முடித்து ஆசிரமத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.     இதுவே நமது பெரிய வெற்றி….

அந்த வனத்தை மீட்டு விலங்குகளிடமும், பழங்குடியின மக்களிடமும் ஒப்படைக்கும் வரை தொடர்ந்து அயராது போராடுவோம் தோழர்களே…  இந்த போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிப்போம்.

அத்தனைக்கும் ஆசைப்படாதே ஜக்கி....  உனது ஆசையே உனக்கு வரப்போகும் துன்பத்துக்குக் காரணம்.

DSC_0041

DSC_0013

எந்தக் கேள்வியும் கேட்காமல் கருணாநிதியால் ஊமையாக்கப்பட்ட வனத்துறை செக்போஸ்ட்

DSC_0024

DSC_0309

DSC_0038

DSC_0047

ஈஷா மைய சுற்றுச் சுவர்..

DSC_0045

ஈஷா மையத்துக்காக வனப்பகுதியில் உருவாக்கப்பட்ட தார்ச்சாலை

DSC_0059

300 வருடங்களாக வாழும் தாணிக்கண்டி மலைவாழ் மக்களின் கிராமத்துக்கு செல்லும் சாலை போன்ற ஒன்று

DSC_0054

புகைப்படம் எடுக்கக் கூடாது என்று மிரட்டும் செக்யூரிட்டி

DSC_0290

பின் தொடர்ந்து வந்து மிரட்டிய சாமியார்

DSC_0063

தங்கு தடையின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகள்

DSC_0069

DSC_0076

DSC_0081

DSC_0078

DSC_0091

DSC_0983

DSC_0981

DSC_0964

DSC_0961

DSC_0978

DSC_1065

மகாசிவராத்திரி விழாவுக்காக அமைக்கப்பட்டு வரும் மேடை

DSC_1060

மேடைக்கு 50 அடி தொலைவில் தொடங்கும் வனப்பகுதி

DSC_1077



DSC_0094

கள்ளத்தனமாக எடுக்கப்படும் தண்ணீருக்கான தொட்டி

DSC_0101

மொட்டையடிக்கப்பட்ட வனம்

DSC_0125

DSC_0134

DSC_0138

DSC_0154

DSC_0155

ஒரு வருடத்துக்கு முன் அடர்ந்த காடாக இருந்த இடம்

DSC_0159

DSC_0164

DSC_0168

DSC_0170

தாணிக்கண்டி பழங்குடியின குழந்தைகள்

DSC_0184

DSC_0186

DSC_0200

அந்தப் பழங்குடியின மக்களை வைத்தே மலை மேலிருந்து ஈஷா மையத்திற்கு எப்படி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது  என்பதை விளக்கும் தாணிக்கண்டி கிராமப் பழங்குடி

DSC_0215

தாணிக்கண்டி பழங்குடியின கோயில்

DSC_0254

நமது வாகன எண்ணை குறித்து மிரட்டும் செக்யூரிட்டி

DSC_0261

ஈஷா மையத்தினரால் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி

DSC_0269

பிடுங்கி எறியப்பட்டுள்ள 1939ம் ஆண்டு எல்லைக்கல்

DSC_0329

ஈஷா மையத்தினர் அமைத்துக் கொண்டுள்ள பாலம்

DSC_0283

மலையிலிருந்த திருட்டுத்தனமாக எடுத்து வரப்படும் குடிநீர் இணைப்பு

DSC_0330

ஹெலிபேட் அமைய உள்ள இடம்.


 



 


இது வேற வாய்...... அது..... ?

$
0
0

ffffffffffffff

 

டெசோ அமைப்பின் சார்பாக செவ்வாயன்று ஈழத் தமிழரின் உரிக்காகவும், இலங்கையை போர்க்குற்றத்துக்காக தண்டிப்பதற்காகவும், நடைபெறும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து கருணாநிதியின் கடிதம்..

டெசோ தலைவர் கருணாநிதி வேண்டுகோள்…  11.03.2013

ஈழத் தமிழர் இன்னல் தீரவும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை வலிமையான திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரியும், "டெசோ" அமைப்பின் சார்பில் 12-3-2013 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

நம் அழைப்பினை ஏற்றுத் தாமாகவே முன் வந்து வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இசைவு தந்த வண்ணம் உள்ள செடீநுதி, நமக்கு ஊக்கம் தருவதாக உள்ளது.

நான் ஏற்கனவே என் வேண்டுகோள் அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தபடி, நம் போராட்டம் அன்பு வழியிலும், அறவழியிலும் நடைபெறுவதாக இருந்திட வேண்டும். ஒரு சிறு வன்முறைக்கும் உடன்பிறப்புகள் இடம் தந்து விடக் கூடாது. பொது மக்களுக்கோ, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கோ எந்த இடையூறும் இன்றி நம் அறப்போர் நடந்திட வேண்டும்.

இன எதிரிகள், சமூக விரோதிகள் இடையில் புகுந்து கலவரம் விளைத்திட முனையக் கூடும். அது குறித்தும் மிகுந்த கவனத்தோடு இருந்திட வேண்டும்.

ஈழ மக்களுக்காகத் தமிழகமே தன் வேலைகளை நிறுத்தி, நாடு நிலைகுத்தி நின்று விட்டதென்னும் செய்தியை, உடன்பிறப்பே, நாளை நீ கொண்டு வர வேண்டும்.

அன்புடன்

மு.கருணாநிதி

 

பிப்ரவரி 2009ல் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, பெண்களும், குழந்தைகளும், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பை சட்டவிரோதமாக அறிவித்து, கருணாநிதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு....

pr030209_77

செய்தி வெளியீடு எண் 77                     நாள் 03.02.2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பெயரால் 4ம் தேதியன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புக் குறித்து அந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்துகின்ற கட்சிகளுக்கு தலைமைச் செயலாளர் அன்று அனுப்பியுள்ள கடிதம் வருமாறு :-

04.02.2009 அன்று புதன்கிழமை அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக என்று தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம்  நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.   எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும் அதனை நடத்தக் கூடா என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி; அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிவீர்கள்.  இந்த விபரங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.   இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும் – உச்சநீதிமன்றம் முழு அடைப்பு நடத்துவதையே சட்டமீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடியாதிருக்கும் நிலையில் நீங்கள் அறிவித்துள்ள 4ம்தேதி முழு அடைப்பு சட்டவிரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது.

வெளியீடு : இயக்குநர், செய்தி, மக்கள் தொடர்புத் துறை.

வெட்டப்படும் மரங்கள்.. அலறும் விலங்குகள்! - சிக்கலில் ஈஷா

$
0
0


'மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இருப்பது நெருக்கமான உறவு. இந்த உறவை யாரும் பிரிக்கவோ அல்லது இந்த உறவு இல்லாமலோ மனிதன் வாழவே முடியாது’ என்று சொன்னவர் ஜக்கி வாசுதேவ். அப்படிப்பட்ட மரங்களை வைத்தே ஜக்கி வாசுதேவ் மீது இப்போது சர்ச்சை மேகம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பொதுநல மனுவின் மூலம் அதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்துள்ளார்.

அவரிடம் இதுபற்றிக் கேட்டோம். ''1990-களில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து, இக்கரை பொலுவம்பட்டியில் மிகச் சிறிய அளவில் ஜெகதீஷ் என்பவர் ஆசிரமம் தொடங்கினார். பிறகு அவர், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன பிறகு, அவருடைய ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். அடர்ந்த வனப் பகுதியை மொட்டையடித்து, ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட பரப்பளவு 37,424.32 சதுர மீட்டர். 2005 முதல் இந்த நிமிடம் வரை படுவேகமாக 55,944.82 சதுர மீட்டரில் கட்டடங்களைக் கட்டி உள்ளனர். இதுபோன்ற அடர்ந்த வனப் பகுதிக்குள் கட்டடம் கட்டுவதற்கு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

p40

மாவட்ட கலெக்டரும் மாவட்ட வனச்சரக அதிகாரியும் நேரில் சென்று ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்து ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவை அனைத்தும் மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் பார்வைக்கு வைக்கப்படும். அதன்பிறகு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தி, அதில்தான் ஒப்புதல் வழங்கப்படும். இதில், ஏதாவது ஒன்றில் பிசகினால்கூட வனப் பகுதிக்குள் ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது.

ஆனால், ஈஷா தியான மையம் எந்த அனுமதியும் பெறாமல், கட்டடம், விளையாட்டு மைதானம், செயற்கை ஏரி, வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளை செய்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சத்குரு என்ன நினைத்தாரோ? ஏற்​கெனவே கட்டியுள்ள கட்டடங்களுக்கும், புதிதாகக் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் அனுமதி வேண்டும் என்று மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

இதையடுத்து, ஆய்வில் இறங்கிய வனச்சரக அலுவலகம் தனது அறிக்கையில், 'ஈஷா தியான மையம் அமைந்துள்ள பகுதி யானை வழித்தடங்களைக்கொண்ட அடர்ந்த வனப் பகுதி. அங்கு கட்டடங்கள் கட்டுவது விதிமுறைகளுக்கு மாறானது. எனவே, உடனே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அறிக்கை அளித்தது. அத்துடன் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றும் ஈஷா தியான மையத்துக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது.

 p40b

மாறாகக் கட்டடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்த படிவத்தைத் திரும்பக் பெற்றுக்​கொள்கிறோம் என்று ஈஷா தியான மையம் மனுச் செய்கிறது. விதிமுறைகளைப் பின்பற்றச் சொன்னால், அதைச் செய்யாமல், அனுமதி கேட்ட விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தீர்வா?'' என்று கேட்டார்.

வெற்றிச்செல்வனின் மனுவைப் பரிசீலித்த, உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர், விதிமுறை மீறிய கட்டுமானங்கள் பற்றி உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு தமிழக அரசுக்கும் ஈஷா தியான மையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதேபோல, சிவராத்திரி விழா நடத்துவதற்கும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கடைசி நேரத்தில் மகாசிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு  மாவட்டக் கலெக்டரும், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும், வனத் துறை அதிகாரிகளும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதுகுறித்து, ஈஷா மைய மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேஷ், ''நாட்டில் பசுமை விழிப்பு உணர்வை ஏற்படுத்த, ஈஷா சார்பாக இதுவரை ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டும் வருகிறோம். பசுமைப் புரட்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஈஷாவுக்கு விருதுகளை வழங்கி இருக்கிறது. 1993-ல் கட்டடம் கட்ட ஆரம்பித்தபோது இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் இல்லை. அதன்பிறகு, விதிமுறைகள் இயற்றப்பட்டதும் இதுகுறித்து நோட்டீஸ் வந்தது. கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்திவிட்டோம். புதிய விதிமுறைப்படி கட்டடம் கட்டவும் திருத்தங்கள் செய்வதற்கும் விண்ணப்பிக்க உள்ளோம். எங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்'' என்றார்.

சிவராத்திரி முடிந்த பிறகும் தூக்கத்தைத் தொலைத்​திருக்கிறது ஈஷா.

- ஜோ.ஸ்டாலின்

 

நன்றி ஜுனியர் விகடன்

அன்று சுனாமி, இன்று பினாமி!

$
0
0

ffffffffffffff

புகழேந்தி தங்கராஜ்

ந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு மாதிரி ஒரு நயவஞ்சக நாட்டாமையை உலகில் எங்கே தேடினாலும் நீங்கள் பார்க்கமுடியாது. பக்கத்து வீட்டுப் பிரச்சினையில் தலையிடவே  மாட்டார்களாம், இந்த கண்ணியமான விஷக்கன்னிகள். பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியை அடித்தே கொன்றாலும், கதவை மூடிக்கொள்வார்களாம், சங்கு ஊதுகிற சத்தம் கேட்டபிறகுதான் கதவைத் திறப்பார்களாம். இந்த அளவுக்கு நாகரிகம் காக்கிற நபும்சகர்கள் இந்தப் பூவுலகில் வேறெங்காவது பிறப்பெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா நீங்கள்!

இலங்கையில் என்ன நடந்தாலும் அது உள்நாட்டுப் பிரச்சினை - என்று மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும், அந்தோணியும், சிதம்பரமும், சல்மான் குர்ஷீத்தும் நாடாளுமன்றத்தில் வாய் கிழிய வசனம் பேசினார்கள், பேசுகிறார்கள். அதே நாடாளுமன்றத்தில், அவர்கள் அத்தனைபேரும்  இருக்கும்போதே, 'விடுதலைப் புலிகளின் கடற்படையை அழித்தது இந்தியக் கடற்படைதான்' என்று குற்றஞ்சாட்டுகிறார் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. களிமண்ணில் செய்த கொழுக்கட்டைகள் மாதிரி, உட்கார்ந்திருக்கிறது காங்கிரஸ் கோஷ்டி.

யஷ்வந்த் பொய் சொல்கிறார்...

இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடவே மாட்டோம்...

விடுதலைப் புலிகளின் கடற்படையை அழிப்பதற்கு இந்தியப் படையைப் பயன்படுத்த, இந்தியப் படையென்ன இலங்கையின் கூலிப்படையா....

என்றெல்லாம் கேட்டு கதர்ச் சட்டைகள் கொதித்து எழுந்திருக்கவேண்டாமா? துர்நாற்றம் குடலைப் புரட்டும் நிலையிலும், சாக்கடைக்குப் பக்கத்தில் இருக்கிற டீக்கடையில் உட்கார்ந்து பட்டர் பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் உடலில் ரத்தம் ஓடுகிறதா... அல்லது வேறு ஏதாவது ஓடுகிறதா?

எங்கள் தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்றுகுவித்த இலங்கை, அதற்காக ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த 21 நாடுகள், எப்படிக் கொல்வதென்று திட்டம் வகுத்துக் கொடுத்த  திருட்டுப் புருஷன் இந்தியா, கொன்று முடிக்கும் வரை உலகின் கவனத்தை அந்த இனப்படுகொலை எட்டிவிடாதபடி பார்த்துக்கொண்ட ஐ.நா. சபை, இனப்படுகொலை முடியும்வரை தமிழகம் பொங்கியெழுந்துவிடாதபடி பார்த்துக்கொண்ட கருணாநிதி - இந்த ஐந்து படைகள்தான், ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்ற ஐந்தாம்படை.

இன்று இலங்கையைக் காப்பாற்ற முயல்கிறது இந்தியா... இந்தியாவை ஆளும் காங்கிரஸைக் காப்பாற்ற முயல்கிறார் கருணாநிதி... கருணாநிதியைக் காப்பாற்ற முயல்கிறார்கள் திருமாவளவனும் சுப.வீரபாண்டியனும்! நான் என்னுடைய முன்னாள் நண்பர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.... இனப்படுகொலைக்குத் துணைபோவதற்காகவே... அதை மூடி மறைப்பதற்காகவே உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் போய் திருவாரூர்த் தேர்  படுத்துக் கொண்டதை மறந்தே விட்டீர்களா?

'ராமச்சந்திராவில் 35 நாட்கள்' என்கிற அந்தத் திரைப்படம் தானே இந்த வசனகர்த்தாவின் பிற்காலத் திரைப்படங்களில் 35 நாள் ஓடிய ஒரே திரைப்படம்! அது ஒரு திட்டமிட்ட நாடகம் - என்று சுற்றிவளைக்காமல் நான் குற்றஞ்சாட்டுகிறேன். மரண வளையத்துக்குள் தமிழ் உறவுகள் அடைக்கப்பட்டபோது, மாஜி முதல்வர் திட்டமிட்டே மருத்துவ மனைக்குள்போய் ஒளிந்துகொண்டார் என்று திட்டவட்டமாகப் புகார் கூறுகிறேன். தமிழினத்துக்குக் கருணாநிதியை விட்டால் வேறு நாதியில்லை - என்று இன்று  வசனம் பேசும் நண்பர்களிடம் என்னுடைய இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்கு பதில் இருக்கிறதா?

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் - என்கிற கோரிக்கையுடன் 2009 தொடக்கத்தில் தமிழக வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்களே... திருமாவுக்கு நினைவிருக்கிறதா? அந்தப் போராட்டத்தை ஒடுக்க கருணாநிதி தலைமையில் இருந்த அரசு முயன்றதை திருமா மறந்துவிட்டாரா? நல்ல நோக்கத்துடன் வெள்ளையன் அறிவித்த அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த கெட்ட நோக்கத்துடன் கருணாநிதியின் காவல்துறை அவரைக் கைது செய்ததே... மறுக்க முடியுமா தோழர் திருமாவால்?

இனப்படுகொலை நடந்தசமயத்தில் இலங்கையையும் இந்தியாவையும் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தை நசுக்குவீர்கள், 4 ஆண்டு கழித்து, செய்த துரோகத்தின் நிழலிலிருந்து விடுபடுவதற்காக நீங்களே ஒரு கடையடைப்பு நடத்துவீர்கள் என்றால், நீங்கள் யாருடைய பினாமி? சுனாமி என்று நான் நினைத்த தோழர்களெல்லாம் இப்படி பினாமி ஆகிவிட்ட வேதனையில் தான் கேட்கிறேன் இந்தக் கேள்வியை!

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் - என்கிறது கருணாநிதியின் அறிவிப்பு. எந்த மத்திய அரசுக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்க முயல்கிறார்கள்?  எந்த மத்திய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் இருக்கிறார்களோ, அதே மத்திய அரசுக்கா? இப்படி ஒரு கேலிக்கூத்து இனிமேலும்  எதற்கு?

இதற்கு வேறு உள்நோக்கம் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது எனக்கு! லயோலா கல்லூரி மாணவத் தம்பிகளின் உண்ணாவிரதப் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும், தமிழகமெங்கும் 120 கல்லூரிகளில் உண்ணாவிரதப்போர் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு எழுச்சி சமீபத்தில் ஏற்பட்டதில்லை. மாணவர்கள் இப்படியெல்லாம் வியூகம் வகுப்பது டெசோவுக்கும், டெசோவை வழிநடத்தும் மத்திய அரசுக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மாணவர்களால் எழுச்சி ஏற்படும் என்பதை அறிந்தே, நிச்சயமாகத் தோல்வியடையக்கூடிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து,  ஈழப் பிரச்சினைக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லாதது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க டெசோ முயல்கிறதா - என்ற ஐயம் எழுகிறது இப்போது.

மார்ச் 12 பொதுவேலைநிறுத்தம் அரைவேக்காட்டுப் போராட்டமாக அரங்கேறியிருக்கிறது. 2009ல் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தார்கள் வணிகர்கள். இப்போதோ, கடைகளை மூடுங்கள் என்று அந்த வணிகர்களைக் கட்டாயப்படுத்த கடைவீதிகளில் ஊர்வலம் நடத்துகிறது தி.மு.க.

ஒருவேளை டெசோ நடத்திய போதுவேலை நிறுத்தம் தோல்வி அடைந்திருந்தால், அது டெசோவின் அரசியல் உள்நோக்கத்துக்குக் கிடைத்த தோல்வியே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கே எழுந்திருக்கிற எழுச்சிக்குக் கிடைத்த தோல்வி அல்ல! இதை, ஈழத் தமிழ் உறவுகளும் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்களும் உணர்ந்து கொள்ளவேண்டும். எனக்கென்னவோ, டெசோவில் கோதபாய ராஜபட்சேவையும் சேர்த்துக் கொண்டால், அது பரிபூரணமான  பரிணாமம் பெறும் என்று தோன்றுகிறது. (முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்கள், இனமான ஆசிரியரோடு கலந்துபேசி இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கவேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.)

மத்திய அரசுக்கு அழுத்தம் தரவே  போராட்டம் - என்று தானே அறிவித்தார்கள்! கடைகளை மூடவைப்பதன்மூலம் மட்டுமே அந்த அழுத்தத்தைத் தந்துவிடமுடியும் என்று நினைத்தார்களா? சமீபகாலமாக 'உங்களுடைய கோரிக்கைகள் சுலபமாக  நிறைவேறக் கூடியவையாக இருக்கவேண்டும்' என்று போகிற இடமெல்லாம் மாணவர்களுக்குப் புத்தி புகட்டும் தோழர் திருமா, கடைகளை மூடவைப்பது மட்டும்தான் எளிதாகச் சாதிக்கக் கூடியது - என்கிற அரிய ஆலோசனையை டெசோ கூட்டத்தின் தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டாரா... தெரியவில்லை! (பேரன்புக்குரிய தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே! உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்பதாயிருந்தால், உங்கள் கோரிக்கைகள் என்ன என்று தோழர் திருமாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டிவிடுங்கள். எந்தெந்தத் தீர்மானம் எளிதாக நிறைவேறும் என்பதை - ஈழப்பிரச்சினையில் வன்னியரசைப் போல 100 மடங்கு அக்கறை கொண்ட தோழர் ரவிக்குமார் போன்றோர்மூலம் திருமா உங்களுக்குத் தெரியப்படுத்துவார் என்பதை இதன்மூலம் உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்!)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசின் அலுவலகங்கள் இருக்கின்றன. சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் என்று எக்கச்சக்கமான மத்திய அரசு வளாகங்கள் சென்னைக்குள்   இருக்கின்றன. தென்னக ரயில்வே அலுவலகம், ரயில் பெட்டித் தொழிற்சாலை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள்  இருக்கின்றன. அங்கெல்லாம் திரண்டு முற்றுகையிட்டுப் போராடுவதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியுமா.... காய்கறிக் கடைகளையும் மளிகைக்கடைகளையும் மூடும்படி வற்புறுத்துவதன் மூலம்  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியுமா.... என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு திருமாவையும் சுப.வீயையும் கோபாலபுரம் கொண்டுபோயிருப்பது கொடுமையானது. ஒருவேளை, 'இலக்கை எளிமையாக்கு, இளிச்சவாயர்களைத் தாக்கு' - என்கிற திருமாவின் நவீன பார்முலாவை டெசோ கடைப்பிடிக்கிறதா... திருமாவுக்கே வெளிச்சம்!

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்ததால்தான், 2009 ஜனவரி 29 அன்று, தீக்குளிப்பதற்கான களமாக சென்னை சாஸ்திரி பவனைத்  தேர்ந்தெடுத்தான் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்.  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வழிவந்த  தோழர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக  ஒவ்வோராண்டும் ஜனவரி 29 அன்று, அதே சாஸ்திரி பவன் முன்தான் போராடுகிறார்கள், தங்கை இசைமொழியின் தலைமையிலும்  வேலுமணி தலைமையிலும்! மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கும் நாம் தமிழர் தோழர்கள் ஆவல் கணேசன் தலைமையில் பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை முன் தான் போராடச் செல்கிறார்கள்.

இப்படியெல்லாம் இடங்கள் இருப்பது டெசோ நண்பர்களுக்குத் தெரியவே தெரியாதா? அல்லது அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார்களா? கருஞ்சட்டைத் தமிழர்களும் எழுச்சித் தமிழர்களும் இதற்கு அறிக்கை மூலம் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லை. வீரமணியிடம் விளக்கினால், அவர் ஒரு போஸ்டராகவே போட்டு ஒட்டிவிடுவார்! (ஆசிரியர் எழுதிய, 'போஸ்டர் ஒட்டுங்கள்... வண்டியை ஓட்டுங்கள்...' பகுத்தறிவு நூலை ஒருமுறை படிச்சிப் பாருங்க  பிரதர்ஸ்!)

தமிழருக்கு நீதி கிடைக்கப் போராடும்போதுகூட சேர்ந்து நிற்காவிட்டால் எப்படி - என்பது மூத்த தி.மு.க. தோழர் ஒருவரின் கேள்வி. ராஜபட்சேவுடன் சேர்ந்து நின்று கொன்ற உங்களுடன் மற்றவர்கள் எப்படி சேர்ந்து நிற்க முடியும்? உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் மான அவமானமெல்லாம் இருக்கவே கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

அன்று இனப்படுகொலையைத் தடுக்க நடந்த கடையடைப்பை ஒடுக்க முயல்வீர்கள்... ஒன்றரை லட்சம் பேரின் உடல்கள் புல்டோசரால் தோண்டிப் புதைக்கப்பட்ட பிறகு அவர்களுக்காக இன்று ஒரு கடையடைப்பை நீங்களே நடத்துவீர்கள்.... இப்போது  அடைக்காதவர்களைத்  தமிழின விரோதிகள் என்பீர்கள்! அப்படியானால், அன்று அவர்களை அடைக்கவிடாமல் தடுத்த நீங்கள் யார்?

உங்கள் அகராதியில் 'இனப்படுகொலை' என்கிற வார்த்தையே இருப்பதாகத் தெரியவேயில்லையே! போர்க்குற்றம் - என்கிற வார்த்தையைத் தவிர வசனகர்த்தாவுக்குப் பிடித்த வேறு வார்த்தை எது? உலகே - 'இனப்படுகொலை' என்று சொன்னாலும், மனித உரிமைமீறல், போர்க்குற்றம் - என்றுதானே பேசுகிறது கோபாலபுரம்! இலங்கை விரும்பும் வார்த்தையை இந்தியா திணிக்கிறது, இந்தத் திணிப்பை டெசோ ஏற்கிறது - என்பதைத் தவிர வேறென்ன நடக்கிறது? இப்படி மத்திய அரசு கொடுக்கும் அழுத்தங்களை எல்லாம் ஏற்று ஆட்சிக் கட்டிலிலே ஒட்டிக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பீர்கள்?

எதை மூடி மறைக்க இன்றுவரை நீங்கள் முயல்கிறீர்களோ, அந்த இனப்படுகொலையை, சேனல் 4 என்கிற ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறது.  முதல் முதலாக அப்படியொரு ஆதாரம் வெளியானபோது, கண்களைக் கட்டி போராளிகள் சுடப்படும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து - 'பழைய படம் மாதிரி தெரிகிறது' என்று தன்னுடைய மேதாவிலாசத்தைப் பதிவு செய்த புகைப்படத் தொழில்நுட்ப முதுநிலை ஆராய்ச்சியாளராயிற்றே உங்கள் தலைவர்! அந்தப் படத்தைப் பற்றி கோதபாய ராஜபட்சே தெரிவித்த கருத்தும், உங்கள் தலைவர் தெரிவித்த கருத்தும், அவர்கள் இருவரும் புகைப்படக் கலை அறிஞர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியதே...  அதை மறந்துவிட்டோமென்று நினைக்கிறீர்களா?

இப்போது, பொதுவேலை நிறுத்தத்துக்கான சுவரொட்டியில் ஒருபுறம் முத்தமிழறிஞரின் படத்தையும், மறுபுறம் சேனல் 4 வெளியிட்ட பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படத்தையும் வெட்கமேயில்லாமல் வெளியிட்டிருக்கிறீர்களே... இதற்கு என்ன அர்த்தம்... முன்பு துப்பியதை இப்போது திருப்பி எடுத்து விழுங்கிவிட்டீர்கள் என்றா! பரவாயில்லை... பாலச்சந்திரன் படத்துடன் தன்படம் போட்டு வியாபாரம் செய்து அரசியல் வியாபாரம் செய்கிற உங்கள் தலைவரை - தமிழினத்தின் தந்தை - என்றோ, ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் சந்தை - என்றோ, உங்களுக்குப் பிடித்தமான விதத்தில் கூச்சமேயில்லாமல் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்.. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை!  பிரபாகரன் என்கிற ஓர் உன்னதமான வீரனின் படத்தைப் போட்டு பல்பொடி வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒருவர் அருள்தந்தை என்றே அழைக்கப்பட்டதை நாங்கள் பொருட்படுத்தினோமா என்ன!

