Quantcast
Channel: Savukku
Viewing all 244 articles
Browse latest View live

வருந்துகிறோம்.

$
0
0

தமிழகத்தைப் பொறுத்தவரை, சாதீய மோதல்கள் என்பது என்பது நீறுபூத்த நெருப்பாகவே எப்போதும் இருந்து வருகிறது. ஆதிக்க சாதியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே மோதல் வெடிக்க ஒரு சிறு பொறி போதுமானதாக இருந்து வருகிறது.  மக்களிடையே ஆழமாக ஊறிய சாதிய உணர்வு எத்தனை தலைமுறை மாறினாலும் மேலும் மேலும் வளர்ந்து வருகிறதே தவிர, சற்றும் குறைந்தபாடில்லை.  நாகரீக வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ, இந்த சாதி உணர்வை தணிக்கத் தவறிய நிலையில் சாதிய மோதல்கள் நடைபெறாமல் தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆளும் கட்சிக்கே இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே இந்த சாதிய உணர்வுகளையும், மோதல்களையும் தங்கள் சுய ஆதாயத்துக்காக தொடர்ந்து பயன்படுத்தியே வந்திருக்கின்றன.

3325733396_bdb800d4a9_b

தென்மாவட்டங்களைப் போல கடுமையான சாதி மோதல்கள் வட தமிழகத்தில் இல்லை என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியும், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியும், தலித் வன்னியர் இடையேயான மோதல்களை கூர்மைப்படுத்தின. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி, தலித் மக்கள் அணிதிரள ஒரு களமாக அமைந்தது.  இதுநாள் வரை தாக்கப்படும் இடத்தில் இருந்த தலித்துகள், திருப்பித் தாக்கும் நிலையை எடுத்ததால், தலித்துகள் வன்னியர்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்தன.

ஒரு கட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கைகோர்த்ததையடுத்து, இரு சமூகத்தினரிடையேயான மோதல்கள் தணிந்தன.   ராமதாஸை வைத்து அம்பேத்கர் சிலைகளைத் திருமாவளவன் திறக்க வைத்ததும், ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் கொடுத்ததும், இருவரும் ஈழம் தொடர்பான போராட்டங்களில் ஒன்றாகக் கலந்து கொண்டதும், இரு சமூகத்தினரிடையே முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வில்லையென்றாலும், மோதல் இல்லாத நிலையை உருவாக்கியது.  இந்த உறவு தேர்தல் களத்திலும் தொடர்ந்ததால், சாதீய மோதல்கள் கவலைகொள்ளும் அளவுக்கு ஏற்படவில்லை.

2004 பாராளுமன்றத் தேர்தலில், திமுகவோடு கூட்டு சேர்ந்து 6 எம்.பி.பதவிகளைப் பெற்ற டாக்டர் ராமதாஸூக்கு பதவியும் அதிகாரமும், தனது தகுதியை மீறி கர்வம் கொள்ள வைத்தது.   டெல்லியில் அதிகாரத்தில் பங்கு, மாநிலத்தில் மைனாரிட்டியாக அமைந்த திமுக அரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏக்கள் ஆகியவை ராமதாஸுக்கு “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்ற மமதையை அழித்தது.  2006 திமுக ஆட்சிக்காலத்தில், நாள்தோறும், திமுக ஆட்சிக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்திருந்தார் ராமதாஸ்.  அவ்வப்போது கருணாநிதி அரசை குறைசொல்வது, ஆட்சிக்கு மார்க் போட்டு பெயில் மார்க் போடுவது என்ற விமர்சனங்களில் ஒரு ஆட்சியையோ, கட்சியையோ நியாயமான முறையில் விமர்சனம் செய்வது என்பதைத் தாண்டி, நான் இல்லாவிட்டால் இந்த ஆட்சியே இல்லை… இந்த ஆளை தினந்தோறும் எரிச்சலூட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியே அதிகமாக இருந்தது.

தன்னோடு கூட்டணி வைத்துவிட்டு, ஒவ்வொரு தேர்தலின்போதும், மாறி மாறி கூட்டணி வைத்ததை தமிழக மக்கள் வெறுத்தார்களோ இல்லையோ, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மிகக் கடுமையாக வெறுத்தார்கள்.  அரசியலில் கூட்டணி அமைப்பதையும், கட்சி, தலைவர்கள் மற்றும் அவர்கள் பலத்தை அனுமானிப்பதில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே திறமையானவர்கள். எப்போதாவது ஏற்படும் சறுக்கலைத் தவிர்த்து, இருவருமே பல நேரங்களில் சரியான முடிவுகளையே எடுக்கிறார்கள்.  அந்த வகையில், ராமதாஸை நீண்ட நாட்களாகவே கவனித்து வந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே ராமதாஸ் அழிக்கப்படவேண்டிய சக்தி என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ARV_RAMADOSS_JAYALALI_6702f

இந்த முடிவுகளின் தாக்கம் 2009 பாராளுமன்றத் தேர்தல் மற்றம் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது.  மக்கள் பார்வையில் வலுவான கூட்டணி என்று காண்பித்துக் கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடிக்க இரண்டு கட்சிகளாலும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு 2009 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வியது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை தொடர்ந்தது.  தொடர்ந்து திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து வந்த ராமதாஸ், திமுக கூட்டணியில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார்.  30 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 18 எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை மிரட்டிக் கொண்டிருந்த ராமதாஸுக்கு இந்த படுதோல்வி மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. தன் மகனுக்கு ஒரு ராஜ்யசபை எம்.பி சீட்டைக் கூட பெற்றுத் தர முடியாத ஒரு அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ராமதாஸின் வெற்றி என்ன தெரியுமா ?  மாறி வரும் அரசியல் தட்பவெட்பங்களை நுட்பமாகக் கண்டறிந்து அதற்கேற்றார்போல அரசியல் கூட்டணிகளை அமைப்பது.  இவரது இந்த யுக்தி 2009 வரை வெற்றியையே பெற்றுத் தந்தது.  அரசியலில், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால் காலத்தால் கரை ஒதுக்கப்படுவார்கள்.  அப்படி உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தவர்தான் ராமதாஸ்.  தேர்தல் அரசியலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்று வந்துவிட்டாலே கொள்கை கோட்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது.  வெற்றி பெற்றவன் சொன்னதே வேதம். இது போன்ற தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸின் செல்வாக்கை குறைக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்று இரண்டு திராவிடக் கட்சிகளுமே முடிவெடுத்தன.

2011 தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ராமதாஸுக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்பட்டது.  மத்தியிலும் அதிகாரத்தை இழந்ததால், மாநிலத்திலும் அதிகாரம் இல்லாமல் நிலை தடுமாறினார் ராமதாஸ்.  அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர வேறு எந்த அரசியல் செயல்பாடுகளும் இல்லாமல் முடங்கிப்போன நிலையில்தான் வாராது வந்த வரப்பிரசாதமாக அமைந்தது தருமபுரி கலவரம்.  தருமபுரி கலவரம் குறித்த கட்டுரைகளின் இணைப்புகள் தர்மபுரி வன்முறை :  மாறும் அரசியல் முகங்கள் (2) தருமபுரி : தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறி (3) அவள் பெயர் அம்பிகா.

தருமபுரி கலவரம், ராமதாஸுக்கு ஒரு புதிய ஆயுதத்தை அளித்தது.   சமுதாயத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்தான ஆயுதமான சாதி வெறியைத் தூண்டும் ஆயுதத்தை கையில் எடுத்தார் ராமதாஸ். அரசியல் ரீதியாக இது தனக்கு மிகப்பெரிய ஆதரவையும் பலத்தையும் உருவாக்கும் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கே அவரது சாதி வெறியை உருவாக்கும் தொடர் நடவடிக்கைகள்.

DSC_0891

தலித் இளைஞர்கள் மற்ற சாதிப் பெண்களோடு காதல் வயப்படுவதும், அவர்கள் பெற்றோர்கள் சம்மதிக்காத காரணத்தால் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொள்வதும், காலம் காலமாக தமிழகத்தில் நடந்து வருபவை.  அவற்றுள் சில திருமணங்கள் முறிவில் முடிவதும் நடந்தே வருகிறது. கல்லூரியில் படிக்கும் இளம்பருவத்தினர் காதல் வயப்படுகையில் அவர்கள் சாதி பார்ப்பதில்லை.   அவர்களுக்கு அந்த வயதில் உள்ள ஈர்ப்பு, சாதி, பொருளாதாரம் போன்ற எதைப்பற்றியும் சிந்திக்க வைப்பதில்லை.  இது போன்ற திருமணங்களால், தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள், கடுமையாக கோபமடைகிறார்கள் என்பதும் உண்மையே.  “எந்த சாதியா இருந்தாலும் பண்ணி வச்சுருப்போம்.  போயும் போயும் இந்த ஈன சாதிக்காரனப் போயி கட்டிக்கிட்டு வந்து நிக்கிறாளே“ என்ற வசனம் இயல்பாக கேட்கக் கூடிய வசனம். தலித் அல்லாத சாதியில் உள்ள பெற்றோர்களின் இந்த உணர்வு ஒட்டு மொத்த தலித் அல்லாத சாதிகளை இணைக்க உதவும் என்று கருதினார் ராமதாஸ்.

இதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, அனைத்து சாதியினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அந்த கூட்டமைப்பில் தலித்துகளுக்கு இடமில்லை என்றார்.  ஏன் தலித்துகளுக்கு இடமில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்கு, இதை விளக்கிச் சொல்ல வேண்டுமா என்று வெளிப்படையாகவே பேசினார்.  தொடக்கத்தில், இந்தக் கூட்டமைப்பில் பங்கு கொண்டு சிக்கிக் கொண்ட இஸ்லாமிய அமைப்புகள், அவசர அவசரமாக கழற்றிக் கொண்டன.  காதல் டாக்டர்

DSC_0991

தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் நடத்தி தலித்துகளுக்கு எதிராக பேசினார் ராமதாஸ். தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கூட்டணியில், சாதிக்கட்சித் தலைவர்கள் பங்கு கொண்டார்கள்.  தேவர், கவுண்டர், பிள்ளைமார், வேளாளர்கள், முதலியார்கள், நாயக்கர்கள், செட்டியார்கள், என்று பெரும்பாலான சாதித் தலைவர்கள் பங்கு பெற்றார்கள்.  ஆனால், இந்த ஆதிக்க சாதிகளுக்குள் இருந்த உள் முரண்கள், தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இருந்த முரண் காரணமாக பெரிதாகாது என்று ராமதாஸ் தப்பு கணக்குப் போட்டார்.   தேவர் சாதியின் சார்பாக ராமதாஸின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பி.டி.அரசகுமார், ராமதாஸ் முன்னிலையிலேயே தேவர் சாதி வன்னியர் சாதியை விட உயர்ந்தது என்று பேசினார்.  மேலும், வன்னியர்களைப் போல, தேவர் சாதியினருக்கு பறையர்கள் எதிரிகளல்ல.  தேவர் சாதியினரோடு காலம் காலமாக மோதி வருவது பள்ளர்களே. தென் மாவட்டங்களில், முக்குலத்தோர், பள்ளர்கள் இடையே காதல் திருமணங்கள் கூட அரிதாகவே இருக்கிறது. இதனால், ராமதாஸின் காதல் நாடகம் குறித்த பேச்சுக்கள் மற்ற சாதியினரிடையே பெரிய அளவில் எடுபடவில்லை. மேலும், அவர்களுக்கு இடையேயான உள் முரண்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கலந்துரையாடல் கூட்டங்களுக்கும் பெரிய அளவில் ஆதரவு இல்லை.

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதன் அடிப்படையில் சாதித் தலைவர்களை ஒருங்கிணைக்கலாம் என்றும் ராமதாஸ் எடுத்த முயற்சிகள் தோல்வியையே தழுவின. ஆனால் ராமதாஸ் புலிவாலைப் பிடித்தது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.  அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்ற .கூட்டணியைத் தொடங்கினால் ஒவ்வொரு தலைவரும் திருவாத்தான்களாக இருக்கிறார்களே என்று ராமதாஸே வியந்துபோனார்.  அவர்களை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு மலைப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை.  ஏனென்றால் ஒவ்வொரு சாதிக்கும் குறைந்தது 5 முதல் ஆறு சங்கங்கள் இருந்தன. அத்தனை சங்கங்கள் இருந்ததன் காரணமே அந்தச் சங்கத் தலைவர்களின் சுயநலம்தான்.  நான்தான் தலைவராக வேண்டும் என்று தனித்தனித்தனியாக சங்கம் தொடங்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட தலைவர்களை அழைத்து அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஏற்படுத்தினால் அது விளங்குமா ? தான் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்பதை ராமதாஸ் தாமதமாகத்தான் உணர்ந்தார்.  தன்னோடு அனைத்து சமுதாயக் கூட்டமைப்பில் வந்து இணைந்த சாதிச் சங்கத் தலைவர்கள், அந்தந்த சாதிகளின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் ராமதாஸ் தாமதமாகவே உணர்ந்தார்.

ஆனால் இதற்குள் விஷயம் கைமீறிப் போய் விட்டது.  காதல் திருமணங்களுக்கு எதிரான ராமதாஸின் நிலைபாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இடது சாரிகள் உள்ளிட்ட நடுநிலையாளர்கள் வெளிப்படையாகவே பாட்டாளி மக்கள் கட்சியையும், ராமதாஸையும் கண்டித்தனர். இளைஞர்கள் மத்தியில் ராமதாஸின் காதல் எதிர்ப்பு நிலைபாடு நகைப்புக்குள்ளானது.  பெரும்பாலான வன்னியர்களே ராமதாஸுக்கு கிறுக்கு பிடித்து விட்டதா என்று வருத்தப்பட்டனர்.  ஆனால் புலிவாலைப் பிடித்த ராமதாஸ் அதை எப்படி விடுவது என்று தெரியாமல் தொடர்ந்து அந்தப் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார்.

அது அழிவுப்பாதை என்பதை ஒரு பழுத்த அரசியல்வாதியான ராமதாஸ் உணரத்தவறினார்.  அந்த அழிவுப்பாதை மரக்காணத்தில் ஒரு மோசமான கலவரம் உருவாகக் காரணமாக இருந்து, இன்று சிறை செல்லும் அளவுக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது.  சித்திரை விழா அன்று, காவல்துறையினர் மிகச் சிறப்பாக பணியாற்றியதால், பெரும் கலவரம் தடுக்கப்பட்டள்ளது.   தலித் மக்கள் பெரும்பாலாக குடியிருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கலவரம் பரவும் அபாயம் இருந்தும், காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கை, குறிப்பாக வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணப்பனின் திறமையான காவல் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது.   காவல்துறையினர் சற்றே அலட்சியமாக இருந்திருந்தால், பெரும் கலவரம் மூண்டு, உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும்.  அந்த உயிரிழப்புகள் ராமதாஸ் மீது தீராத பழியை ஏற்படுத்தியிருக்கும்.  அந்த வகையில் ராமதாஸ் காவல்துறையினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அனைத்து சமுதாயத் தலைவர்களின் கூட்டமைப்பு எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராததால், வருடா வருடம் பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவை சிறப்பாக கொண்டாடி மற்ற கட்சிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும், பாராளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டணி வைப்பதற்காக திராவிடக் கட்சிகள் கெஞ்ச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் ராமதாஸ்.

வடநெமிலி நில விவகாரம் தொடர்பாக ப்ரதீப் யாதவ் ஐஏஎஸ் மற்றும் ஜாங்கிட் ஐபிஎஸ் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்து, அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  அந்த நில அபகரிப்பில் நிலத்தை பறிகொடுத்த கிராம மக்கள் அனைவரும் மிகுந்த ஏழை வன்னியர்கள்.   மத்திய உள்துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் ப்ரதீப் யாதவ்.  இந்த ப்ரதீப் யாதவ் மூலமாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தொடர்பு கொள்ளப்பட்டு, சித்திரை முழு நிலவு விழாவுக்கு அகிலேஷை சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள வைப்பதென்று ஏற்பாடானது.  இதற்கு கைமாறாக ப்ரதீப் யாதவ் மீதான வழக்கை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெற வேண்டும் என்பதே திரைமறைவு ஒப்பந்தம். முதலில் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டார் அகிலேஷ் யாதவ்.  அதன் அடிப்படையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.  இறுதி நேரத்தில், விழாவுக்கு வர இயலாது. ஆனால் அதற்கு முன்பாக வருகிறேன் என்று தெரிவித்தார்.  ஆனால் அகிலேஷ் தமிழகம் வந்ததன் உண்மையான நோக்கம், ஜெயலலிதாவை சந்தித்து, நாளைய மூன்றாவது அணிக்கு ஒரு அடித்தளம் அமைப்பதே.   ஆனால் சென்னை வந்த அகிலேஷ் பாட்டாளி மக்கள் கட்சியோடு இணைந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு திரும்பச் சென்று விட்டார்.

7480PApl-22---e-big

உத்தரப்பிரதேசம் போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் தமிழகத்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டால் அதற்கு கிடைக்கும் ஊடக கவனம்  (Media attention) சிறப்பானதாக இருக்கும்.  ஆனால், இன்று பலவீனமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு ஊடக கவனம் இருக்காது என்பதை ராமதாஸ் நன்றாக உணர்ந்தே இருந்தார். பிறகு ஊடக கவனத்தை சித்திரைப் பெருவிழா மீது எப்படித் திருப்புவது ?

அதற்காக ராமதாஸ் கையாண்ட மலிவான உத்தியே சாதி வெறி மற்றும் வன்முறை.   ராமதாஸின் அரசியல் பலம் குறையக் குறைய அவர் மிக மிக பதற்றமானார் என்பதை அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண முடிந்தது.  ராமதாஸின் வழக்கம் மற்றும் பாணி என்னவென்றால், அவர் ஒரு பக்குவமடைந்த அரசியல்வாதி போல பேசுவார்.  காடுவெட்டி குரு, சகட்டுமேனிக்கு கழிசடை அரசியல்வாதி போல பேசுவார்.  ராமதாஸ் அதைக் கண்டும் காணாமல் இருப்பார்.  ஆனால் தருமபுரி கலவரத்துக்குப் பின் ராமதாஸ் வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசத் தொடங்கினார்.  ஒரு மனிதனின் மறுபக்கம் அவன் பலவீனத்தில் வெளிப்படும்.  அப்படிப்பட்ட ராமதாஸின் மறுபக்கம், அவர் பலமிழந்து, வலுவிழந்து இருக்கும் சூழலில் பகிரங்கமாக வெளிப்பட்டது.

சித்திரைப் பெருவிழாவில் ராமதாஸ் எப்படிப் பேசினார் என்பதை ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது.

“இந்த முறை போலீஸை குறிவைத்தார் ராமதாஸ். ''ஒரு சமுதாயத்தினரால் மற்ற சமுதாயத்தினருக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதையெல்லாம் நாங்கள் பேசினால், சாதியைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கின்றனர். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. அவர்களோடு இணைந்து நெருக்கமாக வாழவே விரும்புகிறோம். அவர்களைப் பார்த்து மற்ற சமுதாயங்கள் அஞ்சக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம், காவல் துறைதான். நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கிறீர்களா? அல்லது, தவறு செய்கிறவர்களை எங்களையே தண்டிக்கச் சொல்கிறீர்களா?'' என்று பேசிக்கொண்டே போன ராமதாஸ், அச்சில் ஏற்றமுடியாத சில வார்த்தைகளை உச்சரித்துவிட்டு, ''உங்களுக்குத் திராணி இல்லையா? தெம்பு இல்லையா? நீங்கள் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுறீங்க? எங்க சாதிப் பெண்களை எல்லாம் அவன் கூட்டிக்கிட்டுப் போவான். நாங்க பேசாம இருக்கணுமா? நீயும் (போலீஸ்!) நடவடிக்கை எடுக்க மாட்டே... நீயும் அவங்களை உள்ளே தள்ள மாட்டே... அது சம்பந்தமாக கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை குண்டாஸ்ல போட மாட்டே... அப்புறம் என்ன நாடு இது? குரு சொல்வதைப்போல் நான் கண் சிமிட்டினால் போதும்... ஒரு இடத்தில்கூட அவர்கள் உள்ளே நுழைய முடியாது. இதுவரை நான் இப்படிப் பேசினது இல்லை. ஆனால், இந்த போலீஸ் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது இப்படித் தோணுது. போலீஸில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் எங்கள் கட்சி... ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

எனக்கு ஏன் பாதுகாப்பு அதிகம் கொடுக்கிறீர்கள்? யாரால் அச்சுறுத்தல்? காடுவெட்டி குருவுக்குப் பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். அன்புமணி நல்லவர் என்று சொல்லி அவருக்கும் பாதுகாப்பு இல்லை. உங்க மந்திரிக்கு எல்லாம் பாதுகாப்பு. அவர்கள் எல்லாம் கெட்டவர்களா?'' என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. “

தருமபுரி மற்றும் வட தமிழகத்தின் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம், வன்னியர்கள் மிக மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது.  கவுண்டர், முதலியார், செட்டியார், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களைப் போல வன்னியர் சமூகம் முன்னேறிய சமூகம் கிடையாது. மிக மிக சாதாரணமான சமூகமே வன்னியர் சமூகம்.  அதனால்தான் அந்த சமூகத்துக்கும், தலித் சமூகத்துக்கும் பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல் இருந்தது. அந்த பிற்பட்ட சமூகத்துக்கு ஒரு பெரிய பலத்தை உருவாக்கித் தந்தவர் மருத்துவர் ராமதாஸ்.  எண்பதுகளில் இட ஒதுக்கீடு வேண்டி ராமதாஸ் நடத்திய மிகப்பெரிய போராட்டமே பாட்டாளி மக்கள் கட்சியை பெரும் பலம் உள்ள அரசியல் சக்தியாக உருவாக வைத்தது.  பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணிக்காக, கருணாநிதியும், ஜெயலலிதாவும், தைலாபுரத் தோட்டத்தின் கதவுகள் திறக்காதா என்று காத்திருந்தனர்.   அந்த அளவுக் வன்னியர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார் ராமதாஸ்.

ராமதாஸ் தொடங்கிய பொங்கு தமிழ் அறக்கட்டளை, அலை ஓசை செய்தித்தாள், மக்கள் தொலைக்காட்சி போன்றவைகள் அற்புதமான மாற்று முயற்சிகள்.  தமிழ் மொழிக்கு அருமையான பங்களிப்பை செய்தவை. ராமதாஸின் தமிழார்வத்தையும், தமிழ் மொழியின் மீதான நேசத்தையும் ஒப்பிட்டால் கருணாநிதியை விட ஒரு படி மேல் என்றே சொல்ல வேண்டும்.   ஒவ்வொரு ஆண்டும், மாற்று நிதி நிலை அறிக்கை வெளியிடும் ராமதாஸின் முயற்சிகள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டியவை.

அப்படிப்பட்ட ராமதாஸ் பி.டி.அரசக்குமார், மணிகண்டன் போன்ற அல்லு சில்லுகளோடா கைகோர்ப்பது ?  பி.டி.அரசக்குமார் போன்ற நபர்களெல்லாம் ராமதாஸோடு சேர்ந்து அரசியல் செய்யும் அளவுக்கு ஆளுமை படைத்தவர்களா ?  என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மிக மிக மோசமான புதைகுழியில் விழுந்தார் ராமதாஸ்.

தான் பேசும் பேச்சுக்களும், தான் எடுக்கும் நடவடிக்கைகளும், வன்னியர் மற்றும் தலித்துகளுக்கிடையே மிக மிக மோசமான பகையை உருவாக்கும் என்பது ராமதாஸுக்கு தெரியாதது அல்ல.  அப்படி ஒரு பகை உருவாக வேண்டும் என்பதைத் தெரிந்தே செய்தார் ராமதாஸ்.   சம்பந்தமே இல்லாமல், ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், திருமாவளவனை வம்புக்கு இழுத்தார்.  திருமாவளவன்தான் எல்லா கலவரத்துக்கும் காரணம் என்றார்.   ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், ராமதாஸோடு பல வயது குறைந்தவரான திருமாவளவன், மிக மிக பக்குவமாக செயல்பட்டார்.  “ராமதாஸுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை.  தமிழகத்தில் உள்ள இடதுசாரிகளும், பெரியாரிஸ்டுகளும், பகுத்தறிவாளர்களும் ராமதாஸுக்கு பதில் சொல்ல வேண்டும்.   சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களை, அனைத்து ஆதிக்க சாதியினரும் ஒன்று கூடி எதிர்த்தால் சமூகம் என்ன ஆகும் ?   ஒரு ஊரில் உள்ள அத்தனை சாதியினரும் சேர்ந்து தலித்துகளை தாக்கத் தொடங்கினால் தலித்துகள் எங்கே போவார்கள் ? “ என்று ஒரு மூத்த அரசியல்வாதி போல ரியாக்ட் செய்தார்.  மேலும் அவர், “ராமதாஸ் எங்களுக்கு எதிரி  அல்ல.  ராமாஸை வைத்து பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்தவன் நான்.  ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.   எதற்காக எங்களை இப்படி இழிவு படுத்திப் பேசுகிறார், எதற்காக எங்களை எதிரிகளாகப் பார்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை“ என்றார்.  திருமாவளவனின் இந்தப் பேச்சு, அவரை பக்குவப்பட்ட அரசியல்வாதியாக காண்பித்த அதே நேரம், ராமதாஸை பக்குவமிழந்த இரண்டாம் தர அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தியது.

2599190963_70d0d6d4b2_b

ராமதாஸ் போன்றவர்கள், ஒரு சிறந்த அரசியல் தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர்கள்.  இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று சக்தியாக உருவாகியிருக்க வேண்டியவர்கள்.  பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடது சாரிகள் மற்றும் தலித் அமைப்புகள் போன்றவைகள் கைகோர்த்திருந்தால், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான மாற்றை தமிழகத்தில் உருவாகியிருக்க முடியும்.

ஆனால் அப்படி உருவாகியிருக்க வேண்டிய ராமதாஸ், இப்படிச் சீரழிந்து, வெளிப்படையாக சாதிக் கலவரத்தைத் தூண்டும் அளவுக்கு இறங்கிப் போனது மிக மிக வருத்தமளிக்கிறது.  ராமதாஸ் மீது கோபம் வருவதற்கு மாறாக, அவரின் இந்த வீழ்ச்சி வேதனையையே அளிக்கிறது.

செவ்வாயன்று கைது செய்யப்பட்ட ராமதாஸ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  தமிழக சிறைகளிலேயே கொடுமையான சிறை, திருச்சி சிறை.  ராதாஸ் அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு,  தமிழக அரசு, மருத்துவர் ராமதாஸ் அவர்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு சவுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. மிக மிக மோசமான சமூக விரோத செயலை செய்திருக்கிறார் ராமதாஸ்.  வெளிப்படையாக சாதி வெறியையும், வன்முறையையும் தூண்டும் ராமதாஸ் அவர்களை மன்னிப்பதற்கில்லை.  இனி அவர்,  அரசியலில் இருந்து ஓய்வுபெற்று தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது.

அன்பார்ந்த ராமதாஸ் அவர்களே….  உங்களின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது எங்களுக்கு வன்மம் இல்லை. ஆனால், இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டீர்களே என்று வருந்தவே செய்கிறோம். சிறை உங்களுக்கு மன அமைதியை தந்து நல்வழிப்படுத்தட்டும்.


ராமானுஜத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

$
0
0

 

Rajagopalan_IAS

 

Sheela_Balakrishnan_IAS

ராஜகோபால் அண்ணன் கண்ணுல அம்மாவப் பாத்து என்ன பூரிப்பு பாருங்களேன்..

தமிழக டிஜிபி ராமானுஜத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக பேச இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் பூங்கொத்து அளித்தனர்.

இவர்களை அடுத்து, தமிழக டிஜிபி ராமானுஜம் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து அளித்தார்.  உயர் அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து அளிக்கையில் 90 டிகிரி அளவுக்கு குனிந்து பூங்கொத்து அளிக்க வேண்டும் என்ற மரபை ராமானுஜம் மீறி விட்டார் என்ற அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Ramanujam_IPS

அதிமுக அரசில் அனைத்து அதிகாரிகளும் அடிமைகள் போல செயல்பட்டு வரும் நிலையில், டிஜிபி ராமானுஜம் தன்னை ஒரு அதிகாரியாக நினைத்துக் கொண்டு, அதிகாரி போலவே செயல்பட்டு வருகிறார்.  இது தங்களுக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது என்று பல அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் குமுறுகின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உயர் அதிகாரி கூறுகையில், பொது இடங்களில் பூங்கொத்து அளிக்கையில் 90 டிகிரி அளவுக்கு வளைந்து கொடுக்க வேண்டும்.  தனிப்பட்ட முறையில் முதல்வரைச் சந்திக்கையில், முதல்வர் கால் அருகே பூங்கொத்தை வைத்து விட்டு, அந்தப் பூங்கொத்திலிருந்து ஒரு பூவை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் என்பது அனைத்து அதிகாரிகளும், கடைபிடித்து வரும் விதி.  இந்த விதியை மீறி, ராமானுஜம் ஒரு அதிகாரி போல செயல்பட்டு, மற்ற அதிகாரிகளுக்கெல்லாம் தீராத அவமானத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இதனால் முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் மத்தியில் பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தலித்துகள் தங்கள் வீட்டை அவர்களாகவே கொளுத்திக் கொண்டு நஷ்ட ஈடு கேட்கின்றனர். ...

$
0
0

 

DSC_0866

இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். மே தினமான இன்று, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு கருப்பு தினம் என்றார்.  எங்கள் தொண்டர்கள் இரண்டு பேர் இறந்ததற்கு நீதி வேண்டி போராட்டம் நடத்திய மருத்துவர் ராமதாஸை தமிழக அரசு கைது செய்துள்ளது.

அடங்க மறு, திருப்பி அடி, என்று முழக்கமிடும் கட்சியினர் வீதிகளில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய மருத்துவர் அய்யாவை கைது செய்திருக்கிறார்கள்.   சட்டப்பேரவையில் முதலமைச்சர் படித்த அறிக்கையில் 90 சதவிகிதம் பொய். அது காவல்துறை தயாரித்துக் கொடுத்த அறிக்கை.  பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு அறிக்கை சட்டப்பேரவையில் படிக்கப்பட்டிருக்கிறது.   வேண்டுமென்றே பாட்டாளி மக்கள் கட்சி குறிவைத்துத் தாக்கப்படுகிறது.

மரக்காணத்தில் நடந்த வன்முறைக்கு முழுக்க முழுக்க காரணம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே.  மரக்காணம் கலவரத்தில் இறந்துபோன செல்வராஜ் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கை 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சித்திரைப் பெருவிழா மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஒரு விழா.  அந்த விழாவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமலுமே, இதர கட்சிகள் பாமகவை விமர்சிக்கின்றன, குறை கூறுகின்றன.

இன்று பாட்டாளி மக்கள் கட்சியை குறை கூறும் எந்தக் கட்சியும், இடது சாரிகள் உள்ளிட்ட எந்த கட்சியும் விசாரணை வேண்டும் என்று கேட்கவில்லை.  ஏன் விசாரணை கேட்கவில்லை என்றால், இறந்து போனது இரண்டு வன்னியர்கள் என்பதாலேயே.   காடுவெட்டி குருவை ஒரு பழைய வழக்கில் கைது செய்துள்ளார்கள். அவர் காணாமல் போன குற்றவாளி என்று கூறியிருக்கிறார்கள். இதிலிருந்தே இது உள்நோக்கமாக போடப்பட்ட வழக்கு என்பது தெரிகிறது.

மரக்காணம் பகுதியிலே ஜெயபாலன் என்பவர் கோழிப்பண்ணை வைத்திருக்கிறார்.  அவர் கோழிப்பண்ணை எரிக்கப்பட்டிருக்கிறது.  அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.   ஆனால் இதைப்பற்றி எந்த ஊடகமும் எழுதவில்லை.  ஆனால் தலித்களின் குடிசை வீடுகள் எரிக்கப்பட்டது பற்றி எல்லா ஊடகங்களும் எழுதுகின்றன.  இப்போதெல்லாம் தலித்துகள் தாங்களாகவே வீடுகளை எரித்து விட்டு நஷ்ட ஈடு கேட்கின்றனர். இது ஃபேஷனாகிப் போய் விட்டது.

காடுவெட்டி குரு பேசியது தவறுதான். அதற்காக அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திப்போம்.  காவல்துறையினரின் விதியை மீறி, இரவு தாமதமாக பேசுவது பெரிய குற்றமல்ல.. ஐபிஎல் மேட்சுகள் இரவு நேரம் கடந்து நடப்பதில்லையா ? இது ஒன்றும் பெரிய குற்றமல்ல. இதற்காக வழக்கு போட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.

மகாபலிபுரம் கோயில் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை அளித்த அறிக்கை முழுக்க முழுக்க பொய்யானது.  கோயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

தருமபுரி கலவரம் பற்றி விசாரிக்க உண்மை அறியும் குழுவை கலைஞர் அனுப்பினாரே… மரக்காணம் பற்றி விசாரிக்க ஏன் அனுப்பவில்லை ? தருமபுரி சம்பவம் குறித்து டெல்லியிலிருந்து, ஜப்பானிலிருந்து என்று பல்வேறு பேர் சென்று விசாரித்தார்கள்.  ஏன் மரக்காணம் குறித்து விசாரிக்க யாருமே செல்லவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியினர் போலி நம்பர் ப்ளேட்டுகளைப் பயன்படுத்தினார்கள் என்று முதல்வர் சட்டப்பேரவையில் பேசியதற்கு ஆதாரங்களை வெளியிடட்டும்.

வீரப்பன் படத்தை வைத்து பேனர்கள் வைப்பது ஒன்றும் தவறில்லை.  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்து பேனர்கள் வைப்பதில்லையோ அது போலத்தான் இதுவும்.

வன்னியர்கள் தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.  இதை நாங்கள் அறவழியில் போராடி சந்திப்போம். நடந்த கலவரத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோருகிறோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு பேசினார் அன்புமணி ராமதாஸ்.

டாஸ்மாக் தமிழ் 2

$
0
0

 “எல்லோருக்கும் வணக்கம்“ என்றபடியே உள்ளே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் தமிழ்.

tas_boy_1

“வணக்கம் தமிழ் உக்காருப்பா. நம்ப ஐட்டம் கொண்டு வந்தியா“ என்றார் கணேசன்.

“இந்தாங்கண்ணே“ என்று ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து அளித்தான்.

“சரக்கெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல நியூஸை சொல்லுய்யா.. நாளைக்கு இஷ்யூ டேட்“ என்று கோபப்பட்டான் வடிவேலு.

“இரு மாமா… இப்போத்தானே வந்துருக்கேன்.. “ என்று கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டான் தமிழ்.

“டேய்… கடுப்பக் கௌப்பாதடா“ என்றான் பீமராஜன்….

“கூல் கைஸ்… லெஸ் டென்ஷன் மோர் நியூஸ்…“ என்று விட்டு தொடங்கினான். தமிழ்.

“மொதல்ல திமுக நியூஸ்தான்.   கழக உடன்பிறப்பு ஒருத்தர் வந்து கலைஞரோட திறமையை அப்படியே சிலாகிச்சு பேசுனாரு. “

“அவர் பன்திறன் வித்தகர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.. எந்தத் திறமையை சிலாகிச்சு பேசுனாரு“ என்றான் ரத்னவேல்.

“அவர் குடும்பத்தை காப்பாத்தற திறமையைப் பத்தித்தான்.   கனிமொழியை எப்படி கவனமா காப்பாத்துனாரு பாத்தியான்னு பெருமை பட்டார். எப்படி காப்பாத்துனாருன்னு கேட்டேன். விலாவரியா சொன்னார்.   சினியுக் பிலிம்ஸ் நிறுவனம்தான் ஷாஹீத் பல்வாவோட பினாமி கம்பெனி.  அந்தக் கம்பெனிக்கிட்ட இருந்துதான் 200 கோடியை கலைஞர் டிவிக்காக லஞ்சமா கனிமொழி பெற்றார்னு சிபிஐ வழக்கு.  போன வாரம் இந்த வழக்குல சாட்சி சொன்ன கலைஞர் டிவியோட பொது மேலாளர் ராஜேந்திரன் கனிமொழி 20.06.2007 அன்னைக்கே ராஜினாமா பண்ணிட்டார். ஆனா 200 கோடி சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கிட்ட வாங்கணும்னு எடுத்த முடிவு 13.02.2009 அன்னைக்கு நடந்த கலைஞர் டிவி போர்டு மீட்டிங்ல எடுக்கப்பட்டது. அந்த மீட்டிங்ல கலந்துகிட்டது தயாளு அம்மாளும், சரத் குமாரும்தான்.  கனிமொழி ராஜினாமா பண்ணதுக்குப் பிறகு கலைஞர் டிவி ப்ரோக்ராம்ஸ் கூட பாக்கறது கெடையாதுன்ற ரேஞ்சுக்கு சாட்சி சொல்லியிருக்கார். 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங் மினிட்ஸ்ல தயாளு அம்மாதான் கையெழுத்து போட்ருக்காங்கன்னும் சொல்லிருக்காரு“

001_1

“இதுல என்னய்யா சாமர்த்தியம் இருக்கு ?  பொண்ணுக்கு பதிலா பொண்டாட்டி மாட்டப்போவுது“ என்றார் கணேசன்.

“கொஞ்சம் பொருண்ணே….   கனிமொழி இந்த வழக்குல குற்றவாளி.  ஆனா தயாளு அம்மா சாட்சி.  கனிமொழி மேல ஆதாரங்கள் இல்லாத காரணத்தால அவர் மீதான வழக்குலேர்ந்து விடுதலை வாங்கிடுவாங்க.  அதே நேரத்துல தயாளு அம்மா இந்த வழக்குல சாட்சி கூட சொல்லப்போறது இல்ல.  அவங்களுக்கு ஞாபக மறதியை உருவாக்குர அல்ஸைமெர்ஸ் வியாதி இருக்குன்னு டெல்லியில மனு தாக்கல் பண்ணிடுவாங்க.  இதுக்கு சிபிஐயும் சப்போர்ட் பண்ணும்.  மொத்த குடும்பத்தையும் காப்பாத்தியாச்சா.. இது சாமர்த்தியம் இல்லையா ? “

“ஏம்பா… அப்போ ராஜா கதி ? “  என்றான் வடிவேலு.

“என்ன மாமா நீ…. கருணாநிதி குடும்பத்தை விட்டுக் குடுத்ததா வரலாறே கிடையாதே… குடும்பம்னு வர்றப்போ… ராசாவவது.. ராணியாவது…  கனிமொழி ஜாமீன் மனு விசாரணையப்போ ஜெத்மலானி என்ன ஆர்க்யூ பண்ணார்னு மறந்துட்டியா ?  எல்லாத்தையும் பண்ணது ராஜாதான்னு ஆர்க்யூ பண்ணாரே ஞாபகம் இல்லையா… ? “ என்று விட்டு அடுத்த செய்திக்குத் தாவினான்.

“ஜெயா டிவியில மன்னார்குடி மாபியாவின் பிரதிநிதியா இருந்தவங்க பேரு அனுராதா.  டிசம்பர் 2011ல மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்ட பிறகு, அனுராதாவும் வெளில போயிட்டாங்க.  அதுக்குப் பிறகு மன்னார்குடியோட கட்டுப்பாடு ஜெயா டிவியில சுத்தமா இல்லை. அனுராதா வெளில போன பிறகுதான் செக்ல கையெழுத்து போட்ற பொறுப்பு ஜெயலலிதாவோட செயலாளரா இருக்கற பூங்குன்றன்கிட்ட வந்தது. போன வாரம், திடீர்னு பூங்குன்றனுக்கு இருந்த அதிகாரத்தை பறிச்சுட்டு அந்த அதிகாரம் சசிகலாவுக்கு குடுத்துருக்காங்க.“

“இப்போ ஏம்பா இந்த மாற்றம் ? “

“அண்ணே… சசிகலாவோட கை மீண்டும் ஓங்குதுன்றதத்தான் இது காட்டுது. மீண்டும் சின்னம்மாவின் ஆட்சி…“

“ஜெயா டிவி ஊழியர்கள் மத்தியில எப்பவுமே ஒரு நிலையில்லாத பதற்றம் இருக்கும்.  அதிமுகல யார் பதவியில இருக்காங்க… யார் அதிகாரத்தோட இருக்காங்கன்றது யாருக்குமே தெரியாது.. அதே மாதிரிதான் ஜெயா டிவியிலயும்.  அதுவா ஒரு போக்குல போயிக்கிட்டு இருக்கும்.  கே.பி.சுனிலோட அதிகாரத்தையெல்லாம் பறிச்ச பிறகு, ரபி பெர்னார்டை தலைமை அதிகாரியா போட்டாங்க… ரபி பெர்நார்ட் வந்த பிறகு எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு.. ரபி பெர்நார்ட், நேமாலஜி… கோமாலஜி, ரியல் எஸ்டேட் இந்த ப்ரோக்ராமையெல்லாம் ஜெயா ப்ளஸ்லேர்ந்து நிறுத்தனும்னு முடிவு எடுத்துருக்காராம்..

5834PNov-09-c-BIG

இப்போ ஜெயா டிவி ஊழியர்கள் மத்தியில பரபரப்பு பேச்சு என்னன்னா… 300 பேரை ஆட்குறைப்பு பண்ணணும்னு ஜெயலலிதா முடிவெடுத்துருக்கறதா பேசிக்கிட்டு இருக்காங்க..

ஜெயலலிதா நிச்சயமா இப்படி சொல்லியிருக்க மாட்டாங்க..  ஜெயா டிவியில வந்த லாபம்னு கொடுத்த பணத்தை அப்படியே சேனல்ல முதலீடு பண்ணுங்கன்னு சொன்னவங்க.. எப்படி ஆட்குறைப்பு நடவடிக்கையில எறங்குவாங்க… யாரோ இந்த மாதிரி செய்தியை ஜெயா டிவி முழுக்க பரப்பியிருக்கறதா சொல்றாங்க…“

“காங்கிரஸ் நியூஸ் இல்லையா மாப்ளை ? “ என்றான் ரத்னவேல்..

“ஏன் இல்லாம… காங்கிரஸ் கதைதான் ஊர் பூரா நாறுதே.. பவன் குமார் பன்ஸால் அமைச்சரோட தலையை காவு வாங்காமல் விடமாட்டேன்னு பிஜேபி ஒத்தக் கால்ல நிக்குது…  ஆனா காங்கிரஸ் எரும மாட்டு மேல மழ பெஞ்சமாதிரியே இருக்குது… எந்த அமைச்சரும் ராஜினாமா செய்ய மாட்டாங்கன்னு உறுதியா சொல்லிட்டாங்க“

“எப்படி மாமா ராஜினாமா செய்வாங்க..  முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு ? “ என்றான் பீமராஜன்.

“நீ சொன்ன மாதிரி எருமை மாடு மாதிரியே ஆயிட்டாங்க மாமா…. வாசனோட வலது கரம் யுவராஜாவை காலி பண்ண மாதிரி, சிதம்பரத்தோட வலது கரத்தையும் காலி பண்ண வேலை நடக்குது மாமா“ என்று நிறுத்தினான் தமிழ்.

“அவருக்கு யாருப்பா ரைட் ஹேன்ட் ? “ என்று கேட்டுக் கொண்டே அடுத்த ரவுன்ட் வோட்காவை எடுத்து வாயில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு, ஊறுகாயை ஒரு விரலில் எடுத்து சுவைத்தார் கணேசன்.8-2-2010-11-pc-leads-cong-effort-to-woo-ba

“செல்வப்பெருந்தகை அண்ணே…  யுவராஜாவை மட்டும் சஸ்பெண்ட் பண்ணீங்கள்ல…. செல்வப்பெருந்தகை யோக்கியதையைப் பாருங்கன்னு, செல்வப் பெருந்தகையோட பழைய வரலாறை எடுத்து ராகுல்கிட்ட புகாரா அனுப்பியிருக்காங்களாம். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்குல செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருக்குன்னு விரிவா ஒரு அறிக்கையை அனுப்பியிருக்காங்க… ராகுல் காந்தியும் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை வைச்சு, இதை விசாரிக்கிறாராம்…“

 

“காங்கிரஸ் கட்சியில இதெல்லாம் நடக்காம இருந்தாத்தானே ஆச்சர்யம்“ என்றான் வடிவேலு.

“ஆமாம்டா.. அது காங்கிரஸ் கட்சியில் கலாச்சாரம் அல்லவா ? “ என்று விட்டு தொடர்ந்தான் தமிழ்.

“டாக்டர் ராமதாஸை போட்டு ஜெயலலிதா பொரட்டி எடுக்கறதுக்கு ரெண்டு காரணம் சொல்றாங்க.  சித்திரை முழு நிலவு விழா நடந்த அன்னைக்கு ஜெயலலிதாவோட கார் சிறுதாவூர் போயிருக்கு.  அப்படிப் போகும்போது, குடி போதையில இருந்த பாமக தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவைப் பாத்து ஆபாச சைகை காமிச்சுருக்காங்க… இது ஒரு  காரணம். ரெண்டாவது காரணம், அந்த அம்மாவோட கான்வாய்ல கடைசி வாகனம் ஒரு 20 வினாடி தாமதமா வந்துருக்கு. அந்த வாகனத்தை வழி மறிச்ச பாமக தொண்டர்கள், கொடி கம்பத்தை எடுத்து அந்த வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியிருக்காங்க. ஏற்கனவே கான்வாயை விட்டுட்டதால அந்த வாகனத்துல இருந்த போலீஸ் காரங்க கௌம்பிப் போயி உளவுத்துறைக்கு தகவல் சொல்லியிருக்காங்க..  இது சி.எம். கவனத்துக்கு போனதும்தான் வேகமான நடவடிக்கைகள்னு சொல்றாங்க..“

“அந்த ஆளுக்கு வேணும்டா இதெல்லாம். “ என்றான் ரத்னவேல்.

“ராமதாஸோட சிக்கல் என்னன்னா…. எந்த அரசியல் கட்சியும் அந்த ஆளு கௌப்பி விடுற ஜாதிப் பிரச்சனையை விரும்பல…  எந்த அரசியல் கட்சியும் இதை விரும்பாததாலத்தான் அவர் எடுத்த முடிவுக்கு பெரிய அளவுல ஆதரவு இல்ல… இப்போ ராமதாஸ் எடத்தை புடிக்கறதுக்கு பி.டி அரசக்குமார்னு ஒருத்தர் கௌம்பியிருக்காரு.. “

“அது யாருடா அது புது டிக்கெட்டு ? “

“இந்த ஆளோட பழைய பேரு பி.டி.குமார்.  அரசக்குமார்னு பேரு மாத்துனா சி.எம் ஆயிடுவன்னு யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான்னு மாத்திக்கிட்டாரு.  அந்த ஆளு ஒன்னாம் நம்பர் ஃப்ராடு. அந்த ஆளுக்கு வேலையே கவர்மென்ட் வேலை வாங்கித் தர்றேன்..  லோன் வாங்கித் தர்றேன்னு ஏமாத்தறதுதான். 2001ம் வருஷம் ஜனவரி மாசம்.. தேனாம்பேட்டையில இருக்கற ரேமண்ட்ஸ் துணிக்கடைக்கு போறாரு பி.டி.குமார்.  அந்த வருஷம் நடந்த தேர்தல்ல கருணாநிதி வெறும் ஜாதிக் கட்சியோட மட்டும் கூட்டணி வைச்சாரு.  அப்போ பி.டி.குமார் தீவுத்திடல்ல ஒரு ஊர்வலம் நடத்திட்டு, நானும் பெரிய தலைவர்னு காமிச்சுக்கிட்டாரு..  ரேமன்ட்ஸ் கடையில 60 ஆயிரத்துக்கு துணி எடுத்தாரு.  எடுத்துட்டு 10 ஆயிரம் கொடுத்துட்டு, கொஞ்சம் துணியை கையில எடுத்துட்டு, மீதித் துணியை அதே கடையில இருக்கற டைலரிங் செக்சன்ல குடுத்து அளவு குடுத்துட்டு போயிட்டாரு.

DSC_0052

ஒரு வாரம் கழிச்சு துணி ரெடியாயிடுச்சுன்னு போன் பண்ணிச் சொன்னா, ஆபீஸ்ல வந்து வச்சுடுங்கன்னு சொன்னாரு.  ஆபீஸ்க்கு போனா, அண்ணன் வெளியில போயிருக்காரு… வச்சுட்டுப் போகச் சொல்றாருன்னு சொன்னாங்க.  அதோட எப்போ போன் பண்ணாலும், அண்ணன் வெளியில போயிருக்காருன்னு ஏமாத்தறதே வேலையாப் போச்சு.

அந்த கடையோட ஒனர் ஒரு மார்வாடி.  நேரா ஒரு நாள் சொல்லாம கொள்ளாம பி.டி.குமார் ஆபீஸ்கே போயிட்டாரு… போனதும் குமார்கிட்ட பணத்தை கேட்டாரு-

உடனே குமாரு, டேபிள்ல ரெண்டு மூணு பத்திரிக்கையை எடுத்து போட்டாரு… பாத்தீங்களா… நான் பத்திரிக்கை நடத்தறேன்…  உங்க கடையில வரி சரியா கட்டறதில்லன்னு தகவல் வந்துருக்கு… நான் அதப்பத்தி எழுதப்போறேன்னு சொன்னார்.. உடனே மார்வாடிக்கு பயம் வந்துடுச்சு.. 50 ஆயிரம் போன போயிட்டுப் போகுதுன்னு அப்படியே கௌம்பிட்டார்.

இப்படிப்பட்ட ஃப்ராடுதான் இந்த பி.டி.குமார்.   இவரு இப்போ ராமதாஸ்க்கு ஆதரவா அனைத்து சமுதாயக் கூட்டமைப்புன்னு தொடங்கி ப்ரெஸ் மீட்டுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு… இந்தத் தகவல் அறிஞ்ச உளவுத்துறை, இவர் மேல இதுக்கு முன்னாடி இருக்கற மோசடிப் புகார்களையெல்லாம் தேடி எடுத்துக்கிட்டு இருக்காங்க…. வாலை ஆட்டுனார்னா ஒட்ட கட் பண்ணிட்றதுன்ற முடிவுல இருக்காங்க.. “

“காவல்துறை செய்தி என்னப்பா ? “ என்றார் கணேசன்… அப்போது மூன்றாவது ரவுன்டில் இருந்தார்.

“இந்த வாரமும் ஜாங்கிட் பத்திதாண்ணே….  தன் மேல அரசு போட்டுருக்கற லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை எப்படியாவது ஊத்தி மூடணும்னு ரொம்ப மெனக்கிட்றார்….“

“ஆமாப்பா தினமணில கூட மீசை முனுசாமி அண்ணாச்சி இது பத்தி செய்தி போட்ருந்தாரு… ஆமா அதுல மூன்றெழுத்து ஜா அதிகாரி, நான்கெழுத்து ஜா அதிகாரி, ஐந்தெழுத்து ஜா அதிகாரின்னு போட்ருந்துச்சே… யாருப்பா அது“

“மூன்றெழுத்து ஜா அதிகாரி ஜார்ஜ்.  நான்கெழுத்து ஜா அதிகாரி ஜாங்கிட். ஐந்தெழுத்து அதிகாரி ஜாபர் சேட்.  ஜாங்கிட்தான் போன வாரம் லஞ்ச ஒழிப்புத் துறையில இருக்கற உயர் அதிகாரியைப் போய் சந்திச்சுருக்காரு.   தன் மீதான புகார்களெல்லாம் பொய்ப்புகார்.  அதனால விசாரணையில தனக்கு உதவி செய்யணும்னு சொல்லியிருக்கார்…. இவரு நேராப்போனது இல்லாம, நேர்மையான அதிகாரியா அறியப்பட்ற இன்னொரு அதிகாரியும், ஜாங்கிட்டுக்காக ரெக்கமண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்.. “

“அது யாருப்பா அது ? “

“டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால்.. இவரு ரொம்ப நல்ல அதிகாரி… ஆனா ஜாங்கிட்டுக்காக பரிஞ்சு பேசறார். பாவம் ஹெல்ப் பண்ணுங்கன்னு லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர் வெங்கட்ராமன்கிட்ட   பேசியிருக்காராம்.. “

Jangid_SR

“ஜாங்கிட் போட்ட மணப்பாக்கம் லே அவுட்ல வீட்டு மனை வாங்கியிருக்காரு… அது மட்டுமில்லாம ஜாங்கிட்டுக்கு பக்கத்து வீடு… அப்புறம் பேச மாட்டாரா ? “

“கண்டிப்பா பேசுவார். நம்ப ஏற்கனவே பேசிக்கிட்டு இருந்த மாதிரி 1979 பேட்ச் அதிகாரிகளுக்கு கூடுதல் எஸ்.பி பதவி உயர்வு கெடைக்கிற மாதிரி தெரியலை.  பதவி உயர்வு வராததுக்கு டிஜிபி ராமானுஜம்தான் காரணமா யார் காரணம்னே புரியாம பொலம்பிக்கிட்டு இருக்காங்க. அவங்க நெலைமைதான் இப்படின்னா, 2009 பேட்ச் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளும் பதவி உயர்வு வராமல் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க.. “

“நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனைபா “ என்றார் கணேசன்.

“அண்ணே அவங்களோட அப்பாயின்ட் ஆனவங்கள்லாம் மத்த மாநிலத்துல ரெண்டு வருஷம் முன்னாடியே எஸ்.பி ஆயிட்டாங்க.  ஆனா இவங்களுக்கு மட்டும் இன்னும் பதவி உயர்வு குடுக்கலை.  என்ன காரணம், எங்க தாமதமாகுதுன்றது யாருக்குமே புரியலை…“

“கோர்ட் நியூஸ் இருக்கா மச்சான்… ? “ என்றான் பீமராஜன்.

“ஏகப்பட்ட நியூஸ் இருக்கு மச்சான்.. ஹைகோர்ட்ல பரபரப்பா பேசப்படுறது ஜட்ஜ் லிஸ்ட்தான்.  இந்த வருஷ கடைசிக்குள்ள 20 காலியிடம் ஏற்படுது.  இப்போவே நெறய்ய காலியிடம் இருக்கு. அதுக்கு 15 பேரை பரிந்துரை பண்ணி சுப்ரீம் கோர்டுக்கு லிஸ்ட் போயிருக்குன்றதுதான் பரபரப்பான பேச்சு…. “

“யாரு மச்சான் அந்த 15 பேரு ? “

புஷ்பா, கோமதிநாயகம், வேலுமணி, தங்கசிவம், முனீர் ஷெரீப், ரவிக்குமார் பால், பரமசிவம், வி.பி.ராஜேந்திரன், வைத்தியநாதன், பி.என்.பிரகாஷ், ஜெயக்குமார், அருண்குமார், வி.எஸ்.ரவி, கலையரசன், கல்யாணசுந்தரம்.  இதுல வி.எஸ்.ரவி மற்றும் கலையரசன் மாவட்ட நீதிபதியா இருந்து பதவி உயர்வுல வர்றவங்க.. மற்றவங்க எல்லாம் வழக்கறிஞர்கள். இதுல வைத்தியநாதன்ன்றவரு பத்தி போன வாரமே சொல்லியிருந்தேன். இப்போ வழக்கறிஞர்கள் போர்க்கொடி புடிக்கறது பி.என்.பிரகாஷ்க்கு எதிரா….