நன்றி தமிழக அரசியல் 

வெந்து தணியட்டும் காடு.

$
0
0

பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட ஆதாரங்ளை சேனல் 4 வெளியிட்ட நாள் முதலாகவே தமிழகம் கொதிக்கத் தொடங்கியது.  இந்த கொதிநிலைக்கு வடிவம் கொடுத்து போராட்டத்தைத் தொடங்கியவர்கள் லயோலா கல்லூரி மாணவர்கள்.

04-balachandran13-600

திலீபன், பிரிட்டோ, ஷாஜிபாய், ஆண்டனி, மணிகண்டன், சண்முகப்ரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டுபேர், தொடங்கிய அந்தப் போராட்டம், மயங்கிக் கிடந்த மனசாட்சிகளை உலுக்கியது.   லயோலா கல்லூரி மாணவர்களின் அந்தப் போராட்டம், மத்திய அரசை உலுக்கியதோ இல்லையோ, தமிழகத்தில் டெசோ நாடகக் கம்பெனி வைத்து நடத்தும், டெசோ குழுவினரை அச்சுறுத்தியது.  ஈழத்தமிழர் பிரச்சினைகளைக் கையில் எடுத்து அதன் மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கலாம் என்று, பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த டெசோ நாடகக் குழுவினர், மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றால், தங்கள் நாடகக் குழுவை இழுத்து மூட வேண்டும் என்று கலக்கமடைந்தனர்.

_MG_3093

டெசோ நாடகக்குழுவின் முன்னணி நடிகர்களான தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்ளைச் சந்தித்து போராட்டத்தைக் குலைக்கும் அத்தனை வேலைகளிலும் ஈடுபட்டனர்.  சிறிது காலம், சிபிஐ விசாரணை, கனிமொழியோடு மோதல் என்று தன் நாடகக்குழுவிலிருந்து விலகியிருந்த போலிப் பாதிரி ஜெகத்கஸ்பர் களத்தில் இறங்கினார்.  சுப.வீரபாண்டியன், ஜெகத்.கஸ்பர், தொல்.திருமாவளவன், கனிமொழி ஆகியோரின் திட்டமிட்ட சதியால் முழு வீச்சோடு தொடங்கிய போராட்டம், அவசர கதியில் முடிக்கப்பட்டது.

டெசோ நாடகக் குழுவினர் மாணவர் போராட்டத்தை முடக்கி விட்டதாக இறுமாப்பில் இருந்தார்கள்.  இனி ஈழப் பிரச்சினை நமக்கு மட்டுமே உரியது என்று ஊடகங்களில்  வாய்கிழிய பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் அக்கினிக் குஞ்சு என்பதை மிகத் தாமதமாகத்தான் உணர்ந்தார்கள் டெசோ நாடகக் குழுவினர். அந்த மாணவர்கள் தொடங்கி வைத்த பொறி, காட்டை வெந்து தணிய வைக்கும் வல்லமை படைத்தது என்பது தமிழகம் முழுக்க மாணவர்களிடையே பரவிய போராட்டங்களின் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.

TN_Thiruppoor_14_03_2013_09

தமிழகமெங்கும் மாணவ சமுதாயம் கொதித்தெழுந்தது.  உண்ணாவிரதம், மறியல், என்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.   இந்த எழுச்சி, 2008 இறுதியில் “போரை நிறுத்து” என்ற ஒற்றைக் கோரிக்கையோடு எழுந்த போராட்டங்களை ஒத்திருந்தது.  ஜனவரியில் முத்துக்குமார் ஏற்படுத்திய எழுச்சிக்கு நிகரானதாக இருந்தது.  2008-2009 போராட்டங்களைப் போல அல்லாமல், தற்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் தெளிவான கோரிக்கை இல்லாமல் ஒரு குழப்ப நிலையில் இருந்தது.  அமெரிக்கா முன்னெடுக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், அந்தத் தீர்மானம், இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதால், இந்தியாவே ஒரு புதிய தீர்மானத்தை எடுத்து வர வேண்டும் என்று ஒரு தரப்பும் கருத்துக்களை முன்வைக்க, மாணவ சமுதாயம் சற்றே குழம்பியிருந்தது என்னவோ உண்மை. நாளடைவில், போர்க்குற்றத்துக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என்று அந்த கோரிக்கைகள் தெளிவான திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கின.

படிப்பினைகள் மற்றும் சமாதானக் குழு (Lessons Learnt and Reconciliation Commission) நடத்திய விசாரணை அறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் அமல்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானம், இலங்கை அரசுக்கு உதவி செய்யவே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  கொலைகாரனையே நீ கொலை செய்தாயா என்று விசாரணை நடத்தச் சொல்வதற்கு ஒப்பானதே இது.  இலங்கை மீதான போர்க்குற்றங்களை ஒரு பாரபட்சமற்ற சர்வதேச சமூகம் விசாரிக்க வேண்டும், அந்தத் தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்பதே சரியான கோரிக்கையாக இருக்க முடியும்.  தற்போது இந்த கோரிக்கைகள் வலுப்பெற்று ஒரு திசையை நோக்கி பயணிக்கின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டங்களை சீர்குலைக்க திமுக தலைவரும், அவரது டெசொ நாடகக் குழுவினரும், முழு வீச்சில் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.  மாணவர்கள் தெளிவாக, அரசியல் தலைவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொண்டாலும், இந்த மாணவர் எழுச்சியை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.

2008 மற்றும் 2009ல் நடந்த போராட்டங்களை பின்னுக்குத் தள்ளி, முடக்கி சீர்குலைத்த சதித்திட்டங்களில், டெல்லியில் உள்ள மலையாளி மற்றும் வட இந்திய அதிகாரிகளின் பங்கு மிகப் பெரியது.   எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் என்று அந்த அதிகாரிகளின் பட்டியல் மிக நீண்டது.

தற்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தையும் சீர்குலைப்பதற்கென்று, மத்திய உளவுத்துறை மிகத் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.   இப்போராட்டத்தை ஒவ்வொரு தளத்திலும், முடக்கவும், சீர்குலைக்கவும் மத்திய உளவுத்துறை முயற்சிகள் எடுத்து வருகிறது. மாணவர் போராட்டம் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்ததும், தலைமைச் செயலகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  அந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.

அந்த அறிக்கையில், மாணவர் போராட்டங்களை தொடர விடுவது, அரசுக்கு நல்லதல்ல, தீவிரமான சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், இந்தப் போராட்டத்தை தொடர விடாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று அறிக்கை அளித்துள்ளார். மேலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தால் அகில இந்திய அளவில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும், தமிழக கல்லூரி மாணவர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டால் கூட, அது ஈழத் தமிழ் மக்களுக்காக நடந்த தற்கொலை என்று திரித்து விடுவார்கள், இது போலத் தொடர் தற்கொலைகள் நடக்க பெரும் வாய்ப்பு இருக்கிறது என்றும்  அது தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்றும் அறிக்கை அளித்தார்.

ஜெயலலிதா அரசை தொடர்ந்து முட்டாள் அரசு என்று விமர்சித்து வருவதற்கு இதுதான் காரணம்.  அரசியல்வாதிகளை விட, கட்சிக் காரர்களை விட, ஜெயலலிதா அதிகாரிகளையே நம்புவார்.  படித்த அதிகாரிகளின் வஞ்சகத்தை சரியாக உணராதவர் ஜெயலலிதா.  இதன் காரணமாகவே, தமிழக உளவுத்துறை ஐஜி, அம்ரேஷ் பூஜாரியின் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா.   பூஜாரியின் அறிக்கையை ஏற்று, உடனடியாக கல்லூரிகளை மூட உத்தரவிட்டார்.  முதலில் கலை அறிவியல் கல்லூரிகள், அதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரிகள் என்றும் இறுதியாக பொறியியல் கல்லூரிகள் என்றும் அனைத்துக் கல்லூரிகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.

இது வரை நடந்துள்ள மாணவர்களின் போராட்டம் வன்முறைச் சம்பவங்கள் இல்லாமல்தான் நடைபெற்றுள்ளது.   பெரும்பாலான மாணவர்கள், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களையே கையாண்டார்கள். இது வரை நடந்த மாணவர் போராட்டங்களில் எந்த இடத்திலும் ஜெயலலிதா விமர்சிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN_Madurai_14_03_2013_14

இப்படி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் நடைபெறும் இந்தப் போராட்டங்களின்  வீச்சால் பாதிக்கப்படப் போவது நிச்சயம் காங்கிரஸ் மற்றும் திமுக மட்டுமே. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை, மிகப்பெரிய துரோகிகளாகவே பார்த்து வருகின்றனர்.   இந்தப் போராட்டங்கள் வலுப்பெற வலுப்பெற, இது அந்த இரு கட்சிகளின் மீது கடும் வெறுப்பையும் கோபத்தையும் உண்டு பண்ணும்.  தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக காங்கிரஸ் மீதான இந்த வெறுப்பும் கோபமும், நிச்சயமாக அதிமுகவுக்கு சாதகமாகவே அமையும்.   சட்டம் ஒழுங்கு சீர்கெடாத வகையில் இந்த போராட்டத்தை தன்வசப்படுத்தி, தனக்கு ஆதாயம் தரும் வகையில் ஜெயலலிதா மாற்றியிருக்க வேண்டும்.  ட்விட்டரிலும், முகநூலிலும் This is atrocious…   Students should only read and not agitate…. Tamil Nadu should not dictate Indian foreign policy என்றெல்லாம் கருத்து கூறும் கருத்து கந்தசாமிகள், பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வெற்றி தேடித் தரப்போவதில்லை.  மாறாக, இன்று சிங்கள அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று பரவலாக உருவாகியிருக்கும் கருத்தாக்கத்தை, வாக்குகளாக மாற்ற ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்க வேண்டும்.  ஆனால், அதிகாரிகளை நம்பிய ஜெயலலிதா, ஒரு அற்புதமான வாய்ப்பை கோட்டை விட்டார்.

தமிழக அரசின் இப்படிப்பட்ட தவறான முடிவுக்கு காரணமான அந்த காவல்துறை தமிழக அரசின் உளவுத்துறை ஐ.ஜி அம்ரேஷ் பூஜாரி.  யார் இந்த அம்ரேஷ் பூஜாரி ?  ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பார்ப்பனர். 1991ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர்.   பார்ப்பனியத்தின் உச்சமான அகம்பாவம் முழுவதையும் தன் தலையில் சேர்த்து வைத்துத் திரியும் தலைக்கனம் பிடித்த தறுக்கன்தான் இந்த பூஜாரி.

Amresh_Poojari_2

தலைக்கனம் பிடித்த தறுக்கன்

,ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மத்திய உளவுத்துறையில் இருந்தவர்.   மீண்டும் மத்திய உளவுத்துறை பணிக்கு செல்ல வேண்டும் என்ற கனவு உள்ளவர்.  வட இந்திய அதிகாரிகளுக்கே உரிய அத்தனை லாபிகளையும் கற்றுத் தேர்ந்தவர்.

இவர் 2002ம் ஆண்டு முதல் மத்திய உளவுத்துறையில் (Intelligence Bureau) பணி புரிந்தார்.   அத்துறையில் Chief Immigration Officer மற்றும்  Foreign Regional Registration Officerஆக பணியாற்றினார்.  பின்னாளில், மத்திய உளவுத்துறையின் தென்னிந்திய இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, இவரை மாநில உளவுத்துறையின் ஐஜியாக நியமித்தார் ஜெயலலிதா.  ஒரு அதிகாரி, தான் பணியாற்றும் அரசுக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும்.  தற்போது மாநில அரசில் பணியாற்றும் பூஜாரி, ஜெயலலிதாவுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால், இவர் மத்திய உளவுத்துறையோடு உள்ள நெருக்கத்தால், மத்திய அரசுக்கு விசுவாசமாகத்தான் இன்று வரை பணியாற்றி வருகிறார்.

ஹ்யுண்டாய் நிறுவனம், கார் உற்பத்தியை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கியதில் இருந்தே திருட்டுத்தனம்தான். 1996ல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டது.  1998ல் இந்தத் தொழிற்சாலையின் சான்ட்ரோ கார் சந்தைக்கு வந்தது. இந்தக் கார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு காருக்கும் திமுக தலைமைக்கு 2 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது.  இந்த ஹ்யுண்டாய் கார் நிறுவனம், இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கையில், உற்பத்தி விலையை விட குறைந்த வகையில் விலை நிர்ணயம் செய்து, இதன் மூலம் பெருமளவில் சுங்கவரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது.  இணைப்பு. 2008ம் ஆண்டு கணக்குப்படி, ஹ்யுண்டாய் நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால், ஹ்யுண்டாய் நிறுவனத்துக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இந்த வரி ஏய்ப்பு விசாரிக்கப்படவேயில்லை.

இந்த ஹ்யுண்டாய் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளில் பெரும்பாலானோர், கொரியர்கள்.  இந்தியர்களை, அசெம்ப்ளி லைனில் நட், போல்ட் முடுக்குவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் இந்த நிறுவனம், அதிகாரிகள் அளவில் கொரியர்களை மட்டுமே நியமித்திருந்தது.   எல்லா நாடுகளிலும், வேலை நிமித்தம் “வொர்க் பர்மிட்டுகள்” எடுக்க அதிக அளவில் பணம் செலுத்த வேண்டும். இந்தியாவிலும், வெளிநாட்டினருக்கு, இது போன்ற விசாக்கள் வழங்கப்படும்.  இந்த விசாக்கள் இரண்டு வகைப் படும்.  ஒரு விசா “‘B’ Visa” என்று அழைக்கப்படுகிறது.  மற்றொரு விசா ‘E’ Visa” என்று அழைக்கப்படுகிறது.   இந்தியாவில் தொழில் தொடங்க வருபவர்கள்,  தொழில்நுட்ப நிபுணராக வருபவர்கள், இந்திய தொழிலதிபர்களோடு கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட வருபவர்கள்,  தொழில் கண்காட்சி நடத்த வருபவர்கள், தொழில் பேச்சுவார்த்தை நடத்த வருபவர்கள்,  தொழிற்சாலை கட்டுமானத்தை மேற்பார்வை செய்ய வருபவர்கள், போன்றவர்களுக்கு “பி” விசா வழங்கப்படும்.   இதற்கான கட்டணம் குறைவு. வேலை பார்ப்பதற்காக வருபவர்களுக்கு “ஈ” விசா மட்டுமே வழங்கப்படும்.  இதற்கு கட்டணம் அதிகம்.

அம்ரேஷ் பூஜாரி, தலைமை இம்மிகிரேஷன் அதிகாரியாக சென்னையில் பணியாற்றியபோது, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்ற வந்த 600க்கும் மேற்பட்ட ஹ்யுண்டாய் கொரிய நாட்டு ஊழியர்களுக்கு, பி விசா வழங்கி, அவர்களை இங்கேயே பணியாற்ற விட்டு, அவர்களுக்கு பெருமளவில் கட்டணத்தை சேமித்துக் கொடுத்தார் அம்ரேஷ் பூஜாரி.   இதற்கு கைமாறாக ஒரு பெரும் தொகை அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையில் அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 கோடி மதிப்பிலான ஒரு வீட்டை பினாமி பெயரில் வாங்கியுள்ளார்.  அந்த வீட்டின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  இம்மிக்ரேஷன் ஊழியர்கள் அந்த வீட்டின்  newsavukku@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும். உரிய விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்படும். ஹ்யுண்டாய் நிறுவனம், சென்னை மாநகர காவல்துறைக்கு 100 ஹ்யுண்டாய் கார்களை இலவசமாக கொடுத்ததெல்லாம் லஞ்சத்தின் ஒரு பகுதியே.

சென்னை மத்திய உளவுப்பிரிவில் Chief Immigration Officerஆகவும், Foreign Regional Registration Officerஆகவும் பணியாற்றியபோது, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியோடு அம்ரேஷ் பூஜாரிக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது என்று கூறுகிறார்கள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள்.   இலங்கைத் துணைத்தூதரக அதிகாரிகள், தரகு வேலை செய்வதில் எப்படிப்பட்ட சமர்த்தர்கள் என்பதை, தமிழகமே அறியும்.  அந்தத் தூதரக அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்ல  வேண்டியதில்லை.

Untitled-1

தலைமை இம்மிக்ரேஷன் அதிகாரியாக பணியாற்றிய பூஜாரி லஞ்சம் வாங்கும் பாணியே அலாதியானது என்கிறார்கள்.    சின்ன லெவலில், யாரிடமும் பணம் வாங்க மாட்டார்.   தனக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளிடம், மிகவும் கண்டிப்பான அதிகாரி போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்வார்.

விமான நிலையத்தைப் பொறுத்தவரை, வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு இம்மிக்ரேஷன் சோதனை என்பது கட்டாயமானது.  இது விமான பணியாட்களுக்கும், விமானிகளுக்கும், பயணிகளுக்கும் பொறுந்தும்.  எந்த விமானமாக இருந்தாலும், அந்த விமானம் கிளம்பும் அரை மணி நேரத்துக்கு முன்னதாக இம்மிக்ரேஷன் சோதனையை முழுமையாக முடித்து விட வேண்டும்.  விமான ஓட்டிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக இம்மிக்ரேஷன் முடித்து விட வேண்டும் என்பது விதி.   ஆனால் நடைமுறையில், இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற இயலாது என்பதால், கடைசி 10 நிமிடங்கள் வரை, பயணிகளையும், விமானிகளையும் அனுமதிப்பார்கள்.

திடீரென்று ஒரு நாள் அதிரடி சோதனை என்று நேரில் வருவார் பூஜாரி.   பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் என்றால் அந்த விமானத்தின் இம்மிக்ரேஷன் சோதனை முடிந்து விட்டதா என்று சரிபார்ப்பார்.  கடைசி நிமிடம் வரை இம்மிக்ரேஷன் சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த பூஜாரி, அந்த விமானம் கிளம்பக் கூடாது என்று உத்தரவிடுவார்.  விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் கிளம்பத் தாமதமானால், லட்சக்கணக்கில் தண்டக் கட்டணம் செலுத்த வேண்டும்.   இதனால் விமான நிறுவன நிர்வாகிகள், கதறிக் கொண்டு பூஜாரியை அணுகுவார்கள்.   பூஜாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததும், அதிரடி சோதனைகளை கைவிடுவார்.  இதே போல எந்த விமான நிறுவனம், இவரைக் கவனிக்கத் தவறுகிறதோ, அந்த நிறுவனத்தின் விமானத்தை அதிரடி சோதனைக்கு உள்ளாக்குவார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மண்டியிட்டு, பணிந்து பூஜாரிக்கு தேவையான பூஜைகளைச் செய்ததும், அவர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பார் அம்ரேஷ்.

பூஜாரி தலைமை இம்மிக்ரேஷன் அதிகாரியாக பணியாற்றியபோது, அவருக்குக் கீழே பணியாற்றியவர்களை வைத்து, இரண்டு சிறப்பு பிரிவுகளை உருவாக்கி வைத்திருந்தார்.  சிறப்புப் பிரிவுகள் என்றால், அது அலுவல் ரீதியான சிறப்புப் பிரிவுகள் அல்ல.  பூஜாரியின் சிறப்புப் பிரிவுகள்.

ஸ்ரீபதி மற்றும் அய்யப்பன் ஆகியோர் ஒரு சிறப்புப் பிரிவு.   இந்த அய்யப்பன், சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தவர்.  மற்றொரு சிறப்புப் பிரிவு, கதிர்வேல் மற்றும் கல்யாணசுந்தரம்.  இந்த கல்யாண சுந்தரம், தற்போது சென்னை மாநகரக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில், (Intelligence Services) சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

சென்னைக்கு வரும் வெளிநாட்டவர்கள் அத்தனை பேருக்கும் முழுமையான விசா இருக்கும் என்று சொல்ல இயலாது.   சென்னையில் தங்கியிருக்கும் சில வெளிநாட்டவர்களிடம் விசா காலாவதி ஆகியிருக்கும் அல்லது உரிய விசா இல்லாமல் இருக்கும். சிலர், இந்தியாவுக்கே வரமுடியாத அளவுக்கு Deport செய்யப்பட்டிருப்பார்கள்.  இப்படிப்பட்டவர்கள் எப்படியாவது இந்தியாவுக்குள் நுழைந்து, சென்னையில் திருட்டுத்தனமாக தங்கியிருப்பார்கள்.   இது போன்றவர்களின் முகவரிகளைத் தேடியெடுத்து, அவர்களைக் கண்டுபிடிப்பதே இந்த இரண்டு சிறப்புப் படைகளின் வேலை.  இப்படி கண்டுபிடிக்கப்படுபவர்களை, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு அறிக்கையோடு ஒப்படைப்பதுதான், இம்மிக்ரேஷன் அதிகாரிகளின் வேலை.   காவல்நிலையத்தில் அவர்கள் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள்.

ஆனால் இந்த சட்டபூர்வமான வழிமுறையை பூஜாரியின் சிறப்புப் படை பின்பற்றாது.  இருப்பதிலேயே பெரும் பணத்தோடு, சட்டவிரோதமாக சென்னையில் தங்கியிருக்கும் பணக்கார வெளிநாட்டினரைக் கண்டு பிடித்து, நேராக இம்மிக்ரேஷன் அலுவலகத்துக்கு தூக்கி வருவார்கள்.  வசமாக ஒரு தொகையை வசூல் செய்த பிறகு, எந்த வழக்கும் இல்லாமல் விட்டு விடுவார்கள்.   இதுதான் பூஜாரியின் பிரத்யேகமான வசூல் முறை….

இப்படிப்பட்ட வசூல் ராஜா ஐபிஎஸ்ஸை தமிழகத்திலேயே மிகவும் முக்கியமான உளவுத்துறை ஐஜியாக நியமித்திருந்தால், இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

பூஜாரியின் அகம்பாவத்துக்கும், ஆணவத்துக்கும் மத்திய உளவுத்துறையில் ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறுகிறார்கள்.  சென்னை விமான நிலையத்தில் இரவு முழுவதும் வெளிநாட்டு விமானங்கள் கிளம்பியபடி இருக்கும்.  ஒவ்வொரு ஷிப்டுக்கும் 6 இம்மிக்ரேஷன் அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும்.  மூன்று உதவி இம்மிக்ரேஷன் அதிகாரிகள்,  இரண்டு இம்மிக்ரேஷன் அதிகாரிகள் மற்றும் ஒரு துணை தலைமை இம்மிக்ரேஷன் அதிகாரி ஆகியோர் எப்போதும் பணியில் இருக்க வேண்டும்.   இரவு முழுவதும் விழிக்க வேண்டும் என்பதால், இரண்டு அதிகாரிகள் பல நேரங்களில் சுழற்சி முறையில் தூங்கி விட்டு மற்றவர்களை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள்.  இது விமான நிலைய இம்மிக்ரேஷனில் வழக்கமான ஒன்று.

ஒரு நாள் பூஜாரி நள்ளிரவில் திடீரென்று சோதனைக்கு வருகிறார்.  அப்போது பணியில் இருக்க வேண்டிய இருவர் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.  நேராக அந்த நபர் உறங்கிய அறைக்குச் சென்று, போர்வையோடு உறங்கிக் கொண்டிருந்த அதிகாரியை தன் ஷு காலாலேயே தாறுமாறாக மிதித்துள்ளார்.   மிதி வாங்கிய நபரோ, சஸ்பெண்ட் செய்யாமல் மிதியோடு விட்டாரோ என்று துடைத்துக் கொண்டு சென்றுள்ளார்.   ஒரு ஊழியர் இது போன்ற தவறுகளில் ஈடுபடுகையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் ஒரு அதிகாரி செய்ய வேண்டியது.  அதை விடுத்து விட்டு ரவுடியைப் போல நடந்து கொள்வது, அந்த நபரின் இழிவான மனநிலையையே காட்டுகிறது.

இப்படிப்பட்டவர்தான் அம்ரேஷ் பூஜாரி.   பூஜாரி போன்ற அதிகாரிகளை நம்பும் ஜெயலலிதாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.  சில காலம் முன்பு வரை, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மற்றொரு ஒரிஸ்ஸா அதிகாரியான அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டார்.  தேபேந்திரநாத் சாரங்கி போன்ற திருடன் யாரைப் பரிந்துரைப்பார் ?  மற்றொரு திருடனைத்தானே ?  தேபேந்திரநாத் சாரங்கியை தலைமைச் செயலகத்தை விட்டு விரட்டியடித்த ஜெயலலிதா, அவர் பரிந்துரைத்த நபரையும் அல்லவா விரட்டியிருக்க வேண்டும் ?

தற்போது உளவுத்துறையின் டிஜிபியாக உள்ள ராமானுஜம் போன்ற உளவு வேலையில் சிறந்த அதிகாரியை தமிழகம் பார்த்தது இல்லை.  அவர் எப்படி இது போன்ற மோசமான தவறுகளை அனுமதிக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. எல்லோரையும் நம்பி ஏமாறும் ஜெயலலிதாவுக்கு, அம்ரேஷ் பூஜாரி போன்ற திருடர்களைப் பற்றி விளக்கிச் சொல்லி, உரிய அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு ராமானுஜத்திற்கு நிச்சயமாக இருக்கிறது.

புத்த பிக்குகள் மீது நடந்த தாக்குதலின் பின்னணியிலும் மத்திய உளவுத்துறையே இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.  புத்த பிக்குகள் வருகை தரும் விபரத்தை உணர்ச்சி வசப்படக்கூடிய தமிழ் அமைப்புகளிடம் தெரிவித்து, அந்த தாக்குதல் நடப்பதற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்கி, இதனால் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியும், மாணவர் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் ஊடகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மத்திய உளவுத்துறை தொடர்ந்து கையாண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1363501685Thanjai-butha

ராமானுஜத்தின் அனுபவத்துக்கு, இது போன்ற சூழல்களை எப்படிக் கையாள வேண்டும் என்று நன்கு தெரியும்.  உரிய முறையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புவோம்.

1965க்குப் பிறகு, தமிழகத்தில் மாணவ சமுதாயம் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்திருக்கிறது.  கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும், போராட்டம் ஓயாமல் தொடர்ந்த வண்ணம் இருப்பது மிக மிக மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம்.   இந்தப் போராட்டம் சரியான திசையில் இல்லை…. மாணவர்களுக்கு போதுமான அரசியல் அறிவு இல்லை என்றெல்லாம் எழும் விமர்சனங்கள் புறந்தள்ளப்பட வேண்டியன.  தாமதமாகவேனும் கிளர்ந்தெழுந்துள்ள மாணவச் செல்வங்கள், ஒவ்வொரு அரசியல் கட்சியையும் வெட்கப்பட வைத்துள்ளனர்.  எருமை மாட்டின் மீது மழை பெய்தது போலவே எப்போதும் இருக்கும் கருணாநிதியையே, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வைத்திருக்கும் இந்த மாணவச் செல்வங்களின் போராட்டம் மகத்தானது.     .

அக்கினிக் குஞ்சான இந்த மாணவர்களின் போராட்டங்களால் வெந்து தணியட்டும் காடு….

மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

$
0
0

மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டதை அடுத்து, இன்று அதிகாலை முதல், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மற்றும் அவரது நண்பர் ராஜா சங்கர் உள்ளிட்டோர் வீடுகளில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லீம்களின் நிலை.

$
0
0

இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

image

கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரம் தற்போது தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறிவிட்டதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?பதில்: இலங்கைத் தமிழர் விவகாரம் ராஜீவ் படுகொலைக்கு முன்பு, பின்பு என இரு வகையாகப் பார்க்கப்பட்டது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மவுனம் காத்தார்கள்.

ஆனால் 2009ஆம் ஆண்டில் நான்காம் கட்டப் போர் என சொல்லப்படும் கடைசிகட்டப் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள், கற்பழிப்புக்கு உள்ளானார்கள். குழந்தைகள் கூட குதறப் பட்டனர். எண்ணற்ற இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பதற, பதற கொலை செய்யப் பட்டனர்.
இதுதான் தமிழகத்தில் நிலைமை மாற காரணமாகியது. அதுவும் சேனல்&4 என்ற லண்டன் தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படங்களில் வெளியான காட்சிகள் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. குறிப்பாக, தமிழக மக்களைப் பதறச் செய்துவிட்டது.
இலங்கைத் தமிழர் விவகாரம் இப்போது முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என தமிழக மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. அதுவும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கரங்களிலிருந்து முன்னேறி மக்கள் கைகளுக்குப் போய்விட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் மாணவர்களின் போராட்டங்கள்.

கேள்வி: இவ்விஷயத்தில் இந்திய (நடுவண்) அரசின் நிலைப்பாடு புதிராக உள்ளதே... இது அண்டை நாட்டு விவகாரம் என்கிறார்களே...?

பதில்: முதலில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை ராஜீவ் படுகொலையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும். மத்தியில் அவர்கள்தான் ஆள்கிறார்கள். நான் குறிப்பிட்டதுபோல், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்பு உருவாகியுள்ள புதிய சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்ட காட்சிகள் தமிழகத்தை உலுக் கியுள்ளது. இது அண்டை நாட்டு பிரச்சனை எனக்கூறி ஒதுங்க முடியாது. முன்பு கிழக்கு பாகிஸ்தானில் (இன்று பங்களாதேஷ்) உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டபோது, அகதி களாக வங்காளிகள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவ்விவகாரத்தை இனி இந்தியா மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அந்நாட்டு விவகாரத்தில் துணிந்து தலையிட்டார்.  ‘முக்தி வாகினி’ என்ற புரட்சிப் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்து, ‘பங்களாதேஷ்’ என்ற நாடு உருவாக இந்தியா உதவியது. ‘திபெத்’ மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தபோது, ‘தலாய்லாமா’வுக்கு நேரு அடைக் கலம் கொடுத்தார்.
ஏன்? விடுதலைப்புலிகள், டெலோ, பிளாட் போன்ற தமிழ் ஆயுத அமைப்புகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்கவில்லையா? ராஜீவ் காந்தி இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதி களில் உணவுப் பொட்டலங்களை வீச சொல்ல வில்லையா? இப்போது மாலத்தீவின் அரசியல் குழப்பத்தில் தடையிடவில்லையா? இந்த வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு, இந்தியா இப்போது இரட்டை வேடம் போடுகிறது. வரலாற்று உண்மைகளை மறந்து விட்டுப் பேசக்கூடாது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அம் மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது.

கேள்வி: இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவாக செயல்படாவிட்டால், இலங்கை சீனாவின் உதவியை நாடும் என்றும், இதனால் தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இந்தியா கூறுகிறதே...

பதில்: இந்தியாவைக் காட்டி சீனாவிடமும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் உதவிகளைப் பெறுகிறது இலங்கை. மறுபுறம் இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானிடமும் உதவி பெறுகிறது. அதாவது எதிரும், புதிருமான அரசியல் எதிரிகளை எல்லாம் இலங்கை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதிலும், ராஜதந்திர ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. தனது துறைமுகங்களை சீனாவின் கடற்படை பயன்பாட்டிற்கு இலங்கை அனுமதிக்கிறது. இது ராஜீவ் & ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு எதிரானது. சீனா பெரும் முதலீடுகளை இலங்கை யில் கொட்டியிருக்கிறது. இந்தியா பங்களா தேஷையும், மாலத்தீவையும் கட்டுப்படுத்துவது போல சீனா, இலங்கையைக் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வந்துவிட்டது.  தற்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை, தடுமாற்றத்தில் உள்ளது. இந்தியா உதவினாலும், உதவாவிட்டாலும் இலங்கை சீனாவுக்குத்தான் விசுவாசமாக இருக்கும். இதை இந்திய & சீனப் போரிலும் பார்த்தோம். எனவே இந்தியா இதைக் கூறியே தமிழர்களை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றிக் கொண் டிருக்கிறது.

கேள்வி: அமெரிக்க எதிர்ப்பு மனநிலை உடைய நீங்கள், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எப்படி ஏற்கிறீர்கள்?
பதில்: நாங்கள் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கும், அதன் பன்னாட்டு பயங்கர வாதத்திற்கும் எதிரானவர்கள். அதேநேரம், நீதியின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பவர்கள்.
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேச அமெரிக்காவுக்கு அருகதை கிடையாது. ஜப்பானில் அணுகுண்டு வீசியதில் தொடங்கி, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்க பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட நாடுகளும், மக்களும் அதிகம்.
இதே இலங்கை ராணுவத்துக்கு தமிழர் களைப் படுகொலை செய்ய, 1984ல் இலங் கையின் வனப்பகுதிகளில் ‘கிரின் பரேட்’ என்ற தனது ராணுவ அதிரடிப்படை மூலம் இலங்கை ராணுவத்துக்கு இதே அமெரிக்காதான் பயிற்சி கொடுத்தது.

இப்போது அமெரிக்கா, நாடகம் ஆடுகிறது. அதன் நோக்கம் இலங்கையைப் பயன்படுத்தி, சீனா அப்பகுதியில் மேலாதிக்ககம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இலங்கையை மிரட்டவே அமெரிக்கா நாடகமாடுகிறது.

அவர்கள் கொண்டுவரும் தீர்மானம், ‘இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசே ஒரு விசாரணையை நடத்தவேண்டும்’ என்கிறது. ராஜபக்சே தன்னைத்தானே குற்றவாளி என முடிவெடுக்க அனுமதிப்பாரா? இது வேடிக்கையாக இல்லையா?
நாங்கள் சொல்வது என்னவெனில், இலங்கை யில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை அறிவித்து, ஒரு சுதந்திரமான & சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
இலங்கை எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

கேள்வி: இந்த விவகாரத்தில் நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

பதில்: நாங்கள் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்கள். உலகில் எங்கு மனித உரிமை மீறல்களும், இனப்படுகொலைகளும் நடந்தாலும் அதைக் கண்டிப்பவர்கள். பாலஸ் தீனம், ஈராக், சோமாலியா, குஜராத், காஷ்மீர், மணிப்பூர், இலங்கை என எங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். இலங்கை நமக்கு அருகில் உள்ள நாடு என்பதாலும், அங்குள்ள தமிழர்கள் நமக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள் என்ப தாலும் இவ்விஷயத்தில் மனிதாபிமானத்தோடு அக்கறைக் காட்டுவது அவசியமாகிறது.

கேள்வி: இலங்கையில் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கொன்றவர்கள். அதை மறந்துவிட்டீர்களா?

பதில்: நாங்கள் மறக்கவில்லை. புலிகளின் பல தவறுகளில் அதுவும் ஒன்று. அதேசமயம், அச்சம்பவம் குறித்து 2002ல் நடைபெற்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபாகரன், பகிரங்க மன்னிப்பு கோரினார். அதன்பிறகு பிரபாகரனுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் குழு கிளிநொச்சியில் புரிந்துணர்வு சந்திப்பை நடத்தினார்கள்.  அதேசமயம், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவதில்லை. அவர்கள் இப்போது களத்தில் இல்லை. நாங்கள் இலங்கையில் போரினாலும், சிங்கள பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமானத்தோடு வாதாடுகிறோம். நாங்கள் முள்ளிவாய்க்கால் போருக்குப் பிந்தைய புதிய சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுகிறோம்.

கேள்வி: விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும், ராஜபக்சே தமிழ் மக்களைக் கொன்று குவித்ததையும் சமப்படுத்தி இலங்கையிலும், தமிழகத்திலும் சிலர் பேசுகிறார்களே...
பதில்: அவர்களுக்காக நாம் பரிதாப் படுகிறோம். இப்போது இலங்கை அரசும் இதேபோல் கருத்துக்களைப் பேசி தங்களின் தவறுகளை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். கொத்துக் கொத்தாய் சொந்த பந்தங்களை இழந்தவர்கள், மயானத்தில் நின்றுகொண்டு ஓலமிடும்போது, ‘பார்த்தாயா... எங்களை அவர்கள் கொன்றது நினைவில்லையா? இப்போது தெரிகிறதா? எங்களைக் கொன்றது என்ன நியாயம்?’ என்றெல்லாம் பேசுவது மனிதாபிமானமற்றது. புலிகள் செய்த தவறுகளுக்கு அப்பாவித் தமிழ் மக்களைப் பொறுப்பாக்கக் கூடாது.
“...எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம்; (எவ்வளவு விரோமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள்...” 
என்ற திருமறை வசனம் (திருக்குர்ஆன் 5:8) நம்மைக் கடுமையாக எச்சரிக்கிறது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் சிலர் இதுபோன்ற மனநிலையில் பொறுப்பற்ற முறையில் எழுதியும், பேசியும் வருகிறார்கள்.
அரசியல் தெளிவு, சமூகப் பொறுப்பு, நல்லிணக்கம் குறித்து புரிதல் இல்லாதவர்கள் இப்படி செய்கிறார்கள். புலிகளின் விவகாரத் தையும், அப்பாவி தமிழ் மக்களின் வாழ் வுரிமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.பெரும்பான்மையான தமிழக முஸ்லிம்கள்  எங்களது கருத்தோட்டத்தில் தெளிவாக இருக்கிறார்கள். முஸ்லிம்களை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்தும், எமது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் களத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்து வருகிறது. சிறுவன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முதலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது மனித நேய மக்கள் கட்சி தான். அதன்பிறகுதான் மற்ற கட்சிகள் களத்துக்கு வந்தன. இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடு வதற்கு உத்வேகத்தைத் தந்தது மமக நடத்திய முதல் போராட்டம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

கேள்வி: இலங்கை முஸ்லிம்களின் நிலைப் பாடு என்ன?

பதில்: இங்கு தமிழகத்தில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், இம்மண்ணில் பூர்வகுடிகளாக வாழும் அனைவரும் நம்மைத் தமிழர்கள் என்கிறோம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழி இணைக்கிறது. இலங்கையில் சூழல் வேறு. அங்கு இந்துக் கள், சைவ மதத்தினர் உள்ளிட்டவர்கள் தங்களைத் தமிழர்கள் என்கிறார்கள். இந்திய வம்சாவழியினர் தங்களை ‘மலையகத் தமிழர் கள்’ என்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களை ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்கி றார்கள். அதாவது, தங்களை மற்றொரு தனித்த தேசிய இனமாகக் கருதுகிறார்கள். இப்போது இலங்கையில் கோயில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என சிறுபான்மையினருக்குச் சொந்தமான 65 வழிபாட்டுத் தலங்களை சிங்கள வெறியர்கள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். பௌத்த குருமார்கள் மத வெறிப் பிடித்து அலைகிறார்கள். அங்கு ‘பொது பல சேனா’ என்ற புத்த மதவெறி அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை களைத் தூண்டி வருகிறது. இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

முஸ்லிம்கள் முறைப்படி உண்ணும் ‘ஹலால்’ முத்திரையிடப்பட்ட உணவு கலாச் சாரத்திற்கு தடை விதித்திருக்கிறார்கள்.முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்கு (முகத்திரை) தடைவிதிக்க முனைகிறார்கள்.முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி செயல்படுகிறது.

கேள்வி: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து?

பதில்: இது ஐ.நா. சபை முடிவெடுக்க வேண்டிய ஒரு சர்வதேச விவகாரமாகும். அங்கு ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலை யகத் தமிழர்கள் என்று மூன்று பெரும் இனங் களின் உரிமைகள் அடங்கியிருக்கிறது. இதை கவனமுடனும், மனிதாபிமானத்தோடும் அனைவரும் அணுக வேண்டும். இவ்விவகாரம் என்பது ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து, தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டித்த பிறகு பேசவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வாகும்.

கேள்வி: இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன?

பதில்: முன்பு வடக்கிலிருந்து விரட்டியடிக் கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் கண்டு வருகிறார்கள். அவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்கள் மீண்டும் கிடைக்க துணை நிற்க வேண்டும். தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இரத்த பந்தங்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். இதில் இரண்டு சமூகங்களின் தலைமையும் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் ரீதியாக இணைவது குறித்து வரும் காலங்களில் இருதரப்பும் விவாதத்தை தொடங்க வேண்டும்.

கேள்வி: இதுகுறித்து நீங்கள் முயற்சிகள் ஏதும் எடுப்பீர்களா?

பதில்: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து யாரும் பேசுவ தில்லை. அவர்களில் பலர் இன்னமும் அகதிகளாக உள்ளனர். நாங்கள் பல மேடைகளில் அதைப் பேசி வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் தலைமையும், தமிழர் தலைமையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் தலைமையும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோளாகும். இதை நாங்கள் முன்னெ டுக்கத் தயாராக இருக்கிறோம். சகோதரர்கள் நமக்குள் உறவு வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம். விரைவில் அதற்கான காலம் கனியும் என நம்புகிறோம்.

நன்றி மக்கள் உரிமை

கதையல்ல நிஜம்..

$
0
0

“ஆர் யூ மிஸ் அகிலா.. ?”

“ஆமாம் சார் நான் அகிலாதான் பேசறேன்.. “

“நான் சன் டிவிலேர்ந்து வெற்றி வேந்தன் பேசறேன். இப்போ சன் டிவில ரெக்ரூட்மென்ட் நடக்குது. நான் ராஜ் டிவியில உங்க நியூசை ரெகுலரா வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்.  உங்க ரெஸ்யூமை இமெயில் பண்ணுங்க.”

சட்டென்று ஒரு நிமிடம் அகிலாவுக்கு எதுவுமே புரியவில்லை.   தமிழ் இலக்கியம் படித்து விட்டு, என்ன செய்வது என்று யோசித்து, யோசித்து, செய்தி வாசிப்பாளராகச் சென்றால் என்ன என்று மீடியாவில் கால் பதித்தவள்தான் அகிலா.  நாட்கள்தான் எப்படி உருண்டோடி விட்டன !!  எந்த ஒரு உட்கட்டமைப்பு வசதியும் இல்லாமல் எதற்காக ஆரம்பித்தோம் என்பதே தெரியாமல் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு சேனலில் செய்தி வாசிப்பாளராகத்தான் ஊடகத்தில் கால் பதித்தாள்.  சாதாரண நடுத்தர வர்க்கம்.  அந்த மாதாந்திர சம்பளத்தை நம்பித்தான் குடும்பமே இருக்கிறது.  அந்த உருப்படாத சேனலில் பணியாற்றியபோதே, ராஜ் டிவியில் கிடைத்த வேலைதான் அவளைத் தான் ஒரு செய்தி வாசிப்பாளர் என்றே உணர வைத்தது.  இரவு நேரங்களில் மட்டுமல்லாது பகல் நேரத்திலும், ஏசு அழைக்கும் ஜெபப் பிரசங்கங்களையும்,  அதிருஷ்டக் கல் வியாபாரிகளையும் மட்டுமே நம்பி நடக்கும் சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகளை யார்தான் பார்ப்பார்கள்.  கஷ்டப்பட்டு நாம் வாசிக்கும் செய்திகளை யாருமே பார்ப்பதில்லை என்ற வருத்தம் அகிலாவுக்கு இருக்கத்தான் செய்தது.

யாருமே பார்க்காத செய்திகளை வாசித்துக் கொண்டிருந்து, யாரோ சிலர் பார்க்கும் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த அகிலாவுக்கு, எல்லோரும் பார்க்கும் செய்திகளை வாசிக்கும் வேலை என்று அழைத்தால் எப்படி இருக்கும்… ?  சட்டென்ற தலைகால் புரியவில்லைதான்…  “உடனே அனுப்பறேன் சார்“ என்று கூறி விட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் உள்ள புல்லட்டினைக் கூட மறந்து விட்டு, அவசர அவசரமாக ரெஸ்யூமை கம்ப்யூட்டரில் தேடி எடுத்து சரிபார்த்து உடனடியாக சன் டிவி மெயிலுக்கு அனுப்பினாள்.  அனுப்பி விட்டாலும், கவனம் டெலிப்ராம்ப்டரில் செல்லாமல் எப்போது செல்பேசி ஒலிக்கும் என்பதிலேயே இருந்தது.

மறுநாளே செல்பேசி ஒலிக்கத்தான் செய்தது.  “மேடம் நாங்க சன் டிவி ஹெச் ஆர்லேர்ந்து பேசறோம்…  நாளைக்கு காலையில 10 மணிக்கு உங்களுக்கு இன்டர்வ்யூ மேடம். வந்துடுங்க…“

பிரம்மாண்டமான அந்தக் கட்டிடம் பயமுறுத்தியது.  செக்யூரிட்டி க்ளியரன்ஸ் போன்றவைகள் முடித்து ரிசெப்ஷனில் இருந்த அந்த லிப்ஸ்டிக் பூசிய பெண்ணிடம் இன்டர்வ்யூ என்று சொன்னதும், “வெயிட் பண்ணுங்க” என்று எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அருகில் இருந்த சோபாவில் கைகாட்டி அமரச் சொன்னாள்.

சற்று நேரத்தில் வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு சிப்பந்தி மேடம் ”உள்ளே போங்க” என்றார்.

ஏற்கனவே 3 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் இருந்தாலும் சற்று பதட்டமாகத்தான் இருந்தது.

”உக்காரும்மா…”

அவர்தான் சன் டிவியின் செய்தி ஆசிரியர்.  சன் டிவி ராஜா என்ற பெயரைக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது.  ராஜ் டிவியில் இருந்து வரும்போதே அங்கயா போற… அந்த ஆளு மோசமானவன்னு சொன்னாங்களே… பொம்பளை விஷயத்துல ரொம்ப மோசமாச்சே என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

59922_103295999847890_560997797_n

“எவ்வளவு நாளா ராஜ் டிவியில இருக்கம்மா ?”

“சார் ஒன்றரை வருஷமா இருக்கேன் சார்.. “

“வெற்றி நல்லா நியூஸ் படிக்கறேன்னு சொன்னான்… பட் ராஜ் டிவி வேற.. சன் வேற…  சன் ஈஸ் ஆல்வேஸ் நம்பர் ஒன். அங்க வேலை பாக்கற மாதிரி கேஷுவலா வேலை பாக்க முடியாது… சின்ன தப்பைக் கூட பொறுத்துக்க மாட்டோம்“

“நான் கரெக்டா பண்ணுவேன் சார்.. ராஜ் டிவியில கூட ஒரு கம்ப்ளெயின்ட்ஸ் கிடையாது சார்.“

“என்ன படிச்சிருக்கீங்க. “

“பி.ஏ தமிழ் சார். “

“ம்ம்.. குட்.. அங்க ரிசைன் பண்ணிட்டீங்களா ? “

“இல்ல சார்.. ஆர்டர் வாங்கிட்டு ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன் சார்.“

“இந்த சேனல்தான் தமிழ்லயே நம்பர் ஒன்.  இங்க வேலை செய்யறது உங்களுக்குத்தான் பெருமை.. அதை மனசுல வச்சுக்கங்க.  பி.ஏவைப் பாத்து ஆர்டர் வாங்கிக்கங்க. “

“தேங்க்யூ சோ மச் சார்…“

“ம். ஓ.கே. “

வேலை புதிய அனுபவமாகத்தான் இருந்தது.  நியூஸ் ரீடர் மற்றும் ப்ரொட்யூசர் என்று அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கிடைத்தது. தொடக்க காலத்தில் இருந்த பதற்றம் நாளாக நாளாக சரியாகி விட்டது.

மூன்று மாதங்கள் போனதே தெரியவில்லை. ஆறு மாதம் ஒழுங்காக வேலைசெய்தால்தான் கன்பர்மேஷன்.  எப்படியாவது கன்பர்மேஷன் வாங்கி விட வேண்டும் என்ற தீர்மானத்தில் எந்த வேலை கொடுத்தாலும்

ராஜா சக பணியாளர்களைத் திட்டுவதைப் பார்த்தாலே வயிறு கலங்கும்.  இப்படி மரியாதை இல்லாமல் திட்டுகிறாரே என்று சற்று எரிச்சலாக இருந்தாலும், திட்டு வாங்கிய அத்தனை பேரும் வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தது, எடிட்டர் எத்தனை சக்தி வாய்ந்தவர் என்று புரிய வைத்தது.  அந்த மூன்று மாதங்களில் நன்றாக பழகியிருந்த சுகந்தியிடம் நேரடியாகவே கேட்டேன்.

“ஏம்பா… எடிட்டர் எல்லாரையும் இப்படித் திட்றாரே.. யாருமே எதுத்துப் பேச மாட்டாங்களா ? “

“எதுத்தப் பேசிட்டு…. அடுத்து எங்கப் போவ…  நடக்கறது இவனுங்க கவர்மென்ட் தெரியும்ல.. இவனுங்களப் பகைச்சுக்கிட்டு எங்கயும் போயி வேலை பாக்க முடியாது. அப்புறம் என்ன பண்ணுவ ?“

“என்ன சொல்ற.. ஒருத்தர் கூடவா பேச மாட்டாங்க…“

“எப்படி பேச முடியும்.. ?  இவன் சேர்மேன் கிட்ட நேரடியா பேசுவான்..  அந்த ஆளுக்குத் தெரிஞ்சா அன்னைக்கே சீட்டைக் கிழிச்சுடுவான். இவன் சேர்மேனுக்கு ரொம்ப க்ளோஸ்.“

“என்ன ரகசியம் பேசறீங்க… நானும் தெரிஞ்சுக்கலாமா“ என்று கேட்டபடியே வெற்றி வேந்தன் வந்தான்.

“ரகசியம்லாம் ஒண்ணும் இல்ல சார்“

“அப்புறம்…  அகிலா… ஜாப் எப்படி போயிட்டிருக்கு… செட்   ஆயிடுச்சா.. “

“நீங்கதானே சார் ஷெட்யூலே போட்றீங்க… உங்களுக்குத் தெரியாதா“

“தெரியும் தெரியும்… பட்… நீங்க என்ன ஃபீல் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கனும்ல….“

அவன் பார்வை என் மார்பின் மீது படர்ந்தது.  சட்டென்று எழுந்தேன்.

226232_184675878251420_2992293_n

சட்டென்று சங்கடப்பட்டவன், “நீங்க கன்ட்டின்யூ பண்ணுங்க.. எனக்கு வேலை இருக்கு“ என்று நகர்ந்தான்.

“சரியான ஜொள்ளுபா இவன்… இவன்கிட்ட ஜாக்ரதையா இரு… கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம மாரப்பாத்துத்தான் பேசுவான்…  பேப்பர் குடுக்கும்போது கையப் புடிப்பான்…“

“சப்புனு அறைய வேண்டியதுதான.. “ என்றாள் அகிலா..

“என்ன பேசற…  இவன் யாருன்னு தெரியுமா தெரியாதா ?“

“இவந்தான் என்ன    ஃபோன் பண்ணி இன்டர்வ்யூவுக்குக் கூப்பிட்டான்.  நமக்கெல்லாம் ஷெட்யூல் போட்றவன்“

“அது மட்டும் இல்ல.. இவன்தான் எடிட்டருக்கு ஆள் புடிச்சு குடுக்கறவன். “

“ஆள் புடிச்சுன்னா…“

“உனக்கு ஒண்ணும் புரியாது… எடிட்டர் எந்தப் பொண்ணு மேல கண்ணு வக்கிறாரோ, அந்தப் பொண்ணை வழிக்கு கொண்டு வந்து எடிட்டர் மடி மேல விழ வக்கிற வரைக்கும் விட மாட்டான்.“

“நம்பவே முடியல.. இப்படில்லாமா பண்ணுவாங்க.. “

“இதை விட ஏராளமான கதைங்க இருக்கு… உனக்கு இவனுங்களப் பத்தி தெரியாது. ரெண்டும் மோசமான பொறுக்கிங்க“

“என்கிட்ட அந்த மாதிரி இது வரை நடந்துக்கல.. ஆனா நம்பவே முடியல.. “

“ரொம்ப நாள் சந்தோஷமா இருந்துடாத… உன் பக்கம் அவனுங்க பார்வை எப்போ திரும்புதுன்னு தெரியல“ என்றாள் சுகந்தி.

சுகந்தி சொன்னது திகிலை ஏற்படுத்தியது.

ஒரே வாரத்தில் என் பயம் உண்மையாகியது.  “மேடம் எடிட்டர் கூப்ட்றார்“ என்ற குரல் கேட்டதும் பயத்தோடே எழுந்து சென்றேன்.  உள்ளே செல்லும் முன்பாகவே உடையை அனிச்சையாக சரி செய்து கொண்டேன்.  ஆண்கள் பாத்ரூமில் நுழைவது போன்ற படபடப்பு ஏற்பட்டது.

“வாம்மா… உக்காரு.  எப்படி போகுது வேலையெல்லாம்… ?“

“நல்லாப் போகுது சார்.“

“வீடு எங்க உனக்கு… ? அரும்பாக்கம் சார். மேரேஜ் ஆயிடுச்சா… ?“

“டைவோர்ஸி சார்.. “

“என்ன ஆச்சு….“

“அத மறக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் சார்… கேக்காதீங்க.. “

“ஓ.கே… ஓ.கே..   கொழந்தைங்க இருக்கா…“

“ஒரு பையன் சார்…. ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட் படிக்கறான் சார்.. “

“பையன யார் பாத்துக்கறா ? “

“அம்மா பாத்துக்கறாங்க சார்.. “

“அம்மா வேலை பாக்கறாங்களா… ? “

“இல்ல சார்..  வீட்லதான் இருக்காங்க…“

“நீங்க ஒருத்தர்தான் எர்னிங்கா ? “

“ஆமாம் சார்…“

“நல்லா வேலை பாருங்க. சீக்கிரம் கன்ஃபர்மேஷன் போட்டுட்றேன்.  தென் சேலரி இன்க்ரீஸ் ஆகும்.  எந்த ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளுங்க.  போன் பண்ணுங்க…  என் போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா.. “

“இல்ல சார்“

“எழுதிக்கங்க“ என்று அவர் போன் நம்பரைக் கொடுத்தார்.

“எந்த நேரம் வேணாலும் போன் பண்ணுங்க. தயங்க வேணாம்“

“ஓகே சார்.. “

“ஏதாவது டவுட்னா என்கிட்ட கேளுங்க.. “

“சரி சார்…“

“ஒரு வார்த்தைக்கு மேல பேச மாட்டீங்களா… ? “

“அப்டில்லாம் இல்ல சார்“

“சரி போயிட்டு வாங்க“

ஏதோ தவறு நடக்கிறது என்பது மட்டும் அவளுக்கு நன்றாக உறைத்தது.  ‘ச்சே அப்படியெல்லாம் இருக்காது…  அவர் சாதாரணமா ஒரு அக்கறையில கூட கேட்ருக்கலாம். நம்பதான் எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடவே பாக்கறோம்’

அன்று இரவே எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார். “உன் நிலைமை இவ்வளவு கஷ்டமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.  உனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேள். தயக்கப்படாதே.  உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்“ என்று தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். எனக்கு பதில் எதுவும் அனுப்பத் தோன்றவில்லை.

அந்த வாரத்தில் இருந்த வேலைப் பளுவில் எடிட்டரைப் பற்றிய சிந்தனை மறைந்திருந்தது.  புதிதாக தொடங்கப்பட்ட புதிய தலைமுறை சேனல், எங்கள் சேனலுக்குள் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.  அது வரை எந்த ரிப்போர்டரின் முகத்தையும் ஒரு ஃப்ரேமில் கூட காட்டாத எங்கள் சேனல், ரிப்போர்டர்களை நேரலை கொடுக்க வைத்தது.   பரபரப்புச் செய்திகளை உடனடியாக டிக்கரில் போட வேண்டும் என்றார்கள்.

நேராக என் சீட்டுக்கே வந்த ராஜா, அகிலா, சீக்கிரம் தமிழ் டைப் அடிக்க கத்துக்கம்மா..  ஃப்ளாஷ் நியூஸெல்லாம் நீதான் கொடுக்கணும்“ என்று என்னிடம் புதிய பொறுப்பையும் ஒப்படைத்தார்.  ஒரே வாரத்தில் தமிழ் டைப் அடிக்கக் கற்றுக் கொண்டேன்.

புதிய தலைமுறைச் சேனல் ஏற்கனவே டென்ஷன் பேர்விழியான எடிட்டர் ராஜாவை மேலும் டென்ஷன் ஏற்றியிருந்தது.  எப்போதும் புதிய தலைமுறை சேனலையே பார்த்து பார்த்து தினந்தோறும் பல்வேறு மாற்றங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள், அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்தது என்று  புதிய தலைமுறையில் ஃப்ளாஷ் ஓடியது.  15 நிமிடங்களில் நேரலையில் புதிய தலைமுறை  செய்தியாளர் பேசினார்.

வெளியே வந்த எடிட்டர் “மவுன்ட் ரோட்ல எந்த யூனிட் இருக்கு.“ “சிவராமன் அறிவாலயத்துல இருக்கார் சார். “

“உடனே ஜெமினி ப்ரிட்ஜ்க்கு யூனிட்டோட போகச் சொல்லு.  என்ன ஆச்சுன்னு உடனே எனக்கு தகவல் சொல்லுங்க“

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ரிப்போர்டரால் போக்குவரத்து நெருக்கடியால் அந்த இடத்துக்கு போக முடியவில்லை.

மாலை ஐந்து மணிக்கு சிவராமன் அலுவலகம் வந்தார்.   அவர் வந்ததை கேபினுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜா வெளியே வந்தார்.

“புதிய தலைமுறையில 10 நிமிஷத்துல லைவ் பண்றான்.. நீ என்னடா புடுங்கிட்டா இருந்த… போக வேண்டியதுதானே… அறிவாலயத்துலேர்ந்து எவ்வளவு தூரம்டா ஜெமினி…?“

“சார்… ட்ராஃபிக்….“

“என்னடா ட்ராஃபிக்…“

அவர் போட்ட சத்தத்தில் மொத்த அலுவலகமும் அமைதியாகி அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.  சிவராமன் காதலிக்கும் பெண், அந்த ஹாலிலேயே இருந்தாள்.   தலையைக் குனிந்த சிவராமனின் கண்கள், அவள் பார்க்கிறாளே என்று அவமானத்தில் அவளை நோக்கிச் சென்றது. அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றதும் இன்னும் கூனிக்குறுகினான்.

சிவராமன் அவளைப் பார்த்ததை பார்த்த ராஜா இன்னும் சத்தத்தை அதிகப்படுத்தினார்.

“உன்னை எல்லாம் வெத்தலை பாக்கு வச்சா வேலைக்கு கூப்டாங்க..? எங்க இருந்துயா வர்றீங்க..?  அவனால போக முடிஞ்சது உன்னால ஏண்டா போக முடியல… ? “

“சார் விபத்து நடந்தப்போ அவங்க யூனிட் அந்த இடம் வழியா போயிக்கிட்டு இருந்துச்சு சார்.. “

“எதுத்தாடா பேசற…  போயி அவன் மூத்தரத்த குடிடா…  நொண்டிச் சாக்கு சொல்லிக்கிட்டு இருக்க… உன்னை எல்லாம் மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு ஊருக்கே பேக் பண்ணி அனுப்பிடுவேன்.. பார்க்கறியா..? இதோட நீ எந்த டி.வி.லயும் வேல பாக்க முடியாது.. அப்பிடியே பொடி நடையா ஊருக்கு பொட்டிய கட்ட வேண்டியது தான்..“

அவன் கூனிக்குறுகிப் போனான்.  கண்களில் கண்ணீர் தளும்பியது.  காதலிக்கும் பெண்ணின் முன்னால் அந்த அவமானத்தை தாங்க முடியாமல்  நெளிந்தான்.

அதிர்ந்து போனேன்… ‘இப்படிப் பேசுகிறானே…. என்ன மனிதன்   இவன் ?’

அன்று மாலை அந்த மாதத்துக்கான நியூஸ் ரீடிங் ஷெட்யூல் வந்தது.  எனக்கு அந்த மாதம் முழுவதும் மார்னிங் ஷிப்ட்.  ஏற்கனவே இரண்டு நாட்கள் மட்டும் மார்னிங் ஷிப்டில் நியூஸ் வாசித்திருக்கிறேன்.  மார்னிங் ஷிப்டுக்கு இன்னொரு பெயர் சித்திரவதை.

காலை 6 மணிக்கு முதல் நியூஸ் லைவ் புல்லட்டின்.  அன்று இரவு முழுக்க, மாநிலம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள் எடுத்த இரவுச் செய்திகளை தொகுத்துப் படிக்க வேண்டும்.  நைட் ஷிப்டில் உள்ளவர்கள் செய்தியை தொகுத்து வைத்திருப்பார்கள். 5.30க்கெல்லாம் மேக்கப் போட்டுக் கொண்டு தயாராக இருக்க வேண்டும்.

அந்த இரண்டு நாட்களும், தாமதமில்லாமல் வரவேண்டுமே என்று, காலை 3 மணிக்கு எழுந்து 4 மணிக்கெல்லாம் நைட் ஷிப்ட் பஸ்ஸைப் பிடித்தால்தான் 5.15க்கு ஆபிசுக்கு வர முடியும்.  இரண்டு நாட்களுக்கே எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது.

கிருத்திகா காந்தி என்பவர் நியூஸ் ப்ரொட்யூசராக இருந்தார்.  அவர் புரிந்து கொள்வார் என்று தோன்றியது.

“மேடம்… அடுத்த மாசம் ஷெட்யூல்ல எனக்கு மாசம் பூரா மார்னிங் ஷிப்ட் போட்ருக்காங்க மேடம்.. என் வீடு அரும்பாக்கம் மேடம்.  காலைல எந்திரிச்சு 5 மணிக்கெல்லாம் வர்றது கஷ்டமா இருக்கு மேடம். “

“அகிலா… இது என் டிசெஷன் இல்லம்மா… எடிட்டர் சொன்னார் நான் போட்டேன். அவ்வளவுதான். இந்த மாசம் பண்ணு… அப்புறம் பாக்கலாம்“

அந்த மாதம் முழுக்க நரகத்தை அனுபவித்தேன்.   காலை 3 மணிக்கு எழுந்தது சித்திரவதையாக இருந்தது.   தூக்கம் கண்ணை சொக்கினாலும் செய்தி வாசிக்கையில் பளிச்சென்று இல்லையென்றால், இதையெல்லாம் காரணம் காட்டி ஷெட்யூலில் பெயரை சேர்க்காமல் விட்டு விடுவார்களே என்ற பயம் உறுத்தியது. பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு மாதத்தை ஓட்டினேன். மாத இறுதி வந்ததும் ஷெட்யூல் போடுவதற்கு முன்பாகவே கிருத்திகா மேடத்தை பார்த்து சொல்லி விட வேண்டும் என்று நினைத்தேன்.

“மேடம்.. வர்ற மாசம், ரெகுலர் ஷிப்ட் போடுங்க மேடம்… சார்கிட்ட சொல்லுங்க மேடம்…“

“கண்டிப்பா சொல்றேன் அகிலா…“ என்று அவர் சொன்ன வார்த்தை போலியாகவே ஒலித்தது.  நினைத்தது போலவே அடுத்த மாதம் முழுக்கவும் மார்னிங் ஷிப்ட். மீண்டும் காலை 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நினைத்தாலே அழுகை வந்தது.  நேராக கிருத்திகாவை சென்று சந்தித்தேன்.

“மேடம்… என்ன மேடம்… திரும்ப மார்னிங் ஷிப்ட் போட்ருக்கீங்க…“

“நான் என்ன அகிலா பண்றது… ? எடிட்டர் பேச்சை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது..  உனக்கு இன்னும் கன்பர்மேஷன் வர்லம்மா.. அது வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். “

சீட்டுக்கு வந்து சத்தம் வராமல் அழுதேன்.   என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“என்ன ஆச்சு அகிலா… வொய் ஆர் யு க்ரையிங்“ என்று கேட்டபடியே என் டேபிளில் வந்து அமர்ந்தார் வெற்றி வேந்தன்.

“என்ன சார் திரும்பவும் மார்னிங் ஷிப்ட் போட்ருக்கீங்க… ?   எப்படி சார் இன்னும் ஒரு மாசம் முழுக்க 3 மணிக்கு எந்திரிச்சு வர்றது.. என் பையன் கிட்ட ஒழுங்கா பேசியே ஒரு மாசம் ஆச்சு சார்…“

“உன் பெர்பார்மன்ஸ் சரியில்லை அகிலா.. அதான் மார்னிங் ஷிப்ட் போட்ருக்கேன்…“

‘என்ன இவன் கிறுக்குத்தனமாக பேசுகிறான். ஏற்கனவே பெர்பார்மன்ஸ் சரியில்லாத ஆளை, தூங்கக் கூட விடாமல் வேலை செய்ய வைத்தால் மீண்டும் பெர்பார்மன்ஸ் குறையத்தானே செய்யும்… ?’

“எல்லார்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்க அகிலா… நம்ப எடிட்டர் ரொம்ப நல்ல டைப்.  நல்லா ஹெல்ப் பண்ணுவார்.. பாத்து அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கங்க…“

“சார் நான் யார் பிரச்சினைக்கும் போறதில்லை சார்.. எல்லார்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணிதான் சார் நடந்துக்கறேன். “

“அட என்ன அகிலா… உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே தெரியல… சரி விடு… அடுத்த ஷெட்யூல்ல சரி பண்ணிக்கலாம்.. இந்த ஒரு மாசத்துக்கு மார்னிங் ஷிப்ட் பாத்துடு.“

இனி காலை 4 மணிக்கு அரும்பாக்கத்திலிருந்து கிளம்பி வர முடியாது என்பது புரிந்தது.  மந்தைவெளியில் அலுவலகம் அருகிலேயே ஹாஸ்டல் பார்த்துத் தங்கினேன்.

அத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும், வீடியோ எடிட்டிங் செக்ஷனில் வேலை பார்த்த கிருஷ்ணனின் நட்பு ஆறுதலாக இருந்தது.  அவனும் மார்னிங் ஷிப்ட்.  அவனையும் ராஜா பல முறை மரியாதைக் குறைவாக திட்டியிருக்கிறார்.  நான் காலையில் கிளம்பி வந்து கஷ்டத்தோடு வேலை செய்வதைப் பார்த்து விட்டு, நேரில் வந்து பல முறை ஆறுதல் சொல்லியிருக்கிறான்.   சட்டம் படித்திருந்தாலும், வழக்கறிஞராகப் பிடிக்காமல் மீடியாவில்தான் வேலை செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான்.  மாலை நேரங்களில் காபி ஷாப்பில் அமர்ந்து ராஜாவை திட்டித் திட்டியே எங்கள் காதல் வளர்ந்தது.  ராஜாவை திட்டுவதில் எங்கள் இருவருக்கும் அப்படி ஒரு இன்பம்.  சமயத்தில் கிருஷ்ணன் கெட்டவார்த்தையில் ராஜாவைத் திட்டும்போது அவனைத் தடுக்கக் கூடத் தோன்றவில்லை. அத்தனை திட்டுக்களுக்கும் உரியவனல்லவா அவன்.

அரசல் புரசலாக எங்கள் காதல் விவகாரம் அலுவலகத்துக்குள் தெரிய ஆரம்பித்தது.   இந்தச் செய்தி பரவிய மறுநாளே கிருஷ்ணனுக்கு ஷிப்டை மாற்றினார்கள்.  வழக்கமாக மாதத்துக்கு நடுவில் யாராவது லீவ் போட்டால் ஒழிய ஷிப்டை மாற்றுவது வழக்கம் கிடையாது.  திடீரென்று அவனுக்கு செகன்ட் ஷிப்ட் போட்டது வழக்கமாக காபிஷாப்பில் சந்திக்கும் எங்களின் ஒரே இன்பத்துக்கும் வேட்டு வைத்தது.  தனிமையில் சந்தித்தபோது அழுதேன்.  அவன்தான் என்னைத் தேற்றினான்.

மூன்றாவது மாதமும் எனக்கு தொடர்ந்து மார்னிங் ஷிப்ட் என்று ஷெட்யூல் வந்தபோது என் கண்கள் கிருஷ்ணனுக்கு என்ன ஷிப்ட் என்றுதான் தேடின. அவனுக்கு செகன்ட் ஷிப்ட்.  நேராக எழுந்து கிருத்திகா அறைக்குச் சென்றேன்.

“மேடம்…. இவ்வளவு கஷ்டம்னு சொல்லியும் ஏன் மேடம் எனக்கு மட்டும் தொடர்ந்து மார்னிங் ஷிப்ட் போட்றீங்க… என்ன பாவம் பண்ணேன் உங்களுக்கு ….  நான் கஷ்டப்பட்றதுல உங்களுக்கு என்ன மேடம் அவ்வளவு சந்தோஷம்…“

“அகிலா… இந்த ஷெட்யூலெல்லாம் நான் முடிவு பண்றது கிடையாதும்மா… உனக்கு பல முறை சொல்லியருக்கேன்… நான் பண்றதுக்கு இதுல எதுவுமே கிடையாது. என்கிட்ட வந்து சண்டை போட்டு பிரயோஜனம் இல்ல…“

முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கினேன்… கிருத்திகா ரூமை விட்டு வெளியே வந்ததும் எதிரே வெற்றி வந்தான்.

“சார்… போன மாசமே நான் மார்னிங் ஷிப்ட் பாக்கறது எவ்வளவு கஷ்டம்னு உங்கக்கிட்ட சொன்னேன்ல சார்… ஏன் சார் இப்படி பண்றீங்க…“

“என்ன அகிலா … சத்தமெல்லாம் ஓவரா இருக்கு… உங்களுக்கு இன்னும் கன்ஃபர்மேஷன் கூட ஆகல ஞாபகம் இருக்கா  இல்லையா.. “ என்று அவன் சொன்னதும், எதிர்காலமும் வயிறும் ஒரே நேரத்தில் உறுத்தின.

சட்டென்று தளர்ந்தேன்.  “சார் சத்தமெல்லாம் போடல சார்…  என் கஷ்டத்தைத்தானே சார் சொன்னேன். “

“உனக்கு இன்னும் எத்தனை வாட்டி சொல்றதுன்னு தெரியல… சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிற… பை த வே… நீ கோபப்படும்போது ரொம்ப அழகா இருக்க.. “

அந்த நேரத்தில் அவன் அழகாக இருக்கிறாய் என்று சொன்னது ஆபாசமாக தொனித்தது. மனம் நொந்து பேசுகிறேன், இந்த நேரத்தில் அழகாக இருக்கிறாய் என்கிறானே… இடியட்.

“இங்கப் பார் அகிலா… லைப்ன்றதே அட்ஜஸ்ட்மென்ட்தான்.  நம்ப எல்லாருமே ஒரு அட்ஜஸ்ட்மென்ட்லதானே லைஃபையே  ஓட்றோம் ? உனக்கு மட்டும் என்ன பிரச்சினை… சன் டிவியில வேலை செய்யறதுன்றது ஒரு பெரிய கவுரவம்.  அதை இழந்துடாத..  எடிட்டர் நான் என்ன சொன்னாலும் கேப்பாரு… கொஞ்சம் நீக்கு போக்கா நடந்துக்கிட்டன்னா எங்கயோ போயிடுவ.. “ என்று அவன் தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே அலட்சியமாகப் பேசினான்.

முதன் முறையாக கணவனைப் பிரிந்தது தவறோ என்று யோசித்தேன்… ஒரு பெண் தனியாளாக வாழவே முடியாதா…  வல்லூறுகளைப் போல சுற்றுகிறார்களே…  காறி அவன் முகத்தில் துப்பி, அதன் எச்சில் அவன் கண்ணாடியில் பட்டு வழிவது போல கற்பனை வந்தது.  அவன் பேச்சு குமட்டலை ஏற்படுத்தியது.

“சார்.. நான் எடிட்டரைப் பாக்கறேன் சார்“ என்றேன்.  இவனைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

அவன் முகத்தில் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்த நான்தான் அதிர்ச்சியடைந்தேன். அவனுடைய அலட்சிய சிரிப்பு ‘போயி சொல்லுடி.. உன்னால என்ன ஒண்ணும் பண்ண முடியாது’ என்ற நக்கல் தெரிந்தது.  அவனின் அலட்சிய சிரிப்பு என்னை மேலும் எரிச்சலூட்டியது.

கோபம் குறையாமல் எடிட்டரின் அறைக்குள் நுழைந்தேன்.   கண்கணில் கண்ணீர், வெள்ளத்தில் நிரம்பிய அணை போல தளும்பியது.  நெஞ்சு படபடத்தது.

“சார்… வெற்றி வேந்தன் தப்புத் தப்பா பேசறார் சார்…“  என்று சொல்லிக் கொண்டே உடைந்தேன்.

“அகிலா…  அழாதம்மா… என்ன ஆச்சு… என்ன ப்ராப்ளம்…“

கர்ச்சீப்பை வேறு எடுத்து வரவில்லை.  துப்பட்டாவில் கண்களைத் துடைத்துக் கொண்டு “சார் ரொம்ப மோசமா பேசறார் சார் வெற்றி… தப்புத்தப்பா பேசறார் சார்.. வேணும்னே எனக்கு மார்னிங் ஷிப்ட் போட்டுக்கிட்டே இருக்கார் சார்.. இது மூணாவது மாசம் சார்.“

“மூணாவது மாசமா மார்னிங் ஷிப்டா ?  ஏன் உனக்கு மட்டும்… ? யார் போட்டது…. ? “

“வெற்றிதான் சார்…“

“நான் பாத்துக்கறேன்.. இப்போ மாத்த முடியாது.  ஏற்கனவே எல்லாருக்கும் ஷெட்யூல் அனுப்பியாச்சு.. நெக்ஸ்ட் மன்த் சேஞ் பண்ணிட்றேன்.. டோன்ட் ஒர்ரி. “

மனதில் இருந்த பாரம் இறங்கியது போல இருந்தது.  “ரொம்ப தேங்ஸ் சார்“.

“தேங்ஸெல்லாம் இருக்கட்டும். போன் பண்ணச் சொன்னா போனும் பண்ண மாட்ற.. ஒரு எஸ்எம்எஸ் கூட அனுப்ப மாட்ற…“

எனக்கு அடுத்த மாதம் ஷிப்ட் மாறுகிறது என்ற மகிழ்ச்சியில் அவர் சொன்னது உறைக்கவேயில்லை.  அவசரமாக நன்றி சொல்லி விட்டு வெளியேறினேன்.

ஒவ்வொரு மாதமும் ஷெட்யூலை அப்ரூவ் செய்வதே ராஜாதான் என்பது அவளுக்கு எப்படித் தெரியும் ?

வெற்றியைப் பற்றிச் சொன்ன புகாரை அவர் கண்டுகொள்ளாதது சற்றே ஏமாற்றமாக இருந்தது.  அது சரி.. நான் இப்போதான் வேலைக்குச் சேர்ந்தேன். வெற்றி ரொம்ப நாளாக இருக்கிறான்… நேற்று வந்தவள் சொல்லி அந்தப் புகாரை அப்படியே எடுத்துக் கொள்வார்களா என்ன ?

சொன்னது போலவே அடுத்த மாதம் ஜெனரல் ஷிப்ட் போட்டார்கள்.  ஹாஸ்டலை காலி செய்து விட்டு மீண்டும் வீட்டுக்குப் போனது புதிதாக பல் முளைத்த குழந்தை கன்னத்தைக் கடித்தது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆறு மாதங்கள் முடியும் நாளை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன்.  கிருத்திகா மேடத்தைச் சென்று பார்த்தேன்.

“மேடம்… சிக்ஸ் மன்த்ஸ் முடிஞ்சுடுச்சு மேடம். கன்ஃபர்மேஷன் லெட்டர் எப்போ தருவாங்க…“

“இன்னும் ஒன் வீக்ல வந்துடும்மா.. “

லெட்டர் கிடைத்ததும் கிருஷ்ணனுக்கு லூயி பிலிப் பேன்ட் சர்ட் வாங்கித் தர வேண்டும்.  எனக்காகவே காத்துக் கிடக்கிறான்.   சுகந்திக்கு ட்ரீட் தர வேண்டும் என்றெல்லாம் அகிலா கண்ட கனவு, கனவாகவே போனது.

என் சீட்டுக்கு வந்தான் வெற்றி வேந்தன். “அகிலா… உங்க பெர்பார்மன்ஸ் சரியில்ல… உங்க ப்ரொபேஷன் மூணு மாசத்துக்கு எக்ஸ்டென்ட் பண்ணச் சொல்லி ஹெச் ஆருக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கேன்.  ஒழுங்க பெர்பார்ம் பண்ணுங்க“ என்று சொல்லி விட்டு என் முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கக் காத்திருந்தது போல என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

என் உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடாது என்று எவ்வளவோ முயற்சித்தும் கண்ணீர் சட்டென்று என்னை மீறி வழிந்தது.  டக்கென்று குனிந்து கொண்டேன்.  யாரிடம் முறையிடுவது என்று புரியவில்லை.  இது வரை ஒரு முறை கூட, செய்தி வாசிக்கையில் தடுமாறியதில்லை.  இரண்டு மூன்று முறை உச்சரிப்பில் கோட்டை விட்ட செய்தி வாசிப்பாளர்களைக் கூட, தாமதமின்றி கன்ஃபர்ம் செய்திருப்பது எனக்கே தெரியும்… லீவ் போட்டு விட்டு வீட்டுக்கு சென்று கதறி அழுதேன்…  எனக்கு வேறு வழியே இல்லை என்ற யதார்த்தம் உறைத்தது.  சுகந்திக்கு போன் செய்தேன்.

“கொஞ்சம் பல்லக் கடிச்சிக்கிட்டு ஓட்டு அகிலா… இன்னும் மூணு மாசம்தானே.  ஓடிடும். “

“இல்ல சுகந்தி.  ரிசைன் பண்ணிடலாம்னு நெனைக்கறேன். “

“லூசு மாதிரி பேசாத.. வேலையை விட்டுட்டு என்ன பண்ணுவ ? “

“இந்தப் பொறுக்கிப் பசங்க உன் மேல கண்ணு வச்சுட்டானுங்க… சமாளிச்சுதான் ஆகணும்.“

“எடிட்டர் அப்படி இல்ல சுகந்தி… இந்த வெற்றி பொறுக்கிதான் இப்படி பண்றான்.. “

“அகிலா.. உனக்கு எடிட்டரைப் பத்தித் தெரியாது.  இவன விட அவன் பொறுக்கி.  அவன்தான் எல்லாத்துக்கும் காரணம்.. “

“இல்ல சுகந்தி. அவரு என்கிட்ட டீசன்டாத்தான் நடந்துக்கிறார்… எதுவும் தப்பாப் பேசுனது கிடையாது.“

“நீ சரியான லூசு… அவன் ஒண்ணாம் நம்பர் ரோக்.  எட்டாவதுதான் படிச்சிருக்கான்.. பெரிய டாஷ் மாதிரி பேசுவான். அவனைப் போயி டீசன்டுன்னு சொல்றியே.. அதுதான் பெரிய ஜோக். அழாம வேலைக்கு கௌம்பி வர்றதப் பாரு.“

புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பார்த்து செய்தி வாசிக்கும் அனைவருக்கும் புத்தம் புதிய உடைகளோடுதான் செய்தி வாசிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.  உடைகளை வழங்கவென்று ஒவ்வொரு நாளும் ஒரு துணிக்கடையோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  பெண்களுக்கு ஒவ்வொரு ப்யூட்டி பார்லர் ஒவ்வொரு நாளும் ஸ்பான்சர் செய்து, மேக்கப் கிட் கொடுத்தார்கள்.

செய்தி வாசிக்கும் மகிழ்ச்சியோடு புதிய உடைகளை அணிந்து பார்த்து நன்றாக இருக்கிறதா என்று கேட்டார்கள்.  ஆண்கள் அப்படிக் கேட்கவில்லை.   ஆண்களுக்கு மட்டும் ஏன் மற்ற ஆண்களிடம் என் உடை நன்றாக இருக்கிறதா என்று கேட்கத் தோன்ற மாட்டேன்கிறது… அது மட்டுமில்லாமல் சன் டிவியில் யார் ஆண் செய்தி வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஓரிருவரைத் தவிர எல்லோரும் பெண்கள்தானே…

எனக்கான உடையும் மேக்கப் கிட்டும் வரவேயில்லை.

“மேடம்.. ஸ்பான்சர் ஆர்ட்டிக்கிள்ஸ் வரவேயில்லை மேடம்.. எல்லாருக்கும் வந்துடுச்சு. “

“வெற்றிதான்மா இதுக்கு இன்சார்ஜ்.. அவர்கிட்ட கேளு“ என்பதோடு நிறுத்திக் கொண்டார் கிருத்திகா.

அந்தப் பொறுக்கியிடம் கேட்பதற்கு சும்மாவே இருக்கலாம். எவ்வளவு அல்பமாக நடந்து கொள்கிறான்.

தீபாவளி நெருங்கியது.  அனைவருக்கும் இன்சென்டீவ் போட்டார்கள்.  இன்சென்டீவை எடுத்து சர்ப்ரைஸாக அவனுக்கு இந்த முறையாவது பேன்ட் ஷர்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும்.  ஒன்பது மாசமும் முடியப்போகிறது.  கன்பர்மேஷனும் வந்து விடும்.