இந்த பி.என்.பிரகாஷ் நல்ல வழக்கறிஞர், சட்டம் தெரிஞ்சவர். ஆனா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்ன்றதுதான் இவர் மேல இருக்கற புகார். பல போலீஸ் அதிகாரிகளுக்கு இவர்தான் வக்கீல்.  வேளச்சேரி என்கவுன்டர்ல கூட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவர்தான் வாதாடினார்.   இதெல்லாம் வெளியில தெரிஞ்ச செய்தி.  தெரியாத செய்தி என்னன்னா இவர் ஜெயலலிதாவுக்காக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்துல வக்காலத்து பைல் பண்ணியிருக்கார்.

நரேந்திர மோடிக்கு ரொம்பவும் பழக்கம் இவர்.  ஈஷா மையத்துக்கும் இவர்தான் வழக்கறிஞர்.  ஆர்எஸ்எஸ் உறுப்பினரா இருக்கற இவரை மாதிரி ஆளுங்களை எப்படி நீதிபதியாக்கலாம்னு ஒரு க்ரூப் வக்கீலுங்க மனு குடுக்கப்  போறாங்க. இப்போ தமிழக அரசோட சட்டத்துறை செயலாளரா இருக்கற டாக்டர் ஜெயச்சந்திரன் இவருக்கு நெருங்கிய நண்பர். ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பாத்துருக்காங்களாம்.“

“அதிமுக வக்கீலுங்க யார் பெயரும பரிந்துரை செய்யப்படலையா ? “ என்றான் வடிவேலு.

“கோமதி நாயகம் தானே கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரா  இருக்கார்… அவரு அதிமுக கேன்டிடேட்தான்.. ஆனா அரவிந்த் பாண்டியன், தம்பிதுரையெல்லாம் ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தாங்க.. ஆனா அவங்க பேர் டெல்லிக்கு போகல…“

“தம்பிதுரை மேல ஒரு ஜாமீன் மேட்டர்ல தப்புப் பண்ணிட்டதா புகார் இருக்கே அவரை எப்படி ஜட்ஜ் ஆக்குவாங்க ? “

“அதெல்லாம் உண்மைதான்.. ஆனா ஆசை யாரை விட்டது.. “ என்று தொடர்ந்தான் தமிழ். ஏற்கனவே மீன் கொழம்பு ஒழுங்கா வைக்கலன்னு அலுவலக உதவியாளரை சஸ்பென்ட் பண்ணிய நடுவர் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு… அந்த அம்மா மேல நடவடிக்கை எடுத்தும் ஊழியர்களை பழிவாங்கற வேலையை எந்த நீதித்துறை நடுவரும் விடற மாதிரி தெரியலை.

திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டுல முன்சீபா இருந்தவங்க பேரு உமா மகேஸ்வரி.   வழக்கமாவே அவங்க கீழே வேலை செய்யற ஊழியர்களை மரியாதைக் குறைவா பேசறது வழக்கம்தான்… அவங்க வீட்டுல அலுவலக உதவியாளரா இருந்த ராஜுன்றவரை போன வாரம் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.  சஸ்பென்ட் பண்றதுக்கு சொன்ன காரணம்தான் கொடுமை… ஞாயிற்றுக்கிழமை வீட்டு வேலை செய்யறதுக்கு வராததால சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க.  இந்த ராஜுவுக்கு ஒரு மாசத்துல பதவி உயர்வு வர வேண்டியது… அதிகாரம் கையில கெடச்சா அதை உதவி பண்ண பயன்படுத்தலன்னாலும், உபத்திரவம் பண்றதுக்கு பயன்படுத்தாமயாவது  இருக்கலாம்ல ? “

“ மீடியா நியூஸ் இல்லையா ? “ என்றான் ரத்னவேல்.

“புதிய தலைமுறை தொலைக்காட்சியில உச்சக்கட்ட குழப்பம் நடந்துக்கிட்டு இருக்கு. இது பத்தி விரிவா அடுத்த வாரம் சொல்றேன். தூங்கப் போலாமா… மணி 3 ஆயிடுச்சு“ என்றான் தமிழ்.

அதற்குள் சரக்கை முடித்து விட்டு ஒரு மோன நிலையில் இருந்த கணேசனும் அதை ஆமோதித்தார்.

தரமற்ற கூடங்குளம் அணு உலைகள்

$
0
0

கிணறு வெட்ட, வெட்ட பூதம் கிளம்பியது போன்று, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடந்த 600 நாட்களுக்கும் மேலாக, அறிவார்ந்த முறையில், அறிவியல் பூர்வமாக கூடங்குளம் அணுஉலைத் தொடர்பான பல உண்மைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு, இந்திய மக்களின் மனசாட்சிகளுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி, மக்கள் மன்றத்தின் முன்வைத்து வருகிறது. இந்த இயக்கம் எடுத்து வைத்துள்ள அனைத்து நியாங்களுக்கும், இதுவரை மத்திய அரசோ, அணுசக்தித் துறையோ தகுந்த பதில்களை இதுவரை கொடுக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை. இதற்காக நீதிமன்றங்களையும் நாடியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுஉலை தரமற்ற, தரங்குறைந்த பாகங்களால் கட்டப்பட்டுள்ளன என்றும், இது காங்கிரசு அரசின் மற்றொரு ஊழல் நிறைந்த திட்டம் என்பதை மீண்டும் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்த இக்கட்டுரை இங்கே விழைகிறது.

KUDANKULAM_829871f

ஷியோபோடால்ஸ்க் 

ஷியோபோடால்ஸ்க் என்ற ரஷ்ய நிறுவனம், ரஷ்ய நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற நாடுகளில் கட்டப்படுகிற அனைத்து அணுஉலைகளுக்கும் தேவையான தேவைப்படும் நீராவி இயந்திரங்களையும் (Steam Generators) இன்னும் சில முக்கிய அணு உலை பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்யும்  நிறுவனம்/ தொழிற்சாலை. 

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட வேண்டிய கூடங்குளம் அணுஉலையில் வால்வுகள் பல பழுதடைந்து விட்டன. அதில் சில வால்வுகள் சரி செய்யப்பட்டுள்ளன. சில வால்வுகள் தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டுள்ளன, சில வால்வுகள் முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டுள்ளன என  கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது சொல்லி வந்தது போலவே, இன்று அவர்கள் சொன்ன கூற்றுக்கள் அனைத்தும் உண்மையாகிப் போய்விட்டது.

கடந்த 2012 டிசம்பர் மாதம் கூடங்குளம் அணுஉலையில் நடந்த  ஹைட்ரோ சோதனையில் (HYDRO TEST) வால்வுகளை தயாரித்த நிறுவனத்தின் கணிப்புப்படி / அவர்கள் சான்றளித்தப்படி அந்த வால்வுகள் சரியாக செயல்பட வில்லை. ஹைட்ரோ சோதனைக்குப் பிறகு வால்வுகள் திறக்கப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட, புதியதாக பொருத்தப்பட்ட வால்வுகள் முறையாக செயல்படாத காரணத்தால், அவற்றின்  தயாரிப்பை, அவற்றின்  தரத்தை சந்தேகப்பட வேண்டியுள்ளது. அணுஉலையை இயக்கப்போகும் நேரத்தில் இத்தகைய தரமற்ற வாழ்வுகளின் செயல்பாடுகள் குறித்து சில தடயங்கள் கண்டறியப் பட்டுள்ளன, அங்கே பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு உதிரிபாகங்களின் தரமும் தரக்குறைவாகவே இருப்பதை நாம் உறுதியாக அறியமுடிகிறது. ஒட்டு மொத்தமாக பார்கின்ற போது, இந்த அணு உலையின் பாகங்களை விற்றவர் மீதும், அவற்றை கொள்முதல் செய்து வாங்கியவர்கள் மீதும் மிகவும் மோசமான, ஆழமான பிரச்சனைகள், சிக்கல்கள், தவறுகள், மோசடிகள் நடந்திருப்பதாகவே தெரிகிறது.

ரஷ்யாவின் அணுசக்தி துணை நிறுவனங்கள் ஷியோபோடால்ஸ்க் மற்றும் இன்பார்ம்டெக் (Informtech) மீது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டு புலன் விசாரணை, கூடங்குளம் அணு உலையின்  கோளாறுகளுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு, தற்போதைய பிரச்சனைகளுக்கு புதிய திருப்பத்தை, விளக்கத்தை கொடுக்கின்றன. கடந்த பிப்ரவரி 2012, ஆம் ஆண்டு KGB யின் கீழ் இயங்கும்  (FSB – Federal Security Service) உளவுத்துறை அதிகாரிகள்  ஷியோ போடால்ஸ்க்  (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் கொள்முதல் செய்யும் இயக்குனர்  திரு.செர்கை ஷுடோவ்வை ஊழல், திருட்டுத்தனம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்துள்ளது.ரஷ்யாவின் (FSB – Federal Security Service) உளவுத்துறை அதிகாரிகள் தரம் குறைந்த இரும்புத் தகடுகளை விற்றதாக  திரு. செர்கை ஷுடோவ்வின் மீது பகிரங்க குற்றம் சாட்டியுள்ளனர். ரஷ்யாவின் ஊடகச் செய்திகள் குறிப்பாக ஊடக நிறுவனமான ரோஸ்பால்ட் (Rosbalt) குறிப்பிடுவது போல, பல்கேரியா, ஈரான், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுள்ள ரஷ்ய அணு உலைகளுக்கு உக்ரேனியாவில் கிடைக்கும் தரமற்ற, விலை குறைந்த இரும்புத் தகடுகளினால் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை விற்றதாக ஷியோ போடால்ஸ்க் கம்பெனியின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலையில் பழுதடைந்த இந்த வால்வுகள் ஷியோ போடால்ஸ்க்  நிறுவனத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து நமக்கு விற்பனை செய்யப்பட்டதா? அல்லது இந்தியாவிலே வாங்கப்பட்டதா என்பது  உடனடியாகத் நமக்குத் தெரிய வில்லை. இத்தகைய தரமில்லாத பழுதடைந்த வால்வுகள் மற்றும் பிற (உதிரி) பாகங்கள் ஷியோ போடோல்ச்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் மூலமாக வாங்கப்பட்டனவையா என்பதை இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக அதன் உண்மையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க மறுத்து வருகிறது, உண்மைகளை மறைத்து வருகிறது.

தவறான தகவல்களைத் தரும் இந்திய அணுசக்திக் கழகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இப்படியான கேள்விகளைக் கேட்டால், இந்தியாவில் அணு உலைகளைக் கட்டி, அவற்றை இயக்கி வருகின்ற, செய்கின்ற இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL), ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் மீது அப்படி ஒரு விசாரணை நடப்பது எங்களுக்குத் தெரியாது என்று கொட்டாம்பட்டிக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கிற்கு விலை சொல்லும் கதை போன்று பதில் தருகிறார்கள். பிறகு எங்களின் அணுவிஜய் நகரியக் குடியிருப்பு முற்றுகைப் போராட்டத்திற்கு பிறகு, அணு உலை வளாக இயக்குனர் திரு. ஆர்.எஸ். சுந்தர் மற்றும் அதன் பிற பொறுப்பாளர்கள், கூடங்குளம் அணுஉலையில் நாங்கள் நூற்றி ஒரு (101%) விழுக்காட்டிற்கு மேல் பாதுகாப்புத்தரமான இயந்திரங்களை, உலகத்தரமான வால்வுகளை நாங்கள் இங்கே பொருத்தி இருக்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறார். நாங்கள் தென் கொரியாவைச் சார்ந்த எல்.ஜி. எலக்ட்டி ரானிக்ஸ் கம்பெனி, ஜெர்மனியின் சிமென்ஸ் கம்பெனி, பிரான்ஸ் நாட்டின் வாடெக் மற்றும் ஆல்ஸ்டம் போன்ற நிறுவனங்களிடம் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு இயந்திரங்கள் வாங்கி யிருக்கிறோம் என்று இல்லாத ஊருக்கு வழி சொல்கிறார். இது குறித்து கூடங்குளம் அணு உலையின் ஊதுகுழலான இந்து நாளிதழுக்கு மட்டும் பிரத்தியேக பேட்டி கொடுக்கிறார்.

அணுஉலைக்கு தேவையான இயந்திரங்களை தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் தரத்தையும் நாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டோம். இவற்றின் தரத்தை கண்டறிய நாங்கள் ஹைட்ரோ சோதனைகள் கூட மேற்கொண்டு விட்டோம் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். தரமில்லாத பாகங்கள் வந்து இறங்கினால், அதை உடனடியாக ரஷ்யாவுக்கு உடனே திருப்பி அனுப்பி விடுவோம். தரமான இயந்திரங்கள் வந்து இறங்கியதற்கான ஆவணங்கள், அவற்றின் தரத்தை பரிசோதித்து பார்த்த திற்கான ஆதார ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் சேர்த்து, இதற்கான ஒரு பிரத்தியேக ஆவணக்காப்பக அறை ஒன்றை நாங்கள் பராமரித்து வருகிறோம் என்று தேவையில்லாத, கேட்கப்படாத கேள்விகளுக்கு ஊடகம் வாயிலாக பதில் தருகிறார். இந்த ஆவணக்காப்பகத்தில் இருக்கின்ற ஆவணங்களை தேவை என்றால் நேரடியாக வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என்று வாய்ச்சவுடால் விடுகிறார். ரஷ்யா நாட்டின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய மோச மான ஆபத்தான, மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய, பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய  உண்மை நிலவரங்களை, நாட்டு மக்களுக்கு சொல்லாமல் இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) வேண்டுமென்றே, திட்டமிட்டே  மூடி மறைப்பதாகவே தெரிகிறது.

பொறுப்பற்ற அணுசக்தி ஒழுங்காற்று வாரியம்

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியமோ, இந்தியாவின் அணுஉலைகளுக்கு தேவையான இயந்திரங்களை வாங்கும் பொறுப்பு எங்களுடைய பணி அல்ல, மாறாக அதனுடைய இயக்கத்தை, செயல்பாடுகளை மட்டுமே நாங்கள் கட்டுப்படுத்த முடியும் என்று பொறுப்பற்ற வகையில்  கைகழுவி விட்டு, தற்போது ஆயிரத்திற்கு மேற்பட்ட வால்வுகள் இருக்கும் போது, நான்கு வால்வுகள் மட்டும் பழு தடைந்து விட்டன. அவற்றிற்கு பதிலாக புதிய வால்வுகள் ரஷ்யாவில் இருந்து வந்த சேர்ந்து விட்டன என்று அவசர அவசரமாக அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கட்டுரை (18.04.2013 அன்று) எழுதிய பிறகு, எங்கள் அப்பன் குதுருக்குள் இல்லை என்ற அடிப்படையில், இப்படி மேலும் பல  உண்மைகளைச் சொல்லி, அணுசக்தித் துறைக்கு இன்னும் இழுக்கு வந்துவிடக் கூடாது என்று கருதி, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா என்று இல்லாமல், இருக்கிற பெயரை காப்பாற்றும் முயற்சியில், எதிர்கால அணுவணிகத்தைக் கணக்கில் கொண்டு அதிரடியாக இறங்கி இருக்கிறது இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம். உடனடியாக மேலோட்டமாக, சப்பைக் கட்டுக்கட்டிக் கொண்டு, “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க” முயற்சி எடுக்கிறது, அந்த குற்றச்சாட்டுக்களுக்கு முழுவதும் உடந்தையாக செயல்படுகிறது.

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம். கடந்த ஜூலை18,2012 அன்று அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலாளர், ஜே.ஜோஷி, துணைச் செயலாளர் என். குமார், இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் பி.தேசகேசா ஆகிய மூவரும் ரஷ்யாவின் ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்திற்கு சென்று நான்கு நாட்கள் தங்கி இருந்து பேசிவிட்டு வந்ததை இந்திய அணுசக்திக் கழகம் மற்றும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியமமும் திட்டமிட்டே மறைத்து விட்டன. தங்களுக்கு ஒன்றும் தெரியாதவர்கள் போல நடித்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களை சட்டபூர்வமாக கேட்டும்போது கூட தர மறுத்து ஏமாற்றி வருகிறார்கள்.

இந்திய அரசாங்கம் ஷியோ போடால்ஸ்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் மூலம் கூடங்குளம் அணு உலைக்கு வாங்கப்பட்ட இயந்திரங்கள், மற்ற பாகங்கள் மீது கண்டிப்பாக ஒரு புலன் விசாரணை நடத்தியிருக்கவேண்டும். ஆனால், அப்படி விசாரணை செய்வதற்குப் பதிலாக, இந்திய பிரதமர் அலுவலகம், ரஷ்ய உதவி மூலம் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணு உலையில் விபத்துகள், பேரிடர்கள் எதுவும் நடந்தால், அதற்கு ஏற்படும் செலவை, இழப்பீட்டை இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற உத்தரவாதத்தை ரஷ்யாவிற்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது. இத்தகைய ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து  ரஷ்யாவின் செய்தி ஊடகமான ரோஸ்பால்ட் (Rosbalt) மட்டுமே தொடந்து ரஷ்ய மொழியில் சொல்லி வருகிறது. உலகத்தில் உள்ள வேறு எந்த ஆங்கில ஊடகங்களும் இந்த ஊழல் குறித்து பேச மறுக்கின்றன என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

 அணுஉலை கொதிகலன் சார்ந்த பிரச்சனைகள்.

 இது தவிர, இந்திய அணுசக்தி துறையில் ( DAE)  பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகளால் சொல்லப்பட்டு 2011 இல் PTI செய்தி நிறுவனத்தின் வழியாக,  வெளிவந்த செய்திகள் மேலும் அதிர்ச்சியை  ஏற்படுத்துகின்றன. கூடங்குளம் அணு உலை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலே செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அணு உலைக்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பை கொடுக்கும் கேபிள்கள் பதிக்கப்பட்ட பிறகு, அணுஉலையை சுற்றி அணுஉலை கொதிகலனின் மையப்பகுதியை (RPV – REACTOR PRESSURE VESSEL) மூடும் பணிகள் நடந்து முடிந்த பிறகு, அவைகள்  காணாமல் போனதாக கூடங்குளம் அணுஉலையை வடிவமைத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று அந்த PTI செய்தி குறிப்பிடுகிறது. அணுஉலையின் முக்கியமான பாகங்கள் ரஷ்யாவில் இருந்து சரியான நேரத்திற்கு பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டாலும், முன்னரே நீண்ட தொலைவுக்கு பதிக்கப்பட்ட மின்கேபிள்களை தொலைந்து போன காரணத்தால், அதை சமாளிப் பதற்காக, கூடங்குளம் அணுஉலை பாகங்களை வரிசையாகப் பெறுவதற்கு பிரச்சனைகள் இருந்ததாக பின்னாளில் சொல்லப் பட்டது என்று அந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால், அந்த (பானை போன்று) டோம்கள் என்று அழைக்கப்படுகின்ற அணுஉலையின் கொதிகலன் மையப் (கூண்டுப்பகுதி) முதலில் பெறப்பட்டதாகவும், பிறகு அதற்கான கேபிள்கள் பின்னர் தாமதமாகப் கிடைக்கப் பெற்றதாகவும் திரித்து சொல்லப்பட்டன. அதே, PTI செய்தி நிறுவனத்தின் செய்திகளை மேற்கோள்காட்டி, இந்த பிரச்சனையானது, அணு உலை கொதிகலன் மையக் கருவில்  (Dome – கூண்டு) இருந்து அணு உலையின் பிறபகுதி கட்டிடங்களுக்கு, கட்டுப்பாட்டு அறைகளுக்கு சென்று சேர வேண்டிய, மின் கேபிள்கள் காணாமல் போய் விட்டன, ஆகவே, பின்னர் அதை மீண்டும் பதிப்பதற்காக, அந்த அணுஉலையின் கொதிகலன் மையக்கரு அமைந்துள்ள, அந்த காங்கிரீட் சுவரில் மீண்டும் துளைகளை  ஏற்படுத்தி, அவற்றை உடைத்து, சொடுக்கி அறை மையத்தில் (Switch Yard) இருந்து அணு உலையின் மையக்கருவிற்கு  மீண்டும் மின் கேபிள்கள் பாதிக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப் பட்டது என்று அந்த செய்தி ஊடகம் தெரிவித்தது. இது மிகவும் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான செயல்பாடாகும். அணுஉலை கொதிகலன் மையப்பகுதியில் (RPV – REACTOR PRESSURE VESSEL) இரண்டாவது முறை (நீர் – ஹைட்ரோ பரிசோதனை) மீண்டும் சோதனை என்பது உலகில் வேறு எங்கும் நடக்காத ஒன்று. அது மட்டுமல்ல, அணு உலையின் கொதிகலன் (RPV – REACTOR PRESSURE VESSEL) மையக்கருவை, அதன் காங்கிரீட் சுவரை இடித்துவிட்டு மீண்டும் அந்த டோமை (பானை போன்று வடிவம் கொண்ட) ஒட்டுப் போடுவது என்பது உலக அணுசக்தி வரலாற்றில் நடக்காத ஒன்று. கேள்விப்படாத ஒன்று. மண்டை ஒட்டை கழற்றிவிட்டு, மீண்டும் கபாலத்திற்குள் பொருட்களை வைத்து பொருத்தும் ஒரு செயல்பாடுத்தான் இது போன்ற தலைகீழ் செயல்பாடுகள்.

இசர்ஷோர்கி சவோடி 

ஷியோ போடால்ஸ்க் போன்றே இசர்ஷோர்கி சவோடி என்கிற ரஷ்ய நிறுவனம், அணு உலைக்கு தேவையான கொதிகலன்களை (Reactor Pressure Vessel - RPV) தயார் செய்யும் நிறுவனம் கடந்த 2002ஆம் ஆண்டு கூடங்குளம் அணுஉலைக்கு தேவையான கொதிகலன்ளை வடிவமைக்க முறைப்படியான ஒப்பந்தம் போடும் முன்னரே, கூடங்குளம் அணுஉலைகளுக்கு தேவையான இரண்டு அணுஉலை கொதிகலன்களையும் தயாரிக்க தொடங்கிவிட்டதாக அதன் பொது இயக்குனர் திரு.யோவ்ஜெனி செர்கிவ், அந்த கொதிகலன்களை ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி  துறைமுகத்திற்கு கடல் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கிறார். இதற்குக் காரணம், கூடங்குளம் அணுஉலை கட்டப் படுவதற்கு தேவையான கொதிகலன்களை உறுதியாக இந்தியா தங்களிடம் தான் வாங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்துவிட்ட காரணத்தால், நாங்கள் அவற்றை முன்ன தாகவே தயாரிக்கத் தொடங்கிவிட்டோம் என்று அந்த வழியனுப்பும் நிகழ்விலே கடந்த 2004 நவம்பர் மாதத்தில் தெரிவித்துள்ளதை ரஷ்யாவில் வெளிவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

 இது கூடங்குளம் அணு உலையில் நடைபெற்றுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. அந்த இசர்ஷோர்கி சவோடி நிறுவனம் தயாரித்த இந்த அணுஉலைக் கொதிகலனில் தான் வெடிப்புகள், பற்ற வைப்புகள் (Welding)  இருப்பதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வல்லுனர் குழு சுட்டிக்காட்டிய பிறகு இந்திய அணுசக்திக் கழகம் இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது. (வெல்டுகள்) பற்ற வைப்புகள் இல்லாமல் இருந்தால்தான் அது பாதுகாப்பான அணுஉலை. அல்லது இது வேதி வினை புரியும் போது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் அணுஉலையின் பல்வேறு பகுதிகளில் ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் பாகங்கள், கூடங்குளம் அணு உலையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அணுஉலை கொதிகலன் பகுதிகளில் (RPV) பொருத்தப்படிருக்கின்றன. பொருத்தப்பட்டு அவைகள் சீல் வைத்து மூடி வைக்கப்பட்டுள்ளன. அவைகளால் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், அணுஉலை இயங்கத் தொடங்கும் போது தான், அந்த தரமற்ற பாகங்கள் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டும். மக்களின் பாதுகாப்பிற்கு அவைகள் உறுதியாக பெரிய கேடு விளைவிக்கும்.

காலதாமதம் ஏன்?. 

கடந்த 2007 ஆம் ஆண்டு முதலே கூடங்குளம் அணுஉலைகளை இயக்க நாள் குறித்த இந்திய அணுசக்தித்துறை, இன்று வரையிலும் அவற்றை  இயக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. (எ.டு) அணுசக்தி ஆணையத்தின் உறுப்பினரான வரும், தமிழக அரசின் வல்லுநர் குழுவில் இடம் பெற்றவருமான திரு.எம்.ஆர். சீனிவாசன், குறிப்பிடும்போது, கூடுதல் பாதுகாப்பு காரணங்களுக்காக, நாங்கள் சில வால்வுகளை பொருத்த வேண்டிய சூழ்நிலையில், அணுஉலையின் அடிப்படை ஒரிஜினல் வடிவத்தையே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அது தான் அணுஉலை குறித்த நேரத்தில் இயக்குவதற்கான காலதாமதத்திற்கு காரணமாக அமைந்து விட்டதாக குறிப்பிடுகிறார். இந்தியாவிலும், ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்ட இந்த வால்வுகள் அணுஉலை மற்றும் அதன் கொதிகலனோடு பொருந்தி வருவது மிகவும் சிரமாகவே உள்ளது. இதிலே சில சிக்கல்கள் தொடர்ந்து  நீடிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்சொன்ன தரக்கட்டுப்பாட்டு முறைகள், உறுதிப்பாடுகள் அனைத்தும் அணு உலைக்கான பாகங்கள் வாங்கியது முதல், அவற்றை பொருத்தியது வரை முறையாக கண்காணிக்கப் பட்டிருந்தால், தற்போது நடந்திருக்கும் இடியாப்பச் சிக்கல் போன்று எதுவும் நடந்திருக்க  வாய்ப்பில்லை. இது வரை அணுஉலையில் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற, அதை இயக்குவதற்கு தடையாக உள்ள  அனைத்து பழுதடைந்த, குறைபாடுகள் நிறைந்த வால்வுகளும் பிற துணை இயந்திர அமைப்புகள் முழுவதும் ஷியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் தயாரிப்புகளே என்பதை முற்றிலுமாக  இதன் மூலமாக அறுதியிட்டுக் கூறமுடியும்.

விழித்துக்கொண்ட நாடுகள்  

இந்த ஷியோ போடால்ஸ்க் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட இந்த உதிரி பாகங்களால் இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுவருகிற அனைத்து உலைகளும் இந்த குற்றத்திற்கு, மோசடிகளுக்கு, சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளன. பல்கேரியா நாடு ஏற்கெனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து ரஷ்யாவின் ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் அமைப்பிடம், ஷியோ போடால்ஸ்க் கம்பெனி மூலம் வழங்கப்பட்ட அனைத்து பாகங்களின் தரச்சான்றிதழ்களைக் கேட்டு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை அறிந்த சீனா 3000 கேள்விகளுக்கு மேலாக ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் அமைப்பிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். இப்படியாக ஷியோ போடால்ஸ்க் கம்பெனி விற்பனை செய்த தரங்குறைந்த இயந்திரப்பாகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவில்லை எனில், மிகப் பெரிய பேரிடரை இந்தியா சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் ஆர்மீனியன் தலைநகரில் செயல்படும் “பெல்லோனா” (BELLONA FOUNDATION) என்ற அமைப்பும், இப்படி ஆய்வு செய்யவில்லை என்றால், வரக்கூடிய பேரிழப்பை சந்திக்க, இந்திய நாட்டில் வரிகட்டும் மக்கள் தான் இந்த சுமையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ரஷ்யாவின் சுற்றுச்சூழல் நிறுவனமான “இகோ டிபென்ஸ்” (ECO - DEFENCE) எச்சரிக்கை விடுகிறது.

ஊழலை கண்டுகொள்ளாத இந்திய அரசு  

ஷியோ போடால்ஸ்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் கொள்முதல் செய்யும் இயக்குனர்  திரு.செர்கை ஷுடோவ்வை ஊழல், திருட்டுத்தனம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்தது ரஷ்யாவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு நிச்சயம் உறுதியாக தெரிந்திருக்கும். இவரை கைது செய்த்ததினால் கூடங்குளம் அணு உலைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு ஆபத்து குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்தக் கைது குறித்து இந்திய அணுசக்தித் துறைக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும், நிச்சயம் தகவல் கொடுத்திருப் பார்கள். ஆனால், இந்திய அணுசக்தித் கழகமோ அல்லது இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியமோ இது குறித்து ஒன்றும் தெரியாதது போல, அறியாமையில் இருப்பது போல நடிக்கிறார்கள். இதனுடைய விளைவுகள், பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால், இந்திய அரசு, காங்கிரசு கட்சி, ரஷ்ய நாட்டு அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து கொண்டு இந்த கைது குறித்தும், கூடங்குளத்தில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற பாகங்கள் குறித்தும் இந்திய மக்களுக்கு உண்மையை  சொல்ல மறுத்து, எல்லாம் நன்றாக இருப்பதாக மக்களை ஏமாற்றி நாடகமாடி வருகின்றனர். இதில் நடந்துள்ள அனைத்து ஊழலைகளையும் பூசி மறைக்கப் பார்க்கின்றனர்.  அணுசக்தித் துறையின் சிறப்புச் செயலர் ஷியோ போடால்ஸ்க்  கன்பெனிக்கு கடந்த ஆண்டு 2012 சென்று எவ்வாறு இந்த குற்றச்சாட்டுக்களை, ஊழலை மூடி மறைக்கலாம் என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள். அதனால் தான் இந்தியப் பிரதமர் ரஷ்ய அதிபரை பார்க்கும் போதெல்லாம் கூடங்குளம் அணுஉலைகளைத் தொடங்குவதற்கு நாள் குறித்து விட்டு வருகிறார், நாட்டு மக்களின் பாதுகாப்பை அடகுவைத்து விட்டு வருகிறார். அணுஉலைத் திட்டத்தில் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருகிறார். ரஷ்யாவின் காலடியில் சரணடைந்து தன்னுடைய அரசைக் காப்பாற்ற மன்றாடிவிட்டு வருகிறார்.

கடந்த டிசம்பர் 2012 அன்று நடந்த முதல் சோதனை, தற்போது இரண்டாம் முறை மீண்டும் நடத்தப்படும் முழு ஹைட்ரோ  போன்ற சோதனையின் அனைத்து உண்மைகளையும் வெளிப் படையாக அறிவித்து, அந்த சோதனை முடிவுகளின் விடைகளை இந்திய அணுசக்தி நிறுவனம் சுதந்திரமான பொது மக்கள் ஆய்வு உட்படுத்த வேண்டும். அதன் பிறகு, மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முழுமையான, முறையான புலன் விசாரணைகள் செய்யப்பட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும். ஷியோ போடால்ஸ்க் (Zio–Podolsk) நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்து பாகங்களையும், அதன் தரத்தையும் ஆய்வுக்கும், விசாரணைக்கும் உட்படுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.

தரமற்ற மின் கேபிள்கள்

 பல ஆண்டுகளாக, சொல்லப் போனால் 25ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணுஉலையைத் தொடங்குவதற்கு முன்னரே, பல வால்வுகளில் பழுதுகள், கசிவுகள் என்று பல விதமான தடங்கல்கள், பிரச்சனைகள் தொடர்ந்து வந்த வண்ணமாய் உள்ளன. அடிக்கடி ஏற்படும் மின்கசிவினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு பல தொழிலாளர் கள் இறந்தும் வருகின்றனர். மின் கசிவு காரணமாகவே பல நூறு  தொழிலாளர்கள் செத்துப் போனதாக அதிரவைக்கும் பல செய்திகள் அவ்வப்பொழுது வெளிவருகின்றன. பல இறப்புகள் மூடி மறைக்கப்படுகின்றன. கூடங்குளம் அணுஉலையில் பொருத்தப்பட்டுள்ள மின்கேபிள்      களின் தரமும் இன்று கேள்விக் குறியாகியுள்ளது.

மின்சாரத்தைக் கடத்தும் இந்த மின் கேபிள்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுக்கப்படும் சமிக்ஞைகளை (Sensors) சரியாக உணர்ந்து கொள்ள முடியாமல், அங்கிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளை சரியாக நிறைவேற்ற முடியாமல், தவறான முறையில் அந்த உத்தரவுகளை புரிந்து கொண்டு, அணுஉலையில் இருக்கும் பல தானியங்கி (Automatic) இயந்திரங்களை அந்த உத்தரவுகளுக்கு ஏற்ப இயக்க முடியாமல் செய்து விடுகின்றன. இதனால் பல நேரங்களில் பெரிய விபத்துகள் நடக்கவும் காரணமாக அமைகின்றன. பல நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு, பல ஒப்பந்த தொழிலாளர்கள் இறந்து விடுகின்றனர். மாயமாகப் போய் விடுகின்றனர். இப்படிப்பட்ட உயிருக்கு உலைவைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நடந்து வரும் நிலையில், இவைகள் அனைத்தும் உண்மையாகும் சூழலில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உயிர்களை துச்சமென மதிக்கின்றன. இந்த நாசகார அணு உலையை மூட மறுக்கின்றன என்பது மிகவும் கேவலமான நிலை. இது மாபெரும் பேரழிவை ஏற்படுத்தும்.

கூடங்குளம் ஒரு பரிசோதனைக் கூடமா? 

கூடங்குளம் முதல் அணுஉலை, எங்களுக்கு ஒரு பரிசோதனைக் கூடமாக இருக்கிறது. (LAB– ஆய்வுக் கூடமாக). முதல் அணுஉலையில் இருந்து, நாங்கள் இடண்டாம் அணு உலைக்கான பாடங்களை கற்றுக் கொள்கிறோம்) என்கிறார் அணுஉலையில் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், இதிலிருந்து முதல் அணுஉலையின் நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். – (IANS செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு.-2011)

தற்போது, கூடங்குளம் அணுஉலைகளுக்கு அதிகப்படியாக கூடுதலாக மேலும் 4000 கோடி செலவிடப் பட்டுள்ளதாக அணுசக்திக் கழகம் சொல்லுகிறது. அணு உலைகள் இயக்கப்படும் நிலையில் இருக்கும் போது, ஏன் கூடுதலான செலவு என்று மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். தரமற்ற பாகங்களை மீண்டும் மீண்டும் கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவாகிறதா அல்லது நடந்த ஊழல் பேரங்களை மறைக்க மேலும் கையூட்டு கொடுக்கப்படுகிறதா? என்று காங்கிரசு அரசு விளக்க வேண்டும்.

இந்த இலட்சணத்தில் கூடங்குளம் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டது என்றால் ரஷ்ய நிர்வாகம் பொறுப்பெடுக்காதாம்?! இந்திய உயிர்களுக்கு இங்கே மதிப்பே இல்லை. இந்திய உயிர்கள் அவ்வளவு மலிவாகப் போய்விட்டன நமது ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களால்.

மின்சாரவியல் (Electrical) மின்னணுவியல் (Electronical), இயந்திரவியல் (Mechanical),  பொறியியல் (Engineering) போன்ற அனைத்து துறைகளிலும் இடியாப்பச் சிக்கல் போன்ற பல தாறுமாறான பிரச்சனைகளினால், கூடங்குளம் அணுஉலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்திய அணுசக்தித்துறை என்ன செய்வதென்று அறியாமல் சிக்கித் தவிக்கிறது என்பது தான் இனியும் மறைக்க முடியாத உண்மை.

ஆகவே, மக்களின் பாதுகாப்புக்கருதி, பேரிடரை தவிர்க்க  முதல் அணுஉலையை இயக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுங்கள்,

இரண்டாவது,அணுஉலையில் நடைபெறும் கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்துங்கள். ஒட்டுமொத்தமாக அணுஉலைகள் மூடுங்கள். எரிசக்திக்காக சூழல்நேய மாற்றுத்திட்டங்களை செயல்படுத்துங்கள்.

இனியும் வேண்டாம் இன்னொரு செர்நோபில்... , மற்றொரு  புகுஷிமா.... அதுவும் நம் மண்ணில் ! 

தரங்கட்ட அணுசக்தித் துறை அதிகாரிகளால், அதிகார வர்க்கத்தினரால், அமைச்சர்களால் கட்டப்பட்டு, மக்களின் உயிருக்கு உலை வைக்கும்  

தரமற்ற கூடங்குளம் அணுஉலைகளை இழுத்து மூடுவோம்!  

மத்திய, மாநில அரசுகளே  மக்கள் பாதுகாப்பில் சமரசம் செய்யாதே !  

கூடங்குளம் அணுஉலைகளில் கையூட்டுப் பெற்றவர்களை கைது செய்து நடவடிக்கை எடு. !  

ம.புஷ்பராயன்.

அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு.

நேர்மையே உன் விலை என்ன?

$
0
0

gold-ETFs

அரசுப் பணியில் அதிகாரிகளாக சேரும் தொடக்க காலத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானோர் சேர்கிறார்கள்.  சேரும்போதே பல கோடிகளை ஆட்டையைப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு சேர்பவர்கள்  விதிவிலக்குகள்.  ஆனால் அரசு இயந்திரம் என்ற அமைப்பு உங்களை நேர்மையற்றவர்களாகவும், ஊழல் பேர்விழிகளாகவும் மாற்றும் வல்லமை படைத்தது.  அரசு இயந்திரம் என்ற அமைப்பு வழங்கும் வசதிகளும், வாய்ப்புகளும் மிக மிக அதிகமான போதை தரக்கூடியன.  தண்ணீருக்குள் நீந்தும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதோ, அது போல அரசு ஊழியன் எப்போது பணம் திருடுகிறான் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று கூறுகிறது அர்த்தசாஸ்திரம்.

அது போல எந்தச் சிக்கல்களிலும் சிக்காமல் ஒரு அரசு அதிகாரி கோடிகளைக் குவிக்கும் சூழலே இன்று நிலவுகிறது.  நேர்மையான அதிகாரியைப் பார்த்து இந்த சமூகம் சிரிக்கிறது. எள்ளி நகையாடுகிறது.  “பிழைக்கத் தெரியாதவன்” என்ற பட்டத்தைக் கட்டுகிறது.  திருட்டு வழியில் கோடிகளைக் குவித்து சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளுக்கு “திறமைசாலி” என்று அங்கீகாரம் வழங்குகிறது.  இப்படி இருக்கையில் எதற்காக ஒரு அதிகாரி நேர்மையாக இருக்க வேண்டும் ? ஒரு அதிகாரி நேர்மையாக வாழ்ந்து அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவன் குடும்பத்தினர் கூட ஒத்துழைக்க மாட்டார்கள்.  பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என்று யாருமே நேர்மையானவர்களை விரும்புவதில்லை.  “இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்து என்ன பிரயோஜனம்… இதக் கூட செஞ்சு தர முடியாதா ?” என்று அலுத்துக் கொள்வார்கள்.  உறவினர்கள் கேட்கிறார்களே என்று, பெற்றோர் கேட்கிறார்களே என்று, மனைவி கேட்கிறாளே என்று, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்று மெல்ல மெல்ல ஊழல் சுழலில் சிக்கி சீரழியும் அதிகாரிகள் இங்கே ஏராளம். எப்போது ஊழல் பேர்விழியாக மாறினோம் என்பதே தெரியாமல் ஊழல்வாதிகளாக மாறி அருட்பெருஞ்சோதியில் கலந்து விடும் அதிகாரிகளே அதிகம்.

முடியாது நான் நேர்மையாகத்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் அதிகாரிகள் அரிதிலும் அரிது. அந்த அதிகாரிகள் சந்திக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.  பணியாற்றும் துறையில் உள்ள அத்தனைபேரும் வெறுப்பார்கள்.  “இவனும் திங்க மாட்றான்… மத்தவனையும் திங்க விடமாட்றான்… பெரிய மகாத்மா காந்தின்னு இவனுக்கு மனசுல நெனைப்பு..” என்று உங்களோடு பணியாற்றுபவர்களும், உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களும் நேர்மையான அதிகாரியைத் தூற்றுவார்கள். வெறுப்பார்கள்.  இவ்வளவு சிரமத்துக்கு இடையே ஒரு அதிகாரி எதற்காகத்தான் நேர்மையாக இருக்க வேண்டும் ?  மனம்போன போக்கில் உலகத்தோடு ஒட்டி ஒழுகிச் செல்லலாம் என்று ஏன் முடிவெடுக்கக் கூடாது ?

ஆனால் அரிதிலும், அரிதான சில அரசு அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை.  நான் இப்படித்தான் இருப்பேன்.. நான் பிழைக்கத் தெரியாதவனாகவோ, ஏமாந்தவனாகவோ, உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாமல், பல கற்றும் கல்லாதவனாகவோ இருந்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.  அப்படிப்பட்ட அதிகாரிகளே, இந்த தளம் நடத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உந்துதலாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அதிகாரியைப் பற்றித்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

தியாகராஜன்.  சென்னைதான் அவருக்கு சொந்த ஊர்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார். பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து விட்டு, சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் பொருளாதாரமும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலும் படிக்கிறார்.

1974ம் ஆண்டு ஜுன் மாதத்தில் MMTC (Metals and Minerals Trading Corporation) என்று அழைக்கப்படும் உலோகம் மற்றும் கனிம வர்த்தக நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக சேர்கிறார். 1963ம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்எம்டிசி நிறுவனம் இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை கவனித்துக் கொள்ளும் பொதுத்துறை நிறுவனமாக இருந்தது.  1991 வரை, இந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்கான ஏகபோகமாகவே செயல்பட்டு வந்தது. 1991ல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை செயற்பாட்டுக்கு வந்தபிறகு, இந்நிறுவனத்தின் பணிகள் குறைகின்றன.  1991க்கு முன்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பேலன்ஸ் ஷீட்டும் எம்எம்டிசி நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டும் ஏறக்குறைய சரிசமமாக இருந்த அளவுக்கு இந்நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.

இந்த நிறுவனத்தில் சேர்ந்த தியாகராஜன், நிறுவனத்தோடு சேர்ந்து தானும் வளர்கிறார்.  தனது கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக எம்எம்டிசி நிறுவனத்தில் பதவி உயர்வு பெறுகிறார்.  . 1984ம் ஆண்டு இளநிலை உதவியாளராக இருந்தவர் அதிகாரியாக பதவி உயர்வு பெறுகிறார். தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவராகவும் உருவாகிறார்.  எம்எம்டிசி அதிகாரிகள் சங்கத்தில் அகில இந்தியத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்

1997ம் ஆண்டு எஸ்.என்.மாலிக் என்பவர் எம்எம்டிசி நிறுவனம் 400 கோடி நஷ்டத்தை சந்திப்பதற்கு காரணமாக இருந்தார்.  அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது.  இந்த முடிவை எதிர்த்து அப்போது தொழிற்சங்கத் தலைவராக இருந்த தியாகராஜன், அகில இந்திய அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, கருப்பு தினம் அனுசரித்து மாலிக்குக்கு கிடைக்கவிருந்த பணி நீட்டிப்பை தடுத்து நிறுத்தினார்.

தற்போது ரயில்வே போர்டு உறுப்பினர் பதவி பெறுவதற்காக 10 கோடி லஞ்சம் கொடுக்க முயன்று, 90 லட்சம் முன்பணமாக கொடுத்து சிக்கிய விவகாரம், முக்கியப் பதவிக்கான நியமனங்களில் நடைபெறும் பேரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் காலம் காலமாக இந்த நியமனங்கள் பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தின்படியே நடந்து வந்துள்ளது.  எம்எம்டிசி நிறுவனத்தின் நியமனங்களும் கோடிக்கணக்கான பணம் மற்றும் செல்வாக்கு அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. எந்தப் பதவியில் யார் இருந்தால் வளைந்து கொடுப்பார்கள் என்பதை ஆராய்ந்த பிறகே முக்கியப் பதவிகளுக்கு நியமனங்கள் நடைபெறுகின்றன.

தற்போது ஊழலுக்கு எதிராக உரத்த குரல் கொடுத்து வரும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான் ஊழல் புகாருக்கு ஆளாகியிருந்த எஸ்.டி.கபூர் என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார் அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.  இந்த பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு மத்திய கண்காணிப்பு ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து ஈராக் நாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.  கோதுமைக்கு பதிலாக கச்சா எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம்.  எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கோதுமை ஏற்றுமதி செய்கிறேன் என்று ஒரு நபர் வருகிறார்.  அந்த நபரை அனுப்பியது, அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன். டெல்லியில் விவசாய எம்.எம்.டிசியின் விவசாய விளைபொருட்கள் துறையின் பொது மேலாளராக இருந்த தியாகராஜன், இந்த ஏற்றுமதியால் எம்.எம்.டி.சி நிறுவனத்துக்கு பெரிய அளவில் லாபம் வரப்போவதில்லை. ஆகையால் தேவையற்ற முறையில் நாம் இந்த ஏற்றுமதியில் ஈடுபடவேண்டாம் என்று கூறுகிறார்.  அவர் ஆலோசனைப்படி, எம்எம்டிசி நிறுவனம் அந்த ஏற்றுமதியில் ஈடுபடவில்லை.  பின்னாளில் Food For Oil Scam என்று ஐக்கிய நாடுகள் சபை நியமித்த பால் வோல்க்கர் கமிட்டியின் அறிக்கையில் எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயர் இல்லாமல் தவிர்க்கப்பட்டது அப்போது எடுக்கப்பட்ட முடிவால்தான்.

எண்பதுகளின் இடையில் எம்எம்டிசி நிறுவனம் தங்க இறக்குமதியில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்குகிறது.   பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், பல கோடிகளை இந்நிறுவனம் எளிதாக முதலீடு செய்ய இயலும் என்பதால், மிக எளிதாகவே தனக்கென்று ஒரு சந்தையை அமைத்துக் கொள்கிறது எம்.எம்.டிசி நிறுவனம்.  எம்.எம்.டிசி நிறுவனத்திலேயே தங்க இறக்குமதி தொடர்பான பதவிக்கு எப்பொழுதுமே போட்டி அதிகம்.

files.php_

சென்னையில் பொது மேலாளராக தியாகராஜன் பணியாற்றியபோது அவருக்கு உயர் அதிகாரியாக இருந்தவர் குருசாமி.  தியாகராஜன் அங்கே பொதுமேலாளராக இருந்ததால், தங்கம் தொடர்பான வேலைகள் அவரிடம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக எம்.எம்.டிசியின் பெல்லாரி அலுவலகத்தில் பொதுமேலாளராக இருந்த ராமச்சந்திரன் என்பவரை சென்னைக்கு மாற்றி அவரை தங்கம் தொடர்பான பணிகளைக் கவனிக்கும் பொது மேலாளராக நியமிக்கிறார் குருசாமி.  ராமச்சந்திரனின் நியமனமே தன்னை தங்கம் தொடர்பான பொறுப்புகளைக் கவனிக்க விடாமல் தடுக்க வேண்டுமே என்பதற்காகத்தான் என்பது தியாகராஜனுக்குத் தெரிந்தாலும், அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.  30 ஜுலை 2008 அன்று பணி ஓய்வு பெற்றதும், அது வரை சென்னை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் மீண்டும் பெங்களுருக்கே அனுப்பப்படுகிறார்.  ஓய்வு பெற்ற குருசாமி, சுரானா கார்ப்பரேஷன் என்ற மார்வாடியின் நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.    இதன் பின்னணியில் இருந்த சதித்திட்டம் எதுவும் அப்போது தியாகராஜனுக்கு தெரிந்திருக்கவில்லை.

Untitled-1_1

பதவி உயர்வில் தியாகராஜன், கொல்கத்தா எம்எம்டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பதவியின் பொறுப்பேற்கலாம் என்று காத்திருந்தால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அதிகாரி விடுவிக்கப்படாமல் அந்தப் பதவியிலேயே தொடர்கிறார்.  ஏன் தாமதம் பொறுப்பை ஒப்படையுங்கள் என்று கேட்டால், டெல்லியிருந்து உத்தரவு வரவில்லை என்று காத்திருப்புக்கு காரணம் சொல்கிறார்.  தியாகராஜனும் காத்திருக்கிறார்.  ஒரு மாதம், இரண்டு மாதம் என்று ஐந்து மாதங்கள் கடந்து விடுகின்றன.  பொறுமை இழந்த தியாகராஜன் எம்.எம்.டிசி நிறுவனத்தின் சேர்மேனுக்கு தகவல் சொல்கிறார். ஐந்து மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறேன். எனக்கு என்னதான் வேலை என்று சொல்லுங்கள் என்கிறார். உடனடியாக பொறுப்புகளை ஒப்படைக்கும்படி, தலைமை அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

புதிதாக பொறுப்பேற்ற தியாகராஜன், எம்.எம்.டிசி நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட முடிவு செய்து, கொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்எம்டிசி கிடங்கைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி தனக்குக் கீழ் உள்ள அதிகாரியைப் பணிக்கிறார்.  துறைமுகத்துக்குள் நுழைந்து கிடங்குகளைப் பார்வையிடுவதென்றால் துறைமுக அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.  இரண்டு நாட்களாகின்றன, மூன்று நாட்களாகின்றன. தியாகராஜனுக்கு கிடங்குகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.  என்னவென்று தனக்குக் கீழ் உள்ள அதிகாரியிடம் விசாரித்தால் ஏதோ சாக்கு போக்கு சொல்கிறார்.  நாளைக்குள் துறைமுக அனுமதிச் சீட்டு வரவில்லையென்றால், இதற்குப் பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கடுமையாகச் சொன்னதும், மறுநாள் அனுமதி கிடைக்கிறது.

கொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்.எம்.டிசி கிடங்கைப் பார்வையிடச் சென்ற தியாகராஜனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக் கிடங்கில், இருப்பில் இருக்க வேண்டிய ஒரு லட்சம் டன் வாசனைப் பொருட்கள் / தானியங்கள் (Pulses) இல்லை.  அந்த சரக்கின் மொத்த மதிப்பு 120 கோடி.  கிடங்கைப் பார்வையிட்ட தியாகராஜன், உடனடியாக  தலைமை அலுவலகத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்புகிறார்.  தலைமை அலுவலகம் அதிர்ச்சிக்குள்ளாகி இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது.   அந்தச் சரக்குகளுக்கு உரிய தொகையை செலுத்த வேண்டிய இரண்டு சப்ளையர்கள், உடனடியாக 120 கோடியை எம்.எம்.டிசிக்கு செலுத்துகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜன், சென்னை எம்.எம்.டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார்.  எந்த சென்னை அலுவலகத்தில் இவர் தங்கம் தொடர்பான வேலைகளைக் கவனிக்கக் கூடாது என்று ஒதுக்கப்பட்டாரோ, அந்த நிறுவனத்தின் மொத்த பொறுப்புக்களுக்கும் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஜுலை 2011ல் சென்னை அலுவலகத்துக்குப் பொறுப்பேற்றதும் அவருக்கு ஒரு அனாமதேய கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தில் தங்க வியாபாரத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக தனக்குக் கீழ் பணியாற்றும் நிதிப் பொது மேலாளரை அழைத்த தியாகராஜன், என்ன நடக்கிறது என்று விசாரிக்கிறார்.  விசாரித்தால் 116 கோடி ரூபாய் வெளிநாட்டு தங்க சப்ளையருக்கு முன்தொகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.  116 கோடி ரூபாய் முன்பணமாக எப்படிக் கொடுக்க முடியும்… தலைமை அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் கொடுப்பதற்கு விதிகளிலேயே இடமில்லாதபோது, எப்படி இது நடந்தது என்று வியப்படைந்த தியாகராஜன், தனது நிதி பொது மேலாளரிடம் ஒரு மாதத்துக்குள் எங்கே தவறு, என்ன தவறு என்பதை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஒரு மாதம் கடந்தால் நான் நேரடியாக விசாரிக்கத் தொடங்குவேன் என்று கடுமையாகக் கூறுகிறார்.  ஒரு மாதம் கடந்தும் எந்த விபரமும் அவருக்கு வழங்கப்படாததால், நேரடியாக விசாரணையைத் தொடங்குகிறார்.

விசாரணையைத் தொடங்கினால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போலிருக்கிறது.  எம்.எம்.டி.சி நிறுவனத்தோடு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் சிவ் சஹாய் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இரண்டும், எம்எம்டிசி நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில், இதற்கு முன்பு இருந்த தலைமைப் பொது மேலாளர் குருசாமியின் ஒத்துழைப்போடு, எம்.எம்.டிசியின் நிதியைப் பயன்படுத்தி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி சூதாடி, லாபம் ஈட்டலாம் என்று திட்டமிட்டதும், ரூபாயின் மதிப்பு திடீரென்று உயர்ந்ததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதும், இந்த நஷ்டத்தை யார் ஏற்பது என்று சிவ் சஹாய் மற்றும் சுரானா நிறுவனங்கள் தவிர்த்ததும் இரண்டு நிறுவனத்திடமும், இத்தொகையை வசூலிக்காமல், எம்.எம்.டிசிக்கு நஷ்ட கணக்கு எழுதப்பட்டிருப்பதையும் தியாகராஜன் கண்டுபிடிக்கிறார்.

Untitled-2_1

தில்லி தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுதுகிறார். இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த General Manager (Bullion) விசாரித்து விட்டு எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று அறிக்கை அளிக்கிறார். மீண்டும் ஒரு General Manager (Audit) வருகிறார்.  அவரும் ஆல் ஈஸ் வெல் என்கிறார்.  அவரையடுத்து வந்த General Manager (Bullion Accounts) கணக்கு வழக்குகள் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கின்றன என்கிறார்.   இந்த நேரத்தில்தான், எம்.எம்.டி.சி நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபிக்கு அனுப்பவேண்டி வருகிறது.  அதை அனுப்பவேண்டிய எம்.எம்.டி.சியின் ஆடிட்டர், இந்த ஊழல் குறித்தும் செபிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்.

இதற்கிடையே, ஊழல் தொடர்பாக மேலும் சில ஆதாரங்களை கண்டறிந்த தியாகராஜன், 2 ஜனவரி 2012 அன்று மீண்டும் ஒரு அறிக்கையை புதுதில்லிக்கு அனுப்புகிறார்.  இந்த இரண்டாவது அறிக்கைக்குப் பிறகே தலைமை அலுவலகம், இது குறித்து விசாரிப்பதற்கென்று வெங்கட்ரங்கா என்ற பிரத்யேகமான ஒரு ஆடிட்டரை அனுப்புகிறது.  ஆடிட்டரின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, சிபிஐ வழக்கு பதிவு செய்து புலனாய்வை தொடங்குகிறது.

Untitled-4

GM-Gurumurthy

கைது செய்யப்பட்ட குருமூர்த்தி

இந்த வழக்கு குறித்தும் இதில் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கம் குறித்தும் சவுக்கில்  “ஓபனிங் நல்லாத்தான் இருக்கு ஆனா ஃபினிஷிங் ?” மற்றும் சுரானாஸ் கோல்ட் ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.  சிபிஐ பதிவு செய்துள்ள இந்த முதல் தகவல் அறிக்கையில் புகார்தாரர் யார் தெரியுமா ? எம்.எம்.டிசி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமைப் பொது மேலாளர் தியாகராஜன்தான்.