அன்று மாலையில் ஏடிஎம்மில் செக் பண்ணியதில் இன்சென்டீவ் வரவில்லை என்பது தெரிந்தது.  ‘மற்றவர்களுக்கெல்லாம் வந்து விட்டது என்றார்களே… சரி… ஏதாவது அக்கவுன்டிங் டிலேவாக இருக்கும். நாளை பார்த்துக் கொள்ளலாம்.  நாளை முதல் வேலையாக ஹெச் ஆரில் கேட்க வேண்டும்’

மறுநாள் காலை முதலே எல்லோரும் தனித்தனியாக ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஏதோ நடக்கிறது என்று புரிந்தாலும், நியூசுக்கு நேரமாகி விட்டதால் செய்தி வாசிக்க தயாரானேன்.   லைவ் முடிந்ததும் வெளியே வந்து நேராக சுகந்தியிடம் போனேன்.  “என்னடி எல்லாரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டிருக்காங்க… ? “

“எல்லாம் உன் எதிரி மேட்டர்தான்…. இரு வர்றேன்“ என்று சிஸ்டம் முன்னால் உட்கார்து அவள் மெயிலை திறந்தாள்.  பத்து அட்டாச்மென்ட் இருந்தது.

பத்தும் புகைப்படங்கள்.  பத்துப் படங்களிலும் வெற்றி வேந்தன், மற்ற செய்தி வாசிப்பாளர்களோடு நெருக்கமாக கட்டி அணைத்தபடியும், தோளில் கை போட்டபடியும், முத்தமிட முயற்சி செய்தபடியும் இருந்த போட்டோக்கள்.   வாயடைத்துப்போனேன்.  “என்னடி இது… ? “

601406_146940495472714_209931663_n

“இதுல ஆச்சர்யப்பட என்னடி இருக்கு ?  அவன்தான் எவ்வளவு பெரிய பொறுக்கின்னு சொன்னேனே.. இதெல்லாம் மேக்கப் ரூம்ல எடுத்தது. “

“அதெல்லாம் சரி.. இதை எதுக்குடி போட்டோ எடுத்து வச்சுக்கறான்.. “

“ஆம்பளைக்கு எத்தனை பொம்பளையோட படுத்தோம்னு காட்றது ஆம்பளைத்தனத்தோட அடையாளம்டி… நெறய்ய பேராட படுத்தான்னா அவன் காதல் இளவரசன்.. பெரிய ஆம்பளை. இதையே பொண்ணு செஞ்சா தேவிடியான்னு சொல்லுவாங்க…  இந்தப் பொறுக்கி இந்த போட்டோவையெல்லாம் எடுத்துட்டுப் போயி அவன் ஃப்ரென்ட்ஸுகிட்ட பீத்திப்பான்.  அவன் ஃப்ரென்ட்ஸ் அவன மாதிரிதானே இருப்பாங்க..  மச்சான் உனக்கு மச்சம்டானு அவனை உசுப்பேத்துவாங்க… இவன் இன்னும் எடுத்துக்கிட்டே இருப்பான்.. “

“இப்போ என்னடி ஆகும்…  அவனை வேலையை விட்டு தூக்கிடுவாங்களா.. ? “

“நீ வேற… அவனையாவது தூக்கறதாவது.. இந்த போட்டோவாவது துணியோட இருக்கு.  துணியே இல்லாம போட்டோ ரிலீஸ் ஆனாக் கூட, அந்த எடிட்டர் பொறுக்கி அவனை மாத்த மாட்டான் பாரு. “

“இல்ல ஏதாவது ஆக்ஷன் எடுப்பாங்கடி.. “

“நீ எப்பவுமே லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா…“

”நீ வேணா பாரேன்…  அவனை வேலைய விட்டே தூக்கப் போறாங்க“

“பாக்கலாம்… பாக்கலாம்.. “

சுகந்தி சரியாகத்தான் சொன்னாள் என்பது மறுநாளே தெரிந்தது.  வெற்றி வேந்தனை சீஃப் ரிப்போர்டராக பதவி உயர்வு அளித்து திருச்சிக்கு மாற்றினார்கள். அந்த போட்டோக்களில் சிக்கிய இரு பெண்கள் ராஜினாமா செய்தார்கள். ஒருத்தி எதுவுமே நடக்காதது போல தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தாள்.    இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை செய்திருக்கிறான் அவனுக்கு பதவி உயர்வு கொடுக்கிறார்களே…

‘சரி.. அவன் கதை நமக்கு எதற்கு.  நம்ப கதையைப் பாப்போம். இன்சென்டீவ் என்னாச்சுன்னு நேரா ஹெச் ஆர்ல போயிக் கேட்டுடுவோம்.’ என்று முடிவு செய்து நேராக ஹெச்ஆர் சென்றேன்.

அங்கே இன்சார்ஜாக இருந்தவரிடம் சென்று கேட்டதுமே, அகிலாவா… உன் இன்சென்டீவை எடிட்டர் ஹோல்ட் பண்ணி வைக்கச் சொல்லியிருக்கார்மா.. “  என்றார்.

“ஏன் சார்… ? “

“எனக்கு எப்படிம்மா தெரியும்.. ? “ என்று அவர் மீண்டும் கம்ப்யூட்டரில் தலையை நுழைத்துக் கொண்டார்.

கோபம் வந்தது. சுகந்தி சொன்னது நினைவுக்கு வந்தது.  கதவைத் தட்டாமலேயே உள்ளே நுழைந்தேன்.

“சார் ஏன் சார் என் இன்சென்டீவை நிறுத்தி வைக்கச் சொன்னீங்க… ? “

“உக்காரும்மா…  நான் எப்போ நிறுத்தி வைக்கச் சொன்னேன்… ஹெச் ஆர்ல தப்பா சொல்லிருப்பாங்க.  நான் அந்த மாதிரி எந்த உத்தரவும் போடல.  நான் ஏன்மா உன் இன்சென்டீவை நிறுத்தி வைக்கச் சொல்லப்போறேன் ? “

“இல்ல சார் ஹெச் ஆர்ல நீங்கதான் நிறுத்தி வைக்கச் சொன்னதா சொன்னாங்க. அவங்க தப்பா சொல்லியிருப்பாங்கம்மா. நான் பாத்துக்கறேன். நீ கவலைப் படாமப் போ..

“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லம்மா.. நீதான் பொழைக்கத்தெரியாத பொண்ணா இருக்க. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரிஞ்சுக்கவே மாட்ற..“ லேசாக உறைத்தது.  சுகந்தி ஆரம்பம் முதலே சொல்லி வந்தது உண்மைதான்.

“வர்றேன் சார்.. “ என்று வேறு எதுவுமே சொல்லாமல் கிளம்பினேன்.

“போன் பண்ணும்மா.. போன் பண்ணச் சொன்னா பண்ணவே மாட்ற…“

“பண்றேன் சார்“ என்று சொல்லி விட்டு வெளியேறினேன்.

“சுகந்தி நீ சொன்னது கரெக்ட்தான். இவனும் பொறுக்கிதான்.  இன்னைக்கு பொறுக்கித்தனத்தை காமிச்சுட்டான். “

“நான்தான் அப்போலேர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கேன்.  நீதான் நம்பவேயில்ல.. இப்போப் பாத்தியா.. என்ன பண்ணான் “

சொன்னேன்.   “தெரியும்பா எனக்கு.. உனக்கு தொடர்ந்து மார்னிங் ஷிப்ட் போட்டதே அதுக்குதான்.  அப்போதான் வழிக்கு வருவன்னுதான்.  நீதான் புரிஞ்சுக்கல.. எடிட்டர் பெரிய டாஷுன்னு சொல்லிட்டு இருந்த.. “

“இவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லையா… ஏன் இப்படி பண்றான்.. “

“ஏன் இல்ல…  இவன் பொண்டாட்டி பேரு ஜெயலலிதா… அவ செக்ரட்டேரியட்ல பிஆர்ஓவா இருக்கா.  பொண்ணு ராமச்சந்திராவுல மெடிசின் படிக்கிறா…“

“இவன் பொண்ணையும் பொண்டாட்டியையும் இப்படி யாராவது கூப்பிட்டா அப்போ என்னடி பண்ணுவான்.. “

“கூப்பிட மாட்டாங்கன்ற தைரியம்தான். தனக்குன்னு வந்தாத்தானே அதுக்கான வலி தெரியும். “

வீட்டுக்கு சென்று போனும் பண்ணவில்லை எஸ்எம்எஸ்சும் அனுப்பவில்லை.  எரிச்சலாக இருந்தது.

ஒரு வாரத்துக்கு என்னைக் கூப்பிடவேயில்லை.  இன்சென்டீவ் அப்படியே இழுத்துக் கொண்டிருந்தது. இன்னும் கைக்கு வரவில்லை.

அதற்குள் அலுவலகம் முழுக்க நான் திருச்சிக்கு மாற்றல் கேட்டிருப்பதாக தகவல் பரவியது.   அனைவரும் வந்து ஏன் மாற்றல் வாங்கிக் கொண்டு போகிறாய் என்று துக்கம் விசாரித்தார்கள்.

நேராக கிருத்திகா அறைக்குச் சென்றேன்.  “மேடம் என்னை திருச்சிக்கு மாத்தப் போறீங்களா…“

“நான் ஏம்மா மாத்தறேன்.. நீதான் திருச்சிக்கு போறேன்னு வில்லிங்னெஸ் குடுத்துருக்கறதா எடிட்டர் சொன்னாரு.. “

“நான் ஏம் மேடம் குடுக்கறேன்.  எல்லாரும் வெளியூர்லேர்ந்து சென்னைக்கு வந்து வேலை செய்வாங்க.. நான் ஏன் சென்னையிலேர்ந்து வெளியூர் போகணும்.. அதுவும் இல்லாம ரிப்போர்டரத்தானே மாத்துவாங்க.  நான் நியூஸ் ரீடர் மேடம். “

“எனக்குத் தெரியலம்மா.  எடிட்டர்தான் சொன்னார்.  அப்புறம் நீ ஃப்ரீலான்சரா, நியூஸ் ஸ்லாட் இருந்தா வந்து படிக்கற மாதிரி மாத்திக்கறேன்னு சொன்னதாவும் அவர்தான் சொன்னார். “

என் எரிச்சல் உச்சத்தை அடைந்தது. இன்று ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் மறுவேலை.  என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

“சார்.   என் கன்பர்மேஷன் லெட்டர் என்ன சார் ஆச்சு ? வரும்மா… ஏன் அவசரப்பட்ற.. “

“எத்தனை நாள் சார் வெயிட் பண்றது ? “

“இங்க பாரும்மா.. கன்பர்மேஷன் லெட்டர் என்கிட்டதான் இருக்கு.  இன்னைக்குதான் அப்ரூவலுக்கு வந்துச்சு… இந்தா“

அந்த கன்பர்மேஷன் லெட்டர் எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை.

“இன்சென்டீவ் சார்.. “

“எல்லாம் சரியாயிடும்.. நான் உனக்கு எல்லாம் பண்றதுக்கு ரெடின்னு சொல்றேன்.. நீதான் எதையுமே காதுல வாங்க மாட்ற.. அட்லீஸ்ட் ஒரு போனாவது பண்ணுவன்னு பாத்தா பண்ணவே மாட்ற… நான் என்னதான் பண்றது சொல்லு ? “

“போன் பண்றேன் சார். “

மாலை சொன்னது போலவே போனில் பேசினேன்.  கவனமாக ரெக்கார்டரை ஆன் செய்தேன்.

“சார் இந்த இன்சென்டீவ் க்ரெடிட் ஆயிடுமா சார் ?“

“இல்லம்மா ரெண்டு நாள் ஆகும்.  அதை நீ மொதல்லே முடிச்சுருக்கணும்.  கன்பர்ம் ஆனதுக்குத்தான் கையெழுத்து போட்ருக்கேன். ரெண்டு நாள் ஆகும். “

“நீ ரொம்ப மக்கா இருக்க,, உனக்கு ஏற்கனவே கெடச்சுருக்கணும்.  நீ எப்போப் பாத்தாலும் இவன் திட்றான் சண்டை போட்றான்னு சொல்லிக்கிட்டு இருக்க. “

“கன்பர்ம் பண்ணிட்டீங்கள்ள சார்.. “

“அதெல்லாம் பண்ணிட்டேன். வேற.. மத்த உன்னோட கோரிக்கைகளெல்லாம் படிப்படியா நிறைவேற்றப்படும். இப்போ நல்லாருக்கு உன்னோட மேக்கப்… நல்லா ஜம்முனு இருக்கு.  நல்லா அழகா சின்னப்பொண்ணு மாதிரி இருக்கு.“

“தேங்கக்யூ சார்“

“வேற என்ன.. ? “

“வேற ஒன்னும் இல்ல சார்“

“வேற அப்புறம் என்ன ? “

“ஒன்னும் இல்ல சார்“

“இதுக்கு ட்ரீட் ஒன்னும் கெடையாதா“

“ம்ம்… தீபாவளி வாழ்த்துக்கள் சார்…“

“ம்ம் நன்றி“

பேசி முடித்ததும் கிருஷ்ணனிடம் போட்டுக் காண்பித்தேன். பொறுமையாக இருப்போம்.  மீண்டும் பிரச்சினை செய்தால் என்ன செய்வதென்று யோசிப்போம் என்றான்.

பத்து நாட்கள் கடந்தும் இன்சென்டீவ் வரவேயில்லை.  ஆனால் எனக்கு தொடர்ந்து எஸ்எம்எஸ்கள் வந்தபடியே இருந்தன. குட்மார்னிங்.. இந்த பொறுக்கி  குட்மார்னிங் சொல்லாவிட்டால் விடியாதா.. தினமும் ஏதாவது மெசேஜ்கள் வந்துகொண்டிருந்தன.  நான் எதற்கும் பதில் அனுப்பவில்லை.

பத்து நாட்கள் கழித்து மீண்டும் ராஜாவை சந்தித்தேன்.

“சார் இன்னும் இன்சென்டீவ் போடல சார். “

“வரும்மா அதுவா வரும்.. போயி ஒழுங்கா வேலையப் பாரு.“

“சார் ரெண்டு நாள்ல வந்துடும்னு சொன்னீங்க. வரும்னா வரும்மா.. என்ன ஓவரா கத்தற… என்ன நெனச்சுக்கிட்டு இருக்கற உன் மனசுல.. எப்போப் பாத்தாலும் சண்டை போட்டுக்கிட்டு.. வேலை செய்ய வந்தியா சண்டை போட வந்தியா ? உன்னை மாதிரி பல பேரை பாத்துருக்கேம்மா… கடைசில வேலையை ரிசைன் பண்ணிட்டுத்தான் போவாங்க..  இந்த ஓவரா சவுண்ட் குடுக்கற வேலையெல்லாம் வச்சுக்காத“

அவன் பேசிய தோரணை எழுந்து வந்து அடித்து விடுவானோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. பயத்தோடே வெளியேறினேன்.

இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.  ராஜா நேராக கிருத்திகா கேபினுக்குச் சென்று எல்லோருக்கும் கேட்கும்படி கத்தினார்.

“அகிலாவுக்கு மார்னிங் ஷிப்ட்தானே போடச் சொல்லியிருந்தேன்… யாரைக் கேட்டு மாத்தினீங்க… இல்ல சார் கன்டினியூஸா மார்னிங்…. என்று முடிப்பதற்குள், “இங்க நான் எடிட்டரா நீங்க எடிட்டரா ? “ என்று கத்தினார்.

அந்தக் கத்தல் என் காதில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் என்பது புரிந்தது.  மீண்டும் மார்னிங் ஷிப்டா….  ஆண்டவா….  என்ன செய்யப்போகிறேன்..

ராஜா கத்திக் கொண்டிருக்கும்போதே, ஷிப்டுக்காக கிருஷ்ணன் உள்ளே நுழைந்தான்.   “யோவ் என்னய்யா எடிட் பண்ணிருக்க அந்த வீடியோவ… ? உன் மொகரை மாதிரியே இருக்கு… வேற வேலை வெட்டியே இல்லையாய்யா உனக்கு… ஊருக்குள்ள வேல வெட்டி கிடைக்காதவன் எல்லாம் இங்க வந்துட்டாங்க.. எங்கயாவது போக வேண்டியது தானே..  உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா யா..? செய்யற வேலய கொஞ்சமாவது மனசாட்சியோட செய்..”

கிருஷ்ணன் அழும் நிலைக்கு வந்தான்.  அகிலா ஒரு முடிவுக்கு வந்தாள். ‘என்னை இழிவுபடுத்தினான். மறைமுகமாக படுக்க அழைத்தான்.  என் நிதியாதாரங்களை முடக்கினான்.  சிறுமைப்பட வைத்தான். அவனிடம் கெஞ்ச வைத்தான்.  அத்தனையும் பொறுத்துக் கொண்டேன்.  என்னைக் காதலிக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக…….. அகிலா ஒரு முடிவெடுத்தாள்.


மோசடியில் ஈடுபட்டாரா ராம.செல்வராஜ் ?

$
0
0

தமிழ்நாட்டின் மிக மிகச் சிறந்த புலனாய்வு நிருபர் யாரென்றால் அது சன் டிவியின் ராம செல்வராஜ்தான். இவரைப்போல ஒரு அப்பாடக்கர் நிருபரை பார்க்கவே முடியாது.  தனக்குத் தெரியாத விஷயங்கள் உலகில் எதுவுமே இல்லை என்பது போலப் பேசுவார்.

IMG_5410

சென்னை நகரில் நடக்கும் அனைத்து பெரிய குற்றங்களிலும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று இவர் கொடுக்கும் வர்ணனை இருக்கிறதே…. அப்பப்பா…  அப்படி ஒரு வர்ணனை.  சம்பவம் நடக்கையில் பக்கத்தில் இருந்து நேராகப் பார்த்தது போலவே வர்ணிப்பார். ஒரு சம்பவத்தை நேரடியாகப் பார்த்தது போலவே அப்படியே வர்ணிப்பது ஒரு செய்தியாளரின் திறமைதான்.  ஆனால் நடக்காத பொய்யை அப்படியே வர்ணிப்பது… ? அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.  ராம.செல்வராஜ் இது போல பல குற்ற நிகழ்வுகளில் காவல்துறைக்கு ஆதரவாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் பல முறை செய்தி வழங்கியிருக்கிறார்.  வேளச்சேரி என்கவுன்டரில் 5 பேரை, காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒரு உதாரணம்.   ஆனால் செல்வராஜ் செய்ததிலேயே மிகப்பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் போராட்ட சமயத்தில்தான்.

ஏதோ ஒரு காரணத்துக்காக கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி, எப்படியாவது அணு உலையை திறந்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்த சமயம்.  கூடங்குளத்தில் அப்போது நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் முகிலன், தோழர் சதீஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகியோரை காவல்துறையினர் பயங்கரமான நக்சலைட்டுகள் என்று செய்தியை பரப்பினார்கள்.  இந்தச் செய்தியை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கு மத்திய உளவுத்துறை பயன்படுத்திய ஊடகம் சன் டிவி மற்றும் தினமலர்.

காவல்துறையின் தூண்டுதல் காரணமாக, ஒரு செய்தியை மிகைப்படுத்திச் சொல்வதைக் கூட மன்னித்து விடலாம்.  ஆனால் இல்லாத ஒரு பொய்யை உண்மையாக சித்தரிப்பதை மன்னிக்கவே முடியாது.  அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.

கூடங்குளம் விவகாரத்தில் நடந்தது பச்சைப் பொய்.  தோழர் முகிலன் மற்றும் தோழர் சதீஷ் ஆகியோர் இதற்கு முன்னால் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கைதானவர்கள் என்பது உண்மையே.  ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக, இவர்கள் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.  பொதுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.  சமூகத்தை நேசிப்பவர்களான இவர்கள், கூடங்குளம் விவகாரத்தில் அம்மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இயல்பே.  அப்படி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, கூடங்குளம் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் என்ற செய்தி காவல்துறையால் பரப்பப்படுகிறது.

DSC_0940

தோழர் சதீஷ்

சதீஷ் கைது செய்யப்பட்டபோது அந்தச் செய்தியை சன்டிவிக்காக வெளியிட்ட ராம.செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா ?  “கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக காவல்துறையினர் சதீஷ் என்ற நக்லைட்டை கைது செய்துள்ளனர்.  கூடங்குளம் அணு உலையை தகர்ப்பதற்காக நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.  பெருவாரியான மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து இந்தப் போராட்டங்களை நடத்துவது நக்சலைட்டுகள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.  நக்சலைட்டுகள் ஊடுருவல் குறித்து எங்களுக்கு நீண்ட நாட்களாகவே தகவல் இருந்து வந்தது. இந்நிலையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம்.  அந்தக் கண்காணிப்பின் விளைவாகவே சதீஷ், முகிலன் மற்றும் வன்னி அரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்” என்று செய்தி அளித்தார் ராம.செல்வராஜ்.

இந்தத் தகவலை ராம.செல்வராஜுக்கு வழங்கியது ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கக் கூடும்.  காவல்துறையினர் இது போல ஆயிரம் தகவல்களைத் தருவார்கள்.  அதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். ஒரு பத்திரிக்கையாளரின் பணி, காவல்துறையினர் அளிக்கும் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அத்தகவலை மக்களுக்கு வழங்குவதே.  சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்பது எனக்குத் தெரியாது என்று ராம.செல்வராஜ் சொல்லுவாரேயானால், அவர் பத்திரிக்கையாளராக இருக்க லாயக்கே இல்லை.  ஏதாவது மளிகைக் கடையில் பொட்டலம் கட்டச் செல்லலாம்.  ஆனால், சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்று தெரிந்தும், அவ்வாறு விசாரிக்காமல் காவல்துறை சொன்னதை மட்டும் வெளியிட்டால் அது தெரிந்தே செய்த அயோக்கியத்தனமா இல்லையா ?

ராம.செல்வராஜ் இப்படி தெரிந்தே ஒரு அயோக்கியத்தனத்தை அந்தக் கைது விவகாரத்தில் செய்தார். சதீஷ் ஒரு பயங்கரமான நக்சலைட் என்று செய்தி வெளியிட்ட சன் டிவி, சதீஷின் புகைப்படத்தை காண்பித்தது. கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் என்ற செய்தி வெளியிட்ட ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் குறித்து, சவுக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் போடப்பட்டிருந்த சதீஷின் புகைப்படம், சன் டிவி செய்தி வாசிக்கையில் பயன்படுத்தப்பட்டது.  அந்த ஆர்ப்பாட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சவுக்கு தளத்திலேயே உள்ளது.  தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜுக்கு நன்கு தெரியும்.  சதீஷ் யார், அவர் தற்போது மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளாரா என்பதை விசாரிக்க எத்தனை நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள் ?

DSC_6669

சவுக்கு தளத்தில் வெளியான சதீஷ் புகைப்படம்

ஆனால் அவ்வாறு விசாரிக்காமல், விசாரிக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபரை, நக்சலைட் என்று கூசாமல் பொய்யை உண்மை போலவே அரங்கேற்றிய ராம.செல்வராஜ் ஒரு பத்திரிக்கையாளரா ?

இந்த யோக்கிய சிகாமணி செய்த சட்டவிரோத காரியம் என்னவென்று பார்ப்போமா ?

சன் டிவியின் தலைமை செய்தியாசிரியர் ராஜா பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார் என்பதை சவுக்கு வாசர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவீர்கள்.  இந்த ராஜாவை, சனிக்கிழமையன்று காலை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் மற்றும் சன் டிவி நிலைய வித்வான் மகாலட்சுமி ஆகியோர் சிறையில் சந்தித்துள்ளனர்.  புழல் சிறையைப் பொறுத்தவரை, வாரநாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் கைதிகளை சந்திக்கலாம்.  சனிக்கிழமையைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க முடியும்.  மகாலட்சுமியைப் பொறுத்தவரை அவர் சன் டிவியில் பகுதி நேர நிகழ்ச்சி வழங்கினாலும், பதிவு பெற்ற வழக்கறிஞர்.  நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்.   ஆனால் ராம.செல்வராஜ் சட்டம் படித்துள்ளார்.  வழக்கறிஞர் அல்ல.

சட்டம் படிப்பதற்கும், வழக்கறிஞராக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது.  ஒருவர் சட்டம் படித்து விட்டதாலேயே வழக்கறிஞராகிவிட முடியாது.  சட்டம் முடித்து, அந்தந்த மாநில வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Council) பதிவு செய்தால் மட்டுமே வழக்கறிஞராக முடியும்.  அப்படி வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு, நிரந்தரமான வேறு வேலைகளுக்கு போகக் கூடாது.  அப்படி வேலைக்குச் சென்றால், அந்த வேலையில் இருக்கும் வரை, தங்களின் வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த பிறகுதான் வேலைக்குப் போக இயலும்.  எளிமையாக, சவுக்கு வாசகர்கள் கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொள்ளும் வகையில் சொல்லுவதென்றால், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த வாதப்புலி வண்டுமுருகன் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.   இவர் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பணியில் இருக்க வேண்டும்.  இப்படி நியமிக்கப்பட்டதும் வண்டு முருகன், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டும். நான் இது போன்ற ஒரு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளேன், அல்லது ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.  ஆகையால் எனது வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று கடிதம் அளித்தன் அடிப்படையில் அவரின் பதிவை பார் கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்யும்.  டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததும், மீண்டும் பதிவை புதுப்பித்து வழக்கறிஞராக தொழில் செய்யலாம்.

ராம.செல்வராஜ் சன் டிவியின் க்ரைம் பீட் பார்க்கும் செய்தியாளர்.  முழு நேர ஊழியர்.   இவர் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.  அப்படியே செய்திருந்தாலும் முழு நேர ஊழியராக இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தநிலையில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உள்ள சலுகையான சனிக்கிழமை கைதிகளை பார்க்கும் சலுகையை அனுபவித்துள்ளார்.  சனிக்கிழமை கைதிகளை பார்க்க விரும்பும் வழக்கறிஞர்கள் பார்க் கவுன்சில் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.  அப்படிக் காண்பித்த பிறகே, கைதிகளைப் பார்க்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  அப்படி இருக்கையில் புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் எப்படி சிறைக்குள் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார் ?

இதற்குக் காரணம், கல்லாப்பெட்டி கருப்பண்ணன் என்று கைதிகளால் அன்போடு அழைக்கப்படும் புழல் சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன்.  சனிக்கிழமை அன்று ராம.செல்வராஜும், மகாலட்சுமியும் ராஜாவைப் பார்ப்பதற்கு முன் நேராக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் அறைக்குச் சென்றுள்ளனர்.  அவர் அறைக்குச் சென்று விவாதித்த பிறகு, கீழே இறங்கி ராஜாவைப் பார்த்துள்ளனர். இந்த கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன.  இது தவிரவும், சிறையில் சமைப்பதற்கான வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கள்ளத்தனமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.  ஆனால், இந்த கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய “சரிபாதி கேட்கும் திரிபாதி” கண்டும் காணாமலும் இருக்கிறார்.  இவரும் சிலிண்டர் விற்பனையில் பங்குதாரரா என்பது குறித்து  நமக்கு தவல்கள் இல்லை. ராம.செல்வராஜ் சனிக்கிழமை புழல் சிறை சென்று ராஜாவை பார்த்த வீடியோ பதிவுகள் சிறையில் இன்னும் இருக்கும். திரிபாதி அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்க முடியும்.  பார்ப்போம் செய்கிறாரா என்று.

ராம.செல்வராஜும், மற்றொரு வழக்கறிஞரான மகாலட்சுமியும், நாள் தவறாமல், ராஜாவை புழல் சிறையில் சந்தித்து வருகின்றனர். ராம.செல்வராஜ் குறித்து பார்த்து விட்டோம்.  யார் இந்த  மகாலட்சுமி ?

மகாலட்சுமி ராஜகோபால். இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். சன் டிவியின் நிலைய வித்வான் வழக்கறிஞர். அப்படியென்றால், சன் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் வரும் ஆலோசனை நேரம் நிகழ்ச்சியில் உள்ளுர் சட்டம் முதல் சர்வதேச சட்டம் வரை விலாவாரியாக அலசுவார். தற்போது அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, இவர் செய்தி வாசிப்பாளராக, சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வருகிறார்.

217009_216938881654467_1571989_n

வழக்கறிஞர் மகாலட்சுமி

தற்போது, சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள், மற்றும் முன்னாள் செய்தி ஆசிரியர் ராஜா மீதான புகாரில் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கக் கூடியவர்களிடம், "போலீசார் உங்களை ஏதாவது கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லுங்கள். நாளைக்கு கோர்ட்டு, கேசு என்று அலைய வேண்டி வரும்... நான் வக்கீல், எத்தனையோ பேரை நானே குறுக்கு விசாரணை செய்திருக்கிறேன். சமயங்களில் குறுக்கு விசாரணை ஒரு வாரம் கூட தோடர்ந்து நடைபெறும்" என்று பேசி வருகிறார். ஒரு வழக்கின் புலன் விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், சாட்சிகளிடம் இது போலப் பேசுவது, இந்திய தண்டனைச் சட்டம் 202 மற்றும் 203 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கக் கூடிய குற்ம் என்பது சட்டம் படித்த மகாலட்சுமிக்கு எப்படித் தெரியாமல் போனது.

இது தவிரவும், இவ்வாறு சாட்சிகளைக் கலைக்கும் பணியில் ஈடுபடுவதால் இவரை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109ன் கீழ், ராஜாவுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, இதே வழக்கில் குற்றவாளியாகவும் சேர்க்க முடியும்.

வழக்கறிஞர் என்று சனிக்கிழமை அன்று புழல் சிறையில் கைதியைப் பார்த்த குற்றத்துக்காக ராம.செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, இந்திய தண்டனைச் சட்டத்தில் வழி உண்டு.  இது தவிரவும், சன் டிவியின் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரை சனிக்கிழமை அன்று கைதியைப் பார்க்க அனுமதித்ததோடு,  அவரை சந்தித்து அரை மணி நேரம் விவாதித்து, ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்த குற்றத்துக்காக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உளவுத்துறை டிஜிபியான ராமானுஜத்தைத் தவிர ஒரு அதிகாரி கூட ஜெயலலிதாவுக்கு உண்மையாக செயல்படுவதாகத் தெரியவில்லை.  ராமானுஜம் அவர்கள்தான் முன்முயற்சி எடுத்து இந்தத் தகவல்களை ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ராஜாவின் மீதான வழக்கை உடைத்து, ராஜாவை மீண்டும் சன்டிவியின் செய்தி ஆசிரியராக நியமிப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  சாட்சிகளும் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.  ராமானுஜம் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

குட்டி ஆடுகளும் குள்ளநரிகளும்.

$
0
0

59922_103295999847890_560997797_nகுட்டி ஆடு தப்பிவந்தால் 

குள்ளநரிக்குச் சொந்தம்! 
குள்ளநரி மாட்டிகிட்டா 
கொறவனுக்குச் சொந்தம்! 

தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் 
பட்டதெல்லாம் சொந்தம்! 
சட்டப்படி பார்க்கப்போனால்

எட்டடிதான் சொந்தம் !

என்றார் பட்டுக்கோடை கல்யாண சுந்தரம்.

என்ன அழகான  வரிகள் !!! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம். அப்படிப்பட்ட தட்டுக்கெட்ட மனிதர்களைப் பற்றிய கட்டுரைதான் இது.  மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த ஆசைகளே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர்.  ஆனால், அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் ஒரு போலிச் சாமியார்.  தன்னை முற்றும் கடந்து மோனநிலையை அடைந்தவர் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு நபரே ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு, சொகுசு பங்களாவில் குடியிருக்கையில், ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்னவெல்லாம் செய்வார் ?

பாலியல் உணர்வு இல்லாத உயிரினமே இல்லை.  அந்த உணர்வு இல்லையென்றால் உலகம் இயங்காது.  அந்த உணர்வுதான் உயிரியல் பெருக்கத்தால் மனிதன் உட்பட உலகில் இத்தனை உயிரினங்கள் தோன்றக் காரணமாக இருந்து வருகிறது.  சிந்திக்கும் திறன் காரணமாக மனிதன் மற்ற உயிரினங்களைப் போல அல்லாமல், பாலியல் உணர்வை புரிந்து உணர்ந்து அனுபவிக்கிறான்.  மற்ற உயிரினங்கள், உயிர்ப்பெருக்கத்துக்காக, அனிச்சையாக ஈடுபடும் செயலை மனிதன் அனுபவித்துச் செய்கிறான்.

மனிதனின் வாழ்வில், கோபம், பசி, தூக்கம், போலத்தான் பாலியல் உணர்வும் ஒரு பகுதி.  பசி தூக்கம், கோபம் போன்றவை இருக்க வேண்டிய அளவில் இருத்தல், மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது.  இவற்றில் எது அளவு மீறினாலும், அதன் தன்மைக்கு ஏற்ப அவன் தடம் பிறழ்கிறான்.

வாசுதேவ் ராஜா.  (பெயரிலேயே சிறப்பு இருக்கிறது பாருங்கள்.  இரண்டு அயோக்கியர்களின் பெயரை தன் பெயரில் வைத்திருக்கிறார். ஜக்கி வாசுதேவ் + ஆண்டிமுத்து ராஜா)   சன் டிவி ராஜா என்று பிரபலமாக அழைக்கப்படுபவர்.    ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறுதல்,  தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் தொழிலதிபர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருதல், அரசியலில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பிடிக்காத எதிரிகளை அழித்து ஒழித்தல், தனியார் நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டிகளைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக மற்ற நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்டு அந்நிறுவனத்தை அழித்தல் போன்ற வேலைகளோடு சன் நியுஸ் நிறுவனத்தில் தலைமை செய்தி ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.  இந்த வேலைகளெல்லாம் இவரது பகுதி நேர வேலை.  முழு நேர வேலை பேண்டில் ஜிப் போடாமல் மார்கழி மாதத்து நாயைப் போல அலைவது.

சில தலித் இளைஞர்கள், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு, பெண்களை சீரழிப்பதையே முழு நேர தொழிலாகச் செய்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினாரே மருத்துவர் அய்யா, அந்த மருத்துவர் அய்யாவின் அதே சாதியைச் சேர்ந்தவர்தான் இந்த வாசுதேவ் ராஜா.  அப்பாவிப் பெண்களைச் சீரழிப்பவர்கள் எந்த குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சொந்தமில்லை  என்பதை மருத்துவர் அய்யா இப்போதாவது உணர வேண்டும்.

காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா.  எட்டாவது வரை படித்துள்ளார்.  தொடக்க காலத்தில் ராமதாஸின் எடுபிடியாக வேலை பார்த்து வந்தார். பிறகு அவரிடமிருந்து பிரிந்து முரசொலி மாறனிடம் எடுபிடி வேலை பார்க்கிறார். அப்படி வேலை பார்த்துக் கொண்டே பத்திரிக்கை உலகில் நுழைகிறார். சிறிது நாட்கள் முரசொலியின் இணைப்பாக வெளிவந்து கொண்டிருந்த புதையல் என்ற இணைப்பு இதழில் பணியாற்றினார்.  சிறிது காலம் தமிழன் என்ற பத்திரிக்கையிலும், திருநாவுக்கரசு நடத்திய பொன்மனம் என்ற பத்திரிக்கையிலும் பணியாற்றினார்.  தினப்புரட்சி இதழிலும் சில காலம் பணியாற்றியிருக்கிறார்.  இவர் மாமனார் சண்முகநாதன் தினத்தந்தியில் செய்தியாசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

சன் டிவி தொடங்கப்பட்டதும் 1996 வாக்கில் முரசொலி மாறனின் பரிந்துரையில் சன் டிவியில் நுழைகிறார்.  அதற்கு முன்பு முரசொலி அலுவலகத்தில் வேலை பார்க்கும்போதே பேண்டில் ஜிப் போட மாட்டார்… சன் டிவிக்கு வந்ததும் கேட்க வேண்டுமா… ஏறக்குறைய பேண்டே போட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

கேபிள் தொலைக்காட்சியின் தொடக்கத்திலேயே உருவான சன் டிவியின் செய்திகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது.  ஏனெனில், தூர்தர்ஷனில் செய்திகளை தொடர்ந்து வாசித்தால் தினமணியை படிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும்.  சன் டிவி, தினத்தந்தி வடிவில் செய்திகளை அளித்தால் பெரும் வரவேற்பு இருந்தது.  மேலும், அப்போதைய ஜெயலலிதா ஆட்சி போன்றதொரு மோசமான ஆட்சியை பார்க்கவே முடியாது. அவ்வளவு அக்கிரமங்கள் அநியாயங்கள்.  இந்த அநியாயங்கள் குறித்த செய்திகளை தூர்தர்ஷனில் சற்றும் பார்க்க முடியாது. அதில் அரசு செய்திக் குறிப்புகளும், அரசு விழாக்கள் குறித்த செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கும்.  அந்த நேரத்தில்தான் சன் செய்திகள் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடக்க காலத்திலேயே சன் டிவியில் சேர்ந்த ராஜா, கலாநிதி மாறனோடு ஏற்பட்ட நெருக்கத்தாலும், அவரது திறமையினாலும் தனக்கென ஒரு வலுவான இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.  ஒரு கட்டத்தில் சன் செய்திகள் என்றால் அது ராஜாதான் என்ற நிலையை உருவாக்கினார்.   சன் டிவியில் மேலே உயர உயர, ராஜாவுக்குள் ஒளிந்திருந்த வக்ர புத்தி வெளிவரத் தொடங்கியது.  தூர்தர்ஷனில் நீண்ட காலம் செய்தி வாசிப்பாளர்களாக இருந்து சன் டிவிக்கு வந்தவர்கள், பணியில் மூத்த நிர்மலா பெரியசாமி போன்றவர்களை அவதூறான சொற்களைப் பயன்படுத்தி ஏசுவது, தான் கலாநிதி மாறனோடு நெருக்கம் என்பதால், தன்னை யாருமே அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் சகட்டு மேனிக்கு அனைவரையும் அவதூறாகப் பேசத்தொடங்கினார்.  ராஜாவுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையாலும், உளவியல் சிக்கல்களாலும், ராஜாவின் ஏச்சுக்களுக்கு பெரும்பாலும் ஆளாவது திறமையானவர்களே.   திறமையானவர்களை அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும் வகையில் திட்டி அவமானப் படுத்துவதில் ராஜாவுக்கு ஒரு அலாதி இன்பம்.   வளர்ந்து வரும் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றுவதில் உள்ள பெருமையை மனதில் வைத்தும், இந்த வேலையை விட்டால் வேறு எங்கே போவது என்ற எதிர்காலக் கவலைகள் காரணமாகவும் ஏறக்குறைய அனைவருமே ராஜாவின் அடாவடிகளை கண்டும் காணாமலும் பொறுத்துப் போனார்கள்.

கலாநிதி மாறன் ராஜாவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கான காரணம், சன் செய்திகளின் தரத்தை சிறப்பாக வைத்திருப்பதில் ராஜா செலுத்திய கவனமே.   கலாநிதி மாறனுக்கு சன் டிவி திமுக சார்பு சேனல் என்ற பெயர் வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை உண்டு. அந்த அக்கறையின் காரணமாகவே, ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஓரளவு நியாயமாக இடம் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.  இதற்கு ஏற்றார்ப்போல ராஜா செய்திகளைத் தயாரித்துத் தரவும், கலாநிதி மாறன் ராஜாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.  ஜெயலலிதா குறித்த செய்திகள் சன் டிவியில் இடம் பெறுவது, கருணாநிதிக்கு கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவியது போன்ற எரிச்சலை ஏற்படுத்தும்.  டிவியில் செய்தியைப் பார்க்கும் கருணாநிதி, ராஜாவை அழைத்து திட்டிய வார்த்தைகளை கோடிட்டுக் கூட காட்ட இயலாது.  அப்படி கழுவிக் கழுவி ஊற்றுவார்.  2002 ஜனவரியில் கருணாநிதி நேரடியாக முரசொலி மாறனை அழைத்து ராஜாவை பணியிலிருந்து நீக்குமாறு கூறுகிறார்.  முரசொலி மாறனும் கலாநிதி மாறனிடம் வலியுறுத்தவும், வேறு வழியின்றி ஜனவரி 2002ல், ராஜா பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

பணி இடைநீக்கத்தையடுத்து, மீண்டும் வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற குழப்பத்தில், அப்போது விஜய் டிவியில் செய்திகளைத் தயாரித்துக் கொண்டிருந்த ஜெனிஃபர் அருளிடம் வேலை கேட்டு அணுகுகிறார் ராஜா. ராஜா வெளியில் வேலை தேடும் விவகாரம் தெரிந்ததும் கலாநிதி உடனடியாக ராஜாவை வேலையில் சேரச் சொல்கிறார்.  அதற்குப் பிறகு, கருணாநிதி எப்போது ராஜா விவகாரத்தை எடுத்தாலும், ராஜாவை பணியிலிருந்து நீக்கியாயிற்று என்று கருணாநிதியை திருப்திப் படுத்தும் வகையில் போலியாக பணி நீக்க உத்தரவைத் தயாரித்து வழங்கிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் ராஜாவை யாருமே அசைக்க முடியாது என்ற நிலை உருவானது.  தனிக்காட்டு ராஜாவாக தன் ராஜாங்கத்தை நடத்தினார் ராஜா.  தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை இழிவாகப் பேசுவது, அவமானப்படுத்துவது போன்ற குணங்களை விட ராஜாவிடம் இருந்த மிக மோசமான குணம் பெண்கணை வேட்டையாடுவது.  வரம்பு மீறிய பெண் மோகம் உள்ளவர் ராஜா.  ராஜா விருப்பப்பட்டு தன்னோடு இணங்கும் பெண்களிடம் உறவு கொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது.  ராஜாவும் பல பெண்களும் நட்பாக இருப்பதால் நமக்கு அறச்சிக்கல், முறச்சிக்கல், மலச்சிக்கல் போன்ற எந்தச் சிக்கல்களும் இல்லை.  ஆனால், தனக்கு இணங்காத பெண்களை வதைப்பதை அனுமதிக்க இயலாது.  ஆனால் ராஜா அதைத்தான் செய்து வந்தார்.  ராஜாவால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் மிக மிக நீளமானது.

மூன்று வருடங்களுக்கு முன் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஒருவர், ராஜாவின் அயோக்கியத்தனத்தைப் பற்றி கலாநிதி மாறனிடமே புகார் தெரிவிக்கிறார்.  அந்தத் தகவலை அறிந்த ராஜா, அலுவலகத்தில் பணியாற்றிய பெரும்பாலான பெண்களை அழைத்து, “சார் ரொம்ப நல்லவர்.. அப்படியெல்லாம் மோசமா நடந்துக்க மாட்டார்” என்று கலாநிதி மாறனிடம் சொல்ல வைத்து தப்பிக்கிறார்.

மற்றொரு பெண் ராஜாவின் சில்மிஷங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்.  அவர் பணிகளில் எப்போதும் குறை கண்டுபிடித்த ராஜா அவரை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தினார்.  பின்னாளில் சன் டிவியிலிருந்து வெளியேறிய அவர், இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதி தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்.

raja-jayalalitha

மனைவியோடு ராஜா

பல ஆண்டுகளுக்கு முன்னால் சன் டிவியில் பணியாற்றிய பெண் ஒருவர், ராஜா தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்று அலுவலகத்தில் அனைவர் முன்னிலையிலும் கத்தினார்.   சில நாட்களில் அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

சன் டிவியில் செய்தியாளராக பணியாற்றிய பெண் ஒருவர் ராஜாவின் மகளை விட இரண்டு வயது குறைந்தவர். ராஜா விரித்த வலையில் விருப்பத்தோடு விழுந்தார் அந்தப்பெண்.  ராஜாவும் அந்தப் பெண்ணும் பப்புகள், டிஸ்கோத்தேக்கள், கிழக்குக் கடற்கரைச் சாலை என்று பல்வேறு இடங்களில் பட்டாம்பூச்சிகளாகச் சுற்றினார்கள். ராஜாவின் கண்பார்வை பட்டதால் அந்தப் பெண்ணுக்கு செய்தி வாசிக்கவும், ஒரு சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது.  தன்னோடு இணக்கமாக இருந்த அந்தப் பெண்ணுக்கு ஏராளமான வாய்ப்புகளை  வழங்கி மற்ற பெண்களுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை உணர்த்தினார் ராஜா.

மற்றொரு செய்தி வாசிப்பாளர் புதிதாக பணியில் சேர்ந்தார்.  ராஜா வலை விரிப்பதற்கு முன்பாக அவர் ராஜாவுக்கு வலை விரித்து அந்த வலை ஊட்டி வரை விரிவடைந்தது.  அந்த வலை உருவாக்கிய பின்னல், அந்த செய்தி வாசிப்பாளரை, சன் டிவியிலேயே மிகப் பிரபலமான செய்தியாளராக உருவாக்கியது.

மற்றாரு செய்தி வாசிப்பாளருக்கு இதே போல ராஜா வலை விரிக்க, அவர் அந்த வலையை கிழித்தெறிந்தார். கிழித்தெறிந்ததன் விளைவு, அகிலாவுக்கு நேர்ந்தது போன்ற கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தார்.  அவரும் தொடர்ந்து காலை ஷிப்டில் போடப்பட்டு வதைக்கப்பட்டார். இறுதியில் தோல்வியைத் தழுவி வேலையை ராஜினாமா செய்து வெளியேறினார். இன்று சென்னையின் பிரபல பண்பலை வானொலியில் தயாரிப்பாளராக உள்ளார்.

இன்று மற்றொரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ள ஒரு பெண்ணிடம் ராஜா நேர்முகத் தேர்வின்போதே தன் வேலையைத் தொடங்கியுள்ளார்.  பயந்து போய் சன்டிவியை விட்டு வெளியேறியவர், அதன் பிறகு அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

மற்றொரு பெண்மணி சன் டிவியிலேயே டிடிபி ஆபரேட்டராக பணியாற்றுகிறார்.  ராஜாவின் அ ணுக்கங்களுக்கு இணக்கமானதால் டிடிபி ஆபரேட்டராக இருந்தவரை செய்தித் தயாரிப்பாளராக்கினார் ராஜா.  செய்திகளைத் தயாரிப்பதில் பல்வேறு குளறுபடிகளைச் செய்வதில் அவர் பிரசித்தி பெற்றவர்.  சாதாரண தவறுகளைச் செய்பவர்களையும், செய்யாதவர்களையும் வறுத்து எடுக்கும் ராஜா, அவரை மட்டும் செல்லமாக கடிந்து கொள்வார்.  ராஜாவோடு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர் மற்ற ஊழியர்களை மிரட்டும் அளவுக்கு வளர்ந்தார்.  இதெல்லாம் ராஜாவுக்கு தெரிந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.

தற்பொது 2ஜி பணத்தில் உருவான தொலைக்காட்சியில் பணியாற்றும் மற்றொரு பெண் வெளிப்படையாகவே சன்டிவியில் பணியாற்றியபோது ராஜா தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டினார்.  ஆனால் அதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சன் டிவியில் பணியாற்றுகிறார்.   ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக் கூடத்தெரியாத அவரை, தன்னோடு இணங்கிப் போனதால் செய்தியில் முக்கியப் பொறுப்பு கொடுத்து வைத்துள்ளார் ராஜா.  இந்த இணக்கத்தைப் பயன்படுத்தி மற்ற ஊழியர்களை வாய்க்கு வந்தபடி பேசுவது இந்த பெண்மணியின் சிறப்பம்சம்.

மிக மிக அழகான தோற்றம் கொண்ட பெண் ஒருவர், ஏராளமான சம்பளம் தரும் தனியார் நிறுவன வேலையை செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்து விட்டு சன் டிவியில் சேர்ந்தார்.   சுமாரான அழகோடு இருக்கும் பெண்களையே ஒரு வழி பார்க்கும் ராஜா, அழகான பெண்ணை விடுவாரா என்ன… ?  ராஜாவின் நெருக்கடிகளை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தப் பெண், வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடினார்.

மற்றொரு பெண் எப்படியாவது செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காக ராஜாவுக்கு இணங்கினார்.  செய்தி வாசிப்பாளரான பின்னால் ராஜா கொடுத்த தொல்லைகளை அந்தப் பெண் மறுக்கிறார். இதனால் எரிச்சலடைந்த ராஜா, அவர் வேலையை காலி செய்கிறார். தற்போது இந்தப் பெண் ஒரு பிரபல பண்பலை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறார்.

தனது ஆசைக்கு இணங்காத பெண்கள் அறிவிப்பாளர்களாகவோ, செய்தியாளர்களாகவோ பணியாற்றவே முடியாது என்ற அறிவிக்கப்படாத ஒரு சூழலை ராஜா உருவாக்குகிறார்.  ஆனால் ராஜாவின் இரைகளை அவர் தெளிவாகத் தேர்ந்தெடுக்கிறார்.  யாருக்கு பெரிய பின்புலம் இல்லையோ… யார் சன் டிவியின் மாத ஊதியத்தை நம்பி இருக்கிறார்களோ, யாருக்கு பெரிய செய்தி வாசிப்பாளராக ஆகி, தமிழகம் முழுக்க பிரபலமாக வேண்டும் என்ற பலவீனம் இருக்கிறதோ அது போன்ற நபர்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார். அதிகார மையங்கள் யாருக்கு வெகு தூரமாக இருக்கிறதோ, பின்புலமாக யாருக்கு ஒருவருமே இல்லையோ அது போன்ற நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.   உதாரணத்துக்கு டி.ஆர்.பாலுவின் மகள், ராஜாவிடம் வேலை பார்த்தார்.  ராஜா அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வார்.  பாலுவின் மகள் டிஆர்பி. மணிமேகலையிடம் ராஜா ஏதாவது வாலாட்டியி ருந்தாரென்றால், தள்ளிச்சேரி ராஜுத் தேவர் பாலு ராஜாவை மும்பைக்கு அழைத்துச் சென்று கட்டாயப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, ராஜா ராஜக்கா ஆகியிருப்பார்.

ராஜாவின் அட்டூழியங்களை பொறுத்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும் தப்பித் தவறி, பெண்கள் அந்த இடத்தில் தொடர்வதற்குக் காரணம், அடுத்த எங்கே செல்வது என்ற கேள்வியும், சன் டிவியில் வேலை செய்தால் ஒரு மரியாதையாச்சே என்பது போன்ற நடைமுறைக் காரணங்களுக்காகவே.  சன் டிவியில் செய்தி வாசிப்பதால் கிடைக்கும் புகழ் பெண்களை ஈர்க்கிறது என்பதும் ஒரு முக்கியமான உண்மை.   புதிய தலைமுறை செய்திச் சேனலில் வரவு, யாருக்கு நன்மையாக இருந்ததோ இல்லையோ ராஜாவுக்கு பெரிய நன்மையாக முடிந்தது.  அது வரை சன் டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பல பெண்கள் மற்றும் ஆண்களை, அனுப்பி விட்டு, புதிய தலைமுறை சேனலில் உள்ளது போல இளம் செய்தி வாசிப்பாளர்களையும், செய்தியாளர்களையும் தேர்ந்தெடுக்கலாம் என்று கலாநிதி மாறனிடம் சொன்னபோது அவர் ராஜாவின் முடிவில் உள்நோக்கம் இருக்கிறது என்று கருதினாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் மறுப்பு சொல்லவில்லை.   புதிது புதிதாக பெண்களை, குறிப்பாக இளம்பெண்களை வேலைக்காக அழைப்பது, அவர்கள் எப்படி என்பதை நேர்முகத் தேர்விலேயே பதம் பார்ப்பது, வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்களிடம் தன் வேலையைக் காட்டுவது என்று ராஜாவின் ராஜாங்கம் விரிவாகிக்கொண்டேதான் போனது.  அப்படி  ராஜா தன் காம வெறியாட்டங்களைத் தொடர்வதற்கு தளபதியாக சென்று சேர்ந்தவர்தான் வெற்றி வேந்தன்.

229288_186165051435836_6978787_n

காதலித்துப் பார்.. காவல்துறை வரும்

வெற்றி வேந்தன், இவர் ஒரு தஞ்சாவூர் தவில்.  தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு செல்லும் வழியில் உள்ள காட்டுக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.  பெரிய அளவுக்கு ஊடகம் குறித்த அறிவோ பரிச்சயமோ இல்லாதவர்.  திருச்சியில் உள்ள பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் படித்தவர்.  படித்து முடித்தபின், இருப்பதிலேயே எளிதான வேலை பத்திரிக்கையாளர் வேலை என்று யாரோ இவரிடம் சொன்னார்களா என்று தெரியவில்லை, திருச்சியில் ஏ.எம்.என்.டிவி, கரண் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றி விட்டு சன் டிவியில் சேர்கிறார்.  கரண் டிவி, ஏஎம்என் டிவிக்களில் பணியாற்றிபோதே, வெற்றி வேந்தன் பேன்டில் ஜிப்பை கழற்றி விட்டார். அங்கேயே இவர் மீது பெண்களிடம் தேவையின்றி வழிவார் என்ற புகார்கள் உண்டு.

வெற்றி வேந்தன் சன் டிவியில் நுழைவதற்கு முன்னதாக ராஜாவின் கைத்தடி, மாமா போன்ற பல்வேறு பதவிகளை வகித்தவர், இருதாரப் புகார் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட ராஜராஜன்.  இந்த ராஜராஜன் ராஜாவின் சுமைதாங்கியாக செயல்பட்டார்.  சன் டிவியில் இரு பலம் வாய்ந்த நபர்களாக இருந்தவர்கள் ஈவேரா மற்றும் ராஜராஜன்.  ராஜராஜனின் முக்கிய பணி ராஜா ஏற்படுத்தும் சேதங்களை சரி செய்வது.  ராஜா யாரையாவது கடுமையாக திட்டி, அவர்கள் கோபமடைந்து புகார் கொடுக்கவோ, அல்லது வேலையை விட்டு நிற்கவோ முடிவெடுத்தால் அவர்களிடம் சென்று, “சார் அப்படித்தான் கோபப்படுவார்.. ஆனால் எதையும் மனசுல வச்சுக்க மாட்டார். நீங்க இதையெல்லாம் பெருசுபடுத்தாதீங்க” என்று பேசி சமாதானப்படுத்துவது ராஜராஜனின் வேலை.  ராஜராஜன் இன்று பணியில் இருந்திருந்தால், ராஜாவுக்கு இந்த நிலை வந்திருக்காது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

ராஜராஜன் மற்றும் ஈவேரா இடையயே கடும் பனிப்போர் நிலவுகிறது.  ராஜராஜன், ராஜாவின் தீவிர ஆதரளாவரானதால், ஈவேராவுக்கும் ராஜாவுக்கும் ஆகாது.  ராஜா ஈவேராவை எப்படிக் காலி செய்வது என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார். இந்நிலையில் சன்டிவியில் சேர்ந்த வெற்றிவேந்தன், ராஜராஜனின் அணியில் சேர்கிறார். ராஜராஜனுக்கு டீ வாங்கித் தருவது, அவர் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கித் தருவது, சிற்றுண்டி வாங்கித் தருவது போன்ற முக்கியப் ஊடகப் பணிகளை செய்து வந்தவர்தான் வெற்றிவேந்தன்.

நடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்ததில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பலருக்கு நினைவிருக்கும்.  கிரகலட்சுமி ஏற்கனவே தனக்கு நடந்த திருமணம் குறித்து மறைத்து செய்த திருமணத்தால் ஏற்பட்ட சிக்கல் பிரசாந்ததை வாட்டியது. அப்போது பிரசாந்த் தரப்பு நியாயத்தையும், கிரகலட்சுமிக்கு திருமணம் ஆன விவகாரத்தையும் ஊடகங்கள் வெளிக் கொணர்ந்தன.  அதில் ஒரு ஊடகம் சன் டிவி.  சன் டிவியின் செய்தியாளர் ஈவேரா அந்த விவகாரத்தில் பிரசாந்த் தரப்பு நியாயத்தை வெளியிட்டார்.

இதனால் பிரசாந்த் தனது ஜாய் ஆலூக்காஸ் நகைக்கடை திறப்பு விழாவின்போது தனக்கு உதவி செய்த பத்திரிக்கையாளர்களை அழைத்தார்.  அந்த விழாவுக்கு ஈவேரா சென்றபோது, அந்த விழா குறித்து செய்தி வெளியிடலாம் என்று வெற்றி வேந்தனை கேமரா யூனிட்டாடு வரச் சொல்கிறார்.  ஜட்டி வேந்தனும், மன்னிக்கவும் வெற்றி வேந்தனும் அவ்வாறே செய்கிறார்.  செய்து விட்டு வெற்றி வேந்தன், இந்த விஷயத்தை ராஜா காதில் போட்டு விடுகிறார்.   இதை வைத்து ஈவேராவை காலி செய்யலாம் என்று முடிவெடுத்த ராஜா, கலாநிதி மாறனிடம், ஈவேரா பிரசாந்திடம் 10 லட்ச ரூபாய் வாங்கி விட்டார் என்று வெல்டிங் செய்கிறார். இதனால் ஈவேராவுக்கு வேலை பறிபோகும் அளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.  ஆனால் அரசியல் செய்வதில் ஈவேரா யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதால், பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம்…. நடிகர் பிரசாந்த மற்றும் அவர் தந்தை தியாகராஜனைப் போல கப்பிகளைப் பார்க்கவே முடியாது.  கப்பிகள் என்றால் உலக கப்பிகள். நமது பாக்கெட்டில் உள்ள பணத்தை எப்படி எடுப்பது என்று அப்பனும் மகனும் திட்டம் போடுவார்களே தவிர, அவர்கள் கொடுக்க மாட்டார்கள்.

இந்த விவகாரம் முடிந்தாலும், ராஜராஜன் மற்றும் ஈவேரா இடையேயான பனிப்போர் தினந்தோறும் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் ராஜராஜன் மீது ஒரு அவரது இரண்டாவது மனைவி புகார் தருகிறார்.   இந்தப் புகாரைக் காரணமாக வைத்து ராஜராஜனை காலி செய்கிறார் ஈவேரா.  இதையடுத்து ராஜராஜன் இடத்துக்கு -  நம்பர் 2 – ஜட்டி வேந்தன் வருகிறார்.  ஒரு சாதாரண நபராக சன் டிவிக்குள் நுழைந்து ராஜராஜனுக்கு எடுபிடி வேலைகளைச் செய்து வந்த ஜட்டி வேந்தனை ராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்ததே ராஜராஜன்தான் என்பது காலத்தின் கோலங்களில் ஒன்று.

அது வரை செய்தி வாசிப்பாளர்களுக்கு நேரம் ஒதுக்கும் பணியைச் செய்து வந்த காளமேகம் என்பவரை ஓரங்கட்டி விட்டு அவர் இடத்துக்கு ஜட்டி வேந்தன் வருகிறார். காளமேகத்துக்கு பெண்ணாசை கிடையாது. ஆனால் பொன்னாசை உண்டு.  செய்தி வாசிப்பாளர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கு பணம் வாங்கினார் என்ற புகார் அவர் மீது இருந்து வந்தது.  அதனால் அவரைத் தூக்கி விட்டு ஜட்டி வேந்தனை அந்த இடத்தில் நியமிக்கிறார்கள்.  சும்மாவே புரட்டாசி மாதத்து நாய் போல அலையும் ஜட்டி வேந்தனுக்கு அனைத்து செய்தி வாசிப்பாளர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வேலையைக் கொடுத்தால் என்ன ஆகும் ?  அதுதான் நடந்தது.

ராஜாவிடம் பயப்படும் அளவுக்கு ஜட்டிவேந்தனிடம் செய்தி வாசிப்பாளர்கள் பயப்படுவது இல்லை.  அவன் ஒரு சாதாரண அல்லக்கைதானே என்று.  ஆனால் ராஜாவுக்கு முழு நேர மாமாவாக ஜட்டி வேந்தன் பொறுப்பேற்றுக் கொண்டதும், அவரது அதிகாரம் தூள் பறக்கிறது.   பெண்கள் ஆடை மாற்றும் நேரத்தில் கதவைத் தட்டாமல் மேக்கப் ரூமுக்குள் நுழைவது, ஜட்டி வேந்தனுக்கு பிடித்த பொழுதுபோக்கு.  ஜட்டி வேந்தன் தன் லீலைகளை மேக்கப் ரூமுக்குள் நடத்துவதற்கு காரணம், அந்த இடத்தில் மட்டும் தான் சிசிடிவி கேமரா இல்லை.

ராஜாவுக்கு முழுநேர மாமா வேலை செய்ய ஜட்டிவேந்தன் நியமிக்கப்பட்டதையடுத்து, ஜட்டிவேந்தனின் மிரட்டல்களும் உருட்டல்களுக்கும் அளவே இல்லாமல் போகிறது.  அப்படி அகிலா என்ற பெண்ணுக்கு ஜட்டி வேந்தனும் ராஜாவும் கொடுத்த தொல்லைகளை சிறுகதை வடிவில் சவுக்கு தளத்தில் பார்திருப்பீர்கள்.

384321_3821561058041_1511042755_n

கிருத்திகா

அந்தக் கதையில் வரும் கிருத்திகா என்ற பெண்மணி ஒரு திரைப்பட எடிட்டர்.  ஏதோ ஒரு ஆர்வத்தில் சன் டிவியில் வேலைக்குச் சேர்ந்து வெற்றி வேந்தனின் இடத்தில் பணியாற்றி வருகிறார்.   இவருக்கு கலாநிதி மாறனுக்கு பணத்தை சேமித்துத் தருவதில் அப்படி என்னதான் ஆர்வமோ தெரியவில்லை.  முழு நேர செய்தியாளர்களுக்குப் பதிலாக பகுதி நேர செய்தியாளர்களைப் போடலாம், எப்படி செலவைக் குறைக்கலாம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார். வெற்றி வேந்தன் மற்றும் ராஜாவின் அயோக்கியத்தனங்கள் இவருக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்பதை நம்புவதற்கில்லை.   தன்னுடைய பிழைப்புக்காக இளம்பெண்கள் சீரழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதோடு, அதற்கு உடந்தையாகவும் இருக்கும் கிருத்திகா போன்றவர்களே பெண்ணினத்தின் பெரிய எதிரிகள்.  குறைந்தபட்சம் நான் இந்த அயோக்கியத்தனத்துக்கு துணை போக மாட்டேன் என்று கிருத்திகா வெளியேறியிருக்க முடியும்.  இந்த வேலையை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தும் அளவுக்கான மோசமான பொருளாதாரச் சூழலில் கிருத்திகா இல்லை.

சவுக்கில் வெளியான அந்தக் கதை, கதை அகிலாவினுடைய கதை மட்டுமே.  இது போல ஓராயிரம் கதைகள் சன் டிவி என் மாபெரும் சாம்ராஜ்யத்தினுள் நடந்து வருகிறது. 

அகிலா புகார் கொடுத்ததும், காவல்துறை ஆணையர் ஜார்ஜ், பொறுமையாக அகிலாவின் புகாரைப் பொறுமையாகப் படித்துப் பார்த்து, விபரங்களைக் கேட்டறிந்தார்.  அகிலாவின் புகார்களில் உள்ள உண்மைத் தன்மைகளை விசாரித்தறிந்தார்.  விசாரித்தறிந்ததும், அந்தப் புகார்களை அடையாறு துணை ஆணையர் சுதாகருக்கு அனுப்புகிறார்.  பெண் குறித்த புகார் என்பதால், ஒரு பெண் துணை ஆணையர் விசாரித்தால் பொறுத்தமாக இருக்கும் என்பதால், மைலாப்பூர் துணை ஆணையர் லட்சுமியிடம் இந்தப் புகார் அனுப்பப்படுகிறது.

George_S

இதற்குள் புகார் தொடர்பான தகவல் ராஜவை அடைகிறது. உடனே, தனது தொண்டர் அடிப்பொடிகளான ராம.செல்வராஜ், தினகரனின் பிட்டு சுரேஷ் மற்றும் இதரர்களை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்புகிறார் ராஜா. அவர்கள் அவர்களுக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்து, இரண்டு நாட்கள் விசாரித்த பிறகு, புகாரை மூடி விடுவார்கள் என்று ராஜாவுக்கு வாக்களிக்கின்றனர். ராஜா நம்மதான் ராஜாவாயிற்றே என்று நிம்மதியாக இருக்கிறார்.   இருந்தாலும் கவனமாக இருக்கலாம் என்று அவரது காலை நடைபயிற்சி நண்பரான இணை ஆணையர் ரவிக்குமாரிடம் இத்தகவலை சொல்லுகிறார். ரவிக்குமார் நான் விசாரிக்கிறேன் என்று கூறுகிறார்.

ஆணையர் ஜார்ஜ், லட்சுமியிடம் இந்தப் புகார் குறித்து வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்று தெரிவித்ததையடுத்து, இந்த ஆபரேஷன் மிக மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் ராஜாவை காவல்துறையினர் அழைக்கிறார்கள்.  அவர் வழக்கம் போல நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்லவும், அப்படியானால் காவல்துறை அதிகாரிகளோடு நாங்கள் அங்கே வருகிறோம் என்று சொல்லுகிறார்கள்.  சரி ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்று ராஜா சொல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே ராஜாவின் அலுவலக வாசலில் காவல்துறையினர் ராஜா வெளியேறுகிறாரா என்று கண்காணித்தபடி இருக்கிறார்கள்.

VA-Ravikumar-IPS

ரவிக்குமார் ஐபிஎஸ்

ஒரு பைக்கில் கிளம்பி, மைலாப்பூர் துணை ஆணையர் அலுவலகம் செல்கிறார் ராஜா.  அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் 5 காவல்துறையினர் வந்தது ராஜாவுக்குத் தெரியாது.   ராஜா வந்ததும் அவர் செல்போனை வாங்கி அணைத்து வைத்து விட்டு ராஜாவிடம் விசாரணையைத் தொடர்கிறார்கள்.   அப்போது இணை ஆணையர் ரவிக்குமாரிடமிருந்து துணை ஆணையர் லட்சுமிக்கு ஒரு அழைப்பு வருகிறது.  “சன் டிவி எடிட்டர் ராஜா மேல ஏதோ கம்ப்ளெயின்ட் வந்துருக்காம்.  என்ன மேட்டர் அது” என்றதும், “சார் கமிஷனர் விசாரிக்கச் சொல்லியிருக்கார்” என்றிருக்கிறார் லட்சுமி. ”சரி அவரைக் கூப்பிட்டீங்கன்னா என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு ஒரு ஸ்டேட்மென்ட் போட்டுட்டு அனுப்பிடுங்க.  ரொம்ப நேரம் அவரை ஸ்டேஷன்ல டீடெயின் பண்ணாதீங்க.  ரொம்ப முக்கியமான ஆளு.  நான் கமிஷனர்கிட்ட பேசிக்கறேன்” என்று அவர் பேசும்போது லட்சுமி எதிரில் ராஜா அமர்ந்திருக்கிறார்.  அதன் பிறகு, கடகடவென்று நடவடிக்கை எடுத்து, தேவையான ஆவணங்களைத் தயார் செய்து, காவல் நிலைய வாசலில் காத்திருந்த சன் டிவியின் தொண்டர் அடிப்பொடிகளுக்குத் தெரியாமல், ரகசியமாக பின் வழியாக ராஜாவை அழைத்துச் சென்று நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தினர் காவல்துறையினர்.

IMG_5410

ராம செல்வராஜ்

இதில் ஒரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தை பெரிதாகாமல் நான் முடித்துத் தருகிறேன் என்று ஒரு மூன்று காவல்துறை அதிகாரிகள், ராம.செல்வராஜிடம் ஒரு கனத்த தொகையை கறந்திருக்கிறார்கள்.   ராஜா கைதானதும் அவர்களிடம் சார் என்ன சார் இது என்று கேட்டதற்கு, கமிஷனர் ஆர்டர் பாஸ் நாங்க ஒண்ணும் பண்ண முடியாத என்று கைவிரித்திருக்கின்றனர்.  பணத்தை திருப்பியா கேட்க முடியும்…  அய்யோ பாவம்.

வேளச்சேரியில் உள்ள நீதிபதியின் வீட்டுக்கு ராஜாவை அழைத்துச் சென்றதும் அங்கே குழுமியிருந்த புகைப்படக்கலைஞர்கள் மற்றும் வீடியோ பதிவாளர்களை சன் டிவியின் ராம.செல்வராஜ், தினகரனின் பிட்டு சுரேஷ், சன் செய்தியாளர் கருப்பசாமி, போன்றவர்கள் கார்களை குறுக்கில் நிறுத்தி மறித்து படமெடுக்க விடாமல் தடுத்துள்ளனர்.  குறிப்பாக புதிய தலைமுறை புகைப்படக் கலைஞரை கையை வைத்து தடுத்துள்ளனர்.

சன் டிவியின் செய்தியாளர்களுக்கும், சன் டிவி நிர்வாகத்துக்கும் ஒரு கேள்வி.  ஒரு காமவெறி பிடித்த அயோக்கியனைக் கைது செய்து காவல்துறையினர் கொண்டு செல்கையில் படமெடுக்கக் கூடாது என்று தடுக்கும் நீங்கள், நித்யானந்தாவின் ஜட்டிக்குள் கேமராவை வைத்து படமெடுத்து, அதை குடும்பத்தோடு செய்தி பார்க்கும் மெயின் புல்லட்டினில் வெளியிட்டது என்ன ஊடக    தர்மம் ?

நித்யானந்தா விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் சம்பந்தப்பட்ட ரஞ்சிதாவோ, நித்யானந்தாவோ யாரிடமாவது புகார் கொடுத்தார்களா… ?   பிரம்மச்சர்யம் போதித்த நித்யானந்தா பக்தர்களை ஏமாற்றி விட்டார் என்றால், அதை பக்தர்கள்தானே கேள்வி கேட்க வேண்டும் ?   செய்தி வெளியிடுவது எங்களின் கடமை என்றால், ராஜாவை படமெடுப்பதும்தானே செய்தியாளர்களின் கடமைதானே ?   அதை மட்டும் ஏன் எடுக்கக்    கூடாது என்று தடுக்கிறீர்கள் ?

ராஜாவின் கைது குறித்து, மாலைமுரசு மற்றும் திருச்சி தினமலர் தவிர வேறு எந்த நாளிதழ்களும் செய்தி வெளியிடவில்லை.  ராஜாவுக்கும் மவுன்ட்ரோடு தினமலருக்கும் ஏற்கனவே பெரிய தகராறு இருந்த நிலையிலும், தினமலர் ராஜா கைது குறித்து செய்தி வெளியிடவில்லை.  தினமலர் செய்தி வெளியிடாமல் இருந்ததன் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் நக்கீரன் காமராஜ்.  காமராஜ் சொல்லி, நக்கீரன் கோபால் தினமலர் நிர்வாகத்திடம் பேசி, ஒரு சிங்கிள் காலம் செய்தி கூட வெளிவராமல் பார்த்துக் கொண்டார். 

women_attack_devanathan

இந்த காமராஜ் போன்ற நபர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு என்ன தெரியுமா ?  அவர்களெல்லாம் திராவிட இயக்கத்தின் வாரிசுகள்.  திராவிட இயக்க அரசியலை தூக்கிப் பிடிப்பவர்கள்.  அவர்களுக்கெதிராக வரும் புகார்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் சதி.   யாருக்காவது காலையில் கக்கூஸ் சரியாகப் போகவில்லையென்றால் கூட, பார்ப்பன சதி என்று குஞ்சாமணி போலவே பேசுவதில் காமராஜ் போன்ற திராவிட இயக்க ஊடகவியலாளர்களுக்கு வழக்கம்.   2ஜி பணத்தை பார்ப்பனனா வாங்கிப் பதுக்கச் சொன்னான் ?  பார்ப்பனனா சட்டவிரோதமாக வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு மனை பெறச் சொன்னான் ?  பார்ப்பனனா அய்ந்திரம் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னான்.  பத்திரிக்கையாளர் என்ற பெயரில் ப்ரோக்கர் தொழில் செய்து வரும் காமராஜ் போன்றவர்கள், தங்களை திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு தாங்கள் செய்யும் அயோக்கியத்தனங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.   ஒரு தரங்கெட்ட அயோக்கியனைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என்று முயற்சி எடுக்கும் காமராஜ் தனது நக்கீரன் பத்திரிக்கையில் எத்தனை பொய் செய்திகளை வெளியிட்டிருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாரமிருமுறை இதழ்களில் தமிழக அரசியல் மற்றும் குமுதம் ரிப்போர்டரைத் தவிர எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.  நக்கீரனை விடுங்கள்… அதைப் பற்றிப் பேசுவதே நேர விரயம்.  ஆனால் ஜுனியர் விகடன் ?

devanathan-1

செப்டம்பர் 2009 ஜுனியர் விகடன் இதழில் காஞ்சிபுரம் கோயிலில் அர்ச்சகராக இருந்த தேவநாதன் என்பவர் பல பெண்களோடு உறவு கொண்டு, அதை வீடியோ எடுத்து வைத்தது வெளியானதை கவர் ஸ்டோரியாக வெளியிடடிருந்தது.   தேவநாதன் தங்களை கொடுமை செய்தார் என்றோ, மிரட்டினார் என்றோ யாருமே புகார் கொடுக்காத நிலையில் அப்படி ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருந்தது ஜுனியர் விகடன்.  ஆனால், ராஜா போன்ற, பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஒரு அயோக்கியனை காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்த விவகாரத்தைப் பற்றி ஒரு வரிச் செய்தி கூட இல்லை.   மிக மிக நல்ல பத்திரிக்கையாளர்கள் விகடனில் இருக்கிறார்கள்.  அவர்கள் வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள்.  அந்தப் பிள்ளைகள் வேலைக்குச் செல்லும் இடத்தில் யாராவது ஒரு பொறுக்கி இப்படி நடந்து கொண்டால் என்ன கோபம் வருமோ அதே கோபத்தோடு இந்தச் செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும்.    ராஜாவைப் போன்ற அயோக்கியர்களை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமை.  ஜுனியர் விகடன் இது குறித்து செய்தி வெளியிடாதது குறித்து மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது.

இதே போல புதிய தலைமுறை தொலைக்காட்சியும், அனைத்து காட்சிகளும் கையில் இருந்தும் செய்தி வெளியிடாதது ஏன் என்றே புரியவில்லை.

இந்தப் புகார் மற்றும் வழக்குக்குப் பின்னால், புகாரளித்த அகிலாவைப் பற்றிய மோசமான வதந்திகள், சன் குழுவினரால் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.  இந்த வதந்திகளைப் பரப்புவதில் முன்னிற்பவர்கள் பெண்கள் என்பது வேதனையான விஷயம்.   இப்படிப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அகிலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய மகளிர் அமைப்புகளும், பெண் பத்திரிக்கையாளர்களும், முகநூலில் நிலைச்செய்தி இடுவதையும், திரைப்படங்களில் பெண்கள் மோசமாக சித்தரிக்கப்படுவது குறித்த மயிர்பிளக்கும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.  குறைந்தபட்சம் இதைக் கண்டித்தும், அகிலாவுக்கு ஆதரவாகவும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை.

1997ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், ஒரு குழு அமைக்க வேண்டும்.  இது விசாகா கமிட்டி என்று அழைக்கப்படுகிறது.  தமிழகத்தில் விகடன் குழுமத்தைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் இப்படி ஒரு கமிட்டி செயல்படுவதாகத் தெரியவில்லை.  இந்த கமிட்டியை செயல்படுத்தவதற்காகவாவது, இந்தப் பெண் போராளிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால், இப்படி வக்கணையாக  பேசும் நபர்கள் (சவுக்கைத்தான்) ஏன் செய்யக்கூடாது என்ற எதிர்கேள்வி கேட்கிறார்கள்.  இந்த பெண் போராளிகள் இது வரை, புகார் கொடுத்த அகிலாவைக் கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தன்னந்தனியாக அகிலா போராடிக் கொண்டிருக்கிறார்.   இன்று (திங்கட்கிழமை) பணியில் சேர்ந்த அவருக்கு ஏற்கனவே 12 மணிச் செய்திகளை வாசிக்க வேண்டும் என்று இருந்த ஷெட்யூல் திருத்தப்பட்டு சரயூ என்ற மற்றொரு பெண் வாசிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.  மாலை அகிலா வாசிக்க வேண்டிய வணிகச் செய்திகள் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  இப்படி அகிலாவை முடக்கவும், அவர் புகாரை வாபஸ் பெற வைக்கவும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, சன் செய்தியாளர் ராம.செல்வராஜ் உதவி ஆணையர், துணை ஆணையர் போன்றோரைச் சந்தித்து, ராஜாவின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

அன்பான கலாநிதி மாறன் அவர்களே…. உங்களுக்கு அன்பரசி என்று ஒரு தங்கை இருக்கிறார்.  உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.  அகிலா போன்ற பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எப்படி உங்களால் பொறுத்துக் கொள்ள முடிகிறது ?  ராஜாவின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் உங்கள் காதுகளுக்கு வந்திருக்காது என்பதை ஏற்பதற்கில்லை.  அப்படித் தெரிந்திருந்தும் ராஜா போன்ற நபர்களை அனுமதித்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு எப்படிப்பட்ட லாப வெறி இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

NIC-List290811_Page_01

NIC-List290811_Page_10

ராஜா போன்ற நபர்களை தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் தமிழக பிரதிநிதியாக பரிந்துரை செய்து நியமித்திருப்பதிலேயே ராஜாவுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமும், மரியாதையும் என்னவென்று புரிகிறது.

நீங்கள் இது நாள் வரை செய்த தவறுகளுக்கு பிராயசித்தமாக, அந்தப் பெண் அகிலாவின் வேலைக்கான பாதுகாப்பை நீங்கள் வழங்க வேண்டும்.  இந்நாள் வரை பணி இடைநீக்கம் செய்யப்படாமல் உள்ள ராஜாவையும், வெற்றிச்  செல்வனையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். ராஜா போன்ற நபர்களை பணியில் தொடர அனுமதிப்பது உங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் அவமானம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.   உடனடியாக சன் குழும நிறுவனங்கள் அனைத்திலும் விசாகா கமிட்டி அமைக்க உத்தரவிடுங்கள்.  பெண்கள் உங்களை வாழ்த்துவார்கள்.

343

துணை ஆணையர் லட்சுமி ஐபிஎஸ்

அகிலாவின் புகார் மீது சிறப்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்களுக்கும், துணை ஆணையர் லட்சுமி அவர்களுக்கும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.  இவர்கள் எல்லோரையும் விட, துணிச்சலாக ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்துக்கு எதிராக புகார் கொடுத்த அகிலாவுக்கே அனைத்து வாழ்த்துக்களும் உரியது.    நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே…. 

மன்மத’ ராஜா மீது கொலை வழக்கு?

$
0
0

SP_Reporter_Poster_31-3-2013.pdf

பாலியல் வழக்கில் சிக்கிய சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து தற்கொலை செய்துகொண்ட இரண்டு பெண்களின் வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகிறது. மேலும் ராஜா மீது புகார் கொடுத்த பெண்ணுக்குச் சிலர் கொலை மிரட்டல் விட, அது குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சன் டி.வி.யின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியானதும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தாமாகவே போன் செய்து போலீஸாருக்கு ஏராளமான தகவல்களைக் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,‘‘நீண்ட நாட்களாக அவர் அந்த நிறுவனத்தில் பணி புரிவதால், செல்வாக்கோடு இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான செட்யூல் போடும் பணியை ஜோதிஸ்வரன் என்பவர் செய்து வந்துள்ளார். அவரை அவர்களின் இன்னொரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு அனுப்பியுள்ளனர். அதையடுத்து அந்தப் பணியையும் ராஜாவே சேர்த்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியுள்ளார். அதன் பின்னர்தான் பெண்களிடம் அவர் கைவரிசையை அதிமாகக் காட்டியிருக்கிறார். இதற்காக அவர் தனக்குக் கீழே உள்ள நம்பிக்கையான இரண்டு பேரை தேர்வு செய்துள்ளார்.

அதில் ஒருவர்தான் வெற்றிவேந்தன். அவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களிடம் பக்குவமாகப் பேசி சம்மதிக்க வைப்பதில் கில்லாடியாம். அவரால் முடியாத நிலையில், அவர்களுக்கு ட்யூட்டி நேரத்தை மாற்றிக் கொடுப்பாராம். அப்போதும் பணியவில்லை என்றால், டி.வி.யில் வரவிடாமல் செய்துவிடுவார்களாம். அவர்களிடம், ‘செய்தி வாசிக்கும்போது உங்கள் முகபாவம் சரியில்லை. எப்படி செய்தி வாசிக்க வேண்டும் என்று என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று மன்மத ராஜாவிடம் அனுப்பி வைப்பாராம். டி.வி.யில் இரண்டொரு நாட்கள் வந்துவிட்டு, மீண்டும் வர முடியாமல் போவதால் பல பெண்கள் இவர்கள் வலையில் விழுந்துவிடுவார்கள். அப்படியும் சிலர் முரண்டு பிடித்தால், செய்தி வாசிக்கச் சொல்லிக் கொடுப்பது போல, முகத்தைத் தொடுவது, கன்னத்தைக் கிள்ளுவது என்று சின்னச் சின்ன சிலுமிஷங்களைச் செய்வாராம். பின்னர் தனிமையில் சந்திக்கலாம் என்று நூல் விடுவார். அதில் அவர்கள் விழுந்துவிட்டால் மீண்டும் டி.வி.யில் வரமுடியுமாம். அப்போதும் சம்மதிக்கவில்லை என்றால், அனைவர் முன்னிலையிலும் கேவலமாகத் திட்டுவது. அழ வைப்பது என பாடாய்ப் படுத்துவாராம். இதையெல்லாம் தாங்கிக் கொண்டால் வெளியூருக்கு மாறுதல் செய்வாராம். இதனால் அதிர்ச்சி அடைந்து ஒன்று ராஜாவோடு இணக்கமாகிவிடுவார்கள். அல்லது வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள். 