IMG_0001111

IMG_0003

IMG_0002

இவர் சமீபத்தில் 39 வருட அரசுப் பணிக்குப் பின் ஓய்வு பெற்றார்.  ஓய்வு பெறும் நாள் அன்று, இவர் அறை வாசலில், பழைய பிய்ந்த செருப்புகள் இருந்தன.  யாருடைய செருப்புகள் இவை என்று விசாரித்தால், அந்த அலுவலகத்தின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் (Sweeper) அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருக்கின்றனர் என்று கூறினார்கள்.   சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எதற்காக ஒரு தலைமைப் பொதுமேலாளரை வாழ்த்த நேரில் வரவேண்டும் என்று விசாரித்தால், 10 வருடங்களுக்கு முன், துணைப் பொது மேலாளராக சென்னை அலுவலகத்தில் தியாகராஜன் பணியாற்றியபோது, எம்.எம்.டி.சியின் அனைத்து சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கும், காலை முதல் அவர்கள் அலுவலகம் விட்டு செல்லும் வரை, கேன்டீனில் அனைத்தும் இலவசம் என்று உத்தரவிட்டார். எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் பதவி உயர்வு வரும், ஏராளமான சம்பளம் வாங்குகிறேன்.   ஆனால் 30 ஆண்டுகளாக பெருக்குவதையும் சுத்தம் செய்வதையும் தவிர இவர்களுக்கு எந்த பதவி உயர்வும் கிடையாது.  இவர்களிடம் சுத்திகரிப்புப் பணியைத் தவிர்த்து, தபால் எடுத்துச் செல்வது, வங்கிக்குச் செல்வது என்று ஏராளமான வேலைகளை அலுவலகத்தில் வாங்குகிறார்கள்.  இவர்களுக்கு என்னால் வழங்க முடிந்த குறைந்தபட்ச சலுகை இதுதான் என்றார்.

இப்படி ஏழை உழைப்பாளி மக்களுக்கு சலுகை வழங்கிய அதே தியாகராஜன்தான், விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து, ஒரு நாள் உணவுக்காக எம்.எம்.டிசியின் கணக்கில் 1500 ரூபாயை கணக்கெழுதும் அதிகாரிகளின் கொள்ளையை தடுத்து நிறுத்தினார்.  ஒரு நாளைக்கு சாப்பிடுவதற்கு 1500 ரூபாய் எப்படி ஆகும் என்று அதற்கு தடை விதித்தார்.  இதேபோல தனியார் டாக்சிகளை வாடகைக்கு எம்.எம்.டி.சி பணிக்காக வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்ற விதியைப் பயன்படுத்தி சொந்த வேலைக்காகவும், குடும்பத்தினர் ஊர் சுற்றுவதற்காகவும் டாக்சிக்களை அமர்த்தி, அந்தத் தொகையை எம்.எம்.டிசியிடம் இருந்து திரும்பப் பெறும் வழக்கத்தையும் ஒழித்துக் கட்டினார்.

நிறைவாகத்தான் பணியாற்றியிருக்கிறார்.  இவ்வளவு சிறப்பாக பணியாற்றியவருக்கு குறைந்தது ஒரு சிறப்பான விழா நடத்தி, அவரை வாழ்த்தி ?? அனுப்பியிருக்க வேண்டும் அல்லவா ?   செய்யவில்லை.

என்ன நடந்தது தெரியுமா ?  ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் இவர் பணியில் குறைபாடு இருந்தது என்ற காரணத்தினால் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.  என்ன குற்றம் புரிந்தார் என்றால், நிதிப் பரிவர்த்தனைகளை சரி வர மேற்பார்வை செய்யவில்லை என்பதே அது.

நிதிப்பரிவத்தனைகள் சரியாக நடக்கவில்லை என்பதை கண்டுபிடித்ததே இவர்தானே….  இவர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில்தானே இன்று சிபிஐ விசாரணை நடந்து வருகிறது ? இவர் புகாரில்தானே சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது ? அப்படி இருக்கையில் நிதிப் பரிவர்த்தனைகளை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்பது எந்த விதத்தில் நியாயமாகும் ?  இவருக்கு அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் யாரை சாட்சியாக போட்டிருக்கிறார்கள் தெரியுமா ? சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருக்கும் முன்னாள் எம்.எம்.டிசி அதிகாரிகள் குருசாமி மற்றும் குருமூர்த்தி.  சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது என்பதால், சிபிஐயிடம் இருந்து தியாகராஜனை ஓய்வு பெற அனுமதிக்கலாமா, நடைபெற்று வரும் விசாரணையில் தியாகராஜன் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்று தலைமை அலுவலகத்தில் கேட்கிறார்கள்.  சிபிஐ தனது அறிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே அனுப்பி, தியாகராஜன் மீது எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லை என்று அறிக்கை அளிக்கிறது.  இதற்குப் பிறகும் துறை நடவடிக்கை என்றால் ?

சரி என்னதான் நடந்திருக்கும்… ஓய்வு பெறும் நாள் அன்று துறை நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை என்ன ?  அதுவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ?

இந்த இடத்தில்தான் 400 கிலோ தங்கத்தைப் பறிகொடுத்த சுரானா நிறுவனம் வருகிறது.  நல்லா ஸ்மூததா போயிக்கிட்டிருந்த பிசினெஸ்ஸை இந்த ஆள் கெடுத்து விட்டார்.  இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பார்த்து மற்ற அதிகாரிகளும் கெட்டுப்போய், அவர்களும் நேர்மையாக நடந்து கொள்ளத் தொடங்கினால், நாட்டுக்கே கேடு,, இது பெரிய ஆபத்தில் சென்று முடியும் என்பதால், தியாகராஜன் போன்ற அதிகாரிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்…. தியாகராஜனின் மீதான நடவடிக்கை மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவரை எப்படியாவது சிக்கலில் இழுத்து விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.  எம்.எம்.டி.சியின் தலைவர், அந்தத் துறையின் கண்காணிப்பு அதிகாரியிடம், தியாகராஜன் மீது துறை நடவடிக்கை எடுக்க அறிக்கை அளிக்கும்படி கேட்கிறார்.  அவர், சிபிஐ இவர் மீது நடவடிக்கை எடுக்க அதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளித்துள்ள நிலையில், விசாரணை நடத்தாமல் என்னால் எந்த அறிக்கையும் வழங்க இயலாது. மேலும் நாளை ஓய்வு பெற உள்ளவருக்கு எதிராக இப்போது அறிக்கை அளிக்க இயலாது என்று கூறி விடுகிறார்.

வேறு வழியின்றி, கண்காணிப்பு அதிகாரியின் அறிக்கை ஏதுமில்லாமல், சிபிஐ-ன் அறிக்கை ஏதுமில்லாமல், எந்தவிதமான உருப்படியான  விசாரணையும் நடத்தாமல், தான்தோன்றித் தனமான ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை வழங்கியிருக்கிறார் எம்.எம்.டிசி தலைவர்.  இந்த நடவடிக்கை வரிஏய்ப்பு செய்து, ஊழல் அதிகாரிகளை வளர்த்தெடுக்கும் ஒரு மார்வாடியின் செல்வாக்கால் என்பது எத்தனை வேதனையான விஷயம் ?

ஓய்வு பெற்ற அன்று எம்.எம்.டி.சி தலைவர் தேசி-க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார் தியாகராஜன்.

அன்பார்ந்த திரு தேசி…

இந்த நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பதவிகள் வகித்து 38 வருடங்கள், 9 மாதங்கள் சேவை செய்த பிறகு இன்று மதியம் ஓய்வு பெறுகிறேன். எனது பணிக்காலத்தில் இந்த நிறுவனத்துக்காக எப்படி எனது வேர்வையையும், ரத்தத்தையும் அளித்து உழைத்திருக்கிறேன் என்பது இந்நிறுவனத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும்.  நீங்கள் நேற்று அனுப்பிய அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு மொட்டையான குற்றப்பத்திரிக்கையை நேற்று வேதனையோடு பெற்றேன். என்னிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணைக்கு நான் அனுப்பிய விளக்கம் 13 மாதங்களாக உங்களிடம் உறங்கிக் கொண்டு இருக்கிறது.  நீங்கள் நினைத்திருந்தால், அந்த விசாரணையை எப்போதோ முடித்திருக்கலாம். சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறை சென்று, இன்று ஜாமீனில் உலவிக்கொண்டிருக்கும் நபர்களை என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாகப் போட்டிருக்கிறீர்கள் என்பது வியப்பை அளிக்கிறது.  இதன் உள்நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த நிறுவனம் தொடர்பான வழக்குகளுக்கான ஆவணங்களை சேகரிப்பதற்காக 44 நபர்களை நியமித்து, அவர்கள் இரவு பகலாக, தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தொழிற்சாலை ஊழியர்கள் போல பணியாற்றி வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல.  இப்படி பணியாற்றும் ஊழியர்களை பணி மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என்று மிரட்டி வருகிறீர்கள்.  உங்களின் இந்த நடவடிக்கைகள் ஊழல் பேர்விழிகளின் நலனுக்காகவேயன்றி, இந்நிறுவனத்தின் நலனுக்கானது அல்ல.

நீங்களும் ஒரு நாள் ஓய்வு பெறுவீர்கள் தேசி அவர்களே.  கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.  சத்தியமே வெல்லும்.

அன்புடன்

தியாகராஜன்.

DSC_0978

தியாகராஜன்

இதுதான் நேர்மைக்கு கொடுக்கும் விலை.

தனக்கு வரவேண்டிய ஓய்வு காலப் பணப்பயன்கள் தியாகராஜனுக்கு நிறுத்தப்பட்டிருக்கலாம்.  பிழைக்கத் தெரியாத மனிதன் என்று அவர் சக தோழர்கள் அவரை எள்ளி நகையாடலாம்.  நண்பர்கள் இகழலாம்.   இவரைப்போன்ற நபர்களைப் பற்றித்தான் அய்யன் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

சாதிதாஸ் !

$
0
0

 

சாதிதாஸ்!
ப.திருமாவேலன்

 

நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி!'' என்று சொல்வார் டாக்டர் ராமதாஸ். ''எந்தக் கூட்டணி வெற்றிபெறப்போவதாகத் தெரிகிறதோ, அந்தக் கூட்டணியில் போய்ச் சேர்ந்துகொள்வார் அவர்!'' என்று எதிர்க் கட்சிகள் கிண்டல் அடிப்பார்கள். இப்போது எந்தக் கட்சியுடனும் சேர முடியாத நிலையில், சாதிக் கூட்டணியைக் கையில் எடுத்துவிட்டார் ராமதாஸ். அது வெற்றிக் கூட்டணியா என்பது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.

p88b

'திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை... தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கடந்த ஓர் ஆண்டு காலமாக ஊர் ஊராகப் போய்ச் சொல்லிவந்தார்ராமதாஸ்.

'எங்களைப் போலத் தைரியமாகத் தனித்து நிற்கக்கூடிய துணிச்சல் எந்தக் கட்சிக்கு இருக்கிறது?’ என்றும் கேட்டார் அவர். எவர் தயவும் இல்லாமல் தனித்து நின்று, ஓர் அரசியல் கட்சி தனது சொந்த செல்வாக்கை நிரூபித்துக் காட்ட முயற்சிப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். அந்த அடிப்படையில் ராமதாஸின் அறிவிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்தது. இத்தகைய கூட்டங்களில் எல்லாம் திடீரென வன்னியர்கள் வாழ்க்கை பற்றி அதிகம் கவலைப்பட ஆரம்பித்தார் ராமதாஸ்.

அதாவது, வன்னியர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளைக் குறிவைத்து இறங்கி, ஒன்றிரண்டு தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே ராமதாஸின் இலக்காக இருந்தது.சாதியைக் குறிவைத்துதான் ராமதாஸ் தன்னு டைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த சாதி அங்கீகாரத்தை வைத்து அவரால் பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும்தான்எம்.எல்.ஏ. ஆக்க முடிந்தது. அதன் பிறகுதான் கூட்டணிகளுக்குள் நுழைந்தார். நாடாளுமன்றத் துக்கும் சட்டமன்றத்துக்கும் ஏராளமான ஆட் களை அவரால் அனுப்பிவைக்க முடிந்தது. இப்போது மீண்டும் சாதியை நம்ப ஆரம்பித்து உள்ளார். ஆனாலும், அவர் தனித்தே நிற்பார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில், ராமதாஸின் ஜாதகம் அப்படி!

p88a
அரசியலுக்கு நுழைந்ததும் ஐந்து வாக்குறுதிகளை ராமதாஸ் கொடுத்தார்.

1. ''நான் எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்

.2. சங்கத்தின் பொதுக் கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் எனது சொந்தச் செலவில்தான் வந்துபோவேன். ஒரு காலகட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல்போனால், நான் ஓய்வு எடுத்துக்கொள்வேனேஒழிய, ஒருபோதும் மற்றவர் செலவில் வந்துபோக மாட்டேன்.

3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். எனது கால் செருப்புகூட சட்ட மன்றத்துக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழையாது.

4. எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள்

.5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி, சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாகப் பேரம் பேசினாலும் சரி, இந்த ராமதாஸ் விலை போக மாட்டான் - இது சத்தியம். என் தாய் மீது சத்தியம். இதையெல்லாம் உங்கள் டைரியில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி நான் நடந்தால், என்னை நடுரோட்டில் நிறுத்திவைத்துச் சவுக்கால் அடியுங்கள்.''இப்படியெல்லாம் பேசிவிட்டுத்தான் கட்சி ஆரம்பித்தார் ராமதாஸ்.

 அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் அவர். அவரது மகன் அன்புமணி, இளைஞர் அணித் தலைவர். ஆக, ராமதாஸும் பதவிக்கு வந்தார். அவரது வாரிசும் பதவிக்கு வந்தார்.இன்னொரு வாக்குறுதியையும் ராமதாஸ் அப்போது கொடுத்தார். 'இந்தச் சாதியில் பிறந்தவர்கள், நமது சங்கத்து உறுப்பினர்கள், அரசியல் கட்சியில் இருக்கிற வன்னியர்களோடு ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று சொன்னார். இவரே கட்சி ஆரம்பித்தார். அரசியல் கட்சிகளில் இருக்கிற வன்னியர்களோடு மட்டும்அல்ல; அந்நியர்களோடும் உறவு வைத்துக்கொண்டார்.

''கலைஞர் கருணாநிதிதான் நமது சமுதாயத்தின் முதல் எதிரி. அவர் பெரியண்ணன் மாதிரி நடந்துகொள்வார். அவரோடு கூட்டணி அமைத்தால், வேட்டியை உருவிவிடுவார்'' என்று சொன்ன ராமதாஸ்தான், கருணாநிதியிடம் கல்யாணப் பத்திரிகை கொடுத்துவிட்டு, கூட்டணிக் கையெழுத்து போட்டுவிட்டு வந்தார். ''நான் மதிக்கத் தகுந்த சிறந்த தலைவர் எம்.பி.சுப்பிரமணியன். அவரே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுகிறார். நான் ஜெயலலிதாவிடம் பல கோடி ரூபாய் வாங்கிவிட்டதாகவும் ரகசிய உடன்பாடு செய்துகொண்டதாகவும் எனது உறவினரிடம் கூறி இருக்கிறார். நான் இப்படிச் செய்வேனா? இப்படிச் செய்வது பெற்ற தாயோடும் மகளோடும் உடலுறவு வைத்துக்கொள்வதைவிட மோசமானது. அந்தக் கேவலமான செயலை இந்த உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை இந்த ராமதாஸ் செய்ய மாட்டான்'' என்று சொல்லிக்கொண்டே வந்தவர், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

அயனாவரம் பகுதியில் நடந்த பல்லவர் விழாவில்தான் அந்தக் காட்சி. அடுத்த சில மாதங்களில் போயஸ் தோட்டத்தை நோக்கிப் போனது அவரது கார். இப்போதுகூட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனை மிகமிக மோசமாக அர்ச்சனை செய்துவரும் ராமதாஸ், அவரை என்னவெல்லாம் புகழ்ந்து பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது, அன்றாட அரசியல் நிலைப் பாடுகளுக்கு ஏற்ப அரசியல் கட்சித் தலைவர்களைத் தரம் குறைந்து தாக்கு வதும் கூட்டணி சேர்ந்ததும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடுவதும் ராமதாஸின் வாடிக்கை.தலித்களைத் தாக்கினால் வன்னியர்கள் வாக்குகளை அள்ளலாம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் அவர் இறங்கி இருப்பதால்தான், தர்மபுரி தொடங்கி மரக்காணம் வரைக்கும் கொந்தளிப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள் ளன. இந்தப் பிரச்னை ஏதோ ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் தலித்களுக்கும் நடப்பதாகப் பூதாகாரப்படுத்திக் காட்டுவதே அரசியல் உள் நோக்கம் கொண்டது. தன்னுடைய கட்சி, தேர்தல் நலனுக்காக ஒட்டுமொத்த சமூக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலம்பிக்கொண்டு இருக்கிறார் ராமதாஸ். நாளையே ஏதாவது ஒரு கூட்டணி அவருக்கு அமைந்துவிட்டால், சாதி விவகாரத்தைத் தூரத் தூக்கிப் போட்டுவிடுவார்.

இதனை உணர்ந்ததால்தான், கருணாநிதி மென்மை யாகவும், ஜெயலலிதா வன்மையாகவும், ராமதாஸ் பிரச்னையைக் கையாள்கிறார்கள்.ஜெயலலிதாவைவிட கருணாநிதியைத்தான் ஒருமையிலும் சாதிகுறித்தும் விமர்சன அம்புகள் ராமதாஸ் தரப்பில் இருந்து அதிகம்வரும். மாமல்லபுரம் மேடையும் அப்படித்தான் அமைந்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்தபோது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று அக்னி முகம் காட்டிய கருணாநிதி, இப்போது அமைதியானவராக, 'நாவடக்கம் தேவை’ என்று மட்டும் அருள்பாலிக்கிறார். 'பா.ம.க-வினரை விடுதலை செய்யுங்கள்’ என்று ஆலோசனை சொல்கிறார். யாரோடு கூட்டணி சேருவது என்ற குழப்பத்தில் இருக்கும் கருணாநிதி, ராமதாஸை ஏன் அதில் விட்டுவிடுவானேன் என்ற ஆசையில் கடிதோச்சி மெள்ள எறிகிறார். திருமாவளவனைக் கூடவே வைத்துக்கொண்டு, ராமதாஸ் கைதுக்கும் கண்ணீர் வடிக்கும் தந்திர அரசியலுக்குள் தேர்தல் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும்.

'ராமதாஸுக்குப் பழைய செல்வாக்கு எதுவும் இல்லை. மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்வி யைத் தீர்மானிக்கும் கட்சியாக பா.ம.க. இருக்கிறது!’ என்று ஜெயலலிதாவுக்கு போலீஸ் அறிக்கை சொல்கிறது. அதனால்தான் ஓங்கி அடிக்க ஆரம் பித்தார் ஜெயலலிதா.ஜெயலலிதா கழற்றிவிட்டார். கருணாநிதி ஊசலாட்டமாக இருக்கிறார். ராமதாஸ், சாதியை நம்புகிறார். இவை அரசியல் ஆதாயமாக மட்டும் இருந்தால் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால், அப்பாவி மக்களின் நிம்மதியைக் குலைத்து, ரத்தம் உறையவைக்கும் நடவடிக்கைகளாக இருப்பதுதான் பயங்கரம். அனைவரின் நம்பிக்கையைப் பெற்று அரசியல் நடத்த ராமதாஸ் முயற்சிக்கட்டும்... அச்சுறுத்துவதன் மூலமாக அல்ல!

 

நன்றி ஆனந்த விகடன்

டாஸ்மாக் தமிழ் 3

$
0
0

tas_boy_3

”ரஷ்யர்கள் தயாரிச்ச அணு உலை மட்டும் வேணாம்கறீங்க… அவங்க ஊர் வோட்கா மட்டும் வேணுமா ?  என்னண்ணே நியாயம் இது ?” என்று கேட்டபடியே கணேசனுக்கு ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து வைத்தான் தமிழ்.

”சரவணபவன் சாப்பாடு நல்லாருக்குன்றதுக்காக அந்த ஹோட்டல் ஓனர் பண்ற கொலையை ஏத்துக்க முடியுமா ?  என்னப்பா பேசற ? ” என்றபடியே வாஞ்சையோடு வோட்கா பாட்டிலை கையிலெடுத்தார் கணேசன்.

”என்னண்ணே இப்படி மடக்கிட்டீங்க ? ” என்று சிரித்துக் கொண்டே அமர்ந்தான் தமிழ். மொட்டை மாடியில் விரித்து வைத்திருந்த பெட்ஷீட்டில் அமர்ந்தான்.  ரத்னவேல் தன் மொபைலில் எஃப்எம் பாட்டு வைத்திருந்தான். “அவனுக்கென்ன தூங்கிவிட்டான்….. அகப்பட்டவன்… நானல்லவா ? ” என்று டிஎம்எஸ் பாடிக்கொண்டிருந்தார்.

”உண்மையிலேயே வசமா அகப்பட்டுட்டார்” என்றான் தமிழ்.

”யாரை சொல்ற மாமா ? ” என்றான் ரத்னவேல்.

”மருத்துவர் அய்யாதான்.. 12 நாள் ஜெயில் அவரை படாதபாடு படுத்திடுச்சி.. இன்னைக்கு ஜெயில்லேர்ந்து வெளியில வந்தப்போ அவர் முகத்தப் பாத்தியா.. வெயில் தாங்காம உடம்பே கன்னிப் போயிடுச்சு. ”

”அவர்தானே மச்சான் 'போடு வழக்க சந்திக்கறேன்னு' சொன்னார் ? ” என்றான் பீமராஜன்.

DSC_7525

”சொன்னாருதான்… இப்படியெல்லாம் நடக்கும்னு அவரு நெனைக்கலையே… தடையை மீறி கைதாவோம்.  தமிழ்நாடு பூரா வன்முறையை கட்டவிழ்த்து விடுவோம். அரசாங்கம் பயந்து போயி ரெண்டு நாள்ல விடுதலை பண்ணிடும்னு கணக்குப் போட்டார்.  ஆனா ஜெயலலிதாகிட்ட இதெல்லாம் நடக்குமா ? ”

”இப்போ என்ன ஆயிடுச்சுங்கிற ? ” என்றான் பீமராஜன்.

”மச்சான்.. டாக்டர் போட்ட கணக்கே வேற… தன்னோட கைது எண்பதுகளில் நடந்த வன்னியர் போராட்டம் மாதிரி ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். அந்த எழுச்சியைப் பார்த்து பயந்து போகும் இரண்டு திராவிடக் கட்சிகளும் நம்பகிட்ட கூட்டணி வைக்கச் சொல்லி கெஞ்சும். அதைப் பயன்படுத்திக்கிட்டு பழையபடி கிங்மேக்கர் ஆகலாம்னு நெனைச்சார். அதுக்காகத்தான், கூட இருந்தவங்க அறிவுரையெல்லாம் உதாசீனப்படுத்திட்டு, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ஆனா அம்மா டாக்டர் மேல கொலைவெறியில இருந்தாங்க.  கைதான பிறகு, ராமதாஸோட பினாமியா இருக்கற சுப்பராயலுன்ற நபர்கிட்ட, கைதான பிறகு தெனமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுற மாதிரி வன்முறைச் சம்பவங்கள் ஏற்படனும்னு சொல்லியருக்கார். சுப்பராயலு வெளி மாநிலங்கள்லேர்ந்தெல்லாம் ஆட்களை இறக்கி இரவு நேர பேருந்து பயணத்தையே ஆபத்தானதா செஞ்சார்.  இந்த விபரமெல்லாம் உளவுத்துறை மூலமா ஜெயலலிதாவுக்கு போனதும், அந்தம்மா கொலைவெறியாயிடுச்சு… பழைய கேசையெல்லாம் போடுங்கன்னு உத்தரவு போட்டதும்தான் 2004-ல் ரஜினி ரசிகர்களை அடிச்ச கேஸ்ல கைது பண்ணாங்க.

இதுக்கு நடுவுல சிறையில இருந்த ராமதாஸால வெயிலைத் தாங்க முடியல”

”அவர்தான் பாட்டாளி, விவசாயின்னு தன்னைப் பத்தி பெருமையா பேசிக்குவாரே மாமா ? ”

3325707760_6f4f340c91_b

”எந்த விவசாயி 80 லட்ச ரூபா கார்ல போறான்..  போடா நீ வேற….  24 மணி நேரமும் ஏ.சியில இருந்து பழக்கப்பட்ட டாக்டருக்கு கொளுத்துற வெயில்ல கட்டாந்தரையில படுக்க வெச்சா எப்படி இருக்கும் ? கதறிட்டார்.  அவருக்குன்னு ரெண்டு மின்விசிறி குடுத்தும், வெயில் தாங்க முடியலை.  அதனாலதான் திருச்சி ஜெயில்லேர்ந்து வெளியில வந்ததும், அடக்குமுறையை சந்திப்பேன்னு பேசுவார்னு பாத்தா, கட்டாந்தரையில் ஈரத்துண்டை போட்டு படுத்தேன்னு சொன்னார்.  ஜெயில்ல கட்டாந்தரையில படுக்க வைக்காம, இலவம்பஞ்சு மெத்தையா தருவாங்க”

”சரி இன்னும் கொஞ்ச நாள் டாக்டரை உள்ள வைப்பாங்கன்னு எதிர்ப்பார்த்தேன்.  ஆனா அதுக்குள்ள விட்டுட்டாங்க ? ” என்று கேட்டான் வடிவேலு.

”இன்னும் கொஞ்ச நாள் வச்சுருப்பாங்க.. ஆனா உளவுத்துறை மூலமா ராமதாஸோட உடல்நலத்தை விசாரிச்சதுல, வெயில் தாங்காம அவருக்கு ஏதாவது ஆயிடும்னு அறிக்கை குடுத்தாங்க.  அதுக்குப் பிறகுதான் விடுதலை கிடைச்சுது.  சனிக்கிழமை இரவு சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கார் ராமதாஸ்.”

”அப்போ இனிமே எந்த நடவடிக்கையும் இருக்காதா ? ”

”யார் சொன்னது இருக்காதுன்னு ?  ராமதாஸோட அஸ்திவாரத்தையே ஆட்டி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க அரசுத் தரப்புல. ஒரு பக்கம் ராமதாசும், அன்புமணியும் வெளியில வந்தாலும், இன்னொரு பக்கம் பாமக நிர்வாகிகள் ஒவ்வொருத்தரா குண்டர் சட்டத்துலயும் தேசியப் பாதுகாப்பு சட்டத்துலயும் உள்ள போயிக்கிட்டே இருக்காங்க. கவனிச்சியா   இல்லையா ?

காடுவெட்டி குரு மேல எவ்வளவு வேகமா தேசியப்பாதுகாப்பு சட்டம் பாஞ்சதுன்னு பாத்தியா ? இதோட முடியப்போறதில்ல.   தமிழகத்தில் ராமதாஸ் கைதுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள் அத்தனைக்கும் காரணம் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருன்னு காரணம் காட்டி, வன்னியர் சங்கத்துக்கும் அரசு தடை விதிக்கப் போகுது.  தடை விதிச்சா, அந்த சங்கத்தோடு சொத்துக்கள் முடக்கப்படும். வன்னியர் சங்க நிர்வாகிகள் முக்கியமானவங்க கைது செய்யப்படுவாங்க.  பாட்டாளி மக்கள் கட்சியோட பலமே வன்னியர் சங்கம்தான். வன்னியர் சங்கத்தை முடக்கினா ராமதாஸோட ப்யூசை பிடுங்கின மாதிரிதான். ”

முதல் ரவுண்டை ஊறுகாய் துணையோடு முடித்திருந்த கணேசன் ”தமிழு, தேர்தல்ல யாரு கூட கூட்டணி வைப்பார் மருத்துவர் ? ”

”கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிச்சாலும் தேர்தல்ல திமுகவோடோ அதிமுகவோடோ கூட்டணி வைக்க மாட்டேன்னு வீராப்பா இன்னைக்கு பேட்டி குடுத்துருக்காரு.  ஆனா, திமுக பக்கம் போறதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. ”

”என்னப்பா சொல்ற ? திருமாவளவன் மாதிரி கருணாநிதிக்கு விசுவசமான அடிமை கிடைக்க மாட்டார்ன்ற அளவுக்கு கருணாநிதியோட அவ்வளவு அயோக்கியத்தனத்துக்கும் துணை போயிட்டு இருக்காரு.  இனி திருமாவளவனும், ராமதாஸும் ஒரு கூட்டணியில இருக்கவே முடியாதுன்ற அளவுக்கு நிலைமை மாறிடுச்சு.  அப்படி இருக்கறப்போ எப்படி திமுக கூட்டணியில ராமதாஸ் வருவார்ன்று சொல்ற ? ”

”திருமாவளவன் மேல கருணாநிதி ஏகத்துக்கும் கடுப்புல இருக்காருண்ணே..  ராமதாஸ் விஷயத்துல, ரெண்டு மூணு வாட்டி, ஜெயலலிதாவோட நடவடிக்கைகளை பாராட்டி திருமாவளவன் பேசுனதும், அறிக்கை விடறதும் தமிழினத் தலைவருக்கு சுத்தமா பிடிக்கல. இதனாலத்தான் திருமாவளவன் கூட்டுன சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாட்டுக்கு பெரியார் திடலை குடுக்க வேணாம்னு வீரமணிக்கிட்ட சொல்லியிருக்கார்.  ஆனா கடைசி நேரத்துல மறுத்தா நல்லா இருக்காதுன்னு வீரமணி ஏதோ சாக்கு சொல்லி தவிர்த்துட்டார்.

17-08-12-_Thirumavalavan_Birthday-5_1

இந்த கோவத்துலதான், டெசோ அமைப்பு சார்பா கச்சத்தீவை மீட்பது தொடர்பா வழக்கு தொடுக்கறதா அறிவிக்கப்பட்ட முடிவை மீறி, தன் பெயர்லயே வழக்கு தொடுத்திருக்காரு.”

”இவ்வளவு அல்பமா இருக்காரேப்பா… !!! ”

”என்னண்ணே பண்றது.. ? இது அரசியல். எல்லாம் நடக்கும்.  திருமாவளவனும், அதிமுக பக்கம் போறதுன்ற முடிவுக்கு வந்துருக்கறதா சொல்றாங்க. அதிமுக தரப்புல 2 சீட் தர்றதுக்கு ஓ.கே சொல்லியிருக்காங்க போல இருக்கு. அதனால அவரும் அந்த மூட்லதான் இருக்காரு.”

”விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில திருமா கூடவே கருணாநிதி தன்னோட ஏஜென்டை வச்சுருக்காரே… அவரு என்னப்பா   சொல்றாரு ? ”

”யாரு ரவிக்குமாரைத்தானே கேக்கறீங்க.. ? அவரு சமீப காலமா கலைஞர் முன்னைப் போல இல்ல… ரொம்ப மோசம்னு பேசிக்கிட்டு வர்றாரு…”

”என்ன ஆச்சு… திமுக ஆதரவு நிலைப்பாட்ல இருந்து மாறிட்டாரா ? ” என்று வியப்படைந்தார் கணேசன்.

”இல்லண்ணே கட்சிக்குள்ளலேய என்ன சந்தேகப்பட்றாங்கன்னா… இப்படிச் சொன்னா திருமா என்ன ரியாக்சன் குடுக்கறாருன்னு பாத்து, கருணாநிதிக்கிட்ட சொல்றதுக்காக இப்படி வார்த்தையை விடுவாரு. இவரு எப்பவுமே கலைஞர் விசுவாசின்னு சொல்றாங்க

அது மட்டுமில்லாம ஆளுங்கட்சியும் கவனமாத்தான் காய்களை நகர்த்துது. வன்னியர் ஓட்டுக்கள் பிரிஞ்சு போகும்ங்ற விஷயம் ஜெயலலிதாவுக்கு தெரியாம இல்ல.  இதனால ராமதாஸ் கிட்ட இருந்து பிரிஞ்சு வந்து தனிக் கட்சி ஆரம்பிச்சிருக்கிற வேல்முருகன்கிட்ட பேச்சுவார்த்தை தொடங்கிடுச்சு.

வேல்முருகன், இரட்டை இலை சின்னத்துல போட்டியிட்டா வன்னியர்கள் அவருக்கு ஓட்டு போட மாட்டாங்களா என்ன ?”

“ராமதாஸ் கதையை மொத்தமா முடிச்சுடுவாங்க போலருக்கே ? “ என்றான் வடிவேலு.

“அவர் கதை முடிஞ்ச கதை மச்சான். “

“ஆளுங்கட்சி நியூஸ் சொல்லு மச்சான்.. திமுக பத்தி எங்க பத்திரிக்கைக்கு கவலையே இல்ல.. ஆளுங்கட்சி பத்தி நியூஸ் இருந்தா குடு. “ என்றான் ஜானி ஜான் கான் சாலையில் வேலை பார்க்கும் ரத்னவேல்.

DSC_0030

“ஆளுங்கட்சியில செய்திக்கா பஞ்சம். ஆளுங்கட்சியில இருக்கறவங்க மேலயும் செய்தி போடறதுக்கு இப்படி யோசிக்கறீங்களே… சைதை துரைசாமி பத்தி எழுதுவீங்களா ?  எப்படியாவது முதல்வரை பாத்துடனும்னு முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வரும்போதெல்லாம் ரோட்ல பிச்சை எடுக்கற மாதிரியே போய் நிக்கறாரு.  மனு குடுக்கறவனுங்கதான் இப்படி நிக்கறாங்கன்னா, மேயரா இருந்துக்கிட்டு போய் நிக்கறாரு. போன வாரம் ஒரு நாள் அந்தம்மா வண்டிய நிறுத்தி “ஏன் இப்படி நிக்கறீங்க… போய் கார்ப்பரேஷன் வேலையப் பாருங்கன்னு சத்தம் போட்ருக்கு.  ஆனா இவரு ஊரு பூரா, அம்மா என்னை அன்பா விசாரிச்சாங்க. வேலையெல்லாம் எப்படிப் போகுதுன்னு கேட்டாங்கன்னு பொய் சொல்லிக்கிட்டு திரியறாரு.

இவரும் கலைராஜனும் சேந்து தியாகராய நகர் பகுதியில அனுமதி இல்லாம கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பது தொடர்பா உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவைத் தொடர்ந்து அங்க இருக்க கடை அதிபர்கள் கிட்ட 12 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்காங்க.  தி.நகர்ல ஆம்னி பஸ்களை அனுமதிச்சதுலையும் இந்த ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு.  இந்த நியூஸை போடுவீங்களா உங்க பத்திரிக்கையில ? “

“நான் எங்க, எடிட்டர்கிட்ட கேட்டுப் பாக்கறேன். “ என்று பம்மினான் ரத்னவேல்.

“மச்சான் இந்த நியூஸ் உங்க பத்திரிக்கையில வராது மச்சான். நான் சொல்றேன்.  ஏன்னா உங்க பத்திரிக்கை அலுவலக கட்டிடமே அனுமதி இல்லாம கட்டுனது.  போய் மீசைக்காரரை கேளு.  அனுமதி வாங்கிட்டு கட்டுனாரா இல்லையான்னு.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேன்னு அட்டையில போட்டுக்கறதோட சரி.  உங்க பவுசு தெரியாதா.  சும்மா இருடா “

“அவனை விடு. தலைமைச் செயலக செய்தி  இருக்கா ? “என்றான் பீமராஜன்.

“நான் வேலை செய்யறதே அதுக்குப் பக்கத்துல இருக்கற பார்லதானே.. அது இல்லாம இருக்குமா ? “ என்றவாறு கணேசனைப் பார்த்தான்.  அவர் க்வார்டர் வோட்காவை முடிக்கும் தருவாயில் இருந்தார்.

“இந்த வாரம் தலைமைச் செயலக அரசியல்வாதிகள் பத்தியும் செய்தி கிடையாது. தலைமைச் செயலக அதிகாரிகள் பத்தியும் செய்திகள் கிடையாது “

“வேற யாரைப்பத்திடா… ? “ என்று ஆர்வத்தோடு கேட்டான் பீமராஜன்.

“ரமேஷ்னு ஒருத்தரைப் பத்தி. அடிக்கடி நம்ப கஸ்டமருங்க இந்த ரமேஷ்ன்ற பேரை உச்சரிப்பாங்க.  சரி… யாராவது அதிகாரியா இருப்பாருன்னு நெனச்சுக்கிட்டு இருந்தா இவரு பத்திரிக்கையாளர். “

“பத்திரிக்கையாளரா ? “ என்று வியப்படைந்தான் பீமராஜன்.

“ஆமாம் மச்சான். அதுவும் சாதாரண பத்திரிக்கை இல்ல.  ஊர்ல இருக்கற அவ்வளவு பேரையும் குறை சொல்ற துக்ளக் பத்திக்கையில இருக்கறவர். அவரு பேரே துக்ளக் ரமேஷ். “

“என்ன பண்றாராம் அவரு… ? “

“என்ன பண்ணலைன்னு கேளு.  இந்த ரமேஷுக்கு வேலை என்னன்னா, ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு வரும்போதெல்லாம் மந்திரிங்களோட சேர்ந்து வழியில நிக்க வேண்டியது. என்னைக்காவது ஒரு முறை அந்த அம்மா, இவரை பக்கத்துல கூப்புட்டு, என்ன ரமேஷ் எப்படி இருக்கீங்கன்னு கேப்பாங்க.  அவ்வளவுதான். இதைப் பயன்படுத்திக்கிட்டு இவர் நடத்தற வசூல் இருக்குதே… சொல்லி மாளாது.  அதிமுகலதான் என்னைக்கு யார் மந்திரின்றதே நிச்சயமில்லையா.  இந்த ஆளைப்பாத்து அப்படி பயப்படுவாங்க மந்திரிங்க.

911790_10151561774908911_1202467980_n

துக்ளக் ரமேஷ்

கண்ட நேரத்துக்கு மந்திரி அறைக்குள்ள நுழையறது, அங்க இருக்கற பி.ஏக்களை மிரட்றது, மந்திரிங்கக்கிட்ட சொல்லி வேண்டியவங்களுக்கு ட்ரான்ஸ்பர் கேக்கறது, ட்ரான்ஸ்பர் வாங்கிக் குடுத்துட்டு அதை வைச்சு வசூல் பண்றதுன்னு இவரு அட்டகாசம் தாங்க முடியலை.

இப்போ பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குதா..  எந்தெந்த துறையோட மானியக் கோரிக்கை வருதோ.. அந்தந்தத் துறையோட அமைச்சரைப் பாத்து 20 முதல் 50 ஆயிரம் வரை வசூல் பண்ணிக்கிட்டு இருக்காரு. அமைச்சருங்களும், இவரு முதல்வருக்கு நெருக்கமானவர்.. ஏதாவது போட்டுக் குடுத்துடுவாரோன்னு கேக்கறதை குடுக்கறாங்க.

இப்படி மாமூல் வசூல் பண்றது இல்லாம, விளம்பர ஏஜென்சி நடத்தற மாதிரி, பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் தர்ற உரிமையையும் இவரே யாரையும் கேக்காம எடுத்துக்கறாரு.  மந்திரிங்க நாளிதழ் விளம்பரம் கொடுக்கும்போது, இவரே அதை வாங்கி பத்திரிக்கைக்கு குடுத்து, கமிஷன் வாங்கிக்கறாரு.. “

“என்னப்பா இவ்வளவு கேவலமானவரா இருக்காரு.. ? “ என்றார் கடைசி ரவுண்டில் இருந்த கணேசன்.

“இது பரவாயில்லண்ணே… போன வாரம் காவல்துறை மானியக் கோரிக்கை நடந்துச்சு.  அப்போ சத்யாலயா ராமகிருஷ்ணன்னு ஒரு பத்திரிக்கையாளர் லாபியில உக்காந்திருந்தாரு.  அவரைப் பாத்த முதலமைச்சர் அவரை அழைச்சு எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களான்னு ஒரு 10 நிமிஷம் பேசியிருக்காங்க.  இது துக்ளக் ரமேஷுக்கு புடிக்கலை.  முதல்வர்கிட்ட பேசற ஒரே பத்திரிக்கையாளர் நம்பதான்.  இந்த ஆளு எப்படிப் பேசலாம்னு பொறாமையில… சட்டசபை செயலர்கிட்ட போயி, லாபியில எதுக்கு பத்திரிக்கையாளர்களை உக்கார அனுமதிக்கறீங்கன்னு புகார் சொல்லி, சபை நடந்துக்கிட்டு இருக்கும்போதே, அவைக் காவலர்களை விட்டு அழைச்சு அவரை வெளியேத்தியிருக்காரு.. “

“ஏம்பா… இவரோட பத்திரிக்கை ஆசிரியர் சோ… வாய் கிழிய பேசுவாரே… ஆனா இப்படிப்பட்ட ஊழல் பேர்விழியை வச்சுருக்காரே…. ? என்றார் கணேசன்.

“வாய் கிழிய பேசற சோவுக்கு ஏத்த ஜால்ராவா இருக்கறதாலதான் இந்த மாதிரி ஆளை அனுமதிச்சுக்கிட்டு இருக்காரு. ஆனா இவரை நம்பி பணம் குடுக்கறாங்க பார் மந்திரிங்க.. அவங்களைச் சொல்லணும்.“

“ராஜ்யசபா எம்.பி. பதவி நெறய்ய பேருக்கு முடிஞ்சுதே.. அடுத்து யாருக்கு அதிமுகவுல சீட் கிடைக்கும் ? “ என்று கேட்டுக் கொண்டே பீர் பாட்டிலை திறந்தான் வடிவேலு.

“அதிமுகவுல மைத்ரேயனுக்கு இரண்டாவது வாய்ப்பு உறுதி.  முன்னாள் டிஜிபி அலெக்சாண்டரும், இன்னொரு முன்னாள் டிஜிபி நட்ராஜும் எப்படியாவது ராஜ்ய சபா எம்.பி ஆயிடலாம்ன்ற கனவுல இருக்காங்க. ரெண்டு பேருமே, எனக்கு கண்டிப்பா சீட் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. “

“கெடைக்குமா என்ன ? “என்று தமிழைப் பார்த்து சந்தேகத்தோடு கேட்டான் வடிவேலு.

“ஆசைப்படுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.  ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா என்ன ? “ என்று சொல்லிவிட்டு, தொடர்ந்தான் தமிழ்.

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் பலத்த மாற்றங்கள் இருக்கும்.  பல தலைகள் உருளும்னு சொல்றாங்க.


அடுத்து காவல்துறை செய்திகள்.  உளவுத்துறையில இருக்கற நம்ப கஸ்டமர் பல தகவல்களை சொன்னார். சென்னை மாநகர உளவுத்துறை சரிவர மேற்பார்வை செய்யப்படறதில்லையாம். சென்னை நகரம் முழுக்க உளவுத்தகவல்களை சேகரிக்க வேண்டிய காவலர்களும் தலைமைக் காவலர்களும்,  ஃபீல்டுக்கே போறதில்லையாம்.  பெரும்பாலான தகவல்களை போன்லயே கேட்டு சொல்லிட்டு கமிஷனர் ஆபீஸே கதின்னு கெடக்கறாங்களாம்.  கமிஷனர் ஆபீஸ்ல வர்ற புகார்கள் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துல அவர்கள் தலையிட்டு வர்றாங்க.  இதையெல்லாம் மேற்பார்வை செய்ய வேண்டிய ஜார்ஜ், உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவை முழுமையா நம்பிக்கிட்டு இருக்காரு.  ஆனா, அவரு ஜார்ஜைப் பத்தியே உளவு பாத்து, ஜாங்கிட் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு.. “

“ஏம்பா… இவரு ஜார்ஜுக்கும், ஜாங்கிட்டுக்கும் ஆகாது. நமக்கு நம்பிக்கையான ஆளுன்னுதானே ஜார்ஜ், வரதராஜுவை திருநெல்வேலியில இருந்து கொண்டு வந்தார் ?  நீ என்ன தலைகீழா சொல்ற ? “

Varadaraju_IPS

“கொண்டு வந்தார்தான்.  ஆனா, வரதராஜுவுக்கு ஜாங்கிட்கிட்ட இருக்கற விசுவாசம் இன்னும் அப்படியே இருக்கு. ரெண்டு பேரும் ரொம்ப நாள் புறநகர்ல வேல பாத்துருக்காங்கள்ல ?

“ஆமா எப்போ பாத்தாலும் ஜாங்கிட் பத்தியே தகவல் சொல்றியே… ஏன் உன் கஸ்டமருக்கு மத்த அதிகாரிங்களப் பத்தி தெரியாதா ? “என்றான் பீமராஜன்.

“கஸ்டமர் எல்லாத்தைப் பத்தியும்தான் சொல்றாரு.. ஆனா இவரைப் பத்தி எழுதத்தான் எந்த பத்திரிக்கையும் தயாரா இல்லையே.. அதனாலத்தான் நீங்களாவது எழுதுவீங்கன்னு உங்கக்கிட்ட சொல்றேன். ஜாங்கிட்டைப் பத்தி எந்தத் தகவலும் எந்தப் பத்திரிக்கையிலும் வரமாட்டேங்குதே…

இப்போ பாருங்க போன வாரம், மு.க.ஸ்டாலின், ஜாங்கிட்டை சந்திச்சு பேசியிருக்காரு. “

“அவரு எதுக்குடா ஜாங்கிட்டை சந்திக்கிறாரு.. ? “

“அவரும் ஜாங்கிட்டும் எவ்வளவு நெருக்கம்னு வெளி உலகத்துக்கு தெரியாது.  ஸ்டாலினோட பினாமி ராஜா சங்கரும், ஜாங்கிட்டும் ரொம்ப ரொம்ப நெருக்கம்.  ஜாங்கிட்டோட ஏராளமான பணம் ராஜா சங்கர் மூலமா வெளிநாடுகள்லயும், இங்கயே ராஜா சங்கரோட தொழில்கள்ளயும்  முதலீடு செய்யப்பட்டிருக்கு. எப்படி அந்த தொடர்பு விட்டுப் போகும் ? “

“பிசினெஸ் பார்ட்னர்ஸ்னு சொல்லு.  சரி இப்போ எதுக்கு சந்திச்சாங்க ? “

“ஸ்டாலின் ஜாங்கிட்கிட்ட, தன்னோட பையன் பேர்ல இருக்கற கார் இறக்குமதி வழக்கிலேர்ந்து எப்படியாவது உதயநிதியை காப்பாத்தனும்னு சொல்லியிருக்காரு. ஜாங்கிட்டும், ஒண்ணும் கவலைப் படாதீங்க. சிபிஐயில சென்னையிலயும், டெல்லியிலயும் எனக்கு நெறய்ய அதிகாரிகளைத் தெரியும்.  என்னை மீறி ஒன்னும் நடக்காது.  உங்க வழக்கறிஞர் இது சம்பந்தமா கோர்ட்ல ஏதாவது பேப்பர் தாக்கல் பண்றதுக்கு முன்னாடி, என்னை கன்சல்ட் பண்ணச் சொல்லுங்க. சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரும் எனக்கு நல்லா பழக்கம்னு  சொல்லியிருக்காரு. “

DSC_4709_1

“சிபிஐயில இவரு சொன்னா கேப்பாங்களா என்ன ? “

“ஏம்ப்பா.. அப்படி சொல்லிக்க வேண்டியதுதான்.. சிபிஐயில வேலை பாக்கற அதிகாரிங்க இவருக்கு ஜுனியர் அதிகாரிங்க.  காலையில பத்து மணிக்கு போயி பாத்துட்டு, ஒரு பத்து நிமிஷம் மொக்கை போட்டுட்டு, வெளியில வந்து, ஸ்டாலினுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் பேசிட்டேன். ஒண்ணும் கவலைப்படாதீங்கன்னு சொன்னா ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? “

“அப்புறம்.. அடுத்து “ என்று கேட்டு விட்டு காலி பாட்டிலை பார்த்தார் கணேசன்.

“என்னண்ணே…. சரக்கு பத்தலையா.. ? “

“ஆமாம்பா.. ஒரு ஹாஃப் வாங்கிட்டு வந்துருக்கலாம்… சப்புனு இருக்கு “ என்று அலுத்துக் கொண்டார்.

“இருங்க வர்றேன்  “ என்று சொல்லி விட்டு மொட்டை மாடியில் இருந்து இறங்கிய தமிழ் சிறிது நேரத்தில் இன்னொரு க்வார்டர் ரமானோவோடு வந்தான்.

“சூப்பர்பா நீ…. ரொம்ப நன்றிப்பா “ என்றவாறு வாஞ்சையோடு ஒரு குழந்தையை வாங்குவது போல அதை வாங்கி மடியில் வைத்துக் கொண்ட கணேசன், சரி அடுத்த மேட்டருக்கு வாப்பா “ என்றார்.

“ராமஜெயம் கொலை வழக்கை தமிழக அரசே, சிபிஐக்கு மாத்தி உத்தரவு போடப்போகுதாம்ணே… சிபி.சிஐடிக்கு மாத்தி ஒரு வருஷமா எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால, முதல்வருக்கு, திமுகவிலயே உள்ளவங்க போலீசோட சேந்து இந்த வழக்கை ஒழுங்கா விசாரிக்க விடாம தடுக்கறாங்கன்னு நெனைக்கறாங்க. அதனால அந்த வழக்கை சிபிஐக்கு மாத்தி உத்தரவு போடலாமான்ற யோசனையில இருக்காங்க

இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கையாள்வதில உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரிக்கும், டிஜிபி ராமானுஜத்துக்கும் முட்டிக்கொண்டு இருக்கறதாவும் சொன்னாரு நம்ப ஆளு. “

“அவ்வளவுதானா போலீஸ் நியூஸ் “ என்னறான் பீமராஜன்.

“சேஷசாய் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையரா இருந்தப்போ பல வழக்குகள்ல வசூல் வேட்டை நடத்தியிருக்காரு.  ஆனா சொன்னபடி அவரால பல விஷயங்களை செஞ்சு குடுக்க முடியலை.  அவருக்கிட்ட பணம் குடுத்து ஏமாந்தவங்க அவரை இப்போ தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்களாம் “

“திமுக செய்தி ? “ என்றான் ரத்தினவேல்.

“கருணாநிதி ஆ.ராசாவைக் கூப்பிட்டு, உடன்பிறப்பே… கொஞ்ச நாளைக்கு மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும் விமர்சிக்கறதை நிறுத்தி வையி… தயாளு அம்மாள் சாட்சி சொல்ல வரவேண்டியதில்லைன்னு போட்ட மனுவில சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு குடுக்கற வரைக்கும் வாயைத் தொறக்காத உடன்பிறப்பேன்னு சொல்லியிருக்காரு. “

“உன் வக்கீல் கஸ்டமர் வந்தாரா ? “ என்று தமிழ் வாயைப் பார்த்தான் வடிவேலு.

“வந்தாரு வந்தாரு.. நீதிபதிகள் தேர்வு பத்திதான் ரொம்ப பரபரப்பா வழக்கறிஞர்கள் மத்தியில விவாதம் ஓடிக்கிட்டு இருக்கு.”

”அதான் போன வாரமே யார் யாரெல்லாம் நீதிபதிகளாகப் போறாங்கன்னு சொன்னியே.. அதுல ஏதாவது மாற்றம் இருக்கா ? ”

”அந்த லிஸ்ட்ல மாற்றம் இல்ல. ஆனா அந்த லிஸ்ட்ல இருக்கற ஆளுங்க பத்திதான் ஒவ்வொரு செய்தியா கசிஞ்சுக்கிட்டு இருக்கு.

முனிருத்தீன் ஷெரீஃப் னு ஒருத்தர் பேரு பரிந்துரை செய்யப்பட்டிருக்கு. அவருக்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளோட நெருக்கமான தொடர்பு இருக்குனு சொல்றாங்க.  சவுதி அரேபியாவுல இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்னு ஒரு வங்கி இருக்கு. அந்த வங்கி சவுதியில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால நடத்தப்பட்ற வங்கி. அந்த வங்கியோட தென்னிந்தியாவோட உறுப்பினரா இருக்கார்.  இந்திய தேசிய லீக் கட்சியில நிர்வாகியா இருக்கறார். முஸ்லீம்கள்ல பல பேர், இந்திய சட்டத்தை ஏத்துக்காம இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் படிதான் நடக்கனும்னு சொல்றாங்க. ஷரியத் சட்டத்தின்படி, சென்னையிலேயே ஷரியத் நீதிமன்றங்கள் ரகசியமா நடந்துக்கிட்டு இருக்கு. சென்னை அண்ணா சாலையில புகாரி ஹோட்டல் எதிரில் இப்படி ஒரு ஷரியத் கோர்ட் நடக்கறது வழக்கம். இந்த நீதிமன்றம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்ல நடக்கும். அந்த ஷரியத் கோர்ட்ல இந்த முனிருத்தீன் ஷெரிப் உறுப்பினரா இருக்கார்.  தமிழ்நாடு முஸ்லீம் சர்வீசஸ் அமைப்புன்னு ஒரு அமைப்பு இருக்கு. இந்த அமைப்பும் ஒரு அடிப்படைவாத அமைப்புதான்.  இந்த அமைப்போட பொதுச் செயலாளராவும் இருக்கார் முனிர் ஷெரிப்.

இந்திய ஜனநாயக முஸ்லீம் கட்சின்னு ஒரு கட்சியை அக்ரம் கான்னு ஒரு நபர் நடத்திக்கிட்டு இருக்கார். அந்த அக்ரம் கான் சென்னை நகரத்துல கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் எல்லாம் பண்றவர்.  இவர் மேல கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில இருக்கு.  இந்த அக்ரம் கானோட கட்சியிலயும் முனிர் ஷெரிப் உறுப்பினரா இருந்துருக்கார். இதைத் தவிர்த்து இன்னும் பல தகவல்களை மத்திய உளவுத்துறை இவரைப் பத்தி சேகரிச்சிருக்கு.  அதனால இவர் நீதிபதியாகறது சந்தேகம்தான்னு சொல்றாங்க.”

”மீதி பேரெல்லாம் ஓக்கேவா தமிழ் ? ” என்றான் பீமராஜன்.

”இருக்கற பேர்லயே சிறந்தவர் தங்கசிவம் தான்”

”ஏன் அவர் நல்ல வக்கீலா ? ”

”ஆமா.. நல்ல வக்கீல்தான்.  மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்குகள்ல மட்டும்தான் ஆஜராவார். அவருக்கு முழு நேரத் தொழிலே ரியல் எஸ்டேட்தான். கிழக்குக் கடற்கரைச் சாலையில நீச்சல் குளத்தோடு கூடிய ஒரு பங்களா வெச்சுருக்கார். அந்த பங்களாவுல, முக்கிய பிரமுகர்களை கவனிக்கறதுதான் இவரோட வேலை. ”

”ஏம்பா… இதை விட நீதிபதியாகறதுக்கு வேற என்ன தகுதி   வேணும் ? ”

”அட கம்முனு இருங்கண்ணே. கிண்டல் பண்ணிக்கிட்டு. பல நீதிபதிகளுக்கு இவர் ப்ரோக்கராவும் செயல்பட்டிருக்கார்னு தகவல் சொல்றாங்க. இந்த தங்கசிவத்தோடு நெருங்கிய நண்பர், சைதாப்பேட்டையில் இருக்கறார் அவர் பேசு கிருஷ்ணன். அவர் நாகர்கோயில் மாவட்டத்தைச் சேர்ந்தவரு. இந்த கிருஷ்ணன், சைதை துரைசாமியோட ஆளு.  சைதை துரைசாமியோட நல்லவங்க சகவாசம் வைக்க முடியுமா ?”

”இப்படிப்பட்ட நபரை எதுக்காக பரிந்துரை பண்ணாங்க.. யார் பரிந்துரை பண்ணாங்க ? ”

”தலைமை நீதிபதி கூட இப்போ முதல் டிவிஷன் பென்ச்ல இருக்கற நீதிபதி பால் வசந்தகுமார்தான் இவரை பரிந்துரை பண்ணியிருக்கார். இதுல கொடுமை என்னன்னா, பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள்லயே இவர்தான் சின்ன வயசு 46 வயசு.  வழக்கமா சென்னை உயர்நீதிமன்றத்துல 50 வயசுக்கு முன்னாடி யாரையும் நீதிபதியாக்கற வழக்கம் கிடையாது. ஆனா இவர் 46 வயசுலயே பரிந்துரை செய்யப்பட்டிருக்கார். இப்போ நீதிபதியானா நிச்சயமா உச்சநீதிமன்ற நீதிபதியாவார்.”

”நீதிபதி பால் வசந்தகுமார் நல்ல நீதிபதியாச்சே.. அவர் எதுக்காக இப்படிப்பட்ட ஒரு நபரை பரிந்துரை பண்றார் ? ”

DSC_0044

நீதிபதி பால் வசந்த குமார்.

”என்னண்ணே புரியாத மாதிரி கேக்கறீங்க… ?  தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது இல்லையா ? உயர்நீதிமன்றத்துல கேலக்சின்னு ஒரு அமைப்பு இருக்கு. இந்த அமைப்பு நாடார்களுக்கான அமைப்பு.  நாடார் சமூகத்தைச் சேர்ந்தவங்க அத்தனை பேரோட நலன்களையும் இந்த அமைப்பு கவனிச்சுக்கும்.  நீதிபதி பால் வசந்தகுமாரும் கேலக்சி மெம்பர். தங்கசிவமும் கேலக்சி மெம்பர். ”

”இதுக்காகவா தங்கசிவத்தை நீதிபதியாக்கனும் ? ”

”தங்கசிவம் எப்படிப்பட்ட நபர்னு சென்னை உயர்நீதிமன்றம் முழுக்க தெரியும்.  இந்த விஷயம் நீதிபதி பால் வசந்தகுமாருக்கு மட்டும் தெரியாமப் போயிடுமா என்ன ?  உயர்நீதிமன்றத்துல பேசிக்கிற விஷயம் என்னன்னா, நீதிபதி பால் வசந்தகுமாரோட மகள் மருத்துவக் கல்லூரியில படிக்கிது. பல்கலைக்கழகம் கொண்டு வந்த திருத்தங்களின்படி, நீதிபதியோட மகள் உரிய மதிப்பெண்களைப் பெறலை. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்துல அந்தப் பெண்ணும், வேறு சில மாணவர்களும் வழக்கு தொடர்ந்தாங்க.  அந்த வழக்கு நீதிபதி ராமசுப்ரமணியத்தக்கிட்ட வந்துருக்கணும். ஆனா, அந்த வழக்கு நிதிபதி ஜோதிமணிக்கிட்ட விசாரணைக்கு வர்ற மாதிரி ஏற்பாட பண்ணதா சொல்றாங்க. ”

”அவரும் நீதிபதிதானே… அவர் விசாரிச்சா என்ன ? ”

”நீதிபதி ஜோதிமணியும் கேலக்சி உறுப்பினர். அதுதான் அதுல சிறப்பு. அது மட்டுமில்ல. அந்த வழக்குல, நீதிபதி பால் வசந்த குமாரின் மகளுக்கு தங்கசிவம்தான் வழக்கறிஞர். ”

”சரி.. இதையெல்லாம் உளவுத்துறை விசாரிக்காதா ?  இதையெல்லாம் விசாரிச்ச உளவுத்துறை அதிகாரிங்க பேசிக்கிட்ட விஷயத்தைக் கேட்டுட்டுத்தானேண்ணே உங்ககிட்ட சொன்னேன். நான் பார்ல வேலை செய்யறேன். எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ? ”

”தம்பி.. எனக்கு கொஞ்சம் அதிகமாயிடுச்சு.. நான் போகட்டுமா.. ? ”என்றார் கணேசன்.

”வாங்கண்ணே எல்லாருமே போலாம்… ரொம்ப லேட்டாயிடுச்சு…” என்று அனைவரும் உறங்கச் சென்றனர்.


வன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும் : ஜெயலலிதா

$
0
0

வன்முறையில் ஈடுபடும் எந்த கட்சியாக இருந்தாலும், அதனை தடை செய்ய தமிழக அரசு தயங்காது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் கடந்த  சில  நாட்களாக   நடைபெற்று   வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்  மீது  தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலுரை, பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள்.

jayalalitha7
பாமகவினர் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடத்திய ‘சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா’-வின் போது மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் 29.4.2013 அன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அதற்குப் பதில் அளித்து பேசிய போது, சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த வித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசு தயங்காது என்றும் தெரிவித்து இருந்தேன்.

இந்நிலையில், மரக்காணம் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, 30.04.2013 அன்று விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் மிகப் பெரிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும், 01.05.2013 அன்று அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலை நகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும் டாக்டர் ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

மரக்காணம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவது வன்முறைக்கு வழிகோலும் என்பதாலும், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்ற முடிவை காவல் துறை எடுத்தது.

இதனை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த தொடர் முழக்கப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, அதற்கான ஆணை அக்கட்சியின் விழுப்புரம் நகரச் செயலாளருக்கு சார்வு செய்யப்பட்டது. காவல் துறையினர் முறையாக, பேராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்திருந்தும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அம்மாவட்டத்தில் அப்போது நிலவி வந்த சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாது, காவல் துறையினர் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க ஒத்துழைப்பு அளிப்பதற்குப் பதிலாக, பொறுப்பில்லாமல் தடையை மீறி அனுமதி மறுக்கப்பட்ட போராட்டத்தை தலைமையேற்று நடத்த 30.4.2013 அன்று பிற்பகல் 12.15 மணியளவில், தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்ட விரோதமாகக் கூடியதால், வேறு வழியின்றி டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் பல இடங்களில் சாலைகளை மறித்து, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து வருகின்றனர். 


இதற்கிடையில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் ராமதாஸை அரசு கைது செய்து சிறையில் அடைத்து, அரசியல் பழிவாங்கும் படலத்தை தொடங்கிவிட்டதாகவும்; ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் அலைக்கழிக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டதாகவும்; கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிக்கை வெளியிட்டார். டாக்டர் அன்புமணி ராமதாஸின் இந்த அறிக்கை “எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் போல்” என்ற பழமொழிக்கேற்ப வன்முறையை தூண்டும் விதமாக அமைந்தது.


மேலும், இக்கட்சியினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் பேருந்துகள் மீது கற்களை வீசியதில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சேதமடைந்தன. இக்கல் வீச்சு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளது மட்டுமின்றி மரணங்களும் நடந்துள்ளன. 


ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலைய சரகம், அண்ணா மடுவில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. எஸ்.எஸ்.ரமணிதரன் அவர்களது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சைக்கிள் டயரில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து விஷமிகள் உள்ளே வீசியதில், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், குளிர் சாதன இயந்திரம், மரப் பொருட்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்துள்ளன. இது தொடர்பாக, 5.5.2013 அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, அந்தியூர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய முன்னாள் அமைப்பாளர் திரு. குருசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் இத்தீ வைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்தது தெரிய வந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் திரு. குருசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீ வைப்பு சம்பவங்கள் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் வாகனங்களை மறித்து, அவர்களை பணி செய்யவிடாமல் பட்டாளி மக்கள் கட்சியினர் தடுத்துள்ளனர். இதனால், அத்துறையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று தீயணைப்புப் பணிகளில் ஈடுபட இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.


30.4.2013 அன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் அன்று சட்டவிரோதமாக தடையை மீறி கூடிய போது அவர்களை காவல் துறையினர் கைது செய்த காரணத்திற்காக, அக்கட்சியினர் மாநிலத்தில் பல இடங்களில் தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு, பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தீ வைத்தல், பேருந்துகள் மீது கல் வீசி பயணிகளுக்கு காயம் விளைவித்தல், நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களை வெடி பொருட்கள் வைத்து சேதப்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து சாலைகளில் தடைகள் ஏற்படுத்துதல், மரங்களை தீ வைத்து கொளுத்துதல், ஓடுகிற ரயில் வண்டி மீது தீப் பந்தத்தை எறிதல், அரசு அலுவலகங்கள், அரசு கிடங்குகள், நியாய விலைக் கடைகள், பேருந்துப் பணிமனைகள் ஆகிவற்றைத் தீ வைத்து சேதப்படுத்துதல், காவல் துறை வாகனங்களைத் தாக்கியும், தீ வைத்தும் சேதப்படுத்துதல், பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயை சேதப்படுத்துதல், இத்தகைய மக்கள் விரோத செயல்களைத் தடுக்க முயன்ற காவலர்களை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்துத் தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாளி மக்கள் கட்சியினர் நிகழ்த்திய இவ்வன்முறை சம்பவங்கள் காரணமாக இரண்டு சரக்கு லாரிகள் மற்றும் 14 பேருந்துகள் உட்பட 16 வாகனங்கள் தீக்கிரை ஆகியுள்ளதுடன், ஒரு அப்பாவி ஓட்டுநர் தீ காயம் அடைந்து இறந்துள்ளார். மேலும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்கிய சம்பவங்களில் ஒரு அப்பாவி லாரி ஓட்டுநர் மற்றும் அப்பாவி பயணி ஒருவர் இறந்துள்ளதுடன், 111 பேர் படு காயம் அடைந்துள்ளனர். மேலும், அரசு பேருந்துகள் மற்றும்  தனியார் வாகனங்கள் என மொத்தம் 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும். இரண்டு பாலங்கள் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நெடுஞ்சாலைகளில் நிழல் தந்து வந்த 120 மரங்கள் சாலைகளில் வெட்டிச் சாய்க்கப்பட்டும், 45 மரங்கள்எரிக்கப்பட்டும், மொத்தம் 165 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஒரு புறம் மரங்களை நடுவதாகக் கூறிக் கொண்டு, மறு புறம் மரங்களை வெட்டி சாய்ப்பது தீ வைத்து எரிப்பது என்பது “படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழியைத் தான் நினைவு படுத்துகிறது.

காவல் துறையினர், கடந்த பல நாட்களாக பட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறைச் செயல்களை தடுக்க முழு வீச்சில் தங்களது திறன் முழுவதையும் உபயோகித்து நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டும், முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகின்றனர். மேலும், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இதுவரை 5,720 நபர்கள் தடுப்பு நடவடிக்கையாகவும், 1,744 நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 20 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினர், கடந்த சில நாட்களாக நிகழ்த்தி வரும் வன்முறைச் செயல்களினால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் துவங்க பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், மாநிலத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, தொழில் முதலீட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை அமைந்துள்ளது.

சிறையில் இருந்து பிணையில் வெளி வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்கள் இடையே பேசுகையில், பா.ம.க.வினர் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

11.5.2013 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை நியாயப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, “பிரதமர் வீட்டு முன்பும், சோனியா காந்தி வீட்டு முன்பும் அண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  அதில் ஒரு அமைச்சரும் தாக்கப்பட்டார்.  அதற்கு அனுமதி வாங்கவில்லை. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்கள் ரயிலை மறித்தும், சாலைப் போக்குவரத்தை மறித்தும் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதற்கு அனுமதியா வாங்குகின்றனர்? அவர்களை எல்லாம் அனுமதித்துவிட்டு, இந்த அரசு திட்டமிட்டு என்னை கைது செய்து, சிறையில் அடைத்து, பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி,  இது எல்லாவற்றையும் செய்வது பா.ம.க.வினர் என்று மக்களிடம் பழி கூற திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஏன் என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே கம்யூனிஸ்ட்களும், ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.  மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்துக் கொண்டு தலித் ஓட்டுகளையும் பெற்று 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெறலாம் என்று நினைத்திருக்கிறார்.” என்று எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விதண்டா வாதத்தினை டாக்டர் ராமதாஸ் முன் வைத்தது அபத்தத்தின் சிகரமாகவே உள்ளது.

அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தப்பட்டு ஓர் அமைச்சர் புது டெல்லியில் தாக்கப்பட்டார் என்று சொல்லி பட்டாளி மக்கள் கட்சியினரை டாக்டர் ராமதாஸ்  தூண்டி விடுகிறாரா? பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டில் நடக்கும் கலவரங்கள் அனைத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  தமிழக அரசு, காவல் துறை இவை மூன்றும் தான் காரணம். பா.ம.க. எந்த வன்முறை செயலையும் செய்யாது” என்று கூறுவதன் மூலம் பா.ம.க.வினர் நிகழ்த்திய வன்முறைகளிலிருந்து தப்பித்துவிடலாம் என்று டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார்.  இதைப் போன்று என் மீதும், தமிழக அரசின் மீதும், காவல் துறை மீதும் அவதூறுகளைப் பரப்பி வரும் டாக்டர் ராமதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  அவர் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும்.

“சிறையில் இருந்து வெளியே சென்ற உங்கள் தொண்டர்களுக்கு என்ன அறிவுரை சொல்லப் போகிறீர்கள்?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இது போன்ற அடக்குமுறைகளை கண்டு நானும் எனது தொண்டர்களும் சோர்வடைய மாட்டோம்.  ஆகவே, நீங்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டும்”  என்று சொல்லி உள்ளார் டாக்டர் ராமதாஸ். பெட்ரோல் குண்டுகளை வீசுவதிலும், கல் எறிவதிலும், பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துவதிலும், அப்பாவிகள் உயிர் இழக்கச் செய்வதிலும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதிலும் சோர்வு அடைய மாட்டோம் என்கிறாரா?

டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் “போராட்டம் தொடரும்” என்று சொல்வதன் மூலம் தங்கள் கட்சியினரை மேலும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடவே தூண்டி விடுகிறார்கள்.

எனவே தான் டாக்டர் ராமதாஸ் பிணையில் வெளி வந்த பின்பும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றும் பேருந்துகள் மீது கல் வீசி உள்ளனர். வாகனங்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன.

அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளின் கண்ணாடிகள் தாக்கப்படுவதால் பேருந்துகளின் முன் கண்ணாடி உடைந்து ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் பேருந்து ஓட்டுனர்களுக்கு தலைகவசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொதுவான இலக்கணங்களுக்கு மாறாக, பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில தினங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்தல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தல், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களில் பட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதை எனது அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களை தூண்டுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கிடப்பட்டு, அந்த இழப்பை 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியை தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மே 17

$
0
0

Picture_058

இயலாமையும் வஞ்சகமும்

சூல் கொண்டு

மானுடம் தெரு மேய்ந்போது

கொடிய நாசகார பாஷாணங்களை

முள்ளிவாய்க்கால் முட்டுக்குள்

மிக மலினமாக ஒத்திகை பார்த்து,

நவீன நரபலி நடத்தப்பட்ட

அரக்கத்தனத்தின்

நான்காம் ஆண்டு.

 

ஒருசில

கருங்காலிகளின் வரலாற்று துரோகத்தால்,

இருபத்து ஓராம் நூற்றாண்டில்

உலகம் வியப்புடன் திரும்பிப்பார்த்த

தமிழினத்தின் ஒப்பற்ற எழுச்சி

காட்டிக்கொடுக்கப்பட்ட

கரிநாள்.

 

தந்தரமும் நயவஞ்சகமும் ஒன்றுசேர்ந்து

ஒரு இனத்தின்

நாற்பது ஆண்டு முதலீட்டை

காவு கொடுத்து,

மண்ணோடு மண்ணாக்கிய

வரலாற்றின் வக்கிரமான

நினைவு நாள்.

 

மானசீகமாக இந்த நினைவு

எனது மண்ணில்

வெப்பத்துடன் நினைவு கூரவேண்டும்.

சுற்றி நின்று வஞ்சகர்கள் விபச்சாரம் செய்வதால்

விண் நோக்கி கூவிக் குரல் எழுப்பி

இறந்துபோன உறவுகளை உச்சாடனம் செய்து

அன்னை தமிழின் பெயரால்

அந்தியட்டி செய்கிறேன்.

 

எனது

இறந்தகால நினைவுகள் நீண்டு விரிகின்றன.

வீரம் ஒருபுறம்,

வஞ்சகம் மறுபுறம்.

உன்னோடு உன்னோடு என்று அறம் பாடியவர்கள்

தருணம் பார்த்து கருவறுத்த

நினைவுகள் மட்டும்,

நெஞ்சுக் கூட்டுக்குள் அடைந்து கிடக்க முடியாமல்

விழுப்புண்ணின் சீழாக வெளி வருகிறது.

 

எனது தாய் நாடு

ஒரு சிறிய நாடுதான்.

இருந்தாலும்

தமிழ் இனம் உலகில் இருப்பதை

வரை படங்களுடன் எட்டு திக்கிலும் முரசறைந்தது.

உரிமைப் புரட்சியின் வெப்பத்தால்

ஒரு கட்டத்தில்

எனது மண் உலைக்களமானது உண்மை.

 

உலைக்களம் கக்கிய கனலுக்குள்

குளித்து வெளிவந்த போதுதான்

மனித மரபணுக்களின் உள்ளிருந்த

அருவருப்பான சூத்திரம் அறிய முடிந்தது.

என் தாய் மண் என்பதால்

எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை.

 

வாழ்ந்து பார்த்த வரையில்

ரஷ்யாவை விட,  ஐரோப்பாவை விட

ஈழநாடு

என்றென்றும் எனக்கு இனிப்பாக இருந்தது.

 

அன்றொருநாள்

காகம் ஒன்று எனது குழந்தையின் தலையில்

எச்சமிட்டதற்க்குக்கூட  காவலுக்கு கட்டளையிட்ட

என் தலைவன் வாழ்ந்த மண்ணில்

நரிகளும் பன்றிகளும்

தமது மேய்ச்சல் காடாக்கி இனப்பெருக்கம் செய்ய

படையெடுக்கின்றன.

 

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்

அப்புவும்,  ஆச்சியும்,  அடுத்தவீட்டு பாட்டியும்

சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன்.

அது மிகையல்ல என்பதை

எனக்கு ஞானம் போதித்த பேரககராதி மூலம்

நிதர்சனமாகவும் உணர்ந்தது கொண்டேன்.

 

எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து,

எனது மண்ணில்

தினமும் வெடிச்சத்தம் காதை பிளக்கும்.

அதற்காக

எவரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கவுமில்லை.

விபரம் புரியாமலுமில்லை.

 

அரசியல் செத்துப்போய்

அரை நூற்றாண்டு ஆகிவிட்டபோதும்,

மனுவியல்

உயிர்ப்புடன் எனது மண்ணில்

நிமிர்ந்து நிற்கக் கண்டேன்.

தலைமையின் பண்பு அதுவென்று

நான் மட்டும் சொல்லவில்லை.

அதற்காக

நாங்கள் பாராட்டு விழா நடத்தவுமில்லை.

 

குழந்தைகள் கூட வெடிச்சத்தத்திற்கு

விளக்கவுரை கூறுமளவுக்கு

விற்பன்னராக இருந்தது

மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்,

ஆனால்,

இப்போ மட்டும்

அது

எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.

 

அப்போதெல்லாம்

துணிச்சல் கூட

எங்களிடம்,  கைமாற்று கேட்குமளவுக்கு

துணிவு

பார்க்குமிடமெல்லாம்

கும்பி கும்பியாக கிடந்தது.

 

நான்கு வருடங்களுக்கு முன்புவரை

எல்லோரைப் போலவும் எங்களுக்கும்

ஆயிரம் பிரச்சினைகள்.

ஆனாலும்

எங்களை அடிமைகள் என்று

எவரும் சொல்லவில்லை.

 

தினமும் எங்கள் மண்ணில்

மண்ணுக்காக

மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

அதற்காக எவரும் பயப்படவும் இல்லை,

பக்கத்து வீட்டில்ப்போய்

பதுங்கிக்கொள்ளவும் இல்லை.

தூக்கத்துக்கென்று

நாங்கள் இரவை தெரிவு செய்ததுமில்லை.

 

இன்று நான்

வேறொரு நாட்டில் உண்டு உறங்கி

பாதுகாப்பாக இருந்தாலும்,

தனிமையாக உணருகின்றேன்.

காவற்காரரை காணவில்லை

எனது கவச குண்டலத்தின்

சத்தமும் கேட்கவில்லை.

அடிக்கடி திடுக்கிடுகிறேன்.

 

இரண்டாயிரத்து ஒன்பதுக்கு முன்

என்னிடம்

அசாத்திய துணிச்சல் நிறையவே இருந்தது.

அது

தலைக்கனமாக கூட இருக்கலாம்.

இன்றைக்கு துணிச்சல் இருந்தாலும்

அசாத்தியம் இருந்த இடம்

வெறிச்சோடி வெற்றிடமாக கிடக்கிறது.

அதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன.

 

ஈழநாட்டை தாயகமாக கொண்டு

அங்கு பிறந்த பூர்வீக தமிழனான எனக்கு,

அங்கு

எனது மண்ணில் வாழ இடமில்லை.

என் உரிமை வஞ்சகர்களின் வாய்ப்பாடுகளால்

முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டது.

இப்போதெல்லாம்

வேடனும்

வெட்டரிவாள்களும் குடிகொண்டுவிட்டன.

 

எனக்கான வழக்குகள் நானில்லாமல்

வெவ்வேறு மன்றங்களில்

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

என் மூலம் தெரியாத பலர்

வேற்று மொழியில் எனது சுதந்திரம் பற்றி

மூச்சு விடமல் காரசாரமாக விவாதிக்கின்றனர்.

எந்த முடிவையும் எட்டிவிட மாட்டார்கள்

என்பது மட்டும்

என்னால் சொல்ல முடியும்.

 

அதுபற்றி பலருக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான்.

சிலர் கவலைப்படுவதுபோல் காட்டுகின்றனர்

உலகத்திலுள்ள அனைத்து பேரரசுகளும்,

ஆட்சியாளர்களும் உள சுத்தியோடு

எமது கையறு நிலையை,

வன் குடியகல்வை

மானசீகமாக பேச மறுக்கின்றனர்.

 

எங்களை

சிங்களவனிடம் தாரைவார்த்துக்கொடுத்த

பிரித்தானிய

எலிஸபெத் மகாராணியார் உட்பட.

 

அது ஏன் என்பது எனக்கும்

எங்களுக்கும் இதுவரை புரியவில்லை.

 

இரண்டு காரணங்கள் இருக்கலாம்,

வரலாற்றின்

படிப்பினையை மூலதனமாகக் கொண்டு

எனது உள் மனது

அடித்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

நான்

அதை மானசீகமாக ஏற்றுக்கொண்டாலும்,

வெளியில் சொல்ல முடியவில்லை,

ஏனென்றால்

கருங்காலிகளுடன்,   கிரந்தம் பேசும்

பெரியவரும் கோபித்துக் கொள்ளுவார்.

 

அவரது ஈகோ'வும் வித்தக காய்ச்சலும்,

என்னையும் எனது சந்ததியையும்

உலுக்கிய உலுக்கும் படுத்திய பாடும்

எங்களைத்தவிர வேறு எவரும்

அனுபவித்து புரிந்திருக்க முடியாது.

ஆனாலும் அவர் இன்றைக்கு

மோசமாக அடிபட்டு குப்புற விழுந்து போனார்

இருந்தும் புரியாத கிரந்தத்தை

இன்னும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.

 

அது சர்வதேச மட்டத்தில்

பலருக்கும் புரிந்த விடயங்கள்தான்.

இன்னுமொரு மூன்று வருடத்திற்கு

பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

அட்டம சாமத்தில்

பட்சி ஒன்று சொல்லிவிட்டு பறந்துவிட்டது.

 

உலகத்தில்

தாழ்வு மனப்பாண்மையை

பகிரங்கமாக சொன்னால்

பெரியவருக்கு மட்டுமல்ல

எவருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கலாம்.

அதனால்

அதை நான் வெளிப்படையாக

சொல்ல விரும்பவில்லை.

 

எனது இனம்

அகதியாக புலம்பெயர்ந்திருந்தாலும,

அமெரிக்காவில்,

ஐரோப்பாவில்,

அவுஸ்திரேலியாவில்,

கனடாவில்

இன்னபிற இருபது நாடுகளில்

அமைதியாக நிம்மதியாக வாழ முடிகிறது.

 

ஆனால்

நிராயுதபாணியான போதும்

எனது சொந்த நாடான ஈழத்தில்

ஒரு மணி நேரம்

சுதந்திரமாக உயிர் வாழ இடமில்லை.

 

நம்பிக்கையுடன்

நான் அகதி என்று தமிழ்நாடு வந்தாலும்,

அதிகம் சிறையிலும்,

சிறைச்சாலை போன்ற கட்டமைப்புக்குள்ளும்

மட்டுமே வாழ முடிகிறது.

ஏனென்று புரியவில்லை.

அதுபற்றி

வெளியில் சொல்லவும் முடியவில்லை.

 

எனது தாய் நாட்டு மண்ணில்

நான் ஏன் வாழமுடியாது?,

 

எனது உறவுகள் நிறைய செத்துப்போய் விட்டன,

மீதமாக இருப்பவர்கள்

ஒன்றாக ஒரு நாட்டில் இல்லை.

கணவன் ஒரு நாட்டில்

மனைவி மற்றொரு நாட்டில்

குழந்தைகள் வேறு கண்டத்தில்.

 

இதை பெரியவருக்கும் சிலர் தெரியப்படுத்தினர்

அவர்

தனது குடும்பமும் பல துருவங்களாகி

தீர்க்க முடியாத சிக்கல் இருப்பதாக

கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

 

பஞ்சாயத்து காரர்களை நம்பி ஏமாந்து போனோம்.

நான் எனது மண்ணில் வாழவேண்டும்.

ஏன் வாழ முடியாது?

 

அந்த உண்மை தெரிந்தாகும் வரை..

அறிந்தாகும் வரை..

அங்கு அமைதி நிலை

தோன்றும் என்று

அகதியாக

நாட்டுக்கு வெளியில் வசிக்கும் நான்

ஒருபோதும் நம்பவில்லை.

 

ஏனென்றால்

நான் ஒரு பொழுது

மவுனமாக இருந்துவிட்டாலே

அங்கு

அமைதி என்று கதை கட்டிவிடுவர்.

நான் சுதந்திரவாதியாக உணரும்வரை

நான் அமைதியாக இருக்க முடியாது.

 

என் தாய் மண் சுடுகாடாகி கிடக்கிறது.

எஞ்சிய உறவுகள் கழுகுகளின் கட்டுப்பாட்டில்

ஊசலாடுவதை ஊடகங்கள் சொல்லுகின்றன.

உள்ளம் எரிதனலாகி புழுக்கம் மிஞ்சிவிட்டது.

எமிஞ்சிய உறவினர்கள்

தினமும் மரணவதை படுவதை

எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்?

 

நான் சந்திப்பவர்களும்

எனது கருத்தை ஒத்தவர்களாகவே

இருக்கின்றனர்.

 

எங்களுக்கு

இது ஒரு மிகப் பெரிய பின்னடைவு,

இருந்தும் காலப்போக்கில்

கட்டாயம் நிமிர்த்தப்படும்

என்றுதான் உறுதியாக நினைக்கிறேன்.

 

எங்கள் சுதந்திரத்திற்கான அத்திவாரமும்

திட்டங்களும்

மிக உறுதியாகவே போடப்பட்டிருந்தன.

அது எனக்கு நன்கு தெரியும்.

அந்த அனுமானங்கள் மட்டும்தான்

என்றைக்கும்

இலகுவானதாக எனக்குப் படுகிறது.

அதுபற்றி வேறு பலரும் அறிந்திருக்கக்கூடும்.

 

மற்றவர் வெளியில் சொல்லாவிட்டாலும்

எல்லோரும்

உள்ளூர நன்றாகவே அறிவர்.

 

என் தாய் மண்ணில்

நான் ஏன் வசிக்க முடியாது என்பதற்கான

மூல முகாந்திரம்

எனக்கு தெரிந்தாகவேண்டும்.

அதுவரை

நான் எதையும் எதற்காகவும்

சாதாரணமாக விட்டுவிட முடியாது.

 

எனது

தாய் மண்ணில் அமைதி பிறக்கும்வரை,

நான் மட்டுமல்ல

எனது சந்ததி

தூங்கிக்கிடக்குமென்று நான் நினைக்கவில்லை.

 

2009ல் பெருத்த இனப் படுகொலையுடன்

அனைத்தும் நிறைவுக்கு வந்தது என்றனர்.

இந்தியா

ஒரு இலட்சம் வீடு கட்டி கொடுக்க இருப்பதாக

செய்தி வந்தது

செய்தியை படித்த வழிப்போக்கன்

அடக்க முடியாமல் சிரித்தான்,

எனக்கு ஒன்றும் புரியவில்லை

ஏனென்று கேட்டேன்

இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு

வீடு இல்லை என்ற உண்மையை சொன்னான்.

 

இந்திய அரசியல் என்னை புல்லரிக்க வைத்தது.

 

நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது.

அயலவர்கள்,  அடுத்த வீட்டுக்காரர்

பஞ்சாயத்து செய்து தீர்வு சொல்லுவார்கள்

என நம்பினேன்,

ஆனால் அவர்கள்

ஆயிரம் மேடை அமைத்து விசாரித்தபோதும்

எங்களில்

செத்துப்போனது எத்தனைபேர் என்பதுகூட

அவர்களால் அறிய முடியவில்லை.

 

எதையெல்லாமோ புலனாய்வு செய்து

தேடுவதாக சொன்னர்கள்,

ஒன்றையும் புடுங்கிவிடவில்லை.

அவர்கள்

எனது எரிந்த வீட்டினுள் கிடந்த

பூனையின்

மயிரை மட்டும் புடுங்கிக்கொண்டிருக்கின்றனர்

என்பதை அறிந்து வெறுத்துப்போனேன்.

 

கயிறு இறுகிக்கொண்டிருப்பதாகவே

நான் உணருகிறேன்.

காப்பாற்றும் நோக்கோடு எவரும் இல்லை.

எங்களுக்கான நேரமும் ஒன்று உண்டு.

அதனால்

அந்த மண்ணில் மீண்டும் அமைதியின்மை

ஏற்படலாம்.

அந்த அமைதியின்மை

கருக்கட்டாமல் செய்யவேண்டிய பொறுப்பு

என்னுடையதல்ல என்பதில்

என்றைக்கும் நான் உறுதியாகவே உள்ளேன்.

 

அமெரிக்க பூர்வீக குடிகள்போல,

அவுஸ்திரேலிய பழங்குடிகள்போல,

"பூமராங்" குடன் நான் விட்டேந்தியாக

இருந்திருந்தால்.

நாற்பது ஆண்டுகள்

என்னைப்பற்றி

எனது இனத்தின் அசைவுகள் பற்றி

எதுவும் வெளியில் தெரிந்திருக்காது.

 

அமெரிக்கா,

அவுஸ்திரேலியா

எப்படி வெள்ளையர்களின் சொந்த நாடு என

வரலாறு தெரியாதவர்களால்

நம்பப்படுவதுபோல,

இலங்கையும் சிங்களவனின் நாடு என்று

நம்பப்பட்டிருக்கும்.

பாரதியார்மீதும் எனக்கு வருத்தம் உண்டு.

 

சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்,

என்று எதுகை மோனையுடன்

சிலாகித்துவிட்டு போய்விட்டார்.

சிங்களவன் நாளை

வரலாற்று சான்றாக அதை தூக்கிப்பிடிக்க கூடும்.

 

1948 களில் பிரித்தானியா செய்த தவறு

அது எனக்கும் தெரியும்.

பிரித்தானியாவுக்கும் தெரியும்.

ஏன்

இந்தியாவுக்கும் தெரியும்.

முழு உலகத்துக்கும் இப்போ தெரிகிறது.

 

நியாயம் என்பக்கம் இருக்கும்வரை

நான் எனது இருப்பிடத்திற்காக

மண்ணுக்காக போராடிக்கொண்டே இருப்பேன்.

அது எனது அடிப்படை உரிமை.

மறுப்பவர்கள்

எனக்கும் மனிதாபிமானத்துக்கும்

எதிரியாகிக்கொண்டே இருப்பர்.

 

நான் மவுனமாக கிடப்பதென்றால்

மரம் தடியாக பிறந்திருக்கவேண்டும்.

அடி வாங்கிக்கொண்டு வாழுவதாக இருந்தால்

நாயாக பிறந்திருக்கவேண்டும்.

நான் அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்றால்

இந்தியாவில் பிறந்திருக்கவேண்டும்.

 

நான் மூடத்தனமாக மண்புழுவாக

இருந்தால்

சிங்களவனுக்கு நல்லது,

ஆனால்

எனக்கு அது நல்லதல்ல.

 

எங்கள் உரிமையை 1950 களில்

நாங்கள் அரசியல் ரீதியாக தேடியபோது

எதையும் தரமுடியாது என்றார்கள்.

வந்தேறியான சிங்களவர்கள்.

 

அவன் ஏன் இப்படி பேசுகிறான்

பின்னணி எதுவாக இருக்கும் என்று

பிரமித்துப்போனேன்.

அன்றைக்கும் இந்தியாதான்

பின்னுக்கு நின்றதோ என்று சந்தேகிக்கிறேன்.

 

ஜனநாயக வழியில் திரண்டபோது

பின்னால் அடித்தார்கள்.

யார் தடி எடுத்து கொடுத்தது என்பதை

நான் அப்போ கவனிக்கவில்லை.

 

காந்திய வழியில் போராடியபோது

வெட்டினார்கள்.

வீட்டை எரித்தார்கள்.

இனக்கலவரம் என்று பெயர் சூட்டி

அரசியல் செய்தனர்.

அப்போதான் எனக்குள் ரசாயினம் சுரந்தது.

 

ஆத்திரப்பட்போது

கொதிக்கும் தார் பீப்பாவுக்குள்

தூக்கி போட்டார்கள்.

அம்மாவுக்கும் அக்காவுக்கும்

சூட்டுக்கோல் காய்ச்சி

நெற்றியிலும் மார்பிலும் சிங்கள ஶ்ரீ சுட்டார்கள்.

பிறப்புறுப்பில் சிங்க கொடியை நாட்டினார்கள்.

 

அப்பாவும் மாமாவும் திமிறியபோது

அவர்களை

துப்பாக்கியால் சுட்டு கொன்று

தெருவில் ரயர் போட்டு கொளுத்தினார்கள்.

 

எங்களுக்கும் கோபம் வந்தது.

 

சிங்களவர்கள்

இந்தியா கலிங்கத்திலிருந்து

வந்திறங்கியதாக படித்திருக்கிறேன்.

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர்

காரியவாசாம்,

அந்த உண்மையை ஆதாரபூர்வமாக

இந்தியாவுக்கு

உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

 

வந்தேறியான சிங்களவன்

முதலாளி மூர்க்கத்துடன் அடாவடி செய்கிறான்.

அப்படியானால்

நாங்கள் ஏன் எங்கள் பூர்வீக மண்ணுக்காக

துப்பாக்கி தூக்கக்கூடாது?

ஏன் சுதந்திரமாக வாழமுடியாது?

 

சேர்ந்து வாழும்படி

வம்படியாக வழக்குரைக்கின்றனர்.

 

அம்மாவின் மார்பில் குறி சுட்டான்.

அக்காவின் பிறப்புறுப்பில் கொடியேற்றினான்.

அப்பாவையும் மாமாவையும்

கொதிக்கும் தார் பீப்பாவுக்குள் தூக்கி போட்டான்.

தங்கையை கற்பழித்தான்.

அவனுடன் சேர்ந்து வாழுவது என்றால்

நான் எதுவாக கருதப்படுவேன்?

 

உரிமை இருக்கிறது என்பதால்

துப்பாக்கி தூக்கினோம்.

தற்காப்புக்காக

என்று சொல்ல வரவில்லை

எதிர்த்து போராடுவதற்காக

என்பது உண்மையே.

 

"மணலாறு"  "வெலி ஓயா" ஆக்கப்பட்டபோது

எனது கழுத்து அறுக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

எனது கல்வி தரப்படுத்தப்பட்டபோது

நான் முட்டளாக்கப்படுவதை உணர்ந்தேன்.

புத்தர் சிலைகளை

எனது முற்றத்தில் நாட்டியபோது

எனது கடவுளை கடலில் தேடினேன்.

வீடு பறிக்கப்பட்டபோது

அகதி ஆக்கப்பட்டதாக மனமார உணர்ந்தேன்.

 

மீண்டும் 2009ல் அம்மா,  அக்கா,  தங்கை

கற்பழிக்கப்பட்டபோதும்

எனது குழந்தைகளை கழுத்தறுத்து வீசிய பின்னும்,

சிங்களவனுடன் சேர்ந்து வாழும்படி

இந்தியா சொல்லுகிறது.

எனது வாழ்க்கையை தீர்மானிக்க

எனக்கு ஏன் உரிமையில்லை.

 

சிங்களவனைவிட

சிங்களவனுடன் சேர்ந்து வாழச்சொல்பவன்

எந்தளவுக்கு கொடியவன்.

 

நாங்கள் சிகிரியாவில்,

அனுரதபுரத்தில்,

மாத்தறை,  ஹம்பாந்தோட்டையில்

இடம் பிடிக்க அடாவடித்தனத்துடன்

நிலம் ஆக்கிரமிக்கவில்லை.

நாங்கள் வாழ்ந்த

வடக்கு கிழக்கு மண்ணில்

நிம்மதியாக வாழ விடுங்கள்

என்றுதான் கேட்டோம்.

இது எங்கள் மண்

இன்னும் கேட்போம்.

இனியும் கேட்போம்.

 

நாங்கள் தோற்றுப்போனதாகவே

காட்டப்படுகிறது.

நாங்கள் தோற்றுப்போனதாகவே

இப்போதைக்கு இருக்கட்டும்.

நாங்கள் வெல்லும்வரை

தோற்றுப்போனதாக நினைக்கப்போவதில்லை.

 

-ஊர்க்குருவி-

டாஸ்மாக் தமிழ் 4

$
0
0

tas_boy_1

 

“மின்வெட்டு நாளில் இன்று மின்சாரம் போல வந்தாயே…..“ என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.

“வாய்யா வா….  என்ன லவ் மூட்ல இருக்கற போலருக்கு ? “

“எனக்கு ஏது லவ்வு ஜவ்வெல்லாம்…. ? நைட் 11 மணி வரைக்கும் பார்ல மல்லுக்கட்டிட்டு வெளியில வரும்போது எந்த ஃபிகர் எனக்காக உக்காந்திருப்பா…. ?  வாரத்துல ஏழு நாளும் வேலை. நானா பாத்து லீவ் எடுத்தாத்தான் உண்டு. வயித்தெரிச்சலை கௌப்பாதீங்கப்பா…. நான் என்ன உங்களை மாதிரி பத்திரிக்கை ஆபீஸ்லயா வேலை பாக்கறேன்.. பொண்ணுங்களை துரத்தி துரத்தி தொல்லை பண்ணி, செருப்பால அடிக்கற வரை தொந்தரவு பண்ணி, கம்ப்ளெயின்ட் குடுத்து, அரெஸ்ட் ஆயி அப்புறமும் வேலை பாக்கறதுக்கு ? “

“என்னய்யா வந்ததும் வராததுமா டென்ஷன் ஆகற… சன்டிவி ராஜாவத்தான் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களே… இன்னும் வேலைபாக்கறான்னு சொல்ற ?“ என்றார் கணேசன்.

“சஸ்பென்ட் செஞ்சா என்ன ?  வீட்ல உக்காந்துக்கிட்டே வேலை பாக்கறான்.  எல்லாம் போன்ல நடக்குதுன்ணே…“

Karunanidhi

“ஏம்ப்பா கேடி ப்ரதர்ஸ் பத்தி உனக்குத் தெரியாதா… அவனுங்களுக்கு ஏதுப்பா சூடு சொரணையெல்லாம்.  உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணுனவனுங்கதானே…  திமுக காசுல சன் டிவி ஆரம்பிச்சுட்டு, அந்த திமுகவுக்கு எதிராவே வேலை பாத்ததில்லையா இவனுங்க ? அழகிரியை ரவுடின்னு நியூஸ் போட்டுட்டு, அந்த அழகிரி கூட பல்லை இளிச்சுக்கிட்டு நிக்கலையா இவனுங்க ? இவனுங்களைப் பத்தி ஏம்பா பேசி டைம் வேஸ்ட் பண்ற ? “

“இல்லன்ணே…  கேப்டன் டிவியிலயும் இதே மாதிரி ஒரு பஞ்சாயத்து.  அங்க வேலை பாக்கற பொண்ணுக்கிட்ட அரவிந்த்னு ஒரு எடிட்டர் ராஜா மாதிரியே எஸ்எம்எஸ் அனுப்பறது, லவ் பண்றேன்னு சொல்றதுன்னு திரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கார்.  அந்தப் பொண்ணு இந்த வேலை என்கிட்ட வச்சுக்கிட்டன்னா செருப்பு பிஞ்சுடும்னு சொல்லிடுச்சு.

ஆனாலும் நம்ப அரவிந்த் விடல.  தொடர்ந்து அந்தப் பொண்ணுக்கு தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருந்துருக்கார். ஒரு கட்டத்துல அந்தப் பொண்ணு தன் வழிக்கு வரலன்னதும், அந்தப் பொண்ணை எப்போப்பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கறது.  ஒழுங்கா வேலை செய்யலன்னு சொல்றது.  கம்ப்யூட்டர் முன்னாடி அந்தப் பொண்ணு உக்காந்துருந்தா, ஆபீஸ் செலவுல பேஸ்புக் பாக்கறியான்னு திட்றதுன்னு தொடர்ந்து தொந்தரவு பண்ணியிருக்கார். ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம அந்தப் பொண்ணு, நேரா சுதீஷ்கிட்டயே விஷயத்தை கொண்டு போயிடுச்சு.  விசாரணை நடத்தி உண்மை என்னன்னு கண்டு பிடிச்சதும், உடனே அந்த ஆளை வேலையை விட்டு தூக்கிட்டாங்க.  அவன் மனுஷன்.

ஆனா, பெரிய கேடி கலாநிதி, சன் டிவி ராஜா விஷயத்துல இன்னும் விசாரணைன்னு மாவாட்டிக்கிட்டு இருக்கார். இது வரைக்கும் உருப்படியா ஒரு நடவடிக்கை எடுக்கல. அதான் கோபம்.“ என்று சொல்லி விட்டு டாஸ்மாக் தமிழ் அவனே வோட்கா பாட்டிலை திறந்து கணேசனிடம் கொடுத்தான்.

“மச்சான் அண்ணனுக்கு வாங்கிட்டு வந்துட்ட… எங்களுக்கு பீர்    எங்க ?“ என்றான் பீமராஜன்.

“கீழ ஃப்ரீஸர்ல வச்சுருக்கேன் மச்சான்.  இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு வா “ என்று காலை நீட்டி அமர்ந்தான் தமிழ்.

“சொல்லு மாமா என்னென்ன தகவல் கெடச்சுது ? “ என்று ஆர்வமாகக் கேட்டான் வடிவேலு

“இப்போதைக்கு எப்படியாவது கனிமொழியை எம்.பியாக்கிடனும்ன்றதுல கருணாநிதி குறியா இருக்கறார்.“

DSC_0420

“கனிமொழி கடலூர் இல்ல தூத்துக்குடியில போட்டியிடப்போறாங்கன்னு திமுக வட்டாரத்துல பேச்சு அடிபடுதே“ என்று உள்ளே புகுந்தான் பீமராஜன்.

“தேர்தல் அடுத்த வருஷமா, இந்த வருஷமான்னு தெளிவாத் தெரியலை மச்சான்.  ஆனா, எம்.பின்ற அந்தஸ்து, கனிமொழி 2ஜி வழக்குலேர்ந்து வெளியில வர்றதுக்கும், குடும்பத்துக்குள்ள சண்டையைத் தவிர்க்கறதுக்கும் உதவும்னு நம்பறார் கலைஞர்.  கனிமொழி இப்போ எம்.பியா இருக்கறதால, கட்சியில பதவி வேணும்னு ரொம்ப வலியுறுத்தல.  ஆனா, எம்.பி பதவி போயிடுச்சுன்னா, சிஐடி காலனியில தலைவர் காலே வைக்க முடியாது.  காகிதப்பூ கதாநாயகி கலைஞரை ஒரு வழி பண்ணிடுவார்.  இதையும் மனசுல வச்சு ரொம்ப யோசிக்கிறார். “

“சரி ராஜ்யசபா எம்.பியாக்கறதுக்கு திமுகவுக்கு 34 எம்எல்ஏ வேணுமே.. அது இப்போ இல்லையே… ? “ என்றான் வடிவேலு.

“தம்பி விஜயகாந்தின் கட்சியை ஜெயலலிதா அழிக்கப்பார்க்கிறார்னு கூட்டத்துல பேசுனாரே ஞாபகம் இல்லையா ?  விஜயகாந்த் கட்சி அழியறத, எல்லாரையும் விட அதிகம் விரும்பறவர் கலைஞர்தான். அவர் திடீர்னு கேப்டன் மேல பாசத்தோடு இப்படிப் பேசறது, உள்குத்தோடதான்னு உங்களுக்கு புரியலையா ? “

“சரி… மகள் பாசத்தை விட மச்சான் பாசம் பெரிசில்லையா தமிழ் ?  மச்சானை எம்.பியாக்கலன்னா கேப்டன் வீட்ல நிம்மதியா சோறு சாப்பிட முடியுமா ? “ என்று தன் பங்குக்கு வரலாற்று சிறப்பு மிக்க சந்தேகத்தை எழுப்பினான் ரத்னவேல்.

“மகளை எம்.பியாக்கலன்னா கலைஞருக்கு சிஐடி காலனியில சோறு இல்ல.  மச்சானை எம்.பியாக்கலன்னா கேப்டனுக்கு வீட்ல சோறு இல்ல… என்னதான் பாஸ் பண்றது ? “

“சரி உதயநிதி ஏன் ஹம்மர் காரை திடீர்னு சரண்டர் பண்ணாரு ? “ என்று அவன் சந்தேகத்தை கிளப்பினான் பீமராஜன்.

“சிபிஐ அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டுக்கு போயி, இந்த காரை கைப்பற்றுனப்போ, தாம் தூம்னு குதிச்சாங்க.  அதுக்குப் பிறகு, தொடர்ந்து உதயநிதியை சிபிஐ விசாரிக்கும்னு தெரிஞ்சு, ஸ்டாலின் ரொம்பவே பயந்து போயிட்டாரு.  தன் மகனுக்கு ஏதாவது ஆயிடாம அவரை காப்பாத்துங்கன்னு, உயர் உயர் அதிகாரி ஜாங்கிட்கிட்ட பேசுனதைப் பத்தி நாம ஏற்கனவே விவாதிச்சிருக்கோம்.  இனிமேலும் இந்தக் கரை வெச்சுருந்தா, சிக்கல்னு முடிவு பண்ணி காரை ஒப்படைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.  கருணாநிதியை விட தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதில் ஸ்டாலின் விஞ்சி நிற்கிறார். “

“சூப்பர் டைட்டில் மாமா…  குடும்பத்தை காப்பாற்றுவதில் விஞ்சி நிற்பது கலைஞரா ஸ்டாலினா ன்ற தலைப்புல பட்டிமன்றம் வச்சா சூப்பரா இருக்கும்“ என்றான்

“ஒரு அணிக்கு தலைவர் சுப.வீரபாண்டியன். மற்றொரு அணிக்கு தலைவர் குஞ்சாமணி“ என்றான் தமிழ்.

“நடுவர் யாரு ? “ என்றார் இரண்டாவது ரவுண்டை முடித்திருந்த கணேசன்.

“நடுவர் வேற யாருன்ணே… திமுக நிலைய வித்வான்  லியோனிதான். “

“சரி.. அதிமுகவுல என்ன நடக்குதுன்னு சொல்லுப்பா“ என்றார் கணேசன்.

“மச்சான் அண்ணன் ரெண்டு ரவுண்டு முடிச்சுட்டாரு.. இந்நேரம் பீர் கூலிங் ஆயிருக்கும். கீழ போயி எடுத்துட்டு வா“ என்று பீமராஜனை பார்த்து சொல்லி விட்டு, தொடர்ந்தான் தமிழ்.

“சட்டசபை கூட்டத்தொடர் முடிஞ்சுடுச்சு.  இனி எப்போ வேணாலும் அமைச்சரவை மாற்றம்னு எங்கப் பாத்தாலும் கிலி பிடிச்சு அலையறாங்க. அப்புறம் நாம போனவாட்டி துக்ளக் ரமேஷ்னு ஒரு பத்திரிக்கையாளரைப் பத்தி பேசுனோம் இல்லையா.. இந்தத் தகவல் ஒரு சில அமைச்சர்கள் காதுக்கு போயிருக்கு.  அவங்க அந்த ரமேஷ் பத்தி மேலும் விவாதிச்சுருக்காங்கன்னு அவங்க பி.ஏ சொன்னார்.  அவர் நெறய்ய தகவலை சொல்லுவார்“

“சரி என்ன சொன்னாருன்னு சொல்லுய்யா.. “ என்றார் பொறுமை இழந்த கணேசன்.

“அண்ணே தெனமும், இந்த ரமேஷுக்கு விலை உயர்ந்த ஸ்காட்ச் பாட்டில் ஒன்னு குடுத்துடனுமாம்.  ஸ்காட்ச் வாங்கித் தந்தா நமக்கு வேண்டியதை பெரிய எடத்துல சொல்லுவாருன்னு பல அதிகாரிங்க இந்த ஆளு கேக்கறத வாங்கித் தர்றாங்க.  சென்னை மாநகரத்தோட கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதியெல்லாம் ரமேஷுக்கு நெருக்கமான நண்பர்கள். இதையெல்லாம் விட முக்கியமா, மாசா மாசம், ரமேஷுக்கு சம்பளம் மாதிரி மாமூல் குடுக்கறது யார் தெரியுமா ? அண்ணன் சைதை துரைசாமிதான்.

911790_10151561774908911_1202467980_n

எப்போதும் பணத்தின் மேலதான் ரமேஷுக்கு. இப்போ அதிமுக ஆட்சியில மட்டும் ரமேஷ் வசூல் ராஜாவா இல்ல…  கடந்த ஆட்சியில உயர்கல்வித்துறை அமைச்சரா இருந்த பொன்முடிகிட்ட இவர் வசூல் செஞ்ச தொகை மட்டும் பல லட்சங்கள் இருக்கும்னு சொல்றாங்க. பொன்முடியைத் தவிர்த்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கிட்டயும் ஏகப்பட்ட தொகையை வசூல் செஞ்சதா ஐ.பெரியசாமி பி.ஏ ராஜா அடிக்கடி சொல்லுவாராம் பாஸ். “

“இவரை அதிமுக ஆட்சியோட காமராஜ்னு சொல்லலாமா தமிழ் ? “ என்று ஒரு முக்கிய சந்தேகத்தை எழுப்பினான்  வடிவேலு.

“காமராஜை யார் கூடவாவது ஒப்பிட முடியுமா மச்சான்.. அவருக்கு நிகர் அவர் மட்டுமே.  இந்த மாதிரி மாமூல் வாங்கறது, ஓசியில சரக்கு வாங்கறதெல்லாம் சாதாரண ஆளுங்க செய்யறதுப்பா.   காமராஜோட ரேஞ்சே வேற.  சாதிக் பாட்சா மட்டும சாகாம இருந்திருந்தா, காமராஜ் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆயிருப்பார்… என்ன பண்றது.. சரி விஷயத்துக்கு வர்றேன் மச்சான்.

இந்த துக்ளக் ரமேஷுக்கு நெருக்கமான நண்பரா இருந்தவரு மணிச்சுடர் ராமதாஸ்.  இவரை, ஆற்காடு வீராசாமியோட அடிமைன்னு சொன்னா அது மிகையாகாது.  ஆற்காடு வீராசாமிக்காகவே, கடந்த ஆட்சியில எதிரொலின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சு நடத்தினார்.  அந்த எதிரொலி பத்திரிக்கையோட மொழி, சரோஜா தேவியை விட மோசமா இருக்கும்.  ஜெயலலிதாவை அவ்வளவு தரம்தாழ்ந்து, மோசமா விமர்சிச்சு எழுதுவாங்க. அந்தப் பத்திரிக்கை நடத்திக்கிட்டிருந்த மணிச்சுடர் ராமதாஸுக்கு, சென்னை தூர்தர்ஷன்ல வேலை பாத்த மாதிரி பென்ஷன் வாங்கித்தந்தது, நம்ப ரமேஷ்தான்.

Tuqlaq_Ramesh

ஜெயலலிதாவோடு பேசிக்கொண்டிருக்கும் துக்ளக் ரமேஷ்

அது மட்டும் இல்லாம, மணிச்சுடர் ராமதாஸோட மகள் இளவரசிக்கு, செய்தி விளம்பரத்துறையில ஒரு பதவி வாங்கிக் கொடுத்திருக்கார் ரமேஷ்.  அந்த இளவரசி, செய்தி ஒளிபரப்புத் துறை சார்பா, வணிகவரித்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியா இருக்காங்க. “

“வேலை வாங்கித் தர்றது நல்ல விஷயம்தானே தமிழ் ? “ என்றார் கணேசன்.

“வேலை வாங்கித் தர்றது நல்ல விஷயம்தான்.. ஆனா யாருக்கு வாங்கித் தர்றோம்னு இருக்குல்ல.. ?  ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய எல்லாருக்கும் உரிமை இருக்கு. ஆனா எதிரொலி பத்திரிக்கை எழுதியதையெல்லாம் எழுத்து வகையிலயே சேத்துக்க முடியாது. அப்படி தரக்குறைவா ஜெயலலிதாவை விமர்சனம் செய்த ஒரு நபரோட மகளுக்கு வேலை வாங்கித் தர்றதை எப்படிண்ணே ஏத்துக்க முடியும் ? “

“இவன் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா ? “

“அது மட்டும் இல்லன்ணே.  இவன் வேலை செய்யற பத்திரிக்கையான துக்ளக் ஆசிரியர் “சோ”[வுக்கு வேணும்னு சொல்லி, பல காவல்துறை உயர் அதிகாரிகள்ட சொல்லி, பர்மா பஜார்லேர்ந்து ஸ்காட்ச் பாட்டிலும் வாங்கியிருக்கார் ரமேஷ். “

“சரி இந்த வார ஜாங்கிட் செய்தி சொல்லு மச்சான்.. “ என்று தமிழைப் பார்த்து கண்ணடித்தான் பீமராஜன்.

“அது எப்படி நான் வாராவாரம் ஜாங்கிட் செய்தி சொல்லுவேன்னு நெனைக்கிற“

“அந்த ஆளு என்ன பண்ணாலும் உனக்குதானே மச்சான் மொதல்ல தெரியுது ? சும்மா நடிக்காத. சொல்லு “

“ஜாங்கிட் தொழில் அதிபர் ஆகலாம்னு முடிவு பண்ணியிருக்கார் மச்சான்“

“என்ன மச்சான் சொல்ற.. ?  அவர் காவல்துறை உயர் அதிகாரிதானே… என்ன திடீர்னு தொழில் அதிபர் ஆயிட்டாருன்ற ? “

“அவர் மகன் சவாய் ஜாங்கிட் பேர்ல ஒரு கம்பெனி ஆரம்பிக்கறதுக்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில இருக்கார். “

“அவரு எதுக்கு மச்சான் மகன் பேர்ல கம்பெனி ஆரம்பிக்கிறார் ? “

Jaffer_Jangid

“சம்பாதிச்ச லஞ்சப்பணத்தையெல்லாம் வெள்ளையாக்க    வேணாமா ? அதுக்குத்தான் ஆரம்பிக்கிறார். அவருகிட்ட எப்படிப்பாத்தாலும் 500 கோடியாவது இருக்கும்றதுதான் காவல்துறை வட்டாரத்துல இருக்கற பேச்சு“

“அவருக்கிட்ட அவ்வளவு இருக்குமா ? “ என்ற வியப்போடு கேட்டான் வடிவேலு.