ராஜாவோடு நெருக்கமாக இருந்த ஒரு பெண் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு, அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார். இன்னொரு பெண்ணை இரவு நேரத்தில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டு, அந்தப் பெண்ணின் வீட்டருகே காரில் இறக்கி விட்டபோது அந்தப் பெண்ணின் கணவர் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும், அருகில் இருந்த உறவினர்கள் உதவியுடன் ராஜாவை அங்கேயே சிறைப் பிடித்தும் வைத்துள்ளார். இதை அறிந்த சன் டி.வி. ஊழியர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜாவை மீட்டுச் சென்றுள்ளனர்.கடைசியாக பிரபல ஐ.பி.எஸ். அதிகாரியின் பெயரைக் கொண்ட ஒரு பெண் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சங்கீதா, தேன்மொழி ஆகியோர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் ராஜாவின் தொந்தரவுதான் காரணம் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அப்போது தி.மு.க. ஆட்சி நடந்ததால், சங்கீதாவின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். சங்கீதா லெஸ்பியன் என்று சொல்ல வைத்து கேஸை முடித்துள்ளனர். சங்கீதா, தேன்மொழியின் பெற்றோர்கள் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். அவர்கள் புகார் கொடுத்தால் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், ராஜா மீது புகார் கொடுத்துள்ள அகிலாவிற்கு, கடந்த 21_ம் தேதி இரவு 11.45 மணிக்கு போன் செய்து, சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அமைந்தகரை போலீஸில் அகிலா புகார் கொடுத்திருக்கிறார்.

ராஜாவிற்கு ஆதரவாக இருந்த அவரது உதவியாளர் வெற்றிவேந்தன் தலைமறைவான நிலையில் இவரைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் சிக்கினால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.’’ என்றார் அந்த அதிகாரி.பிரதமரின் கீழ் ‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழு’ என்ற ஒரு சுதந்திரமான அமைப்பு உள்ளது. இதில் அனைத்து மாநிலம் மற்றும் துறைகளைச் சேர்ந்த நபர்களும் மதத் தலைவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்தியா முழுவதும் விமானம், ரயிலில் இலவசமாகச் சென்று வரலாம். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திலும் கலந்து கொள்ளலாம். இந்தக் குழுவில் தென்னிந்தியாவில் இருந்து ராஜா உறுப்பினராக உள்ளார். பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தில் கைதாகி இருக்கும் ராஜாவை இந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. 

நமது நிருபர்கள் 

நன்றி குமுதம் ரிப்போர்டர்

சிங்களவன் முக்கியமென்றால் தமிழ்நாட்டில் ஏன் இருக்கிறீர்கள் ?

$
0
0

IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர்கள் யுவன் குலசேகராவை ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயாவை ரூ.10 லட்சத்துக்கும். கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா  ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது.

CSk__SRH

CSK_logo

sunrisers_hyderabad-1464412

தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் ஐபிஎல் அணிகளில் சிங்கள வீரர்கள் இருந்தால் பரவாயில்லை.  தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் செய்து, தமிழன் பணத்தில் பிழைப்பு நடத்தும் சீனிவாசனும், கலாநிதி மாறனும் சிங்களர்களை தங்கள் அணிகளின் முக்கிய வீரர்களாகச் சேர்த்துள்ளனர்.

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கள வீ‘ரர்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதையடுத்து, சிங்கள வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெறாது என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் முடிவெடுத்துள்ளன.

ஜெயலலிதா மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விஷயங்களால் தமிழக மக்கள் கடும் கொந்தளித்துள்ளனர். தமிழர்களின் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இலங்கை வீரர்கள் பங்கேற்கும் போட்டியை நடத்த அனுமதிக்க கூடாது. இந்த போட்டியில் வீரர்கள் மட்டுமல்லாது அம்பயர்கள், அதிகாரிகள் யாரும் பங்கேற்க கூடாது.  என்று தெரிவித்துள்ளார்.

இப்படி தமிழக மக்கள் உறுதியாக உள்ள நிலையில்,  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களாக இருக்கும் ஐபிஎல் அணிகளில் மட்டும் சிங்களர்களை அனுமதிப்பது எப்படிப் பொருத்தமாக இருக்கும் ?  தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள ராணுவத்தின் அதிகாரி அஜந்தா மென்டிஸ் என்ற நபர் பூனே வாரியர்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ளார்.  தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் அணிகளின் வீரர்கள், பூனே வாரியர்ஸ் அணியோடு விளையாடாமலேயே போய் விடுவார்களா ?  அப்படி பூனே வாரியர்ஸ் அணியில் உள்ள ராணுவ அதிகாரியோடு விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் தமிழகத்தில் விளையாடவில்லை என்பதற்காக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியுமா ?

486201_10200914679255026_1732648948_n

இப்படி, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டு விளையாடும் இந்த ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போனால் வானம் இடிந்து விழுந்து விடுமா அல்லது, நடந்தால் இந்தியர்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைத்து விடுமா ?

லாப நோக்கோ அல்லது சிங்கள பாசமோ இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தாலேயே சிங்கள வீரர்களை தங்கள் அணிகளுக்காக கலாநிதி மாறனும், சீனிவாசனும் வாங்கியிருக்கக் கூடும்.  அப்படிப்பட்ட லாபநோக்கோடு சிங்களனிடம் நட்பு பாராட்டும் சீனிவாசனும், கலாநிதிமாறனும் தமிழ்நாட்டில் ஏன் இருக்க வேண்டும் ?  இலங்கைக்கே சென்று விடலாமே !!!

கலாநிதி மாறனும், இந்தியா சிமின்ட்ஸ் சீனிவாசனும், தங்கள் அணிகளில் இருந்து சிங்கள வீர்ர்களை உடனடியாக நீக்க வேண்டும்.  அல்லது சிங்களர்கள்தான் முக்கியமென்று கருதினால், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

முட்டாள் அரசு 6

$
0
0

கடந்த புதன்கிழமை ஜெயலலிதா சென்னை நந்தனம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்தார்.  ஒரு முதலமைச்சர் தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கிடையில் இது போல ஒருவரைச் சென்று சந்திப்பது வரவேற்கத்தகுந்த விஷயம்.  அது தினத்தந்தி அதிபர் என்பதால் இருந்தாலும் கூட.   சசிகலாவைத் தவிர வேறு யாரின் நலனிலும் அக்கறை துளியும் இல்லாத ஜெயலலிதா இது போல நேரம் ஒதுக்கி உடல் நலிந்த ஒருவரைப் பார்ப்பது சிறப்பான விஷயமே.  ஆனால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளைப் பார்ப்பது, அதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளியைப் பார்க்கையில், அதற்குண்டான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுமா வேண்டாமா ?

39.-Amma-Photo-Present

சாதாரண நபர்கள் என்றால் அத்தகைய கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கலாம்.  ஆனால் ஜெயலலிதாவை அப்படிச் சொல்ல முடியுமா ?  ஜெயலலிதா எந்த சட்டத்தையோ விதிகளையோ மதிப்பவரா என்ன ?  கோடுகளை உடைத்த பிகாசோவைப் போல மரபுகளை உடைப்பவர் அல்லவா ?  அந்த விதிகளையெல்லாம் அவர் பின்பற்றுவாரா என்ன ?   அப்படி விதிகளைப் பின்பற்றாமல் சென்ற ஜெயலலிதாவை கேள்வி கேட்ட ஒரு முதிய மருத்துவருக்கு “தக்க பாடத்தை“ புகட்டியுள்ளார் ஜெயலலிதா.

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் உடலில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறார்.   அவரைப் பார்க்க ஜெயலலிதா சென்றபோது, பல ஆண்டுகளாக சிவந்தி ஆதித்தனின் மருத்துவராக உள்ள கருணாநிதி என்ற மருத்துவர் ஜெயலலிதாவை வரவேற்றுள்ளார்.  வணக்கம் கூறி வரவேற்று விட்டு, மேடம் தங்கள் காலணிகளை கழற்றுங்கள் (Please remove your shoes) என்று கூறியிருக்கிறார்.   அவ்வாறு சொன்னவரை நோக்கித் திரும்பிய ஜெயலலிதா ஒரு புழுவைப் போல பார்த்து விட்டு, (ஜெயலலிதாவின் அந்தப் பார்வையில் பல ஆங்கில கெட்டவார்த்தைகள் அடக்கம். கான்வென்டில் படித்தவர் ஆங்கிலத்தில்தானே திட்ட முடியும். திருக்குவளைக்காரர் என்றால் காது கூசும் அளவுக்குத் தமிழில் திட்டுவார்).

7324PMAR---27B-big

ஜெயலலிதா சிவந்தி ஆதித்தனைப் பார்த்துவிட்டு, செய்தித் துறை புகைப்படக் கலைஞர்களின் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விட்டு சென்று விட்டார்.  அதன் பிறகு நடந்ததுதான் சர்ச்சைக்குரியது. ஜெயலலிதாவோடு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் (Core Cell CID) ஜெயலலிதா அகன்றவுடனேயே அந்த மருத்துவரை கடுமையாக திட்டியுள்ளனர்.. யாரைப் பாத்து ஷுவைக் கழற்றச் சொல்கிறாய் என்று தொடங்கிய மிரட்டல் சிறிது நேரம் தொடர்ந்துள்ளது. அத்தோடு அந்த பிரச்சினை முடிந்து விட்டது.

ஜெயலலிதாவின் காலணியை அவிழ்க்கச் சொன்ன மருத்துவரின் பெயர் கருணாநிதி.  அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.  அவருக்கு தற்போது வயது 70.  வியாழனன்று அன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். காலை 11 மணிக்கு சென்னை மாநகரக் காவல்துறையின் தேனாம்பேட்டையைச் சேர்ந்த காவல்துறையினர் காவல்துறை வாகனத்தில் சென்று வண்டியில் ஏறுங்கள் உங்களைக் கைது செய்கிறோம் என்று அழைத்துச் சென்றுள்ளனர்.  காலை 11 மணிக்கு வண்டியில் ஏற்றப்பட்ட 70 வயது கருணாநிதி பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறார்.  காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி  வரை நான்கு மணி நேரம், ஒரு ரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். சித்திரவதை என்றால் அடித்துத் துன்புறுத்தி, தலைகீழாக கட்டி அடித்தால்தான் சித்திரவதை என்றல்ல…  ஒருவரை உட்கார வைத்து, பலர் சுற்றி நின்று வளைத்து வளைத்து கேள்வி கேட்டு, கன்னத்தில் அறைவதம் சித்திரவதைதான்.   ஒரு குற்றச்செயலைச் செய்து, அது தொடர்பாக விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியைப் பார்க்க வரும் நபர் பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமலும், வெளியிலிருந்து வருகையில் காலணியோடும் வந்து, நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடப்போகிறாரோ என்ற கவலையில் காலணியைக் கழற்றுங்கள் என்று சொன்ன ஒரு நபரை இப்படி பலர் அமரவைத்து விசாரிப்பது சித்திரவதையா இல்லையா.   இதற்குப் பிறகு பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு மருத்துவர் கருணாநிதி வரவழைக்கப்பட்டபோது அவர் குடும்பத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.  3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையம் வரவழைக்கப்பட்ட பிறகு, அங்கே மருத்துவரை காவலர்கள் அடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு மருத்துவர் கருணாநிதியின் குடும்பத்தினர் வருவதற்குள், சக்திவேலு என்ற உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்துக்காக கருணாநிதியை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற நடுவரிடம் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்று விட்டனர். மாலை நீதிமன்ற நடுவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட மருத்துவர் கருணாநிதி மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்று இரவு என்ன நடந்தது என்பது மிகவும் மர்மமாகவே உள்ளது. நீதிமன்ற நடுவர் முன்னிலையில் மாலையில் ஆஜர்படுத்தப்பட்ட மருத்துவர், வெள்ளியன்று காலையில் ஜாமீன் கிடைத்து விடுவிக்கப்பட்டள்ளார்.

மருத்துவர் கருணாநிதியின் இந்தக் கைது ஜெயலலிதாவுக்குத் தெரிந்து நடந்ததாகத் தெரியவில்லை.  ஆனால் ஜெயலலிதாவின் தலையீட்டினாலேயே இரவோடு இரவாக மருத்துவர் கருணாநிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்படி ஒரு சம்பவம் முட்டாள் அரசில் மட்டுமே நடக்க முடியும்.  அதுவும் மருத்துவராக தனது கடமையை செய்த ஒரு மருத்துவரை கைது செய்யும் நடவடிக்கை முட்டாளின் அரசில் மட்டுமே நடக்கும்.  இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடந்திருக்கலாம், நடந்திருக்கிறது என்பதால் அவரைக் குற்றம் சொல்ல முடியாது என்று கூறலாம்.   ஆனால் நடந்த சம்பவத்துக்கு ஜெயலலிதா மட்டுமே முழுப் பொறுப்பு.  உள்துறைக்கான அமைச்சராக இருப்பதால் மட்டுமே ஜெயலலிதாவுக்கு இச்சம்பவத்தில் பொறுப்பு இல்லை.  ஒரு 70 வயது முதிய மருத்துவரை இப்படி கைது செய்து சித்திரவதை செய்வதை புரட்சித் தலைவி அம்மா விரும்புவார்கள் என்ற ஒரு பிம்பத்தை ஜெயலலிதா கட்டமைத்துள்ளார்.   இப்படி ஒரு மோசமான மனித உரிமை மீறலை அரங்கேற்றி அதன் மூலம் புரட்சித் தலைவியின் மனதில் இடம் பிடித்து அப்படி இடம் பிடிப்பதன் மூலம் மேலும் அதிகாரத்தை கூட்டிக் கொள்ளலாம், கூடுதலாகக் கிடைக்கும் அதிகாரத்தின் மூலம் கூடுதலாக லஞ்சம் வாங்கலாம், யாரை வேண்டுமானாலும் தூக்கிப் போட்டு மிதிக்கலாம் என்ற வேட்கையே காரணம்.  வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை.

ஒரு நோயாளியை சாதாரண சிகிச்சைப் பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவதற்கான காரணம், அவர் கோமா நிலையிலோ, சுயநினைவு இல்லாமலோ, எந்த நேரத்திலும் அவர் நிலை மோசமடையும் ஒரு நிலையிலோ, சிறுநீர் கழிக்க கேத்தட்டர் பொறுத்தப்பட்ட நிலையிலோ, மூக்கு வழியாக உணவு உண்ணும் நிலையிலோ இருக்கையில் மாற்றப்படுகிறார்.

சமீப காலமாக HAI என்று அழைக்கப்படும் Hospital Acquired Infection அல்லது non cosmial infection அதிக அளவில் பரவி வருகிறது. இதை மருத்துவமனைத் தொற்று என்று அழைக்கலாம்.  அமேரிக்காவில் உள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய்யம் நடத்திய (Center for Disease Control and Prevention) ஆய்வில் இத்தகைய மருத்துவமனைத் தொற்று காரணமாக மட்டும் ஆண்டுதோறும் 25 ஆயிரம் மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.  இத்தகைய மருத்துவமனைத் தொற்று பல்வேறு பாக்டீரியாக்கள் காரணமாக ஏற்படுகிறது. இந்த மருத்துவமனைத் தொற்று சிறுநீரகப் பாதை (Urinary tract) மூச்சுக் குழாய் (respiratory tract) வெளிக்காயங்கள் (external wounds)  ஆகியன வழியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை பாதிக்கிறது.

நோயாளிகளைப் பார்க்க வரும் நபர்கள், தும்முவதாலும், தொடுவதாலும், அவர்களின் மூச்சுக் காற்றின் வழியாகவும், அவர்கள் பாதத்தில் உள்ள தூசுகளாலும் தொற்று பரவி அது நோயாளிகளை பாதிக்கும் அபாயம் பெருமளவில் உள்ளது.  மேலும் சமீப காலமாக, பாக்டீரியாக்கள் மருந்துகளை எதிர்க்கும் சக்தியை (drug resistant) வளர்த்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை அவர்களின் நெருங்கிய உறவுகளைக் கூட மருத்துவர்கள் பார்க்க அனுமதிப்பதில்லை.  அப்படிப் பாரக்க முயற்சிப்பவர்களை மருத்துவர்கள், கையுறை, காலுறை, ஏப்ரன், முகமூடி போன்ற பாதுகாப்புக் கவசங்களை அணிந்த பிறகே பார்க்க அனுமதிக்கிறார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிவந்தி ஆதித்தனைப் பார்க்கச் சென்ற ஜெயலலிதா இது போன்ற எந்த பாதுகாப்புக் கவசங்களையும் அணியவில்லை.  ஒரு மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்கச் செல்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல.  மருத்துவமனை அவருக்கு ஒன்றும் புதிதல்ல.  1984ம் ஆண்டில் சிறுநீரகப் பழுது காரணமாக எம்.ஜி.ஆர் முதன் முதலாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது க்ரீம்ஸ் சாலையில், அப்போது புகழ் பெறாத அப்போல்லோ மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்க்கச் சென்றார் ஜெயலலிதா.  அப்போது ஜெயலலிதாவைப் பார்த்து ஜானகி உதிர்த்த வார்த்தைகள் எழுதத்தக்கதல்ல.  எந்த உளவுத்துறையினரும், காவல்துறையினரும் இன்று ஜெயலலிதாவைக் காலணியை கழற்றச் சொன்ன மருத்துவரை துன்புறுத்தினார்களோ, அதே துறையைச் சேர்ந்தவர்களால், ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையிலிருந்து அப்போதிருந்த சுழல் படிக்கட்டின் வழியாக மிரட்டி வெளியேற்றப்பட்டார் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

ஜெயலலிதா சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்ததால் அவருக்கு எதுவும் ஆகப்போவதில்லை.   ஆனால் அவ்வாறு பார்த்ததால் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சொம்படித்துக் கொண்டிருக்கும் தினத்தந்தி மேலும் சிறப்பாக சொம்படிக்கும் என்பதைத் தவிர்த்து வேறு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.  மாறாக, ஜெயலலிதா ஒரு மருத்துவமனைக்கு செல்வதால், அந்த நோயாளிக்குச் சிரமம், மருத்துவர்களுக்குச் சிரமம், மற்ற நோயாளிகளுக்குச் சிரமம், அந்த நோயாளிகளின் உறவினர்களுக்குச் சிரமம், சாலையில் உள்ள பொதுமக்களுக்குச் சிரமம் என்று பல்வேறு தரப்பினருக்கு சிரமம் மட்டுமே ஏற்படுகிறது.  ஜெயலலிதா நேரில் சென்று பார்ப்பதால் சம்பந்தப்பட்ட நோயாளியின் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.  மாறாக, மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம்.  பழம்பெரும் நடிகை சுகுமாரியை  ஜெயலலிதா சென்று பார்த்து வந்த நான்கே நாட்களில் அவர் மரணமடைந்தது ஒரு சிறந்த உதாரணம்.

7306PMAR---22-H-big

நோயாளிகளின் மீதான தனது அன்பை ஜெயலலிதா நேரில் சென்றுதான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.  சம்பந்தப்பட்ட நோயாளியிடமோ, அவர் குடும்பத்தினரிடமோ தொலைபேசியில் நலம் விசாரித்தாலே அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைவார்கள். விளம்பரத்திற்காக இன்னாரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இன்று, தொலைபேசியில் நலம் விசாரித்தார் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். ஜெயலலிதா தனது ஆட்சி முடியும் வரை நோயாளிகளை அந்த நோயாளிகளின் நலன் கருதி பார்க்காமல் இருப்பது நல்லது.

இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகள் ஆய்வுக்குரியன.   தேனாம்பேட்டை உதவி ஆணையராக இருப்பவர் சிவபாஸ்கரன்.  இவர் நீண்ட நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உளவுப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர்.  ஒரு மாவட்டத்தின் உளவுப் பிரிவு ஆய்வாளர் (Special Branch Inspector) வேலை என்றால் என்னவென்றால், காவல்துறை மொழியில் பக்கெட் தூக்கும் வேலை என்று பொருள்.  அந்தந்த மாவட்டக் கண்காணிப்பாளரின் வீட்டு வேலை, அவர் உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு ஊர் சுற்றிக் காட்டுவது, அதிகாரியின் வீட்டு மளிகை சாமான்கள் வாங்கித் தருவது, அவரின் “இதரத் தேவைகளை” பூர்த்தி செய்வது, அவருக்கு மாமூல் வசூல் செய்வது, போன்ற வேலைகளே பிரதான வேலைகள்.  இதையெல்லாம் செய்த பிறகே, உளவு வேலைகளைச் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக உளவுப்பிரிவில் மாவட்ட ஆய்வாளராக ஒரு அதிகாரி இருக்கிறார் என்றாலே, அவர் சிறந்த பக்கெட் என்று பொருள்.  நீண்ட நாட்களாக பக்கெட்டாக இருந்த சிவபாஸ்கரன், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றதும், கும்பகோணம் டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.  கும்பகோணத்தில் சிவபாஸ்கரன் மாமூல் வாங்காத இடமே இல்லை எனலாம்.   கிட்டத்தட்ட கிரி படத்தில் வடிவேலு மாமூல் வாங்கிய அளவுக்கு சிவபாஸ்கரனும் மாமூல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.

உதவி ஆய்வாளராக இருந்தபோது, தற்போது சென்னை நகர ஆணையராக உள்ள ஜார்ஜின் பக்கெட்டாக வேலை பார்த்த சிவபாஸ்கரனைப் போன்ற சிறந்த பக்கெட்டுகள் சென்னை நகருக்கு தேவை என்பதால், ஜார்ஜ், சிவபாஸ்கரனை சென்னைக்கு மாறுதல் செய்து, தேனாம்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கிறார். இந்த சிவபாஸ்கரன்தான் மருத்துவர் கருணாநிதியின் கைதில் முக்கிய சூத்ரதாரி என்று காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தில் நீதித்துறையின் செயல்பாடுகள் மர்மமான முறையில் இருந்துள்ளதோடு அல்லாமல், அயோக்கியத்தனமாகவும் உள்ளது.   கைது செய்யப்பட்ட ஒரு நபரை நீதித்துறை நடுவரின் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்க வேண்டும். அவ்வாறு ஒரு கைதியை நீதித்துறை நடுவரின் முன்பு ஆஜர்படுத்துகையில், காவல்துறை அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளில் சந்தேகம் இருந்தால், நீதித்துறை நடுவர், குற்றம்சாட்டப்பட்டவரை சிறைக்கு அனுப்பத் தேவையில்லை.  உங்களை சொந்த ஜாமீனில் விடுவிக்கிறேன் என்று விடுவிக்கலாம். ஆனால், 99 சதவிகித நீதித்துறை நடுவர்கள் செக்குமாடுகள் போலத்தான் செயல்படுகிறார்கள்.

ஒரு நீதித்துறை நடுவரின் முன்பு ஒரு குற்றவாளியை ஆஜர்படுத்தினால், பெரும்பாலான நீதித்துறை நடுவர்கள் கேட்கும் கேள்வி “எனி கம்ப்ளெயின்ட்ஸ்” அல்லது ”ஏதாச்சும் சொல்லனுமாப்பா” அந்தக் கைதி என்னை போலீஸ் அடிச்சாங்க என்று சொன்னால் அதைக் காதில் கூட வாங்காமல், உங்களை 15 வரை ரிமாண்ட் பண்றேன் என்று ஆல் இந்திய ரேடியோவின் செய்தி வாசிப்பாளர்கள் போல கூறுவார்கள்.  நீதித்துறை நடுவருக்கு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கியுள்ள எந்த அதிகாரத்தையும் நீதித்துறை நடுவர்கள் பயன்படுத்தாமல், காவல்துறையின் அடிமைகள் போலவே செயல்படுகிறார்கள்.  நீதித்துறை நடுவர்கள் அவர்களின் அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தொடங்கினால், காவல்துறையினரின் பொய்வழக்குகளில் பாதியைக் கட்டப்படுத்த முடியும். ஒரு 70 வயது மருத்துவர், சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர், ஒரு அரசு ஊழியரை, அதுவும் ஒரு உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற வழக்கைப் பார்த்ததுமே நீதித்துறை நடுவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும் இது பொய் வழக்கு என்று.  முதலமைச்சரோடு வரும் காவல்துறை அதிகாரிகளை எப்படி ஒரு 70 வயது முதிர்ந்த மருத்துவர் தடுத்திருக்க முடியும் ?  ஆனால் ஒரு செக்குமாட்டைப் போன்ற அறிவை உடைய ஒரு நீதித்துறை நடுவர் அந்த முதியவரை சிறைக்கு அனுப்பும் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.

சிறைக்கு மருத்துவர் கருணாநிதி எப்படி அனுப்பப்பட்டாரோ, அதே போல மர்மமான முறையில் அவர் விடுதலையும் செய்யப்பட்டிருக்கிறார்.  வியாழன் அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை அவர் நீதித்துறை நடுவரால் ரிமாண்ட் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  வியாழனன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தால் கூட, அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வெள்ளியாகியிருக்கும்.  வியாழனன்றே ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் கூட, அதுவும் சொந்த ஜாமீன் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அந்த ஜாமீன் மனுவை இரவோடு இரவாகத் தயார் செய்து, காலை 6 மணிக்கு புழல் சிறைக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, வெள்ளிக்கிழமை காலை மருத்துவர் கருணாநிதி சிறையிலிருந்து வெளியே வந்திருக்க முடியும். யார் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தது, நீதித்துறை நடுவர் அதை எப்போது விசாரித்தார், அந்த ஜாமீன் உத்தரவு எப்போது தயார் செய்யப்பட்டது, அந்த ஜாமீன் உத்தரவை யார் புழல் சிறைக்கு எடுத்துச் சென்றது, என்பது போன்ற விபரங்கள் வெளிவராமல் மர்மமாகவே உள்ளன.  ஆனால் சட்டபூர்வமாக எதுவும் நடைபெறவில்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  அரசு இயந்திரம் நினைத்தால் ஒரு மனிதரின் வாழ்வை எப்படிச் சின்னாபின்னமாக்க முடியும் என்பதற்கு மருத்துவர் கருணாநிதியின் கைது ஒரு சிறந்த உதாரணம்.  இரவோடு இரவாக மருத்துவர் கருணாநிதியை விடுவிக்க உத்தரவிட்ட ஜெயலலிதா, இதோடு நின்று விடாமல், இந்தக் கைதுக்கு உத்தரவிட்டது யார், எந்த அதிகாரி முடிவெடுத்தார் என்று கண்டறிய வேண்டும்.  கீழ் நிலை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த உயர் அதிகாரி உத்தரவிட்டார் என்பதை அறிந்து, அந்த அதிகாரியை, உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளான மருத்துவருக்கு அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். இது போல எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே, ஆர்வக்கோளாறு பிடித்த அடிமைகளின் அதிகப்பிரசங்கிச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

இவற்றைச் செய்ய ஜெயலலிதா தவறுவாரேயானால், காலம் அவருக்கு மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.

Viewing all 244 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>