“அவரை யாருன்னு நெனைச்ச… ?  சமீபத்துல சிபிஐ வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பா விசாரணை நடத்தினாங்க தெரியுமா ? அந்த விசாரணையில பல முக்கிய பிரமுகர்களோட கார் பறிமுதல் செய்யப்பட்டது.  அதுல பறிமுதல் செய்யப்பட்ட கார் ஸ்டாலினோட பினாமி, ராஜா சங்கரோடது.  அந்த ராஜா சங்கரோட கார் பறிமுதல் செய்யப்பட்டதும் துடிச்சார் பாருங்க ஜாங்கிட்… வேலையே போயிருந்தா கூட அப்படித் துடிச்சிருக்க மாட்டார். அப்படி துடிதுடிச்சுப் போயிட்டார். அவருக்கும் ராஜா சங்கருக்கும் ஏகப்பட்ட பண பரிவர்த்தனைகள் இருக்கு. பல பேருக்கு இது தெரியாது. “

“சரி….  இவ்வளவு மோசமான ஆளா இருந்தும் இவரு மேல இந்த ஆட்சில கூட எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன் ? “ என்று தன் சந்தேகத்தை சபைக்கு கொண்டு வந்தான் ரத்னவேல்.

“ஜாங்கிட்டுக்கு ஆள் இல்லாத இடமே இல்லை மச்சான்.  இப்போ நடக்கற கவர்மென்ட்ல கூட, ஜாங்கிட்டுக்கு அத்தனை தகவலையும் சொல்றதுக்கு ஆளு இருக்கு.  ஜாங்கிட்டை ஒரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னு சும்மா சொல்லலை. “

“இந்த கவர்மென்ட்ல யாருப்பா இவருக்கு ஆளு ? “ என்று ஆச்சர்யப்பட்டான் ரத்னவேல்.

“முதலமைச்சரோட செயலாளரா இருக்காரே ராம் மோகனராவ்.  அவரோட மகள் கல்யாணம் சமீபத்துல திருப்பதியில நடந்துச்சு. உங்க பத்திரிக்கையிலதான் அதைப்பத்தி கவர் ஸ்டோரியே பண்ணாங்க. அந்த திருமணத்துக்குப் பிறகு ரிசெப்ஷன், போன வாரம் தாஜ் ஹோட்டல்ல நடந்துச்சு.  அந்த ரிசெப்ஷனுக்கு மொத்தம் 60 லட்ச ரூபாய் செலவாயிருக்கு.  மொத்த செலவையும் ஏத்துக்கிட்டது ஜாங்கிட்.  இவரை மீறி எப்படிப்பா ஜாங்கிட் மேல நடவடிக்கை எடுத்துடுவாங்க ?  ஜாங்கிட்டுக்கு எதிரா உளவுத்துறையில என்ன அறிக்கை வருது, ஜாங்கிட் மேல வந்த புகார்களை எப்படி மூடுவது, ஜாங்கிட்டைப் பத்தி தலைமைச் செயலகத்தில் நடக்கும் உயர் அதிகாரிகள் கூட்டத்துல என்ன பேசுவாங்கன்னு எல்லாத் தகவலையும் சொல்றாருப்பா ராம் மோகன ராவ்.  அதுக்கு கைமாறுதான், திருமண வரவேற்பு செலவு. “

7631PMay-15---F-BIG

Rama_Mohana_r2ao_IAS

ராம் மோகன ராவ் ஐஏஎஸ்

“இந்த ஆளைப் போயி ஜெயலலிதா எப்படிப்பா நம்பறாங்க ? “

“இந்த ராம் மோகன ராவ் மேல, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு 2002ம் ஆண்டில் உத்தரவிட்டதும் இதே ஜெயலலிதாதான்.  இன்னைக்கு முதலமைச்சரோட செயலாளரா நியமிச்சு அழகு பாக்கறதும் இதே ஜெயலலிதாதான். “

“சரி அண்ணன் சைதையார் எப்படி இருக்காரு… ?  அந்த அம்மா இவரு மேல கோவமா இருக்கறதா சொன்னியே… இப்போ எப்படி மச்சான் இருக்காரு ? “என்று அடுத்த மேட்டருக்கு தாவினான் வடிவேலு.

“இன்னும் இந்த அம்மாவுக்கு சைதையின் திருவிளையாடல்கள் முழுமையாத் தெரியல. அதிமுக விருகம்பாக்கம் பகுதி செயலாளரா இருப்பவர் வி.என்.ரவி.  இவங்க அண்ணன் விருகை வி.என்.கண்ணன்.  இந்த கண்ணன், தமிழ்த்திருநாடு நிலம், வீடு, மனைத் தரகர்கள் நலச்சங்கம்னு ஒரு சங்கம் வைச்சுருக்கார்.  இந்த ஆளுக்கு சென்னை நகரத்துல, வழக்குல சிக்குன சொத்துக்கள், வில்லங்கத்துல இருக்கற சொத்துக்கள் பத்துன எல்லா விபரங்களும் தெரியும். சைதை துரைசாமியோட முழு நேர வேலையே நில அபகரிப்புன்றதுனால, இவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நெருக்கமா ஆயிடுச்சு.  இந்த கண்ணன், கடந்த ஆட்சியில ஸ்டாலினோட ரொம்ப நெருக்கமா இருந்தவர்.  ஆட்சி மாறுனதும், அதிமுக பக்கம் வந்துட்டார்.  இந்தக் கண்ணன், ரவி மற்றும் சைதை துரைசாமியோட கூட்டணிதான் சென்னை மற்றும் புறநகர்ல பல சொத்துக்களை ஆட்டையப் போடுது.  இந்த விபரம் நமக்கே தெரியும்போது, ஒரு மாநிலத்தோட முதலமைச்சரா இருக்கற ஜெயலலிதாவுக்குத் தெரியாதா ?  ஆனா அந்த அம்மா ஏன் கம்முனு இருக்குன்னு யாருக்கும் புரியலை “

DSC_0161

“வேற போலீஸ் செய்தி இல்லையா மாமா ? “ என்று இரண்டாவது பீரை வாயை வைத்து உடைத்து விட்டுக் கேட்டான் வடிவேலு.

“லஞ்ச ஒழிப்புத் துறையில அடுத்த லே அவுட் போட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு முன்னாடி போட்ட லே அவட்டுக்கு விஜிலென்ஸ் நகர்னு பேர் வச்சு, அதுல அத்தனை ப்ளாட்டுகளும் வித்து தீந்த பிறகு, இப்போ தாம்பரம் தாண்டி இருக்கற சோமங்கலத்துல அடுத்த லே அவுட் போடப்போறாங்க.

இந்த லே அவுட்டுக்கான திட்டத்தை இணைந்து செய்வது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜி.சம்பந்தம்“

“டிஎஸ்பியும் கூடுதல் டிஜிபியும் எப்படி கூட்டணி வைப்பாங்க ? “ என்று சந்தேகத்தை எழுப்பினான் பீமராஜன்.

“மச்சான். இந்த சம்பந்தம் இருக்கறாரே… 1987ல் உதவி ஆய்வாளரா வேலைக்கு சேந்தவரு.  1998ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தார்.  இவரை ஒரு சின்ன ஜாங்கிட்னே சொல்லலாம்.  24 மணி நேரமும் ரியல் எஸ்டேட்தான் இவருக்கு வேலை.  லஞ்ச ஒழிப்புத் துறையில வேலை செஞ்ச இந்த 15 வருஷத்துல ஒரே ஒரு ரிப்போர்ட் கூட உருப்படியா தந்துருக்க மாட்டாரு.  இப்போக் கூட ஒரு அறிக்கை தயார் பண்ணுங்கன்னு சொன்னா இவருக்கு சுத்தமா தெரியாது. ஆனா ரியல் எஸ்டேட் சம்பந்தமா என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார்.

இவருக்கு ஒரு பொலிரோ ஜீப். அரசாங்க செலவுல டீசல். ட்ரைவர் எல்லாம் உண்டு.  ஆனா, முக்கியமான விஷயம் என்னன்னா பெங்களுர்ல நடக்கற சொத்துக்குவிப்பு வழக்குக்கு இவர்தான் புலனாய்வு அதிகாரி.  இவர்தான் அதிமுக ஆட்சி வந்ததும், மீண்டும் புலன் விசாரணை நடத்தனும்னு வழக்கறிஞர் இல்லாமயே நேரடியா நீதிமன்றத்துல மனு தாக்கல் செய்தது.  ஏற்கனவே எந்த வேலையும் பாக்காம ரியல் எஸ்டேட் பண்ணுவாரு. இப்போ ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கோட புலனாய்வு அதிகாரியா…..  இவரை இனிமே யாரு கேக்கறது ? “

“இந்த மாதிரி அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்தா லஞ்சத்தை நல்லா ஒழிக்கலாம்“ என்று கூறி விட்டு, தன் பீர் பாட்டிலில் இருந்த கடைசி மடக்கை குடித்து முடித்தான் பீமராஜன்.

“வேற என்ன முக்கியமான மேட்டர் இருக்கு மாமா ? “ என்றான் ஏப்பம் விட்டவாறே…

“பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பலர் கடுமையான வருத்தத்துல இருக்காங்க மச்சான். “

“ஏன்.. அவங்கதான் 2016ல ஆட்சியைப் பிடிக்கப்போறாங்களே…“

“அவங்க சொன்னது ஆட்சியை இல்ல மச்சான்.  ஆச்சி மசாலாவை.. ஏண்டா அவங்கதான் தமாஷ் பண்றாங்கன்னா நீ வேற.. நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா யாரை கைது பண்ணிட்டாங்கன்னு பஸ்ஸை எரிக்கறது, கலவரம் பண்றதுன்னு செஞ்சாங்களோ, அவங்க ரெண்டு பேரும் வெளியில வந்துட்டாங்க. ஆனா, அவங்க சொன்னாங்கன்னு இதையெல்லாம் செஞ்ச நாங்க மாட்டிக்கிட்டோம். இப்போ காப்பாத்தக் கூட ஆளு இல்லன்னு பொலம்பறாங்க மச்சான்.“

“அய்யா காப்பாத்த மாட்டாரா மச்சான்“ என்று கேட்டு நக்கலாக சிரித்தான் ரத்னவேல்,

“ராமதாஸ் நடத்திய இந்த அட்டூழியங்கள் அவருக்கு வன்னிய மக்கள் மத்தியில இருக்கற ஆதரவை முற்றிலுமா அழிக்கப்போகுது பாரு மச்சான்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின்படி தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவங்க இதற்கான மேல்முறையீட்டு அமர்வு முன்னாடி முறையீடு செய்யலாம்.  இதுக்கே எப்படியும் ஒரு மாசம் ஆயிடும்.  அதுக்குப் பிறகு, உயர்நீதிமன்றத்துல இந்த தடுப்புக் காவலை ரத்து பண்ணச் சொல்லி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யணும்.  பெரிய வக்கீலுங்க இந்த மனுத் தாக்கல் செய்யறதுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கேப்பாங்க.  எப்படிப்பாத்தாலும் குறைஞ்சது 25 ஆயிரமாவது ஆகும். அதுவும், பாலத்துக்கு வெடிகுண்டு வச்சது, டாஸ்மாக் கடை மேல பெட்ரோல் குண்டு வீசுனது, பஸ்ஸை எரிச்சது இது மாதிரி விஷயத்துக்காக போடப்பட்ட தடுப்புக் காவல் ஆணைகளை சாதாரணமா நீதிமன்றம் ரத்து பண்றது இல்லை.

482524_572316392790264_53645563_n

 

கோடை விடுமுறை முடிஞ்சு, ஆட்கொணர்வு மனு வழக்குகளை விசாரிக்க, நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் தனபாலன் வர்றதா சொல்லப்படுது.  இந்த நீதிபதிகள், இந்த வன்முறைச் சம்பவங்களை சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க.  அப்படி தடுப்புக் காவல் ஆணையை நீதிமன்றம் உறுதி செஞ்சுடுச்சுன்னா, உச்சநீதிமன்றம்தான்.  உச்சநீதிமன்றம் போறதுக்கு எப்படிப் பாத்தாலும் 5 லட்ச ரூபாய் ஆகும்.  அது சாதாரண பாட்டாளி மக்கள் கட்சித்தொண்டர்களால் முடியவே முடியாத காரியம்.

இதைத் தவிர்த்து, இப்படி தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவங்களோட குடும்பங்கள் படற அவஸ்தை சொல்லி மாளாது.  குடும்பத்தின் வருமானம் நின்று போகும். வழக்கு செலவுகளுக்காக கடன் வாங்கணும்.   வாரா வாரம் சிறையில இருக்கறவங்களப் போய் பாக்கணும்.  பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துடும். எல்லா வன்னிய குடும்பமும் ராமதாஸ் மாதிரி கோடீஸ்வரக் குடும்பமா என்ன ?

இதுதான் மருத்துவர் அய்யா வன்னிய சமுதாயத்துக்குப் பண்ணியிருக்கற சேவை.“

“பாவம் மச்சான் அவங்க“ என்று பரிதாபப்பட்டான் பீமராஜன்.

“இல்லை மச்சான் பாவம் பாக்காத.  ராமதாஸ் கைதுன்னு பாலத்துக்கு குண்டு வச்சாங்களே… ஒழுங்கா வைக்கத் தெரியாம வச்சாங்க.   அதனால பெரிய சேதம் இல்லை.  ஒரு வேளை ஒழுங்கா வெடிச்சு, அந்த நேரத்துல அது மேல ஒரு பஸ் போயிருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப் பாரு… செத்துப் போறதுல வன்னிய மக்களும் இருந்திருப்பாங்கள்ல…  வன்னியக் குழந்தைகளும் இருந்திருக்கலாம்ல.. இதெல்லாம் லைட்டா எடுத்துக்கக் கூடாது மச்சான்.  ஒரு முறை தடுப்புக் காவல்ல இருந்துட்டு வந்தாத்தான் அடுத்த முறை செய்ய மாட்டாங்க.  நீ வேணா பாரேன்.. இந்த வாட்டி தடுப்புக் காவலில் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவங்க, அடுத்தவாட்டி ராமதாஸை கைது பண்ணா, ஆதரிச்சு போஸ்டர் ஒட்டுவாங்க. அந்த அளவுக்கு அவங்க படாத பாடு படப்போறாங்க பாறேன். “

“சரி கோர்ட் நியூஸ் என்னப்பா ? நீதிபதிகள் நியமனம் எந்த அளவுல   இருக்கு ? “ என்ற கணேசன் தனது வோட்காவை முடித்து விட்டு ஆனந்தமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

“நம்ப இதுக்கு முன்னாடியே டிஸ்கஸ் பண்ணோம் ஞாபகம் இருக்காண்ணே. தங்கசிவம்ன்ற கேரக்டர்….“

“யாருப்பா ஞாபகம் இல்லையே ? “

“அதான்ணே… நீதிபதி பால் வசந்தகுமார் பரிந்துரையில நீதிபதியாகப் போறார்னு.  அவரோட முழு நேர வேலையே ரியல் எஸ்டேட் மற்றும் ப்ரோக்கர்னு சொன்னேன் ஞாபகம் இல்லையா ? “

“ஆமாம்பா.. சொல்லு.. “

“அவர் மேல அடுக்கடுக்கா புகார்கள் குவியுதுன்ணே.  நீதிபதியாகப் போறவங்க தங்களைப் பத்தின விபரங்களைக் குடுக்கும்போது எந்த விபரத்தையும் மறைக்காம எல்லா விபரத்தையும் குடுக்கணும். தான் தாக்கல் செஞ்ச வழக்கு உயர்நீதிமன்றத்துல நிலுவையில இருக்குன்ற விபரத்தை தன்னோட பயோடேட்டாவுல குடுக்காம மறைச்சிருக்கார்.  இந்த ஒரே காரணத்தை வச்சு தங்க சிவம் நீதிபதியாகக் கூடாதுன்னு முடிவெடுக்கனும்.  ஆனா நீதிபதி பால் வசந்தகுமார், தங்கசிவத்தை எப்படியாவது மை லார்டா ஆக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கறார். என்ன பண்றது ? “

“என்னய்யா வழக்கு அது… ? “ என்று சிகரெட் புகையை வானத்தை நோக்கி ஊதியவாறு கேட்டார் கணேசன்.

“அண்ணே அந்த வழக்கு ரொம்ப சுவையானதுன்ணே.  இந்த தங்கசிவம் ஃப்ராடுன்னு நிரூபிக்கறதுக்கு இது ஒண்ணே போதும்“

“மொத்த டீடியிலையும் குடு … . “

“சிப்காட் அமைக்கக் கூடிய தொழில் பூங்காவுக்காக, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வல்லம் வடகல்  பகுதியில 1780 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகம் பண்ணாங்க.  அதுல வல்லம்-பி கிராமத்துல சர்வே நம்பர் 275/1ல் 3.25 ஏக்கர் நிலமும் சர்வே நம்பர் 275/2ல் 1.54 ஏக்கர் நிலமும் இருக்கு. இந்த ரெண்டு நெலமும் பாபுஜி மனைவி வாசுகி பேர்ல இருக்கு.

56-Ex-II-2_Page_14

அரசாங்கம் இந்த ரெண்டு நெலத்தோட சேத்து ஆயிரக்கணக்கான நிலங்ககை கையகம் பண்ணாங்க.  கையகம் பண்ணிட்டு அரசாங்கம் 2 மார்ச் 2012 அன்னைக்கு இதற்கான உத்தரவை கெசட்டில் வெளியிட்டாங்க.  கெசட்டில் ஒரு நில கையம் செய்யப்பட்டதுன்னு உத்தரவு வந்தா, அதுக்குப் பிறகு அந்த நெலத்தை யாருக்கும் விக்க முடியாது. இந்த நேரத்துலதான் நம்ப தங்கசிவம் பிக்சர்ல வர்றார்.

அந்த நில உரிமையாளர் வாசுகி தங்கசிவம் பேருக்கும் ரங்கநாயகின்றவர் பேருக்கும் பவர் பத்திரம் எழுதி வாங்கறார்.  பவர் எழுதி வாங்கிட்டு, அரசாங்கம் இந்த நெலத்தை கையம் பண்ணியது தவறுன்னு வழக்கு தாக்கல் செய்யறார்.  ரங்கநாயகி பேர்ல இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்படுது.

thankasivam

Untitled-1

வழக்கமா அரசாங்கம் எந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துனாலும் நீதிமன்றங்கள் அதில தலையிடாது.  நஷ்ட ஈடாக கொடுக்கப்படும் தொகை கூடவோ குறைவோ… அதில் மட்டுமே நீதிமன்றம் தலையிடும்.

ஆனால், தங்கசிவமும், ரங்கநாயகியும் தொடர்ந்த வழக்குல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் போன மாசம் 14ம் தேதி அரசாங்கம் நிலம் கையகம் எடுத்த ஆணையை ரத்து செய்து உத்தரவு போட்டிருக்கார்.”

”நீதிபதி வெங்கட்ராமனா இப்படி செஞ்சார்… ? நம்பவே முடியலையே…”

”உண்மை பல நேரங்களில் கசப்பாக இருப்பதோடு, ஜீரணிக்க முடியாமலும் இருக்கு என்னண்ணே பண்றது. போன மாசத்தோட நீதிபதி வெங்கட்ராமன் ஓய்வு பெற்றுட்டார். அவரு கதைய விடுங்க.  தங்கசிவம் மேட்டருக்கு வாங்க… அரசாங்கம் கையகப்படுத்துன நிலத்துக்கு பவர் பத்திரம் வாங்குறது பெரிய மோசடி.  அப்படி பவர் பத்திரம் வாங்கின நிலத்துக்காக, நீதிமன்றத்துல வழக்கு தொடுத்தது இன்னும் பெரிய மோசடி.  இதுல, அரசு வழக்கறிஞர், சிப்காட் வழக்கறிஞர் நர்மதா சம்பத், நீதிபதி, எல்லாரும் சேந்து ஐஞ்சு ஏக்கர் நிலத்தை தங்கசிவம் அபேஸ் பண்ண உதவி பண்ணியிருக்காங்க.

சிப்காட் கையகம் பண்ணிய நிலத்துக்குப் பக்கத்துல இருக்கற ஐஞ்சு ஏக்கர் நெலத்தோட மதிப்பு எத்தனை கோடி உயர்ந்துருக்கும்னு நீங்களே புரிஞ்சுக்கங்கண்ணே. இப்படி நிலத்தோட மதிப்பை உயர்த்தி எத்தனை கோடி ரூபாய் லாபம் பாத்துருப்பார்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்கண்ணே..”

”ஆமாம்பா.. இப்படிப்பட்ட மோசடிப் பேர்விழியைப் போயி நீதிபதியாக்கறாங்களே… என்னப்பா அநியாயம் இது ? ” என்று மிகவும் வருத்தத்தோடு கேட்டார் கணேசன்.

”இப்படிப்பட்ட மோசடிப்பேர்விழியை நீதிபதியாக்கனும்னு பரிந்துரை செஞ்ச உயர்நீதிமன்ற நீதிபதி பால்வசந்த குமாரை என்ன சொல்றதுன்னு சொல்லுங்க… இதுல கொடுமை என்னன்னா, நீதிபதி பால்வசந்த குமாரையெல்லாம் உயர்நீதிமன்ற வட்டாரத்துல நேர்மையான நீதிபதின்னு வேற சொல்றாங்க…. ”

DSC_0044

நீதிபதி பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி வெங்கட்ராமன்.  நடுவில் தூங்கும் சிங்கம் நீதிபதி கர்ணன்.

”அவ்வளவுதானா மச்சான் கோர்ட் நியூஸ்… ? ”

”சூப்பர் நியூஸ் வச்சுருக்கேன் மாமா…. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்காங்களே… அவங்க தீர்ப்புகள் வழங்கும்போது பாரபட்சமில்லாம வழங்குவாங்கன்னுதானே எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க…. ? ”

”ஆமாம் மச்சான். இன்னும் நெறய்ய பேரு அப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருக்காங்க… அப்படி இல்லையா ? ”

”ஆனா அப்படியெல்லாம் இல்லை.  குறிப்பா ஒரு வருடத்துல பணியிலேர்ந்து ஓய்வு பெற இருக்கற நீதிபதிகள் குடுக்கற தீர்ப்பை நம்பவே முடியாது. ”

2009 லேர்ந்து 2013 வரைக்கும்,  ஓய்வு பெற்ற நீதிபதிகள் எத்தனை போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க தெரியுமா ? நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், 5 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி குலசேகரன் 2 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி பி.முருகேசன் 3 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி பெரிய கருப்பையா 7 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி சொக்கலிங்கம் 3 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி ஜோதிமணி 4 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். “

list_judge_applied_for_variouspost_after_rtd0002

list_judge_applied_for_variouspost_after_rtd0003

list_judge_applied_for_variouspost_after_rtd0004

”தம்பி.. இவங்க இந்த மாதிரி போஸ்டுக்கு அப்ளை பண்றதுல என்னப்பா தப்பு ?  ஓய்வு பெற்ற பிறகு ஏதாவது வேலைக்கு போயி சுறுசுறுப்பா இருக்கறது நல்லதுதானே ? ” என்று வெள்ளந்தியாக கேட்டார் கணேசன்.

”இதையேதான்ணே இந்தத் தகவலை சொன்ன வக்கீல் கிட்ட கேட்டேன். அவர் என்ன சொல்றார்னா இந்த நீதிபதிகள் வெறுமனே அப்ளை பண்ணிட்டு இருக்க மாட்டாங்க.  யாரைப் பிடிச்சா இந்த போஸ்டு கிடைக்கும்னு பாத்து அவங்கக் கிட்ட பேசுவாங்க. எப்படியாவது இந்த போஸ்ட் வாங்கிக் குடுங்க.  இல்லன்னா நான் ‘சேகர் செத்துருவான்’னு பேசுவாங்க.  இவங்க பேசுற ப்ரோக்கர்களும், எப்படியாவது அய்யாவுக்கு இந்தப் போஸ்டை வாங்கித் தந்துட்றேன்னு சொல்லுவாங்க. ”

”சரி அதுல என்ன தப்பு… ? ”

”என்னண்ணே இப்படி உலகம் புரியாமயே இருக்கீங்க.  புரியலையா இல்லை மப்பு ஜாஸ்தியாயிடுச்சா…. ? ”

”உலகத்துல எதுவுமே இலவசம் இல்லன்ணே இப்படி செஞ்சு குடுக்குற ப்ரோக்கர் சும்மாவா செஞ்சு குடுப்பான்.  சார்… போஸ்டை நான் வாங்கித் தந்துட்றேன். எனக்கு இந்த வழக்குல இப்படித் தீர்ப்பு குடுங்க.  அந்த வழக்குல இப்படி தீர்ப்பு குடுங்கன்னு சொல்லுவாங்க.  ப்ரோக்கருங்க சொல்றபடி தீர்ப்பு குடுக்கலன்னா போஸ்ட் எப்படி கிடைக்கும் ?  ஓய்வு பெற்ற பிறகு கெடைக்கப் போற போஸ்டுக்காக இவங்க எழுதற தீர்ப்பு எப்படி நியாயமானதா இருக்கும் ? ”

”என்னய்யா இது… இந்த நீதிபதிகளையெல்லாம் கடவுள் மாதிரி நெனைச்சு மக்கள் நீதிமன்றத்தை நம்பியிருக்காங்களே…. இவங்க இவ்வளவு மோசமா இருக்காங்களே… ? ”

”இதுல இருக்கறதுலேயே சிறப்பு நீதிபதி ஜோதிமணி.  கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கை விசாரிச்சிக்கிட்டு இருக்கார். அந்த வழக்கில் ஒரு பார்ட்டி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்.  பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாகனும்னா மத்திய அரசுச் செயலர்கிட்டதான் விண்ணப்பிக்கனும்.   இவர் கூடங்குளம் வழக்கை விசாரிச்சுக்கிட்டே பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பதவி வேணும்னு விண்ணப்பிச்சார்.  விண்ணப்பத்தை ஒரு பக்கம் அனுப்பிட்டு, இன்னொரு பக்கம் கூடங்குளம் வழக்குல தீர்ப்பு வழங்கினார்.

வழக்கை தள்ளுபடி செய்யறேன்னு சொன்னாக் கூட பரவாயில்ல.  கூடங்குளம் அணு உலையில விபத்து நடக்க வாய்ப்பே இல்லன்னு தீர்ப்பு எழுதினார்.  அப்படி எழுதினது மட்டுமில்லாம, அவர் தீர்ப்பில் எழுதியிருந்ததுதான் சிறப்பான விஷயம்.”

”டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மிக மிக உறுதியாக இயற்கை சீற்றங்கள் இயற்கையின் செயல், இது போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்டு மனித இனம் அஞ்சினால், மனித இனம் வளர்ந்திருக்கவே முடியாதுன்னு சொல்லிட்டு, கூடங்குளம் அணு உலை திட்டம் கடவுளின் திட்டம்னு அப்துல் கலாம் சொன்னதை முக்கியமா கோடிட்டுக் காட்டியிருக்கார்”

”அப்துல் கலாம் என்ன அணு விஞ்ஞானியா.. அவர் ஒரு ராக்கெட் சயின்டிஸ்ட். அணு உலையைப் பத்தி அந்த ஆளுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு மற்ற அணு விஞ்ஞானிகள் சொல்றாங்களே.. நீதிபதி ஜோதிமணி ஏன் குடுத்த காசுக்கு மேல கூவறாரு… ” என்றான் ரத்னவேல்.

”போடா லூசு…  அணு உலை பாதுகாப்பானதில்லைனு தீர்ப்பு குடுத்திருந்தா இன்னைக்கு நீதிபதி ஜோதிமணி டெல்லி பசுமைத் தீர்ப்பாய நீதிபதியா அமர்ந்திருக்க முடியுமா ?  அணு உலை பாதுகாப்பானதா இல்லை. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படலைன்னா அதிகபட்சம் என்ன நடந்துருக்கும் ? இடிந்தகரையில நீதியரசர் ஜோதி மணி வாழ்கன்னு பேசியிருப்பாங்க. உதயக்குமார், “ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜோதிமணின்னு” புதிய தலைமுறையில பேட்டி குடுத்துருப்பாரு.  இதை வச்சுக்கிட்டு செகப்பு வௌக்கு கார்ல போக முடியுமா, இல்ல பெரிய தொழில் நிறுவனங்கள்கிட்டயிருந்து கட்டிங்தான் வாங்க முடியுமா ? ”

”ஏம்ப்பா நல்லவங்களே ஒருத்தர் கூட இல்லையாப்பா…”

”ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான்ணே செய்யுது.  நீதிபதி சந்துருகிட்ட அவர் யார்கிட்டயும் கேட்காமலேயே கணினி மேல் முறையீட்டுத் தீர்ப்பாய நீதிபதியாகும்படி  ஆஃபர் பண்ணாங்க.  தன்னோட சுயகவுரவத்துக்கு எந்த விதத்துலயும் குறை நேராமல் கிடைச்ச அந்த பதவியைக் கூட வேணாம்னு சொல்லிட்டாரு நீதிபதி சந்துரு.”

p2

”நல்லவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா அவங்க சிறுபான்மையினர் என்பதுதான் வேதனை. ”

”இல்லன்ணே.  அவர்கள் சிறுபான்மையினர் இல்லை.  அரிய ஜீவராசிகள்”

”சரி கௌம்பலாமாப்பா… நேரம் ஆயிடுச்சு…”

”வாங்க எல்லாரும் போவோம்” என்று சொல்லிவிட்டு மொட்டை மாடியை காலி செய்தனர்.

சூது கவ்வும்

$
0
0

29529_132364633445226_2686355_n

மகாலட்சுமி. இவர் ஒரு முக்கிய பிரமுகர்.  மிகவும் முக்கிய பிரமுகர்.  இப்படி இவர் தன்னைத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறார்.  இவரை வெறும் மகாலட்சுமி என்று அழைத்தால் இவருக்குக் கோபம் வந்து விடும்.  ‘சன் டிவி மகாலட்சுமி’ என்று அழைத்தால் இவர் முகத்தில் வரும் பாருங்கள் பூரிப்பு… அப்படி ஒரு பூரிப்பு.    சன்டிவியின் முதலாளி கலாநிதி மாறன் கூட தன்னை அப்படி அழைத்துக் கொள்வதில்லை.  ஆனால் மகாலட்சுமி, தன்னை சன்டிவி மகாலட்சுமி என்று விருப்பத்தோடு அழைக்கச் சொல்லுவார்.

இந்த மகாலட்சுமி பிகாம் படித்த பட்டதாரி.   பி.காம் படித்து விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தபோது, திருமணம் செய்யலாமே என்று தோன்றுகிறது. திருமணம் செய்வதற்கென்று யாராவது வெட்டத் தயாராக ஆடு கிடைக்கிறதா என்று தேடுகையில் ஒரு ஆடு சிக்குகிறது.  அவர் ஒரு மென்பொறியாளராக பணியாற்றுகிறார். அவர் குடும்பம் பாரம்பரியம் மிக்க செழிப்பான குடும்பம்.  அவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். 1997ல் மகாலட்சுமி திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு, கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார்.  திருமணமான பிறகு, மகாலட்சுமி, எம்.காம், மற்றும் சட்டம் படிக்கிறார்.  எம்.காம் படிக்கத் தொடங்கியபோதே, மகாலட்சுமிக்கு, அவர் தோற்றத்தின் காரணமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வேலை தொலைக்காட்சிகளில் கிடைக்கிறது.  இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அவர் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வேலைகளைச் செய்து வருகையில், நிலா டிவி என்று ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.  தற்போது ஜெயா டிவியின் தலைமை நிர்வாகியாக இருக்கும் ரபி பெர்நார்ட் தொடங்கிய டிவி அது.  அந்தத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளாராக வாய்ப்பு கிடைக்கிறது.  ஆனால் அந்தத் தொலைக்காட்சி தொடக்கத்திலேயே மூடப்படுகிறது.

இதையடுத்து மகாலட்சுமி ஜெயா டிவிக்கு இடம் பெயர்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இவர் பிரபலமடைந்து இவரை வெளியில் பார்ப்பவர்கள் அடையாளம் கண்டு “மேடம்… நீங்க டிவியில வருவீங்கதானே… ?” என்று கேட்கவும், இவருக்கு பிரபலங்களுக்கே உரிய அகந்தை வருகிறது.  நாளடைவில் இந்த போதைக்கு அடிமையாகி, அதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.  வீட்டிலேயே பெரும்பாலான நேரம் இல்லாமல், பிறந்த குழந்தையைக் கூட சரிவர கவனிக்காமல், எப்போது பார்த்தாலும் ஷுட்டிங், ஷுட்டிங் என்று கிளம்பிச் செல்கிறார். கூட்டுக்குடும்பத்தில், மகாலட்சுமியின் இந்த போக்குகள் பிரச்சினையை கிளப்புகின்றன.  ஒரு கட்டத்தில் மகாலட்சுமியின் மாமியார் மகாலட்சுமியை கண்டிக்க, மகாலட்சுமி தூக்கு மாட்டிக் கொள்ள, மகாலட்சுமி காப்பாற்றப்பட்டு பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

பஞ்சாயத்து, மகாலட்சுமியின் அம்மா ஜான்சி ராணியிடம் செல்கிறது. ஜான்சி ராணியோ, என் மகள் பிரபலமாவதைப் பொறுக்காமல் இப்படி அநியாயமாக கொடுமை செய்கிறார்கள் என்று புலம்புகிறார்.   மகாலட்சுமியின் கணவரோ, மனைவியையும் கண்டிக்க முடியாமல், பெற்றோரையும் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார்.  இறுதியாக வேறு வழியே இல்லாமல், தனிக்குடித்தனம் செல்கிறார்கள். தனிக்குடித்தனம், மகாலட்சுமியின் தாய் ஜான்சி ராணி வீட்டின் அருகிலேயே அமைகிறது.  குழந்தையை தாய் பார்த்துக் கொள்ள, மீண்டும் மகாலட்சுமி ஷுட்டிங்கில் கவனம் செலுத்துகிறார்.

இதற்கிடையே மகாலட்சுமி சட்டம் படித்து முடிக்கவும், வழக்கறிஞராகவும் தன் பணியைத் தொடங்குகிறார்.  வி.பி.ராஜு என்ற வழக்கறிஞரிடம் ஜுனியராக சேர்ந்து பணியாற்றுகிறார். நீதிமன்றம் சென்று வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கியதும் மகாலட்சுமியின் அகந்தை மேலும் அதிகமாகிறது.  தன்னை ஒரு மிகப் பெரிய மூத்த வழக்கறிஞராகக் கருதிக் கொண்டதோடு ஒரு சிறந்த சட்ட நிபுணராகவும் நினைத்துக் கொள்கிறார்.  மீடியாவில் பணியாற்றுபவர்கள், சில சட்டச் சிக்கல்களுக்கு மகாலட்சுமியிடம் சந்தேகம் கேட்டதும், நமக்குத் தெரியாத சட்டம் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். தனது வழக்கறிஞர் தொழில் பற்றி எப்படிப்பட்ட பில்டப் செய்வார் மகாலட்சுமி என்றால், வீட்டுக்கு வந்ததும், வீட்டில் உள்ளவர்களிடம், “இன்னைக்கு நான் வாதாடுனதப் பாத்து, ஜட்ஜ் உடனே கைத்தட்டிட்டார்….. எல்லாரும் என்னைப் பாராட்டுனாங்க“ என்று கூசாமல் புளுகுவார்.  வீட்டில் உள்ளவர்களுக்கு, நீதிமன்றத்தில் மகாலட்சுமி கழுவி ஊற்றப்பட்டது எப்படித் தெரியப்போகிறது ? கேஸ் கட்டை எடுத்து மகாலட்சுமி முகத்தில் வேண்டுமானால் தட்டியிருப்பார்.  இந்த விபரம் மகாலட்சுமியை சுற்றி இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும் ? அவர்களும் வாயைப் பிளந்து கொண்டு ஆ வெனக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் மகாலட்சுமி வழக்கறிஞராக செய்ததெல்லாம் திருட்டுத்தனம்.  விவாகரத்து வழக்குகளில் மகாலட்சுமி பெண்ணுக்கு வழக்கறிஞர் என்றால் மற்றொரு வழக்கறிஞர் கணவருக்கு வழக்கறிஞர்.  மகாலட்சுமியும், கணவரது வழக்கறிஞரும் பேசி வைத்துக் கொண்டு கூட்டணி அமைத்து, கணவர் மற்றும் மனைவியின் பிரச்சினைகள் தீராத வகையில் சிக்கல் செய்தபடி, எவ்வளவு பணம் கறக்க முடியுமோ, அவ்வளவு பணம் கறப்பார்கள். இதுதான் மகாலட்சுமி நீதிமன்றத்தில் வாதாடும் லட்சணம்.  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், குடும்ப நீதிமன்றத்துக்கு வரும் கணவன் மனைவிகளை அலைக்கழித்து, பணம் பறிக்கும் எந்த வழக்கறிஞருக்கும் மகாலட்சுமி கொஞ்சமும் சளைத்தவர் அல்ல.

மகாலட்சுமியின் கணவருக்கு துபாயில் வேலை கிடைக்கிறது.  துபாய்க்குச் செல்லும் முன், ஒரு வீட்டை வாங்குகிறார்.  வீட்டுக் கடன் வாங்குவதில் கையெழுத்து போடுவது உள்ளிட்டவற்றில் சிக்கல் வந்தால் என்ன செய்வது என்று, மகாலட்சுமியின் தாய், ஜான்சி ராணி பெயரில் அந்த வீட்டை வாங்கிவிட்டு, துபாய் குறுக்குச் சந்துக்கு சென்று விடுகிறார்.  இதனிடையே, நீதிமன்றத்தில், மகாலட்சுமிக்கு ஒரு ஆண் வழக்கறிஞரோடு ‘நெருக்கமான’ நட்பு ஏற்படுகிறது.  அந்த ஆண் வழக்கறிஞரும் ஏற்கனவே திருமணமானவர்.  எப்போதாவது ஊருக்குத் திரும்ப வரும் மகாலட்சுமியின் கணவருக்கு அரசல் புரசலாக இந்த விபரம் தெரிய வருகிறது.  ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவே மகாலட்சுமி “ஆமாம் நான் அவரை வச்சுருக்கேன்” என்ற ரேஞ்சில் பேச ஆரம்பித்து விடுகிறார்.  மனம் வெறுத்த மகாலட்சுமியின் கணவர், உன் சங்காத்தமே வேண்டாம் என்று பரஸ்பர விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு விட்டு, மீண்டும் துபாய் குறுக்குச் சந்துக்கே சென்று விடுகிறார்.  விடுதலை கிடைத்து விட்ட மட்டற்ற மகிழ்ச்சியில் தனக்கு நெருக்கமான அந்த வழக்கறிஞரையும் விவாகரத்து வாங்கச் சொல்கிறார். தன் குடும்பம் மட்டும் கெட்டுப்போவதோடு விடுவது முறையான செயலா என்ன ?  மகாலட்சுமியின் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக அந்த வழக்கறிஞரும் விவாகரத்து செய்கிறார்.

இதற்குப் பிறகு என்ன… மகிழ்ச்சியான மகாலட்சுமியும் அவர் தாயாரும், அவர் கணவர் வாங்கிக் கொடுத்த வீட்டை விற்கிறார்கள்.  விற்று விட்டு புது வீடு வாங்குகிறார்கள். அதற்குப் பிறகு மகாலட்சுமியை யார் கேட்பது… ?  இஷ்டத்துக்கு மனம் போன போக்கில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.  இப்படியே இருந்து விட்டால் போதுமா ?  மகாலட்சுமிக்கு சதீஷ் என்று ஒரு தம்பி இருக்கிறாரே… அவருக்கு திருமணம் செய்ய வேண்டுமல்லவா ?  திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்திலிருந்து சதீஷுக்கு பெண் எடுக்கிறார்கள்.  என்ன நடந்ததோ தெரியவல்லை… திருமணமான ஒரே வாரத்தில் சதீஷ் திருமணம் முறிகிறது.

PICT0086_1

சூது குடும்பம்

இதனிடையே மகாலட்சுமி சன் டிவியில் சேர்ந்து விடுகிறார். ஒரு புறம் வழக்கறிஞர் தொழில். மறுபுறம், சன் டிவியில் ஆலோசனை நேரம் மற்றும் செய்தி வாசிப்பாளர் பணி.  மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது மகாலட்சுமியின் வாழ்க்கை.  சன் டிவியில் மகாலட்சுமிக்கு காட்ஃபாதராக உருவாகிறார் சன் டிவி ராஜா.

மகனும் வளர்ந்து பெரியவனாகிக் கொண்டிருக்கிறான்.  ஒரு சனிக்கிழமை தவறாமல் மல்ட்டிப்ளெக்ஸ்களில் சினிமா. வீட்டில் அம்மா, தம்பி மற்றும் நண்பர்களோடு சீட்டாட்டம்.  பகலில் இளித்த வாய் க்ளையன்டுகளை மொட்டையடிப்பது.

இப்படிச் சீராக போய்க்கொண்டிருந்த சன்டிவி மகாலட்சுமி வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் சன் டிவி ராஜாவின் கைது.  அகிலா என்ற பெண் அளித்த பாலியல் புகாரில் சன் டிவி ராஜா கைது செய்யப்படுகிறார்.  மகாலட்சுமிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி…. சன் டிவி போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் எடிட்டராக உள்ளவரையே கைது செய்வதென்றால் என்ன அநியாயம் ?  அதுவும் விவாகரத்து வழக்கில் தன்னுடைய க்ளையன்டாக இருக்கும் ஒரு நபர் அளித்த புகாரில் ராஜா கைது செய்யப்படுவதென்றால் மகாலட்சுமிக்கு அதை விட ஒரு அவமானம் எப்படி இருக்க முடியும் ?

உடனடியாக களத்தில் இறங்குகிறார் மகாலட்சுமி.  ராஜா மீது புகார் கொடுத்த அகிலாவை அழைக்கிறார்.  ”இங்கப் பாரும்மா.. ராஜா சார் மேல குடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கோ… உனக்கு டைவேர்ஸ் வாங்கித் தந்துட்றேன்.  வாங்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா நிலைமை விபரீதமா போயிடும். அப்புறம் நீதான் கஷ்டப்படணும்” என்று கூறுகிறார்.  மகாலட்சுமியின் சூழ்சசி அறியாத அகிலா, அதெல்லாம் முடியாது மேடம்.  இதுவும், அதுவும் வேற வேற.  ரெண்டையும் கன்ப்யூஸ் பண்ணாதீங்க என்று தெளிவாகக் கூறி விடுகிறார்.

19 மார்ச் அன்று ராஜா கைது செய்யப்படுகிறார். 22 மார்ச் அன்று அகிலாவின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட உள்ளது.  அகிலாவின் கணவர், விவாகரத்து வழக்கில் ஆஜராகமலேயே இருந்ததால், அகிலாவுக்கு விவாரத்து வழங்கும் மனநிலையில் இருக்கிறது நீதிமன்றம்.

சன் டிவி ராஜா மீதான புகாரை வாபஸ் அகிலா வாங்க மறுத்ததால், குழந்தைகளை வைத்திருக்கும் அகிலாவின் கணவர் மற்றும் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, நீங்கள் விவாகரத்து வழக்கில் ஆஜராகத் தவறினால், குழந்தைகள் அகிலா வசம் போய் விடும். நான் அகிலாவின் வழக்கறிஞராக இருப்பதால், அகிலாவின் திட்டங்கள் அனைத்தையும் அறிவேன்.  உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பார்க்கவே முடியாது என்றதும், அலறி அடித்துக் கொண்டு 22 அன்று நீதிமன்றத்துக்கு வருகிறார் அகிலாவின் கணவர்.  22 அன்று காலை மகாலட்சுமி நீதிமன்றத்துக்கு வருவான் என்ற காத்துக் கொண்டிருந்த அகிலாவுக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

காலை 9.30 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.  நான் உங்கள் வழக்கிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.  எனக்கு மீதம் சேர வேண்டிய ஃபீஸ் தொகை 5 ஆயிரத்தை உடனடியாக தந்து விடவும் என்று. அகிலாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.  ஒரு வழக்கறிஞர், தன்னுடைய கட்சிக்காரரின் நலன்களை எல்லா விதத்திலும் பாதுகாக்க வேண்டும். இது வழக்கறிஞர் தொழிலின் அடிப்படை விதி. கட்சிக்காரர் என்பவர், வழக்கறிஞர்களுக்கு கடவுள் போல.  ஆனால் நீதிபதியே எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு வாதாடும் மகாலட்சுமிக்கு இந்த அடிப்படை கூட தெரியாமல் போய் விட்டது.  ஏற்கனவே, சன் டிவி ராஜா மீது புகார் கொடுத்து விட்டு, பல்வேறு தரப்புகளில் இருந்து வரும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்த அகிலாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இப்படி அகிலாவுக்கு பெரும் துரோகத்தை இழைத்ததோடு மகாலட்சுமி நிற்கவில்லை.  சன் டிவி ராஜாவை காப்பாற்ற என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார். ராஜா கைது செய்யப்பட்டு சிறை சென்றதும், சன் டிவி அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களை ராஜா சார்பாக அணி திரட்டினார்.  அகிலா மோசமான நடத்தை உள்ள பெண். ராஜா சார் பத்தரை மாற்றுத் தங்கம்.  அவர் குடும்பத்தில் அவசரமாக பணம் தேவைப்பட்டால் கூட, ராஜா சாரை அழைத்துச் சென்ற முத்தூட் பைனான்சில் உரசி பணம் பெறுவார்கள். அந்த அளவுக்கு சிறந்த மனிதர்.  ராஜா மீது பெண் விவகாரத்தில் குற்றம் சாட்டுவதே தவறு.  ராஜா ஒரு கூவாத சேவல்.  இதற்காக வாலிப வயோதிக அன்பர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே வைத்தியரான சேலம் சிவராஜ் சித்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்…. அவரைப் போய் இப்படி பொய்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது, தெய்வங்களுக்கே அடுக்காது என்று சன்டிவி அலுவலகம் முழுக்க பரப்புரையில் ஈடுபடுகிறார்.  சன்டிவியில் உள்ள மற்ற முட்டாள்கள், “அய்யய்யோ.. அப்போ ராஜா சாரை தப்பாத்தான் கைது பண்ணிட்டாங்களா…“ என்று பதறிப்போய், ராஜா மீது புகார் கொடுத்த அகிலாவின் மீது புகார் எழுதுகிறார்கள்.

அகிலா போன்ற மோசமான நடத்தை உள்ள பெண்ணைப் பார்க்க முடியாது.  அகிலாவுக்கு ஒழுங்காக செய்தி வாசிக்கவே தெரியாது.  அகிலா செய்தி சரியாக வாசிக்காததால், சரியாக உச்சரிக்காததால், சன் செய்திகளைப் பார்த்த பலர் இதய பெலகீனம் அடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தனித்தனியாகவும், கூட்டாகவும், சன் டிவி வைஸ் ப்ரெசிடென்டுக்கு கடிதம் எழுதித் தருகின்றனர்.  இப்படி தனித்தனியாக புகார் அளித்தவர்கள் (1) கிருத்திகா காந்தி (2) எஸ்.அருணா (3) வி.சாய் லட்சுமி (4) ஏஞ்சல் சுகன்யா (5) ஜெ.ரஃபியா பேகம் (6) வி.பசுமதி (7) டி.திவ்யா  கூட்டாக அளித்த புகார்களின் கையெழுத்திட்டவர்கள் (1) ஆர்.மகேஸ்வரி (2) ஏ.மாளவிகா (3) நிர்மலா நாராயணன் (4) ஜி.கிருத்திகா (5) ஏ.பாத்திமா (6) டி.திவ்யா (7) வி.சாய்லட்சுமி (8) வி.பசுமதி (9) கே.ஏஞ்சல் சுகன்யா (10) எஸ்.சுகன்யா (11) ஜி.அர்ச்சனா (12) ஏ.ஆர்.கோகுல லட்சுமி (13) சி.விசித்ரா (14) எஸ்.அருணா (15) ஏ.மேரி ராஜகுமாரி (16) எம்.மாலினி (17) ஜெ.ரஃபியா பேகம் (18) காமாட்சி (19) அர்ச்சனா (20) ஜெ.கல்யாணி.

இப்படிக் கையெழுத்திட்டு கூட்டாக அளித்த புகார் மனுவில் The said Akila was not regular to office and her pronunciation was not good. And we received complaints from public.  Our Chief News Editor Raja is a man with clean habits and we have never been harassed in any way.

அகிலா அலுவலகத்துக்கு ஒழுங்காக வருவதில்லை.  அவர் உச்சரிப்பு சரியில்லை.  இதனால் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரப்பெற்றோம்.  தலைமை செய்தி ஆசிரியர் ராஜா நல்ல பழக்கங்கள் உள்ள மனிதர்.  அவர் எங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ததில்லை.

இந்தப் புகார் கொடுக்கப்பட்ட தேதி 25.03.2013.  அகிலா புகாரில் ராஜா கைது செய்யப்பட்டது 19.03.2013.  இந்தப் புகார்களை எழுதிய முட்டாள் பெண்களுக்கு, (இவர்களை குந்தாணிகள் என்றுதான் எழுத வேண்டும். ஆனால் குந்தாணி என்று எழுதினால், பெண்ணியவாதிகள் போன் பண்ணி காது கிழியும் வரை திட்டுகிறார்கள். திட்டினால் கூட பரவாயில்லை, கவிதை பாடுவேன் என்று வேறு பயமுறுத்துகிறார்கள்) அகிலா நடத்தை சரியில்லாதவர், சரியாக தமிழ் உச்சரிக்கத் தெரியாதவர் என்ற விபரங்கள் எல்லாம் ராஜா கைது செய்யப்படுவது வரை தெரியவில்லை. யாராவது ஒரு ஆண் தவறாகப் பேசி விட்டால் நீட்டி முழக்கி ஊர் நியாயம் பேசும் பெண்கள், ஒரு பெண்ணின் நடத்தை குறித்து தவறாகப் பேசி, அவள் ஆளுமையை அழிப்பதில் ஒரு வினாடி கூட தயங்க வில்லை பாருங்கள்.  தங்கள் சுயநலனுக்காக எப்படிப்பட்ட பிழைப்புவாதிகளாக மாறிப்போய் விடுகிறார்கள் பாருங்கள்.  இதில் வேதனை என்னவென்றால், ஏஞ்சல் சுகன்யா என்ற பெண், சன் டிவி அலுவலகத்தில் வெற்றி வேந்தனோடு நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே  வெளியாகியுள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் வெற்றி வேந்தனோடு நெருக்கமாக ஆபாசமாக இருந்தவர் ஏஞ்சல் சுகன்யாதான்.  அப்படி ஏஞ்சல் சுகன்யா ஆபாசமாக வெற்றிவேந்தனோடு நெருக்கமாக இருந்தது சன் டிவி முதலாளி கலாநிதி மாறனுக்கும் தெரியும்.

IMG-20120928-00297

சன் டிவி மேக்கப் அறையில் எடுத்து, சன் டிவி முழுவதும் பரவிய ஏஞ்சல் சுகன்யாவின் பல புகைப்படங்களில் ஒன்று

ஆனால் இப்படி அலுவலக இடத்தில் ஆபாசமாக இருந்ததற்காக வெற்றி வேந்தன் மீதும், ஏஞ்சல் சுகன்யா மீதும் நடவடிக்கை எடுக்காத கலாநிதிமாறன், ஒரு மூன்றாம் தர பொறுக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்.  அகிலாவின் ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பிய உத்தமிகள் கொடுத்த புகாரில் அகிலாவை கைது செய்கிறார்.

கலாநிதி மாறனின் இந்த நடவடிக்கைகள், அவரின் தராதரம் என்ன என்பதை விளக்குகிறது.   கலாநிதி மாறனும் சன் டிவி ராஜாவுக்கு சற்றும் குறையாதவர் என்பதையே நிரூபிக்கிறது.

சரி மெயின் கதைக்கு வருவோம்.  ரம்மி விளையாட்டோடு கும்மியடித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி குடும்பத்துக்கு, தம்பி சதீஷ் ஒற்றை ஆளாகச் சுற்றுவது வருத்தத்தை அளிக்கிறது.  சரி தம்பிக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்யலாம் என்று தேடத் தொடங்குகிறார்கள்.  மகாலட்சுமிக்கு ஒரு ஆடு சிக்கினால், அவர் தம்பி சதீஷுக்கு ஒரு ஆடு சிக்காமலா போய் விடும்.  மகாலட்சுமியே ஆட்டை தேடுகிறார்.  அப்படித் தேடும்போது அவருக்கும் ஒரு ஆடு சிக்குகிறது.  அந்த ஆட்டை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி மஞ்சள் தண்ணீர் தெளிக்கிறார் மகாலட்சுமி.  அந்த ஆடும் எல்லா ஆடுகளையும் போலவே, வேகமாக தலையாட்டுகிறது.  இத்தனைக்கும் அந்த ஆடு ஒரு முற்போக்கான குடும்பத்திலிருந்து வந்த ஆடு.  பெரியாரிய வழியில் வந்த அந்த ஆடு கசாப்பக் கடைக்காரனிடம் வலியச் சென்று மாட்டுவது போல அந்தப் பெண் மகாலட்சுமியின் தம்பி சதீஷை திருமணம் செய்கிறார்.

IMG_1428

சதீஷ்

சதீஷை திருமணம் செய்த அந்தப் பெண் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.  மிகவும் வற்புறுத்தி அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார் மகாலட்சுமி. அந்தப் பெண் திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணிடம், நாங்களும் பகுத்தறிவு வாதிகளே என்று சொல்லுகிறார்கள்.  மகாலட்சுமியின் தாய், “என்னைப் பாருங்கள்… என் கணவர் இறந்து விட்டார். ஆனால் நான் பொட்டு வைக்கிறேன். எவ்வளவு முற்போக்கா இருக்கிறேன் பாருங்கள்” என்று சொல்லுகிறார். இதையெல்லாம் நம்பி அந்தப் பெண் திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி மற்றும் அவர் தாயார் ஜான்சி சாணி, மன்னிக்கவும், ஜான்சி ராணியின் சுயரூபம் தெரிய ஆரம்பிக்கிறது.  வழக்கமான தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மற்றும் பழைய சினிமாக்களில் வரும் மாமியார் மற்றும் நாத்தனாருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.  அந்தப் பெண் மூன்று வேளையும் சமைக்க வேண்டும்.  மகாலட்சுமி ஹாலில் அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு, இதை எடுத்து வா, அதை எடுத்து வா என்று தொடர்ந்து உத்தரவு போடுவார்.  இதையெல்லாம் அந்தப் பெண் செய்ய வேண்டும்.  செய்யத் தவறினால், மகாலட்சுமி, உடம்பு கூசும் வகையில் ஆபாசமாக பேசுவார்.

“புருஷன்கிட்ட “அது” மட்டும் வேணும்னு கேக்குற..  வீட்டு வேலை செய்ய மாட்டியா” என்று மகாலட்சுமி கேட்பது, மிக மிக சாதாரணமான ஒரு உரையாடல் என்றால் மற்றவை எப்படி இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

சரி புதிதாக வந்த அந்தப் பெண்ணைத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால், மகாலட்சுமியும், அவர் தாயாரும் பேசிக்கொள்வது, அவ்வளவு சிறப்பாக இருக்கும்.  ”உன்னைப் பத்தி தெரியாதா நீயும் அவனும்….” என்று மகாலட்சுமியின் தாயார் பேசுவார்.  பதிலுக்கு மகாலட்சுமி, ”உன்னைப் பத்தித் தெரியாதா… நீ என்னென்ன பண்ண… உனக்கு பணம் எப்படி வந்துச்சுன்னு நான் சொன்னா உன் கதை நாறிப் போயிடும்” இப்படி நாள்தோறும் உரையாடல்கள் நடைபெறும்.  இப்படி எந்த சண்டை நடந்தாலும், தினந்தோறும் இரவு சீட்டாட்டமும், சனிக்கிழமை தோறும் இரவுக் காட்சியும் தவறாது.

இதற்கிடையே வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை வேலைக்குப் போகக் கூடாது என்று தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். உன்னைப் போய் என் பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டானே… வெறும் கையோடு வந்து விட்டாய்.  போய் உங்க அப்பன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் வாங்கி வா.  நெறய்ய கடன் இருக்கு என்று தொல்லை கொடுக்கிறார்கள். மூன்று வேளையும் சமைத்துப் போட வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கொடுமையும் நடக்கிறது.  நல்ல வேலையும் சம்பளமும் இருந்தும்,  அந்தப் பெண் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாது வேலையை விடுகிறார்.   இப்படியே ஆறு மாதங்கள் கடக்கின்றன. அந்தப் பெண்ணின் கணவர் சதீஷோ, தன் மனைவிக்கு எவ்வித ஆதரவும் தராமல், தன் தாய்க்கும், அக்காவுக்கும் ஆதரவாக இருக்கிறார்.  ஒரு கட்டத்தில் இனி வாழ முடியாது என்று முடிவெடுத்த அந்தப் பெண், தன் பெற்றோர் வீட்டுக்கு செல்கிறார்.

இதையடுத்து, முக்கிய பிரமுகர்கள் சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை மீண்டும் வாழ அழைத்து வருகின்றனர்.  அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் மாதம் 50 ஆயிரம் ஊதியத்தில் அந்தப் பெண்ணுக்கு வேலை கிடைக்கிறது. எவ்வளவு பக்கம் என்றால், நடந்து அலுவலகம் செல்லும் அளவுக்கு பக்கம்.

இந்த வேலைக்கு நான் போகிறேன், வீட்டு வேலைகளையும் செய்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதையும், ஜான்சி ராணியும், மகாலட்சுமியும் ஏற்காமல் தடுக்கிறார்கள். அந்தப் பெண்ணின் கணவர் சதீஷும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  இனியும் இந்த வீட்டில் இருந்தால் நாம் எம் எதிர்காலமே அழிக்கப்படும் என்பதை உணர்ந்த அந்தப் பெண், வீட்டை விட்டு வெளியேறுகிறார். சென்னையிலேயே ஒரு மகளிர் விடுதியில் தங்கி தன் வேலையைத் தொடரலாம் என்று முடிவெடுத்து, பெட்டி படுக்கைகளோடு வெளியேறுகிறார்.

வெளியேறி ஒரு மகளிர் விடுதியில் தங்குகிறார்.  அவர் திறமைக்கு சிறப்பான வேலை கிடைக்கிறது.  நமக்கு வாய்த்த திறமையான அடிமை நம்மை விட்டு எங்கேயும் போகாது என்று நம்பிக் கொண்டிருந்த சதீஷுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.  அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல… உனை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல… என்று பாடியதும், அந்தப் பெண்ணும் மனமிறங்கி சரி வந்து பார்த்துத் தொலை என்று அனுமதி அளிக்கிறார்.

வீட்டை விட்டு பிரிந்து வந்தாலும், அந்தப் பெண்ணை சதீஷ் வாரந்தோறும் சந்திக்கிறார். இருவரும் பேசுகிறார்கள். அந்தப் பெண், தனிக்குடித்தனம் செல்வதாக இருந்தால், நான் இப்போதே கட்டிய புடவை அல்லது லெக்கிங்ஸோடும், டீ ஷர்டோடும் வருகிறேன் என்று கூறுகிறார். இந்த அடிமை இன்னும் நம்மிடம் விசுவாசமாக இருக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ளாத அந்த பேரிக்காய் தலையன், தனி வீடு பார்க்காமல் நாள் கடத்துகிறான்.  இத்தனைக்கும் பொருளாதார நெருக்கடி கூட இல்லை.  பேரிக்காய் தலையன் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறான், அந்தப் பெண் மாதம் 40 ஆயிரம் சம்பாதிக்கிறாள்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்தப் பெண்ணும், அவள் ஹாஸ்டல் தோழிகளும், ஸ்கை வாக்குக்கு இரவு உணவு உண்பதற்காக செல்கிறார்கள். உணவருந்தி விட்டு, கை கழுவ சென்ற இடத்தில், மகாலட்சுமி அந்தப் பெண்ணைப் பார்க்கிறாள். அந்தப் பெண் மகாலட்சுமியிடம் எதுவும் பேசவில்லை.  அவர் தன் தோழிகளோடு சென்று விடுகிறார். இதற்குள், மகாலட்சுமி அவர் தாயாரையும், சதீஷையும் அழைத்து வந்து அந்தப் பெண் வேறு யாரோ ஒரு ஆணோடு ஊர் சுற்ற வந்திருக்கிறார் என்று கத்துகிறார்.  அந்தப் பெண்ணோடு அவள் ஹாஸ்டல் மேட்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை அவர்கள் யாரும் காதில் வாங்கத் தயாராக இல்லை. மகாலட்சுமியின் தாயார் ஜான்சி ராணி, அருகில் வந்து அந்தப் பெண்ணை ஓங்கி ஒரு அறை விடுகிறார். பொறி கலங்கிப் போன அந்தப் பெண் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள், யார் கூடடி ஊர் சுத்த வந்த …………. …………….. என்று உரத்த குரலில் கத்துகிறார்.  பிவிஆர் தியேட்டரில் இரவுக் காட்சிக்கு வந்த அத்தனை எருமை மாடுகளும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அறை வாங்கி அந்தப் பெண்ணும் திருப்பிப் பேசுகிறார்.  யாருடி …….. ………  உன் பொண்ணே உன்னைப் பத்தி என்ன பேசியிருக்கான்னு தெரியுமா ?  உனக்கு என்னை …………………… என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது என்று பதிலுக்கு திருப்பிப் பேசுகிறார். அங்கிருந்து ஓடி வந்த சதீஷ் அந்தப் பெண்ணை ஓங்கி ஒரு அறை விடுகிறார். நிலைகுலைந்து கீழே விழுந்த அந்தப் பெண்ணை அப்போதும் தூக்கி விட வேண்டும், தடுக்க வேண்டும் என்று பிவிஆரில் இரவுக் காட்சி பார்க்க வந்த எந்த எருமை மாட்டுக்கும் தோன்றவில்லை.  கீழே விழுந்த அந்தப் பெண்ணை மகாலட்சுமி கழுத்தில் காலை வைத்து மிதிக்கிறார்.  ஜான்சி ராணியும் தோளில் மிதிக்கிறார். அந்ப் பெண் தடுமாறி எழுந்ததும், லிப்ட் அருகே வைத்து கழுத்தை நெறிக்கிறார் சதீஷ். இப்போதும் திரைப்படம் பார்க்க வந்த எருமை மாடுகள் எதுவும் தலையிடவில்லை.

ஒரு வழியாக செக்யூரிட்டிகள் தலையிட்டு, விலக்கி விடுகிறார்கள். இதெல்லாம் இரவு 10 மணிக்கு நடக்கிறது. அந்தப் பெண் அவள் தோழிகளோடு அழுதபடி தன் அண்ணனுக்கு போன் செய்கிறார்.  இவ்வளவு அமர்க்களமும் நடந்த பிறகு, மகாலட்சுமியும் அவர் குடும்பத்தினரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா ?  நிம்மதியாக இரவுக்காட்சிக்கு சென்று விடுகிறார்கள்.

IMG_1459

வில்லி ஜான்சி ராணி

அந்தப் பெண் அழுதபடி, தன் அண்ணனோடு அமைந்தகரை காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்கிறார். இது இரவு நேரம், வீட்டுக்குச் செல்லுங்கள், நாளைக் காலை வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார்கள்.

மறுநாள் காலை காவல்நிலையம் சென்ற அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  காவல் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களோடு மகாலட்சுமியும் அவர் தம்பி சதீஷும் இருக்கிறார்கள்.  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ் அந்த 20 வழக்கறிஞர்களையும் அழைத்து வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணையும், சதீஷையும் ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன் விசாரிக்கிறார்.  இதற்குள், பால் கனகராஜின் தொண்டர் அடிப்பொடிகள், சார் வெயிட் பண்றார், என்று ஆய்வாளரிடம் சொல்கிறார்கள். ஆய்வாளர் பொறுமையாக, சாரை வெயிட் பண்ணச் சொல்லுங்கள். நான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.  10 நிமிடம் கழித்து மீண்டும் பால் கனகராஜ் ஜுனியர்கள் சீனியர் வெயிட் பண்ணுகிறார்  என்றதும், சரி வரச் சொல்லுங்கள் என்று கூறுகிறார் ஆய்வாளர்.  பால்கனகராஜ், இது ஒரு குடும்பத் தகராறு.  இதை பெரிது படுத்தாமல் விட முடியுமா என்று கேட்கிறார்.  ஆய்வாளர், என்னால் அப்படிச் செய்ய இயலாது. இந்தப் பெண் தாக்கப்பட்டிருக்கிறார்.  இதற்கு நான் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

IMG_9083

வழக்கறிஞர் பால் கனகராஜ்

பால் கனகராஜும் சென்று விடுகிறார்.  மறுநாள் திங்கட்கிழமை, ஸ்கைவாக்கில் உள்ள சிசிடிவி பதிவுகள் காவல்துறை கைக்கு வருகிறது.  உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்கிறார் ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன்.  அன்று அவர் துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் அன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை செய்தி வாசித்துக் கொண்டிருந்த மகாலட்சுமியை கைது செய்திருக்கலாம்.  ஆனால் உயர் அதிகாரிகள் அழுத்தத்தின் காரணமாகவோ, என்ன காரணத்துக்காகவோ தெரியவில்லை, அவர் துரிதமாக நடவடிக்கை எடுக்கத் தவறினார்.

இதன் நடுவே, மகாலட்சுமி சார்பாக, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கடுமையான அழுத்தங்கள் வருகின்றன. மகாலட்சுமியும், அவர் தாயார் மற்றும் தம்பி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார்கள். அந்த மனு புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த புதன் கிழமை அன்று காலையே, ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன் அனுப்பிய சிறப்புப் படை, நாகூரில் வைத்து, ஜான்சி ராணியையும், சதீஷையும் கைது செய்கிறார்கள்.

முன்ஜாமீன் மனு நீதிபதி வாசுகி முன்பு விசாரணைக்கு வருகிறது.  நீதிபதி வாசுகி பற்றிய விபரங்களை சவுக்கில் வந்த மக்கள் விரோத நீதிமன்றங்கள் என்ற கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். மூன்றாவது நபர், வழக்கறிஞர் என்றதும், மூன்றாவது நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறார் நீதிபதி. வழக்கறிஞர் அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்குங்கள் என்று வாதிடுவதே தவறு.  வழக்கறிஞர்கள் என்றால் என்ன தவறு வேண்டுமானாலும் செய்து விட்டு தப்பித்து விடலாமா என்ன ?  ஆனால் துரதிருஷ்ட வசமாக, நீதிமன்றங்களில் இந்த நிலைதான் நிலவுகிறது.

உத்தனையோ அழுத்தங்களையும் மீறி, மகாலட்சுமியின் தாயார் மற்றும் தந்தையை கைது செய்ய நடவடிக்கை எடுத்த ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

மகாலட்சுமி அவர்களுக்கு…. முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் என்பது நீங்கள் அறியாததல்ல.  நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்த சூதுதான் உங்களை இப்போது கவ்வியிருக்கிறது.

இந்த சூது இத்தோடு உங்களை விடப்போவதில்லை.   உங்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சிலில் விசாரணை நடைபெற உள்ளது.  உங்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.  அந்த விசாரணை தொய்வில்லாமல் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

page_1

page_2

page_3

Soodhu_Kavvumbig 

 

பால் கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் அடாவடி…

$
0
0

IMG_9083

இன்று (23/05/2013) காலை சுமார் 11.30 மணியளவில் வரதட்சிணை வழக்கில் கைது செய்யப்பட்ட சன்டிவி மகாலட்சுமியின் தாயார் ஜான்சி ராணி மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோரை நாகூரிலிருந்து கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்த அழைத்து வந்தனர் காவல்துறையினர்.

கைது அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜான்சி ராணி மற்றும் சதீஷ் ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.  பால்கனகராஜ் அனுப்பிய 100 வழக்கறிஞர்கள், எழும்பூர் நீதிமன்றத்தில் குழுமி, காவல்துறை வாகனத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் சிறைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர்.  ஜாமீன் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்ற நடுவரை மிரட்டினர்.  இதற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த பால் கனகராஜ் மதியம் 2.30 மணிக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கறிஞர்கள் மிரட்டியதால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய 13வது பெருநகர நீதிபதி சிவசுப்ரமணியன், ஜான்சி ராணி, சதீஷ் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டு விட்டு விடுப்பில் சென்று விட்டார். இதையடுத்து எழும்பூர் 5வது பெருநகர நீதிமன்ற நடுவர் உமா மகேஸ்வரி முன்பு ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏறக்குறைய 100 வழக்கறிஞர்கள், நீதிமன்ற நடுவரை மிரட்டும் தொனியில் அங்கே குழுமியிருந்தனர். அந்த வழக்கறிஞர் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட பால்கனகராஜ், இரண்டு கைதிகளையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும், இது பொய் வழக்கு என்று வாதிட்டார். வேறு வழியில்லாத நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

வெளியில் வந்த பிறகு அங்கே படமெடுக்க குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து வழக்கறிஞர்கள் இந்த வழக்கைப் பற்றி எழுதவோ, புகைப்படம் வெளியடவோ செய்தால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும், கடுமையாக தண்டனை கிடைக்கும் என்று மிரட்டினார்கள்.  எந்த புகைப்படக் கலைஞரும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

கலைஞர் டிவிக்கு மட்டும் மகாலட்சுமி பேட்டியளித்தார்.  அப்போது அவர், இது பொய் வழக்கு என்பதை பரிந்து கொண்டதால்தான் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  புகார் கொடுத்த பெண் நடத்தை சரியில்லாதவர். அதைத் தட்டிக் கேட்டதால், தங்கள் மீது பொய்ப் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை வெளியிட்டதால், சவுக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து கடுமையான தண்டனை பெற்றுத் தருமாறு, பால்கனகராஜ் மற்றும் அவர் ஜுனியர்களை சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது.

டாஸ்மாக் தமிழ் 5

$
0
0

tas_boy_3

“ஹாய் மச்சான் இந்தாங்க… சில் போறதுக்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணுங்க" என்று மூன்று பேரிடமும் குளிர்ந்த பீர்களை எடுத்து நீட்டினான்.

“அண்ணே ரமோனாவ் கிடைக்கல… பகார்டி இருக்கு. இதுவும் சூப்பரா இருக்கும். இந்தாங்க“ என்று கணேசனிடம் அவர் ஐட்டத்தைக் கொடுத்தான்.

“நீ சாப்படலையாப்பா ? “ என்று வாஞ்சையுடன் கேட்டார் கணேசன்.

“வேண்டான்ணே.. நாள் பூரா இந்த ஸ்மெல்லயே இருந்து மூஞ்சுல அடிச்ச மாதிரி இருக்கு. இந்த வேலைய விட்ட பிறகுதான் சாப்படணும். “

“சரி.. நாங்க சாப்ட்றோம்.  நீ மேட்டரை ஆரம்பி. நல்ல மேட்டரா தேருச்சான்னு சொல்லு.“

“கனிமொழி…..“

“நிறுத்துப்பா…  கனிமொழியெல்லாம் வேணாம். மொதல்ல ஐபிஎல் மேட்டருக்கு வா.  அதுதான் இப்போதைக்கு ஹாட்“ என்றார் கணேசன்.

“இந்த வாரம் பார்க்கு வந்தவங்கல்ளாம் ஃபிக்சிங் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாங்கன்ணே.. பெரும்பாலும் என்.சீனிவாசன் பத்திதான் பேச்சு. “

“அந்த ஆளு பெரிய திருடனாச்சே…!!!“

Untitled-2

“ஆமான்ணே… அந்த ஆளோட வரலாறே திருட்டுத்தனம்தான்.  இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமே இந்த ஆளுக்கு முழுக்க சொந்தமானதில்ல.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தோட பங்குகள்ல ஒரு பாதி, சீனிவாசன்கிட்டயும், அவர் தம்பி ராமச்சந்திரன்கிட்டயும் இருந்துச்சு. இன்னொரு பாதி சன்மார் குழுமத்தோட என்.சங்கர் மற்றும் என்.குமார்கிட்ட இருந்துச்சு.  இந்த இரண்டு குழுவும் சேந்து இந்தியா சிமென்ட்ஸை நடத்திக்கிட்டு வந்தாங்க.  நடுவுல இந்த ரெண்டு க்ரூப்புக்கும் தகராறு வந்து, நிதி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தை நடத்தற பொறுப்பை ஏத்துக்கிட்டு, 10 வருஷம் இந்தியா சிமென்ட்ஸை நிதி நிறுவனங்கள் நடத்துச்சு.

1989ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், முரசொலி மாறன் தலையிட்டு, கம்பெனியை நடத்தற முழுப் பொறுப்பையும் சீனிவாசன்கிட்ட குடுக்க வச்சாங்க. சீனிவாசன்கிட்ட பொறுப்பு வந்ததும், ஆந்திராவோட கோரமண்டல் ஃபெர்ட்டிலைசர்ஸ், விசாகா சிமென்ட்ஸ்னு ரெண்டு கம்பெனிகளையும் வாங்கிப் போட்டார் சீனிவாசன்.  இதுக்கு அடுத்து இன்னொரு பொதுத்துறை நிறுவனமான சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவையிம் வாங்கிப் போட்டார்.  இந்த பொதுத்துறை நிறுவனத்தை வாங்க முயற்சி எடுத்த அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை முரசொலி மாறன் மூலமா பின்வாங்க வச்சார் சீனிவாசன்.

இதுக்குப் பிறகு ஆந்திரா அரசோட பொதுத்துறை நிறுவனமான ஆந்திரா தொழில் வளர்ச்சிக் கழகமும், ராசி சிமென்ட்ஸும் சேர்ந்து 1982ல் ராசி சிமென்ட்ஸ்னு ஒரு நிறுவனத்தை தொடங்குனாங்க. இந்த நிறுவனம் 1983-84ல் இந்தியாவிலேயே லாபகரமான நிறுவனமா தேர்ந்தெடுக்கப்பட்டுச்சு. ஆனா 1998ல் ராசி சிமென்ட்ஸை சீனிவாசன் மோசடி பண்ணி வாங்கினார்.  ராசி சிமென்ட்சோட முதலாளி பி.வி.ராஜுவுக்கு இந்த நிறுவனத்தை விற்பனை செய்யறதுல உடன்பாடே இல்ல.  அவர் 20 வருஷமா உழைச்சு உருவாக்கின இந்த நிறுவனத்தை விற்பனை செய்யறதுக்கு அவருக்கு மனசே இல்லை. ஆனா, அப்போ மத்தியில அமைச்சரா இருந்த முரசொலி மாறனோட உதவியால ஆந்திரா தொழில் வளர்ச்சிக் கழகத்தோடு மொத்த பங்குகளையும் வாங்கிட்டார் சீனிவாசன். பி.வி ராஜுவோட குடும்பத்துல இருந்த இன்னொருத்தருக்கு பணம் கொடுத்து அவர் பங்குகளையும் வாங்கிட்டார் சீனி.

இப்படி அடாவடியா ராசி சிமென்ட்ஸ் நிறுவனத்தை சீனிவாசன் வாங்கினதுக்கு எதிரா அரசு தலையிடனும்னு அப்போ முதலமைச்சரா இருந்த சந்திரபாபு நாயுடுகிட்ட, தொழில் அதிபர்கள் மனு கொடுத்தாங்க.

Srinivasan

வட இந்தியாவில பிரபலமா இருக்கற அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம், தென்னிந்தியாவில கால் பதிக்கணும்னு நெனச்சு, முயற்சி எடுத்தாங்க. அப்படி முயற்சி எடுத்தப்ப, வட இந்தியாவில தயாராகிற சிமென்டை தென்னிந்தியாவுக்கு சாலை வழியா எடுத்து வர்றத விட, கடல் வழியா எடுத்து வந்தா லாபம்னு முடிவு பண்ணாங்க.  அம்புஜா சிமென்ட்ஸ் தென்னிந்தியாவுக்கு வந்தா, தன்னோட வருமானம் பாதிக்கப்படும்னு, சில சுற்றுச் சூழல் அமைப்புகளை வைச்சு நீதிமன்றத்துல வழக்கு தொடுத்து, அதை தடுத்து நிறுத்துனதா சொல்றாங்க.

சீனிவாசனோட வளர்ச்சியில ஒவ்வொரு கட்டத்துலயும் கருணாநிதி இருக்கறார்.”

“கருணாநிதியும் மாறனும் சீனிக்கு அவ்வளவு க்ளோசா… ? என்று வியந்தான் வடிவேலு.

“அட நீ வேற மச்சான்…  2002 ஏப்ரல்ல அப்போ முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா, என்.சீனிவாசன், முரசொலி மாறனோட பினாமின்னு வெளிப்படையா குற்றம் சாட்டுனாங்க“

“என்ன மச்சான் புதுக்கதை சொல்ற.. ? “ என்றான் ரத்னவேல்.

“கதை இல்லடா… வரலாற்றுச் சுவடு. இது சட்டப்பேரவை குறிப்புகள்ல இன்னைக்கும் இருக்கு.  அரசுக்கு சொந்தமான 77.70 ஏக்கர் நிலத்துல காஸ்மாபாலிடன் க்ளப்போட கோல்ஃப் கோர்ஸ் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இந்த நிலத்தை காஸ்மோபாலிட்டன் கிளப்பே மீண்டும் குடுக்கனும்னு கேட்டாங்க. ஆனா 1996-1998ல் முதலமைச்சரா இருந்த கருணாநிதி என் சீனிவாசன் தொடங்கிய புதிய அமைப்புக்கு இதை கொடுத்தாரு. “

Untitled-1

“அவரு என்ன அமைப்பு தொடங்குனாரு ? “ என்று இடைபுகுந்தான் ரத்னவேல்.

“தமிழ்நாடு கோல்ஃப் பெடரேஷன்னு ஒரு அமைப்பை சீனிவாசன் புதுசா தொடங்குனாரு.  இந்த அமைப்புக்கு 99 வருஷத்துக்கு அந்த 77 ஏக்கர் நிலத்தை லீசுக்கு கொடுக்கணும்னு கேட்டாரு.  ஆனா காஸ்மோபாலிட்டன் கிளப் தங்களுக்கு மீண்டும் இந்த லீஸை கொடுக்கனும்னு கேட்டாங்க.  கருணாநிதி, ஒரு சமரச உத்தரவா, ரெண்டு பேருக்கும் சேத்து 30 வருஷ லீசுக்கு அந்த 77 ஏக்கர் நிலத்தை வழங்கி உத்தரவு போட்டாரு.  இதிலேர்ந்தே தெரியலலையா முரசொலி மாறன் சீனிவாசனோட பினாமின்னு சொன்னாங்க ஜெயலலிதா.”

“திமுகவுல அந்த ஆளுக்கு அவ்வளவு செல்வாக்கா மச்சான் ? “ என்று வினவினான் ரத்னவேல்.

“எப்போப் பாத்தாலும், பார்ப்பன சதி… ஆரிய சதின்னு பேசறதுதான் கருணாநிதிக்கு வேலை. ஆனா தொழில் கூட்டணிலேர்ந்து எல்லா கூட்டணியும் பார்ப்பனர்களோடுதான்.

இது மட்டுமில்லாம சீனிவாசன் ஆந்திர முதல்வரா இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியோட நெருக்கமா இருந்து பல கோடி சம்பாதிச்சுருக்காரு…  ராஜசேகர ரெட்டியோட மகன் ஜெகன் மோகன் ரெட்டியோட கார்மெல் ஏசியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துல 5 கோடி முதலீடு செய்துருக்கார்.  அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவங்க ஒரு பங்கு 10 ரூபாய்க்கு வாங்கனப்போ, சீனிவாசன் ஒரு பங்கு 252 ரூபாய்க்கு வாங்கியிருக்கார்.

இதே போல சாக்ஷி டிவி நடத்துற ஜெகதி பப்ளிகேஷன்ஸ்ல 40 கோடி முதலீடு பண்ணியிருக்கார். ஜெகதி பப்ளிகேஷன்ஸ் செயல்படத் தொடங்கறதுக்கு முன்னாடியே ஒரு பங்கு 350 ரூபாய்க்கு சீனிவாசன் வாங்கியிருக்கார். இப்படி இவர் பண்ணிய முதலீடுகளுக்கு கைமாறா, சீனிவாசனோட சிமென்ட் கம்பெனிக்கு கடப்பா மாவட்டத்துல இருக்கற நிலத்தோட லீஸை புதுப்பிச்சு குடுத்தார் ராஜசேகர ரெட்டி. சீனிவாசனோட சிமென்ட் கம்பெனிக்காக கக்னா நதியிலேர்ந்து ஒரு நாளைக்கு மூணு லட்சம் கேலன் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்ததை மாத்தி ஒரு நாளைக்கு 10 லட்சம் காலன் தண்ணீர் எடுத்துக்கலாம்னு ஒரே நாள்ல உத்தரவு போட்டார் ராஜசேகர ரெட்டி.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமை தொடங்குனதுல பெரிய லாபம் சீனிவாசனோட இந்தியா சிமென்ட்ஸ்க்குதான். இந்த டீமைத் தொடங்கி இந்த ஆளு நடத்தின முறைகேடுகளைப் பத்தி பத்திரிக்கைகள்ல விரிவா வந்துருக்கு படிச்சிருப்பீங்கள்ல.. ”

”படிச்சோம் மச்சான்.  ஐபிஎல் பத்தி வர்ற ஒவ்வொரு செய்தியும் தலை சுத்த வைக்குது.  எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கானுங்க… ? ” என்று எரிச்சல் பட்டான் பீமராஜன்.

”இந்த ஐபிஎல் வெளையாட்டே, கருப்புப் பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கவனுங்களுக்காக தொடங்கப்பட்டது.  கருப்புப் பணம் வச்சுருக்கவனுங்க எப்படி நேர்மையா நடப்பானுங்க… ?  அந்த விளையாட்டு ஒழுங்கா நடக்குதா, நடக்கலையான்னு யாரும் கவனிக்கக் கூடாதுன்றதுக்காகத்தான், பெண்களையும் ஆட விட்றாங்க…”

”சரிப்பா.. அடுத்த மேட்டருக்கு வா…” என்றார் முதல் ரவுண்டை முடித்திருந்த கணேசன்.

”அநேகமா திருமாவளவனை கழற்றி விடறதுன்னு முடிவெடுத்துட்டாரு கருணாநிதி”

”பொண்ணை ராஜ்யசபா எம்.பியாக்கனும்னா ?”

”அப்புறம்… கருணாநிதியை பொறுத்தவரை குடும்பத்துக்கு பிறகுதானே கட்சி, கொள்கையெல்லாம். அப்போல்லோ மருத்துவமனையில இருக்கற ராமதாஸை சந்திச்ச கனிமொழி, பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏக்களை தனக்கே வாக்களிக்கனும்னு கேட்ருக்காங்க.  அவரும் சரின்னு ஒத்துக்கிட்டாராம். ”

”பாமக எம்எல்ஏக்கள் மட்டும் கனிமொழியை எம்.பியாக்க போதுமா என்ன ? ”

”மொதல்ல இருக்கறதை புடிச்சு வைப்போம். மத்ததெல்லாம் தானா வந்து விழும்னு நெனைக்கறார்”

”சரி திருமா என்ன நெனைக்கறார் ? ”

”முதுகில குத்தப்பட்டதா உணர்றார்.  இத்தனை நாள் கருணாநிதியோட அத்தனை தவறுகளுக்கும் நாம சிலுவை சுமந்தோம்.  ஆனா, தன் மகளுக்காக, இப்படி முதுகுல குத்தறாரேன்னு நெனைக்கறார். ”

”அரசியல்ல விசுவாசம்ன்ற வார்த்தைக்கு ஏதுப்பா இடம் ? ”

dsc_4463

”அதெல்லாம் அவருக்கு தெரியாதா என்ன ? தெரியும். ஆனா, அதிமுகவுல, 2 சீட் குடுப்பாங்களான்ற கவலை மட்டும்தான் அவருக்கு இருக்கு.  இந்த நேரத்துலயே வெளியில போனா, அதிமுக அணியைத் தவிர வேறு வழி இல்லை.  அதனால, போனா பேச்சுவார்த்தை நடத்தறதுக்கு லிவரேஜ் இல்லாம போயிடும்னு நெனைக்கறார். ”

”சரி.. திருமாவளவன் வந்தா தலித் ஓட்டுக்கள் கிடைக்கும்னு அந்த அம்மா நெனைக்க மாட்டாங்களா ? ”

”அது அவங்களுக்கும் தெரியும். மொதல்ல திருமாவளவனை வெளியில அனுப்பட்டும்னு வெயிட் பண்றாங்க.”

”சரி.. மருத்துவர் அய்யா எப்படி இருக்கார் ? ” என்று கவலையோடு கேட்டான் ரத்னவேல்.

”அவருக்கென்ன… அறுவை சிகிச்சை முடிஞ்சு ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கார். இனிமேதான் அவருக்கு சோதனையே ஆரம்பிக்கப்போகுது.   ஏற்கனவே நான் சொன்னேன்ல.. வழக்குகளை சரியா கவனிக்காததுனால வன்னியர்கள் அவர் மேல அதிருப்தியா இருக்காங்கன்னு ? ”

”ஆமாம்.. ”

”திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர் சங்க உறுப்பினர்கள் இனி மருத்துவரை ஆதரிப்பதில்லைனு முடிவெடுத்திருக்காங்களாம்.  எண்பதுகள்ல நடந்த வன்னியர் சங்க போராட்டத்துல கைதான டாக்டர் பு.த.இளங்கோவன், பு.த.அருள்மொழியெல்லாம் இவ்வளவு ஆர்ப்பாட்டமா பண்ணாங்க.. இவரு மட்டும் ஏன் இல்லாத நடிப்பு நடிக்கறார்னு அவங்கள்லாம் கோவமா இருக்காங்க.  அனேகமா, வழக்குகள்ல சிக்கியிருக்குற வன்னியர்களுக்கு அய்யா உதவி செய்யலன்னா, அவரோட அடிப்படையே ஆட்டம் கண்டுடும். ”

”சரி… ஹோம் செக்ரட்டரியை ஏன் மாத்தனாங்கன்னு சொல்லு மச்சான்”

”உங்க பத்திரிக்கையில கவர்ஸ்டோரி வச்சுருக்கற மாதிரி, சசிகலா தூண்டுதலால ராஜகோபாலை மாத்தலடா..

ind_32856

சசிகலாவோட கை தோட்டத்துல ஓங்கியிருந்தாலும், அதிகாரிகளை நியமனம் செய்யற அளவுக்கு இன்னும் உயரலை.  ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியிலேர்ந்து சசிகலா இன்னும் மீளலை. சகிகலாவுக்கு பழைய அதிகாரம் வந்துச்சுன்னா எதுக்காக அவர் தம்பியை சமீபத்துல புது வழக்குல கைது செஞ்சாங்க.. ?

ஆக அது காரணம் இல்லை.  டிஜிபி ராமானுஜத்துக்கும், ராஜகோபாலுக்கும் பெரிய பனிப்போர் நடந்துக்கிட்டு இருந்துச்சு.  ராமானுஜம் எந்த ப்ரொபோசல் அனுப்பினாலும் அதை திருப்பி அனுப்பறது. ராமானுஜம் அனுப்பற அறிக்கைகளில் தப்பு கண்டுபிடிக்கறது.. இதே மாதிரி பல மாதங்களா நடந்துக்கிட்டு இருந்துச்சு.

இது இல்லாம எந்த போலீஸ் அதிகாரியையும் மதிக்கறதே இல்ல. யாரு பாக்க வந்தாலும் மணிக்கணக்கா காக்க வைக்கறது.  இழுத்தடிக்கறது. தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை வேவு பாக்கறது, மரியாதை இல்லாம நடத்தறது. செக்ரட்டேரியட்ல இந்த ஆளை லூசுன்னுதான் சொல்றாங்க.  தொடர்ந்து இந்த ஆளு மேல புகார்கள் போனதாலதான் மாத்துனதா சொல்றாங்க. அத்தோடு சேர்ந்து, அதிகாரிகள் பதவி உயர்வை தாமதம் செஞ்சதும் ஒரு காரணம்னு சொல்றாங்க. ”

”சரி புது ஹோம் செக்ரட்டரி எப்படி ? ”

”நல்ல அதிகாரின்னுதான் எல்லாரும் சொல்றாங்க… இவரு திருநெல்வேலியில கலெக்டரா வேலை பாத்தப்போ அங்கே ஜாங்கிட்டும் எஸ்.பியா வேலை பாத்துருக்கார்.  அதனால, ஜாங்கிட் இவரு எனக்கு நெருக்கம்னு சொல்லிக்கிட்டு இருக்கார். ஆனா, நிரஞ்சன் மார்டி ஜாங்கிட்டுக்கு நெருக்கமெல்லாம் கிடையாது.  ஓரளவுக்கு நியாயமான அதிகாரியும் கூடன்னு சொல்றாங்க.

”சரி வேற போலீஸ் நியூஸ் இருக்கா ? ”

”மண்டியிடாத மானம், வீழ்ந்து விடாத வீரம்…”

”என்னடா நாம் தமிழர் கட்சியில சேந்துட்டியா… ? ”

”இல்ல மச்சான்.. ஒரு காவல் துறை அதிகாரி, மண்டி போட்டு மன்னிப்பு கேட்ட கதையை சொல்ல வந்தேன்…”

Seshasai_IPS2

சேஷசாயி 

”யாருடா அது ? ” என்ற- ஆர்வமாக கேட்டான் வடிவேலு.

”சேஷசாயி. இவரு, மத்தியக் குற்றப்பிரிவுல இருந்தப்போ, ஒரு புகார்ல ஹெவியா அமவுன்ட் வாங்கிட்டாரு. இதப்பத்தி ராமானுஜம் அறிக்கை அனுப்பிட்டாரு.  சி.எம்க்கு தகவல் தெரிஞ்சு சட்டைய கழட்ட போறாங்கன்னு பயந்து, நேராப் போயி மண்டி போட்டு மன்னிப்பு கேட்டாராம்.  ஏற்கனவே பொண்ணுக்கு மெடிக்கல் சீட் கேக்கறதுக்காக போனப்போ, அய்யங்காருன்னு தெரியனும்னு, மீசையை எடுத்தவரு இவரு. ”

”இவ்வளவு கேவலமாவா இருப்பாங்க ? ” ச்சை என்று அலுத்துக் கொண்டான் ரத்னவேல்.

”இதைவிட கேவலமாவெல்லாம் இருக்காங்க. இதெல்லாம் சாதாரணம் பாஸ். ”

”சரி அடுத்த மேட்டருக்கு வா…” என்று அவசரப்பட்டான் ரத்னவேல். அவன் தன் பீரை முடித்திருந்தான்.

”கீழ ஃப்ரிஜ்ல இன்னும் மூணு பீர் இருக்கு எடுத்துட்டு வா”   என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான் தமிழ்.

”ஒரு மீசையை புகழ்ந்தா இன்னொரு மீசைக்கு ஆக மாட்டேங்குது”

”யாருப்பா ரெண்டு மீசை ? ”

”புகழப்பட்ட மீசை பொன்.மாணிக்கவேல்.  சேலத்துல பொன்.மாணிக்கவேல் எஸ்.பியா இருந்தப்போ ஒரு கொலை வழக்குல நல்லா விசாரிச்சாருன்னு அந்த வழக்கு மேல் முறையீட்டப்போ, சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுச்சு. இதே வழக்கு உச்சநீதிமன்றம் போனப்போ, உச்சநீதிமன்றத்திலும், நாங்களும் உயர்நீதிமன்றத்தின் பாராட்டுதல்களை ஆமோதிக்கிறோம்னு எழுதிட்டாங்க…  பொன்.மாணிக்கவேலுக்கும், ஜாங்கிட்டுக்கும் ஏழாம் பொறுத்தம்ன்றது ஊருக்கே தெரியும்..

உச்சநீதிமன்றம் பாராட்டுச்சுன்ற விபரம் தெரிஞ்சதுமே செம காண்டாயிட்டாராம் ஜாங்கிட்”

”ஆனா, பொன்.மாணிக்கவேலை நேரா போயி ஜாங்கிட்டோ பாத்திருக்காருல்லயா ? ” என்றான் ரத்னவேல் தன் இரண்டாவது பீரை திறந்து கொண்டே.

pon_manickavel_1

”பொன்.மாணிக்கவேலை சுத்தமா ஜாங்கிட்டுக்கு பிடிக்காது.  எப்படியாவது பொன்.மாணிக்கவேலை ஒழிச்சு கட்டனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காரு.  ஆனா, பொன்.மாணிக்கவேல் உளவுத்துறை டிஐஜியா இருந்தப்போ, இவரே நேராப் போயி பொன்.மாணிக்கவேலை சந்திச்சாரு.  ஆல் தி பெஸ்ட் சொன்னாரு. ”

”கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா ? ”

”அதான் ஜாங்கிட்….”

”பத்திரிக்கையாளர்களை போலீஸ் தாக்கிட்டாங்களாமே.. என்ன மச்சான் விஷயம் அது…” என்றான் பீமராஜன்.

”விஜய்னு ஒரு சினிமா பைனான்சியர் துப்பாக்கிய வைச்சுக்கிட்டு சுட்டுடுவேன்… சுட்டுடுவேன்னு மெரட்டிக்கிட்டு இருந்தாரு.  அந்த சம்பவத்தை படம் பிடிக்கப் போன புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் போலீஸ் தடியடி நடத்துனாங்க…”

23_05_2013_003_019

”வழக்கமா பத்திரிக்கையாளர்களை போலீஸ் அடிக்க   மாட்டாங்களே… ? ”

”உத்தரவு வராமயா அடிப்பாங்க… கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பவனீஸ்வரி தலைமையிலதான் இந்த ஆபரேஷன் நடந்துச்சு…. ஒரு போலீஸ் ஆபரேஷன் எப்படிப் பண்ணக் கூடாதோ, அப்படி நடந்துச்சு இந்த ஆபரேஷன்.. எல்லாத்தையும் போட்டு சொதப்பி, கடைசியில லத்தி சார்ஜ் வரைக்கும் வந்துச்சு…

K-Bhavaneeswari

பவனீஸ்வரி

இந்த பவனீஸ்வரிக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுல எப்படி வேலை பாக்கறதுன்னு சுத்தமா தெரியல. சில மாசத்துக்கு முன்னாடி, தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஒரு போராட்டம் நடத்துனப்போ, தேவையே இல்லாம, ஒரு லத்தி சார்ஜுக்கு உத்தரவு குடுத்து இதே மாதிரி சொதப்புனவங்கதான் இந்த அம்மா…”

”இந்த மாதிரி அதிகாரியெல்லாம் ஏன் வச்சுருக்காரு ஜார்ஜ் ? ”

”அவர் மேலயே சி.எம். ரொம்ப கோவமா இருக்காங்க…. ”

”அவர் சி.எம்க்கு ரொம்ப நெருங்கிய அதிகாரியாச்சே…”

”ஜெயலலிதாவுக்கு சசிகலாவைத் தவிர யாருமே நெருக்கமா இருக்க முடியாது மச்சான்.. எந்த அதிகாரியையும் அந்த அம்மா நம்பாது… இந்த அதிகாரிங்களுக்கெல்லாம் மனசுல நெனப்பு.. நம்பதான் சிஎம்முக்கு க்ளோஸ்னு… எம்.ஜி.ஆர் பீரியட்லேர்ந்து எத்தனை அதிகாரிகளை இந்த அம்மா பாத்துருக்கும்… இவனுங்க போட்ற கூழைக்கும்புடுலயே தெரியாது…. எப்படிப்பட்டவங்கன்னு ?

george_4

யாசின் மாலிக் சென்னை வந்ததை சென்னை மாநகர காவல்துறை முன்கூட்டியே தகவல் சொல்லாம கோட்டை விட்டுடுச்சுன்னு ஒரு கோபம். சென்னையில போக்குவரத்து சரியா பராமரிக்கப்படலன்னும் நெனைக்கறாங்க. இது போக, டிஜிபி அனுப்புன அறிக்கையிலயும், சென்னை மாநகர காவல்துறை மேல பல புகார்கள் சொல்லப்பட்டு இருக்கு.  இதையெல்லாம் சேத்து கடுமையான கோவத்துல இருக்காங்க. சமீபத்துல கூட, சிஎம்மை ஜார்ஜ் சந்திச்சப்போ செம டோஸ் விட்ருக்காங்க… எப்போ வேணாலும் மாறுதல் வரும்னு சொல்றாங்க…”

”ஜார்ஜ் போயிட்டார்னா.. வரதராஜு…. ? ”

”நீ வேறடா… ஆடிக்காத்துல ஆடி காரே பறக்குது…”

”அவருக்கு மட்டும்தான் மாறுதல் இருக்குமா… ? ”

”உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரிக்கும் மாறுதல் வரலாம்னு சொல்றாங்க மச்சான். அவருக்கும் டிஜிபிக்கும் உறவு சரியில்லாம இருக்கு.

”உளவுத்துறைக்குள்ளயே சிக்கலா ? ”

”என்ன பண்றது… பிஜேபி அலுவலகம் கமலாலயத்தை சில முஸ்லீம் அடிப்படைவாதிகள் நோட்டம் பாத்துருக்கறதா உளவுத்துறைக்கு தகவல் வந்துருக்கு. இதை மத்திய உள்துறை மாநில உள்துறைக்கு அனுப்பி வச்சுருக்காங்க. பெங்களுரு பிஜேபி அலுவலகம் தாக்கப்பட்டது போல, இங்கயும் ஏதாவது திட்டம் போடுறாங்களான்னு உளவுத்துறை தீவிரமா கண்காணிச்சுக்கிட்டு இருக்காங்க. ”

“அப்புறம் வேற என்ன போலீஸ் நியூஸ் தம்பி ?” என்று கடைசி ரவுண்டை கவிழ்த்துக் கொண்டே கேட்டார் கணேசன்.

“இணை ஆணையர் சண்முகவேலோட மகனுக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில ஆர்த்தோ மருத்துவ முதுகலை சீட்   குடுத்துருக்காங்க. “

Shanmugavel_IPS

“என்னப்பா சொல்ற… ? அந்த சீட் ஒரு கோடி ரூபா போகுமே ? “

“போகும்தான். இந்த ஆளு சி.எம்மை பாத்து நான் ஒரு கழக விசுவாசி. மஃப்டியில இருக்கும்போது அதிமுக கரை வேட்டிதான் கட்டுவேன்.  உள் பனியர் கூட கருப்பு, சிவப்பு வெள்ளையிலதான் போட்ருக்கேன்னு சொல்லியிருக்கார்.  அந்த அம்மாவும் போனாப் போகுதுன்னு, அவங்க கோட்டாவுல பி.ஜி சீட் ஒதுக்கியிருக்காங்க.

ஆனா, தன்னை ஒரு அதிமுக அதிகாரின்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, சண்முகவேல் வெளியில எல்லார்கிட்டயும், எனக்கு ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலம்தான் சீட் குடுத்தார்னு சொல்லிக்கிட்டு இருக்கார். “

“அப்போ அவர் அதிமுக அதிகாரி இல்லையா… ? “

“1995லயே தன்னோட தம்பியை மின்சார வாரிய உதவிப் பொறியாளரா ஆக்கினார்.  அம்மாதான் வாங்கிக் குடுத்தாங்க.  ஆனா, திமுக ஆட்சி முழுக்க நல்ல பதவியில இருந்தார். அதுதான் சண்முகவேலோட சாமர்த்தியம். “

”சரிடா.. கோர்ட் நியூஸ் என்ன இருக்கு… ? ”

“போன வாரம் பூரா கோர்ட்ல சன் டிவி மகாலட்சுமி பத்திதான் பேச்சு…  மகாலட்சுமியோட தம்பி மனைவி குடுத்த கம்ப்ளெயின்டுல மகாலட்சுமி, அவங்க அம்மா, தம்பி மூணு பேர் மேலயும் எப்ஐஆர் போட்டுட்டாங்க.  இந்த எப்ஐஆரையே போட விடாம, வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், பால் கனகராஜ் ரொம்ப முயற்சி பண்ணாங்க. ஆனா, காவல்துறையில ப்ராம்ப்டா எப்ஐஆர் போட்டுட்டாங்க.

29529_132364633445226_2686355_n 

மகாலட்சுமியோட அம்மா ஜான்சி ராணி, தம்பி சதீஷ் குமார் ஆகிய ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.  மகாலட்சுமிக்கு மட்டும் உயர்நீதிமன்றம் ஜாமீன் குடுத்துடுச்சு.  ஆனா, கைதான அம்மாவையும், தம்பியையும் ஜெயிலுக்கு அனுப்பாம, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தோட முன்னாள் தலைவர் பால் கனகராஜ் 100 வக்கீல்களைக் கூட்டிக்கிட்டு எக்மோர் நீதிமன்றத்துக்குப் போயி, நீதிபதியை மிரட்டி ஜெயிலுக்கே போக விடாம ஜாமீன் வாங்கிட்டாங்க…..”

”அடப்பாவிகளா…. இப்படியெல்லாம் நீதிபதியை மிரட்டி ஜாமீன் வாங்க முடியுமா ? ” என்று வாயைப் பிளந்தான் வடிவேலு

”ஏன் மச்சான் முடியாது ?  100 வக்கீல்களை கூட்டிக்கிட்டு எக்மோர் கோர்டுக்கு போயி நீதிபதியை இங்க அங்க நகர விடாம, உங்களுக்குத் தெரியாத சட்டம் இல்ல மைலார்ட்னு பேசுனா குடுக்காம வேற என்ன செய்வாங்க… நீதிபதி வெளியே போகனும் இல்லயா ? ”

”சரி 100 வக்கீல்கள் ஏன் போனாங்க ? ”

IMG_9083

”நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை இது.. வக்கீல்களுக்கு வருமானம் இல்லை.  இன்னைக்கு ஒரு நாள் போயி கோர்ட்ல நின்னா, ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம், பிரியாணி பாக்கெட் தர்றதா சொன்னதும் 100 பேரும் கௌம்பிட்டாங்க…. மகாலட்சுமிக்கு எங்கேர்ந்துதான் பணம் வந்துச்சுன் தெரியலை.. அன்னைக்கு மட்டும் 5 லட்ச ரூபாய் செலவு பண்ணியிருக்காங்க.. ”

”சரி பால் கனகராஜ் ஏன் இப்படி மகாலட்சுமிக்கு சப்போர்ட் பண்றாரு.. ? ”

”பால் கனகராஜ் இதுக்கு முன்னாடி என்ன பண்ணியிருக்கார்.. என்ன பண்ணிக்கிட்டு இருக்கார்ன்ற விபரங்களையெல்லாம், உயர்நீதிமன்றத்துல ஒரு கோஷ்டி சேகரிச்சிக்கிட்டு இருக்காங்க.  வக்கீல் சங்க தேர்தல் ஆகஸ்ட் மாசம் வருது… அப்போ மொத்த டீடியிலையும் எடுத்து விடுவாங்கன்னு சொல்றாங்க…”

”சரி.. பெண்கள் பாதிக்கப்பட்ட இந்த மாதிரி விவகாரங்கள்ல ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு எதுக்காக நீதிபதி வாசுகி ஜாமீன் கொடுத்தாங்க ? ”

”பெண்ணா இருந்தா நல்ல நீதிபதியா இருப்பாங்கன்னு யார் சொன்னது உனக்கு ? வாசுகி நீதிபதியா இருக்கவே தகுதியில்லாதவங்க.. ”

”என்னப்பா இப்படி சொல்ற ? ”

942390_465019793580486_1606533008_n

நீதிபதி வாசுகி 

”நான் சம்பவத்தை சொல்றேன். நீயே சொல்லு.  வெள்ளிக்கிழமை வாசுகி ஜாமீன் நீதிமன்றத்துல அமர்ந்திருந்தாங்க.  அன்னைக்கு மட்டும் 1500 ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகள்.  எல்லா வழக்குகளையும் முடிக்க நேரம் இருக்காதுன்றதுக்காக, ஐடெம் நம்பர் 721லேர்ந்து 951 வரைக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 420ல பதிவு செஞ்ச அத்தனை வழக்குகள்லயும் ஜுன் 3ம் தேதி வரைக்கும் கைது செய்யக்கூடாதுன்னு ஒரு ப்ளான்கெட் உத்தரவு போட்ருக்காங்க. ”

”மச்சான்… 1500 வழக்குகளை எப்படி ஒரே நாள்ல முடிக்க முடியும் ? அதான் அப்படி உத்தரவு போட்ருக்காங்க.. ” என்று வாசுகிக்காக வக்காலத்து வாங்கினான் பீமராஜன்.

”என்னடா லூசு மாதிரி பேசுற… ?  அதுக்காக 230 வழக்குகள்ல மொத்தமா ஜாமீன் குடுக்கறதா…. ? இதுதான் நீதி வழங்குற லட்சணமா ?  உலகத்துல எங்கயாவது இந்த மாதிரி ஜாமீன் குடுக்கறத கேள்விப்பட்டிருக்கியா ? வழக்குகள் அதிகம் இருந்தா, மீதம் உள்ள வழக்குகள் நாளை விசாரிக்கிறேன்னு, சனிக்கிழமை விசாரிக்கிறது. அவங்க உயர்நீதிமன்ற நீதிபதி. என்னைக்கு வேணாலும் வழக்கை விசாரிக்கலாம்.  அதை விட்டுட்டு இப்படியா தீர்ப்பு குடுக்கறது… ?  அவங்க ஜாமீன் குடுத்ததுல சஞ்சய் குமார் பாஃப்னான்ற ஒரு ஐபிஎல் சூதாட்ட புக்கி ஒருத்தன் இருக்கான் தெரியுமா ? இந்த அம்மாவையெல்லாம், மை லார்ட்னு கூப்புடுறாங்க பாரு.. தலையெழுத்து..

இது மட்டும் இல்ல… லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சாதகமாவும் உத்தரவு பிறப்பிச்சிருக்காங்க நீதிபதி வாசுகி.  கோயம்பத்தூர்ல இருக்கற ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மேல சிபிஐ வழக்கு பதிவு பண்ணாங்க.  எந்தவிதமான உட்கட்டமைப்பு வசதியும் இல்லாம 2011-2012ம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை நடத்தியிருக்காங்க.  அகில இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து இந்த அனுமதியை வாங்கியிருக்காங்க. இதுக்காக அந்தக் கல்லூரியின் நிர்வாகி சவுந்தரராஜ் முன் ஜாமன் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்குலயும் வாசுகி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவுல ஜாமீன் வழங்க என்ன காரணம்னு சொல்லியிருக்கார் தெரியுமா ?

அவருக்கு 77 வயசு ஆயிடுச்சு.  அதனால அவர் வயசை கருத்தில் கொண்டும், அவரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அவசியமில்லைன்றதுனால ஜாமீன் வழங்குகிறேன்னு சொல்லியிருக்கார்.  கஸ்டடியில வச்சு விசாரிக்கனுமா, விசாரிக்க வேணாமான்றத முடிவு பண்ண இவங்க யாரு ? அதை முடிவு பண்ண வேண்டியது புலனாய்வு அதிகாரியா இல்லையா ?  இது நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறிய செயல் மட்டுமில்ல… அயோக்கியத்தனமான செயல்.  லஞ்சம் குடுத்து, அனுமதி வாங்குவானுங்க.  அப்படி வாங்குன சீட்களுக்கு கோடிக்கணக்குல வசூல் பண்ணுவானுங்க…  இப்படிப்பட்ட காலேஜ்ல படிச்சுட்டு வர்ற பல் டாக்டருங்க பல் கூசுதுன்னு போனா, பத்து பல்லை புடுங்குவானுங்க…

இப்படிப்பட்ட அயோக்கியனுகளை காப்பாத்துற இந்த நீதிபதி வாசுகி இந்த அயோக்கியர்களுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை.”

”சரி.. டென்ஷன் ஆகாதப்பா தமிழு… அடுத்த மேட்டருக்கு வா.. ”

”ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞரும் சேந்து, கொடைக்கானல்ல பெரிய சொகுசு பங்களா கட்டியிருக்காங்க. ”

”இதுல என்னப்பா தப்பு இருக்கு.  நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைஞ்சு வேலை செஞ்சாத்தானே நல்ல நீதிபரிபாலனம் செய்ய முடியும் ? ”

”கிழிச்சாங்க. நிதிபரிபாலனம், நிதி பரிவர்த்தனை, நிதி பங்கீடு வேணா செய்வாங்க.  அந்த பங்களாவில, இப்போ சென்னை உயர்நீதிமன்றத்துல இருக்கற பல நீதிபதிகள், குடும்பத்தோடு போய் தங்கி, கோடைக்காலத்தை கழிச்சுட்டு வந்துருக்காங்களாம். ”

”இதுல என்னப்பா தப்பு இருக்கு. நட்பு அடிப்படையில போயிருப்பாங்க. ”

”தப்பு இல்லதான்ணே… இதே மாதிரி நட்பு அடிப்படையில தீர்ப்பும் வழங்குவாங்க.  அதான் சிக்கலே. ”

அப்புறம், நாம போன வாரம் நீதிபதியாகப் போறவங்க பட்டியல்ல தங்கசிவம்ன்றவர், பவர் ஆப் அட்டார்னி வாங்கிட்டு அரசு ஆக்ரமிப்”

பண்ண நிலத்துக்காக வழக்கு தொடுத்தார்னு பேசிக்கிட்டு இருந்தோம்ல… ? ”

”ஆமா… ”

”அவர் பவர் ஆப் அட்டார்னியெல்லாம் வாங்கலையாம்.  அந்த நிலத்தையே 2006ல வாங்கியிருக்கார்னு அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சொன்னாங்க. ”

”அப்போ அவரு நீதிபதியாகத் தகுதியானவர்தானா ? ”

”அந்த நிலத்துக்கு பவர் ஆப் அட்டார்னி வாங்கலையே தவிர, அவருக்கு முழு நேரத் தொழில் ரியல் எஸ்டேட்தான்றதுல எந்த சந்தேகமும் இல்லை.  உயர்நீதிமன்றத்தை ரியல் எஸ்டேட் போட்டு விக்கலாம்னா, அவரை நீதிபதியாக்கலாம்.. ”

”சரி போலாம்பா..  சாப்டுட்டு தூங்கலாம். ”

”இருங்கன்ணே.. ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்லிட்றேன்.  சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியா உத்தரப்பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி செந்தில்பாண்டியன் இருக்கிறார். இவர் ஸ்டார் டிவி பாலான்ற நபரை அடிக்கடி சந்திச்சு ரொம்ப நெருக்கமா இருக்கறார். ”

150313

செந்தில் பாண்டியன் ஐஏஎஸ்

”அந்த பாலா ஒரு நிழலான நபராச்சே…. ஜாங்கிட்டுக்கு நெருக்கமானவராச்சே…”

”டக்குனு புடிச்சுட்டீங்க.  ஜாங்கிட்டுக்கு நெருக்கமான நபர் எப்படிப்பட்டவரா இருப்பார்னு உங்களுக்கு சொல்ல வேணாம்.  இந்த பாலா, செந்தில் பாண்டியனோட தனக்கு இருக்கற நெருக்கத்தை பயன்படுத்திக்கிட்டு, சரியான வசூல் வேட்டையில ஈடுபட்டு இருக்கறதா சொல்றாங்க. ”

”சரி.. அவர் ஏன் பாலாவோட நெருக்கமா இருக்கறார் ? ”

”போங்கன்ணே… அதெப்போயி கேட்டுக்கிட்டு…”

”அப்படி சொல்ல முடியாதபடி என்னப்பா விஷயம்.. சரி விடு. போலாம் வா.. ”

காலி பாட்டில்களையும், க்ளாஸ்களையும் எடுத்து ஓரமாக வைத்து விட்டு, அனைவரும் கிளம்பினர்.

இரண்டு பேர் ஏழு காதல்..

$
0
0

என்னடா இது.. இரண்டு பேர் ஏழு காதல் என்று வியப்பாக இருக்கிறதா.  ஆம். இது ஒரு வித்தியாசமான காதல் கதைதான்.  கண்றாவிக் கதை என்றும் சொல்லலாம்.

முக்கோண காதல் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாற்கோண காதல் கதை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ஏழு முனையான ஹெப்டகனாக இருந்து இறுதியில் ஆக்டகனாக மாறிய காதல் கதை. கதையின் இறுதியில் காதல் அஷ்டகோணலாவது தனிக்கதை.

29529_132363156778707_580865_n

மகாலட்சுமி. மங்களகரமான பெயர்.  சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் படிக்கிறார்.  அப்படி படிக்கையில் அறிமுகமானவர்தான் ரூபன். அவரும் மகாலட்சுமியோடு அதே கல்லூரியில் படிக்கிறார்.  மகாலட்சுமி ரூபனை சந்தித்ததும் பாரதிராஜா திரைப்படங்களில் வருவது போன்று வெள்ளை உடை அணிந்த தேவதைகள், ரீங்காரமிட மன்மதன் அம்பு இருவரையும் தாக்குகிறது.  பார்த்தவுடன் பரவசம்.  காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கத் தொடங்குகிறார்கள். இது ஓரு தலைச்சிறந்த காதல் கதையாக உருவாகியிருக்க வேண்டியது.  சட்டக்கல்லூரியின் பல காதல் கதைகளைப் போன்றே அமரக் காதல் கதையாக உருவாகியிருக்க வேண்டியது… ஆனால், இந்தக் காதலுக்கு மகாலட்சுமியின் கணவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அதிர்ச்சியடையாதீர்கள்.  மகாலட்சுமியும் ரூபனும் காதலாகி, கசிந்துருகியபோது, மகாலட்சுமிக்கு திருமணமாகி, 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.  ஆனால் அமர காதலை தடுக்க முடியுமா என்ன ?  மகாலட்சுமி மற்றும் ரூபனின் காதல் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெறுகிறது.   இந்த இடத்தில் கதையில் ஒரு ஃப்ளாஷ்பேக்.

மகாலட்சுமி ரூபன் காதல் கதை தொடங்குவதற்கு முன்பாகவே ரூபன் பத்து வருடமாக தனது பள்ளித் தோழியை காதலித்துக் கொண்டிருக்கிறார்.  அந்தப் பெண்ணை திருமணம் செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படித் திட்டமிட்டுக் கொண்டிருக்கையிலேயே மகாலட்சுமியோடு ஏற்கனவே குறிப்பிட்ட அந்த அமரக் காதல் உருவாகிறது.

இந்த நேரத்தில் ரூபன் பழைய காதலை தொடருவதா… மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகருவதா என்று இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறார்.  அவர் தவிப்பைப் பார்த்து பார்வையாளர்களும் துடிக்கிறார்கள்.   இந்த இடத்தில் மகாலட்சுமியே பிரச்சினையை முடித்து வைக்கிறார்.  அந்தப் பெண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது என்று கட்டளையிடுகிறார்.  அந்தப் பெண் வீட்டுக்கும் இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரிந்து அந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிக்கிறார்கள்.

இந்த இடத்தில்தான் திரைக்கதையில் ஒரு ட்விஸ்ட் வருகிறது.  மிகப் பெரிய ட்விஸ்ட்.   ரூபனுக்கு திருமணமாகிறது.  திருமணமான விவகாரம் மகாலட்சுமிக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்படுகிறது.  திருமணமானால் ரூபன் தன்னை விட்டு விலகிப் போய் விடுவார் என்று ரூபனுக்கு திருமணமானதை எப்போதுமே மகாலட்சுமி எதிர்த்தே வந்திருக்கிறார்.  அதனால், ரூபன் மகாலட்சுமிக்கு தெரியாமல் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார். ஒரு வழியாக திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. பாரம்பரியமான கிறித்துவ குடும்பத்திலிருந்து ரூபனுக்கு திருமணம் செய்யப்படுகிறது.   மணப்பெண் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.

ரூபனுக்கு தடபுடலாக திருமணம் நடக்கிறது.  2008 மே மாதம் திருமணம் நடக்கிறது.  ஒரு லட்ச ரூபாய் வரதட்சிணை, வைர மோதிரத்தோடு மொத்த திருமண செலவுகளையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டு திருமணம் நடத்தி வைக்கிறார்கள்.  ரூபன் வீட்டாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இருக்கிறது.  படித்த பெண்ணான மருமகள் அந்தப் பள்ளியை பார்த்துக் கொள்வார் என்ற திட்டத்தில் படித்த பெண்ணாகப் பார்த்து ரூபனுக்கு திருமணம் முடிக்கிறார்கள்.

திருமண விவகாரம் மகாலட்சுமிக்கு தெரிந்ததும் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். ரூபன்,  சாஷ்டாங்கமாய் மகாலட்சுமி காலில் விழுந்து, மன்னிப்பு கேட்டு எனக்கு நீதான் எல்லாமும் என்று மன்றாடுகிறார்.  சரி.. சரி… எழுந்து தொலை.  நான் சொல்வது போலத்தான் நடக்க வேண்டும். மீறி ஏதாவது செய்தால் அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். நீ சொல்வது போலவே கேட்கிறேன் என்று சரணடைகிறார் ரூபன்.  அதன் பிறகு மகாலட்சுமி ஆட்டுவித்தபடியெல்லாம் ரூபன் ஆடுகிறார்.  திருமணமான இரண்டு நாட்களுக்குப் பிறகு, மகாலட்சுமி தினந்தோறும் ரூபனை இரவு 12 மணிக்குதான் வீட்டுக்கு அனுப்புவார். இப்படி முழு போதையில் தினந்தோறும் தாமதமாக ரூபனை வீட்டுக்கு அனுப்பினால் ரூபனும், அவர் மனைவியும் நெருக்கமாக மாட்டார்கள் என்று மகாலட்சுமி கணக்கு போடுகிறார்.

ரூபன் தன் பங்குக்கு தன் மனைவியிடம் நடிப்பார்.  தன்னுடைய செல்போனில் மகாலட்சுமியின் பெயரை MLXI என்ற சேமித்து வைத்திருப்பார்.  அடிக்கடி மகாலட்சுமியிடம் இருந்து போன் வருவதை தன் மனைவி பார்த்ததும், “அய்யோ… இவ என் ஜுனியர்.. எப்போப் பாத்தாலும், இதுல சந்தேகம், அதுல சந்தேகம்னு ஒரே தொல்லை… நானும் எவ்வளவு நாள்தான் சொல்லிக் குடுக்கறது” என்று புது மனைவியிடம் நடிப்பார்.  புது மனைவியும் சரி.. நம்ப வூட்டுக்காரருதான் இந்தியாவிலேயே பெரிய வக்கீல் என்று நினைத்து ஏமாந்தார்.

திருமணமாகி ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, மகாலட்சுமி வீட்டில் ரூபனுக்கும் அவர் புது மனைவிக்கும் விருந்து அளிக்கப்படுகிறது.  இந்தக் காட்சி, படத்தில் மிக மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

ரூபனும் அவர் புது மனைவியும் மகாலட்சுமி வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர்.  அப்போது ரூபனும், அவர் புது மனைவியும் சிரித்துப் பேசி அந்நியோன்யமாக பழகுவதாக காட்சி அமைகிறது.  இந்தக் காட்சியைப் பார்த்து, சீரியல்களில் வரும் வில்லி போல மகாலட்சுமி முறைக்கிறார்.  ரூபனின் மனைவி பார்க்காத நேரத்தில் ரூபனை கண்களாலேயே எரிக்கிறார்.  ரூபனோ, புது மனைவியை சந்தோஷப்படுத்துவதா, மகாலட்சுமியை சந்தோஷப்படுத்துவதா என்று குழப்பத்தில் ஆழ்கிறார்.  அப்போது ரூபன் கேரக்டர் மீது பரிதாபம் ஏற்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் இது வரை சாதாரண கேரக்டராக உருவாக்கப்பட்டிருந்த மகாலட்சுமியின் கதாபாத்திரம் விஸ்வரூபம் எடுக்கிறது. இவர்கள் இருவரையும் பிரிக்காமல் விட மாட்டேன் என்று சபதமெடுக்கிறார் மகாலட்சுமி.   இந்த இடத்தில் இன்டர்வெல் ப்ளாக்.   வெறித்த பார்வையோடு மகாலட்சுமி முறைக்கும் இடத்தில் காட்சி ஃப்ரீஸ் செய்யப்படுகிறது.

இன்டர்வெல்லுக்குப் பிறகு, மகாலட்சுமி ரூபனை மிரட்டும் இடத்தில் படம் தொடங்குகிறது.  நீ அவளை டைவர்ஸ் செய்தே ஆக வேண்டும் என்று மிரட்டுகிறார் மகாலட்சுமி.  ரூபனும் சரி அப்படியே செய்கிறேன்… என்ன காரணம் சொல்வது என்று கேட்கிறார்.  நானே அதற்கெல்லாம் ஏற்பாடு செய்கிறேன் என்று மாஸ்டர் ப்ளானாக போடுகிறார்.   மகாலட்சுமியின் மாஸ்டர் ப்ளான் என்ன என்பது அடுத்தடுத்த காட்சிகளில் விரிகிறது.

இதன் நடுவே, போலியாக பல பத்திரங்களை தயாரித்து, தன் கணவரின் கையெழுத்தை தானாகவே போட்டுக் கொண்டு, மகாலட்சுமி தனக்கு விவாகரத்து வாங்கிக் கொள்கிறார்.  அவர் கணவரும், சனியன் விட்டு ஒழிஞ்சாப் போகுது என்று வெறுத்து ஒதுங்குகிறார்.

ரூபனின் மனைவி வேலை பார்க்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் ரூபனின் மனைவியிடம் வயதுக் கோளாறு காரணமாக தேவையற்ற முறையில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்வான்.  அவரைக் காதலிப்பது போல கற்பிதம் செய்து கொண்டு சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வான்.  இது ஓரு சாதாரண உரையாடல் சமயத்தில் ரூபனின் மனைவி கூறியதை, சின்ன கட் சீனாக ஃப்ளாஷ் பேக்கில் காட்டப்படுகிறது.

ரூபனின் மனைவி போனிலிருந்து, அந்தப் பையனின் மொபைலுக்கு காதல் ரசம் சொட்டும் எஸ்.எம்.எஸ்களை ரூபன் அவர் மனைவிக்கு தெரியாமல் அனுப்புகிறார். இது எதுவும் தெரியாமல், ரூபனோடு அவர் மனைவி இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் ரூபன் திடீரென்று மூன்று நாட்களுக்கு காணாமல் போகிறார்.  அந்த மூன்று நாட்களில் ஒருநாள் ரூபனின் தாயாருக்கு நள்ளிரவு 12 மணிக்கு போன் வருகிறது.  அந்த மகாலட்சுமி பேசுகிறார்.  ரூபனின் தாயாரிடம், உங்கள் மருமகளுக்கு வேறு ஒரு ஆணோடு தொடர்பு இருக்கிறது.  நள்ளிரவு நேரத்தில் அவர் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்கிறார். உங்கள் மகன் இல்லாத நேரத்தில் அவர் இரவு நேரத்தில் போனில் பேசுகிறார். நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது அவர் அறைக்குச் செல்லுங்கள், அவர் யாருடனோ போனில் பேசுவார் பாருங்கள் என்று தெரிவிக்கிறார் மகாலட்சுமி.

ரூபனின் தாயாரும், அவர் மருமகளின் அறைக்கு வெளியே நின்று யாரிடமாவது போனில் பேசுகிறாரா என்று கேட்கிறார். அந்த நேரத்தில், மகாலட்சுமி, ரூபன், மற்றும் அந்தப் பையன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து ரூபனின் மனைவிக்கு போன் அடிக்கிறார்கள். போன் அடிக்கும் ஒலி, வெளியில் நிற்கும் ரூபனின் தாயாருக்கு கேட்கிறது.  போனை எடுத்த ரூபனின் மனைவி, யார் இது இந்த நேரத்தில் என்று எரிச்சலோடு ராங் நம்பர் என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டிக்கிறார். ஆனால் வெளியில் இருந்த ரூபனின் தாயாருக்கு இந்த விபரம் தெரியாது. போன் மணி ஒலித்ததும் அவர் நகர்ந்து விடுகிறார்.

மறுநாள் காலை, ரூபனின் தாயார், மருமகளை கடுமையாக கண்டிக்கிறார். எந்தத் தவறும் செய்யாத தன்னை இப்படி கண்டிக்கிறார்களே என்று மனமுடைந்த அந்தப் பெண், தற்கொலைக்கு முயல்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர் காப்பாற்றப்பட்டதும், அவரை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

பெற்றோர் வீட்டில் இருந்த அந்தப் பெண்ணை மகாலட்சுமி சந்திக்கிறார். “நீ அந்தப் பையனோடு தொடர்பு வைத்திருக்கும் விஷயம் எனக்குத் தெரியும். ரூபனுக்கும் தெரியும். நீ, இத்தனை நாட்கள், இந்தந்த தேதிகளில் அந்தப் பையனோடு ஊர் சுற்றியிருக்கிறாய். செக்ஸ் வைத்திருக்கிறாய். இது எல்லாம் ரூபனுக்கு தெரியும். அவன் உன்னோடு வாழ மாட்டான். ” என்று கூறி விடுகிறார்.

இதற்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்கு தினந்தோறும் அனாமதேய அழைப்புகள். அந்தப் பெண்ணின் மொபைல் போன், லேன்ட் லைன் என்ற எல்லா இணைப்புகளிலும் அனாமதேய அழைப்புகள். யார் யாரோ நபர்கள் “உனக்கு என்ன ரேட்… எங்க மீட் பண்ணலாம்.. நீ கால் கேர்ள் தானே…” என்று கன்னா பின்னாவென்று பேசுகிறார்கள். அந்தப் பெண் மனமுடைந்து போகிறார். அந்தப் பெண்ணை மன ரீதியாக உடைக்க வேண்டும் என்று மகாலட்சுமி தொடர்ந்து முயற்சி எடுப்பதாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை, மகாலட்சுமியின் பாத்திரம், பார்வையாளர்கள் மனதை ஆக்ரமித்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் எப்படியாவது ரூபனைத் தொடர்பு கொண்டு அவருக்கு புரிய வைக்கலாம் என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் பல தடவைகள் ரூபன் போனை எடுப்பதேயில்லை. ஒரு சில நேரங்களில் எடுத்தாலும், கான்பரன்சில் மகாலட்சுமி இருக்கிறார்.

இதன் நடுவே, ரூபனின் மனைவிக்கு வேறு ஒருவரோடு கள்ளத்தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ரூபன் சார்பில் தொடுக்கப்படுகிறது. அந்த வழக்கில், ரூபனின் மனைவி மீது, அபாண்டமான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவருக்கு திருமணத்துக்கு முன்பாகவே ஒரு மாணவரோடு தொடர்பு இருந்தது போலவும், திருமணத்துக்குப் பிறகும், அவர் அந்த மாணவனோடு எஸ்எம்எஸ் தொடர்பில் இருந்ததாகவும், அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, ரூபனின் மனைவிக்கு யாரோடு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டதோ அந்த பையன் நீதிமன்றத்துக்கு வருகிறான். ஒரு கார் அருகே நின்று கொண்டிருந்த அந்தப் பையன், ரூபனின் மனைவியை அழைக்கிறான். ரூபனின் மனைவி அந்தப் பையனிடம் சென்று, ஏன் என் வாழ்க்கையில் விளையாடுகிறாய்.. என்று கேட்கிறார். தூரத்திலிருந்து இதை மகாலட்சுமி ஒரு ஒளி ஓவியராய் புகைப்படம் எடுக்கிறார். புகைப்படம் எடுத்து, அதை நீதிமன்றத்தில் மகாலட்சுமி சமர்ப்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பையனையே நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வைக்கிறார் மகாலட்சுமி. அந்தப் பையனுக்கு இதற்காக ஒரு பெரிய தொகையை கொடுக்கிறார் மகாலட்சுமி. அந்தப் பையன், நீதிமன்றத்தில், எனக்கும் இந்தப் பெண்ணுக்கும் நெடுநாட்களாக தொடர்பு இருக்கிறது. நாங்கள் இருவரும் பல இடங்களில் சுற்றியிருக்கிறோம். ஒன்றாக இருந்திருக்கிறோம் என்று கூறுகிறார்.

அந்தப் பெண் மனமுடைந்து போகிறார். ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாகவே வெடித்துக் கதறி அழுகிறார். இந்த மகாலட்சுமி என் புருஷனை வச்சுருக்கா.. அதனாலதான் என் மேல இப்படி அபாண்டமா பழிசுமத்தறா… எப்படியாவது என் புருஷனை என்கிட்ட சேத்து வையுங்க என்று நீதிபதி முன்பாகவே கதறுகிறார்… இந்த இடத்தில் சோகமான வயலின் பிஜிஎம் வருகிறது. நீதிபதி கண்ணாடியை கழற்றி விட்டு, அந்தப் பெண்ணை பரிதாபமாக பார்க்கும் காட்சி க்ளோசப்பில் எடுக்கப்படுகிறது.

29529_132363166778706_88215_n

இப்படியே ஒவ்வொரு மாதமும் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருவதும், அந்தப் பெண் ஆஜராவதும், தொடர்ந்து நடைபெறுகிறது. இத்தனை நாள் அவர் கணவன் ரூபன் திரும்பி வருவார் என்று காத்திருந்த நம்பிக்கை பொய்த்துப் போகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண் மனம் வெறுத்து, நான் விவாகரத்து தரச் சம்மதிக்கிறேன் என்று எழுதிக் கொடுக்கிறார். விவாகரத்தும் நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் கேரக்டர் அத்தோடு ஃபேட் அவுட் செய்யப்படுகிறது. இந்த இடத்தில் அகிரா குரோசாவா, பெல்லினி, போன்ற திரைப்பட உலகின் ஜாம்பவான்களே வியக்கும் வகையில் திரைக்கதையில் பல்வேறு உத்திகளை புகுத்தியுள்ளார் இயக்குநர்.

மகாலட்சுமியும் ரூபனும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ். ஆனால் விவாகரத்து வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், ரூபன் மகாலட்சுமி திருமணம் நடைபெறவில்லை.

மகாலட்சுமியும், ரூபனும், தடா சந்திரசேகர் என்ற வழக்கறிஞரிடம் ஜுனியராக பணிபுரிந்து, இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து கொட்டிவாக்கத்தில் தனித்தனியான வீடுகள் கட்டப்பட்டு வருவதெல்லாம், ஆங்கில படத்தில் வருவது போல பின்னால் காட்டப்படுகிறது.

இந்த இரண்டு பேர் ஏழு காதல் திரைப்படம் ரசிகர்களிடையே எப்படிப்படட வரவேற்பை பெறப்போகிறது… இது உலக சினிமா என்று கொண்டாடப்போகிறார்களா ?இல்லை ஆபாசத் திரைப்படம் என்று காறி உமிழப்போகிறார்களா என்பதை வைத்தே தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்காலம் அமைந்துள்ளது. இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இது போன்ற ஒரு ஏழு கோண காதல் கதையை காப்ரியேல் மார்க்வேஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட எழுதவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா, இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், “என்னுடைய ஸீரோ டிகிரி நாவலில் இருந்து பல காட்சிகள் இந்தப் படத்தில் திருடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இது ஒரு கொண்டாடப்பட வேண்டிய ஒரு படம். இதே படத்தை பொலிவிய மொழியில் எடுத்திருந்தால், ஆஸ்கார் நிச்சயம். தமிழில் எடுக்கப்பட்டதால், அம்பாசிடர் கார் கூட கிடையாது. இந்தப் படத்தைப் பற்றி சிறப்பாக ஒரு ஆய்வுக் கட்டுரை எழுத உள்ளேன். என்னுடைய அக்கவுன்ட் நம்பர் என்னுடைய இணைய தளத்தில் உள்ளது. அதில் பணத்தைப் போட்டு விட்டு ரெமி மார்ட்டினோடு வந்து என்னைப் பார்க்கவும்” என்று தெரிவித்தார்.

இணைய உலகைப் பொறுத்தவரை, இந்தப் படம் உலக படமா… உல்லாச படமா என்பதில் கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. உல்லாச பட ரசிகர்கள் ஒரு புறம் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் இது ஒரு மிகப்பெரிய பண்பாட்டுச் சீரழிவு என்று மற்றொரு புறம் இந்தப் படத்தின் மீது கடும் விமர்சனமும் உள்ளது.

கான்ஸ் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு இந்தத் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டபோது, பிரபல இயக்குநர் சோடர்பெர்க், இத்திரைப்படத்தின் இயக்குநரைப் பார்த்து, மொத்தம் எட்டு காதல் என்று சொல்லியிருக்கிறீர்களே… ஆனால் எப்படிக் கூட்டிப் பார்த்தாலும் ஏழு காதல்தானே வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலளித்த இயக்குநர், படத்தின் இறுதியில், கதாநாயகி மகாலட்சுமியின் தாயாரும், தம்பியும் வரதட்சிணை கொடுமை வழக்கில் கைதாவார்கள். அப்போது அவருக்கு உதவுவதற்காக, வந்து இணைகிறார் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார். இந்த கிருஷ்ணகுமாரும், மகாலட்சுமியும், தடா சந்திரசேகர் தொடங்கிய புதிய வழக்கறிஞர் சங்கத்தில் நிர்வாகிகள். இந்த புதிய சங்கத்தை காரணம் காட்டி, கிருஷ்ணகுமார், அடிக்கடி அலுவலகத்திலேயே தங்கி விடுவார். இப்படி ஒரு நாள் தங்கியிருந்தபோது, காலை ஆறு மணிக்கு அலுவலகம் வந்த கிருஷ்ணகுமாரின் மனைவி, கையும் களவுமாக, கிருஷ்ணகுமார் மற்றும் மகாலட்சுமியை பிடித்து, அந்த கட்டிடமே அதிரும் அளவுக்கு இருவரையும் பின்னிப் பெடலெடுப்பார். இப்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டு படத்தின் நீளம் கருதி பின்னால் வெட்டப்பட்டது என்று தெரிவித்ததும், ஸ்டீவன் சோடர்பர்க், அந்தக் காட்சியை படத்தின் க்ளைமாக்ஸாக வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இரண்டு பேர் ஏழு காதல், காதல் காவியமா இல்லை கழுவி ஊத்துன ஓவியமா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


சவுக்கு தளம் மீது சன் டிவி மகாலட்சுமி காவல்துறையில் புகார்...

$
0
0

சவுக்கு இணையதளத்தில் வெளிவந்த இரண்டு பேர் ஏழு காதல் கட்டுரை தொடர்பாக  சன் டிவி  மகாலட்சுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

29529_132364633445226_2686343355_n

சன் டிவி மகாலட்சுமி பற்றி இரண்டு பேர் ஏழு காதல் (கரெக்டா எண்ணிதானே போட்டோம்... அப்பவும் ஒன்னு ரெண்டு விட்டுப் போயிருக்குமோ...) என்ற கட்டுரை வந்திருந்தது.  இந்தக் கட்டுரையில் வெளிவந்த அத்தனை விஷயங்களும் முழுக்க முழுக்க பொய் என்றும், முழுக்க முழுக்க அவதூறான கட்டுரை இது என்றும் தன் புகாரில் மகாலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.  இன்று காலை 12.30 மணிக்கு, வழக்கறிஞர்கள் புடைசூழ சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார்.

மகாலட்சுமி குறித்து எழுதப்பட்ட கட்டுரையில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்று மொக்கையாக பம்மாத்து பண்ணுவது சவுக்கு தளத்தின் அழகல்ல...  இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது.  நீதிபதியால் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவு (Remand Order) வழங்கப்பட்ட பிறகு, கோடை விடுமுறையில் காய்ந்து போய் வருமானம் இல்லாமல் இருந்த 100 வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு, நீதிமன்றத்தில் அடாவடி செய்து, நீதிபதியை மிரட்டி அவரது தாயார் ஜான்சி ராணிக்கும், அவர் தம்பி சதீஷுக்கும் ஜாமீன் வாங்கயிதைப் போன்ற அடாவடி செயல் எதுவுமே இருக்க முடியாது.

தனக்கு விருப்பமானவரோடு வாழ்வது மகாலட்சுமியின் தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் அந்த விருப்பத்திற்காக, ஒரு பெண்ணின் மீது அபாண்டமான பழி சுமத்தி, அந்தப் பெண்ணை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விட்டு, என்னென்ன கொடுமைகளையெல்லாம் செய்ய முடியுமோ, அந்த அளவு கொடுமைகளைச் செய்வதை எப்படிப் பார்த்துக் கொண்டு வாளாயிருப்பது ?  எந்தத் தவறும் செய்யாத அந்தப் பெண்ணின் வாழ்வில் ஐந்து வருடங்கள் வீணாகிப் போய் விட்டன.  அந்தப் பெண் வாழ்க்கையையே இழந்து நிற்கிறார் மகாலட்சுமியால்.  இந்தக் கதையைக் கேட்ட பிறகும் எப்படி எழுதாமல் இருப்பது ?

சன் டிவி ராஜாவுக்கு தான் ஆதரவு அளித்ததால் சவுக்கு தளத்தில் இப்படி ஒரு கட்டுரை எழுதப்பட்டது என்று மகாலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.  சன் டிவி ராஜா கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. இப்போது மகாலட்சுமியைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன ?

தனது தம்பி மனைவி வேறு ஒரு ஆணோடு சினிமா பார்க்க வந்திருந்தார் என்ற காரணத்தால், அனைவர் முன்னிலையிலும், அவரை, தன் தம்பியோடும், தாயாரோடும் சேர்ந்து கடுமையாக தாக்கியிருக்கிறார் மகாலட்சுமி.  அந்தப் பெண் கீழே விழுந்ததும் காலில் போட்டு மிதித்திருக்கிறார் மகாலட்சுமி.  இப்படிப்பட்ட அராஜகத்தைச் செய்து விட்டு, வழக்கறிஞர் என்பதால் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கிறார் மகாலட்சுமி.... இதற்குப் பிறகும், இந்த விபரங்கள் தெரிந்தபிறகும், சவுக்கு தளத்தில் மகாலட்சுமியை அம்பலப்படுத்தாவிட்டால் வேறு எதற்காக இந்தத் தளம் நடத்தப்படுகிறது... ?

நடந்த உண்மையை எழுதுவதைத் தவிர, நம்மால் வேறு என்ன செய்ய முடியும் ?  ஆகையால் நடந்த உண்மையைச் சொல்வது என்ற உள்நோக்கமும், மகாலட்சுமியின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவது என்ற உள்நோக்கமும், அந்தக் கட்டுரையின் பின்னால் நிச்சயம் உண்டு.  ஆகவே இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடு எழுதப்பட்ட கட்டுரை என்பதை சவுக்கு தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறது.

ஆங்கிலம் ஏன், எங்கு, எந்த அளவில்?

$
0
0

Image

ஆங்கில வழியில் பயில்வோர் ஆங்கிலத்தில்தான் உள் தேர்வுகள் எழுதவேண்டுமா, அநீதி, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என ஆளாளுக்கு கொதித்தெழ, அரண்டு போன ஜெயலலிதா அம்முயற்சியைக் கைவிட்டார்.

தமிழார்வலர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டார் புரட்சித் தலைவி. அடுத்து தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மேலும் பரவலாக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும் என இப்போது வலியுறுத்துகின்றனர். சிபிஎம்மும் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவதில் முன்னணியிலிருக்கிறது.

இது எந்த அளவு ஆரோக்கியமான போக்கு? ஆங்கிலத்திற்கு எந்த இடம், தமிழிற்கு எந்த இடம்?

மிகச் சிறு பிராயத்தில் தாய்மொழியைத் தவிர வேறு மொழியைக் கற்பதே தேவையில்லாததொரு சுமை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தாய்மொழி மூலம் எதனையும் கற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது என்றும் கூறப்படுகிறது, ஆறாம் வகுப்புவரை ஆங்கிலம் அநாவசியம் என்று கூட சில வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் யதார்த்தமென்ன? அங்கிங்கெனாதபடி ஆங்கிலம் எங்கும் வியாபித்திருப்பதுதான். தாய்மொழியில் பலவற்றைச் சாதிக்கமுடியும் என்று நிரூபித்த ரஷ்யர்களும், சீனர்களும், ஜப்பானியரும் ஆங்கிலம் பக்கம் திரும்புகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டைத் தவிர வேறு எங்குமே ஆங்கிலத்திற்கெதிர்ப்பில்லை எனலாம். முஸ்லீம் நாடுகளில் ஆள்வோரும் அவர்களது ஏவலாளர்களும்  ஆங்கிலம் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆங்கிலம் முடிவு கட்டிவிடுமோ என்று கூட அஞ்சலாம். ஆனால் அவர்களும் ஆங்கிலத்தை ஏதாவது ஒரு வழியில் அனுமதிக்கவே செய்கின்றனர்.

உலகமயமாக்கலின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியே ஆங்கிலமும். உலகமயமாக்கலை எவ்வளவு அனுமதிக்கலாம், கூடாது, என முடிவில்லாமல் வாதிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அத்தகைய போக்கின் பல்வேறு சீரழிவுகளை நாம் எங்கும் பார்த்துத்தான் வருகிறோம், அமெரிக்காவிலேயே கூட அதற்கெதிர்ப்பெழுந்திருக்கிறது, அடித்தட்டுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதெல்லாம் உண்மையாயினும் கூட எப்படி காலனீய ஆதிக்கம் இந்தியாவிலும் மற்ற பல நாடுகளிலும் நிலவுடைமை அமைப்பினை, மதத்தரகர்களின் கோரப்பிடியினை அசைத்து அறியாமை நீங்க வழி கோலியதோ அதே போல ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு உலகமயமாக்கல் வழிசெய்கிறது என நினைக்கிறேன். அதற்குமப்பால் அது தவிர்க்கமுடியாததென்றும் நினைக்கிறேன்.

எந்த ஒரு நாடும் சமூகமும் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பன்னாட்டு சக்திகளைப் புறந்தள்ளமுடியும் என்று தோன்றவில்லை. அப்படிச் செய்ய முயல்வது தாலிபான்களுக்கும் வழிவகுக்கக்கூடும்.  அல்லது மேற்குலகை நிராகரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வடகொரியா வகை ‘கம்யூனிச’த்திற்கு.

பல்லக்கு தூக்கும் அளவு உனக்கு வலுவிருந்தால் போதும் அதை மட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனக் கொக்கரிக்கும் ஆளும் வர்க்கத்தினையும் அவர்களது ஏவலாளிகளான நடுத்தரவர்க்கத்தினரையும் தீவிரமாக எதிர்கொண்டு பொருளாதார சமூக நீதி கணிசமான அளவு உறுதிப்படுத்தப்படுவதைத் தாண்டி உலகமயமாக்கலை எதிர்ப்பது அபத்தம்.

அதே பார்வையிலிருந்துதான் நான் ஆங்கிலத்திற்கான இடத்தையும் பார்க்கிறேன். வேலைவாய்ப்பினை உறுதி செய்வது மட்டுமல்ல, நம் அறிவினை விசாலப்படுத்திக்கொள்ள ஆங்கிலம் தவிர்க்கவியலாதது.

என்ன இல்லை என் தாய்த்தமிழில் என மைக் பிடித்துக்கொண்டு முழங்கலாம். ழ இருக்கிறதா, வள்ளுவம் என்ன சொல்கிறது தெரியுமா, என்றெல்லாம் அரற்றலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் ஆங்கில ஆதிக்கம் தவிர்க்கவியலாதது. அனைத்து தரப்பினரும் அதில் தேர்ச்சி பெறுவதைத் தடுப்பது ஒன்று அறிவீனம் அல்லது இரட்டை வேடம் போடுவதாகும். கருணாநிதி அப்படிச் செய்யலாம், வைகோ செய்யலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் இதற்கு இரையாகின்றனர்?

குறிப்பாக ஆங்கிலவழியில் பயில்வோர் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும் என்பதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. அப்புறம் எப்படித்தான் ஆங்கிலம் கற்பதாம்? ஆங்கிலவழியில் படித்தேன் பட்டம் பெற்றேன் என்று சொல்லிவிட்டு அரைகுறை ஆங்கில அறிவுடன் வெளியுலகை சந்திக்கும்போது எத்தனைவித இடர்ப்பாடுகளை அம்மாணவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும்? தமிழார்வலர்களோ இடதுசாரிகளோ அவர்களுக்கு வேலை வாங்கித்தந்துவிடமுடியுமா? தமிழ்வழியில் பட்டம்பெற்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்பதைக்கூட எவரும் உறுதிசெய்யமுடியவில்லை. இப்போதெல்லாம் அரசுப் பணிகள்வேறு அருகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்வழியில் படித்து இவர்கள் சாதிக்கப்போவது என்ன?

வேலை வாய்ப்பின்றி, பிழைப்பதே பெரும் பாடாகும் அவலத்தை இடதுசாரிகள்கூட சரிவர உணராமல் தமிழ்ஜோதியில் கலப்பது ஆகக்கூடுதலான வேதனை.

நமது வழக்கறிஞர்க்ளைப் பார்க்கும்போது, நீதிமன்றங்களில் அவர்கள் வாதாடும்போது ஆங்கிலப் போதாமையின் கொடுமை நமக்கு உறைக்கும். ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞர்களுக்கும் தெரியாதவர்களுக்குமிடையே எவ்வளவு பெரிய இடைவெளி என்பது நீதித்துறையினை அவதானிப்பவர்களுக்கே விளங்கும்.

மனு எப்படி பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டார்? பிராமணரல்லாதோர் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றார். கல்வி ஆதிக்கசாதியினர்க்கும் மட்டுமே என்றிருந்தது. அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் வடமொழி மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் நவீன பிராமணர்களாகிவிட்டனர் என்பதே கசப்பான உண்மை.

இந்த ஆளும்வர்க்க-நடுத்தரவர்க்க கூட்டைத் தகர்த்து சமூகத்தினை ஜனநாயகப்படுத்துவதில் ஆங்கிலத்திற்கு மிக முக்கிய பங்கிருக்கிறது.

ஆனாலும் எவ்வினமும் எச்சமூகமும் தாய்மொழியினை புறக்கணிக்கலாகாது. தாய்மொழி வழியே சிலவற்றைக் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் . தொடக்கக் கல்வி மட்டும் தாய்மொழி வழியில் என்றால்  போதுமானது.

அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியிலேயே தொடக்கக்கல்வி என்பதை விதியாக்கவேண்டும். ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். எவருக்கும்  விதிவிலக்கில்லை.

மேலும் எந்தவொரு மாணவரும் குறிப்பிடத்தகுந்த அளவு தத்தம் தாய்மொழியில் தேர்ச்சிபெறமுடியாமல் பள்ளிப் படிப்பை முடிக்கமுடியாது என்ற நிலையினையும் உருவாக்கவேண்டும். தாய்மொழி அறிவு, பண்பாட்டுக்கூறுகளை நிராகரித்துவிட்டு பொதுவெளியில் அடியெடுத்துவைக்கமுடியாது என்றாகவேண்டும். அதற்கப்பால் அவரவர் விருப்பம், ஆர்வம், சூழல்.

ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழியிலேயே அனைத்து பள்ளிகளிலும் என்றாகவேண்டும். போதுமான அளவு ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவேண்டும்.

இல்லை, என்ன விலைகொடுத்தாவது உலகமயமாக்கலையும் ஆங்கிலமயமாவதையும் தடுத்து நிறுத்தவேண்டும், அதுவே புரட்சி என்றால் அதற்கு என்னிடம் விடையில்லை.

நன்றி http://angsto.wordpress.com/

டாஸ்மாக் தமிழ் 6

$
0
0

tas_boy_1

தலையைத் தொங்க போட்டபடியே சற்று டல்லாக மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.

“என்ன தம்பி… டல்லா இருக்க…“ என்று அவனைப் பார்த்து பதட்டத்தோடு கேட்டார் கணேசன்.  “ஒண்ணும் இல்லன்ணே“.

“அட சொல்லுப்பா…“

“நம்ப பேசறத கேக்கற நெறய்ய பேரு திட்றாங்கன்ணே…  ஏற்கனவே நாட்டுல எல்லாரும் டாஸ்மாக்கால அடிமையாகி கிடக்குறாங்க. நீங்க வேற குடிச்சுட்டு பேசறீங்களேன்னு நெறய்ய பேர் சொல்றாங்கன்ணே…“

“அட இதுக்காப்பா டல்லா இருக்க… ?  நாட்டுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு போதை. ஒருத்தனுக்கு பண போதை. ஒருத்தனுக்கு சொத்து சேக்கற போதை. ஒருத்தனுக்கு பொம்பளை போதை.  எல்லாரும் ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகித்தானே சுத்திக்கிட்டு இருக்கானுங்க… இந்த போதையால ஊர் ஒலகத்தையே நாசம் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க… நம்ப என்னாப்பா.. ஆளுக்கு ரெண்டு ரவுண்டு போட்டுட்டு நாட்டு நடப்பை பேசறோம்… நீ உன் கஸ்டமர்கள் கிட்ட கெடைக்கிற தகவலை குடுக்கற… அதை விவாதிக்கிறோம்.. அந்தத் தகவலை நாங்க எங்க பத்திரிக்கைக்கு பயன்படுத்திக்கிறோம்.. அவ்வளவுதான். இதுக்குப் போயி நீ ஏம்பா டல்லாகுற.. சரி.. என் ஐட்டம் வாங்கிட்டு வந்தியா இல்லையா ? “

“இல்லன்ணே…“

“டேய் எங்களுக்கு பீரும் வாங்கிட்டு வரலையா ? “ என்று கோபமாக கேட்டான் பீமராஜன்.

“இல்ல மச்சான்.. “

“சரி விடு.. நாளைக்காவது ஒழுங்கா சீன் போடாம வாங்கிட்டு வா. இப்போ மேட்டரை ஆரம்பி“ என்று தன் எரிச்சலையும் வெளிப்படுத்தினான் வடிவேலு.

“ஐபிஎல் மேட்டர் பத்தி நெறய்ய தகவல் சொன்னாரு மச்சான் ஒருத்தர்.  ஏவிஎம் குடும்பத்துல, குருநாத் மெய்யப்பன் கைதானத பத்தி ரொம்ப வருத்தத்துல இருக்காங்க.  நமக்கு இருக்கற சொத்தே ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்.  அப்புறம் எதுக்கு இவன் இந்த வேலைய செஞ்சான்னு, அவங்க குடும்பத்து பெரியவர் ஒருத்தர் ரொம்ப வருத்தப்பட்டுருக்கார். “

“வாஸ்தவம்தானே…  சினிமா இன்டஸ்ட்ரியில அவங்க ஃபேமிலிக்கு ரொம்ப நல்ல பேராச்சே…“ என்று அதை ஆமோதித்தான் பீமராஜன்.

“குருநாத் சீனிவாசன் பொண்ணு ரூபாவை காதலிக்கிறதா சொன்னதும் அவங்க வீட்ல உள்ளவங்களுக்கு அந்தக் குடும்பத்துல சம்பந்தம் பண்றது பிடிக்கலை.  ரூபா மேல கோபம் இல்ல.  ஆனா சீனிவாசன் எப்பவுமே திருட்டுத்தனமா வேலை செய்யறவர், இவர் வீட்டுல பொண்ணு எடுக்கறதான்னு தயங்கியிருக்காங்க… ஆனா குருநாத் மணந்தால் மகாதேவின்னு ஒத்தைக் கால்ல நின்னுருக்கார். அதையெல்லாம் இப்போ நெனச்சு ரொம்ப வேதனைப்பட்றாங்க“

“சரி… குருநாத் எப்படி இருக்காராம் கஸ்டடியில.. ? “

3546731800_Gurunath-Meiyappan-605N-Srinivasan

“மும்பை போலீசுக்கு கிடைச்ச மிகப்பெரிய தங்க முட்டையிடும் வாத்து குருநாத். ஒரு டீம் முதலாளியே பெட்டிங்கில் ஈடுபட்டது, ஐபிஎல்லில், சென்னை சூப்பர் கிங்ஸ் டீமை ஒழிக்கும் அளவுக்கு வல்லமை படைத்தது.  ஒவ்வொரு வருஷமும் ஏலம விடும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு மட்டும் முக்கியமான வீரர்களை தக்கவைக்கும் வேலையெல்லாம் இனிமே நடக்காது. குருநாத்தை வச்சு, அவர் மாமனாரை காலி பண்ணும்னு பல லாபிகள் வேலை செய்யுது. குறிப்பா வட இந்திய ஊடகங்கள் சீனிவாசனை ஒழிச்சே தீரணும்னு தீவிரமா இருக்காங்க…“

“அவர் ஒரு தமிழர்ன்றதால இப்படிப் பண்றாங்களா மச்சான் ? “ என்று அப்பாவியாக கேட்டான் ரத்னவேல்.

“ஆமாம்டா.. அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், காவிரி போராட்டம்னு தமிழர் நலனுக்காக தன்னோட வாழ்க்கையே அர்ப்பணிச்ச மொழிப்போர் தியாகி… அதனால அவரை வட இந்தியர்கள் ஒதுக்கறாங்களா.. ?  ஒரு மோசமான திருட்டுப்பயலை வட இந்திய ஊடகங்கள் ஒழிச்சா என்ன.. தென் ஆப்ரிக்க ஊடகங்கள் ஒழிச்சா என்ன ? சீனிவாசன் ஒழிக்கப்பட வேண்டிய ஆள்.

பிசிசிஐ தலைவர் பதவியை சீனிவாசன் ராஜினாமா பண்றதைத் தவிர வேறு வழியே இல்லை. அந்த அளவுக்கு நெருக்கடி முத்தியிருக்கு“

“அப்போ சிமென்ட் சீனு டவுசர் கழண்டுச்சா… ?

“முழுசா இல்ல..  இந்தியா சிமென்ட்ஸ் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்திச்சுக்கிட்டு வருது.  இதனால பங்குதாரர்களுக்கும் இவர் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.   சீனுவுக்கு அடுத்த சிக்கல், சிபிஐ வடிவில் வர இருக்கு. ஜெகன் மோகன் ரெட்டி மேல போடப்பட்டிருக்கிற வழக்குல, சிமென்ட் சீனுவை குற்றவாளியா சேக்கறதுக்கு நெறய்ய வாய்ப்புகள் இருக்கறதா பேசிக்கிறாங்க.  அதுல குற்றவாளியா சேத்தா, அவர் கைது கூட செய்யப்படலாம். “

“சீனுவுக்கு சிக்கல்தான்னு சொல்லு.. “

“ஜெகன் மோகன் ரெட்டி கேஸ் ஆந்திரா சிபிஐகிட்ட இருக்கு.  தமிழ்நாட்டு சிபிஐ தங்கள் பங்குக்கு சீனுவை காய்ச்சுவாங்க.  11 வெளிநாட்டுக் கார் வைச்சிருக்கார் சீனு.  இந்த 11 காரும் சட்டவிரோதமா, கார் கடத்தல் செய்யும் அலெக்ஸ் ஜோசப் மூலமா இறக்குமதி செய்யப்பட்டவை.  இந்த வழக்குலயும் சிமென்ட் சீனுவுக்கு சிக்கல் காத்திருக்கு.“

“என்னப்பா இந்த ஆளை இந்தப் பாடு படுத்தறாங்க ? “ என்று சீனுவுக்காக வருத்தப்பட்டான் ரத்னவேலு.

“என்ன ரத்னவேலு பேசற…. ஊரு உலகமே சேந்து அந்த ஆளை ராஜினாமா பண்ணுன்னு சொல்லுது.  அந்த ஆளுக்கு சொந்தமா ஒரு ஐபிஎல் டீம் வேணும்னு, பிசிசிஐ விதிகளையே மாத்தியிருக்காரு.  சொந்த மருமகன் சூதாட்டத்துல ஈடுபட்டதா கைது செய்யப்பட்டிருக்காரு.  ராஜினாமா பண்ணுய்யான்னா முடியாதுன்னு திமிரா உக்காந்துருக்காரு… இந்த ஆளுக்குப் போய் பாவம் பாக்கறியே..

சிமென்ட் சீனுதான் இப்படின்னா… சீனிவாசன் கூட இருக்கற எல்லாருமே மோசமானவங்களாத்தான் இருக்காங்க“

“அது யாருடா அது ? “

“மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்தான். நேத்து டைம்ஸ் ஆப் இந்தியாவுல ஒரு செய்தி வந்துச்சு.  பி.எஸ்.ராமன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தோட துணைத் தலைவர்.  பிசிசிஐ அமைப்பின் வழக்கறிஞர். இப்போ குருநாத் மெய்யப்பனோட வழக்கறிஞராவும் இருக்கறார்னு செய்தி வந்துச்சு. பார் கவுன்சில் விதிகளின்படி, மூத்த வழக்கறிஞர்களா இருக்கறவங்க, கட்சிக்காரர்களோட நேரடியா பேசக்கூடாது.  ஜுனியர் வழக்கறிஞர்கள் மூலமாத்தான் பேசணும்.

இதுக்கு மறுப்பு தெரிவிச்சிருக்கற பி.எஸ்.ராமன், என்னை ஈஷ்வர் நன்கனின்ற மும்பை வழக்கறிஞர்தான் இந்த வழக்குக்காக ஆஜராகுமாறு கேட்டுக்கிட்டார்.  நன்கனி விமான நிலையத்துலயே இருந்தார்.  விமான நிலையத்துல அவரோட பேசிட்டு நான் வந்துட்டேன். அவ்வளவுதான்னு சொல்லியிருக்காரு.

P.S.Raman

ஆனா, குருநாத் மெய்யப்பன் கொடைக்கானல்லேர்ந்து மும்பைக்கு போனதும், மும்பை விமான நிலையத்துலேர்ந்து மும்பை குற்றப்பிரிவுக்கு ராமன் போனதெல்லாம் தொலைக்காட்சியிலயே காண்பிச்சாங்க.   எப்படிப் பச்சையா கூசாம பொய் சொல்றாரு பாத்தியா…  சிமென்ட் சீனுதான் இப்படி இருக்கார்னா, அவர் வக்கீலு அவருக்கு மேல இருக்கார்… என்ன பண்றது..  இவர் கருணாநிதியோட அரசுல அரசு தலைமை வழக்கறிஞரா இருந்தாரு. அப்போ லாட்டரி அதிபர் மார்ட்டினுக்காக கேரளாவுல போய் ஆஜரானாரு… அதுவும் சர்ச்சையாச்சு…“

“திமுக செய்தியைச் சொல்லு மச்சான்…“ என்று தமிழிடம் வினவினான் பீமராஜன்.

“தலைவரோட பிறந்த நாள் கொண்டாட்டத்தை டெல்லி நீதிமன்றம் கெடுத்துடுச்சு மச்சான்… எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சுடுச்சு. 2ஜி வழக்குலேர்ந்து மகளை காப்பாத்தியாச்சு, இனி எம்.பியாக்க வேண்டியதுதான் பாக்கின்னு சந்தோஷமா இருந்தாரு. ஆனா அதுல டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி மண்ணை அள்ளிப் போட்டிருக்காரு. “

“ஆமா இவரு கூட நீதிமன்றத்தைக் கண்டிச்சு அறிக்கை விட்டாரே.. என்ன மேட்டர் அது ? “

“2ஜி வழக்குல கனிமொழி மேல இருக்கற ஒரே குற்றச்சாட்டு, ஷாஹீத் பல்வாக்கிட்ட இருந்து 200 கோடி ரூபாயை லஞ்சமா கலைஞர் டிவிக்காக வாங்கினாங்கன்றது.  ரெண்டு வாரம் முன்னாடி இந்த வழக்குல சாட்சி சொன்ன கலைஞர் டிவி பொது மேலாளர் ராஜேந்திரன்,

அப்போ கலைஞர் டிவிக்கு 200 கோடி தர்றதுக்காக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. ஒரு ஒப்பந்தம் 24.12.2008 இன்னொரு ஒப்பந்தம் 29.01.2009. இந்த இரண்டு ஒப்பந்தத்துலயும் கையெழுத்து போட்டது அமிர்தம்.  200 கோடி வாங்கலாம்னு முடிவெடுத்த மீட்டிங் நடந்தது 13.02.2009.  ஆனா கனிமொழி 20.06.2007லயே இயக்குநர் பதவியிலேர்ந்து ராஜினாமா பண்ணிட்டாங்கன்னு சாட்சி சொல்லியிருக்கார். 200 கோடி வாங்கலாம்னு முடிவெடுத்த போர்டு மீட்டிங்குல பங்கேற்றது தயாளு அம்மாள்தான்னு சொல்லியிருக்கார். “

“அப்போ தயாளு அம்மாள் குற்றவாளியால்ல சேக்கப்படணும்… ? “

19860604003011

“இதைத் தவிர்க்கறதுக்காகத்தான் தயாளு அம்மாளுக்கு ஞாபக மறதி. உடம்பு சரியில்லைன்னு ஏகப்பட்ட மருத்துவ சான்றிதழ் கொடுத்தாங்க.  நீதிபதிக்கு இந்தக் குடும்பம் எப்படிப்பட்ட டகால்டி குடும்பம்னு தெரியாதா என்ன ?  சென்னையிலேர்ந்து டெல்லிக்கு ஏகப்பட்ட விமானங்கள் வருது. அதுல ஏதாவது ஒரு விமானத்தை புடிச்சு சென்னை வாங்க.  காலையில 10 மணியிலேர்ந்து மதியம் 2 மணி வரைக்கும் எந்த நேரம் உங்களுக்கு வசதியோ, அப்போ விசாரிக்கறேன்னு உத்தரவு போட்டுட்டார்.  இதை தலைவர் சுத்தமா எதிர்ப்பாக்கலை.  அவர் கூட இருக்கற வக்கீலுங்க, தலைவரே.. அருமையான டாக்டர் சர்டிபிக்கேட் குடுத்துருக்கோம்.   யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.  அம்மாவ விசாரணைக்கு கூப்பிடவே முடியாதுன்று ரொம்ப நம்பிக்கை குடுத்துருக்காங்க. அதான் ரொம்ப நம்பிக்கையா பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகள்ல மூழ்கியிருந்தார். “

“சரி சாட்சியம்தானேப்பா சொல்லணும். சொல்லிட்டு வரட்டுமே….“ என்று விகல்பமாக கேட்டார் கணேசன்.

“அண்ணே… அவங்க சாட்சி சொன்னாலே அவங்க கதை முடிஞ்சுது.  ராஜேந்திரன் தன்னோடு சாட்சியத்துல, தயாளு அம்மாள் சன் டிவியில பங்குதாரராவும், இயக்குநராவும்  இருந்தாங்க. நவம்பர் 2005ல அவங்க வெளியில வந்தாங்க. 20 வருஷமா அவங்க சன் டிவியில இயக்குநரா இருந்துருக்காங்க. டிவி நடத்துறதுல, தயாளு அம்மாவுக்கு 20 வருட அனுபவம் இருக்கு. நிதி தொடர்பான எல்லா முடிவுகளையும் அமிர்தம்தான் எடுப்பார்.  அமிர்தத்துக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்றது தயாளு அம்மாள். ஜுலை 2007ல் 37 நாட்களுக்கு டிவியை நடத்தற பொறுப்பை தயாளு அம்மாள் சரத்குமார்கிட்ட குடுத்தாங்க.  அந்த 37 நாட்கள் கூட, செக்ல கையெழுத்து போட்ற அதிகாரம் சரத் குமாருக்கு தரப்படலை. 60 சதவிகித பங்குகள் வைச்சுருக்கதால, கலைஞர் டிவியை கட்டுப்படுத்தறது தயாளு அம்மாள்தான். எனக்கு எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்கறது தயாளு அம்மாள்தான். கலைஞர் டிவியோட துணை நிறுவனமா அஞ்சுகம் பிலிம்ஸ்னு ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுச்சு. அந்த நிறுவனத்தோட மொத்த நிர்வாகமும் தயாளு அம்மாள்கிட்டதான் இருந்துச்சு.. இந்த மாதிரி ராஜேந்திரன் சாட்சி சொல்லியிருக்கார்.

இந்த நிலையில தயாளு அம்மாள் அங்க போயி சாட்சி சொன்னா.. என்ன ஆகும்… ? அவங்களை குற்றாளியா சேக்கறத தவிர வேற வழியே இல்லை.  அவங்களை சேத்துட்டு கனிமொழி விடுவிக்கப்படுவார்.  இப்போ கலைஞர் நெலமையை நெனச்சுப் பாருங்க… மொதல் வீடா… ரெண்டாவது வீடா… ? யாரை பலி கொடுக்கறது.. யாரைக் காப்பாத்தறது….  தலைவர் வசமாத்தான் சிக்கியிருக்கார்.  என்ன நடக்குதுன்னு பாப்போம்.. “

“கேப்டன் எப்படிப்பா இருக்காரு.. ? “

“ரொம்ப நொந்து போயி இருக்காரு..  எப்படியாவது மச்சானை ராஜ்ய சபா எம்.பியாக்கிடலாமான்னு நெனச்சவருக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏவா போறது ரொம்ப கவலையை உண்டு பண்ணியிருக்கு. “

“சோகத்துல ரெண்டு ரவுன்ட் சேத்து போடச் சொல்லு“ என்று சொல்லிவிட்டு சிரித்தான் வடிவேலு.

Captain_vijayakanth__254

“அதெல்லாம் கரெக்டா போடுவாரு… ரவுண்ட் போடறது இருக்கட்டும். ரவுண்டு கட்டி அடிக்கறாங்களே அம்மா….  அதனால, தன்னோட எம்.எல்.ஏக்களை ராஜ்ய சபை தேர்தல்ல கனிமொழிக்கு ஆதரவு தர முடிவு எடுக்கற மனநிலையில இருக்காரு.  கனிமொழிக்கு ஆதரவு தர்றது, இந்த அம்மாவை கடுமையா கோவப்படுத்தும்.  என் கட்சி எம்.எல்.ஏக்களை கவுக்கற இந்த அம்மாவை இப்படித்தான் பழி வாங்கணும்னு நெனைக்கிறார். இது பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாவும் இருக்கும்னு சொல்றாங்க. “

“சென்னையில தண்ணிப் பஞ்சம் வருமா மச்சான் ? “ என்று அடுத்த விவகாரத்துக்கு தாவினான் பீமராஜன்.

“இப்போ நெலமை சமாளிக்கிற மாதிரி இருக்கு.  வட சென்னையில சில பகுதிகளுக்கு தண்ணீர் குடுக்காம பிரச்சினையாயிருக்கு.  மழை சீக்கிரம் வரலன்னா நெலமை ரொம்ப மோசமாயிடும்னு சொல்றாங்க.  இப்போ இரண்டு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுது.  மழை இல்லன்னா பிரச்சினை வரும். அப்போ அந்தப் பிரச்சினையை வைச்சு பெரிய அளவுல போராட்டம் நடத்தனும்னு திமுக தரப்புல திட்டம் போட்டிருக்காங்க.

சென்னையில தண்ணீர் பஞ்சம்னு தெருவுக்கு தெரு கூட்டம் போடணும்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு…“

“திருமாவளவன் கூட்டணியில இருக்காரா இல்லையாப்பா ? “

“அவர் தெளிவா இருக்கார்.  பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி உள்ள சேத்தா, ஒரு நிமிஷம் கூட திமுகவுல இருக்க மாட்டேன்னு தெளிவா இருக்கார்.  திமுகவும் பாமகவும் நெருக்கமாகி வர்றது தெரிஞ்சு போன வாரம், அகில இந்திய மனித உரிமை ஆணையத்துல போயி, தொடர்ந்து தலித்துகளுக்கு எதிரா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க அதனால பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்யணும், மக்கள் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கணும்னு புகார் கொடுத்திருக்கார்.

இந்தப் புகார் டெல்லியில குடுக்கப்படுறது வரைக்கும் ரகசியமா வச்சுருந்து அதுக்கப்புறம்தான் ஊடகங்களுக்கு சொன்னாங்க.  திமுகவுக்கு தெரிஞ்சா, ராஜ்யசபா தேர்தல் முடிஞ்சதும் இதைப் பண்ணலாம். இப்போதைக்கு பண்ணாதீங்கன்னு கலைஞர் சொல்லிடுவாருன்னு திருமா நெனைச்சுதான் இதை ரகசியமா வச்சுருந்தார். “

“சரி காவல்துறை செய்தியைச் சொல்லு….“ என்றான் ரத்னவேல்.

“மண்டியிடாத மானம்….“ என்று தொடங்கியதுமே குறுக்கிட்டான் ரத்னவேல். என்னடா திருப்பித் திருப்பி அதையே சொல்ற…“

“இல்ல மச்சான் போன வாட்டி சொன்னேன்ல அதே அதிகாரியைப் பத்திதான் இந்த செய்தி.

குற்றப்பரம்பரைச் சட்டத்துல உள்ள சாதியைச் சேர்ந்தவங்களுக்காக அரசாங்கம் சென்னை அருகே உள்ள பம்மல்ல நிலம் ஒதுக்குனாங்க. அந்த நிலம் ஒதுக்கி பல வருஷம் ஆயிடுச்சு. அந்த நிலம் யாருக்கு ஒதுக்கப்பட்டதோ அவங்க 13 வருஷம் கழிச்சுதான் அந்த நிலத்தை விக்க முடியும். அது தவிரவும், அதே சமூகத்தைச் சேர்ந்தவங்கக்கிட்டதான் நிலத்தை விக்க முடியும்.

அந்த நிலத்துல 8 க்ரவுண்ட் நிலத்தை சேஷசாயி தன்னோட தம்பி பேர்ல வாங்கியிருக்காரு. “

Seshasai_IPS2

“இவரு குற்றப்பரம்பரையில வர மாட்டாரே… இவரு மீசை வைக்காத ஐயங்கார் ஆச்சே… ? “

“அதுதான் விசேஷமே… அப்படி வாங்கின நிலத்தை இப்போ விக்க முயற்சி பண்ணியிருக்காரு. அந்தப் பத்திரப் பதிவு அதிகாரி நிலத்தை பதிவு பண்ண மாட்டேன். இது விதிகளுக்கு முரணானதுன்னு சொல்லிட்டாரு. “

“அப்புறம் ? “

“சேஷசாயி காவல்துறை உயர் அதிகாரி ஆச்சே… விட்டுடுவாரா… ? சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவு அதிகாரிக்கிட்ட லோக்கல் இன்ஸ்பெக்டரை விட்டு பேசச் சொல்லியிருக்காரு. அவரு ஆர்டிஓ சொன்னாத்தான் செய்ய முடியும். இது வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட விவகாரம்னு சொல்லியிருக்காரு. உடனே சேஷசாயி ஆர்டிஓக்கிட்ட பேசவும், ஆர்டிஓ சார் பதிவாளர்கிட்ட பேசியிருக்காரு. சார் பதிவாளரும் ஆர்டிஓவின் வாய் மொழி அறிவுரையின்பேரில், பத்திரம் பதிவு செய்யப்படுகிறதுன்னு எழுதி பதிவு செஞ்சுட்டாரு.. “

“மொத்த டீடியிலையும் குடு.. “

“என்னா டீடியிலு… வித்தவரு பேரு எஸ்.என்.கிருஷ்ண சாய்.  வாங்குனவரு பேரு ட்டி.செபாஸ்டின்.  பத்திர எண் 3321.2013. பத்திரம் பதிவு செஞ்ச நாள்13/05/2013.  இதுக்கு நடுவுல, இவங்க தம்பி மேல மோசடி புகார் கொடுக்க ஒரு க்ரூப் கௌம்பியிருக்கு…“

“அப்புறம்…“

“டிடி நாயுடு மருத்துவக் கல்லூரி உரிமையாளர் தீனதயாள் நாயுடுவை மோசடி புகார்ல கைது பண்ணியிருக்காங்க… அவர் மேல தொடர்ச்சியா புகார்கள் வந்துக்கிட்டு இருக்கு.. “

“நல்ல விஷயம்தானே… ? “

“நல்ல விஷயம்தான்.  இந்த ஆளு மேல 4 வருஷமாவே தொடர்ந்து பல புகார்கள் இருக்கு.  இந்த ஆளு நடத்தற மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் இல்லாத கல்லூரி.  ஆனா பலர் இது தெரியாம 20 லட்சம், 30 லட்சம்னு பணத்தைக் கட்டி ஏமாந்துட்றாங்க.

kannppan-comishnar

வடக்கு மண்டல ஐஜியா இருக்கற கண்ணப்பன்கிட்டவே பல புகார்கள் இருக்கு.  நேர்மையான அதிகாரின்னு சொல்லிக்கிட்டு இருக்கற கண்ணப்பன்,  இத்தனை நாளா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு.. ?  இவனை முன்னாடியே புடிச்சு உள்ளப் போட்டுருந்தா அப்பாவி பெற்றோர்கள் ஏமாந்துருக்க மாட்டாங்கள்ல ?  இவனை மாதிரி ஆட்களை உள்ளப் போட்றத விட்டுட்டு, சாலை மறியல் பண்றவனையெல்லாம் லத்தியை வச்சு அடிச்சு காலை ஒடைப்பேன்னு மெரட்ற வேலையிலதான் கவனமா இருக்கார்.. “

“சென்னையில நடந்த விபத்து விவகாரம் என்ன மச்சான்.. ? “ என்றான் ரத்னவேல்.

“இரவு நேரத்துல நடந்த அந்த விபத்துல ஒரு குழந்தை செத்து போச்சு.  தானாவே வந்து சரண்டர் ஆன குதிரை குமார்ன்ற நபரை கைது பண்ணதோட, வண்டி ஓட்ன எம்பீ டிஸ்டில்லரீஸ் உரிமையாளர் மகன் ஷாஜியோட சேந்து குடிச்ச அன்வர் மற்றும் அனில்ன்ற நபர்களை கைது பண்ணியிருக்காங்க…“

31THSHAJI_1471945e

ஷாஜி

“நல்லாத்தானே நடவடிக்கை எடுத்துருக்காங்க… ? “

“வண்டி ஓட்ன ஷாஜியை பொதுமக்களே பிடிச்சுக் குடுத்துருக்காங்க.  பொதுமக்கள் பிடிச்சுக் குடுத்த ஷாஜியை, ரவிச்சந்திரன்ற இன்ஸ்பெக்டர் தப்பிக்க விட்டுட்டார்.  இப்படி தப்பிக்க விடுறதுக்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கார். “

“அவரைத்தான் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களே…. “

“சஸ்பெண்ட் பண்ணியது சரிதான்.  ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிட்டு ஷாஜியை தப்பிக்க விட்டது, குற்றவாளிக்கு உடந்தையான செயல் மற்றும் தடயத்தை அழிக்கிற செயல் இல்லையா. இது இரண்டுமே தண்டனைக்குரிய குற்றம். அந்த இன்ஸ்பெக்டரை இந்திய தண்டனைச் சட்டம் 109 மற்றும் 201ன் கீழ கைது செஞ்சா, மத்த அதிகாரிகள் இது போல தப்பை  செய்வாங்களா ? “

“அப்புறம் ஏன் ஜார்ஜ் இதைப் பண்ணாம அமைதியா இருக்கார் ? “

“நம்பளே மாறப்போறோம்… இதை வேற எதுக்கு பண்ணிக்கிட்டுன்னு இருக்கலாம்.  அன்னைக்கு நைட் அந்த ஷாஜி தப்பிக்க விடாம இருந்துருந்தா, இன்னைக்கு பல தனிப்படைகள், தமிழ்நாடு, கேரளான்னு ஷாஜியை தேட வேண்டிய அவசியமே இருந்துருக்காது.  எத்தனை பேருக்கு இதனால வேலை… ?

ஷாஜியோட முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செஞ்சதும் முக்கியமா சொல்லனும்.  நீதிபதி சி.டி.செல்வம் திமுக நீதிபதின்னு ஊருக்கே தெரியும்.  90 நாள் தலைமறைவா சுத்துன அழகிரியோட மகனுக்கு, இவர்தான் முன்ஜாமீன் மனு குடுத்தது.  ஆனா இந்த விவகாரத்துலயும், கிரிக்கெட் சூதாட்டத்துல சம்பந்தப்பட்டிருக்கற ஹோட்டல் ஓனர் விக்ரம் அகர்வால் விவகாரத்துலயும் முன் ஜாமீன் மனுவை தயக்கமில்லாம தள்ளுபடி பண்ணிட்டார். “

“அவ்வளவுதானா காவல்துறை செய்தி ? “

“ஐபிஎல் சூதாட்டத்துல சிக்கயிருக்கற ப்ரசாந்த்ன்ற ப்ரோக்கர் குடுத்த தகவல்கள் பல அதிகாரிகளோட வயித்துல கிலியை ஏற்படுத்தியிருக்கு. யார் யார் சிக்கியிருக்கா ?

சாரங்கன் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரா இருந்தப்பதான் பெட்டிங் கொடிகட்டிப் பறந்துருக்கு. அப்போ கீழ்ப்பாக்கத்துல இருந்த ப்ரசாந்துக்கு சாரங்கன்தான் எல்லா உதவியையும் செஞ்சுருக்கார். இப்போ சிக்கினதும், சிபி.சிஐடி ஐஜி மஞ்சுநாதாகிட்ட போயி சரணடைஞ்சிருக்கார். எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க சார்னு கேட்ருக்கார்…. “

IMG_8442

“அடப்பாவிகளா…. ? “ என்று வாயைப்பிளந்தான் பீமராஜன்.

“என்னடா வாயைப் பிளக்கிற… போலீஸ் ஒத்துழைப்பு இல்லாம எப்படிடா கோடிக்கணக்குல பெட்டிங் நடக்க முடியும் ? ஐபிஎல் தொடங்கியதுலேர்ந்தே பெட்டிங் கொடிகட்டிப் பறந்துக்கிட்டுதான் இருக்கு.  இது தவிர ப்ரசாந்த் காவல்துறை அதிகாரிகள் டி.பி.சுந்தரமூர்த்தி, முகம்மது ஷகீல் அக்தர், பழைய கமிஷனர் திரிபாதி, புது கமிஷனர் ஜார்ஜ் எல்லாம் எனக்கு ரொம்ப நெருக்கம்னு சொல்லியிருக்கறதா சொல்றாங்க. “

“அது எப்படி மச்சான் இவ்வளவு பேர் இன்வால்வ் ஆகியிருக்க முடியும் ? “

“இப்போ ஸ்ரீசாந்த் விவகாரம் வெளியில வரலன்னா காவல்துறை இந்த விவகாரத்துல நடவடிக்கை எடுத்துருக்கும்னு  நெனைக்கிறயா.. ? தமிழ்நாட்டுல பெட்டிங்கே நடக்காத மாதிரி நடிச்சிருப்பாங்க.  மற்ற காவல்துறை அதிகாரிகள் மேல சந்தேகம் இருந்ததாலத்தான், இந்த விஷயத்தையே சிபி.சிஐடிக்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க.

“பத்திரிக்கை செய்தி ஏதாவது இருக்கா தம்பி ? “ என்றார் கணேசன்.

“சன் டிவி ராஜாவை தந்தி டிவியில கூப்புட்றாங்க. மக்கள் டிவியில கூப்புட்றாங்கன்னு இவராவே செய்தி பரப்பிட்டு இருக்காரு.  ஆனா அவரை எங்கயும் கூப்புடலை. வீட்டுலதான் உக்காந்துக்கிட்டு மோட்டுவளையை பாத்துக்கிட்டு இருக்காரு. “

“ஜெயா டிவி எப்படி இருக்குதாம் ? “

“ரபி பெர்நார்ட் நிர்வாகத்துக்கு கீழ ஜெயா டிவி வந்த பிறகு நெறய்யவே மாற்றம் வந்துருக்கு.  ஜெயா ப்ளஸ் சேனல்ல வந்துக்கிட்டு இருந்த ஜோசிய நிகழ்ச்சி, ரியல் எஸ்டேட் நிகழ்ச்சியால, மாசத்துக்கு ஒன்றரை கோடி ரூபா வருமானம் வந்துக்கிட்டு இருந்துச்சு.  எல்லாத்தையும் ஒரே நாள்ல ஏறக்கட்டிட்டார். நல்ல நிகழ்ச்சிகளா பண்ணுங்கன்னு உற்சாகப்படுத்தறார்.  ஜெயா டிவி ஆரம்பிச்ச 12 வருஷத்துல மொத முறையா எடிட்டோரியல் மீட்டிங் நடத்தறார். ஜெயா டிவியை சரி பண்ணனும்னு பிபிசிலேர்ந்து ஒரு டீமை வரவச்சு முழுக்க ஆய்வு பண்ண வச்சார்.“

“பரவாயில்லயே… நல்லா பண்றாரே… “

“ஆனா அவரை பண்ண விடாம மூணு மும்மூர்த்திகள் தடுக்கறதா வருத்தப்படுறாங்க. “

“அவர் அம்மா நியமனமாச்சேப்பா.. அவரை யாரு தடுக்கறது.. ? “

“தில்லை, ரமணி, ராஜன் இவங்க மூணு பேர்தான் இப்போ மும்மூர்த்திகள். இதுல ராஜன் வாகனம், ஆட்கள் தேர்வு போன்ற விவகாரத்துக்கு இன்சார்ஜ்.

சி.எம் நிகழ்ச்சிக்கு வேணும்னு 3 புது இன்னோவா கார் வாங்கினாங்க. ஆனா எதுக்கு வாங்கியிருக்காங்கன்னே தெரியாம மூணும் தெண்டத்துக்கு வெயில்ல காஞ்சுக்கிட்டு இருக்கு. “

“அடப்பாவமே.. “

“ஆமான்ணே….  சிஎம் அசைன்மென்டுக்கு எப்பவுமே ரமணிதான் போவாரு.  ரமணி, முதலமைச்சரோட எட்டாவது செயலாளர்னே சொல்றாங்க. ரமணி தொடர்ந்து சிஎம் அசைன்மென்டுக்கு போறதுனால, ரமணியைக் கேட்டுதான் எதுவா இருந்தாலும் செய்யனும்னு சொல்லப்படாத உத்தரவு.  மூணு வருஷ சர்வீஸ் ஆனவங்க எல்லாரும் சிஎம் அசைன்மென்டுக்கு போகலாம்னு ரபி பெர்நார்ட் சொல்றார். அதுக்காக எல்லாருக்கும் புது யூனிபார்ம் தைக்க உத்தரவு போட்டாங்க.  ரமணிக்கும் மூணு உதவி கேமரா மேனுக்கும் முதல் செட் யூனிபார்ம் வந்துச்சு.  மத்தவங்களுக்கும் யூனிபார்ம் வந்துச்சுன்னா எல்லாரும் போக ஆரம்பிச்சுடுவாங்கன்னு, மத்தவங்க யாருக்கும் யூனிபார்ம் தைக்கிறதையே ரமணி நிறுத்திட்டார்.

“அப்படியாப்பா பண்ணார் ? “

34555_1223442565185_1365307_n

 

ரமணி

“ஆமான்ணே…  எல்லாருக்கும் யூனிபார்ம் வந்துச்சுன்னா, எல்லாரும் சிஎம் அசைன்மென்டுக்கு போக ஆரம்பிச்சுடுவாங்கள்ல ?  அப்புறம் இவர் எப்படி சி.எம்.செக்ரட்டரியா இருக்க முடியும் ?

ரமணியும் துக்ளக் ரமேஷும் நெருங்கிய நண்பர்கள்.  இவங்க ரெண்டு பேரும்தான் எப்போப் பாத்தாலும் அமைச்சர்களை சந்திக்கறது எல்லா வேலையும் பண்றதுன்னு இருக்காங்க.

“சரி தில்லைதானே நியூஸ் எடிட்டர்… அவருக்கு என்ன வேலை ? “

“அம்மா அறிக்கை வந்தா, அதுல சந்திப்பிழை திருத்தறது… அம்மாவை க்ளோசப்ல காட்டும்போது தலையில முடி நரை தெரியாம கேமரா ஆங்கிள் வைக்கறது…. ? “

“ஆமாம்யா.. அந்த அம்மாவுக்கு 23 வயசு ஆகுது… அதனால நரை தெரியக்கூடாது.. ? “

“அண்ணே இதெல்லாம் அந்த அம்மா சொல்றதே கிடையாது… இவனுங்களே இந்த பில்டப்பையெல்லாம் குடுக்கறது.. அம்மா முகத்துல சுருக்கம் தெரியுது.. லைட்டை கம்மி பண்ணுங்கன்னு சொல்றது… ஆட்சி நடத்தறாங்களா சினிமா ஷுட்டிங் நடத்தறாங்களான்னு தெரியல…

ஜெயா டிவியில இருக்கறதுலேயே வீட்டு வசதி வாரிய வீட்டு ஒதுக்கீடு பண்ண வீட்ல இருக்கற ஒரே ஆள் ரமணிதான்.  பிஆர்ஓக்கள் அத்தனை பேரும் ரமணியோட கைக்குள்ள. திமுக ஆட்சி நடந்தப்போ, அந்த ஆட்சிக்கு எதிரா ரமணி ஒரே  ஒரு சிங்கிள் நியூஸ் கூட பண்ணதுல்ல.. ஒரு இடத்துக்குப் போய் ஒரு ஸ்டோரி பண்ணனும்னா எப்படின்றது ரமணிக்கு சுட்டுப் போட்டாலும் வராது.  ஆனா இவருக்கு மாசம் 50 ஆயிரம் சம்பளம். இது போக செய்தி வாசிக்கறதுக்கு ஒவ்வொரு ஷெட்யூலுக்கும் 1500 ரூபாய்.. என்னத்தை சொல்ல…

எல்லா விளம்பரங்களும் அவர் மூலமாத்தான் வரணுமாம்.  செய்தி விளம்பரத்துறை செயலாளர் ராஜாராம் இவருக்கு ரொம்ப நெருக்கமாம்.“

“சரி இன்னொருத்தர் பேர் சொன்னியே.. அவரு என்ன பண்றாரு ? “

“அந்த ராஜன்றவருக்கு முழு நேர வேலையே ஐபிஎல் மேட்ச் பாக்கறதுதான். எப்போப் பாத்தாலும் மேட்ச் பாத்துக்கிட்டே உக்காந்திருப்பாரு.. “

“மேட்சைப் பாக்கறாரா… சியர் கேர்ள்ஸை பாக்கறாரா ? “

“அது அவருக்குத்தாம்பா தெரியும்… வீட்ல சிலிண்டர் தீந்து போச்சுன்னா ஆபீஸ் கேன்டீன்லேர்ந்து சிலிண்டரை எடுத்துட்டுப் போயிடுறாராம்…“

“அடக்கொடுமையே….  அந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா ? “

“அவங்களுக்கும் ஜெயா டிவிக்கும்தான் சம்பந்தம் இல்லையே.. “ என்று சொல்லி விட்டு வாய் விட்டுச் சிரித்தான் தமிழ்.

அனைவரும் சிரித்தனர்.  “சரி போலாம்பா.. தூக்கம் வருது.. “

“ஒரே ஒரு செய்தின்ணே…. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சிக்கல் வரும்….“

“யாருப்பா அது ? “

தூக்கம் வருதுன்னு சொன்னீங்கள்ல….. வாங்க போலாம்….

ஓய்வு பெறுங்கள்… ….

$
0
0

final_on_11

90 வயது. 90 வயதில் ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்.  உண்டு, உறங்கி, எப்போது காடு அழைக்கும் என்று காட்டை எதிர்நோக்கி அந்தக் காலத்தைப் போல வருமா என்று புலம்பியபடி காலம் தள்ள முடியும். சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெரும்பாலான நேரம் உறங்கி, விழிக்கும் நேரத்தில் உடல் உபாதைகளைப் பற்றி புலம்பிக் கொண்டே பொழுதைப் போக்க முடியும்.

ஆனால், காலையில் எழுந்ததும் அனைத்து செய்தித்தாள்களையும் படித்து, உதவியாளர் சொல்லும் தகவல்களைக் கேட்டறிந்து, எந்தெந்த செய்திகளை பாராட்ட வேண்டும், எந்தெந்த செய்திகளை மறுக்க வேண்டும் என்று தேவையான குறிப்புகளை உதவியாளருக்கு கொடுத்து, கட்சியில் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டறிந்து, அறிவாலயம் சென்று, கட்சிக்காரர்களைப் பார்த்து, விபரங்களைக் கேட்டறிந்து, கோபாலபுரம் சென்று, மனைவி தயாளுவின் உடல் நிலையை விசாரித்து, மகன் என்ன செய்கிறான் என்று பார்த்து, மதுரை மகன் இன்று ஏதாவது பஞ்சாயத்து வைத்திருக்கிறானா என்பதை விசாரித்துக் கொண்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, யாரையாவது தாக்கிப் பேசி, தான் பேசுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவாதித்து, தொலைக்காட்சி நிருபர் ஏதாவது மோசமான கேள்விகளைக் கேட்டால், அவரைத் திட்டி, மாலை மீண்டும் கட்சித் தலைவர்களோடு ஜெயலலிதாவையும், அதிமுகவையும் பற்றி விசாரித்தறிந்து, ஜெயலலிதாவை வாயாரத் திட்டி, அடுத்து என்ன அறிக்கை விட வேண்டும் என்பதை கேட்டறிந்து, மாலை செய்தித்தாள்களைப் படித்து,  இரவு துணைவியார் வீடு இருக்கும் சிஐடி காலனிக்குப் போய், அவர் வைக்கும் ஒப்பாரியை முழுமையாக கேட்டு, மகளை எப்படி ராஜ்யசபை எம்.பியாக்குவது, எவனை வாங்குவது, எவனைக் கவிழ்ப்பது என்று யோசித்து, மகள் சொல்லும் புகார்களைக் கேட்டு, புதிதாக வந்திருக்கும் தமிழ்த்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி காட்டினால் அதை சென்று பார்த்து, அதற்கு விமர்சனம் எழுதி, இரவு உறங்கச் சென்று, மீண்டும் அதிகாலை எழுந்து, மீண்டும் செய்தித்தாள்களைப் படித்து…. …. …..

இதை உங்களால் 90 வயதில் செய்ய முடியுமா ?   நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா ? இதை கருணாநிதி 90 வயதில் செய்து கொண்டிருக்கிறார்.  இது ஒரு மனிதனால் சாத்தியமா என்பதை நம்ப முடியவில்லை.  கருணாநிதி ஒரு விஞ்ஞான அதிசயம்தான்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளையை விஞ்ஞானிகள் பரிசோதித்தது போல கருணாநிதியின் மூளையையும் பரிசோதிக்கத் தகுந்ததே. அப்படிப்பட்ட அசாத்திய திறமை வாய்ந்தவர் கருணாநிதி. கருணாநிதியைப் போன்ற மிகச்சிறந்த நிர்வாகியைப் பார்க்கவே முடியாது. கருணாநிதியோடு பணியாற்றிய பெரும்பாலான உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் விஷயம், கருணாநிதி ஒரு சிறந்த நிர்வாகி என்பது. சட்டம், நிர்வாகம், உளவு, அரசியல், இலக்கியம் என்று கருணாநிதி ஒரு பன்முகத் திறன் படைத்தவர் என்பதை அவர் எதிரிகளும் ஒப்புக் கொள்ளவே செய்வர். கை ரிக்சாவை ஒழித்தது, இலவச கண் சிகிச்சை முகாம், திருமண உதவித் திட்டம், கிராமப்புரங்களை சீர்திருத்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமங்கள் சுய நிர்ணயம் பெறும் வகையில் நமக்கு நாமே திட்டம், இது தவிரவும் பல்வேறு உட்கட்டுமானப் பணிகள் என்று கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்குச் செய்த சேவைகள் குறிப்பிடத் தக்கவை.

இவையெல்லாவற்றையும் விட, கருணாநிதியிடம் குறிப்பிடத்தகுந்த பாரட்டக் கூடிய ஒரு குணம், அவரது சிறந்த நகைச்சுவை உணர்வு.  ஜெயலலிதாவுக்கு இந்த உணர்வு சுட்டுப்போட்டாலும் வராது. கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா சரியான சிடுமூஞ்சி.  ஜெயலலிதா எப்போதாவது சிரித்தார் என்றால் அது அதிசயிக்கத்தக்க சம்பவமாக இருக்கும்.  நான் நல்ல ஆட்சி தருகிறேன் என்று ஜெயலலிதா தான் பேசுவது நகைச்சுவை என்பதே தெரியாமல் ஜோக் அடித்தால்தான் உண்டு.

ஆனால் கருணாநிதியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சிலேடையும், நகைச்சுவை உணர்வும் இருக்கும். தர்மசங்கடமான கேள்விகளுக்கு சிலேடையாகவும், நகைச்சுவையாகவும் பதில் கூறி, அந்தக் கேள்வியையே முனை மழுங்கச் செய்வதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது.

இவையெல்லாம் கருணாநிதியின் ஒரு முகம்.  கருணாநிதிக்கு மற்றொரு முகம் இருக்கிறது. அது சகித்துக் கொள்ள முடியாத முகம். தொடக்க காலம் முதலாகவே கருணாநிதி, தான் தன் குடும்பம் என்பதை மனிதில் வைத்தே அத்தனை காரியங்களையும் ஆற்றியிருக்கிறார்.

சுயமரியாதை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையோடு தன் அரசியல் வாழ்வை தொடங்கிய கருணாநிதி, தன் அக்காள் சண்முக சுந்தரம்மாளின் மகன் மாறனை தன் இளமைக் காலம் தொடங்கியே கூடவே வைத்திருந்தார்.   முதல் மனைவி பத்மாவதியின் மறைவுக்குப் பிறகு, தயாளு அம்மாளைத் திருமணம் செய்த கருணாநிதிக்கு தயாளு அம்மாள் வழியாக அழகிரி, ஸ்டாலின், தமிழரசு மற்றும் செல்வி என்று நான்கு பிள்ளைகள்.  அடுத்ததாக வந்து சேர்ந்தார் துணைவியார் தர்மாம்பாள் என்கிற ராசாத்தி அம்மாள். அவர் வழியாக கனிமொழி. இந்தக் குடும்பங்களும், மாறனின் குடும்பங்களின் வளர்ச்சியே திமுக மற்றும் கருணாநிதியின் வளர்ச்சி.

எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக தன் மகனை களமிறக்கி தோல்வி கண்ட கருணாநிதி முத்துவின் மீதான நம்பிக்கையை இழந்தார். 1953ல் பிறந்த ஸ்டாலின், 1969 பாராளுமன்றத் தேர்தலில் முரசொலி மாறனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெருக்கடி நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததைக் காரணம் காட்டியே அவரை கட்சியின் இளைஞர் அணித் தலைவராக்கினார்.  1980ல் இளைஞர் அணித் தலைவரான ஸ்டாலின் இன்று வரை அந்தப் பதவியை விடவில்லை. டெல்லியை கவனித்துக் கொள்ள முரசொலி மாறனும், தமிழகத்தில் தனக்கு அடுத்து மு.க.ஸ்டாலினும், தென் தமிழகத்துக்கு அழகிரியும் என்று மெள்ள மெள்ள, போராட்டத்தில் உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது குடும்ப நிறுவனமாக மாற்றினார் கருணாநிதி.

தனக்கு போட்டி என்று கருதி எம்.ஜி.ஆரை வெளியேற்றினார், தன் மகனுக்கு போட்டி என்று கருதி வைகோவை வெளியேற்றினார்.  தனக்கும், தன் குடும்பத்துக்கும் யார் யாரெல்லாம் எதிரி என்று கருதினாரோ, அத்தனை பேரையும் ஒழித்துக் கட்டினார். வி.பி.சிங் அரசாங்கத்தில் மந்திரி பதவி என்ற வாய்ப்பு வந்ததும், அப்போது ராஜ்யசபா எம்.பிக்களாக இருந்த யாரையும் பரிந்துரைக்காமல், முரசொலி மாறனைத்தான் பரிந்துரைத்தார் கருணாநிதி. 2004ல் வாய்ப்பு வந்தபோது முரசொலி மாறனின் வாரிசைத்தான் மந்திரியாக்கினார் கருணாநிதி. கட்சியின் தொழிற்சங்கத்தில் முக்கிய பங்காற்றிய செ.குப்புசாமியை எம்.பியாக்கத் தோன்றிய கருணாநிதிக்கு அவரை அமைச்சராக்கத் தோன்றவில்லை. 2009ல் எம்.பியான அழகிரியை மந்திரியாக்கத் தெரிந்த கருணாநிதிக்கு, கட்சி மற்றும் தமிழகத்தின் குரலாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றி வரும் திருச்சி சிவாவை அமைச்சராக்கத் தோன்றவில்லை.

பதவிக்கான போட்டிகள் இவர்கள் குடும்பத்திற்குள்தான் எழுந்தனவே தவிர குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் போட்டியிட முடியவில்லை. அழகிரியின் கோபம் பல பேருந்துகளை எரித்தது.  தான் வாரிசாகத் தகுதியில்லை என்று சர்வே வெளியிட்டதற்கு வந்த கோபம் மூன்று உயிர்களை பழிவாங்கியது. ஆட்சி பொறுப்பில் இருந்து இவற்றைக் கண்டித்திருக்க வேண்டிய கருணாநிதி, தன் பிள்ளைகளை மயிலிறகால் வருடிக் கொடுத்தார்.

karuna_family_tree

மாறன்களோடு பகை உருவானபோது, அவர்களுக்குப் போட்டியாக தன் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழியை டெல்லி பிரதிநிதியாக கட்சியின் மீது திணித்தார். தன்னையோ, தன் குடும்ப உறுப்பினர்களையோ தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பதை ஏறக்குறைய வெளிப்படையாகவே அறிவித்தார்.  திமுக என்பது, தனது குடும்ப சொத்து என்பதை பகிரங்கப்படுத்தினார் கருணாநிதி.

குடும்பம் என்ற புதைமணலில் சிக்கிய கருணாநிதி அந்த புதை மணலில் இருந்து வெளிவர முடியாமல், அதற்குள் நின்று கொண்டே கட்சி தொடர்பான அத்தனை முடிவுகளையும் எடுக்கத் தொடங்கினார். அப்போது இடுப்பு வரை அவரை விழுங்கியிருந்த புதை மணல், அவர் சிந்தனையை மழுங்கடித்தது.

சிறிது சிறிதாக கருணாநிதியை விழுங்கிய புதை மணல், 2006ல் அவரை கழுத்து வரை விழுங்கியது.  தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் ஒருவன் சிந்தனை செய்ய முடியாமல் எப்படித் தடுமாறுவானோ, அது போலவே தடுமாறத் தொடங்கினார் கருணாநிதி.  அது வரை, மறைமுகமாக அமைச்சர்கள் மூலமாக வசூலில் ஈடுபட்ட கருணாநிதியின் குடும்பம், நேரடியாகவே வசூலில் இறங்கத் தொடங்கியது.  இரண்டாம் தாரத்துக்கும், மூன்றாம் தாரத்துக்கும் இடையே இருந்த போட்டிகளும், மாறன் குடும்பத்தோடு நடந்த போட்டிகளும், வரைமுறை இல்லாமல் கொள்ளையடிக்க வைத்தன.  டெல்லியில் ஒரு புறமும் தமிழகத்தில் மறு புறமும், கருணாநிதியின் குடும்பம் அடித்த கொள்ளைகள், சம்பல் பள்ளதாக்கில் அடித்த கொள்ளைகளை விஞ்சின.  இந்தக் கொள்ளைகளையெல்லாம் தடுத்திருக்கும் வல்லமை படைத்த கருணாநிதி தன் கட்டுப்பாட்டை இழந்து, சண்டை போடாமல் கொள்ளையடியுங்கள் என்றார்.

சொந்தங்களுக்குள்ளேயே சிக்கல் என்ற நெருக்கடி வந்தபோது, சொந்தங்களை விட குடும்பமே பெரிது என்று முடிவெடுத்தார்.  பிரிந்த சொந்தங்கள், குடும்பத்தை அச்சுறுத்தியதும், சொந்தங்களுக்கும், குடும்பத்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். மூன்று உயிர்கள் பலியான விவகாரத்தை, அது முடிந்து போன விவகாரம் என்று புறந்தள்ளினார். இனித்த இதயத்தை தடவிக் கொண்டும் பனித்த கண்களை துடைத்துக் கொண்டும், மறைந்த உயிர்களை மறந்து போனார்.  தினகரன் நாளிதழில் நடந்த கொலைகளை கருணாநிதி கையாண்ட விதம், அவர் குடும்பத்துக்காக எத்தனை உயிர்களையும் பலி கொடுக்க தயங்க மாட்டார் என்பதை உணர்த்தியது.

ஒரு சாதாரண திரைப்பட எழுத்தாளராக தன் வாழ்வை தொடங்கிய கருணாநிதியின் குடும்பம், இன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக உருவெடுத்திருக்கிறது.  கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.  ஆனால் அந்த குடும்பத்தின் பேராசைகள் அவர்களை சட்டத்தின் பிடியிலும் சிக்க வைத்திருக்கிறது.  பதவி ஆசையில் மகன் கொலை வழக்கை சந்தித்தார். பண ஆசையில் மகள் சிறை சென்றார்.  பெரும் பேராசையில் மருமகன்கள் சிறை செல்ல இருக்கின்றனர்.

இவர்களைக் காப்பாற்றும் நெருக்கடியில் இருந்த கருணாநிதி தனது அத்தனை விழுமியங்களையும் இழந்தார்.  தமிழினத் தலைவர் என்று தொண்டர்கள் வாயாரப் புகழ்வதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த கருணாநிதி அந்த இனத்தின் படுகொலைக்கு மவுன சாட்சியானார்.  தமிழ் தமிழ் என்று மொழியால் தன்னை வளர்த்துக் கொண்ட கருணாநிதி, அந்த மொழியை வாழவைக்கும் தமிழர்களின் இனப்படுகொலையைப் பார்த்து வாளாயிருந்தார்.

விஞ்ஞானிகளே வியக்கத்தக்க அசாத்தியமான திறமைகளைக் கொண்ட கருணாநிதியை ஒரு தட்டிலும், தன் குடும்பத்துக்காக அந்தத் திறமைகளை சீரழித்த கருணாநிதியை மறு தட்டிலும் வைத்தால், குடும்பத்துக்காக தன் இனத்தை பலிகொடுத்த கருணாநிதியின் பக்கமே எடை கூடுகிறது.

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுக்கும் திறமைக்கும் ஈடு கிடையாது. அந்த ஐன்ஸ்டீன், தன்னுடைய கண்டுபிடிப்புகளை மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்துவதற்கும், கருணாநிதி தன்னுடைய அசாத்திய திறமைகளை குடும்பத்தை வளர்த்து இனத்தை அழிக்க பயன்படுத்தியதற்கும் வேறுபாடு இல்லை.

இந்த வயதிலும், பிடிவாதமாக நீங்கள் அரசியலில் ஈடுபட்டு, மகனுக்குக் கூட பதவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பதன் காரணம் நீங்கள் நார்சிஸ்ட் என்பது மட்டுமல்ல.  நீங்கள் பதவியில் இல்லாமல் இருந்தால், உங்கள் குடும்பங்கள் அடித்துக் கொண்டு தெருவுக்கு வந்து விடுவார்கள் என்பதும்தான்.  ஆனாலும் இந்த வயதில் நீங்கள் விடாமல் இந்தப் பதவியைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, உங்கள் பிள்ளைகளே ஏசுகிறார்கள்… உங்களை சபிக்கிறார்கள். உங்களைப் பார்த்ததும், அப்பா என்றும் தலைவர் என்றும் அவர்கள் பாசமாகப் பேசுவது நடிப்பு என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் அதை பாசமென்று நம்ப விரும்புகிறீர்கள். இதனால் அது உங்களுக்கு உண்மையாகத் தோன்றுகிறது.

இத்தனை நாட்களாக நீங்கள் குடும்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பங்களுக்காக பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கிறீர்கள். இது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய காலம். நீங்கள் காலதாமதம் செய்வீர்களேயானால், உங்கள் பிள்ளைகளே உங்களை வெளிப்படையாக வெறுக்க நேரிடும்.  அந்த நிலை உங்களுக்கு இந்த முதிய வயதில் வரக்கூடாது.

சுயசரிதை என்பது ஒரு மனிதனின் உயில் போன்றது.  அந்த உயிலில் பெரும்பாலும் பொய் இருக்காது.  ஆனால் உங்களின் நெஞ்சுக்கு நீதி ஆறு பாகங்களும் முக்கால் பகுதி பொய்யைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. யாருடைய நெஞ்சுக்கும் நீதி வழங்காதது உங்கள் சுயசரிதை.

உங்களின் இந்த 90வது பிறந்த நாளில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுங்கள். ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்தை தமிழர்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.  அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவது ஒன்றுதான் தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் ஒரே உதவி.

ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களை எழுதுங்கள்.  உண்மையை எழுதுங்கள்.  உங்கள் வாழ்வின் உண்மைகள் உங்களோடு அழிந்து போக வேண்டாம்.

Kalangher

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சொம்பாலானது...

$
0
0

946833_484134978322375_1164224053_n_1

"தமிழ் நாட்டில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் அதை தன்னைச் சுற்றி நடக்கும் பிரச்சினையாக மாற்றி விடுகிறாரே கலைஞர்?''’என்று ஒரு முறை ஒரு பத்திரிகையாளர் என்னிடம் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். எனக்கு அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தமிழகத்தின் எந்த அரசியல் நிகழ்வும் இந்த மனிதரைத் தாண்டிச் செல்ல முடியாது என்பதற்கு கடந்த காலத்தில் எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் பிரச்சினையிலும் கலைஞர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதுதான் அந்த பிரச்சினையின் திசையையே தீர்மானிப்பதாக இருந்து வந்திருக்கிறது. அவர் அதிகாரத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்தான் தமிழக அரசியலின் மைய்ய நீரோட்டமாக இருந்திருக்கிறார். இந்திய அரசியலிலேயே இப்படி ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கக்கூடிய இன்னொரு தலைவரைப் பார்க்க முடியாது. இந்திய அரசியலில் கோலோச்சிய பல தலைவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு காலம் இருக்கிறது. அந்தக் காலம் முடிந்ததும் அரசியலில் அவர்கள் இடம் காணாமல் போய்விடும். வி.பி.சிங்., மொரார்ஜி தேசாய் போன்ற தேசிய தலைவர்கள் அவர்கள் வாழ்நாளிலேயே அரசியலிலிருந்து மறைந்து போனார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலின் மிகப்பெரிய சக்திகளாக விளங்கிய வாஜ்பேயி, எல்.கே.அத்வானி போன்றவர்கள் இன்று அரசியலிலிருந்து மங்கி மறைந்துகொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட எழுபதாண்டு பொது வாழ்க்கையில் நாற்பது வருடங்கள் தமிழக அரசியலில் ஒருபோதும் ஒளி இழக்காத நட்சத்திரமாக கலைஞர் இருக்கிறார். ஒரு மனிதருக்கு இது எங்கிருந்து சாத்தியப்படுகிறது? கலைஞர் அதிகாரத்திற்கு மட்டும் அரசியலில் இருந்திருந்தால் அதிகாரத்தை இழக்கும் போதும் அவர் தளர்ச்சியடைந்திருப்பார், ஆனால் கலைஞரின் அரசியல் என்பது இலட்சியவாதத்தின்பாற்பட்டது. அவர் ஒரு கட்சி நிர்வாகியோ மேடைப் பேச்சாளரோ அல்ல. சமூகத்தின் ஒவ்வொரு பிரச் சினைகளைப் பற்றியும் அவருக்குத் திட்ட வட்டமான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அந்தக் கருத்துக்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் அவர் இடையறாது போராடி வந்திருக்கிறார். அந்தக் கொள்கையும் போராட்டமும்தான் அவரை என்றும் ஒரு உயிர்ப்புள்ள வலிமையுள்ள சக்தியாக வைத்திருக்கிறது. அவரது அபிப்ராயங்களையும் எதிர்வினைகளையும் அடிப்படையாகக் கொண்டே தமிழகத்தில் ஒவ்வொருவரும் அரசியல் செய்தாக வேண்டும் என்கிற நிலையை கலைஞர் உருவாக்கினார்.

இந்த கருத்தியல் போராட்டம்தான் அவரை எமெர்ஜன்சியை எதிர்த்து அதி காரத்தை இழக்க வைத்தது. மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோதுகூட தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற் காக கண்ணீர் கவிதை எழுத வைத்தது. ராமர் பாலம் தொடர்பான விவகாரத்தில் பொதுஜன உணர்வுகளைப் பொருட் படுத்தாமல் பகுத்தறிவு சார்ந்த கருத்துக் களை துணிச்சலாக கூறவைத்தது. இவ்வளவு ஏன் இன்று இந்தியாவிலேயே மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வரும் ஒரே பெரிய அரசியல் தலை வர் கலைஞர் மட்டுமே.

ஆனால் கலைஞ ருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய துரதிர்ஷ்டம் இருக் கிறது. அவருயை காலத்தில் அவருக்கு சமமாக அரசியல் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அது. அனுபவத்தாலும் சிந்தனைத் திறனாலும் செயல்திறனாலும் மொழி ஆற்றலினாலும் அவரது தகுதிக்கு இணையில்லாத பலரோடும் அவர் வழக்காட நேர்ந்ததுதான் தமிழக அரசியலில் அவர் அடைந்த மிகப்பெரிய துயரம். ஆனால் அந்தத் துயரத்தையும் கலைஞர் மிகவும் வெற்றிகரமாக கடந்து சென்றார். வெவ்வேறு காலகட்டத்தில் கலைஞரோடு அரசியல் செய்த பலரும் காலத்தின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டபோதும் கலைஞர் தமிழக அரசியலின் மைய விசையாக நிலைத்து நின்றார்.

ஐந்து முறை தமிழக முதல்வர், 11 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர், 44 ஆண்டுகள் ஒரு கட்சியின் தனிப்பெரும் தலைவர் என்ற சாதனையை தக்க வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. தி.மு.க. தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட காலங்களில்கூட யாராலும் வெல்ல முடியாத மனிதராக கலைஞர் இருந்து வந்திருக்கிறார்.

அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாறு என்பது அவருடைய வரலாறு மட்டுமல்ல, தி.மு.க.வின் வரலாறு மட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாறும் அதுதான். அவர் தன் வாழ்வில் அடைந்த அத்தனை சிகரங்களையும் கடும் போராட்டத்தினாலும் உழைப்பினாலும் அடைந்தார். சினிமாவின் வெளிச்சமோ சாதி அரசியலின் குறுக்குவழிகளோ கலைஞரின் அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கவில்லை. மாறாக, தனது கொள்கை சார்ந்த அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார். கடும் அர்ப்பணிப்பினாலும் இடையறாத பணியினாலும் கட்சிக்குள் தனது இடத்தை உருவாக்கினார். இந்த அரசியலில் நிலைத்து நிற்பதற்காக அவரும் தி.மு.க.வும் எதிர்கொண்ட போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. எத்தனையோ ஒடுக்கு முறைகளுக்கும் வீழ்ச்சிகளுக்குப் பிறகும் அந்த இயக்கம் உருக்குக் கோட்டையைப் போல நின்றது.

இவ்வளவு சோதனைகளையும் சவால்களையும் சந்தித்த வேறெந்த இயக்கமும் கலகலத்துப் போயிருக்கும். அதன் தொண்டர்கள் தங்கள் பற்றுறுதியை இழந்திருப்பார்கள். ஆனால் கலைஞர் புயல் நடுவினிலே ஒரு தோணியைப் போல தி.மு.க.வை ஒரு மனத்திண்மை படைத்த மாலுமியாக கொண்டு செலுத்தி யிருக்கிறார். தனது உற்சாகத்தின் ரத்தநாளங்களை அடிமட்டத் தொண்டனின் இதயத்தின் அடிஆழம் வரை அவர் எப்போதும் இணைத்து வைத்திருந்தார். அந்த உற்சாகத்தின் வலிமைதான் ஒவ்வொரு முறையும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல தி.மு.க.வை உயிர்த்தெழ வைத்திருந்திருக்கிறது.

இந்திய தேசிய அரசியலில் ஒரு பிராந்திய கட்சி ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டியவர் கலைஞர்தான். கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க.தான் தீர்மானித்து வந்திருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநில கட்சியும் இவ்வளவு நீண்டகாலம் இத்தகைய ஒரு பாத்திரத்தை வகித்ததில்லை.


கலைஞர் விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சியவரல்ல. அவற்றை மிகுந்த மனத்தெளிவுடன் அவர் எதிர்கொண்டிருக்கிறார். அரசியல்ரீதியாக மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, அவரது உடல்நலம் என அனைத்தும் மிக அநாகரிகமான குரூரமான முறையில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விமர்சனங்கள் எழுதுகிற யாரும் கலைஞ ரிடம் எடுத்துக்கொண்ட இந்த சுதந்திரத்தை வேறு எந்தத் தலைவரிடமும் எடுத்துக்கொண்டதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தன்மீதான விமர்சனங் களுக்காக கலைஞர் பொய் வழக்கு போடமாட்டார், தினம் ஒரு மானநஷ்ட வழக்கு போட மாட்டார், பத்திரிகை அலுவலகத்தின் மின்சாரத்தை துண்டிக்க மாட்டார், பத்திரிகையாளர்களை போலீஸைவிட்டு ஓட ஓட துரத்த மாட்டார், பத்திரிகை அலுவலகங்களை ரவுடிகளை அனுப்பி சூறையாட மாட்டார் என்று அவர்களுக்குத் தெரியும்.

மாறாக, தன்மீது செய்யப்பட்ட அவதூறுகள், அவமதிப்புகள் அத்தனைக்கும் அவர் பொறுமையாக முரசொலியில் பதில் எழுதுவார். தனது நியாயங்களை மக்கள் முன்னால் எடுத்து வைப்பார். அவர் அதி காரத்திலிருந்தபோதும், அதிகாரத்தில் இல்லாதபோதும் இதைத்தான் செய்து வந்திருக்கிறார். தன்மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்காக ஒருவர் மீது வன்முறையை ஏவினார் என்று கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு சம்பவமும் இல்லை.

கூட்டணி கட்சிகளோடு அவர் மிக இணக்கமான உறவுகளைப் பாராட்டி வந்திருக்கிறார். அவர்கள் முரண்பட்டு நின்ற காலத்தில்கூட அவர்களை அவர் அவமதித்ததில்லை. அதே சமயம் அவரது நிலைப்பாடுகள் எப்போதும் உறுதியானதாக இருந்திருக்கின்றன. இந்திரா காந்தி ஒருமுறை குறிப்பிட்டதுபோல ‘கலைஞர் ஆதரிப்பது என் றால் உறுதியாக ஆதரிப்பார், எதிர்ப்பது என்றால் உறுதி யாக எதிர்ப்பார்‘ இந்த நம்பகத்தன்மைதான் தி.மு.க.வை தேசிய அரசியலில் இவ்வளவு காலம் நிலைத்து நிற்க வைத்தது.

கலைஞர் ஒவ்வொரு நாளும் தனது கட்சிக் காரர்களோடும் மக்களோடும் உரையாடிக்கொண்டே இருந்திருக்கிறார். கட்சியினுடைய பிரச்சினைகள், பொது மக்களுடைய பிரச்சினைகள், தேசிய பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள் என்று அவர் எழுதாத, பேசாத விஷயங்களே இல்லை. இந்திய வரலாற்றில் காந்திக்குப் பிறகு மக்களிடம் அதிகமாக பேசிய, எழுதிய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. இன்று இந்தியாவில் அரசியல் செய்யும் பல தலைவர்கள், பல முக்கியமான பிரச் சினைகளில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. பல பிரச்சினைகளில் யாருக்கும் எந்தக் கருத்தும் இல்லையென்பதுதான் உண்மை. ஆனால் கலைஞர் ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மிகத் துல்லியமாக அவர் அதைப் பதிவு செய்திருக்கிறார்.

நிலைப்பாடும் கோட்பாடும் உள்ள ஒரு மனிதரைத்தானே மற்றவர்களால் விமர்சிக்க முடியும். இது எதுவுமே இல்லாதவர்கள் கலைஞரைப்போல விமர்சிக்கப் படாததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

தி.மு.க.வின் வாரிசு அரசியல் பற்றி திரும்பத் திரும்ப புகார்கள் சொல்லப்படுகின்றன. இதுபோன்ற ஒரு போலியான குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்க முடியாது. முதலாவதாக, தி.மு.க. உள்கட்சி ஜனநாயகத்தைப் பின்பற்றுகிற ஒரு அமைப்பு. இன்று தமிழகத்தில் செயல்படும் பல கட்சிகளில் இருப்பதுபோல தனிநபர் தலைமையோ எதேச்சதிகாரமோ தி.மு.க.வில் சாத்தியமல்ல. தி.மு.க. பல்வேறு ஆளுமைகளை யும் தலைவர்களையும் கொண்ட ஒரு இயக்கம். தி.மு.க.வில் இருப்பதுபோன்ற சுயமான அடையாளம் கொண்ட தலைவர்களை தமி ழகத்தில் வேறெந்த கட்சியிலும் காண முடியாது. ஸ்டாலின் எவ்வளவு நீண்டகால அரசியல் பணிக்குப் பிறகு இப்போதிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார் என்பதை மனசாட்சியுடன் பார்க்கும் யாரும் அதை வாரிசு அரசியல் என்று சொல்ல மாட்டார்கள். கலைஞர் அவரை மற்றவர்களைத் தாண்டி முன்னி றுத்தினார் என்றோ அல்லது ஸ்டாலின் தன்னை முன்னிறுத்திக்கொண்டார் என்றோ கலைஞரின் அரசியல் எதிரிகள்கூட கூற முடியாது. இந்தியா முழுக்க அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அவசரஅவசரமாக எப்படி அதிகாரத்திற்குள் திணிக்கப்பட்டார்கள் என்பதையும் தமிழகத்திலிருக்கக்கூடிய சிறு கட்சிகளின் தலைவர்கள்கூட தங்கள் பிள்ளைகளையும் தங்களுக்கு நெருக்கமானவர்களையும் எவ்வளவு வேகமாக முன்னிறுத்துகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க.வின் மீது வைக்கப்படும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பது தெரியும்.

கலைஞரின் பேச்சுவன்மையும் மொழித் திறனும் தி.மு.க.வை மிக சவாலான காலங் களிலெல்லாம் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அவரது மொழிப் பிரவாகம் மிகவும் அபாரமானது. எந்தக் குழப்பமும் தடுமாற்றமும் இல்லாத மொழி ஆளுமையை அவர் மிக இளம் வயதிலிருந்தே கொண்டு வந்திருந்தார். இன்றளவும் அவர் எழுதிய திரைப்பட வசனங்கள் தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு தனித்த இடத்தை வகிக்கின்றன. ஒருமுறை நான் திருக்குறளுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு சிறிய ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு ஆச்சரியமான மிகப் பெரிய உண்மை தெரிந்தது. திருக்குறளுக்கு இதுவரை எழுதப்பட்ட உரைகளிலேயே கலைஞரின் உரை நவீனத்துவமானது, மூலத்திற்கு மிக நெருக்கமானது, சொந்த கைச்சரக்கு எதையும் சேர்க்காமல் முழுக்க முழுக்க ஆய்வுரீதியாக எழுதப்பட்ட உரை அது. கலைஞரை அரசியல் ஆக்கிரமிக் காமல் இருந்திருந்தால் தமிழின் பல்வேறு மகத்தான இலக்கியங்களுக்கும் காப்பியங்களுக்கும் அவர் இதுபோன்ற நவீனத்துவமான உரைகளை எழுதியிருக்கக் கூடும்.

தி.மு.க. அதிகாரத்திலிருந்த காலங்களில் அரசுத் துறைகள் பெருமளவு சுதந்திரமாக செயல்பட்டன. அரசியல் தலையீடுகள் மிகக் குறைவான, அதிகாரிகள் பயமின்றி பணியாற்றிய காலங்கள் அவை. அரசின் முடிவுகளில் தவறுகள் இருந்தால் அதை கலைஞரிடமே நேரடியாக சுட்டிக்காட்டி மாற்றுவதற்கான சுதந்திரம் தங்களுக்கு இருந்தது என்பதை பல உயரதிகாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அமைச்சர்களுக்கும் இந்த சுயேச்சையான அதிகாரம் இருந்தது. கலைஞர் அவருடைய வெவ்வேறு ஆட்சி காலங்களில் நிறைவேற்றிய முக்கியமான மக்கள்நலத் திட்டங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்தப்  பட்டியல் மிக நீண்டது. ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இரண்டு திட்டங்கள் அடித்தட்டு மக்களுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல்பாடாகும். முதலாவதாக, இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம். தமிழகத்தின் மூலைமுடுக்கிலிருந்த மக்கள் அனைவரையும் வெளிஉலகோடு இணைத்த மிகப்பெரிய ஊடகப் புரட்சித் திட்டம் இது. அடுத்ததாக, அவசர மருத்துவ வசதிக்கான இலவச ஆம்புலன்ஸ் திட்டம். அடித்தட்டு மக்களின் உயிர் காக்கும் திட்டமாகவே இது இருந்தது. கலைஞரின் அரசியல் வாழ்க் கையில் மிக முக்கியமான ஒரு பங்களிப்பு, மிக பிற் படுத்தப்பட்டவர்களுக்கு அவர் கொண்டுவந்த 20 சதவிகித இடஒதுக்கீடு. சமூக நீதிக்காகவும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காகவும் கலைஞர் தன் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற பல உயரிய திட்டங்களைச் செயல்படுத்தி யிருக்கிறார்.

கலைஞர் அரசியலில் உருவாக்கிய இந்த மகத்தான பண்புகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவராக இன்று ஸ்டாலின் உருவாகியிருக்கிறார். அரசியல் நாகரிகம், உள்கட்சி ஜனநாயகம், அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு, உறுதியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றால் கலைஞரின் அரசியலை ஸ்டாலின் இன்று அடுத்தகட்டத்திற்கு, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறார்.

இந்த 90-வது வயதில் உலகத் தமிழர்களின் தமிழ் அடையாளத்தின் மிகப்பெரிய ஆலமரமாக கலைஞர் கிளை பரப்பி நிற்கிறார். இந்த விருட்சத்தின் நிழலில்தான் தமிழர்களின் நிகழ்கால அரசியல் சரித்திரத்தின் ஒவ்வொரு இயக்கமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

 

கருணாநிதியின் நூல் வெளியீட்டு விழாவில் சொம்படிச் சித்தர். 

Viewing all 244 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>